Thursday, February 16, 2017

வானவில் :ஜெ மரண மர்மங்கள் -எடப்பாடியும் ஒ பி எஸ்சும்-காதலர் ஸ்பெஷல் நீயா நானா

பார்த்த படம் : கசபா (மலையாளம் )

மலையாளத்திலும் இப்படிப்பட்ட படங்கள் வரும் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். கமர்ஷியல் படம் எடுக்க நினைத்து படு சுமாரான படம் தரும் நம்ம தமிழ் சினிமா மாதிரியே இருக்கிறது.

கல்யாணம் ஆகாத போலீஸ் அதிகாரியாக மம்மூட்டி ! பெண்கள் எல்லாம் அவர் மேல் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். அண்ணன் அதை சைலண்ட்டாக என்ஜாய் செய்து கொண்டு அடுத்த கட்டம் செல்லாமல் போலீஸ் வேலையை பார்க்கிறார் ! விபச்சார விடுதி நடத்தும் வில்லனுக்கும் இவருக்கும் நடக்கும் Tug of war தான் படம் !

மம்மூட்டியை தவிர சொல்லி கொள்கிற மாதிரி எதுவும் இல்லை .. நம்ம சரத் குமார் மகள் வரலட்சுமி நெகட்டிவ் பாத்திரத்தில் படித்துள்ளார்.. வில்லன் கூட தமிழ் நடிகர் சம்பத் தான் ! (சென்னை 28/ கோவாவில் நடித்தவர் !)

பொழுது போகாத ஒரு ஞாயிறு மாலை பார்த்து வைத்தோம். நீங்கள் ரெண்டரை மணி நேரத்தை வீணாக்க வேண்டாம்.. !

எடப்பாடி Vs ஒ பி எஸ்

உச்ச நீதி மன்ற தீர்ப்பு நெத்தி அடியாக வந்தது; குன்ஹா என்ற அற்புத நீதிபதியின் தீர்ப்பை அப்படியே டிக் அடித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் - அவர் சொன்ன தண்டனை மற்றும் அபராதத்தையுமே சரியென உறுதி செய்ய சசிகலா ஜெயிலுக்கு செல்லும் முன் அடுத்த அடிமையை தயார் செய்தார்

எடப்பாடி பற்றி தற்போது சுழன்று வரும் ஒரு தகவல்: Demonetisation பிரச்சனையின் போது அவருக்கு மிக மிக மிக வேண்டிய ஒருவர் 5.70 கோடி - 2000 ரூபாய் நோட்டுகளுடன் பிடிக்கப்பட்டு தற்சமயம் சிறையில் உள்ளாராம்.. இவரா அடுத்த முதல்வர் என குரல்கள் எழுகின்றன.

இதுவரை கவர்னர் மௌனம் சாதித்தது சசிகலா வழக்கு தீர்ப்புக்கு தான். இனியும் தாமதம் செய்யாமல் Composite Floor test க்கு உத்தரவிடுவதே நல்லது ! அதாவது எந்த ஒருவரையும் பதவியேற்க அழைக்காமல் - சட்ட சபையில் இருவரும் ஒரு மினி தேர்தல் நடத்தி அதில் 118 ஓட்டுகள் பெறுபவர் முதல்வர் என அறிவிக்கலாம். இல்லாத பட்சம் ஜனாதிபதி ஆட்சி மற்றும் மறு தேர்தல் நடத்தலாம். இதை தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை

100 பேர் போல எடப்பாடி பக்கம் இருப்பதால் அவர் முதல்வர் ஆகவே வாய்ப்புகள் அதிகம். இல்லையேல் மறு தேர்தல் !

நிற்க. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டது துவங்கி தொடர்ந்து ஏதேனும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இன்னொன்று ..அப்போல்லோ மர்மம் துவங்கி, ஜல்லி கட்டு, ஆட்சி மாற்றம் என ஒவ்வொரு விஷயமும் தேவைக்கு அதிகமான காலம் ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டே போகிறது.. கவனித்தீர்களா?

என்னா பாட்டுடே - ஓகே கண்மணி- மலர்கள் கேட்டேன் 

காதலிப்போர் இதை காதல் பாடலாக கொள்ளலாம்; ஆனால் இதனை கடவுள் நோக்கிய பாட்டாக கூட யோசிக்க முடியும்... ! எளிய வரிகள். அருமையான மெட்டு.. சித்ராவின் குரல் அற்புதம் !

மலர்கள் கேட்டேன் வரமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமுதம் தந்தனை
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்ந்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்ந்தனை
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்



டிவி பக்கம் : காதலர் தின ஸ்பெஷல்  நீயா நானா 

ஒவ்வொரு வருடமும் காதலர் தின நீயா நானா வைப்பது விஜய் டிவியின்  வழக்கம்.இம்முறை காதலும், சினிமா பாடல்களும் என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பேசினர் (இப்போதெல்லாம்  பல நீயா நானா ஷோக்கள்  ஒன்றரை மணி நேரமாவது செல்கிறது; ஏனோ இந்நிகழ்ச்சி சரியே ஒரு மணி நேரத்தில் முடித்தனர் )

நன்கு பாட்டு பாடும் ஆண்கள் .. பெண்களை impress செய்ய  முயற்சிக்க,அதற்கு பெண்கள் கொடுத்த கமன்ட் எல்லாம் " நாம எந்த உலகில் இருக்கோம் ?" என யோசிக்க வைத்தது. " சார்.. அவரை அப்படியே கடிச்சு சாப்பிடலாம்  போல இருக்கு சார் " .. இது ஒரே ஒரு  உதாரணம்.

காதல் பாடல்கள் ஒரு மனிதனின் வாழ்வோடு எப்படி இணைகிறது என்ற நல்ல லைனை - நீயா நானா டீம் - கொஞ்சம் சொதப்பி விட்டனர். ஹூம் :(

அழகு கார்னர் 

Image result for manjima mohan
மஞ்சிமா மோகன்

ஜெ மரண மர்மங்கள் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணம் குறித்து நக்கீரன் கோபால் அவர்கள் 
எழுப்பும் சில கேள்விகள் இந்த வீடியோவில் உள்ளது. 

மிக முக்கியமான கேள்வி.. ICU வில் CCTV இல்லாதது சரி.. அவர் இருந்த தளத்தில் காரிடார் 
துவங்கி மற்ற அனைத்து இடங்களிலும் எப்போதும் இருக்கும் CCTV காமிராக்கள் ஏன் வேலை 
செய்யவில்லை அல்லது அகற்றப்பட்டன? 

மேலும் செப்டிசீமியா நோய் என்றும்,இன்னும் முன்னால் வந்திருந்தால் பிழைத்திருக்கலாம் 
என்றும் பீலே சொல்வதை சுட்டி காட்டி - முன்னே ஏன் அழைத்து செல்ல வில்லை 
என்பதற்கும் நிச்சயம் பதில் தேவை 

இந்த விஷயத்தில் நியாயமான நீதி விசாரணை நடந்தால் பல உண்மைகள் வெளிவரும். 

No comments:

Post a Comment