Tuesday, October 2, 2018

செக்கச் சிவந்த வானம்- விமர்சனம்

முதலில் இரு விஷயங்களை கூறி விடுகிறேன். நான் மணிரத்னம் படங்களை ரசிப்பவன்; மவுன ராகம், நாயகன், அலை பாயுதே போன்றவற்றை பல முறை பார்த்தவன்.இருப்பினும் பலரும் கொண்டாடும் செக்க சிவந்த வானம் - கவரவில்லை.

எனக்கு பிடித்ததா இல்லையா என்பது முக்கியம் இல்லை; படம் சர்வ நிச்சயமாய் ஹிட். திங்கள் மாலை காட்சிகள் - 3 நாள் முன்பே நிரம்பி விட்டது. (நாங்கள் பார்த்தது வேளச்சேரி PVR-ல் மாலை காட்சி ) போட்ட காசுக்கு மேல் 2 மடங்காவது வசூல் பார்ப்பர்


எச்சரிக்கை ... Spoiler alert ...

பல சஸ்பென்ஸ்கள் தெரிய வரும் வாய்ப்புண்டு; கதை தெரிய வேண்டாம் என நினைப்போர் அடுத்த பாராவை மட்டும் ஸ்கிப் செய்துவிடுங்கள்..

கதை 

ப்ரகாஷ் ராஜை அரவிந்த்சாமி போட்டு தள்றார்
அரவிந்த்சாமியை அருண் விஜய்  போட்டு தள்றார்
அருண் விஜயை சிம்பு போட்டு தள்றார்
சிம்புவை விஜய் சேதுபதி போட்டு தள்றார்

அப்ப.. விஜய் சேதுபதியை?

அவரை யாரும் போட்டு தள்ள முடியாது .. ஏன்னா அவர் ஒரு போலீஸ் !!

இப்படி ஒரே குடும்பத்தில் ஒருத்தரை ஒருத்தர் போட்டு தள்ளி ஜாலியா வாழுறாங்க ....

இதாங்க கதை !!

என்ன தலை சுத்துதா?

மேலே சொன்னதை தவிர்த்து ....

ஜோதிகாவை கொன்னு போட்டது யாரு, சிம்பு காதலி கதையை முடிச்சது யாரு, மன்சூரலி கான் , மற்றும் மாமா பாத்திரத்தை கொன்றவர்கள் யார் யார், கடைசியில் எத்தனை பேர் உயிர் தப்பிச்சாங்க னு - கரெக்ட்டா சொல்றவங்களுக்கு மெட்ராஸ் டாக்கீஸில் பரிசே தரலாம் !

திரைக்கதை 

கதை சஸ்பென்சோடு தான் நகர்கிறது...அடுத்து என்ன நடக்கும் என்ற ஊகத்துடனும் - பல முக்கிய சஸ்பென்ஸ்கள்க்கு  கிளைமாக்சில் விடை சொல்லப்படுகிறது.

பாடல்கள் எதுவும் முழுமையின்றி ஆங்காங்கு துண்டு துண்டாக ஒலிப்பதால் வேண்டிய இம்பாக்ட் கிடைக்கவில்லை

ரஹ்மானின் பின்னணி இசை கச்சிதம். இது இல்லாவிடில் படத்தை எப்படி உட்கார்ந்து பார்ப்போம் என  நினைத்து கூட பார்க்க முடியவில்லை

முக்கிய பாத்திரங்கள் எல்லோரும் கெட்டவர்கள் (பெண்களை தவிர்த்து) இந்த விஷயம் புதிது; படத்தின் பாதி வரை சஸ்பென்ஸ் மற்றும் பில்ட் அப் ஓகே ; பாதிக்கு மேல் தொடர் மரணங்கள் அலுப்பூட்டுகிறது

துப்பாக்கி தூக்கியவன் துப்பாக்கியால் தான் சாவான் என்ற பழைய செய்தியை சொல்ல ஒரு மணிரத்னம் படமா?

படம் தப்பிக்க காரணம் - முக்கிய பாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு என புகழ் பெற்ற நடிகர்களும், அவர்களின் பாணியில் வலம் வருவதும் தான்.. மேலும் ரஹ்மான் இசை !

அதீத கொலைக்கு பெண்கள் உச் கொட்டுவது தியேட்டரில் தெளிவாய் கேட்கிறது

மொத்தத்தில் 

படத்தின் வெற்றியில் மணிரத்னம் மகிழலாம், மகிழட்டும். ஆனால் அவரிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் நல்ல படங்களை..... இப்படி எதோ ஒரு விதத்தில் ஹிட் அடிக்கட்டும் என்ற ரீதியிலான மசாலா அல்ல !


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...