Tuesday, March 11, 2008

ஆரம்பம்

என்னை வலை தளம் ஆரம்பிக்க சொன்ன சில நண்பர்களுக்கு நன்றி..

நண்பன் லட்சுமணன் கவிதை புத்தக தலைப்பே இங்கும் உபயோகம் செய்யப்பட்டது.

என் மற்றும் நண்பர்கள் கருத்து இதில் வெளியிடும் எண்ணம்
பார்க்கலாம் ....
********

Saturday programme- சில நினைவுகள்

நான்காம் ஆண்டு படிக்கும் போது என்று ஞாபகம்...
ஒரு நாள் சட்ட கல்லூரியில் என்னுடன் படித்த ஷாநவாஸ் உடன் பேசிக்கொண்டிருக்கும் போது , " நம்ம classஇல் எவ்வளவு talented people இருக்காங்க? அவங்க talents-ஐ develop செய்வது போல் ஏதாவது செய்யணும்" என்றார். (படு serious - ஆக Shanawaz பேசியது இன்னும் நினைவில் உள்ளது....) இதற்கு சில நாட்களுக்கு பின் வேறு ஒரு நண்பரிடம் பேசுகையில் அவர் Personality development programme ஒன்று பற்றி கூறினார். இந்த programme-ல் ஒவ்வொரு வாரம் ஒருவர் in charge என்றும், அன்று அவரே தலைவர் போல் செயல்படுவார்; அவர் தரும் தலைப்பில் மற்றவர்கள் பேசுவார்கள்; பொதுவாய் யாரும் மற்றவர்கள் பேச்சை விமர்சனம் செய்ய மாட்டார்கள்; அனைவரும் புதிதாய் பேசுவோர் என்பதால் encouragement and appreciation மட்டுமே இருக்கும்; இவ்வாறு செய்வதில் leadership quality develop ஆகிறது" என்றார்.

உடனே ஷாநவாஸ் சொன்னது மனசுக்குள் பல்பு எரிய, இரண்டும் சேர்ந்து work out ஆகி Saturday programme உருவானது.

கல்லூரி காலத்தில் காரணம் இல்லாமலே நண்பர்கள் எல்லோரும் சந்திப்பதும் ஊர் சுற்றுவதும் வழக்கம். மூன்று மணி நேரம் தான் கல்லூரி. மற்ற நேரம் என்ன தான் செய்வது? எனவே இந்த சனி கிழமை சந்திப்பிற்கு பலர் ஒப்புக்கொண்டனர்.

சனி கிழமை எங்களுக்காக மட்டும் கல்லூரி திறக்க படும். இதற்காக Principal வரை ஒப்புதல் வாங்க வேண்டி இருந்தது.

முதல் progamme யார் நடத்தியது என நினைவில் இல்லை. அடுத்த வாரம் யார் நடத்தவது என்பது முதல் வாரமே சீட்டு மூலம் முடிவு செய்யப்படும்.

நண்பன் ஸ்ரீதர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் நடத்தினான். தலைப்பு "காதல் என்பது..." அந்த வயதிற்கு ஏற்ற தலைப்பு.. கேட்க வேண்டுமா என்ன? அனைவரும் அசத்தினர். இதன் பின் programme சூடு பிடித்து விட்டது.
பின் நிறைய அரசியல் சம்பந்தமுள்ள தலைப்புகள்.....பாபர் மசுதி இடிப்பு; இட ஒதுக்கிடு, இப்படி....

பின் வாரா வாரம் ஒருவர் அந்த வார news வாசிப்பதும், ஒருவர் நல்ல கவிதைகள் வாசிப்பதும் தொடங்கியது.

நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு வாரம் programme நடத்தும் வரை மட்டும் Saturday programme நடந்தது.
***************

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை சில உண்டு. லக்ஷ்மன், பிரேம், நான் உள்ளிட்ட சிலருக்கு ஏதோ சில மேடைகளில் பேசிய அனுபவம் இருந்தது. ஆனால் பலர் எந்த மேடை ஏறியும் பழக்கம் இல்லாதவர்கள். ஆரம்பத்தில் stage fear இவர்களுக்கு இருந்தது. ஆனால் வாரா வாரம் பேச பேச stage fear போய் நன்கு பேசவும், argue செய்யவும் ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக நித்தி நாள் ஆக, ஆக படு serious ஆய் argue செய்ய ஆரம்பித்தான். இதை பார்த்து Saturday programme நன்கு work out ஆகி விட்டது என அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.

ஒரு வாரம் Professors நிலாமுதீன், சொக்கலிங்கம் வந்து பார்த்தனர். பாராட்டி விட்டு சென்றனர்.

கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் எங்கள் Saturday programme பற்றி பேசப்பட்டது. எங்கள் வகுப்பை ஒரு முன் மாதிரி போல பேசி மற்றவர்களும் இதே போல் செய்யலாம் என Principal அல்லது நிலாமுதீன் பேச, நிறைய பேர் programme பற்றி கேட்க ஆரம்பித்தனர்.

எனது opinion-ல், Cricket-ல் Man of the Series போல, இந்த programmes-ல் Man of the Series பிரேம் தான். அவனுக்கு இருந்த wide political knowledge, பல விஷயங்களில் உள்ள conviction இவற்றால், மற்ற அனைவரும் ஒரே அணியில் பேசினாலும் தனியாக தன் side-ற்கு பேசுவான்.

கிட்டதட்ட ஒரு வருடம் நடந்தது Saturday programme. Final year வந்த பின் ஏனோ நின்று விட்டது.

எங்கள் நண்பர்களுக்கு கோர்ட்டில் பேச ஓரளவு தைரியம் இந்த Saturday programme மூலம் வந்தது என நம்பிக்கை...

உங்கள் யாருக்கேனும் இந்த programme பற்றி ஏதேனும் இனிய நினைவுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்….
__._,_.___
Related Posts Plugin for WordPress, Blogger...