Wednesday, March 29, 2017

வானவில்: ஆர் கே நகர் இடைத்தேர்தல்+ இந்தியா ஆஸி சீரிஸ் ஒரு பார்வை

ஆர் கே நகர் இடைத்தேர்தல் 

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்ற நிலை மாறி ரொம்ப நாள் கழித்து நல்ல போட்டியுடன் ஒரு இடைத்தேர்தல்.

தினகரன் மற்றும் தி.மு.க இருவரில் ஒருவர் தான் ஜெயிப்பார் என நினைக்கிறேன்.

தினகரன்.. ப்ளஸ் பண பலம் மற்றும் அதிகார பலம்... மைனஸ் ... இவை தவிர மற்ற எல்லாம்.. குறிப்பாக இரட்டை இலை  சின்னம் இல்லாமை மற்றும் ஜெ மரணத்தின் மர்மம்

தி.மு.க - பலம் அதிமுக உடைந்தது; தனது வழக்கமான 30 % வாக்கு வாங்கினாலே வெல்லும் வாய்ப்பு அதிகம். மைனஸ் - இத்தொகுதி traditional ஆக அதிமுக கோட்டை...

நீண்ட நாளுக்கு அதிமுக பிரிந்து இருக்கும் என தோன்றவில்லை; ஜானகி- ஜெ அணி இணைந்தது போல் - பாராளுமன்ற தேர்தலுக்கு பின் எந்த அணிக்கு வாக்கு வாங்கி அதிகமோ அதனுடன் மற்ற அணி இணைய வாய்ப்புகள் அதிகம்.

கிரிக்கெட் கார்னர்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்ட்டில் இந்தியா வென்றது மிக நிறைவான ஒன்றாய்  இருந்தது.

இந்த சீரிஸில் குறிப்பிடத்தக்க பர்பாமன்ஸ் செய்த சிலர் பற்றி

ராகுல்: கடினமான பிட்சில் 7 இன்னிங்ஸ் ஆடி - 6 - 50கள் எடுத்த ராகுல்.. ஒரு ஓப்பனிங் பாட்ஸ்மான் ஆக நிலை நிறுத்தி கொண்டுள்ளார்.

ஜடேஜா - பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் மட்டுமல்லாமல் - இரு முறை கடினமான நேரத்தில் நன்கு பாட்டிங் செய்து இந்தியாவை காப்பாற்றி  கொடுத்தார்.

புஜாரா - ராகுல் திராவிடுக்கு சரியான replacement இவர் தான் ! பொறுமை மற்றும் விடா முயற்சி இவரது இலக்கணம். மிஸ்டர் கன்சிஸ்டண்ட்

உமேஷ் யாதவ் : இந்திய பிச்சில் இப்படி ஒரு பவுலர் அசத்துவது ஆச்சரியம். சாதாரண பவுலராக வந்து - மிக நன்றாக தற்போது வீசி  தன்னை நிலை நிறுத்தி  கொண்டுள்ளார்.

சாஹா : முதல் 2 மேட்சில் பாட்டிங்கில் அடிக்கலை; ஆனால் கடைசி 2 மேட்சில் சூப்பர்  பாட்டிங்.

சுமார் performers :

ரஹானே : டெஸ்ட் சீரிஸில் பெரிய இல்லை; ஆனால் கடைசி மேட்சில் காப்டன்சி மற்றும் 2 விக்கெட் போன நேரத்தில் உள்ளே வந்து அதிரடியாய் சில சிக்ஸர் அடித்து மேட்சை விரைவாய் முடித்தது அட்டகாசம் !

அஷ்வின்: ஜடேஜா - பாட்டிங், பவுலிங் இரண்டிலும் தன்னை விஞ்சுவார் என அஷ்வின் நினைத்திருக்கவே  மாட்டார். ஆஸ்திரேலியா இவரது பந்து வீச்சுக்கு நிறைய திட்டமிட்டு வந்தது காரணமாய்  இருக்கலாம்.

கோலி - ஒரு 50 கூட அடிக்கலை; ஆனால் aggressive captaincy !

அழகு கார்னர் 


Related image
நிவேதா தாமஸ் 

ஹெல்த் கார்னர் : மசக்கை சில குறிப்புகள் 

கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடுங்கள் 

சாப்பாட்டிற்கு அரை மணி முன் தண்ணீர் குடியுங்கள் சாப்பாட்டின் போது வேண்டாம்  

நாள் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக திரவ ஆகாரம் அருந்துங்கள் 

குமட்டல் ஏற்படுத்தும் உணவை தவிருங்கள் அந்த உணவு வாசனையை விட்டு விலகி இருங்கள் 

நன்றாக தூங்குங்கள். முடிந்தால் பகலிலும் சற்று தூங்கலாம் 

உஷ்ணம் குமட்டலை அதிகரிக்கும். உஷ்ணம் நிறைந்த இடங்களை தவிருங்கள் 

உடற்பயிற்சி செய்யுங்கள்.
எலுமிச்சை முகருங்கள். இஞ்சி கலந்த ஜூஸ் அல்லது தர்பூசணி குமட்டலுக்கு நல்லது 

சாப்பிட்டதும் படுக்காதீர்கள் 
பட்டினி கிடக்காதீர்கள் வேளைக்கு சாப்பிடுங்கள். உணவை தவிர்க்காதீர்கள் 

ஸ்பைசி உணவை சமைக்காதீர்கள் சாப்பிடாதீர்கள் 

- குமுதம் ஹெல்த் இதழில் இருந்து 

என்னா பாட்டுடே

ஓகே கண்மணியில் நானே வருகிறேன் பாடல் .. ரகுமான் லைவ் இசை நிகழ்ச்சி ஒன்றில் வாசித்த போது எடுத்த வீடியோ இது.. என்னா மாதிரி பாட்டு.. பெண் குரலும் சரி, குறைவாக ஒலிக்கும் ஆண் குரலும் சரி.. அற்புதம் !



QUOTE CORNER

A man of wealth has many enemies, while a man of knowledge has many friends.

அழகு கொஞ்சும் ECR சாலை

மிக அழகான ECR சாலையில் 30 கி. மீ சைக்கிள் பயணம் அண்மையில் சென்றேன். சைக்கிளிங் செல்லும் பலர் ECR ஐ விரும்புவதன் காரணம் புரிந்தது. அதிக டிராபிக் இல்லாத அற்புதமான சாலைகள்..வாவ் !

காலை 6 மணிக்கு அக்கரை கடற்கரையில் சூர்யோதயம் காணும் வாய்ப்பு. 

Image may contain: one or more people, ocean, sky, twilight, beach, outdoor, nature and water

கடலில் சூர்யன் உதிக்கும் போது - அதற்கு எதிரில் 10 பேர் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தனர்.

Image may contain: one or more people, ocean, sky, outdoor, nature and water

அக்கரை ஏரியாவிலிருக்கும் பங்களா ஒவ்வொன்றும் செம !
பொதுவாய் வெவ்வேறு பகுதியில் சைக்கிள் ஓட்ட நினைக்கும் என்னை ECR அடிக்கடி இழுக்கும் என நினைக்கிறேன்.

Tuesday, March 21, 2017

சென்னை 1 முதல் 130 வரை-பள்ளிக்கரணை - ஒரு பார்வை

ண்மை காலமாக ஓட்டம், நடை இவற்றோடு  - சைக்கிளிங்கும் சேர்ந்து கொண்டது. 20-25 கிலோ மீட்டர் செல்வதால் - வெவ்வேறு ஏரியாக்கள் செல்ல முடிகிறது.

சைக்கிளிங் செல்லும்போது - சென்னையின் ஏரியாக்கள் பற்றி தெரிந்து கொண்டு எழுதினால் என்ன என தோன்றியது. அதன் விளைவே - இத்தொடர்.

சென்னையில் - 600001 (பாரிஸ் கார்னர்) துவங்கி 600 130 ( நாவலூர்) வரை குறைந்தது 130 ஏரியாக்கள் உள்ளன  !  இவை அனைத்தையும் பார்க்க/எழுத முடியுமா என தெரியவில்லை. முடிந்த வரை செய்கிறேன்.

ஒவ்வொரு ஏரியாவிற்கும் 3 அல்லது 4  முறை வெவ்வேறு நாள் சென்று கவனித்து எழுத எண்ணம். மேலும் அங்கு இருக்கும் நண்பர்கள்/ சாதாரண மக்கள் இவர்களிடமும் பேசி விட்டு எழுத உத்தேசம். அடுத்தடுத்த பதிவுகள் என்ன இடைவெளியில் வரும் என தற்போது சொல்ல இயல வில்லை;

பள்ளிக்கரணை நான் வசிக்கும் ஏரியாவிற்கு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பல முறை நடந்தே இங்கு சென்றிருக்கிறேன். அப்போதே பல விஷயங்கள் கவனித்ததுண்டு. பதிவு எழுத முடிவானதும் சைக்கிளில் சில விசிட்கள்...



பள்ளிக்கரணை பற்றி -இங்கு வசிக்கும் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் விக்னேஷ் மற்றும் ஓட்ட பந்தயம் மூலம் நண்பரான பூபாளன் ஆகியோர் நிறைய தகவல்கள் கூறினர். அவர்களுக்கு அன்பும், நன்றியும் !

2000 ...... ஐ. டி துறை வளர்ச்சிக்கு பின் பெரிதாக வளர்ந்த இடங்களில் ஒன்று பள்ளிக்கரணை. இதற்கு ஐ. டி துறை வளர்ச்சி மட்டுமே காரணம் அல்ல. இன்னும் பல காரணங்கள் உண்டு !

எதனால் பள்ளிக்கரணையை மக்கள்விரும்புகிறார்கள்

OMR  சாலை மற்றும் வேளச்சேரிக்கு மிக அருகில் உள்ளது தான் மிக முக்கிய காரணம்.

5-6கி.மீ தூரத்தில் உள்ள சோளிங்கநல்லூர் 10-15 நிமிடத்தில்  எளிதில் அடையலாம். OMR  சாலையில் பணிபுரியும் பலர் இதனால் இந்த இடத்தை தேர்வு செயகிறார்கள்.

வேளச்சேரி ரயில் நிலையம் 5 கி.மீ தூரத்தில் இருப்பதால், ரயில் என்றால் வேளச்சேரியை தான் பலரும் விரும்புகிறார்கள்

பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் ரேடியல்  சாலை வந்த பின் பள்ளிக்கரணை வளர்ச்சி வேகமெடுத்தது

Plot  மற்றும் Flat விலை.வாடகை நிலவரம்

மெயின் ரோட்டிலிருந்து 100 -200 மீட்டர் தூரத்தில்  உள்ள இடம் எனில் ஒரு கிரவுண்ட் ஒரு கோடியை தொட்டு விட்டது. ஐந்தாறு வருடங்களில் திடீரென விலை ஏறியது; கடந்த ஒரு வருடமாக ரியல் எஸ்டேட் தேக்கத்தால் விலை ஏறவில்லை.

அப்பார்ட்மெண்ட் என்றால் - வசதிகளை பொறுத்து sq feet 4500 துவங்கி 6000 வரை போகிறது

வாடகை டபிள் பெட் ரூம் 10,000 முதல் 12000 வரை போகிறது; மூன்று பெட் ரூம் வீடுகள் 13000 முதல் 15000 வரை செல்கிறது. 10,000 முதல் 12000 ரேஞ்சில் உள்ள வீடுகள் விரைவாக வாடகைக்கு சென்று விடுகின்றன; 15000 ரேஞ்சில் உள்ளவை சற்று தாமதமாய் தான் செல்கிறது

ரிலையன்ஸ் ட்ரெண்ட் பின்புறம் உள்ள நகர்களில் சில பிரம்மாண்ட - மாளிகை போன்ற தனி வீடுகளும் இருக்கின்றன !!

நிலத்தடி நீர் மற்றும் ட்ரைநேஜ்

தண்ணீர் இந்த ஏரியாவில் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள். மார்ஷ் லேண்ட் என்பதால் போர்வெல் வாட்டர் நன்கு கிடைக்கிறது; ஆனால் சில இடங்களில் அதன் குவாலிட்டி குறைவாக உள்ளதால் வெளியிலிருந்து தண்ணீர் வாங்குவதும் நடக்கிறது

ட்ரைநேஜ் வசதி இன்னும் வர ஆரம்பிக்க வில்லை;தற்சமயம் தனியார் நிறுவனங்களின் வண்டிகள் தான் கழிவு நீர் எடுக்க ஓடுகின்றன.

2015 வெள்ளத்தில் பள்ளிக்கரணையில் பாதி ஏரியாக்கள் பாதிப்பில்லை;மீதம் பாதி இடங்கள் நிறைய பாதிப்பிற்குள்ளாகின.

மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் ஹோட்டல்கள்

காமாட்சி மெமோரியல் ஹாஸ்ப்பிட்டல் பள்ளிக்கரணையிலேயே உள்ளது;மற்றும் குளோபல் ஆஸ்ப்பிட்டல் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது;  இவை இரண்டும் பெரிய மருத்துவ மனைகள்

சான் அகாடெமி மற்றும் ஸெயிண்ட் ஜான்ஸ் பள்ளிகள் பள்ளிக்கரணைக்கு அருகில் உள்ள பள்ளிகள்.

ஜெருசலம் இன்ஜினயிரிங் கல்லூரி, பாலாஜி பல் மருத்துவ மனை, ஆசன் கலை கல்லூரி  ஆகியவை இங்குள்ள முக்கிய கல்லூரிகள்.

காமாட்சி மருத்துமவமனை அருகே உள்ளது   National Institute of Ocean Technology (NIOT).  கடல் வாழ் உயிரினங்களை  குறித்த ஆராய்ச்சி மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை NIOT செயகிறது

பள்ளிக்கரணையில்  ஹோட்டல்கள் பெரிய அளவில் இல்லை; பள்ளிக்கரணை - மேடவாக்கம் சாலை மிக குறுகலாக இருப்பதால் A2B, Hot Chips போன்ற   ஹோட்டல்கள் அதிகம் வரவில்லை என நண்பரொருவர் கூறினார்.

காமாட்சி ஆஸ்பத்திரியில் இருந்து பல்லாவரம் போகும் சாலையில் தற்போது A2B வந்துள்ளது;விரைவில் சரவணாஸ் என்கிற ஓரளவு டீசண்ட் வெஜ் ஹோட்டலும் திறக்க உள்ளனர்

ஹோட்டல்கள் மற்றும் பிற பர்சேஸ்சுக்கு வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் விருப்ப தேர்வாக இருக்கிறது.

பூங்காக்கள் ..மைதானங்கள் 

பள்ளிக்கரணை - வேளச்சேரி மெயின் ரோடில் இருக்கிறது மிக பெரிய அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ்.இதன் வெளியே மூலிகை பூங்கா என்ற போர்ட் நம்மை வரவேற்கிறது.



உள்ளே எட்டி பார்த்தால் கொஞ்சம் செடி, கொடிகள், பூக்கள் இவை தான் கண்ணுக்கு தெரிந்தன. அருகில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனிடம் கேட்டால் " பார்க்-கிற்கு பேர் அப்படி வச்சிருக்காங்க;அவ்ளோ தான். மத்தபடி அங்கே துளசி தவிர வேற பெருசா மூலிகை இருக்குற மாதிரி தெரியலை என்றார்.

மூலிகை பூங்கா உள்ளே 

 இந்த மூலிகை பூங்கா தாண்டி 200 மீட்டரில் பள்ளிக்கரணை தாமரை குளம் வந்து விடுகிறது; மிக தொன்மையான இந்த குளம் பள்ளிக்கரணைக்கு ஒரு முக்கிய identity ஆகும் !

பள்ளிக்கரணையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான தாமரைக் குளம் 

குளத்தின் அருகே இன்னொரு பெரிய பார்க்.  200 மீட்டர் தொலைவில் அடுத்தடுத்து இரு பூங்காக்கள் !

தாமரை குளத்தை சுற்றி நடக்க வசதி செய்துள்ளனர். காலை நேரம் பலரும் குளத்தை சுற்றி ஒரு ரவுண்ட்.. பின் பார்க் உள்ளே நுழைந்து இன்னொரு ரவுண்ட் நடப்பதை காண முடிகிறது;

தாமரை குளத்தை சுற்றி நடக்கும் மக்கள் 

இப்படி நடந்தால் அரை முதல் முக்கால் கிலோ மீட்டர் தூரம் ஒரு ரவுண்டிலேயே வந்து விடும் !

அலுவலகங்கள்

காமாட்சி மருத்துவமனை எதிரில் இயங்கி வந்த காக்னிசன்ட் டெக்நாலஜிஸ் - பள்ளிக்கரணையில் இருந்த பெரிய நிறுவனம் ! தற்போது காக்னிசன்ட் இந்த இடத்தை காலி செய்து விட்டு சொந்த இடமான சிறுசேரிக்கு சென்று விட்டனர். விரைவில் சதர்  லேண்ட் பீபிஓ நிறுவனம் இதே கட்டிடத்தில் வரவுள்ளது என்கிறார்கள்.

ஜாஸ்மின் இன்போடெக் எனும் ஐ. டி நிறுவனமும், செலிபிரிட்டி பேஷன் எனும் தயாரிப்பு நிறுவனமும் இதர (ஓரளவு ) பெரிய நிறுவனங்கள். காமாக்ஷி ஆஸ்ப்பிட்டலில் இருந்து கூப்பிடு தொலைவில் இருக்கும் அப்பாசாமி அப்பார்ட்மெண்ட் எதிரே உள்ள தெருவில் சில சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

குப்பை பிரச்சனை

ஒரு காலத்தில் பள்ளிக்கரணையில் குப்பைகள் பெரிய மலை போல் கொட்டப்பட்டு எப்போதும் எரிக்கப்படும். காமாட்சி மருத்துவமனையில் இருந்து 100-200 மீட்டர் தொலைவில் இந்த மெகா குப்பை எரிப்பு நடக்கும். உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்டினர். இது மக்களுக்கு ஒரு பெரிய relief.

சுற்று வட்டம் 

வேளச்சேரி , மடிப்பாக்கம், மேடவாக்கம் - கோவிலம்பாக்கம்,பெரும்பாக்கம் ,  பெருங்குடி.. இவை பள்ளிக்கரணையை சுற்றியுள்ள இடங்கள்

குறுந்தகவல்கள்

ஒவ்வொரு ஏரியாவிலும் சில வித்தியாச தெரு பெயர் இருக்கும். இங்கு நான் கண்ட வித்தியாச தெரு..கிணற்று தெரு !



பள்ளிக்கரணை 2011ல்  சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது; இது ஒரு நல்ல அட்வான்டேஜ் !

வழக்கமாக முக்கிய ஏரியாவில் அல்லது மெயின் ரோட்டுக்கு அருகில் வசதியானவர்கள் இருப்பார்கள். இங்கு மெயின் ரோட்டுக்கு அருகில் - இந்த ஏரியாவின் பூர்விக மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். காமாட்சி ஆஸ்பத்திரியில் இருந்து தாமரை குளத்துக்கு செல்லும் வழியில் உள்ள இதே சாலையில் தான் அப்பாசாமி அப்பார்ட்மெண்ட், நாட் வெஸ்ட் விஜய் போன்ற மிக பெரும் அப்பார்ட்மெண்ட்கள் இருக்கின்றன. இன்னொரு பக்கம் மிக சாதாரணமான வீடுகள்  .....ஒவ்வொரு தெருவின் துவக்கத்திலேயே உள்ளன. புதிதாக இடம் வாங்கியோர் நகரின் உள்ளே தான் வாங்கியுள்ளனர்

பள்ளிக்கரணையின் ஒரு பக்கம்  முழுதும் மார்ஷ் லேண்ட் இருக்கிறது. இதனால் தண்ணீர் மட்டம் எப்போதும் இங்கு நன்கு இருக்கும் என்றாலும் தனியார் லாரிகள் தண்ணீரை உறிஞ்சுவதும் மிக அதிகம் தொடர்கிறது; இது நிலத்தடி நீரை குறைப்பதுடன் சாலைகளையும் டேமேஜ் செயகிறது

மார்ஷ் லேண்ட் அருகே 

பாலாஜி பல் மருத்துவ கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள சாலைகள் அனைத்தும் சதுப்பு நில பகுதியில் சென்றே முடிகின்றன.

மார்ஷ் லேண்ட் பக்கம் உள்ள ஏரியா 

வெள்ளம் வந்த நேரம் இந்த மார்ஷ் லேண்ட் அருகே உள்ள வீடுகளில் தண்ணீர் அதிகம் புகுந்தது.

 மார்ஷ் லேண்ட் பக்கம் இன்னமும் ஏராள காலியிடங்கள் இருப்பதை காண முடிகிறது !
காலியான மனைகள் 
 

சாய் கணேஷ் நகர்...32 தெருக்களை (தெரு எண் 1,2,3 என)கொண்டிருக்கிறது. நகரின் பெயருக்கேற்ப சாய் கோயில் ஒன்றும் இங்குள்ளது.

சாய் கணேஷ் நகர் அருகே வாழை தோட்டத்துடன் கூடிய ஒரு வீடு 

நகரின் துவக்கத்திலேயே "சென்னையின் முதல் பாறையில் ஏறும்/ ட்ரெக்கிங்கிற்கு பயிற்சி அளிக்கும் ஜிம்" என ஒரு வித்தியாச ஜிம்மை காண முடிகிறது

டிராபிக் பிரச்சனை 

காமாட்சி ஆஸ்பத்திரி அருகே ஒரு சிக்னல் உள்ளது;இது எப்போதும் இயங்குவதே இல்லை; மாலை நேரங்களில் டிராபிக் போலீஸ் நின்று வாகனங்கள் செல்வதை ஒழுங்கு படுத்துகிறார்.

ஆனால் OM R சாலையில் இருந்து வரும் அலுவலக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் மிக அதிகம் என்பதால் -வாகனங்கள் நிற்காமல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த பக்கத்தில் வாகனங்கள் வந்தால் 7-8 நிமிடத்துக்கு டிராபிக் போலீஸ் காரர் அதனை தொடர்ந்து அனுமதிக்கிறார். இந்த சிக்னலில் மட்டும் சர்வ சாதாரணமாக 10 நிமிடம் காத்திருப்பது தொடர்கிறது

டிராபிக் போலீசை சொல்லி குற்றமில்லை; வாகனங்கள் வருவது குறைந்தால் தான் அவர் நடுவில் சென்று நிறுத்தி விட்டு பிற பக்கங்களை அனுப்ப முடியும். அலுவலகம் விட்டு  OM R சாலையில் இருந்து வரும் வாகனங்கள் இடைவெளியே இன்றி வருகிறது. இங்கு சிக்னல் இருந்தால் ஓரிரு நிமிடத்தில் ரெட் வந்து - வாகனங்கள் நின்று விடும். அரசு இதற்கு ஆவண செய்தால் நல்லது !
*************
சென்னை 1 முதல்  130 வரை என தொடங்கிய இந்த தொடரில் - முதல் இடம் சென்னை 100 பள்ளிக்கரணையாக அமைந்துள்ளது !

நெக்ஸ்ட்டு??

நங்கநல்லூர் !

Sunday, March 19, 2017

சென்னை ரன்னர்ஸ்சின் அனிவர்சரி ஓட்டம்..புகைப்படங்கள்


சென்னையில் ஏராள நண்பர்கள் ஓட காரணமான குழு சென்னை ரன்னர்ஸ். இவர்களின் கிளைகள் அண்ணா நகர், வேளச்சேரி, அம்பத்தூர், பெசன்ட் நகர், தி. நகர், மெரினா, நுங்கம்பாக்கம், அசோக் பில்லர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளது. இப்படி தங்கள் இல்லம் அருகே இருக்கும் குழுவில் இணைந்து தான் பலரும் ஓட்டத்தை துவங்குகின்றனர். 

சென்னை ரன்னர்ஸ்சின் இன்றைய அனிவர்சரி ஓட்டம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓட்டத்தில் கலந்து கொள்ள (காலை உணவு உட்பட) எந்த பணமும் செலுத்த தேவையில்லை .. மேலும் 3,5 மற்றும் 10 கி மீ ஓட்டங்கள் இருந்தன. எனவே முதலில் முயற்சித்து பார்க்கும் பலரும் 3 அல்லது 5 கி மீ ஓடினர்.



கிண்டி அண்ணா யுனிவர்சிட்டியில் இருந்து கிளம்பிய ஓட்டம் - முதல் ஒன்றரை கிலோ மீட்டர் வரை அங்கேயே தொடர்ந்தது. அழகான அண்ணா யூனிவர்சிட்டியை பார்க்க எங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு. பின் கோட்டூர் புரம் வழியே அழகான இல்லங்களை கொண்ட போட் ஹவுஸ் உள்ளே ஒரு கிலோ மீட்டர் தொடர்ந்தோம்..

சரியாக இரண்டரை கிலோ மீட்டரில் முதல் பிட்ஸ்டாப் /எயிட் சென்டர் இருந்தது. கோட்டூர் புரம் மேம்பாலத்தை செல்லும்போது ஒரு முறையம், திரும்பும் போது மறுமுறையும் ஏறி இறங்க வேண்டியிருந்தது. இது தான் சற்று கடினமான வேலை..

வழக்கமாய் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் முக்கால்வாசி ஓட்டம் -கால்வாசி நடை என தொடர்பவன்..இம்முறை வைப்ரன்ட் வேளச்சேரி நண்பர்களுடன் ஓடி சற்று பழக்கமானதால் - ஆறரை கிலோ மீட்டர் வரை நடக்காமல் ஓடிவிட்டேன்.

ஐந்து கிலோ மீட்டரில் இரண்டாவது பிட்ஸ்டாப்.வாலன்டியர்கள் மிக அற்புதமாக சர்வீஸ் செய்தனர். எலக்ட்ரால் கலந்த நீர், ஆரஞ்சு, வாழைப்பழம், கடலை மிட்டாய் இவற்றை தந்த வண்ணம் இருந்தனர்.



5 கி மீ முடித்து விட்டு திரும்பும் போதே அடுத்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் பழனியப்பன், மற்றும் அவரது அலுவலக நண்பர் சிலர் மற்றும் இன்று முதல் முறை மரத்தானில் ஓடும் நண்பர் லட்சுமி நாராயணன் ஆகியோரை காண முடிந்தது.

ஆறரை கிலோ மீட்டருக்கு பின் சற்று நடந்தது தப்பாய் போனது. அப்புறம் ஆங்காங்கே நடக்க சொன்னது உடலும் கால்களும்... ஓடிக்கொண்டே இருந்தால் கூட ஓடி விடலாம் போல..



ஏழரை கிலோ மீட்டர் எயிட் சென்டரில் வைப்ரன்ட் வேளச்சேரி நண்பர் கார்த்திக்கை சந்தித்தேன். அவர் அதன்பின் அதிகம் நடக்க விடாமல் - மெதுவாக ஓட வைத்து அழைத்து சென்றார். இப்படி நல்ல கம்பெனி கிடைத்தால், அதிக நேரம் ஓட முடியும். நடுவில் மூச்சு வாங்குகிறது என நடந்தபோது கார்த்திக் எனக்காக சற்று நடந்தார்.

அண்ணா யூனிவர்சிட்டி உள்ளே நுழைந்ததும் மைதானங்களில் பலர் கிரிக்கெட் விளையாடுவதை காண முடிந்தது. அழகான கேம்பஸ் பார்த்து கொண்டு ஓடுவது சுவாரசியமாக - சிரமமான கடைசி பகுதியை இலகுவாக்கியது

67 நிமிடத்தில் 10 கி மீ ஓடி முடித்தேன். இம்முறை முக்கிய இலக்கு - முடிந்தால் 10 கி மீட்டரும் ஓடி விட வேண்டும். இல்லையேல் 90% ஓடணும் என்பது.. இரண்டாவது விஷயம் நடந்ததில் சற்று மகிழ்ச்சி. 10 கி மீ முழுதும் ஓடும் நாளுக்கான காத்திருப்பு தொடர்கிறது



சென்னை ரன்னர்ஸ் ஓடி முடித்ததும் அழகான சிறு துண்டு தந்தனர். பிரெஷ் ஆக கரும்பு சாறு - பிழிந்து தந்து கொண்டே இருந்தனர். சாப்பாடு.. சுவையாகவும், ஹைஜீனிக் ஆகவும் இருந்தது.

ஓடி முடித்தபின் கால்களுக்கு பிஸியோ தெரப்பி செய்தவர்களும் அருமையாக செய்தனர்.

பிசியோ செய்யும் இடத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்.. 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர்.. என்னை நெருங்கி " நீங்க தானே மோகன்?  தமிழில் பிளாக் எழுதுறீங்க இல்லையா? தொடர்ந்து படிக்கிறேன். நல்லாருக்கு; விட்டுடாதீங்க. தொடர்ந்து எழுதுங்க " என்றார். எதிர்பாரா நேரம்/இடத்தில் இப்படி ஒரு வாழ்த்து கிடைத்தது ஒரு ஆனந்த அதிர்ச்சி.

நிறைய நண்பர்களை காண /பேச முடிந்தது.. குறிப்பாக 60 வயதை கடந்த ராஜதுரை என்கிற கம்பெனி செகரட்டரி நண்பர் 10 கி மீ ஓடி+ நடப்பதை கண்டு மிக மகிழ்ச்சியாய் இருந்தது. 



போலவே 50 வயதை தாண்டிய வழக்கறிஞர் நண்பர் கேசவன் அவர்களும் மிக அட்டகாசமாக ஓடினார்.

ஓட்டத்தின் பக்கமும் பிட்னெஸ் பக்கமும் ஏராளமானோரை இழுக்கும் சென்னை ரன்னர்ஸ்சின் பணி என்றும் தொடரட்டும்!
***********
சென்னை ரன்னர்ஸ் இணைய தள முகவரி: 

http://www.chennairunners.com/ 

***********
சென்னையில் அடுத்து நடக்கும் இரு இலவச ஓட்டங்கள் :


http://youtoocanrun.com/races/reebok-float-a-thon-chennai/


http://towertwisters.com/registration.html

Wednesday, March 15, 2017

வானவில் : 5 மாநில தேர்தல் முடிவுகள் ஒரு அலசல்- சாக்ஸ் shocks !

பார்த்த படம்: Fan

ஷாரூக் இரு வேடத்தில் நடித்த Fan திரைப்படம் ..ஒரு வித்யாசமான அனுபவம்.

முதல் பாத்திரம் - ஷாரூக்கை ஒத்த ஹீரோ; மற்றொன்று அவரின் விசிறி. இந்த விசிறி அவரை போலவே தோற்றம் கொண்டவன். ஹீரோவை அவரது இல்லத்தில் காண வந்து - முடியாமல் ஏமாற்றமடைகிறான்.இன்னும் சில சம்பவங்களுக்கு பின் அந்த விசிறி - ஹீரோவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதே கதை.... கிட்டத்தட்ட ஹீரோவின் பெயரை நாசம் செயகிறான் .. அதிலிருந்து ஹீரோ எப்படி மீண்டார்.. அந்த விசிறி என்ன ஆனான் என்பது கிளை மாக்ஸ்..

விசிறி பாத்திரம் தான் கதையின் உயிர்நாடி. கல்லூரியில் படிக்கும் சின்ன வயது பையன் போல நடித்து அசத்தியிருக்கிறார் ஷாரூக். சிற்சில குறைகள் இருந்தாலும் நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவம் தரும் படம்.

ரசித்த பதிவு 

எங்க ஊருக்கருகே உள்ள திருவையாறு அசோகா அல்வாவிற்கு புகழ் பெற்றது. அல்வா பற்றிய சமஸ் அவர்களின் இந்த பதிவு நாவில் நீர் சொட்ட வைக்கும் அட்டகாசமான ஒன்று.. வாசிக்க தவறாதீர்கள் !

அழகு கார்னர் 

Image may contain: 1 person, smiling, closeup
ஜாக்குலின் 

நானே ஜிந்திச்சேன்

ஜாகிங் என்பது அண்ணன் மாதிரி; ஆரம்பத்தில் வெறுப்போம். நாள்பட நாள்பட தான் அருமை தெரியும்.

வாக்கிங் தம்பி போல. எப்பவும் ஜாலி .. Fun ! அண்ணனால் உதவ முடியாவிடினும், தம்பி நிச்சயம் உதவுவான் !

- இன்றைய நடை பயிற்சியில் தோன்றியது (நானே ஜிந்திச்சேன் )

சாக்ஸ் shocks !!

காலையில் அலுவலகம் கிளம்பும் போது சாக்ஸ் தேடுவதே ஒரு பெரும் பிரச்சனை; என்ன பிரச்சனை என்கிறீர்களா?

இந்த சாக்ஸ்கள் எப்போதும் தமது ஜோடிகளை விட்டு பிரிந்தே காலம் கழிக்கின்றன. பத்து சாக்ஸ் இருக்கும். ஆனால் அதில் சரியான ஒரு ஜோடியை தேடி கண்டு பிடிக்கணும்.பத்து சாக்சில் நிஜமாவே ஒன்று மட்டுமே இணையோடு இருக்கும். மற்றவை எல்லாம் ஒண்டி கட்டைகளாக திரு திரு என முழிக்கும்.

துவைக்கும் இடத்திலோ, காயும் இடத்திலோ எப்படியோ ஜோடியை தொலைத்து விடுகின்றன.

பேசாம - யூனிபார்ம் மாதிரி கரும்நீல நிறத்தில் மட்டும் சாக்ஸ் வாங்க யோசித்து வருகிறேன். அப்போ - நிச்சயம் 2 காலுக்கும் ஒரே மாதிரி சாக்ஸ் கிடைச்சுடும் இல்லையா !

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நிச்சயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. டீமானிடைசேஷனுக்கு பிறகு நடக்கும் பெரிய தேர்தல் இது; டீமானிடைசேஷனில் பெரும்பான்மை மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இருந்தும் ஐந்தில் -நான்கு மாநிலம் பிஜேபி வசம் எப்படி வந்தது ! (கோவா மற்றும் மணிபூரில் இரண்டாம்  இடம் வந்தும் சாமர்த்தியமாக காயை நகர்த்தி பிஜேபி ஆட்சியை கைப்பற்றியது )

டீமானிடைசேஷன் துயரத்தை எதிர்த்து எதிர் காட்சிகள் போதிய பரப்புரை செய்ய வில்லை; மாற்றாக இது என்னவோ பணக்காரர்கள் பணத்தை வாங்கி ஏழைக்கு கொடுக்க வைக்க நடக்கும் நிகழ்வு என பிஜேபி செய்த பிரச்சாரம் எடுபட்டது என்றே தோன்றுகிறது

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபியை அசைக்கவே முடியாது! இது நல்லதா கெட்டதா..தெரிய வில்லை !

Sunday, March 5, 2017

முதல் அரை மாரத்தான் -கற்றதும் பெற்றதும்

ந்து மாதம் தான் ஆகிறது. ..ஓட துவங்கி ! 10 கிலோ மீட்டர்  முதலில் ஓடியது நவம்பர் 2016ல் !

ஓட துவங்கி கொஞ்ச நாள் ஆன பின்பு அடுத்த இலக்கான  21கி. மீ பற்றிய யோசனை வந்து விட்டது; நண்பர்கள் சிலர் அவசரம் வேண்டாம் என்றனர். குறிப்பாக அனைத்து மாரத்தன்களிலும் என்னுடன் ஓடிய பழனியப்பன்..இன்னும் ஒரு வருஷம் போகட்டும் என்றே சொல்லி கொண்டிருந்தார்.

இன்னும் சில நண்பர்கள் சொன்ன லாஜிக்...... பத்து கிலோ மீட்டர் 60 நிமிடத்திற்குள் ஓடி முடித்த பின் - 21 கிலோ மீட்டர் ஓடலாம் என்பது ! இது ஓரளவு சரிதான் என தோன்றியது. ஏழெட்டு முறை ஓடியும் 10 கி.மீ - 62 முதல் 67 நிமிட ரேஞ்சில் தான் ஓட முடிந்ததே தவிர 60க்குள் முடிக்க முடியவில்லை.

ஏனோ மீண்டும் 21 கி.மீ மேல் ஆர்வம். மெப்ஸ் மராத்தான் அனவுன்ஸ் செய்து இறுதி வாரமும் வந்து விட்டது;ரிஜிஸ்டர் செய்யலாமா என யோசனையாகவே இருந்தது

15 கி.மீ வரை முயற்சி பண்ணி பார்த்துட்டு அது முடிந்தால் 21 ஓடலாம் என முடிவு செய்தேன் .இரு நாள் அடுத்தடுத்து 12 மற்றும் 15 கிலோ மீட்டர் ஓடிய  பின் நிச்சயம் 21 ஓட முடியும் என நம்பிக்கை வந்தது; கடைசி நேரத்தில் மெப்ஸில் இருக்கும் நண்பர் தினகர் உதவியுடன் ரிஜிஸ்டர் செயதேன்



Preparation 

போன பாராவில் சொன்னது போல் 12 மற்றும் 15 ஓடி பார்த்தது முதல் வேலை ( ஓட்டம் பற்றி நன்கு  தெரிந்த நண்பர்கள் 15வரை கூட ஓடி பார்க்க வேண்டாம். 10 அல்லது 12 கிமீ ஓட முடிந்தால் போதும் என்றனர்)

ரேஸுக்கு முந்தைய  2 நாள் நடை மற்றும் சைக்கிளிங் மட்டுமே செய்தேன். ஓடவில்லை.

10 கி.மீ ஓடும்போதெல்லாம் நேரம் பார்த்தே ஓடுவது வழக்கம். இம்முறை நேரத்திலோ விரைவாக முடிப்பதிலோ அதிகம் concentrate செய்ய வேண்டாம் என நிச்சயம் மனதுக்குள் உறுதி செய்து கொண்டேன்.

21 கி. மீ என்பது சற்று அதிகமான தூரம். எனவே நம்மை exhaust /burn out ஆகாமல் பார்த்து கொள்வது மிக முக்கியம். முதலில் அதிக வேகம் ஓடி சோர்வானால் இறுதியில் ரொம்ப சிரமம் ஆகும் வாய்ப்பு உண்டு.

எனது நண்பர் ஒருவர் 17 கிலோ மீட்டர் வரை நிற்காமல் ஓடியவர் அதன் பின் சுத்தமாய் ஓட முடியாமல் நிறுத்தி விட்டார்.இந்த அனுபவம்- ஓட்டத்தை சற்று திட்டமிட்டு தான் அணுக வேண்டும் என்பதையும் 10கிலோ மீட்டர் போல் எந்த பிளானிங்கும் இல்லாமல் ஓட முடியாது என்றும் புரிந்தது

எனது strategy மிக எளிது: துவக்கம் முதலே தொடர்ந்து போதிய ரெஸ்ட் (அதாவது நடை) உடன் ஓட வேண்டும் என்பது தான் அது !

ஆரம்பத்தில் முடிந்த வரை ஓடுவது. சிறிது சிரமம் என்றாலும் push செய்யாமல் நடக்க துவங்கி விட வேண்டும். இறுதி 5 கிலோ மீட்டர் push செய்து ஓடி பார்க்கலாம்.

மேலும் மொபைலில் full சார்ஜ் இருக்கிற மாதிரி பார்த்து கொண்டேன். பாட்டு கேட்டு கொண்டே ஓடினால் வழக்கத்தை விட சற்று அதிகம் ஓடலாம்.அது ஒரு டைவெர்ஷன் ஆக இருக்கும்.

மொத்த aid station எத்தனை -அது எங்கெங்கு உள்ளது என்பதை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டேன். ஓடும் போது பார்க்க வில்லை; ஆயினும் துவக்கத்தில் 2 அல்லது ரெண்டரை கிலோ மீட்டருக்கு ஒரு aid station ; கடைசி 5கிலோ மீட்டர் - ஒவ்வொரு கிலோ மீட்டரிலும் aid station இருக்கும். இதை தெளிவாக மனதில் இருத்தி கொண்டேன்.

இவ்வளவு தூரம் ஓட எனர்ஜி தேவை;எனவே காலை ஒரு ஆப்பிள் சாப்பிட்டு விட்டு தான் ஓட்டத்திற்கு கிளம்பினேன்

இரவு சரியான உறக்கம் இல்லை; உறங்கவே பத்தரை ஆனது.ரெண்டரைக்கெல்லாம் எங்கள் செல்லப்பிராணி கூக்ளி அழுது எழுப்பி விட்டான். பின் உறக்கமில்லை; 3 மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து கிளம்பி விட்டேன்

****
Race Day

ஞாயிறு காலை 4 மணிக்கு சென்னையில் சிற்சில கடைகள் திறந்திருப்பது ஆச்சரியம் தந்தது (அநேகமாய் டீ கடை அல்லது பெட்டி கடை) ;பெட்ரோல் பங்கு திறந்திருக்க - செக்கியூரிட்டி அங்கேயே உட்கார்ந்த படி தூங்கி கொண்டிருந்தார்.  எப்போது வரும் என தெரியாத பஸ்ஸுக்கு அந்த நேரத்திலும் பொது மக்கள் காத்திருந்தார்கள்.

மெப்ஸ் வந்து விட்டது.

5.05க்கு ஓட்டம் துவங்கியது. நண்பர் ஷான் உடன் முதல் ஒரு கிலோ மீட்டர் ஒடினேன்.நண்பர் ராஜ்குமார் தாமதமாக வந்தவர்.. சரியாக ஓட்டம் துவங்கும் நிமிடம் வந்து இணைந்தார்.

முதல் 3 கிலோ மீட்டர் விரைவாக கடந்து விட்டேன். திடீரென முதுகு பிடிப்பு போல் உணர்ந்தேன். ஆஹா இத்துடன் ஓட முடியாதே என பயம்.. பின் நடந்தபடி முதுகிற்கான சில stretches செய்ய வலி சரியாகி விட்டது. துவக்கத்தில் ஆறு நிமிடத்திலும் பின் ஆறரை அல்லது 7 நிமிடத்தில் ஒவ்வொரு கிலோ மீட்டரும் கடந்து கொண்டிருந்தேன்

ஓடிய 21 கிலோ மீட்டரில் 90 % இதுவரை நாம் பார்க்காத ஏரியா. இதுவே ஒரு சுவாரஸ்யம் தந்தது.

முதல் மூன்றரை கிலோ மீட்டர் மெப்ஸின் உள்ளே ஓட்டம். அங்குள்ள நிறுவனங்களை பார்த்த வண்ணம் ஓடி கொண்டிருந்தேன்.

பின் கிராமம் துவங்கியது ... முதலில் திருமுடி வாக்கம்.. அப்புறம்.. மேற்கு தாம்பரம்.. குன்றத்தூர், திரு நீர் மலை போன்ற ஏரியாக்கள்.. பை பாஸ் சாலையின் சர்வீஸ் ரோடு மற்றும் கிராமத்தில் மக்கள் வசிக்கும் தெருக்கள் இவற்றில் தான் ஓட்டம் நிகழ்ந்தது. 



Aid station சப்போர்ட் மிக சுமார் தான். அதிக தூர ஓட்டத்திற்கு எலெக்ட்ரால் போன்றவை மிக முக்கியம். முதல் இரண்டு Aid station ல் தண்ணீர் மற்றும் உப்பு உள்ளிட்ட வெகு சில தான் இருந்தது.போகப்போக ..பின்னால் வந்த Aid station களில் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவை கிடைத்தன 

10-11கிலோ மீட்டர் அதிக சிரமம் இல்லாமல் கடந்து விட்டேன்.11 கிலோ மீட்டர் 75 நிமிடத்தில் தாண்டியாச்சு. மீதம் உள்ள 10 கிலோ மீட்டர் 75 நிமிடத்தில் போனாலே இரண்டரை மணி நேரத்தில் போயிடலாம். ஆனால் அவ்வளவு விரைவில் போக வேண்டாம்.. அடுத்தடுத்து வரும் ஓட்டங்களில்  இந்த குறைவான நேரம் ஒரு ப்ரெஷர் தரும்  என அதன் பின் ஓட்டத்தை குறைக்க ஆரம்பித்து விட்டேன். 

வழியில் ஒரு 55 வயது மதிக்க தக்க வெளி மாநிலத்தவரை கண்டு பேசினேன். பம்பாயிலிருந்து வருகிறாராம். ஒவ்வொரு வருடமும் மெப்ஸ் மாரத்தான் வந்து விடுவேன்.. அழகான ரூட்..அதற்காகவே என்றார்.

திருநீர் மலை கோயில் அருகே மலை மேல் உள்ள கோயிலும் அருகில் பசுமையான வயல் வெளிகளும் கண்ணை கவர்ந்தன.



17 கிலோ மீட்டரில் மீண்டும் மெப்சுக்குள் நுழைந்ததும் ஆகா மெப்ஸ் வந்துவிட்டது..சீக்கிரம் முடியும் என நினைத்தால் அதன் பின் 4 கிலோ மீட்டர் கொஞ்சம் தண்ணி காட்டுது 

கடைசி 3-4 கிலோ மீட்டர் நன்கு ஓடலாம் என முதலில் நினைத்தேன்.. ஆனால் அந்த நேரம் அதிக பட்சம் 200 மீட்டர் தான் ஓட முடிந்தது. அப்புறம் இன்னொரு 200 மீட்டர் நடை..பின் ஓட்டம்..இப்படித்தான் சென்றது;அதற்கு மேல் push செய்ய முடியலை. 



21 கி.மீ முடித்த போது 2 மணி நேரம் 33 நிமிடம் ஆகியிருந்தது ! எனது துவக்க ஊகம் 2 மணி 45 நிமிடம் ஆகும் என்பது. அதை விட குறைவான நேரத்தில் முடிந்தது பெரும் மகிழ்ச்சி.

***

ஓட்டத்திற்கான எனது திட்டமிடலில் 90% நேரடியே பயன் பட்டது ! ஒரு சில..... அந்த நேரத்திற்கு ஏற்றார் போல் மாற்றி கொள்வதும் அவசியம். 

முடித்து விட்டு பிசியோதெரப்பி - ஸ்ட்ரெட்சஸ் செய்து கொண்டேன்.செய்தவர்கள் இறுதி ஆண்டு Physiotherapy படிக்கும் மாணவர்கள்


நண்பர்கள் ராஜ்குமார், ஷான் மற்றும் சந்திர மோஹனுடன் புகைப்படம் எடுத்து கொண்டு சாப்பிட்டு விட்டு விடை பெற்றோம். ஒவ்வொருவர் ஒவ்வொரு நேரத்தில் வந்திருந்தனர். ஷான் 2 மணி 14 நிமிடம்; ராஜ்குமாருக்கு காலில் காயம். இல்லாவிடில் 2 மணிக்குள் ஓடி முடிக்கும் அவர் எடுத்து கொண்டது 2 மணி மற்றும் 40 நிமிடங்கள் 


21 கிலோ மீட்டர் ஓடி முடித்த இந்த நாள் முழுக்க மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.

இத்தகைய சாலஞ்கள் நம்மை நாமே இன்னும் நன்றாக உணர வைக்கின்றன 

மாரத்தானுக்கு வந்தனம் !

Saturday, March 4, 2017

மராத்தான் ..சில தவறான புரிதல்கள்

45 வயதுக்கு பின் ஓடத்துவங்கியவன் நான். இன்னும் முன்பே ஆரம்பித்திருக்க வேண்டும் என அடிக்கடி தோன்றும்.   "Better late than never !". இதுவரை ஆரோக்கியத்தில் பெரும் பிரச்சனை இல்லை; ஓட்டத்தின் உதவியால் இனியும் நல் ஆரோக்கியம் தொடரும் என நம்பிக்கை !  ஒரு விதத்தில் சரியான நேரத்தில் ஓட்டத்தை துவங்கியதாக சமாதானப்படுத்தி கொள்வது வழக்கம்.

மாரத்தான் குறித்து எனக்கும் நிறைய தவறான புரிதல்கள் இருந்தது; அதே விதமான  கேள்விகள் நண்பர்கள் பலர் இப்போது கேட்கிறார்கள்.அவர்களின் கேள்வியே இப்பதிவை எழுத காரணம் !

Image may contain: 4 people, people smiling, people standing
பாடகர் நரேஷ் அய்யருடன் 10 கி.மீ  ஓடிய போது ....

1.மராத்தான் என்றால் - மொத்த தூரமும் ஓடவேண்டும்..

மராத்தானில் பங்கேற்கும் முன் நானும் இப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன். அண்மையில் தொடர்ந்து நடை பயிற்சி செய்யும் ஒரு நண்பர் - இதே கேள்வியை கேட்டார்.

எலைட் ரன்னர்கள் என சொல்லக்கூடிய - அட்டகாச ஓட்ட வீரர்கள் மட்டுமே முழு தூரத்தையும் ஓடி கடப்பார்கள். இவர்கள் மராத்தானில் ஓடுவோரில் 20 முதல் 30 % வரை தான் இருக்க கூடும்.

அப்போ மற்றவர்கள்?

நிச்சயம் மராத்தான் நடுவில் நடக்க கூடியவர்கள் தான் ! சிலர் பாதி தூரம் ஓடியும், மீதி தூரம் நடந்தும் கடப்பார்கள்.

இன்னும் சிலரோ அதிக தூரம் ஓடியும் - மிக குறைவாக (முடியாத போது மட்டும்) நடந்தும் கடப்பார்கள்..

சென்னை விப்ரோ மாரத்தான் போன்றவற்றில் முழு 10 கிலோ மீட்டரும் நடந்து கடந்தோரும் உண்டு.

என்னை பொறுத்த வரை மாராத்தானில் 60 முதல் 70 % ஓடுகிறேன்.மீத தூரம் நடக்கிறேன். தொடர்ந்து ஓட , ஓட - நடக்கும் நேரம் குறையலாம். இது அவரவர் எனர்ஜிக்கு ஏற்ப மாறும்.

எனவே முழுதும் ஓடணுமா என்கிற பயம் தேவை இல்லை !

2. தொடர்ந்து ஓடினால் முட்டி ஆப்பரேஷன் பண்ணனும் !!

ஓட்டத்தை விரும்பாத பலரும் - ஓட்டத்திற்கு எதிராய் சொல்லும் ஒரு காரணம் இது.

ஓடத்துவங்கும் முன் இதுபற்றி நிறைய நான் தேடி தேடி வாசித்தேன். ரன்னர்கள் பலரிடமும் பேசினேன்.

உண்மையில் சரியான படி ஓடுவது கால்களுக்கும் முட்டிக்கும் நல்ல வலு சேர்க்கும். 70-80 வயதிலும் எப்படி பல ஆண்களும், பெண்களும் ஓடுகிறார்கள்??  ஓடினாலே முட்டி பிரச்சனை வரும் என்றால் - அவ்வளவு வயதான காலத்தில் எப்படி மாரத்தான் ஓட முடிகிறது !! மேலும் 10-20 ஆண்டுகளாக எப்படி ஓடுகிறார்கள் !

எனக்கு தெரிந்த வரை ஓடுவதை நிறுத்துவோர் - வேலை பளு, பணி மாற்றம் ..குடும்ப காரணங்கள் ,தங்கள் சோம்பேறித்தனம்..இவற்றால் தான் நிறுத்துகிறார்கள். கால் பிரச்சனை ஆகி நிறுத்துவோர் மிக குறைவு.

ஓடுவதில் சில விதிகள் உள்ளன: குறிப்பாக துவக்கத்தில் வாரத்தில் 3 நாள் தான் ஓடணும். நன்கு ட்ரெயின் ஆன பின் கூட வாரத்தில் 5 நாள் ஓடலாம் (அதுவும் பெரும் மாராத்தானுக்கு டிரெயினிங் இருக்கு போன்ற காரணத்திற்காக மட்டும் )

ஒரு நாள் ஓடினால்-மறுநாள் ஓடக்கூடாது என்பது பலரும் பின்பற்றும் விஷயம்.இது தான் கால்களுக்கு ஓய்வு தர நாம் செய்யும் முக்கிய வேலை.இந்த நாளில் நடக்கலாம்;சைக்கிள் ஓட்டலாம். நீச்சல் அடிக்கலாம்....

(நன்கு பயிற்சி எடுத்தோர் குறிப்பிட்ட நாட்கள் ..உதாரணமாய் -தொடர்ந்து 10 நாள்  10 கிலோ மீட்டர் ஓடுவார்கள். இதுவும் ஒரு வித பயிற்சியே. ஆனால் இதனை அத்துடன் நிறுத்தி கொள்வார்கள்.தொடர்ந்து செய்ய மாட்டார்கள் )

நீங்கள் ஓட துவங்கினாலே, பின் இயல்பாய் ஒரு குழுவில் இணைந்து விடுவீர்கள். அங்குள்ளோர் நிச்சயம் ஓட்டத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை கற்று தருவார்கள். அவற்றை பின் பற்றினாலே காயத்திலிருந்து தப்பிக்கலாம்.

Image may contain: 9 people, people smiling, people standing, sky and outdoor
ப்ளூ டார்ட் பைனான்ஸ் டீம் ; இதில் 50 வயதை கடந்தோர் இருவர் உள்ளனர் !

3.ஒரு தடவை விழுந்துட்டா அவ்ளோ தான்.

நண்பர் ஒருவர் நான் ஓடுவதை கிண்டலடித்து கொண்டே இருப்பார். அவரும் ஓடியவர் தானாம் ! சோம்பேறித்தனத்தில் விட்டதாக அவரே சொல்லவும் செய்வார். ஆனால் இப்போது அவர் அடிக்கடி சொல்வது :"ஒரு கல் தடுக்கி விழுந்தா அவ்வளவு தான்; அப்புறம் லைப் முழுக்க படுத்து கிடக்க வேண்டியது தான்  !"

உண்மையில் இது இவரது சோம்பேறி தனத்தை மறைக்க, தனது செயலை நியாய படுத்த சொல்லும் காரணம் அன்றி வேறில்லை.

உட்கார்ந்து, உட்கார்ந்து  சாப்பிட்டுட்டு நல்லா தொப்பை வச்சா பட்டக்குன்னு ஒரு நாள் போக மாட்டோமா என்ன ?

ஒரு முறையல்ல, பல முறை விழுந்தாலும் ஓட்டத்தில் ஈடுபாடுள்ளோர் மறுபடி ஓடுவார்கள்.. ! காலில் சுளுக்கு, வலி போன்றவை இருந்தாலே எப்போது சரியாகும், எப்போதும் மீண்டும் ஓடலாம் என்று தான் ஏங்கும் மனது..!

4.ஒல்லியாக இருப்பவர் தான் ஓட முடியும் !

நிச்சயமாக கிடையாது; ஒரு முறை மராத்தான் வந்து பாருங்கள். எத்தனை bulky ஆன நண்பர்கள் ஓடுகிறார்கள் என தெரியும்.

விப்ரோ மராத்தானில் பார்த்த ஒரு நண்பரை இன்னும் மறக்க முடிய வில்லை. மிக மிக பருமனானவர்.. சட்டை மற்றும் மடித்து கட்டிய வேஷ்டி அணிந்தபடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தார்.. நான் ஓடியது 10 கிலோ மீட்டர். அவர் ஓடி கொண்டிருந்தது 21 கிலோ மீட்டர் !!

தொடர் ஓட்டம்  எடையை ஓரளவு குறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை; அவருக்கு நிச்சயம் ஓட்டம் சில பலன்களை தந்திருக்க வேண்டும். அநேகமாக 5 கிலோ மீட்டர் ஓட்டத்தில் துவங்கி 10 கிலோ மீட்டரை தாண்டி தான் இப்போது 21 கிலோ மீட்டர் ஓடியிருப்பார்.. அவர் குறித்த இந்த சிந்தனைகளுடன் அன்று நான் எனது ஓட்டத்தை தொடர்ந்தேன்....

5.ஓடுதல் மிக கடினமான ஒரு விஷயம் 

நாம் ஓடத்துவங்கும் வரை ரன்னர்களை ஆச்சரியத்துடன் தான் பார்ப்போம்.

உண்மையில் ஓட்டம் என்பது ரொம்ப கஷ்டமான விஷயமே இல்லை; முதலில் நம்மால் முடிந்த வேகத்தில் முடிந்த தூரம் ஓட போகிறோம். முடியலையா நடக்கப் போகிறோம். மூச்சும் மனமும் சரியான பின் மீண்டும் ஓடப்போகிறோம்.இந்த மன நிலையுடன்  ஓட்டத்தை அணுகுங்கள்

ஓடி முடித்தது பெரும் சாதனை உணர்வை தரும்..ஓட்டமே ஒரு enjoyable experience ஆகி விடும்...

6.எவ்வளவு விரைவாக  ஓடி முடிக்கிறோம் என்பது தான் முக்கியமான விஷயம்.

நிச்சயமாய் இல்லை ! எல்லா மாரதன்களிலும் பரிசுகள் உண்டு என்றாலும் -மிக விரைவாய் ஓடும் எலைட் ரன்னர்களுக்குள் தான் அந்த பரிசை பெற போட்டியிருக்கும்.

சாதாரணமாய் - தன் உடல் நலத்துக்காக ஓடும் நம்மை போன்ற ஆசாமிகளுக்கு -குறிப்பிட்ட தூரத்தை ஓடி முடிப்பது மட்டுமே இலக்கு.சில பேர் சென்ற முறை ஓடியதை விட இம்முறை குறைவான நேரத்தில் ஓடுகிறோமா என பார்ப்பார்கள்.அவ்வளவே. அதுவும் கூட அவசியமில்லை. ஓட்டம் எனும் அனுபவத்திற்கு ஓடுவோர் தான் மிக அதிகம் !

மகளுடன் சேர்ந்து ஒரு மினி மாரத்தான்(5 KM)  ஓடியபோது 

சரி..எதற்காக ஓடவேண்டும்? ஓடுவதால் என்ன பலன்?

1. உடல் நலம் தான் முதல் குறிக்கோள். இன்றைய நிலையில் பலரும் அலுவலகத்தில் 8-9 மணி நேரம் அமர்ந்த படி வேலை பார்ப்பதால் உடலுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. எனவே ஓட்ட  பயிற்சி உடலில் போதுமான கலோரிகளை எரித்து - வெயிட் போடாமல் காக்கிறது. ஏற்கனவே வெயிட் உள்ளோர் - தொடர்ந்து ஓடினால் எடை குறைவது நிச்சயம் ...

2. ஓட்டம் பல புதிய .......ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்களை அறிமுகப்படுத்துகிறது; இவர்களில் பலரும் நமது உடல் நலனுக்கு உதவ, ஆலோசனை சொல்ல தயாராக இருப்பார்கள்..நல்ல நட்பு ... நிச்சயம் மகிழ்ச்சி தருகிறது

3. ஓட்டம் தரும் சந்தோஷம்.. சென்ஸ் ஆப் அச்சீவ்மென்ட் ..!! ஒரு காலத்தில் நம்மால் முடியாது என்று நினைத்த ஓட்டத்தை ஓடுகிறோம். நினைத்து பார்க்க முடியாத தூரங்களை அடுத்தடுத்து  கடக்கிறோம் ..நம்மையே நாம் விரும்ப, ரசிக்க உதவும் விஷயம் இது.

சில நாட்கள் - அலுவலகம் - வீடு இரண்டிலுமே நாம் நினைத்த எதுவுமே நடக்காமல் போனாலும், ஓட்டம் நம்மை depressஆகாமல் காக்கும். "இந்த ஒரு விஷயமாவது இன்னைக்கு நாம் நினைச்ச படி நடந்திருக்கு"என்ற எண்ணமே நம்மை ஆற்றுப்படுத்தும்

4.தூக்கம் :

ஓடுவோருக்கு தூக்க பிரச்சனை இருக்க வாய்ப்புகள் மிக குறைவு (மரத்தானுக்கு முதல் நாள் மட்டும் அதிகாலை எழனும்  என்றாலும், தூக்கம் சரியாய் வராது ஓட்டம் குறித்தே சிந்தனையாய்  இருக்கும்  ...இதை ஒன்றும் செய்ய முடியாது; இன்டெர்வியூ அல்லது முக்கிய மீட்டிங்கிற்கு முதல் நாள் தூக்கம் வராத மாதிரி தான் இதுவும் )

5.பெரும்பாலும் விரும்பிய உணவுகளை சாப்பிடலாம் (அளவில் மட்டும் சற்று கவனம் தேவை ..) மேலும் ஓட ஆரம்பித்த பின் நாமே சற்று டயட் கான்ஷியஸ் ஆகி விடுவோம் ..நல்ல விஷயங்களை தேடி தேடி சாப்பிடுவோம் )

இறுதியாக ...

ரன்னிங் ஒரு மிக நல்ல ஹாபி. எத்தனையோ பேருக்கு என்னென்னவோ ஹாபி இருக்கும். அதில் .. நம் உடல்நலனில் மட்டுமே அக்கறை செலுத்தும் ஓட்டம் நமக்கும் ...நம் குடும்பத்துக்கும் மிக மிக நல்லது !

***********
தொடர்புடைய பதிவுகள்

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

பாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்

முதல் மாரத்தான் அனுபவங்கள் 

Friday, March 3, 2017

குற்றம் 23 - சினிமா விமர்சனம்

யக்குனர் அறிவழகனின் ஈரம் எனக்கு  மிக பிடித்தமான  படம். கதை- திரைக்கதை- இயக்கம் மூன்றிலும் அசத்தியிருப்பார் இயக்குனர்.

Related image

 அடுத்த படமான வல்லினம் - பெரும் தோல்வியை  சந்திக்க, ஈரம் பாணியில் மீண்டும் ஒரு த்ரில்லர்  தந்துள்ளார்.  ஈரத்தின் வெற்றி இங்கும் கிட்டுமா?

கதை 

சர்ச்சில் முதலில் ஒரு கொலை .. பின் அதனை தொடர்ந்து வரிசையாக பல கர்ப்பிணிகள் இறக்கிறார்கள். இக்கொலைகளை  துப்பறிகிறார் அசிஸ்டென்ட் கமிஷனர் வெற்றி (அருண் விஜய்); ஆர்டிபிஷியல் இன்செமினேஷன் என்னும் மருத்துவ முறையை வைத்து ஒரு பெரும் க்ரைம் நடப்பதை எப்படி கண்டு பிடிக்கிறார்- முறியடிக்கிறார் என்பதே கதை

பாசிட்டிவ் 

அருண் விஜய் மிக அட்டகாசமான நடிப்பு ! அழகு, நடிப்பு, திறமை எல்லாம் இருந்தும் அதிக வெற்றியை சுவைக்காதவர் - இப்படத்தில் ஹீரோவுக்கான நியாயத்தை நிச்சயம் தந்துள்ளார்.  செம பிட் ஆன உடல் .. சீரியஸான முகபாவம்.. ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துவது என எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத நடிப்பு

ஹீரோயின் மஹிமாவிற்கு - மீனிங்புல் ரோல்  தந்துள்ளனர்.  அழகாக இருப்பதுடன் தெளிவாக - சரியான முறையில் நடிக்கிறார்.  இன்னும் உயரம் தொடும் திறமை  உண்டு.

Image result for kuttram 23 images

அபிநயா.. இரண்டாவது ஹீரோயின் என சொல்லும் விதத்தில் உள்ளது பாத்திரமும் நடிப்பும்.

பின்னணி இசை.. apt ! ஒளிப்பதிவு .. வெரி குட் . டாப் ஆங்கிள் ஷாட்கள் த்ரில்லர் படத்துக்கான வேலையை சரியாக செயகின்றன

ராஜேஷ் குமாரின் கதை மற்றும் (லேசான தொய்வை தவிர்த்து) திரைக்கதையும் நன்று

நெகட்டிவ் 

வில்லன் பாத்திரத்தின் நியாயம் மற்றும் குற்றங்களுக்கு சொல்லும் காரணம் அவ்வளவு வலுவாய் இல்லை ! இதனை இன்னும் சற்று வலுவாக்கி பாதி படத்திலாவது பார்வையாளர்களுக்கு தெரிய படுத்தி இருந்தால் - impact இன்னும்  இருந்திருக்கலாம். கிளைமேக்ஸ்க்கு முன் ஏனோ ஒரு lag  வருகிறது;அதன் பின் கொலைக்கான காரணங்கள் தெரிய வரும்போது - சற்று நீர்த்து போய் விடுகிறது

இன்னும் 5-7 நிமிடம் கத்திரி போட்டு படத்தை ஷார்ப்  ஆக்கலாம்.

தம்பி ராமையா என்றாலே - தனக்கு தானே (மனதுக்குள்) பேசிய படி இருக்கிற பாத்திரம் என ஆக்கி  விட்டார்கள்.சலிப்பூட்டுகிறது !

ஆர்டிபிஷியல் இன்செமினேஷன் என்பது அறிவியலின் ஒரு நல்ல கண்டு பிடிப்பு. அது இந்தியா வந்து 25 ஆண்டுக்கு மேலாகிறது; அதனை பெரும் பாவச் செயல் போல தோன்ற வைக்கின்றன சில காட்சிகள் ! இன்னும் கொஞ்சம் சென்சிடிவ் ஆக இதனை கையாண்டிருக்கலாம்

எல்லாம் முடிந்த பிறகு ஹீரோ சொல்கிறார் " குழந்தை இல்லை இல்லைன்னு எத்தனையோ பேர் சொல்றாங்க; இன்னொரு பக்கம் எத்தனை அநாதை குழந்தைகள் இருக்கு !!"

படம் இத்துடன் நிறைகிறது; இயக்குனர் சொல்ல  வந்தது: குழந்தை இல்லாதோர் ஒரு அநாதை குழந்தையை எடுத்து வளர்த்தாலே இரண்டு பிரச்னையும் தீர்ந்து விடும் என்பதை தான்.. ஆனால் அந்த மெசேஜ் சரியாக சென்று சேர்ந்ததா என்பது சந்தேகமே !

நிறைவாக 

படத்தை முதல் நாளே பார்க்க இன்னொரு முக்கிய காரணம்.. எனது கம்பெனி செக்ரட்டரி நண்பர்  திரு.ராமநாதன் சிறு ரோலில்  நடித்துள்ளார்.முதல் காட்சியில் வரும் பாதிரியார் தான் அவர் !  வருவது 2 நிமிடம் தான் என்றாலும் - முக்கால் வாசி படம் வரை - பாதிரியார் பற்றி எல்லாரும் பேசுகிறார்கள் .. நண்பருக்கு வாழ்த்துகள் !!

நிச்சயம் நல்லதோர் த்ரில்லர் ! நிச்சயம் நிறைய பேர் பார்ப்பர் ...  ரசிப்பர் .. ஆனால் படத்தை எங்கு  பார்ப்பார்கள்? தியேட்டரிலா என்றால் ....சந்தேகம் தான் !
*********
த்ரில்லர் படம் விரும்புவோர் நிச்சயம் ஒரு முறை காணலாம் !

*****
அண்மை பதிவு:

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி



வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் ஒரு பேட்டி படித்து அசந்து போனேன்

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ் பக் ஷி ஷேர் மார்கெட் பற்றி சொல்லிய பல விஷயங்கள் அவசியம் பகிர தோன்றியது !

ரமேஷ் பக் ஷி

டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஆங்கிலத்தில் வந்த கட்டுரை இது. தமிழாக்கம் மட்டும் அடியேன்  :)

இனி ரமேஷ் பக் ஷி பேசியது
*********
னக்கு 30 வயதாக இருக்கும்போது நான் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய துவங்கினேன். குடும்பத்துக்கான மாதந்திர செலவுகள், இன்சூரன்ஸ் ப்ரீமியம் போன்ற செலவுகள் போக மீதம் இருக்கும் பணத்தில் 30 % பிக்சட் டெபொசிட் போன்றவற்றிலும், மீதம் இருக்கும் பணம் ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்வேன்

என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் - நான் முதலீடு செய்த 2 கம்பனிகளின் ஷேர்கள் தான் உதவின அவை - ஹிந்துஸ்தான் யூனி லீவர் மற்றும் மெட்ராஸ் சிமெண்ட் ஆகிய நிறுவன பங்குகள்

ஹிந்துஸ்தான் யூனி லீவர் பங்குகளை முதன்முதலாக 64,000 ரூபாய்க்கு வாங்கினேன். அடுத்த 20 வருடம் அதனை நான் விற்கவே இல்லை. இந்த 20 வருடத்தில் நிறுவனம் பலமுறை இலவச போனஸ் ஷேர்கள் வழங்கியது. அவை எல்லாம் சேர்ந்து நான் 35,000 ஹிந்துஸ்தான் யூனி லீவர் ஷேர்கள் வைத்திருந்தேன். மெட்ராஸ் சிமெண்ட் நிறுவன பங்கும் ஏறக்குறைய இதே கதை தான்

இந்த இரண்டு பங்குகளும் எனக்கு கறவை மாடுகள் போல வேண்டிய போதெல்லாம் பணம் தந்தன. 3 குழந்தைகள் படிப்பு மகள் திருமணம், ஆஸ்பத்திரி செலவுகள் என எல்லாவற்றுக்கும் - இவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் விற்று தான் சமாளித்தேன்

கடந்த 40 வருடங்களில் வேறு பல பங்குகளும் வாங்கி விற்றுள்ளேன். ஆனால் எந்த ஷேர் வாங்கினாலும் 3 குறைந்தது முதல் 5 வருடங்கள் வைத்திருந்து அதன் பின் தான் விற்பேன்

இந்த 40 வருடங்களில் எத்தனையோ முறை பல பங்கு மார்க்கெட் ஊழல்கள் வந்து போய் விட்டது. இவை வரும் நேரத்தில் பங்குகள் விலை மிக குறைந்து நம் மன நிம்மதி தற்காலிகமாக குலைந்து போகும் !

தற்போதைய ஷேர் மார்க்கெட் முற்றிலும் வேறு விதமாய் இருக்கிறது. இப்போது நான் முற்றிலும் தவிர்ப்பவை பொது துறை நிறுவன பங்குகள் மற்றும் நிறுவனங்கள் வெளியிடும் IPO - க்களை.

ஒரு போதும் நான் ஷேர்களை அன்றே வாங்கி அன்றே விற்கும் வேலையில் இறங்கியதில்லை. அ து சூதாட்டம் போல

பொதுவாக ஷேர் மார்கெட் பற்றி சொல்லும்போது ஒன்று சொல்வார்கள் : உங்களின் எல்லா செலவுகளும் போக - மீதமுள்ள பணத்தில் - உங்கள் வயது என்னவோ - அத்தனை சதவீதம் பிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்யணும் மீதம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யணும் என்பார்கள். அதாவது வயது அதிகமாக, ஆக ஷேர் மார்கெட் முதலீட்டை குறைத்து கொண்டு பிக்சட் டெப்பாசிட் போன்றவற்றில் அதிகம் முதலீடு செய்யணும் என குறிப்பது இதன் அர்த்தம். ஆனால் என் விஷயத்தில் நான் இதற்கு நேர் மாறாக செய்கிறேன். எனக்கு இப்போது வயது 80. நான் எனது மீதமுள்ள வருமானத்தில் 80 % ஷேர் மார்கெட்டில் சேமிக்கிறேன் மீதம் 20 % தான் பிக்சட் டெபொசிட் அல்லது கடன் பத்திரங்களில் சேமிக்கிறேன்

இந்த வயதிலும் ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்வதால் என் மனது மிக விழிப்புடன் இருக்கிறது. இது உடல் நிலையை நன்கு வைத்து கொள்ள உதவுகிறது மேலும் எனது சொத்து மதிப்பு ஏறி இறங்குவதில் பாதிக்காமல் இருக்க கற்று கொள்வது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தை தருகிறது
*********
அவரது பேட்டி இங்கு முடிகிறது. இனி எழுதுவது மோகன் குமாராகிய எனது கருத்து :

ஷேர் மார்க்கெட்டின் மிக முக்கியமான நன்மை - அதன் liquidity - தான். உங்களுக்கு வேண்டிய நேரம் வேண்டிய அளவு ஷேர்களை விற்கலாம். ஒரு நிலம் வாங்கி வைத்திருந்தால் அவசரத்திற்கு விற்பதில் சிரமம் இருக்கும். அதே இடத்தில் நிலம் வாங்க விருப்பமுள்ள ஆள் கிடைக்கணும்; விலை படியனும்; எல்லாம் முடிந்து விற்று முடிக்க சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். ஆனால் ஷேர் மார்க்கீட்டில் நீங்கள் முதலீடு வைத்திருந்தால் அன்றைக்கே கூட விற்று விட முடியும்

ஆனால் ஷேர் மார்க்கெட்டில் தனி நபர்கள் பலரும் பணத்தை இழக்கவே செய்கின்றனர். ஷேர் மார்க்கெட்டில் உண்மையில் நன்கு பணம் செய்பவர்கள் Financial Institution என்று சொல்லப்படுகிற நிறுவனங்கள் தான்.

தனி நபர்கள் செய்யும் மிக பெரிய தவறு உடனே லாபம் பார்க்க நினைப்பது

இந்த பேட்டி மூலம் நாம் எடுத்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் - ரமேஷ் - ஒவ்வொரு பங்கையும் பல வருடங்கள் பொறுமையாக விற்காமல் வைத்திருந்தது தான். நல்ல நிறுவன பங்கை வாங்கி, சில வருடங்கள் அதனை விற்காமல் பொறுமையாக வைத்திருந்தால் நிச்சயம் 3 - 5 வருடங்களில் நல்ல விலைக்கு செல்லும். இது முதலீட்டாளர்கள் அனைவருமே ஒப்பு கொள்ளும் விஷயம் !
*****
பின்குறிப்பு:

இந்த பதிவு பற்றி நண்பர் ஸ்ரீராம் நாராயணன் கூகிள் பிளஸ்சில் எழுதியது முக்கிய தகவல் என்பதால் பதிவில் சேர்க்கிறேன் :

பேட்டியில் கற்க வேண்டியது நிறைய இருக்கு

1. சேமிப்பு அவசியமல்ல இன்றியமையாது
2. பங்குச்சந்தை ரேஸ் மைதானமல்ல, காலையில் பத்து ரூபாய் எடுத்துச் சென்று சாயங்காலம் 100 ரூபாயோடு திரும்ப
3. don't put all eggs in one basket முதலீட்டை Equity & Bond / FD என்று இரண்டாக பிரிக்கவேண்டும். அதிக ஈக்விட்டியில் ஆரம்பித்து மெதுவாக பாண்ட் / ஃபிக்ஸ்ட் டெபாசிட் பக்கம் நகர ஆரம்பிக்கணும். ரிட்டையர்மெண்ட்டுக்கு முன் பெருமளவு ஈக்விட்டியிலிருந்து வெளியே வந்து விடணும் (due to very high volatility)
4. Do not try to time the market - no one has ever done it
5. Do your research before buying a stock and Stay with your choice for a long time.

மூணு வருசம் வச்சிருந்தா லாபம் நிச்சயம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது, மேலும் ஷேர் என்பது 100 % லிக்விட் அசெட்டும் கிடையாது. நீங்க வச்சிருக்கும் ஷேரை வாங்கறதுக்கு ஆள் இருக்கும் வரையே அது லிக்விட்.

ஷேர் மார்க்கெட்டில் தனி மனிதர்கள் பணம் இழக்கிறார்கள் நிறுவனங்கள் லாபம் அடைகின்றன என்பதை உண்மை இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் அது தவறான பார்வை. இதில் வித்தியாசம் எமோசன். நம் பணத்தை கையாளும் போது எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் எமோசனலாக எடுக்கப்பட்டைவையாக இருக்கும். அதே இரு ஃபண்ட் மேனேஜர் செய்யும் போது லாஜிகலாக இருக்கும். நாமும் லாஜிகலாக தெரிவு செய்து தொடர்ந்து லாஜிகலாக செயல் பட்டால் (hold, buy more, sell etc) history proves that you can gain in Stock market. ஆனால் நாம் செய்வதோ வாட்சப்ல சொல்லிட்டான், ஃபேஸ்புக்ல சொல்லிட்டான், பக்கத்து வீட்டுக்காரன் சொல்லிட்டான் மார்க்கெட் விழும்னு அதனால நான் விக்கறேன் என்று முடிவு பண்றோம்.. பிரச்சனை நம்மிடம் மார்க்கெட்டில் இல்லை

அவர் சொல்லாமல் விட்டது போதிய அறிவும் நேரமும் இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது நலம்.

****
அண்மை பதிவு:

குற்றம் 23- சினிமா விமர்சனம் 
Related Posts Plugin for WordPress, Blogger...