Tuesday, April 30, 2013

தொல்லைகாட்சி : 60 நொடி; ஆர் யூ ரெடி + மேதின சிறப்பு நிகழ்ச்சிகள் லிஸ்ட்

60 நொடி ... ஆர் யூ ரெடி

"60 நொடி ... ஆர் யூ ரெடி ? " என புதிதாக ஒரு நிகழ்ச்சி விஜய் டிவி யில் துவங்கி உள்ளனர். முன்பு 2 பேர் ஓரணியாக இருந்து, இன்னொரு ஜோடி எதிரில் இருந்து விளையாடிய நிகழ்ச்சி தான்...இப்போது தனித்தனியே விளையாடுகிற மாதிரி மாறி வந்துள்ளது



60 நொடிகளில் குறிப்பிட்ட டாஸ்க் ஒன்றை முடிக்க வேண்டும். முடித்தவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்று விடுவர். முடிக்காதவர்களில் ஒருவர் அவுட் ஆகி வெளியேறுவார்.

10 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆளுக்கு 60 நொடி தான் ஆடுகிறார்கள். ஆக 10 நிமிஷத்தில் கேம் முடிஞ்சுடும். அப்புறம் எப்படி ஒரு மணி நேரம் இழுக்குறாங்க..? அதுக்கு தான் DD போன்ற ஆட்களை வைத்து ஏதாவது பேச வைக்கிறார்கள்.

தொடர்ந்து பார்க்கா விட்டாலும் சானல் மாற்றும்போது கொஞ்ச நேரம் பார்க்கலாம்.. நிகழ்ச்சியில் இருக்கும் சில அழகிய பெண்களுக்காக !

நல்ல நிகழ்ச்சி - மக்கள் தொலை காட்சியில் திருக்குறள்

மக்கள் தொலை காட்சியில் தினம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. தொலைபேசியில் அவர்கள் டிவிக்கு கூபிடுபவர்களுக்கு ஒரு திருக்குறளின் முதல் வார்த்தை சொல்லி அந்த குறள் முழுமையும் சொல்ல சொல்கிறார்கள். வீட்டில் இருப்போரிடம் கேட்டு கொள்ள அனுமதித்தாலும் நம் மக்கள் எளிதான திருக்குறளை கூட தவறாகவே சொல்கிறார்கள். மக்கள் தொலை காட்சி சத்தமின்றி தமிழ் குறித்த சில நல்ல நிகழ்சிகள் வழங்கி வருவது பாராட்டுக்கு உரியது

ஐ. பி. எல் கார்னர்

சென்னை ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் தற்போது வலுவான நிலையில் - பாயிண்ட்டில் நம்பர் -1 ஆக உள்ளது. குறிப்பாக சென்னையில் நடக்கும் மேட்ச்களில் மறுபடியும் தொடர்ந்து ஜெயிக்க ஆரம்பித்தது .. நேரில் சென்று பார்க்கும் ரசிகர்களுக்காக மகிழ்ச்சி!

அவுட் ஆப் பார்ம் முரளி விஜய்யை எடுத்து விட்டு சாகாவை டீமில் எடுத்தது நன்கு வொர்க் அவுட் ஆனது.

கொல்கத்தா - சென்ற முறை பைனலில் சென்னையை வென்றது. அதற்கு பதிலடி தரும் விதமாய் இம்முறை 2 முறை கொல்கத்தாவுடன் ஆடி - 2 முறையும் சென்னை எளிதில் வென்றது. 2012-ல் கோப்பை வென்ற கொல்கத்தா செமி பைனல் செல்ல நாக்கு தள்ளி கொண்டு முழிக்கிறது.

டில்லி, புனே, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நிச்சயம் செமி பைனல் செல்லாது என நினைக்கிறேன். மீதம் 5 அணிகளில் - 4 செமி பைனல் உள்ளே செல்லும்.

சீரியல் பக்கம்: விஜய் டிவி யின் " ஆபிஸ் "

இந்த சீரியலில் வர்ற மாதிரி ஆபிஸ் எந்த ஊரில் இருக்குன்னு தெரியலை. சதா சர்வ காலமும் வேலையே செய்யாமல் பேசி கிட்டே இருக்காங்க. லவ் பண்றாங்க.பழைய காதல் பத்தி இழு - இழுன்னு இழுத்து சொல்றாங்க. ஹீரோ- ஹீரோயின் சீட் அல்லது காண்டீனில் தான் சீரியல் முழுக்க நகருது ! ஆபிஸ் என்கிற நல்ல களத்தை அநியாயத்துக்கு வேஸ்ட் செய்துள்ளனரே என்று தான் கடுப்பா வருது (வீட்டம்மணி மாற்றி மாற்றி பார்ப்பதால் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு )

விஜய் அவார்ட்ஸ்

விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் முன் - அதற்கான Pre Cursor விழாவே சற்று கிராண்டாக நடத்தி வருகிறார்கள் விஜய் டிவியில். பல இயக்குனர்கள்- நடிகர் நடிகைகளை மேடைக்கு அழைத்து கேள்வி கேட்டு, சில பின்னணி பாடகர்கள் பாடி - ஆடி அமர்க்களப்படுது ! இந்த விழாவே ஒரு ஹாலில் தான் நடத்தினர் போலும் ! வழக்கம் போல் - விழாவிற்கு வந்த சில ஹீரோயின்களுக்காக தான் நம்ம பார்த்தது ஹீ ஹீ

*****************

மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லா டிவிக்களும் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்புகின்றன. இணையத்தில் கிடைத்த வரை ஒரு சிறு தொகுப்பு இதோ

விஜய் டிவி

7.30 AM - சொன்னா புரியாது - சினிமா ரெவியூ
8.00 AM - 3 பேர்; 3 காதல் சினிமா சிறப்பு பார்வை
8.30 AM - சூது கவ்வும் - சினிமா சிறப்பு பார்வை
10 AM - அஜீத் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி
11 AM - நண்பன் - திரைப்படம்
3 PM - என் தேசம் என் மக்கள்
4.30 P M - எதிர் நீச்சல் சினிமா சிறப்பு பார்வை
5.00 P M - கும்கி - திரைப்படம்

சன் டிவி

2.00 P M - மங்காத்தா - திரைப்படம்
6.00 P M - ஏழாம் அறிவு - திரைப்படம்

ஜி தமிழ்

10 AM சமர் திரைப்படம்

கலைஞர் டிவி

10 AM புத்தகம் திரைப்படம்
6 P M பையா திரைப்படம்
9 P M சூது கவ்வும் திரைப்படம் ஒரு பார்வை
9.30 P M நான் ராஜாவாக போகிறேன் திரைப்படம் ஒரு பார்வை
10 P M யாருடா மகேஷ் திரைப்படம் ஒரு பார்வை
10.30 P M சும்மா நச்சுன்னு இருக்கு (பவர் ஸ்டார் படம்) ஒரு பார்வை


Monday, April 29, 2013

பெயின்டர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

துரைராஜ் என்ற அந்த பெயின்டர் எங்கள் ஏரியாவில் வசிப்பவர் என்ற முறையிலும், வீட்டுக்கு ஒரு முறை பெயின்ட் அடித்தவர் என்ற முறையிலும் சில வருடங்களாக தெரியும். சமீபத்தில் ஒரு நாள் அவரோடு பேசிய போது பெயிண்டர்கள் வாழ்க்கை பற்றி அறிய முடிந்தது.

அவர் பேசியதிலிருந்து

"எனக்கு இப்போ 50 வயசு ("என்னது 50 ஆ? பாத்தா சின்ன பையன் மாதிரி இருக்கீங்க சார் ") 30 வருஷமா பெயிண்டிங் வேலை செய்றேன். என்னோட அப்பா, தம்பி எல்லாரும் இதே பெயிண்டிங் தொழில் தான்.



ஏழாவது வரைக்கும் தான் படிச்சேன் அதுக்கு பிறகு படிப்பு ஏறலை. அப்பா கூட சேர்ந்து வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன். நாங்க Buவர் பாமிலி சார்.

அப்பா சென்னையில் விப்ஜியார் என்ற கம்பனியில் பெயிண்டரா வேலை பார்த்தார். என்னை ஹெல்பரா சேத்துகிட்டார். கொஞ்ச வருஷம் தொழில் கத்து கிட்டேன். கம்பனி ஓனர் லிபியாவில் ஒரு வேலை எடுத்தார். அதிலே எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பினாங்க. அப்பா வயசாகிடுச்சுன்னு வரலை; மீசை கூட முளைக்காம 82 ஜனவரியில் லிபியா போனேன்

அங்கே போயி ரொம்ப கஷ்பட்டுட்டேன் சார். ஆயில் கிணத்தில் வேலை; அப்புறம் பெரிய ஷிப் யார்டில் பெயின்ட் அடிக்க வேண்டியிருக்கும். சில நேரம் பாலை வனத்தில் வேலை . வெயில்னா வெய்யில் அப்படி ஒரு வெய்யில். ஒரு நிலைமைக்கு மேலே எங்க முதலாளியால எங்களுக்கு சம்பளம் தர முடியலை. NOC தந்து வேற இடத்தில் வேலை செய்யுங்க என்றார். அதுக்கு பிறகு மால்ட்டா-ங்கிற பெரிய வெளி நாட்டு கம்பனியில் வேலை கிடச்சுது. அங்கே காப்பி, டீ குடுக்கும் வேலை தான். ஆனா நான் அதில் சேரலை . அம்மா, அப்பாவை பார்க்கனும்னு இருந்தது. ஊருக்கு வந்துட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு மறுபடி சவுதியில் ஆராம்கோ ஆயில் கம்பனியில் வேலை கிடைச்சு 4 வருஷம் போய் வேலை பார்த்தேன். அப்புறம் இந்தியா வந்தவன் தான். மறுபடி வெளிநாடு போகலை

எனக்கு 1 அக்கா 2 தங்கச்சி ஒரு தம்பி. அக்கா தங்கை எல்லாருக்கும் கல்யாண செலவு நான் தான் செஞ்சேன் அப்பா அவரோட 55 வயசில் இறந்துட்டார். தங்கச்சிங்க கல்யாணம் ஆக தாமதம் ஆனதால எனக்கு 32 வயசில் தான் கல்யாணம் ஆச்சு. எனக்கும் என் சம்சாரத்துக்கும் 10 வயசு வித்தியாசம்.

என் மாமனார் சின்ன வயசில் வீட்டை விட்டு ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போனவர். அப்புறம் என்ன ஆனார்னே இன்னி வரைக்கும் தெரியலை. மாமனார் ஏர் போர்ட்டில் வேலை பார்த்தார். அந்த வேலையை என் மாமியாருக்கு குடுத்தாங்க. அவங்களுக்கு ரெண்டு பொண்ணு. பசங்க இல்லை. நான் தான் அவங்களுக்கு பையனா கூட இருந்து பாத்துக்குறேன். நாங்க இருக்கிறது மாமியாரோட சொந்த வீடு தான் கீழ் போர்ஷன் என் மனைவியோட தங்கச்சிக்கு. மேல் போர்ஷன் எங்களுக்கு. மாமியார் எங்க கூட தான் இருக்காங்க

இந்தியா வந்த பிறகு பல இடத்தில் பெயிண்டரா வேலை பார்த்துட்டு அப்புறம் தனி காண்டிராக்டரா இப்ப 15 வருஷமா வேலை செய்யுறேன். இந்த ஏரியாவில் ஒரு 5 பேரு நம்ம கிட்டே வேலை பார்க்குறாங்க. தினம் வேலை இருக்கும்னு சொல்ல முடியாது. வேணுங்கும் போது கூப்பிட்டுக்க வேண்டியது தான்

ஒரு உண்மைய சொல்றேன். இந்த ஏரியா ஆளுங்க பெயின்டிங்கில் அவ்ளோ சுத்தம் கிடையாது. நம்ம தம்பி பூந்தமல்லியில் இருக்கான். அவன் கூட இருக்க ஆளுங்க தங்கமானவங்க. அவங்க வேலை செஞ்சா வீடு கண்ணாடி மாதிரி இருக்கும். பக்கத்திலே இருக்காங்க பஸ் செலவு கம்மின்னு தான் இவங்களை கூப்பிட்டுக்குறேன். பெரிய வேலை என்றால் தம்பியின் ஆளுங்களை வரவழைச்சுப்பேன்

சாமிநாதன்னு ஒரு பில்டர் நமக்கு ரெகுலரா வேலை தர்றார். 12 வருஷ பழக்கம். உங்களை மாதிரியே தான் அவரு (!!!??) எதையும் ஓப்பனா,. நேரா பேசிடுவார். நம்ம கிட்ட வேலை பாக்குற ஆளுன்னு நினைக்காம ஒரு பிரண்டு மாதிரி ஜாலியா பழகுவார். அவரோட எல்லா வீட்டுக்கும் நாம் தான் பெயின்ட் அடிக்கிறது

நமக்கு தெரிஞ்ச வீடுகளில் நம்மை ரெகுலரா கூப்பிடுறாங்க. நான் எல்லார் கிட்டேயும் குடும்பத்தில் ஒருத்தனா பழகிடுவேன். அதனால் எல்லாரும் நம்மை மறுபடி மறுபடி கூப்பிடுவாங்க எந்த வேலைன்னாலும் மறுக்காமல் செய்வேன்.

சின்ன சின்ன வேலைன்னா ஆளே வச்சிக்காம நானே பார்த்து முடிச்சுடுவேன்.

நம்ம கீழே வேலை செய்பவர்களை எப்பயோ ஒரு தடவை தான் கூப்பிடுறோம் இல்லையா? அதனால ஒரு ஆள்க்கு ஒரு நாளைக்கு 550 ரூபா கூலி தர்ரேன். தவிர பஸ் கூலி 50 ரூபா தரணும். இதே பில்டர்கள் என்றால் 300 ரூபா தான் தின கூலி தருவாங்க. அவங்களிடம் தினம் வேலை இருக்கும்னு பெயிண்டர் ஆளுங்க கம்மி சம்பளம் என்றாலும் தொடர்ந்து போவாங்க

என்னை பொருத்தவரை நான் யாரிடமும் போய் வேலை கேட்கவே மாட்டேன். அது தானா நம்மை தேடிகிட்டு வரும். வாரத்தில் எனக்கு ரெண்டு மூணு நாலு தான் வேலை இருக்கும். சில நேரம் ஒரே வேலை 10 நாள் இருக்கும். அப்புறம் 10 நாள் எந்த வேலையும் இருக்காது. இப்படி மாசத்துக்கு 10 அல்லது 15 நாள் தான் வேலை இருக்கும்

நானும் ஒரு ஆளா நின்னு வேலை பார்த்தா தான் என்னால ஆயிரம் ரூபா சம்பாதிக்க முடியும். இல்லாட்டி மெட்டிரியல், லேபருக்கே எல்லாம் போயிடும்.

நான் சம்பாதிக்கிறது பசங்களை படிக்க வைக்கவே சரியா இருக்கு . பையன் காலேஜில் மூணாம் வருஷம் படிக்கிறான். பொண்ணு கவர்ன்மெண்ட் ஸ்கூலில் எட்டாவது படிக்குது

மூணாவது வீட்டில் ஒரு வேலை மெட்டீரியல், லேபர் சேர்த்து எடுத்தேன். 10 நாள் வேலை.மொத்த காண்டிராக்ட் 50 ஆயிரம் ரூபா. எனக்கு ஒரு எட்டாயிரம் தங்குச்சு. மிச்சம் எல்லாம் கூலி, மெட்டேரியலுக்கு சரியா போச்சு

மெட்டேரியல் பற்றி பேச்சு வரும்போது சில பெயிண்டர்கள் மெட்டேரியலில் செமையா காசு பார்க்கிறார்களே என்று கேட்க அது பற்றி விளக்குகிறார் " ஆமா அது மாதிரி ஒரு விஷயம் நடக்க தான் செய்யது; சில பேர் மெட்டீரியல் நாங்க வாங்கி தர்றோம். நீங்க லேபர் காண்டிராக்ட் வேலை மட்டும் செய்யுங்கன்னு சொல்லுவாங்க. அப்ப மெட்டிரியல் வாங்குற கடையில் முதலிலேயே சொல்லி வச்சு 2 % கமிஷன் வாங்கிடுவாங்க சில பெயிண்டருங்க. இதெல்லாம் இந்த தொழிலில் நடக்குறது தான். நான் பெரும்பாலும் தெரிஞ்சவங்களுக்கு தான் செய்றேன். என்னை நம்பி விடுறாங்க மெட்டிரியல் மற்றும் லேபர் சேர்த்து தான் பெரும்பாலும் எடுப்பேன். அதனால் இந்த பிரச்சனை நம்ம கிட்டே கிடையாது

பெயிண்டிங் தொழில் உள்ள சிரமங்கள் பற்றி கேட்க, " தொடர்ந்து வேலை இல்லாம இருக்கிறது தான் பெரிய கஷ்டம். உடல் கஷ்டம்னு பார்த்தா வீட்டுக்கு அடிக்கிற வாட்டர் கலர் பெயின்ட் எல்லாம் பெரிய பிரச்சனை இல்லை. பெரிய பெரிய வேலையில் சில வகை பெயின்ட் தான் ரொம்ப படுத்திடும். கண் எரிய ஆரம்பிச்சிடும். சில நேரம் மயக்கம் கூட வரும்".

"மாசத்தில் பாதி நாளில் வேலை இல்லாட்டி எப்படி பொழுது போகும் ? சும்மா இருப்பது பெரிய சுமை ஆயிற்றே?" என்று கேட்டால், " சும்மா இருந்தா தானே சார்? எனக்கு எப்பவும் எங்க வீட்டு வேலை ஏதாவது இருந்து கிட்டே இருக்கும். ஒண்ணுமே இல்லாட்டி எங்க வீட்டுக்கு நானே பெயின்ட் அடிச்சிகிட்டு இருப்பேன். என் வீட்டு உள்ளே உள்ள அறைகளை பாத்தீங்கன்னா, ஒவ்வொரு வருஷம் ஒரு கலரா இருக்கும். வருஷா வருஷம் மாத்திடுவேன் எல்லாம் நான் சும்மா இருக்க நேரத்தில் அடிச்சவை தான் " என்று சிரிக்கிறார்

"என்னை பொறுத்த வரை எப்பவும் வேலை இருக்கணும்னு நினைக்க மாட்டேன். அதே மாதிரி பெருசா எதுவும் ஆசைப்பட மாட்டேன். இன்னிக்கு ஆயிரம் ரூபா கிடைச்சுதா; அதை வச்சு 5 நாள் ஓட்டு ; அடுத்த வேலை அதுக்குள் வரும்னு போயிக்கிட்டே இருப்பேன்

நாளைக்கு என்ன ஆகும்னு யாருக்கும் தெரியாது சார். இன்னிக்கு பத்தி கவலை பட்டா போதும். நாளை பத்தி பயந்து கிட்டே இருந்தா உடம்பு தான் சார் கெட்டு போகும்" என்று முடித்தார் 30 வயது மதிக்கத்தக்க இந்த 50 வயசு மனிதர்.

**********
அதீதம் ஏப்ரல் இதழில் வெளியானது. 

Friday, April 26, 2013

உணவகம் அறிமுகம் - புதுகை தலப்பாகட்டி பிரியாணி

கீழ்கட்டளை பெட்ரோல் பேங்க் அருகில் உள்ளது புதுகை தலப்பாகட்டி பிரியாணி கடை. தலப்பாகட்டி பெயரை பலரும் வைத்து கொண்டாலும், நிஜ திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி போல வராது என்பது உண்மை தான்.

ஆனால் இங்கு சாப்பிட்ட பிரியாணி பெரிதும் கவர்ந்ததால் அவசியம் இந்த கடையை அறிமுகம் செய்ய நினைக்கிறேன்.

மதியமும் இரவும் மட்டும் தான் கடை உண்டு. மதிய வேளைகளில் பிரியாணி மட்டுமே கிடைக்கும். (பரோட்டா, தோசை உள்ளிட்டவை இரவில் மட்டுமே )

பிரியாணி விலை :

மட்டன் பிரியாணி - 1/2 - ரூ. 120
சிக்கன் பிரியாணி - 1/2 - ரூ. 80

சிக்கன் குஸ்கா - ரூ. 60
மட்டன் குஸ்கா - ரூ. 80

அதென்ன சிக்கன் குஸ்கா மற்றும் மட்டன் குஸ்கா ? குஸ்கா என்பது ஒன்று தானே என்றால், மட்டன் பிரியாணியில் பீஸ் இல்லாமல் தருவது மட்டன் குஸ்கா - அது சற்று விலை அதிகம்; சிக்கன் பிரியாணியில் இருந்து தரும் குஸ்கா 60 ரூபாய் தான் என்று விளக்கம் தருகிறார்கள்

இருந்தாலும் சிக்கன் பிரியாணி விலையும், மட்டன் குஸ்கா விளையும் ஒன்றாய் இருப்பது சற்று உறுத்த தான் செய்கிறது



சரி பிரியாணிக்கு வருவோம்.

வீட்டம்மா மற்றும் பெண் சிக்கன் பிரியாணி சூடு என்று சாப்பிடவே மாட்டார்கள். மட்டன் பிரியாணி அல்லது குஸ்கா தான் !

எனக்கோ மட்டன் பிரியாணி அதிகம் பிடிக்காது. மட்டன் பீஸ்கள் பல நேரம் சக்கை மாதிரி இருக்கும் என்பது என் அனுபவம்.

ஆனால் இங்கு மட்டன் பிரியாணி அட்டகாசமாய் இருந்தது. குறிப்பாய் பீஸ் ஒவ்வொன்றும் நன்றாக வெந்து, அல்வா மாதிரி சுவையாய் ரசித்து சாப்பிட முடிந்தது.

மசாலா மற்றும் காரம் சற்று அதிகம் என்றாலும் எப்பவோ ஒரு முறை காரம் சாப்பிடுவது ஓகே (சாப்பிட முடியாத அளவு அதிக காரம் இல்லை), பிரியாணிக்கு சைட் டிஷ் ஆன கத்திரிக்காய் கொத்சும் அருமை.

இந்த பிரியாணி சுவை புதுகை பக்கத்து ஸ்பெஷலா என்று தெரியவில்லை. புதுகை நண்பர்கள் டேஸ்ட் செய்து சொன்னால் தான் உண்டு .

மேலதிக தகவல்கள்

கடை பெயர்: புதுகை தலப்பாக்கட்டு பிரியாணி கடை

முகவரி: கீழ்கட்டளை HP பெட்ரோல் பேங்க் அருகில் (மேடவாக்கம்- பல்லாவரம் நாற்சந்தி அருகே)

நேரம்: மதியம் 12 முதல் இரவு 10 வரை

Thursday, April 25, 2013

சம்மர் ட்ரிப்? தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி !

புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் - தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி. கிழக்கு பதிப்பக வெளியீடு. தமிழ் சுஜாதா எழுதியது.

தமிழகத்தில் உள்ள நூறு சுற்றுலா தளங்களை அறிமுகம் செய்கிறது புத்தகம். உதாரணமாய் சென்னை என்றால் மெரீனா பீச், தக்ஷின் சித்ரா, வண்டலூர் விலங்குகள் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், முட்டுக்காடு, கிஷ்கிந்தா, குவீன்ச்லேந்து என ஒவ்வொரு இடமும் சொல்லப்பட்டுள்ளது

                      

நீங்கள் கன்யாகுமரி சுற்றுலா செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவோம். அப்போது அருகில் பார்க்க உள்ள இடங்களான திற்பரப்பு அருவி, பத்மநாபுரம் பேலஸ் போன்ற இடங்களை புத்தகம் அறிமுகம் செய்கிறது.

ஒவ்வொரு இடத்தையும் பற்றி சொல்லும்போது எப்படி செல்வது ; அருகில் உள்ள ரயில் நிலையம், விமான நிலையம், எப்படி செல்வது, அருகில் உள்ள இடங்கள், அங்கு என்ன வாங்கலாம் போன்ற விபரங்கள் பகிரப்பட்டுள்ளன

எங்கு தங்கலாம் என்ற தகவல் தலைப்பில் அங்கு தங்க நல்ல ஹோட்டல்கள் உள்ளதா என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளதே தவிர, எந்த ஹோட்டல் பெயரும் அறிமுகம் செய்யவில்லை. செய்திருந்தால் மிக உதவியாய் இருந்திருக்கும்.

கவனம் என்கிற தலைப்பில் அங்கு செல்லும்போது எந்தெந்த விஷயங்களில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்பது சொல்லப்பட்டுள்ளது. எந்த மாதங்களில் செல்லவேண்டும், சில இடங்களில் உணவு அல்லது தண்ணீர் கிடைக்காது ; எடுத்து செல்லவேண்டும் போன்ற விஷயங்களும் ஆங்காங்கு சொல்லப்பட்டுள்ளது

இந்த புத்தகம் ஒரு டிக்ஷனரி போல் தான் பயன்படுத்த முடியும். டிக்ஷனரி எப்படி நமக்கு சந்தேகம் இருந்தால் எடுத்து பார்க்கிறோமோ அதே போல் நாம் ஒரு ஊருக்கு போகணும் எனும்போது மட்டுமே எடுத்து பார்க்க முடியும். ஒரு நாவல் போல கட்டுரை போல ஒரே மூச்சில் படிக்க ஏதுவான புத்தகம் அல்ல.

புத்தகத்தில் சில சிறப்புகள் :

ஒவ்வொரு இடத்துக்கும் கருப்பு வெள்ளையில் புகைப்படம் போட்டுள்ளனர்.

அந்த இடம் எந்த நாளில் விடுமுறை எந்த நேரம் திறந்திருக்கும் லஞ்ச் நேரம் எப்போது போன்றவை தரப்படுள்ளது. அந்தந்த இடத்துக்கு அருகில் இருக்கும் பிரபலமான மற்ற சுற்றுலா தளம் கூறப்பட்டுள்ளது

மிக சில இடங்களுக்கு அங்கு என்ன சாப்பிடுவது ; அந்த ஊரில் எந்த உணவு சிறப்பானது என்றும் உள்ளது சுவாரஸ்யம்.

பல இடங்களுக்கு தொலை பேசி எண்ணும், அங்கு தங்க நல்ல ஹோட்டலும் பரிந்துரைத்திருக்கலாம்

சுற்றுலாவின் போது இப்புத்தகம் எடுத்து சென்றால் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள மிக பயன்படும்

பயணங்களில் ஆர்வம் உள்ளோர் வாங்கவேண்டிய புத்தகம் இது

பெயர்: தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டி 
ஆசிரியர்: தமிழ் சுஜாதா 
பதிப்பகம்: கிழக்கு 
பக்கங்கள்: 212 
விலை: Rs 125 

Wednesday, April 24, 2013

வானவில்: எடை கூட என்ன செய்யலாம் ?

ஐ. பி. எல் கார்னர்

கெயில் நேற்று அடித்த அடி .. அப்பப்பா .. ஐ. பி. எல் - ஹீரோ என்றால் ஒவ்வொரு வருடமும் அது கெயில் தான் !!

                      Chris Gayle celebrates his 30-ball hundred

ஆட்டம் துவங்கி, ஒன்பதாவது ஓவர் நடக்கும் போதே கெயில் செஞ்சுரி அடித்து விட்டார். இத்தனைக்கும் நடுவில் மழையால் ஆட்டம் 10 நிமிடத்துக்கும் மேல் நிறுத்தப்பட்டது ! புனே அணியில் விக்கெட் கீப்பர் தவிர மற்ற அனைவரும் பவுலிங் போட கூடியவர்கள் தான் என துவங்கும் போது கிரிக்-இன்போவில் கிண்டல் அடித்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராய் வந்து போட, போட பந்து காணாமல் போய் கொண்டிருந்தது. 30 பந்துகளில் செஞ்சுரி என்பது கற்பனை கூட செய்ய முடியாத ஒன்று. கபிலின் 175 நாட் அவுட் போல இந்த 175 நாட் அவுட்டும் ரொம்ப நாள் ரிக்கார்ட் ஆக நிற்க போகிறது.

படித்ததில் பிடித்தது : எடை கூட என்ன செய்யலாம் ?

எடை போட திட்டமிடும் முன், ஏன் எடை குறைவாக உள்ளீர்கள் என்பதற்கு டாக்டரை பார்ப்பது நலம். அப்போது தான் நீங்கள் ஏன் ஒல்லியாக உள்ளீர்கள் என்பது பற்றியும், தைராயிட் போன்ற பிரச்சனை உள்ளதா என்றும் பார்த்து விட்டு அதற்கு தகுந்த மாதிரி ஆலோசனை தருவார்

வழக்கமாய் உண்ணும் உணவு பட்டியல் தயாரியுங்கள் அதனுடன் ஒவ்வொரு வேளையும் 200 கலோரி சேர்த்து சாப்பிட ஆரம்பிக்கவும்

தினம் பர்கர்ஸ் சிப்ஸ் என்று சும்மா புல் கட்டு கட்ட கூடாது. புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு சத்தான உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம்

வயிறை பட்டினி போடக்கூடாது. அடிக்கடி சத்துள்ள உணவாக சாப்பிட வேண்டும். உணவில் அதிக கலோரி உணவு சாப்பிட்டால் பசி சற்று குறைவாக கூட இருக்கும் ஒரே தடவை சாப்பிடுவதை தவிர்த்து ஐந்து ஆறு முறை சாப்பிட பழகுங்கள்

கடலைகள், உலர்ந்த பழங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா வேர்க்கடலை இவற்றை சாப்பிடவும். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது இது போன்ற உணவுகளை கை வசம் எடுத்து செல்லுங்கள்

கலோரி அதிகம் உள்ள குளிர் பானங்களை சாப்பாட்டுடன் சேர்த்து பருகுங்கள். சத்தான மில்க் ஷேக்குகள் பருகலாம்

பாதி ராத்திரியில் எழுந்து எதையாவது கொறிப்பதற்கு பதில் இரவு படுக்க போகுமுன் ஒழுங்காக சாப்பிடவும். இரவு பழங்கள் பேரிச்சை பழம் பால் போன்றவை சேர்த்து கொள்வது அவசியம்

4 நாட்கள் சாப்பிட்டு விட்டு எடை கூட வில்லையே என்று வருந்த கூடாது. எப்படி எடை குறைய பொறுமை அவசியமோ அப்படி எடை கூடவும் பொறுமை தேவையே. சிலருக்கு சில மாதங்களில் பலன் தரும். சிலருக்கு வெயிட் போட சில வருடங்களும் ஆகலாம்

உங்களுக்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். சில வகை ஆடைகளில் நீங்கள் சற்று குண்டாய் தெரிவீர்கள். அவற்றை தேர்ந்தெடுத்து அணியுங்கள்

15 நாளைக்கு ஒரு முறை எடை பார்த்தால் போதும் சற்று எடை போட்டதுமே மற்றவர் கண்ணுக்கு எடை போட்டது தெரியும். " என்ன எடை கூடுது" என்பார்கள் அதை வைத்து எடை கூடியுள்ளதை அறியலாம்

இன்னொரு முக்கிய விஷயம்: அளவுக்கு அதிகமாய் எடை போட்டு விட்டு பின் அதை குறைக்க கஷ்டப்படக்கூடாது. உங்கள் உயரத்திற்கேற்ற எடை இருக்கிற மாதிரி பார்த்து கொள்ளுங்கள்

என்னா பாட்டுடே

வாணி ஜெயராம் - பல அற்புத பாடல்களை பாடி நம் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அவரது பாடல்களில் இந்த " நானே நானா " எனக்கு மட்டுமன்றி நண்பர்கள் பலருக்கும் கூட மிக பிடிக்கும். ராஜா இசையில் வாணி ஜெயராம் மிக அதிகம் பாடியதில்லை ஆனால் பாடிய சிற்சில பாடல்கள் - அதி அற்புதம் !

பாடலின் வீடியோ வடிவம் பார்த்தால் - வாணி ஜெயராம் மற்றும் ராஜாவின் இசையை முழுமையாய் ரசிக்காமல் போக கூடும் என்பதால் ஆடியோ வடிவம் மட்டும் பகிர்கிறேன்



புது மெனு - தக்காளி தோசை 

வீட்டம்மா இந்த வார இறுதியில் தக்காளி தோசை என்ற புது மெனு செய்து பார்த்தார். எப்படி என பகிர்கிறேன்.

அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஊற வைத்து விட்டு பின் , காஞ்ச மிளகாய் தக்காளி சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும். அரைத்து முடித்ததுமே தோசைக்கான மாவு தயார்.

சைட் டிஷாக தேங்காய் சட்னி அல்லது சாம்பார் இருந்தால் சிறப்பு. இல்லா விடில் இட்லி பொடி கூட தொட்டு கொள்ளலாம்

சாப்பிடும் போது நிறத்திலும் சுவையிலும் ஏறக்குறைய அடை போல தான் இருந்தது. இந்த கமண்ட்டை சொன்னதும் ஹவுஸ் பாஸ் சொன்னது " ஆமாம்; அடையும் இதே மாதிரி தான் தயார் செய்வோம்; இதில் கூடுதலாக தக்காளி சேர்த்து அரைக்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம் "

போஸ்டர் கார்னர்



அய்யாசாமியும் கரண்ட் கட்டும்

சென்னை வாசிகளுக்கு தினம் 2 மணி நேரமே கரண்ட் கட் ஆகிறது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட 2 மணி நேரம் கட் ஆகும். இதில் காலை 8 முதல் 10 எனில், சமையல் உள்ளிட்ட மிக்சி வேலைகள் அனைத்தும் எட்டு மணிக்குள் முடிக்க வேண்டும். அதுவாவது பரவாயில்லை.

எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு கரண்ட் கட் ஆன நிலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது, எந்த சுவிட்ச் ஆன் செய்த நிலையில் இருக்கிறது என்று தெரியாமல் கிளம்புவதால், வீட்டுக்கு வந்து பார்க்கும் போது ஏதேனும் சுவிட்ச் ஆப் செய்யாமல் ஓடிய படி இருக்கிறது.

நம்ம அய்யாசாமி வீட்டில் ஒரு நாள் இப்படி தண்ணீருக்கான மோட்டார் ஆப் செய்யாமல் சென்று விட, 8 - 9 மணி நேரம் ஓடிய படி இருந்தது ! நல்லவேளை.. ரொம்ப உஷ்ணமாகி மோட்டார் எரியாமல் தப்பியது !

உங்கள் வீடுகளில் காலை 8 மணிக்கு கரண்ட் கட் ஆனால், வீட்டை விட்டு கிளம்பும் போது சற்று எச்சரிக்கையாய் அனைத்து சுவிட்ச்சும் ஆப் செய்துள்ளீர்களா என பாருங்கள்  !

*****
அண்மை பதிவுகள்:

இருட்டு கடை அல்வா: அறியாத தகவல்கள் வீடியோவுடன்

தொல்லை காட்சி - விஜய் அவார்ட்ஸ்- கலைஞர் செய்திகள்

Tuesday, April 23, 2013

இருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது .

1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள் இக்கடையை !

மாலை ஐந்தரை அளவில் தான் கடையே திறக்கப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மொத்த ஸ்டாக்கும் காலியாகி விட கடையை மூடி விட்டு கிளம்பி விடுகிறார்கள்.


மற்ற கடைகளை விட இங்கு அல்வா நிச்சயம் அட்டகாசமாய் இருக்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது இது தான்:

அல்வாவிற்கு தேவையான கோதுமையை இவர்கள் கைகளால் தான் அரைக்கிறார்கள். மேலும் அதை தயார் செய்வதும் Manual முறையில் தான் ! இது தான் அல்வாவிற்கு ஒரு யூனிக் சுவை தருகிறதாம். மேலும் இந்த அல்வா தயாரிக்கும் முறை இவர்களுக்கு மட்டுமே தெரியும் .. வேறு யாருக்கும் தெரியாது !

இப்படி கையால் தயார் செய்வதால், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. அதனை மட்டும் விற்று முடித்து விட்டு, திருப்தி அடைந்து விடுகிறார்கள். இவர்கள் நினைத்தால் - கிடைத்துள்ள பெயரை வைத்து மெஷின் வைத்து இன்னும் 10 மடங்கு தயார் செய்ய முடியும் - அவ்வளவுக்கும் மார்கெட் இருக்கு என்றாலும் தங்கள் தரம் சிறிதும் குறைய கூடாது என்பதால் - பெரிய அளவில் செல்லாமல் இருக்கிறார்கள்.

பலகைகளால் ஆன பழைய கால கதவை கவனியுங்கள் !

இருட்டுக்கடை என்று பெயர் வர காரணம் - 1930 களில் கடை துவங்க பட்ட போது, ஒரே ஒரு காண்டா விளக்கு (மண்ணெண்ணெய் விளக்கு) மட்டும் இருக்குமாம். இருட்டாய் இருக்கும் கடை என்பதே பெயராகி " இருட்டு கடை அல்வா" என்ற பெயர் வந்து விட்டது. இன்றைக்கு இங்கு காண்டா விளக்கு அகன்று ஒரு 200 வாட்ச் பல்பு எரிகிறது அவ்வளவு தான் வித்யாசம். கடைக்கு பெயர் பலகை கூட இல்லை. இருந்தும் கடையின் கூட்டமோ புகழோ குறையவே இல்லை.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகிலேயே உள்ளது இக்கடை. வேறு கடைகளில் விசாரித்தால் உங்களை மற்ற இடங்களுக்கு மாற்றி விட வாய்ப்பு உண்டு. இக்கடையில் பிஜிலி சிங் அவர்களின் பெயர் போட்டு புகைப்படம் இருக்கும். அது தான் அடையாளம் !

இருட்டு கடை என்கிற பெயரில் இன்னொரு கோஷ்டி காபி ரைட் வாங்க, அவர்கள் மேல் இவர்கள் வழக்கு துவங்கி தங்கள் கடை பற்றி பல வருடங்களாக பத்திரிக்கைகளில் வெளி வந்த குறிப்புகளை காட்டி தங்களுக்கு தான் அந்த பெயருக்கு உரிமை உண்டு என போராடி வருகிறாகள்.

இவர்களின் குழும கடையாக சற்று தள்ளி விசாகா சுவீட்ஸ் என்ற கடை இருக்கிறது. இங்கும் இருட்டு கடை அல்வா பகல் வேளைகளில் கிடைக்கிறது ( பிஜிலி சிங் படம் இங்கும் இருக்கும் !)

உள்ளூர் வாசிகள் நூறு கிராம் அல்வா சுட சுட வாங்கி கொண்டு ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, சைடில் சென்று கை நீட்ட , சற்று மிக்சர் இலவசமாக தருகிறாகள். அதை சாப்பிட்டு விட்டு அங்கு மாட்டி யுள்ள பேப்பரை எடுத்து கை துடைத்து கொண்டே செல்வதை காண முடிந்தது

சில நேரங்களில் கியூவில் நின்றும் வாங்கி செல்வதுண்டாம். எப்பவும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்கள் தயாராய் இருக்கின்றன. நீங்கள் சென்றவுடன் கேட்கிற அளவை கொடுத்து உடன் அனுப்பி விடுகிறார்கள். இருந்தும் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூட்டம் மிக அதிகமாகி இருக்கும் அல்வாவை அனைவருக்கும் பகிந்தளிக்க வேண்டிய சூழலில் ரேஷன் முறையும் அமல் படுத்தப்படுமாம் ! ( ஒரு கிலோ கேட்டால் கால் கிலோ தருவது !)

வீடியோவில் இருட்டு கடை அல்வா கடையை கண்டு களியுங்கள் :




இவ்வளவு அற்புதமான, மிக சுவையான, தமிழகத்தின் நம்பர் : 1 அல்வா - ஒரு கிலோ 140 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?

ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் அல்வா வாங்கி கொண்டு வீடியோ படம் பிடித்து விட்டு, 500 ரூபாய்க்கு பேலன்ஸ் வாங்காமல் நான் கிளம்ப ஒருவர் துரத்தியவாறே வந்து மீதம் பணத்தை தந்து விட்டு போனார் !

இங்கு வாங்கப்படும் அல்வா ஒரு வாரம் வரை கெடாது ! நாங்கள் சென்னை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அல்வா வாங்கி வர, அனைவரும் இருட்டு கடை பற்றி ஆர்வமாய் கேட்டார்கள்.

அவர்களிடம் என்ன சொன்னேன் என்று கேட்கிறீர்களா?

கட்டுரையின் முதல் வரியிலிருந்து துவங்குங்கள் !
*******
அண்மை பதிவுகள்:

வானவில்: எடை கூட என்ன செய்யலாம்?

தொல்லை காட்சி - விஜய் அவார்ட்ஸ்- கலைஞர் செய்திகள்

Monday, April 22, 2013

தொல்லைகாட்சி: விஜய் அவார்ட்ஸ்- கலைஞர் செய்திகள்- குறும்பட போட்டி

விஜய் அவார்ட்ஸ் - ரீ வைண்ட்

சென்ற 2012 வருடத்துக்கான விஜய் அவார்ட்ஸ் - நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது அதற்கு முன் சென்ற வருடங்களில் நடந்த "பெஸ்ட் மொமன்ட்ஸ்" என்று தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினர்.



கடந்த 3 வருடங்களாக சிறந்த நகைச்சுவை நடிகராக விருது வாங்கியது சந்தானம் மட்டுமே ! ஒவ்வொரு முறையும் மேடையில் அவர் கலாய்ப்பதை மீண்டும் பார்த்து சிரிக்க முடிந்தது அதிலும் விண்ணை தாண்டி வருவாயா கணேஷை - அவர் குரலை சந்தானம் கலாய்ப்பது வருடா வருடம் தொடர்கிறது

அஞ்சலி கடந்த 3 வருடத்தில் 2 முறை (அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும்) விருது வாங்கியுள்ளார். ஒரு பக்கம் பெர்பார்மன்ஸ்சில் கலக்கினாலும், கிளாமர் ரோலிலும் அவர் இன்னொரு பக்கம் அசத்தி வருவது ஆச்சரியமாய் இருந்தது

ஸ்ரேயா உள்ளிட்டோரின் சில நல்ல டான்ஸ்கள் - சிவ கார்த்திகேயனின் அட்டகாச ஒன் லைனர் என வார இறுதியில் ஜாலியாய் இருந்தது இந்த நிகழ்ச்சி.

கேப்டன் டிவியில் யோகா நிகழ்ச்சி

கேப்டன் டிவி பக்கம் அநேகமாய் போவதே இல்லை. இருந்தாலும் ஒரு நாள் காலை நேரம் பார்த்த போது, யோகா நிகழ்ச்சி மிக பொறுமையாக நன்கு சொல்லி தருவதை காண முடிந்தது. ஒரு பெண் அமர்ந்து தானும் யோகா செய்த படி மற்றவர்களுக்கு சொல்லி தர, இன்னும் சில பெண்கள் அவருடன் சேர்ந்து செய்தனர். இதை பார்த்ததும் நம் வீட்டில் உள்ள சில ஆட்கள் செய்ய முயற்சித்து பார்த்தனர். அடுத்தடுத்த நாள் அந்த பக்கம் போகவே இல்லை !

கலைஞர் செய்திகள்

செய்திகளில் விவாதம் என்று வந்தால் - பொதுவாக வெளியிலிருந்து விருந்தினர் அழைத்து வந்து அவர்களின் கருத்துகளை அறிவார்கள். கலைஞர் செய்திகளில் செய்தி வாசித்து கொண்டே இருப்பவர்கள், திடீரென தங்களுக்குள் பேசி கருத்து பரிமாற்றம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். எழுதி வைத்து கொண்டு படிக்கிற மாதிரி இல்லாமல் சுயமாய் பேசுகிற மாதிரி இயல்பாய் இருக்கிறது இந்த விவாதம்.

ஆனால் கலைஞர் டிவி - மத்தியில் காங்கிரஸ் அல்லது பா. ஜ.க என யாரை ஆதரிக்க போகிறார்கள் என புரியாமல் கொஞ்சம் நடு செண்டராய் பேசுகிறார்கள்

கலைஞர் செய்திகள் பற்றி சொல்ல இன்னொரு விஷயமும் உண்டு: மாவட்ட செய்திகள் என்ற தலைப்பில் செய்திகள் வெளியிடும் போது கழுதை அறுத்து கொலை; ரயில் முன் பாய்ந்து பலி என்று செய்திகள் சொல்லி விட்டு, அத்தகைய சடலங்களை வேறு detailed -ஆக காட்டுவதை தவிர்க்கலாம் !

ஜோடி சீசன்

விஜய்யில் மீண்டும் துவங்கியுள்ள ஜோடி சீசன் - அவ்வப்போது பார்த்து வருகிறோம். ரம்யா கிருஷ்ணன் மற்றும் அலைகள் ஓய்வதில்லை ராதா நடுவர்களாக இருக்கின்றனர்

இருவருமே கமல் மற்றும் ரஜினியிடம் நடித்தவர்கள் என்று அவர்களை பற்றி கேட்க, "ரஜினி மிக சிம்பிள்; இயக்குனர் சொன்ன பேச்சை மீறவே மாட்டார் " என புகழ்ந்து தள்ளினர் அதுவே கமல் பற்றி பேசும் போது "பஞ்ச தந்திரத்தில் நான் எப்படி நடிக்கணும் என நடித்து காட்டியது அவர் தான்; இயக்குனர் வைத்துள்ள காட்சியை கமல் பல மடங்கு மாற்றி விடுவார் அவர் மாற்றிய பின் தான் அந்த காட்சி பல மடங்கு அருமையாய் இருக்கும் என்று புகழ் பாடினர்

ரோபோ ஷங்கர் இதில் டான்ஸ் ஆடுகிறார் ! டான்சை அவிட அவர் அடிக்கும் ஜோக்கிற்காக அவரை ஒரு அணியில் வைத்துள்ளனர் போலும் அதுக்கு DD -யுடன் சேர்ந்து அவரை காம்பியரிங் செய்ய சொல்லிருக்கலாம் !

சிறந்த குறும்படம் + படம் இயக்கம் வாய்ப்பு

விஜய் அவார்ட்சின் ஒரு பகுதியாக சிறந்த குறும்படம் ஒன்று தேர்வு செய்து பரிசு வழங்க உள்ளனர். கவுதம் மேனன், ராஜேஷ் , ராம் என 3 இயக்குனர்கள் சிறந்த படங்களை பார்த்து தேர்வு செய்ய உள்ளனர். மே - 2 க்குள் படம் எடுத்து அனுப்பனுமாம்

சிறந்த படமாக தேர்வாகும் பட இயக்குனருக்கு விஜய் டிவி மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் இயக்கம் வாய்ப்பும் கூட கிடைக்கலாம் என்று அறிவித்துள்ளனர்

அந்த ப்ரோமோ இதோ உங்கள் பார்வைக்காக :



ஐ. பி. எல் கார்னர்



சென்னை அணி வெளியூரில் சென்று வென்றாலும் - உள்ளூரில் பல முறை தோற்கிறது. மாறாக பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகள் எப்போதும் தங்கள் ஊரில் வென்று விடுகின்றன. அடுத்த சுற்றுக்கு செல்லவும் முதல் 2 இடங்களில் வரவும் - தங்கள் கிரவுண்டில் தொடர்ந்து வெல்வது மிக முக்கியமானது. (அங்கு தான் அதிக பட்ச மேட்ச்கள் விளையாடுகிறார்கள் )

இம்முறை அர்ச்சனா போன்ற அழகிய காம்பியர்கள் இல்லாதது பெரும் ஏமாற்றமாய் உள்ளது. இப்போதுள்ள ஒரு பெண்ணின் முகமும் நினைவில் கொள்கிற அளவில் இல்லை...................நியாயமாரே !

Friday, April 19, 2013

அசத்தும் ஸ்பெஷல் 26 & மாய மோகினி - விமர்சனம்

ஸ்பெஷல் 26

அண்மையில் மிக ரசித்து பார்த்த படம் என்றால் ஸ்பெஷல் - 26 தான். கதை , திரைக்கதை இயக்கம், ஒளிப்பதிவு, கலை - என எல்லா துறைகளும் ரவுண்டு கட்டி அடித்து அசத்தியிருக்கிறார்கள்

கதை

முழு கதையும் தெரிந்தால் படம் பார்ப்பது வேஸ்ட் ; படம் எந்த பக்கம் பயணிக்கிறது என்று மட்டும் சுருக்கமாக......



அவ்வப்போது போலிஸ் அல்லது CBI ஆபிசர் என்று நடித்து மாட்டி கொள்ளும் மக்களை பற்றி செய்தி தாள்களில் வாசிப்போமில்லையா ? நம் நண்பர்களில் சிலரே போலிஸ் மாதிரி உடல்வாகு இருந்தால், சிக்னல் மீறல்களின் போது இப்படி சொல்லி ஏமாற்றும் கதைகளை கேள்விபட்டிருப்போம்

இப்படி சீ . பீ ஐ ஆபிசர் என்று சொல்லி அரசியல் அல்லது பணக்கார பிசினஸ்மேன்களை ஏமாற்றும் கும்பல் - அதன் தலைவர் தான் படத்தின் ஹீரோ.

இன்னொரு பக்கம் இந்த கும்பலை பொறி வைத்து பிடிக்க அலையும் நிஜ CBI.

முடிவில் நம்ம போலி க்ரூப் பிடிபட்டதா என்பதை அவசியம் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

படம் செம விறுவிறுப்பாய் அடுத்து என்ன என்று பறக்கிறது. அதிலும் ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு பிரேமிலும் பெரும்பாலும் நகர்ந்து (நடந்து) கொண்டே இருப்பதால் அதுவே ஒரு விறுவிறுப்பை கொடுத்து விடுகிறது


அற்புதமான காஸ்டிங். அக்-ஷைய் குமார் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. இயல்பான நடிப்பில் அசத்துகிறார் மனிதர். கூடவே அனுபம் கெர் வேறு. படத்தின் இறுதி காட்சிகளில் அனுபம் கெர் - தனது அனுபவத்தால் மிளிர்கிறார்

ஹீரோயின் - சேட்டு பொண்ணு காஜல். அதிக மேக் அப் இன்றி இயல்பாய் வருகிறார்

போலி கும்பலை பிடிக்க வரும் மனோஜ் பாஜ்பாய் - உடலை எவ்வளவு சிக்கென வைத்துள்ளார் ! இன்னொரு ஹீரோ போல மிக புத்திசாலி தனமாய் தான் இவர் காய் நகர்த்துகிறார். ஆனால்....

அனைவரையும் விட பாராட்டை அதிகம் அள்ளி போவது இயக்குனர் தான். மிக வித்யாசமான கதை, அதற்கு சுவாரஸ்ய திரைக்கதை, எதிர்பார்க்க முடியா கிளைமாக்ஸ் டுவிஸ்ட் என முழுக்க முழுக்க என்ஜாய் செய்கிற விதத்தில் படத்தை தந்துள்ளார். குறிப்பாக 80- களில் நடக்கும் படம் என்பதால் அதற்கான பஸ், வீடுகள் என அனைத்தும் பார்த்து பார்த்து செய்த விதம் படம் முழுதும் நம்மை வியக்க வைக்கிறது ! ஹாட்ஸ் ஆப் !

படம் தமிழிலும் கூட எடுக்கலாம். இது யூனிவர்சல் சப்ஜெக்ட் தான் ! விஜய் , அஜீத், சூர்யா மூவரில் ஒருவர் ஹீரோவாக நடிக்கலாம். அனுபம் கெர் வேடத்துக்கு எனது சாய்ஸ் - நாசர்.

அவசியம் கண்டு ரசியுங்கள் இந்த ஸ்பெஷல் படத்தை !

***********
மாய மோகினி

இந்த மலையாள படம் - ஹீரோ - பெண் வேஷம் போட்டு நடிக்கும் நம்ம அவ்வை சண்முகி டைப் கதை தான்.

                                 

படம் துவங்கி அரை மணி நேரம் ஹீரோவையே காணும். கதையை நன்கு எஸ்டாப்ளிஷ் செய்த பிறகு வருகிறார் திலீப். ஆரம்பத்தில் என்னமோ ஜாலியாக இருந்தாலும், அவர் பெண்ணாக நடிக்க ஒரு சீரியஸ் காரணம் இருப்பதை கடைசி காட்சிகளில் சொல்கிறார்கள்.

முழுக்க காமெடி என்றில்லாமல் சீரியஸ் + காமெடி என ஆகி போனதால் பெரிதும் கவராமல் போகிறது.

பெண்ணாக திலீப்பின் நடிப்பு வெரி குட். மற்ற பாத்திரங்களும் கதையை நகர்த்த உதவுகிறார்கள்.



அவ்வை சண்முகி அளவுக்கு காமெடி களை கட்ட வில்லை.

டைம் பாசுக்கு ஒரு முறை பார்க்கலாம்.

Thursday, April 18, 2013

வானவில்: டாகுடர் விஜய் பாட்டு- மந்திரா பேடி -தங்கம் வாங்கலாமா?

பதிவர் பக்கம்- போலிஸ் வாழ்க்கை குறித்த முரளி கண்ணனின் பதிவு

பதிவர் அறிமுகம் என்று சொல்ல முடியாது. என்னை விட இவர் சூப்பர் சீனியர்.

போலிஸ் என்றால் பெரும்பாலான மக்களுக்கு ஒரு இனம் புரியாத பயம் வரும். நாம் அவர்களோடு பேசுவது அநேகமாக பைக்கில் சென்றால் நிறுத்தி மாமூல் வாங்கும்போது தான். இதனாலும் அவர்கள் மீது நமக்கு நல்ல ஒபினியன் இருக்காது. ஆனால் அப்படி மாமூல் வாங்கும் நிலைக்கு வரும் முன் இவர்கள் எப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை அளவில் எழுதியிருக்கியரர் பதிவர் முரளி கண்ணன். இங்கு வாசித்து பாருங்கள் !

கீழே கீழே கீழே போகும் தங்கம் விலை

தங்கத்தின் விலையை கவனித்தீர்களா? கடந்த 15 மாதங்களில் மிக குறைந்த விலைக்கு வந்துள்ளது. கடந்த 5 மாதங்களாகவே விலை- ஏறியதை விட இறங்கியது அதிகம். இருந்தும் இப்போதைய நிலை தங்கம் வாங்க எண்ணுவோருக்கு சாதகமான ஒன்றே. திருமணத்துக்கோ, ஒரு இன்வஸ்ட்மென்ட்டாகவோ எப்படி வாங்க நினைத்தாலும் இந்த நேரத்தில் வாங்குவது உசிதம். "இதை விட இன்னும் குறைந்தால் ?" என்றால்... எந்த விஷயத்திலும் ஐடியல் நிலையை யாராலும் கணிக்க முடியாது. ஓரளவு கவனித்து, விலை குறைந்த நேரத்தில் வாங்குவது புத்திசாலித்தனம் !

ஐ. பி எல் கார்னர்

சென்னையில் நடக்கும் பல மேட்ச்களில் CSK தோற்பது, நேரில் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிய அடி தான். CSK இடம் அப்படி என்ன தான் சரியா இல்லை?

ஓபனர்ஸ் பெரும்பாலும் ஒழுங்காக ஆடுவதில்லை. அதிலும் முதல் 6 ஓவர்களில் அடித்து ஆடுவதே இல்லை. பவுலிங்கில் கடைசி ஓவர்கள் சரியாக வீச மாட்டேன் என்கிறோம். ரைனா சற்று அவுட் ஆப் பார்ம்.

யோவ் அப்புறம் என்ன தான்யா இருக்கு டீமில என்றால், தோனியின் பேட்டிங், பிரேவோ, ஜடேஜா, மாரிஸ் போன்ற தரமான ஆல் ரவுண்டர்கள் இருப்பது ....etc.

சில மேட்சுகள் பார்க்கும்போது டிராமா பாக்குற மாதிரியே இருக்கு. அவற்றில் தோற்றாலும் கூட அதிக பணம் கிடைக்க வாய்ப்பிருக்க கூடும் :))

குறிப்பாக பெங்களூரு விளையாடும் அனைத்து ஆட்டங்களும் கடைசி பந்தில் தான் ரிசல்ட் முடிவாவதை கவனியுங்கள் - கேம்ப்ளிங் எந்த அளவு விளையாடுகிறது என்று புரியும் .

அழகு கார்னர்

ஐ. பி. எல் சீசன் என்பதால் அடுத்தடுத்து சில கிரிக்கெட் அழகிகளை காண்போம்.

கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்க்ஸ் முடிந்து அடுத்து இன்னிங்க்ஸ் துவங்கும் முன் ஸ்டூடியோவில் அமர்ந்து பேசுகிறேன் என மொக்கை போடுவார்கள். இந்த அரை மணி நேரமாவது மக்கள் சொந்த வேலை பார்ப்பார்கள். ஆனால் அப்போதும் டிவியை விட்டு நகர கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த அம்மணியை எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் போன்ற நிகழ்சிகளுக்கு அழைத்து வந்தார்கள்.

Mandira Bedi (27229) size:1280x1024

காமண்டரி ஜொள்ள வரும் பாய்காட் போன்றோர் அம்மணியிடம் காமிரா முன்னாலேயே "ஹீ ஹீ" என்பார்கள்.

 ராஜ் குஷால் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். "கணவனாய் இருப்பது முழு நேர வேலை" என்ற பழமொழிக்கேற்ப,  இப்போதெல்லாம் ராஜ் குஷால் படம் இயக்குற மாதிரி தெரியலை :)

விபத்துகளில் போலிசுக்கு தகவல்

ஒரு விபத்து நடக்கிறது. அதனை பார்த்து விட்டு தகவல் தரும் நபர் தன்னை குறித்த தகவல்கள் தராமலே விபத்து குறித்த தகவலை போலிசுக்கு தர அனுமதி வழங்க வேண்டும் என ஒரு பொது நல வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதற்கு அனுமதி தர மறுத்து விட்டது. " ஒரு நபர் தானாகவே மோதி விபத்து ஏற்படுத்தி இருந்தால், அவரே கூட தன்னை வெளிப்படுத்தாமல் இப்படி தகவல் தர முடியும்" என்று காரணம் கூறி உள்ளது மத்திய அரசு. ஆனால் அத்தகைய நபர்கள் ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு வரமால் " எழுத்து மூலமான சாட்சி மட்டும் தர கோர்ட் அனுமதி தந்தால் நல்லது " என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

உண்மையில் விபத்து நடக்கும்போது பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவமனையில் அனுமதிப்பது தான் மிக முக்கியம். ஆனால் பலரும் ரோடில் அடி பட்டவர் பற்றி தகவல் தர பயப்படுவது நாமும் கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டுமே என்று தான். எனவே அனானிகளாக கூட விபத்து பற்றி தகவல் தர மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் மிக நல்லது.

என்னா பாட்டுடே !

ஷாஜஹான் என்று ஒரு திராபை படம். ஆனால் அந்த படத்தில் இப்படி ஒரு அட்டகாச பாட்டு.

பாடல் கவர ஒரே ஒரு காரணம் தான். வரிகள் !

"என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்"

" வீசி போன புயலில் என் வேர்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி "

" வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களை பிடிக்கவும் கைகள் நடுங்குகிறேன் "

"பகவான் பேசுவதில்லை; அட பக்தியும் குறைவதுமில்லை
காதலி பேசுவதில்லை; என் காதல் குறைவதுமில்லை "

என இப்போ லவ் செய்யும் தம்பிகளும் கூட தங்கள் காதலிக்கு இப்பாட்டை forward செய்து லவ்வை டெவலப் செஞ்சுக்கலாம் !

வீடியோ பார்க்கையில் டாகுடர் விஜய் ஒரு இடத்தில் கோட், டை சகிதமாய் வெளிநாட்டு அழகிகளுடன் பறந்து பறந்து ஆடுவார் அந்த நேரம் நல்லா சிரித்து மகிழுங்கள் !



அய்யாசாமி கார்னர்

Mrs.அய்யாசாமிக்கு இன்னும் சில வாரங்களில் பிறந்த நாள் வருகிறது. அதற்கு பெரிய செலவுக்கு அடி போட்டு வந்தார் (பெண்கள் வேறென்ன கேட்பாங்க ? ....ஹூம் அதே தான் !)

அய்யாசாமி அடுப்படியில் அல்லக்கையாக அசிஸ்ட் செய்து கொண்டிருக்கும்போது இப்படி புலம்பலானார் Mrs. அய்யாசாமி

" இது வரைக்கும் எனக்குன்னு என்ன வாங்கி கொடுத்துருக்கீங்க ? ஒரு காஸ்ட்லி பொருள், பெரிய நகை..?? ம்ம் .சொல்லுங்க. "

மீண்டும் மீண்டும் கேட்டபின், அய்யாசாமி பேசினார்

" வலது கை செய்றது - இடது கைக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிற பரம்பரை நாங்க ( அடங்கப்பா ........இது உலக நடிப்புடா சாமி !) ;  என்னென்ன செஞ்சேன்னு ஞாபகம் வச்சிக்க மாட்டேன்; அப்படியே ஞாபகம் இருந்தாலும் சொல்லி காட்ட மாட்டேன் "

இந்த அநியாய புருடாவை கேட்டதும் Mrs. அய்யாசாமிக்கு சிரிப்பு வர, இது தான் சமயம் என அடுப்படியிலிருந்து எஸ் ஆனார் அய்யாசாமி !

Wednesday, April 17, 2013

வாவ் ! அசரடித்த தமிழக சிற்ப கோவில் !

கிருஷ்ணா புரம்

திருநெல்வேலி அருகில் உள்ளது கிருஷ்ணா புரம் ! இந்த வெங்கடாசலபதி கோவில் சிற்பக்கலைக்கு மிக புகழ் பெற்றது.

நமது நண்பன் வேங்கடப்பன் மிக வித்யாசமானவன். இந்த இடத்துக்கு செல்லும் வரை இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்றோ அதன் சிறப்பு பற்றியோ எதுவும் மூச்சு விட வில்லை.

நவதிருப்பதி கோவில்களை ஒரே நாளில் சுற்றி வர கிளம்பிய எங்களின் கார் சைலன்ட்டாக இந்த இடத்துக்கு வந்தது.

இங்குள்ள சிற்பங்கள் அளவு அழகான சிற்பங்கள் மிக சில கோவில்களில் தான் நீங்கள் பார்க்க முடியும். நேரு, இந்திரா ராஜீவ் என 3 பிரதமர்கள் வந்து ரசித்த சிற்பங்கள் இவை.

சிற்பங்களில் நாங்கள் ரசித்த சில விஷயங்கள் :

ஒரு சிலையில் குறவன் ஒருவன் - ராஜகுமாரியை கடத்தி செல்கிறான். இன்னொன்றில் குறத்தி ராஜகுமாரனை கடத்தி செல்கிறாள். இரண்டும் காதல் வயப்பட்டு தான். 2 சிலைகளும் உடைகள், முகத்தில் தெரியும் உணர்வுகள்.. என அவ்வளவு தத்ரூபமாய் இருந்தன. தோல் பட்டையில் தெரியும் எலும்பு, இடுப்பில் உள்ள எலும்பு எல்லாம் அற்புதமாய் வடிவமைத்துள்ளனர்.

கடத்தி செல்லும் ராஜகுமாரி முகம் அவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளது. குறவன் முகத்தில் உள்ள தொங்கு மீசை பார்க்க காமெடியாக உள்ளது. பெரிய தலைமுடி வைத்து பின்னல், கொண்டை போட்ட ஆண்கள், ஜடை பின்னிய பெண்கள், ஆண்கள் தாடியில் உள்ள முடிச்சு என.. அந்த கால உடை மற்றும் சிகை அலங்காரங்களை அறிய முடிகிறது

இன்னொரு சிலையில் பெரிய வில் ஒன்று உள்ளது. அதன் ஒரு புறம் துவங்கி மறுபுறம் மிக மெல்லிய துளை செல்கிறது. ஊசியை ஒருபுறம் போட்டால் மறுபுறம் வழியே அந்த ஊசி வருமாம். ஆனால் இப்போது அந்த சிலை மற்றும் வில் உடைந்துள்ளது பெரும் சோகம் :(

இப்படி பல்வேறு அரிதான சிலைகள் உடைவதால், இப்போதெல்லாம் சிலைகளை சுற்றி இரும்பு வலை போட்டு மூடப்பட்டுள்ளது

சில சிலைகளில் நகைகளின் டிசைன்கள் கூட பெண்களை பெரிதும் ஈர்க்கிறது. இப்போதெல்லாம் நகை கடை காரர்கள் இத்தகைய டிசைன்களை பார்த்து தான் ஆண்டிக் என்று நகை செய்கிறார்கள் போலும்.

அந்த காலத்து இசை கருவிகள் கூட ( யாழ், தவில் ) சிலைகளில் காண முடிகிறது

மிக சிறப்புடன் இருந்த இக்கோவில் - பின்னர் வந்த காலத்தில் சரியான கண்காணிப்பின்றி, கவனிப்பின்றி இருந்துள்ளது. இந்த கால கட்டத்தில் தான் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளது.

இங்கிருக்கும் ஒரு ராஜா சிலை பற்றி ஒரு சின்ன கதை சொல்கிறார்கள். ஒரு புகழ் பெற்ற சிற்பி ஒரு ராஜாவை உயிருடன் இருக்கும் போது நேரில் பார்த்து சிலை வடித்துள்ளார். சிலை முடியும் முன் ராஜா இறந்து விட, அடுத்த ராஜாவாக வந்த அவரது மகன் அந்த சிற்பியை அழைத்து " வேண்டுமானால் மீதம் சிலை வடிக்க என்னை பார்த்து கொள்ளுங்கள் " என்று கூறியுள்ளார். சிற்பியோ " வேண்டாம். நீ அம்மா ஜாடை; அரசர் முகம் எனக்கு சரியே நினைவில் இருக்கிறது. பார்க்காமலே வடித்து விடுவேன் " என்று சொல்லி விட்டு அதே போல் சிலையை முடித்தாராம்.

இப்படி இங்குள்ள சிலைகள் பற்றி ஏராள கதைகள் உலவுகின்றன !

சிலைகளை ரசிக்கவும் ஒரு மனது / பார்வை வேண்டும். உண்மையில் எனக்கு அந்த அளவு ரசனை இல்லை. ஆனால் உடன் வந்த வெங்கடப்பன் தம்பதியினர் ஒவ்வொரு சிலையின் அழகையும் பொறுமையாய் விளக்கி கூறும்போது வியந்து பார்த்தேன். உடன் இருந்த நம்ம வீட்டம்மாவுக்கு இதிலெல்லாம் ரொம்பவே ஈடுபாடு !

மனிதர்களின் உடலில் ஓடும் நரம்புகள் முதல் கட்டை விரல் நகம் வரை அற்புதமாய் வடித்த இந்த சிலைகளை அவசியம் ஒரு முறை நேரில் கண்டு களியுங்கள் !

உண்மையில் இந்த கோவிலுக்கு செல்வது இறைவனை வணங்க என்பதை விட, அந்த சிலைகளை காண என்பது தான் சரியாய் இருக்கும் !

********
சுசீந்திரம்

சுசீந்திரம் தமிழகத்தின் மிக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று. கன்யாகுமரி மற்றும் நாகர்கோவிலுக்கு இடையே 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

தாணுமாலயன் கோவில் என்று இதனை சொல்கிறார்கள். தாணு என்றால் சிவன்; மால் - பெருமாள் ;

பிரம்மா - சிவன்- பெருமாள் என மூவரும் இணைந்து இருக்கும் கோவில் இது !

அகலிகை மேல் இந்திரன் காதல் கொள்ள, அதனால் சாபம் பெற்று மிக துயருகிறார்.  பின் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக இந்திரனுக்கு பாவ விமோசனம் இங்கு தான் தந்தனர் என்று நம்பப்படுகிறது. (ஊரின் பெயரிலேயே இந்திரனுக்கு இடமுண்டு கவனித்தீர்களா?)



25க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. மூலவர் திருவேங்கடம் விஷ்ணுவரம் பெருமாள்.  விக்னேஸ்வரி - மேலே பெண்ணாகவும் கீழே ஆணாகவும் இருக்கும் பிள்ளையார்.

நீல கண்ட விநாயகர் - என்கிற இன்னொரு கடவுளும் மிக விசேஷமானவர். சிவன் ரூபத்தில் இருக்கும் பிள்ளையார் இவர் என்கிறார்கள்

பல இடங்களில் தமிழில் அர்ச்சனை நடப்பதை காண முடிந்தது

விளக்கு பரிகாரம் என்பது இங்கு நிறையவே நடக்கிறது. பலரும் 9 முதல் 108 விளக்குகள் வைத்து பரிகாரம் செய்கிறார்கள். நவகிரக மூர்த்திகள் மேலே விளக்குடன் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம் 12 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் இங்கு பரிகாரம் செய்ய வருகிறார்கள்


சுசீந்தரத்தின் சங்கீத தூண்கள் மிக புகழ் பெற்றவை. ஒரே கல்லில் செய்யப்பட மிக உயரமான 7 தூண்கள் அலங்கார மண்டபத்தில் உள்ளன. ஆனால் நாம் தட்டினால் அவற்றில் எந்த சத்தமும் வருவதில்லை. அவற்றை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட விதத்தில் தட்ட வேண்டும். கோவிலில் இருக்கும் பெரியவர் ஒருவர் தட்டி சத்தம் வர வைத்து காட்டினார்

நாங்கள் சென்ற நேரம் வருடாந்திர கோவில் திருவிழா நடப்பதால் அந்த ஏரியாவே களை கட்டியிருந்தது. வீடியோவில் சுசீந்திரம் கோவில் வெளிப்புறத்தை நீங்கள் ரசிக்கலாம்



22 அடி உயரத்தில் இங்கிருக்கும் ஆஞ்சேநேயர் மிக பிரபலமானவர். பலரும் அவருக்கு வெண்ணை வாங்கி சாற்றுகிறார்கள்.

 22 அடி என்பதால் கூட்டம் அதிகமிருந்தாலும் தூரத்திலிருந்தே அவரை ரசிக்க முடிகிறது
##########
தமிழரின் அற்புத சிற்ப கலை, சிவா- விஷ்ணு- பிரம்மா இணைந்த கோவில் - 22 அடி ஆஞ்சேநேயர் - சங்கீத தூண்கள் என உங்களை கவர பல விஷயங்கள் இக்கோவிலில் உண்டு. நாகர் கோவில் அல்லது கன்யாகுமரி பக்கம் செல்லும் போது தவறாமல் சென்று வாருங்கள் !

*********
தொடர்புடைய திருநெல்வேலி / கன்யாகுமரி பயணக்கட்டுரைகள்:

சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் நேரடி அனுபவம்

திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில் ஒரு பார்வை

நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்

வாவ் மறக்க முடியாத முட்டம் கடற்கரை

கன்யாகுமரி சில கசப்பான உண்மைகள்

*********

Tuesday, April 16, 2013

தொல்லைகாட்சி: AR.ரகுமான் Vs கமல்- தமிழ் புத்தாண்டு நிகழ்சிகள் ஒரு பார்வை


 ஏ ஆர் ரகுமானின் அசத்தல் இசை விருந்து 



       
ஜெயா டிவியில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பி அந்நேரம் வேறு எந்த சானலுக்கும் செல்ல முடியாதபடி செய்து விட்டனர் ! அடடா எத்தனை அற்புத பாடல்கள் !                  

ரகுமான், தான் பாடிய பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடினார். ஹரிஹரன் சித்ரா ஹரிணி என பிரபல பாடகர்கள் வந்திருந்தனர்.

கடல் படம் ரிலீசுக்கு சற்று முன் நிகழ்ச்சி நடந்திருக்கணும் போலும். அதிலிருந்து 2- 3 பாட்டு பாடினர். மூங்கில் தோட்டம் பாட்டை கூட்டம் ஆர்ப்பரித்து ரசித்தது

எனது பெண் பாடல்களை ரசிப்பாளே ஒழிய இசை அமைப்பாளர் எல்லாம் கவனிக்க மாட்டாள். இந்த நிகழ்ச்சி பார்த்ததும் " என்னப்பா .. இவர் இசை அமைச்ச எல்லா பாட்டும் எனக்கு பிடிச்ச பாட்டா இருக்கு " என அசந்து போனாள். ஏ ஆர் ரகுமானுக்கு இன்னொரு ரசிகை தயார் !

புத்தம் புது படங்கள் 

சன்னில்- ஓகே ஓகே & நான் ஈ , ஜெயாவில் மாற்றான், விஜய்யில் துப்பாக்கி மற்றும் போடா போடி என எல்லாமே பார்த்த படங்களாய் இருந்தது. ஓகே ஓகே மற்றும் துப்பாக்கி பலரும் நேற்று பார்த்திருக்க கூடும். சில மாதங்கள் முன் வந்த தீபாவளிக்கு ஒரே நாளில் வெளியான துப்பாக்கி & போடா போடி விஜய் டிவி ஒரே நாளில் ஒளிபரப்பியது சற்று ஆச்சரியமான ஒற்றுமை.

கலைஞர் டிவிக்கு என்ன ஆச்சுதோ தெரியவில்லை. ஆதவன் மாதிரி ஏற்கனவே போட்ட படங்களை போட்டு கொண்டிருந்தனர் (அதுக்காக தமிழ் புத்தாண்டை கண்டுகொள்ளாமல் விட்டு விடவில்லை.. சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சி என பேட்டிகள் எல்லாம் தூள் பறந்து கொண்டு தானிருந்தது )

லியோனி பட்டி மன்றம் 

அந்த கால காமெடி - சிறந்ததா ? இந்த கால காமெடி சிறந்ததா என கலைஞரில் பட்டிமன்றம் நடத்தி சிரிக்க வைத்தார் லியோனி. ஒரு பேச்சாளர் " சென்ற முறை நான் பேசியதை வைத்தே இந்த முறை எனக்கு தீர்ப்பு வழங்குங்கள் என கூறி ஆரம்பிக்க " எப்படிய்யா அது முடியும்?" என்றதும் " தமிழ் இரண்டாம் தாளில் வாங்கிய மார்க் வைத்தே முதல் தாளுக்கு அரசாங்கம் மார்க் போடும் போது, நீங்கள் இப்படி செய்ய கூடாதா ?" என அரசியல் கலந்தனர்

பழைய நடிகர்களில் தருமி நாகேஷ், கல்யாண பரிசு தங்கவேலு என ஏராள நல்ல பாத்திரம் இருக்க, இப்போது அப்படி இல்லாமல் எதிரணி திண்டாடி விட்டது.

லியோனி பழைய காமெடி தான் சிறந்தது என தீர்ப்பு தருவார் என்பது ஏற்கனவே தெரிந்தது தானே !

குட்டீஸ்

முழுதாய் காணாமல் துண்டு துண்டாய் பார்த்த சில துளிகள் :

** ஜெயா டிவி ஜாக்பாட் நிகழ்ச்சியில் - வழக்கு எண் 18/9 &  கும்கி அணியும் வந்திருந்தன. லிங்குசாமி தலைமையில் ஒரு அணி - இன்னொரு பக்கம் பாலாஜி சக்திவேல்; கேள்விகள் பெரும்பாலும் சினிமா பற்றியே சுழன்றது. முழுதும் பார்க்க முடியலை

## நீயா நானா - பல்வேறு கேட்ஜட்ஸ் - அதை அதிகமாக மக்கள் உபயோகிப்பது பற்றிய நிகழ்ச்சி - மொபைல், இணையம் உள்ளிட்டவற்றுக்கு நாம் எவ்வளவு தூரம் அடிமையாகி போனோம் என்று பேசியது. வித்யாசமான சற்று அவசியமான விஷயம் தான் !

எதிர் நீச்சல்

எதிர் நீச்சல் குழு விஜய் டிவி யில் வந்திருந்தனர். பொதுவாய் இத்தகைய நிகழ்சிகளுக்கு ஒரு காம்பியர் இருப்பார். சிவகார்த்திகேயன் இருந்ததால், அவரே போதும் என விட்டு விட்டனர் போலும்.

நடுவே தனுஷ் & அனிருத் பாடல் கம்போஸ் செய்வதை காமெடியாக காண்பித்தனர் இந்த கால தலைமுறை என்பதால் - இயக்குனர் தயாரிப்பாளர்- இசை அமைப்பாளர் எல்லாருமே ஒருவரை ஒருவர் நன்கு கிண்டலடித்து கொண்டது ஜாலியாக இருந்தது

பாடல்களால் நிச்சயம் எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டது எதிர்நீச்சல் !

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் கமல் 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கமல் கலந்து கொண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விஜய் டிவி ஒளிபரப்பியது. இரண்டாம் நாள் கவுதமியும் கமலுடன் இணைந்து கொண்டார்

கமலின் பறந்து விரிந்த அறிவு - தெளிவாக தெரிந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் ஏன் அப்படி சொன்னார் என்பதையும் அது சம்பந்தமான பல தகவல்களும் தந்தார்

குறிப்பாக இரண்டு ஆறுகள் ஓடும் ஸ்ரீரங்கம் போல சென்னையிலும் - அடையாறு மற்றும் கூவம் என இரண்டு ஆறுகள் அவர் நினைவு தெரிந்தே நன்கு இருந்ததாகவும், நாமெல்லாம் சேர்த்து தான் அவற்றை சாக்கடை ஆக்கினோம் என்றும் அவர் சொன்னது வருந்த வைத்தது. ஒரு காலத்தில் கூவம் வழியே காய்கறிகள் வேறு ஊரிலிருந்து வருமாம் ! குமுதம் ஆசிரியர் குழு அடையாறு ஆற்றில் திருவான்மியூர் வரை படகு சவாரி செய்து அது பற்றி ஒரு கட்டுரை எழுதியதையும் நினைவு கூர்ந்தார்.

கமல் 50 லட்சம் வென்றதும் 1 கோடிக்கான கேள்வி கேட்காமலே முடித்து விட்டனர் :))

கமல் பேசிய நிகழ்ச்சி முடிந்தால் யூ டியூபில் தேடி பாருங்கள் !
**********

Sunday, April 14, 2013

P.B. ஸ்ரீனிவாஸ் : அஞ்சலி - மறக்க முடியாத சில பாடல்கள்

மிழ், தெலுகு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் - மறக்க முடியாத பல அற்புத பாடல்களை பாடிய P. B. ஸ்ரீனிவாஸ் அவர்கள் இன்று தனது 82 வது வயதில் - தமிழ் புத்தாண்டு தினத்தில் காலமானார்.

சில விழாக்களில் அவரை சந்தித்துள்ளேன். சட்டை பை முழுதும் பல வித கலர் பேனாக்களை சொருகியபடி, கையில் ஏகப்பட்ட காகிதங்களை எடுத்த படி வருவார். அவருடன் எடுத்து கொண்ட ஒரு போட்டோவும் உண்டு. எங்கு என்று தான் தெரியலை :(



P. B. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு நினைவு அஞ்சலியாக அவரது சிறந்த பாடல்கள் சிலவற்றை பகிர்கிறேன் :

மயக்கமா கலக்கமா

தத்துவ மற்றும் மெலோடியஸ் பாடல்கள் ஸ்ரீனிவாஸ் அவர்களின் கோட்டை. கண்ணதாசனின் இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாத ஒன்று. மனம் வேதனையுறும் எத்தனையோ மனிதர்களுக்கு இப்பாடல் ஆறுதலாக இருந்துள்ளது:


காலங்களில் அவள் வசந்தம்

சில நடிகர்களுக்கு சிலரின் குரல் எளிதில் பொருந்தி போகும். ஜெமினிக்கு மிக பொருந்துவது ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலே

இந்த காதல் பாடல் இன்றும் கூட - காதலி நோக்கி பாடும் விதத்தில் இளமையாய் இருக்கிறது கேளுங்கள் :




நிலவுக்கு என் மேல்

காதல் பாடல் -தான் . ஸ்ரீனிவாஸ் குரலில் குறும்பு கொப்பளிக்கும். என்ன அற்புத காம்போசிஷன் !


நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

ஸ்ரீனிவாஸ் அவர்களின் மிக சிறந்த முதல் சில பாடல்களில் இடம் பிடிக்க கூடிய அற்புத பாட்டு. மயக்கமா கலக்கமா போல, அதற்கு இணையான இன்னொரு பாட்டு


பூஜைக்கு வந்த மலரே வா

எளிமையான அழகான டூயட் கூட பாடும் ஜானகி அம்மாவின் குரல் அப்போது எப்படி இருந்துள்ளது கேளுங்கள்:


மௌனமே பார்வையால்

மிக மெதுவாக செல்லும் ஒரு அற்புதமான பாட்டு. எனக்கு விபரம் புரியாத சிறு வயதில் இருந்தே இந்த பாடலை மிக பிடிக்கும்.


தோல்வி நிலையென நினைத்தால்

பகிர்ந்துள்ள பாடல்களில் கலர் படம் இது ஒன்று தான்.

படம் வந்த புதிதில் இருந்தே இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் - இலங்கை பிரச்சனை தான் நினைவுக்கு வரும்.

தோல்வி நிலையென நினைத்தால்.. மனிதன் வாழ்வை நினைக்கலாமா... வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா 
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம். உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா 



எந்த ஊர் என்றவனே

என்ன ஒரு அற்புதமான தத்துவ பாட்டு இது ! நிச்சயம் இது போன்ற பாடல்கள் இப்போது வருவதே இல்லை :(


ரோஜா மலரே

பல தந்தைகள் - தங்கள் மகளை - ரோஜா மலரே ராஜகுமாரி என்று அழைத்தது இந்த பாடலுக்கு பிறகு தான்.


நேற்று வரை நீ யாரோ

ஜாலியான மெலடி + டூயட்.

உண்மையில் Arranged marriage ஒவ்வொன்றுக்கும் இந்த பாடல் வரிகள்

" நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?

பொருந்தும் !


காற்று வெளியிடை கண்ணம்மா

பாரதியார் பாடலுக்கு மிக அற்புத மெட்டுடன் கூடிய இசை அமைத்து - என்றென்றும் மறக்க முடியாத பாடலாக மாற்றிய முழு குழுவிற்கும் நன்றி சொல்ல வேண்டும் !


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

எப்போது கேட்டாலும் ஏனோ கண்ணில் நீர் வர வைக்கும் பாடல். இன்று ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் பொருந்தும் இந்த பாடல் இறுதி பாடலாக ...


**********
ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் !
*********
அண்மை பதிவு :

CSK நேற்று ஜெயித்த லகான் மேட்ச் ஹை லைட்ஸ் உடன்

CSK நேற்று வென்ற "லகான்" மேட்ச் - ஹைலைட்ஸ் உடன்....

லகான் படம் பார்த்துள்ளீர்களா?

கிளைமாக்ஸ் - கடைசி பந்தில் நான்கு ரன் அடிக்கணும். ஹீரோ அமீர்கான் உயரமாய் பந்தை அடிக்க, எதிரணி கேப்டன் கேட்ச் பிடித்து விடுவார். அமீர் அணி தோற்று விட்டது என நினைத்தால், கோட்டை தாண்டி கேட்ச் பிடித்தது அப்புறம் தான் தெரிய வரும்.

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்ததும் இதே மாதிரி விஷயம் தான்.

கடைசி பந்து. ஜடேஜா பேட்டிங் செய்கிறார். 2 ரன் எடுத்தால் வெற்றி. 1 எடுத்தால் சூப்பர் ஓவர் ஆடி மேட்ச் முடிவாகும். 1 ரன் கூட எடுக்காவிடில் சென்னை தோல்வி

ஆர் பி சிங் வீசிய பந்தை ஜடேஜா தேர்ட் மேன் பக்கம் அடிக்க, பீல்டர் கேட்ச் பிடித்து விட்டார். பெங்களூரு வீரர்கள் மகிழ்ச்சியாய் ஓடி வர, அம்பயர் நோ பால் காட்டுவது தெரிந்தது. அதற்குள் ஜடேஜா 1 ரன் எடுத்து முடித்திருக்க, சென்னை வென்று விட்டது !

               

சென்ற முறை பெங்களூரு சென்னையில் ஆடிய போது இதை விட ஒரு நகம் கடிக்கும் மேட்ச் நடந்தது - 19 வது ஓவரில் ஆல்பி மார்கல் விராட் கோலி பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தார். 20 வது ஓவர் கடைசி பந்தில் இதே ஜடேஜா - அதே தேர்ட் மேன் திசையில் - பவுண்டரி அடித்து மேட்சை நிறைவு செய்தார்.

(அப்போதும் வீடுதிரும்பலில் ஒரு தனி பதிவு - With Match Highlights எழுதினேன். அது இங்கே )

நேற்றைக்கு பெங்களூரு ஆட துவங்கிய போது - கெயில் விக்கெட் உடனே எடுத்து விட்டனர் ( கெயில் எப்போதும் சென்னைக்கு எதிரே சோபிப்பதே இல்லை; கவனித்துள்ளீர்களா? ). கோலி முதலிலும் பின் டீ வில்லியர்ஸ் அதிரடியாக ஆடியும் ஸ்கோர் 165 வந்த போது - சென்னை அதனை அடிப்பது மிக கடினம் என்றே நினைத்தேன்

அதற்கு ஏற்ப துவக்க வீரர்கள் இருவரும் மிக சீக்கிரம் அவுட் ஆகினர். பின் ரைனா மற்றும் பத்ரிநாத் நிதானமாக ஆட, 10 ஓவரில் ஸ்கோர் 64 வந்தது கடைசி 10 ஓவரில் 100 ரன்னுக்கு மேல் எடுக்கணும். ரைனா & பத்ரிநாத் இருவரும் அவுட் ஆன பின் தோனியும் ஜடேஜாவும் சற்று அடித்து ஆடினாலும் கடைசி 5 ஓவரில் 65 ரன் அடிப்பது - அதுவும் சேசிங்கில் சற்று சிரமமே என தோன்றியது

19- வது ஓவர் துவக்கத்தில் 29 ரன் தேவை. முதல் பந்தில் தோணி அவுட். அடுத்து வந்த பிரேவோ -எடுத்தவுடன் 6 அடித்தாலும், 2 பந்தில் அவுட் ஆகிட்டார்

கடைசி ஓவர் துவங்கும் போது 16 ரன் தேவை. பெங்களூரு வெல்ல தான் வாய்ப்பு என பலரும் நினைக்க முதல் 2 பந்திலேயே கதை மாறி விட்டது. முதல் பந்து - ஜடேஜா எங்கோ அடிக்க பார்க்க, எட்ஜ் வாங்கி தேர்ட் மெனில் நான்கு வந்தது. அடுத்த பந்து தைரியமாக, தெளிவாக லாங் ஆன் திசையில் சிக்சர் அடித்தார். இனி 4 பந்தில் 6 ரன் எடுக்கனும். 1, 2 என எடுத்து அந்த கடைசி பால் டிராமா வந்தது !

கடைசி ஓவர் ஹைலைட்ஸ் இங்கு பாருங்கள் :



முடிந்தவுடன் தோன்றிய எண்ணம் மேட்ச்   பிக்சிங் தான் ! மேலும் விளையாண்ட 22 பேரும் சென்னை வெற்றிக்கு காரணமில்லை - சீனு மாமா தான் என்று பலரும் சொல்வர் என்றும் தான்....

இருந்து விட்டு போகட்டும்... இது நன்கு அரங்கேறிய டிராமாவாகவே இருக்கட்டும். பட் , வீ என்ஜாயிட் திஸ் டிராமா.

வந்திருந்த 40,000 மக்களும் செம த்ரில்லிங் மேட்ச் பார்த்த திருப்தியுடன் திரும்பியிருப்பர்.

கிரிக்கெட் நமக்கு சந்தோஷத்தையும் மகிழ்வையும் தருகிறது என்றால் தந்து விட்டு போகட்டுமே !

இப்போதைக்கு : வெல் டன் தோனி & ஜடேஜா ! Way to Go CSK !!

********
முழு மேட்ச் ஹைலைட்ஸ் இங்கு : 

Saturday, April 13, 2013

சேட்டை = கொடுமை ! விமர்சனம்

வைரம் கடத்துகிற கதைகள் தமிழிலேயே எவ்வளவு பார்த்து விட்டோம். அத்தகைய ஒரு கதையை டில்லியிலிருந்து இறக்குமதி செய்துள்ளார்கள்

கதை

ஆர்யா, சந்தானம் , பிரேம்ஜி மூவரும் பத்திர்க்கையில் நிருபர், புகைபடகாரர், கார்டூனிஸ்ட் ஆக இருக்கும் நண்பர்கள். தவறுதலாக ஒரு வைர பாக்கெட் இவர்கள் கைக்கு சேருகிறது அதனை தேடி வில்லன் கூட்டம் இவர்களை துரத்த இறுதியில் என்ன ஆனது என தைரியம் இருந்தால் திரையில் பாருங்கள் !



இயக்குனர் கண்ணன் Hindi- படங்களை ரீ மேக் செய்வதில் அதீத ஆர்வம் உள்ளவர். Jab We Met-ஐ கண்டேன் காதலாக்கி ஓரளவு வெற்றி கண்டார். இம்முறை Delhi Belly -ஐ படமாக்கி பெரும் தோல்வி !

ஓரிரு நாளைக்குள் நடக்கும் கதையில் எதற்கு இத்தனை பாடல்களோ? ஒன்றும் உருப்படியாய் இல்லை. வருகிற இடங்களும் துருத்தி கொண்டு நிற்கிறது ..... !

இன்றைய நம்பர் ஒன் காமெடியன் - சந்தானம் நடிபதால் மட்டுமே படமும் ஓடிடாது; சிரிப்பும் வந்துடாது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். ஆயி போவது, புர் விடுவது இவை முறையே 50 மற்றும் 40 முறை வசனம் அல்லது விஷூவலாக வருகிறது. வாந்தி வராத குறை தான் ! சில காட்சிகள் மகா கேவலம்

சிரிக்கிற மாதிரி இருக்கிற ஓரிரு இடங்களையும் டிரைலரில் காட்டி விட்டனர் எனவே திரையில் அவற்றை காண சிரிப்பு வர மாட்டேன் என்கிறது



அஞ்சலி மற்றும் ஹன்சிகா அவ்வப்போது வந்து போகிறார்கள். உருவத்தில் இருவரும் ஒரே லெவலில் இருக்க கூடும் !அஞ்சலியின் காதல் செயற்கை என்றால் ஹன்சிகா குடுமபமே படு அமெச்சூர்.

அஞ்சலிக்கும் ஆர்யாவுக்கும் லிப் லாக் சீன் இருக்கு என்றதை ஆர்வமாய் பார்த்தால், ஒன்றுக்கு இரு முறை வருகிறது; ஆனால் 2 முறையும் இருவரும் லிப் கிஸ் தருவதை  நமக்கு தெரியாத படி எடுத்து வச்சிருக்காங்க :(

வில்லன்களின் அல்லக்கைகள் கிச்சு கிச்சு மூட்ட முயல்கிறார்கள் நமக்கு தான் சிரிப்பு வரலை

பிரேம்ஜி என்கிற நடிகர் எப்படி நடிக்க வந்தார், சென்னை - 28 தவிர வேறு எந்த படத்திலாவது கொஞ்சமேனும் சிரிக்க வைத்தாரா, இன்னும் அவருக்கு எப்படி வாய்ப்புகள் கிடைக்கிறது என தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் !

எதோ ஆர்யாவுக்கு ஹன்சிகா தான் ஜோடி போல கதையை எடுத்து சென்று திடீரென அஞ்சலி ஜோடி என்பது போல் முடிக்கிறார்கள் ! தலை சுத்திடுச்சு !

இந்த படத்துக்கு ஒவ்வொரு டிவியா வந்து இவங்க கொடுத்த பில்ட் அப் இருக்கே ! அடேங்கப்பா !

டிவியில் போட்டால் பாருங்கள் என சில படங்களுக்கு சொல்வதுண்டு இந்த படம் அப்படி கூட சொல்ல முடியாது தப்பி தவறி வீட்டில் சாப்பாட்டு தட்டுடன் பார்த்தால் வாந்தி தான் !

படத்தில் நல்ல விஷயமே இல்லியா என கேட்கிறீர்களா ?

இருக்கு .. படம் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது அது மட்டும் தான் !

Friday, April 12, 2013

தலாஷ் & ஆடலாம் பாய்ஸ்- சின்னதா டான்ஸ்-சினிமா விமர்சனம்

தலாஷ்

கடந்த சில வருடங்களில் அமீர்கான்  நடித்து வெளி வரும் எந்த படமும் பார்க்காமல் தவறியதில்லை. சற்று தாமதமானாலும் நிச்சயம் பார்த்து விடுவேன். 2 அல்லது 3 வருடத்துக்கு ஒரு படம் நடிக்கும் அமீர்கான் நீண்ட இடைவேளைக்கு பின் நடித்த தலாஷ் சமீபத்தில் தான் பார்க்க முடிந்தது



படம் துவங்கும் போது ஒரு கார் விபத்து நடக்கிறது. பிரபல நடிகர் ஒருவர் பீச்சில் கார் மூழ்கி இறக்கிறார். அதனை துப்பறியும் போலிஸ் இன்ஸ்பெக்டர் அமீர் கான். தனிப்பட்ட வாழ்வில் குழந்தையை இழந்த சோகத்தில் இருக்கின்றனர் அமீரும் அவர் மனைவி ராணி முகர்ஜியும்.

நடிகரை தொடர்ந்து இன்னும் சில மரணங்களும் நிகழ்கின்றன. படத்தின் இறுதியில் கொலையை செய்தது யார் என கண்டுபிடிப்பதுடன், மகனை இழந்த சோகத்திலிருந்தும் ஒரு வழியாய் விடுபடுகிறார் அமீர்.

ரொம்ப சாதாரண முடிச்சு. மிக நிதானமாக நகர்கிறது படம். இப்படி பட்ட சஸ்பென்ஸ் படத்தில் இருக்க வேண்டிய பரபரப்பு இல்லாதது பெரும் குறை

அமீர் கான் என்றைக்கு நடிப்பில் குறை வைத்தார் ? என்ன ஒன்று தூங்கும்போது கூட போலிஸ் உடையிலேயே இருக்கிற மாதிரி ஒரு பாத்திரம் ! தயாரிப்பாளராக அமீர் கான் எப்படி இந்த கதையை நம்பி படம் எடுத்தார் என்பது மிக பெரும் கேள்வி குறி. கதை தேர்வில் அமீர் சொதப்புவது மிக அரிது தான் !



ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூர் என இரு ஹீரோயின்களும் மிக நிறைவாய் செய்துள்ளனர் . கரீனா நீட்ட முகம் எனினும் செம அழகு.

பேய், பிசாசு போன்றவற்றை நம்புகிற விதமாகவும், அவற்றை அற்புதமாய் பேசுகிற விதத்திலும் படம் எடுத்தது நிச்சயம் உறுத்துகிறது. இதனாலேயே படம் மனதில் ஒட்டாமல் போகிறது.

இவ்வளவு சுமாராய் இருந்தும் 40 கோடியில் எடுத்த இப்படம் 174 கோடி வசூல் செய்துள்ளது ! ஜஸ்ட் அமீர் கான் மேஜிக் !

ஆடலாம் பாய்ஸ் - சின்னதா டான்ஸ்

ஷாரூக் கானின் " Chake De India " ஹிந்தி படம் பார்த்து விட்டு அந்த பாதிப்பில் எடுத்துள்ளனர் போலிருக்கிறது. அங்கு ஹாக்கி.. இங்கு அதற்கு பதில். டான்ஸ் போட்டி

பிரபு தேவா ரொம்ப சுமாரான ஒரு நடன குழுவை வைத்து கொண்டு, தனது பயிற்சியால் எப்படி பெரிய டான்ஸ்  போட்டியை வெல்ல வைக்கிறார் என்பதே கதை சுருக்கம்.


நடுவில் பிரபு தேவா சவால் விடுவது, மனம் நோவது, சதி, நம்பிக்கை துரோகம் எல்லாம் உண்டு.

பழைய பாகவதர் கால படம் போல முணுக்குன்னா பாட்டு வந்துடுது.. பத்து பன்னிரண்டு பாட்டு இருக்கும்னு நினைக்கிறேன். புது ஆட்கள் நல்லாவே டான்ஸ் ஆடுகின்றனர்

பிரபு தேவா பயிற்சியாளர் ஆனதால் அதிகம் ஆடலை. மற்றவர்கள் தான் ஆடுகிறார்கள்.

கிளைமாக்சில் முக்கிய நடன போட்டியில் பிரபு தேவா தயார் செய்துள்ள நடனத்தை திருடி எதிரணி ஆடி விட, இவர்கள் கடைசி நிமிடத்தில் என்ன செய்கிறார்கள் என்பது சுவாரஸ்யம்.

நடனம் பிடிப்பவர்கள் மட்டும் ரசிக்கலாம் இப்படத்தை !

Thursday, April 11, 2013

வானவில்: எனை காணவில்லையே நேற்றோடு !

முகநூல் கிறுக்கல்கள் 

** பக்கத்து சீட்டில் அமர்ந்தவாறு, மொபைலில் என்ன டைப் செய்கிறோம் என எட்டி பார்க்கும் ஆட்களுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை என அந்நியன் படத்திலேயே சொல்லியிருக்கலாம்... ##முடியல ##

@@@@@@@

** நான் போயிட்டு வர்றேன்; கிளம்புறேன்; போயிட்டு வர்றேன்; கிளம்புறேன் " என்று சொல்லியவாறு, அதே இடத்தில் நின்றார் டாஸ்மார்க் வாசலில் வேஷ்டி பாதி அவிழ்ந்த பெரியவர் !

@@@@@@@

வித்தியாச வழக்கு - தீர்ப்பு

தமிழக அரசில் வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர் மதுரை பிள்ளை. இவருக்கான பென்ஷன் கணக்கிட்டு தரப்பட்டு வந்தது. பின் ஆடிட்டிங்கில் இவருக்கு அதிகமான அளவு பென்ஷன் தந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே முதலில் அதிகமாக தந்த பென்ஷனை அடுத்தடுத்த மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து கொண்டு அரசு அவருக்கு பென்ஷன் தந்தது. வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் இதில் வித்யாசமான தீர்ப்பை வழங்கியது. " தனக்கு அதிகம் பென்ஷன் தர சொல்லி அவர் கேட்கவில்லை.அவர் எந்த தவறான தகவலும் தரவில்லை. இது அரசு செய்த தவறு. எனவே அந்த பணத்தை மறுபடி அவரிடம் வாங்குவது தவறு என்றும், இது வரை பிடித்த பணத்தை திரும்ப கொடுக்கவும் " என்றும் நீதிபதி ஹரிபரந்தாமன் தீர்பளித்துள்ளார்.

இனி அரசு அலவலகங்கள் இத்தகைய கால்குலேஷன்களில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க கூடும் !

புத்தாண்டு சிறப்பு படங்கள் 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டிவிக்கள் போட்டி போட்டு கொண்டு புது படம் ஒளி பரப்புகின்றன. விஜய் டிவி யில் விஜய் நடித்த துப்பாக்கி தான் - ஹாட் ஆக இருக்க போகிறது. சன்னில் மாற்றான் ; ஜெயா - கலைஞர் எப்படி டப் பைட் கொடுக்க போறாங்க என தெரியலை.

தமிழ் புத்தாண்டு இந்த வருஷம் ஞாயிறு அன்னிக்கு வந்துடுச்சு... வார நாளா இருந்தா ஒரு நாள் லீவு கிடைச்சிருக்கும் என்று வருந்துகிற ஆளா நீங்க? கையை குடுங்க ....என் இனமய்யா நீங்கள் !

என்னா பாட்டுடே !

அப்பாசுக்கு இது முதல் படம். பெண்கள் எல்லாம் அவரை பார்த்து விட்டு ஆஹோ ஓஹோ என்றனர். ஏற்கனவே எஸ்டாபிளிஷ் ஆன வினீத்தை அவர் இப்படத்தில் எளிதாய் தாண்டியிருப்பார் ஆனால் தமிழ் திரையுலகில் அவருக்கு ஸ்பெஷல் இடம் இல்லாமல் போனது

சரி பாடலுக்கு வருவோம். மெலடியில் ரகுமான் அசத்துவதில் ஆச்சரியமே இல்லை. மிக அழகான பிக்ச்சரைசஷன். தபு வெரி கியூட்

" மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் " என்று என்னை மாதிரி அப்போதைய கல்லூரி பசங்களை பாட வைத்த பாடல்...



அய்யாசாமி கார்னர் 

அய்யாசாமியின் ஹவுஸ் பாஸ் வேலைக்கு செல்பவர் என்பதும் அய்யாசாமிக்கு எடுபிடி வேலைக்கு மேல் சமையல் பெரிதாய் தெரியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனிதரின் தஞ்சாவூர் குசும்பு மட்டும் குறையவே குறையாது.

இரவு சாப்பாடுக்கு சாதம் இருக்க கூடாது. தோசையும் கூடாது (தாகம் எடுக்குமாம்) ; இதனால் அவர் ஹவுஸ் பாஸ் சப்பாத்தி அல்லது உப்புமா செய்வார். (சப்பாத்தியை அடுத்தடுத்த நாள் செய்தால் அதற்கும் " தினம் சப்பாத்தியா? " என கேள்வி கேட்பார் நம்ம வெரைட்டி பிரியர் )

இதனால் சப்பாத்தி அல்லது உப்புமா என்று மாறி மாறி செய்வார் அவர் ஹவுஸ் பாஸ். அதிலும் சும்மா இருக்க மாட்டார் நம்ம ஆளு. சாப்பிட உட்காரும் போது " இன்னிக்கு உப்புமா தானே? " என்பார். " ஆமா எப்படி கண்டுபிடிச்சீங்க? வாசனை வந்துடுச்சா? " என்றால்

"க்கும்... நேத்து சப்பாத்தின்னா இன்னிக்கு உப்புமா தானே; இதுக்கு மோப்பம் வேற பாக்கணுமாக்கும் " என்று கிண்டல் விடுவார்

அர்ச்சனை துவங்கி விடும் !

ஆமா உங்க வீட்டில் இந்த இரவு சாப்பாட்டு பிரச்னையை எப்படி சமாளிக்கிறீங்க?

போஸ்டர் கார்னர் 



நீத்தார் நினைவு - திரு சங்கர கிருஷ்ணன்

கோனே எலிவேட்டர் நிறுவனத்தில் எம். டி யாக இருந்த திரு சங்கர கிருஷ்ணன் நேற்று மரணமடைந்தார். இன்றைய செய்தி தாள்களில் இந்த செய்தி நீங்கள் வாசித்திருக்க கூடும்.

எங்கள் நிறுவனத்தில் External Director ஆக இருந்ததால்- 4 ஆண்டுகளாக அவரை அறிவேன். கடும் உழைப்பாளி. கோனே நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபத்திற்கு கொண்டு சென்றவர். இந்தியா சிமிண்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவங்களில் இயக்குனராக இருந்தார். தமிழ் நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினராக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் கட்டப்பட்ட போது பெரும் பங்காற்றியவர்.


சென்ற வாரம் அடுத்த போர்ட் மீட்டிங் குறித்து அவரிடம் பேசினேன். 67 வயது வரை சிங்கம் போல இருந்தாலும் , கடைசி 3 ஆண்டுகளில் புற்று நோய் வந்து சிறிது சிறிதாக பாதிக்கப்படுவதை கண் முன்னே கண்டோம்.

போர்டு மீட்டிங் அறையில் எப்போதும் சரியாக குறிப்பிட்ட இடத்தில் தான் ஒவ்வொருவரும் அமருவர்; இங்கு தான் அமரணும் என பேசி கொள்ளாமல் இயல்பாய் நடக்கும் விஷயம் இது. சங்கர நாராயணன் அவர்களின் அருகில் தான் எப்போதும் அமருவேன். அடுத்த முறை நிச்சயம் அவர் இல்லாத இடைவெளி உணர முடியும் :(

யாருக்கும் தீங்கு நினைக்காத, அனைவருக்கும் உதவும் ஒரு நல்ல உள்ளம் ! அவரது ஆத்மா சாந்தியடையட்டும் !

Tuesday, April 9, 2013

அம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

சென்னை- ஆலந்தூரில் அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அந்த பெண்மணியை பார்த்தேன். சமையல் கட்டின் அருகில் நின்று கொண்டு அங்கிருப்போருக்கு சில உத்தரவுகள் தந்து கொண்டிருந்தார். 

அம்மா உணவகம் பற்றி எழுத வேண்டுமென புகைப்படம் எடுத்த நேரம் அதே பெண்மணி தான் என்னிடம் வந்து " ஏன் சார் போட்டோ எடுக்குறீங்க? " என கேட்டது நினைவுக்கு வந்தது. " கணினியில் அம்மா உணவகம் பற்றி எழுத போறேன் " என்று சொல்ல " அப்படியா? யார் படம் எடுத்தாலும் எதுக்குன்னு நாங்க தெரிஞ்சு வச்சிக்கணும்; அதான்" என்றார் அவர். உணவுக்கு காசு வாங்கி கொண்டு பில் தந்தவரும் அந்த பெண்மணியே. இப்போது சமையலறை அருகில் நிற்கிறாரே என்று யோசித்த படி நான் நடக்க, அவர் தானாகவே வந்து பேச துவங்கினார்.

Mrs .முரளி என்று தன்னை அறிமுகம்  கொண்ட அவரிடம் பேசியதில் அம்மா உணவகம் பற்றி மட்டுமல்ல, அங்கு வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கை பற்றியும் நிறையவே அறிய முடிந்தது. 

இனி அவர் பேசியதிலிருந்து :

"நாங்க எல்லாம் மகளிர் சுய உதவி குழுவில் இருந்தோம். இப்போ எங்களை மாதிரி மகளிர் சுய உதவி குழுவை சார்ந்தவங்களுக்கு தான் - இந்த வேலை முழுக்கவே குடுத்திருக்காங்க. இங்கே மட்டும் இருபதுக்கும் மேலே பெண்கள் வேலை செய்றாங்க. இட்லிக்கு மாவு ஆட்டுறது தொடங்கி, காய் நறுக்குவது, சாம்பார் செய்வது, கலந்த சாதம் தயாரிப்பது, காசு வாங்கிகிட்டு பில் தருவது, சாப்பாடு பரிமாறுவது, சாப்பிட்ட தட்டை எடுப்பது, அவற்றை கழுவவது என எல்லாருக்கும் வேலை சரியா இருக்கும்.


மகளிர் சுய உதவி குழுவில் யார் யார் எல்லாம் நல்ல படியா இயங்கி வந்தாங்களோ அவங்களுக்கு தான் இப்போ இந்த வேலை தந்திருக்காங்க. கலக்டர் கிட்டே நாங்க அப்ளை செய்து நேரடியா அவரே அனுமதி தந்தார். எனக்கு தெரிஞ்சு இது முழுக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தான் கிடைச்சிருக்கு. 

இங்கே வேலை செய்யும் பெண்கள் ஒவ்வொருத்தருக்கும் தினசரி 300 ரூபா சம்பளம். காலையில் 5 மணிக்கு வேலைக்கு வரணும். அப்போ தான் ஏழு மணிக்குள் இட்லி, சாம்பார் எல்லாம் தயார் செய்ய முடியும். ஏழு மணி முதல் 10 மணி வரை காலை டிபன் (இட்லி மட்டும்) அப்படின்னு போட்டிருக்கோம். ஆனா ஆறரைக்கே மக்கள் வந்துடுவாங்க. அதே போல மூடுற நேரம் பத்துன்னா கூட, பத்தரை வரை கியூ நின்னு சாப்பாடு வாங்குது. முடிஞ்சவரை எல்லாருக்கும் குடுத்துகிட்டு தான் இருக்கோம்.

இப்போதைக்கு ஏழு நாளும் நாங்க வேலை பாக்க வேண்டியிருக்கு. வாரத்தில் ஒரு நாள் மாத்தி மாத்தி லீவு கொடுங்கன்னு கேட்டுகிட்டு  இருக்கோம். அதே போல ஒவ்வொருத்தரும் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை - 11, 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கு. நான் இன்சார்ஜ் என்பதால், கிளம்ப சாயங்கலாம் அஞ்சு, அஞ்சரை ஆகிடும். வேலை நேரத்தையும்  8 அல்லது 9 மணி நேரமா மாத்தினா நல்லாருக்கும். இவ்ளோ நேரம் வேலை செய்றது கஷ்டமா தான் இருக்கு. ஆனா இப்ப தானே புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கும் எவ்ளவோ கஷ்டம் இருக்கும். அதனால நாங்க ரொம்ப அழுத்தி கேட்கலை. கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கோம்.

காலையில் இட்லிக்கு  - 27 கிலோ இட்லி அரிசி (ரேஷன் அரிசி தான்) ; 5 கிலோ பச்சரிசி, 10 கிலோ உளுந்து போட்டு மாவு அரைப்போம். சில நேரம் அதுவே பத்தாம  போயிடுது. குறிப்பா ஞாயித்து கிழமை கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கும். கிரிக்கெட் ஆடுற பசங்க, வாக்கிங் போறவங்க அப்படின்னு வழக்கமா வர்ற ஆட்களை தவிர புது ஆளுங்க அன்னிக்கு அதிகமா இருக்கும். அன்னிக்கு மாவு இன்னொரு 50 % அதிகம் அரைக்க வேண்டியிருக்கும். 

வார நாளில் காலையில் 2500 இட்லி போகுது (ஒரு இட்லி ஒரு ரூபாய் என்பதால் - வருமானம் 2500 ரூபாய்) மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் 3500 ரூபா போகுது (சாம்பார் சாதம் 5 ரூபா; தயிர் சாதம் 3 ரூபா) சாம்பார் சாதம் கொஞ்சம் அதிக சேல்ஸ் ஆகும்.

எங்களுக்கு கொடுக்கிற சம்பளம், வாங்குற பொருட்கள் இதெல்ல்லாம் சேர்த்து பார்த்தா அரசாங்கத்துக்கு நிச்சயம் இன்னும் அதிக செலவு தான் ஆகும். அவங்க மேலே காசு போட்டு தான் நடத்துறாங்க

20 பெண்களுக்கும் வேலை சரியா இருக்கு. இடத்தை எப்பவும் ரொம்ப க்ளீனா வச்சிக்கணும்னு சொல்லிருக்காங்க. உடனே உடனே கூட்டி பெருக்கி கழுவி வச்சிருப்போம். சாப்பாடு நேரத்தில் இங்கே வேலை பார்க்குற பெண்களுக்கு உட்கார நேரம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம் தான். 

இப்போதைக்கு காலை, மதியம் ரெண்டு வேலை தான் சாப்பாடு குடுக்குறோம்  ஏன் நைட்டுக்கும் தர கூடாதுன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. இதோ இந்த ரிஜிஸ்தரில் எழுதிட்டு போறாங்க.

அங்கிருக்கும் Feedback ரிஜிஸ்தரை காட்டுகிறார். படித்து பார்த்தால் ஒவ்வொரு நாளும் 50 பேராவது அதில் கருத்துகள் எழுதி விட்டு போவதை  காண முடிந்தது. பலரும் இந்த சிஸ்டத்தை வாழ்த்தி எழுத, ஒரு சிலர் "இரவு சாப்பாடு போடலாமே ; இட்லி இன்னும் சற்று பெரிய சைஸ் ஆக இருக்கலாம் " என்றெல்லாம் கருத்து சொல்ல தவற வில்லை. 

குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த பலரும் தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் மிக மகிழ்ச்சியுடன் இந்த உணவகத்தை வாழ்த்தி எழுதியிருப்பதை காண முடிந்தது. இங்கு வேலை செய்யும் பெண்கள் மிக விரைவாகவும், அன்புடனும் சிறிதும் கோபப்படாமல் உள்ளனர் என பலரும் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். அதை அவரிடம் காட்டியதும் மகிழ்வுடன் ஆமோதித்தார். 

உணவகத்திற்கு வருகிறவர்கள் செருப்பை வெளியே தான் விட்டு செல்ல வேண்டும். ஒரு சிலர் செருப்புடன் உள்ளே வர, திருமதி. முரளி எல்லோருக்கும் கேட்கிற மாதிரி சற்று சத்தமாக இப்படி பேசினார் :

" தயவு செஞ்சு செருப்பை வெளியே விட்டுட்டு வாங்க. இது நீங்க சாப்புடுற இடம். நீங்களே சுத்தமா வச்சிக்க வேணாமா? ப்ளீஸ் கோ ஆபரேட் பண்ணுங்க "

உள்ளே ஒரு சில ஆர்டர்கள் தந்து விட்டு மீண்டும் நம்முடன் வந்து பேச துவங்கினார். 

"சமையலுக்கு தேவையான இட்லி, உளுந்து, பருப்பு எல்லாம் முன்னாடியே வந்துடும். ஸ்டோர் ரூமில் பத்திரமா வச்சிக்கணும். வரும்போதும் எழுதணும். அங்கிருந்து ஏதாவது எடுத்தாலும் ரிஜிஸ்டரில் எழுதிட்டு தான் எடுக்கணும். எப்ப வேண்ணா வந்து செக்கிங்க்  பண்ணுவாங்க

இன்னைக்கு கூட எதிரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு கலக்டர் வர்றார். அவர் நேரடி கண்ட்ரோலில் நடக்குறதால இங்கே வந்து பார்ப்பார்னு நினைக்கிறோம். அவரு வர்றாருன்னு இல்லை எப்பவுமே இடம் சுத்தமா தான் இருக்கும். அதனால் எந்த பிரச்னையும் இல்லை. யார் வேணும்னா எப்ப வேண்ணா வந்து பார்க்கலாம்

இந்த இடம் ஆலந்தூர் முனிசிபல் ஆபிஸ் பக்கத்தில் இருப்பதால் அங்கே வேலை செய்றவங்க ரொம்ப உதவியா இருக்காங்க. ஏதாவது உணவு பொருள் தேவைன்னாலும் சரி, கேஸ் சிலிண்டர் காலி ஆனாலோ அல்லது இன்னொரு இட்லி பானை வேணும்னாலோ  உடனே வாங்கி கொடுத்துடுறாங்க

குடி தண்ணீருக்கு தனி வாட்டர் பியூரிபையர் போட்டிருக்கு. ஆலந்தூரில் வரும் பாலாற்று தண்ணியை சுத்தம் பண்ணி நல்ல தண்ணியா கொடுக்குறோம். அருமையான மினரல் வாட்டர்.

இங்கு எந்த விதமான மக்கள் அதிகம் வருகிறார்கள் என்று கேட்க, " ஏழைகளுக்குன்னு துவங்கியது தான். ஆனா எல்லா விதமான மக்களும் வர்றாங்க. ஆபிஸ் வேலைக்கு போறவங்க, செக்கியூரிட்டிங்க, கூர்க்கா, தினம் ஸ்கூல் போகும் சின்ன பசங்க, கட்டிட வேலை செய்றவங்க இப்படி எல்லாரும் வர்றாங்க".

இப்போதைக்கு எங்களுக்கு கஷ்டம்னு பார்த்தா மாவு அரைப்பது தான் பெரிய விஷயமா இருக்கு. அப்புறம் 10 -12 மணி நேரம் வேலை செய்றது ; ஏழு நாளும் வேலை செய்றது இது மட்டும் சரி பண்ணா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றார்.

"ஒரு நல்ல விஷயம் செஞ்சுகிட்டு இருக்கீங்க செய்றது அரசாங்கம் என்றாலும், எல்லாரும் உங்களை தான் மனசார வாழ்த்திட்டு போறாங்க. அது ரிஜிஸ்டரை பார்க்கும் போதே தெரிஞ்சுது. அவ்ளோ புண்ணியமும் உங்க புள்ளைகளுக்கு தான் சேரும்" என்று நான் சொல்ல முகம் மலர்ந்து புன்னகைத்து நமக்கு விடை கொடுத்தார் அந்த பெண்மணி !
*********
அதீதம் ஏப்ரல் 2013 இதழில் வெளியானது
*********
அம்மா உணவகம் அறிமுகம் - இங்கு
*********
அண்மை பதிவு:

தொல்லை காட்சி நீயா நானா -லொள்ளு சபா -தெய்வ மகள்

Monday, April 8, 2013

தொல்லை காட்சி- நீயா நானா - லொள்ளு சபா - தெய்வ மகள்

ஐ பி. எல் கார்னர் 

மும்பை Vs சென்னை மேட்ச் முழுதாய் பார்க்காவிடினும் அவ்வப்போது ஸ்கோர்ம்  இறுதியில் தோனி இன்னிங்க்ஸ்ம் பார்த்தேன்.

தோனி இவ்வளவு அற்புதமாக ஆடி பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது. பேப்பரில் கூட தோனி - வெறும் சிக்ஸ் ஆக அடித்து பயிற்சி எடுத்ததாகவும், ஸ்பின், வேக பந்து வீச்சாளர் என எப்படி வந்து போட்டாலும் ஆறுக்கு அனுப்பி Training எடுத்ததாகவும் சில நாள் முன்பு தான் படித்தேன். அதன் பலனை மேட்சில் காண முடிந்தது. போலார்ட்டின் அதி அற்புத கேட்ச் இல்லா விடில் சென்னை ஜெயித்திருக்கும் ஹூம் :(

சன் ரைசர்ஸ் வெறும் 126 ரன்களை defend செய்த மேட்சும் இரண்டாம் பகுதி அட்டகாசம். டேல் ஸ்டெயின் பந்தில் பல முறை குச்சிகள் கார்ட் வீலிங் ஆகின.

ஐ. பி. எல் லால் - தூக்கம் குறைகிறது. மறு நாள் drowsy -ஆக உள்ளது. முழு மேட்ச் பார்ப்பதை குறைக்கணும் !

நல்ல நிகழ்ச்சி- ஆங்கிலம் கற்று தரும் ஜெயா டிவி

ஜெயா டிவி யில் பல வருடங்களாக ராஜகோபால் என்கிற ஒருவர் எளிய முறையில் ஆங்கிலம் கற்று தருகிறார். காலை 7.40 முதல் 7.50 வரை ஜெயா டிவி யில் பேசுவார் இவர்.

வகுப்பறை போல போர்டு வைத்து கொண்டு எதிரில் மாணவர்கள் இருக்கிற மாதிரி பாவனையில் இவர் பேசுவதே செம காமெடியாக இருக்கும். மேலும் இவருக்கு செம ஹியூமர் சென்ஸ்.

ஆங்கிலத்தில் நாம் தப்பாய் உபயோகிக்கும் சில விஷயங்கள் இவர் நிகழ்ச்சி பார்த்து திருத்தி கொண்டதுண்டு.

ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும் என நினைக்கும் அலுவலக நண்பர்கள் சிலருக்கு சொல்லி, அவர்கள் இந்நிகழ்ச்சி பார்த்து விட்டு ரொம்ப யூஸ் புல்லாக இருக்கு என்று சொன்னதுண்டு.

முடிந்தால் பாருங்கள் !

சீரியல் பக்கம் - தெய்வ மகள்

என்னடா அழகு கார்னர் - இங்கு வந்திருக்கே என நினைக்கிறீர்களா?


விகடனின் புத்தகம் ஒன்றில், இந்த அழகு தேவதை அட்டை படம் பார்த்து சொக்கி போனேன். அப்புறம் உள்ளே என்ன சமாசாரம் என்று படித்தால் - வாணி போஜன் என்கிற அம்மணி விகடன் எடுத்து சன் டிவியில் வரும் தெய்வமகள் சீரியல் ஹீரோயினாம்.

ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு கலைசேவை ஆற்ற வந்துள்ளார் வாணி. சீரியலில் இவர் போடும் உடைகள் சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு இருப்பது அவர்கள் வெளியிட்டுள்ள படங்கள் பார்த்தாலே தெரிகிறது.


இதற்காகவெல்லாம் சீரியல் பார்க்கிற அளவு மனசில்லை..!

கோடம்பாக்கம் வாணிக்கு கூப்பிடு தூரம் தான் !

சன் டிவி யில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி 

ஞாயிறு மதியம் பொழுது போகாமல் சன் டிவி யில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி முழுவதும் பார்த்தோம் சானியா மிர்சா, சரோஜா தேவி, த்ரிஷா, ஹன்ஷிகா போன்றோருக்கு சாதனையாளர் விருது கிடைத்தது. (ஹன்சிகா நடிக்க வந்த சில வருடங்களில் என்ன சாதனை செய்தார் என்று தான் புரியலை)

தொகுத்து வழங்கியவர்களுள் ஒருவரான கார்த்திக் என்கிற புது காம்பியர் பெண்களை நிறையவே கிண்டலடித்து கொண்டிருந்தார் இருந்தும் அவ்வப்போது சிரிக்கவும் வைத்தார்

அனிருத் - தனது புதிய படமான எதிர் நீச்சலில் இருந்து பாடல் பாடியது அமர்க்களமாய் இருந்தது.

நிகழ்ச்சியில் மிக அசத்தியவர்கள் - ஒரு டான்ஸ் ஆடிய இரு குட்டி பசங்க... 5 வயது மதிக்க தக்க அந்த பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் போல் உடலை மடக்கி சுற்றி சுற்றி ஆடியது - பார்த்த அனைவரையும் அதிசயிக்க வைத்தது

நீயா நானா - பெண்ணுக்குள் ஆண் - ஆணுக்குள் பெண்

இந்த தலைப்பு ஒளிபரப்பாகும் முன்பே சற்று சர்ச்சையை கிளப்பியது. அதென்னெ பெண்ணுக்கு தனி குணம்; ஆணுக்கு தனி குணம் என்று.

ஆனால் " Men are from Mars; Women from Venus" - என்று ஒரு புத்தகமே வந்து சக்கை போடு போட்டது சில விஷயங்களில் ஆணும், பெண்ணும் இயல்பாகவே மாறுபடுகிறார்கள். எனக்கு பெண் குழந்தையும், மச்சான்க்கு ஆண் குழந்தையும் 2 நாள் வித்தியாசத்தில் பிறந்து இருவரும் அருகருகில் வளர்ந்த போது இதை தெளிவாக காண முடிந்தது.

நிற்க. வெட்கம், கோபம் உள்ளிட்ட உணர்சிகளின் பின்னணியில் ஆண்கள் அழுத கணம், தற்கொலைக்கு முயன்று மீண்டு வந்த இளைஞர் என நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே இருந்தது.

லொல்லு சபா மாரத்தான்

ஒவ்வொரு சனி மதியமும் விஜய் டிவி தங்களின் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சியின் சிறப்பான பகுதிகளை காண்பிக்கின்றனர். அப்படி இந்த வாரம் - லொல்லு சபா மாரத்தான் ! சந்தானம், ஜீவா, மனோகர் ஆகியோர் அடித்த லூட்டிகளை பார்த்து வயிறு வலி வந்து விட்டது.

மண் வாசனை, சின்ன தம்பி, சிந்து பைரவி, நான் அவன் இல்லை என எத்தனை படங்களை நாசம் செய்திருக்கிறார்கள். கூடவே டைரக்டர் உள்ளிட்ட தங்களையே எள்ளல் செய்யவும் தயங்குவதில்லை.

மீண்டும் லொல்லு சபா வந்தால் நன்றாயிருக்கும் என்கிற ஆதங்கத்தை இன்னோர் முறை பதிவு செய்கிறேன்.

மகாபாரதம்


சன் டிவி யில் ஞாயிறு காலை மகாபாரதம் வெளிவருகிறது. முன்பு ஹிந்தியில் கண்டிருந்தாலும் தமிழில் காண சுவாரஸ்யம் தான்.

நமக்கு தெரிந்த நடிகர், நடிகைகள், நிறையவே பொருட்செலவு, கம்பியூட்டர் கிராபிக்ஸ் என நிறைய ஆச்சரியங்கள் + மகிழ்ச்சிகள்

எங்கள் ஊரில் வருடா வருடம் மகாபாரதம் 15 நாள் சொற்பொழிவு நடக்கும். எங்கள் கடையில் அமர்ந்தவாறே தெளிவாய் கேட்கமுடியும். கோவிலுக்கு சென்று அமர்ந்து கேட்டதும் உண்டு. இருந்தும் அம்பை என்கிற பெண்ணின் கதை சென்ற வாரம் தான் புதிதாய் அறிய முடிந்தது. மகாபாரதத்திற்குள் தான் எத்தனை எத்தனை கிளை கதைகள் !

ராமாயணத்தை விடவும் மகாபாரதம் சுவாரஸ்யமானது என்பது என் தாழ்மையான எண்ணம் !
Related Posts Plugin for WordPress, Blogger...