Wednesday, February 29, 2012

வானவில் 78: விராத் கோலி -எஸ். ரா- சூப்பர் சிங்கர் ஜூனியர்

கிரிக்கெட் கார்னர்

நேத்து இந்தியா VS இலங்கை மேட்சில் இந்தியாவின் பேட்டிங் அசத்தல். குறிப்பா விராத் கோலி ! என்னா அடி ! Fantastic ! 40 ஓவருக்குள் 320 ரன் அடிப்பது மிக மிக சிரமம். இதை எவ்வளவு எளிதாக அடித்தார்கள் பாருங்கள் !

நிற்க. கொஞ்ச நாள் கழித்து இந்த மேட்ச் பிக்ஸ் ஆன ஒன்று என செய்தி வந்தால் ஆச்சரிய பட ஒன்றுமில்லை ! BCCI is so powerful !

ஏசியா கப் டீமில் கோலியை வைஸ் கேப்டன் ஆக்கிட்டாங்க. பொதுவா வைஸ் கேப்டனா இருக்கும் போது எல்லாரும் நல்லா ஆடுவாங்க ( உ-தா: அசார் கேப்டன்சியில் சச்சின், கங்குலி கேப்டன்சியில் டிராவிட்) ஆனா கேப்டன் ஆனா தான் ஆட்டம் சொதப்பிடும். கேப்டன் ஆகியும் நன்கு ஆடுவது தோனி தான். எனக்கு தெரிந்து இப்போது உள்ள நபர்களில் தோனியே சரியான கேப்டன் என தோன்றுகிறது.

சினிமாபாடல்கள் பற்றி விகடனில் ராஜு முருகன் 

சினிமா பாடல்களை ரசிக்காதோர் யார் உள்ளார் சொல்லுங்கள்? இத்தகைய சினிமா பாடல்கள் பற்றியும் சிறு வயதில் அந்த பாடல்களை தங்கள் வாழ்வோடு சேர்த்து நேசித்த சிலர் குறித்தும் ராஜூ முருகன் விகடனில் ஒரு பகுதி எழுதியிருக்கார் பாருங்கள்... அசத்தல் ! வட்டியும் முதலும் தொடரின் -29ஆவது அத்தியாயத்தில் இந்த பகுதி எழுதி உள்ளார். (விகடன் பிப்ரவரி 29 தேதி இட்ட இதழ்). வாசித்து பாருங்கள் ! ஹும் பதிவு எழுதும் நாமெல்லாம்  எழுத்தாளர் என சொல்லி கொள்ளவோ,  நினைக்கவோ கூடாது ! சுகா போல, ராஜூ முருகன் போல எழுதுவோர் மட்டும் தான் அப்படி சொல்லி கொள்ளலாம் ! என்னா மாதிரி எழுத்து !

சம்பவம் : ஆம்புலன்ஸ் முன் ஓடிய ஆள்

மாலை நேரம். வேளச்சேரி சிக்னலில் வண்டியில் காத்திருக்கிறேன். ஒரு ஆம்புலன்ஸ் சிக்னலை கடக்கிறது. அப்போது அதற்கு குறுக்கே புகுந்து பஸ் நிறுத்தத்துக்கு ஓடினார் ஒருவர் ! "சிவப்பு விளக்கையும் மதிக்காமல், ஆம்புலன்சையும் மதிக்காமல் ஓடுறியே ! உன் மேலே அந்த ஆம்புலஸ் மோதினா, நீயும் உள்ளே ஏறி போக வேண்டியிருக்கும் தம்பி"

சரி சரி ! நம்மளை மாதிரி ஹவுஸ் பாசுக்கு பயந்த ஆள் போல இருக்கு; அதான் அவசரமா வீட்டுக்கு ஓடுறாரு :))

அம்மாவுக்கு 64- அடி கட் அவுட்

இதுவும் வேளச்சேரி குறித்த செய்தி தான். சென்ற வருடம் "ஜெ" அவர்கள் பிறந்த நாளுக்கு (அப்போ அவர் முதல்வர் இல்லை ) 63 அடியில் கட் அவுட் வைத்திருக்கார் வேளச்சேரி பகுதி மூர்த்தி. வைத்த சில நிமிடங்களில் அது முறிந்து விழுந்து விட்டது. இரவென்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இரவோடு இரவாக கட் அவுட் அப்புற படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வருடமும் 64- அடி கட் அவுட் வைத்தார் மூர்த்தி. இம்முறை தேவையான பேஸ்மன்ட் தந்து உறுதியாக செய்து விட்டார். என்ன செலவு தான் கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சு. வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கடைகளில் வசூல் ஆளுக்கு 20,000 என்று நம்ப தகுந்த வட்டாரம் மூலம் தகவல் வந்தது.

எஸ். ராவும் நண்பன் தேவ குமாரும்

எஸ். ராவை நண்பன் தேவ குமாரும், நானும் சந்தித்ததை ஏற்கனவே பகிர்ந்திருந்தேன். எஸ். ரா இம்முறை டில்லி சென்றபோது தேவா அவருடன் நீண்ட நேரம் செலவிட்டுள்ளான். மேலும் எஸ். ரா ஒரு நாள் இரவு உணவுக்கு தேவா வீட்டுக்கும் வந்திருந்தாராம் ! இது பற்றி தேவா வீடுதிரும்பலில் ஒரு பதிவு எழுதுவார் என எதிர்பார்க்கிறேன் !

அம்மா

அம்மா டிஸ்சார்ஜ் ஆகி அண்ணன் வீடு வந்து விட்டார். உடல்நிலை சற்று தேவலாம். பிரார்த்தனை என்பது எத்தனை வலிமையானது என்று மீண்டும் ஒரு முறை உணர்கிறேன். பதிவில் அம்மா உடல்நிலை பற்றி எழுதி விட்டு என்னுடன் போனில் பேசிய அனைத்து பதிவர்களும் " அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது. கவலை படாதீர்கள். நாங்கள் வேண்டி கொள்கிறோம்" என்றனர். என்னுடைய ஆறுதலுக்கு தான் சொல்கிறார்களே தவிர அம்மா பிழைப்பது மிக கடினம் என நினைத்தேன்.  அமைதி அப்பா போனில் சொன்னது போல் " பிழைக்கவே பிழைக்காது என சொல்வோர் பிழைப்பதும் நடக்கும். சாதாரண  கேஸ் இறப்பதும் நடக்கும்" ! அம்மா நலனுக்காக பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !

சூப்பர் சிங்கர் ஜூனியர் கார்னர்

சென்ற வாரம் " காதலில் சொதப்புவது எப்படி" டீம் சூப்பர் சிங்கர் ஜூனியரில் வந்தார்கள். அமலா பால், நிகழ்ச்சியை தொகுக்கும் மா. கா. பா ஆனந்தை கட்டி பிடிக்க, "இது எனக்கு பொறாமை ஆக இருக்கு" என்றான் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன். "உனக்கு கஷ்டமா இருக்கா?" என்று கேட்ட அமலா பால், அவனை கட்டி பிடித்ததுடன் கிஸ்சும் செய்ய, அந்த 12 வயது பையன், மயங்கி விழுகிற எபக்ட் தந்தான். மத்த பசங்களும் அமலா பால் முத்தத்துக்கு ஏங்குற மாதிரி காட்டினாங்க. சிறுவன் என்று அன்போடு கொடுக்கும் முத்தம் வேறு. இரண்டாங் கேட்டான் வயதான 12 வயது பையனுக்கு முத்தம் தந்து, அவன் கிறக்கத்தில் மயங்கி விழுகிற மாதிரி காட்டி சின்ன பசங்களை விஜய் டிவி கெடுக்கணுமா?

ஏங்க.. நான் சரியா தான் பேசுறேனா??

Tuesday, February 28, 2012

4 பதிவர்களுக்கு விருது + பிடித்த 7 விஷயங்கள்

பதிவர் கோவை2தில்லி அவர்கள் "Versatile Blogger" விருதை அளித்துள்ளார். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் மேடம் ! இவ்விருது பெறுபவர்கள் தங்களுக்கு பிடித்த ஏழு விஷயங்களை குறிப்பிடுவதோடு, ,மேலும் ஐந்து பேருக்கு விருதை பகிர வேண்டும் என்பது இத்தொடர் பதிவை துவக்கியவர் (" யாருப்பா அது?") நிர்ணயித்த விதி.

முதலில் பிடித்த ஏழு விஷயங்களை பார்ப்போமா?

1 . சிறு குழந்தைகளுடன் விளையாடுதல், அவர்களுடன் நேரம் செலவழித்தல்

நண்பர்களின் குழந்தைகள்.. போட்டோவில் ஒவ்வொருவரும் செய்யும் லூட்டியை பாருங்கள் ! 

எங்கள் வீட்டில் கடைசி குழந்தையாக பிறந்ததால், சிறு வயதில் நிறைய கொஞ்சியும், சற்று வளர்ந்த பின், அனைவரிடமும் ஏகமாய் அடியும் வாங்கி வளர்ந்தவன். ஆனால் நான் அன்பு காட்டவும், அடிக்கவும் (!!) ஒரு தம்பி அல்லது தங்கை இல்லாத ஏக்கம் சின்ன வயதில் நிறைய உண்டு. இதனால் சிறு குழந்தைகளை பார்ப்பது, பேசுவது அப்போதிருந்தே துவங்கியது.

வளர்ந்த பின், வாழ்வின் சுமைகள் பல சேர சேர, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிக சிறந்த Stress relief-ஆக உள்ளது. அக்கம் பக்கத்திலும், நண்பர் இல்லம் சென்றாலும், பயணங்கள், சூப்பர் மார்கெட் என எங்கு போனாலும் குழந்தைகளை பார்த்தால் மிக ரசிப்பேன்.

ஏதேனும் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, அருகில் யார் கையிலாவது இருக்கும் சிறு குழந்தையின் கால் நம் மீது படும். குழந்தையை வைத்திருப்பவர் நம்மிடம் "சாரி" கேட்பார்கள். " பரவாயில்லைங்க" என வாய் சொன்னாலும், மறைந்த நண்பன் லட்சுமணனின் கவிதையை மனம் சொல்லும்

பேருந்து பயணத்தில்
முன் பின் தெரியாத
யாரோ ஒருவரின்
தோளில் இருக்கும்
குழந்தையின் கால்கள்
என் மீது படும் படி
ஆசீர்வதிக்க படுவேனாக !

2. கிரிக்கெட்

என் வாழ்க்கை பாதையை மாற்றி போட்டதில் கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்குண்டு. + 2 படிக்கும் போது கிரிக்கெட் பார்த்தே சீரழிந்தேன். இஞ்சினியர் ஆகாமல் போனதுக்கு கிரிக்கெட் வெறி ஒரு காரணம். ஆயினும் " ஆள் இஸ் வெல்". எனக்கு பிடித்த துறைக்கு தான் பிற்பாடு வந்தேன்.

கிரிக்கெட்டுக்காக டிவி முன் மிக அதிக நேரம் செலவிடுவது இப்போது இல்லை. ஆயினும் எந்த மேட்சையும் தொடர்ந்து பாலோ செய்யும் வழக்கும் உண்டு. நான் வேலை செய்யும் நிறுவனம் முழுதுமே ( CEO முதல்) கிரிக்கெட் பிரியர்கள் தான். கிரிக்கெட் பற்றி அலுவலகத்தில் பேசுவது மிக சாதாரணமான ஒன்று. இந்தியா நன்கு ஆடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. (அது அரிதாக தான் நடக்கிறது)

3. பாடல்கள்
பாட்டு கேட்டு கொண்டே வேலை செய்வது பழக்கமாகி விட்டது. இதனை எழுதும் போது கூட கணினியில் " பிறை தேடும் இரவிலே" ஒலித்து கொண்டிருக்கிறது. கல்லூரியில் படிக்கிற காலம் முதல் பாட்டு கேட்டு கொண்டே தான் படிப்பேன். ( கல்லூரியில் தொடர்ந்து முதல் ரேங்க் !) அலுவலகமோ/ வீடோ, கணினியில் இருக்கும் போது அல்லது வீட்டு வேலை செய்யும் போது மெலிதாய் பாட்டு ஒலிக்கும். மிக நீண்ட காலம் இளைய ராஜா ரசிகன். இப்போது A.R ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இருவரையும் கூட மிக பிடிக்கிறது . எந்த பாடல் யார் பாடியது, யார் எழுதியது என சந்தேகம் அல்லது சண்டை வந்தால், நண்பர்கள் எனக்கு தொலை பேசுவது முன்பெல்லாம் வழக்கம். இணையத்திலேயே அந்த பதில்கள் கிடைத்து விடும் என்றாலும் " வா பொன்மயிலே ' பாட்டு என்ன படம்டா?" என்கிற கேள்வியுடன் போன் செய்யும் நண்பர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

4. ப்ளாக்
இதை சொல்லாம இருக்க முடியாது. புது பெண்டாட்டி மோகம் மாதிரி இருக்கு. எப்போ சரியாகும்னு தெரியலை. கூடிய சீக்கிரம் சரியாகி, இந்த லிஸ்டை விட்டு போனாலும் ஆச்சரிய பட முடியாது !

5. பயணம்

குற்றாலத்தில் நண்பர்களுடன்
வெவ்வேறு ஊர்களுக்கு செல்வது மிக பிடித்தமான விஷயம். ப்ளாக் எழுதும் முன்பே இது உண்டு எனினும், பயண அனுபவங்களை இங்கே பகிர்வது மேலும் சுவாரஸ்யம் தருகிறது. ப்ளாகில் எழுவதால் ஒவ்வொரு விஷயமும் என்ன என்று ஆர்வமாய் விசாரிக்கிறேன். இப்போதெல்லாம் பயண கட்டுரை என்னுடன் சேர்ந்து ஹவுஸ் பாசும் எழுதுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். காஞ்சிபுரம் கட்டுரையில் நிறைய குறித்து வைத்து கொண்டு சொன்னது அவர் தான் !

தென் இந்தியா தான் நிறைய சுத்திருக்கேன். இந்தியாவிலேயே சுத்த வேண்டிய ஊர் நிறைய இருக்கு. சுத்துவேன் !

6. நண்பர்கள்

எல்லாருக்கும் தான் நண்பர்கள் பிடிக்கும் இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ?

ஏற்காட்டில் 2008- சந்திப்பில் வழக்கறிஞர் நண்பர்கள்
 எனக்கு உடன் பிறந்தோர் அவர்கள் குழந்தைகள் தவிர மற்ற சொந்த காரர்கள் என்றால் அலர்ஜி. இதனை ஈடுகட்டும் விதமாய் சிறு வயது முதல் நண்பர்களே இருந்து வருகிறார்கள். என் மனைவி அடிக்கடி சொல்லுவார்: " உங்களுக்கு -Friends மட்டும் இருந்தா போதும். சொந்த காரங்களே வேண்டாம்; நம்ம வீட்டு விசேஷதுக்காவது அவங்க வர வேண்டாமா ? "

இந்த விஷயத்தில் மேடம் என்ன தான் சொன்னாலும் " என் பிரண்டை போல யாரு மச்சான்" என்பதே நம்ம பாலிசி ஆக உள்ளது.

7. நல்ல செயல்கள்

அடையார் விழி இழந்தோர் பள்ளியில் விழா
அன்ன தானம், ஏழை குழந்தைகள் படிப்பிற்கு பரிசுகள்,  அவர்கள் Career குறித்து முடிவெடுக்கவும் உதவுவது, அரசு பள்ளிக்கு உதவி, விழி இழந்தோர் பள்ளியில் வருடாந்திர போட்டிகள் என நல்ல செயல்களில் ஈடுபடுவது தான் என்னை நானே மதிக்க உதவுகிறது. (எங்கள் நற் செயல்கள் குறித்து அறிய அந்தந்த வார்த்தைகளை க்ளிக் செய்தால், அந்தந்த பதிவுக்கு இட்டு செல்லும்!) இத்தகைய செயல்களில் கிடைக்கும் மகிழ்ச்சியும் , திருப்தியும் "நாம் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது" என்கிற உணர்வை தருகிறது.

*********
Versatile Blogger விருதை யாருக்கு பகிர்ந்தளிக்கலாம்? ஏற்கனவே நான் ரொம்ப லேட். பலருக்கும் இவ்விருது கிடைத்து விட்டது என்றே நினைக்கிறேன்.

நன்றாக பதிவுகள் எழுதும், எப்போதும் என்னை ஆதரிக்கும் அமைதி அப்பா, ரகு, வெங்கட் நாகராஜ், ராம லட்சுமி, ஹுசைனம்மா, வித்யா, ராம்வி, ஆதி மனிதன், ரிஷபன், ரத்னவேல் நடராஜன் போன்றோருக்கு இவ்விருது பெற அனைத்து தகுதி இருந்தும் இம்முறை அவர்களுக்கு தர வில்லை. வேண்டியவர் என்பதால் விருது தந்ததாய் யாரும் சொல்ல கூடாது பாருங்கள் ! இதுவரை ஒரு முறையும் நான் சந்தித்திராத, போனிலோ, மெயிலிலோ பேசியிராத பதிவர்களுக்கு தான் இம்முறை தர நினைத்தேன். நண்பர்கள் தவறாய் எண்ண வேண்டாம் !

வீடுதிரும்பல் மூலம் Versatile Blogger விருது பெறுவோர்:

                           

1. கோகுல் 

ஜனரஞ்சகமாக எழுதுபவர். நமக்கு வானவில் போல இவருக்கு
பல சரக்கு கடை. "தானே" புயல் நேரத்தில் கடலூர் மக்களுக்கு உதவும் முயற்சிகள் எடுத்தது இவர் சமூக அக்கறையை காட்டியது .

2. கெக்கே பிக்குணி 

"கெக்கே பிக்கே என பேசுவேன் நான் " என பெயர் காரணம் சொல்லும் இவர் ஒரு பெண் பதிவர். 2006 முதல் எழுதி வந்தாலும் வருடத்துக்கு பத்து, பன்னிரண்டு பதிவுகள் தான் எழுதுகிறார். தன் தந்தை குறித்த இவரது பதிவு நெகிழ வைக்கிறது !

3. கோவை நேரம் 

மருதமலை, தஞ்சை, அண்ணா நகர் டவர் என அவ்வப்போது சுவாரஸ்ய இடங்கள் குறித்து பகிர்கிறார். சமீபமாய் பின்னூட்டங்களில் தென்பட்டாலும் தற்போது பதிவுகள் அதிகம் எழுத வில்லை. இவ்விருது அவரை தொடர்ந்து எழுத ஊக்கவிக்கும் என நம்புகிறேன்.

4. நித்திலம் - சிப்பிக்குள் முத்து  

ஆன்மிகம், வரலாறு என பல்வேறு தளங்களில் இயங்கும் பெண்மணி. வல்லமை மின்னிதழின் எடிட்டர்களில் ஒருவர். சமீபத்தில் இவர் எழுதிய சித்தார்த்தா பள்ளி மாணவர்கள் குறித்த கட்டுரை வாசித்து பாருங்கள்.

****
நண்பர்களே நீங்களும் இவர்களை வாழ்த்தலாம். விருது பெற்றோர் பிற பதிவர்களுக்கும் விருதை பகிர்ந்து கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Monday, February 27, 2012

பவர்ஸ்டார் கலக்கிய "அது இது எது" - வீடியோ





விஜய் டிவி நடத்தும் "அது இது எது" நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் மற்றும் சாம் ஆண்டர்சன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். நிகழ்ச்சியை டிவியில் காணாத நண்பர்கள் இதனை பார்த்து சிரித்து மகிழலாம்.

எச்சரிக்கை: ஆபிசில் இந்த பதிவை/ வீடியோவை பார்க்காதீர்கள். சிரித்து சிரித்து மாட்டி கொள்வீர்கள். வீட்டில் நிதானமாய் ரசித்து மகிழவே இந்த வீடியோக்கள்.

முழு வீடியோவும் பார்க்க முடியாதவர்கள் முதலில் உள்ள நாற்பது நொடிகளே வரும் வீடியோ பார்த்து விட்டு எஸ் ஆகுங்கள். நிகழ்ச்சி முடிவில் இது வந்தாலும், வீடியோ முழுக்க பார்க்க முடியாதவர்கள் பவர் ஸ்டார் மற்றும் சாம் ஆண்டர்சனின் டான்சை தவற விட கூடாது என்பதால் முதலில் தருகிறேன் :

பவர் ஸ்டார் டான்ஸ்




உங்க மனசுக்கு எப்ப கஷ்டம் வந்தாலும் நம்ம ப்ளாகுக்கு வந்து இந்த டான்சை பாருங்க. உங்க கவலை எல்லாம் சில நிமிடம் மறந்து வாய் விட்டு சிரிப்பீர்கள்!
********

அது இது எது முதல் பகுதி

ஹீரோக்கள் Introduction- இதில் தான் நடக்குது. பவர் ஸ்டாரை பாருங்கப்பா. குழந்தை மாதிரி என்னமா சிரிக்கிறார் !




*******
"க்ரூப்பில டூப்"  என்கிற  ரவுண்டில் பவர் ஸ்டார் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு " நான் தனியா அரசியல் கட்சி ஆரம்பிக்கலாமா?" என ஜோசியம் கேக்குறார் பாருங்க ! சான்சே இல்லை !

Power Star Part II

 


**********
இந்த வீடியோவில் ஹீரோ மிமிக்ரி செய்யும் ரோபோ ஷங்கர் தான். பிச்சு எடுத்துடறார் மனுஷன் !

Power Star Part III



********
இந்த ரவுண்ட் ரொம்ப சாதாரணமானது தான். அதிகம் சிரிப்பு வரலை. வேண்டுமானால் நீங்கள் ஸ்கிப் செய்து விடலாம்.

Power Star Part IV




*********
இப்பதிவு நண்பர்கள் பலர் சிரிக்கட்டும் என்கிற எண்ணத்தில் இங்கு பகிரப்பட்டது !

சுஜாதா நினைவு நாள் : சுஜாதா கையெழுத்தில் வந்த கடிதம்

பிப்ரவரி -27- இன்று - எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு நாள். அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ப்ளாகில் பகிர்ந்திருந்தேன். மீண்டும் ஒரு முறை அந்த வரிகளை இன்று பகிர்கிறேன்.


சென்ற முறை செய்யாத ஒன்று இம்முறை செய்கிறேன். சுஜாதா கைப்பட எனக்கெழுதிய அந்த கடிதத்தை இம்முறை உங்கள் பார்வைக்கு தருகிறேன். சுஜாதா தீவிர ரசிகர்கள் இதனை மிக ரசிப்பார்கள் என நம்புகிறேன்.


*************
நான் சட்ட கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது கல்கியில் மத்யமர் என்ற சிறுகதை வரிசை வந்து கொண்டிருந்தது. அதில் பல controversy ஆன கதைகள்.. இவை பற்றி பிரசுரமாகும் விமர்சனங்களுக்கு சுஜாதா கையெழுத்திட்ட மத்யமர் புத்தகம் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தனர். சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் வாங்கவே விமர்சனம் எழுதினேன். பிரசுரமும் ஆனது. புத்தகம் வந்த பின், சுஜாதாவிற்கு நன்றி சொல்லி இரு பக்க கடிதம் எழுதினேன். 

சுஜாதா பதில் எழுத மாட்டார் என்பது பொதுவாய் அனைவரும் அறிந்தது. ஆனால் நம்ப முடியாமல் சில நாளில் பதில் வந்தது. 

அன்புள்ள மோகன் குமார்,

உங்கள் கடிதம்; வாசகர்களுக்கு நான் பெரும்பாலும் பதில்
 கடிதம் எழுதுவதில்லை; ஆனால் அதற்கான பல காரணங்களை ஒத்திப் போட்டுவிட்டு, உங்களுக்கு பதில் எழுத தூண்டியது உங்கள் கடிதத்தில் விரவியிருந்த ஸ்நேகம். நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயரானதும் எனக்கு மீண்டும் எழுதுங்கள் 

அன்புடன் 

சுஜாதா 

*******************
இந்த கடிதத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன்!! சில வரிகளில் பல விஷயம் உணர்த்தினார் வழக்கம் போல்..



முதல் வரியை கவனித்தீர்களா? " உங்கள் கடிதம்" அவ்வளவு தான் "கிடைத்தது" இல்லை!! வார்த்தை சிக்கனம்!!

அடுத்த வரியில் யாருக்கும் எழுதாத நான் உனக்கு எழுதுறேன் என என்னை மகிழ வைத்து விட்டார்!!

கடைசி வரி தான் மிக முக்கியம்.. "நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயர் ஆனதும் .." இப்போ படிப்பது தான் உன் வேலை என எவ்வளவு அழகாய் சொல்லிட்டார்! இது என ஆதர்சம் மூலம் வந்ததால், நான் சீரியாசாகவே எடுத்து கொண்டேன்!

ஆனால் சுஜாதா சொன்னது போல் நான் லாயர் ஆகலை.. படிக்கும் போதிலிருந்தே கம்பனிகளில் லீகல் அட்வைசர் ஆக செல்லும் எண்ணம் தான்.பின் கூடவே Company Secretary course-ம் படித்து விட்டு வேலைக்கு வந்தேன். துவக்கத்தில் இருந்த கம்பெனியிலேயே சுஜாதா ஒரு Director!!

Company Secretary-தான் Board Meeting-கள் நடத்த வேண்டும். இதற்கான நோட்டீஸ் அனுப்புவது, மீட்டிங்குகளில் எடுக்கப்படும் முடிவுகளை (Minutes) பதிவு செய்வது இவை Company Secretary வேலையில் அடங்கும். எனவே சுஜாதாவை Board Meeting-கில் அருகிலிருந்து பார்க்க போகிறேன் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் நான் வேலை பார்த்த கம்பனிகளில், இந்த ஒரு கம்பனியில் மட்டும் தான் Company Secretary-ஐ வெளியே வைத்து விட்டு Board meeting நடத்துவார்கள்!! நான் இல்லாத மீட்டிங்கில் என்ன நடந்தது என நான் வெளியே இருந்து Minutes எழுத வேண்டும்!!

இந்த காலங்களில் அவருடன் Board meeting குறித்து போனில் பேசியிருக்கிறேன். அவர் எங்கள் கம்பெனி வந்து, நேரே மீட்டிங் ரூம் செல்வதை பார்த்துள்ளேன். அவ்வளவு தான்.

இதே காலத்தில் நண்பன் லக்ஷ்மணன் இறந்த பின் அவனது கவிதைகளை தொகுத்து புத்தகமாக போடும் முயற்சியில் நண்பர்கள் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்தோம். நான் புத்தகதிற்கான முன்னுரை, அட்டை படம் போன்றவை பிரபல எழுத்தாளர்/ ஓவியர்களிடம் வாங்கும் வேலையில் இருந்தேன்.

முன்னுரைக்கு கல்யாண்ஜியை அணுகி இருந்தோம். அவரும் எழுதி தந்திருந்தார். இந்நிலையில் சுஜாதா இருக்கும் அதே flat-ல் இருந்த வெங்கடேஷ் என்ற எனது Colleague, அவரிடம் நாங்கள் நண்பன் இறந்த பிறகு அவனது கவிதைகளை தொகுத்து வெளியிடுவது பற்றி கூறியிருக்கிறார். சுஜாதா மிக ஆர்வமாகி "அந்த கவிதைகளை வாங்கி வாருங்கள்; படிக்கணும்" என கூறியிருக்கிறார். வெங்கடேஷ் மூலம் லக்ஷ்மணன் கவிதைகள் சுஜாதாவை அடைந்தன. சுஜாதா சும்மா படிக்க தான் கேட்கிறார் என நினைத்திருக்க, அவரோ அற்புதமாக இரு பக்கம் கவிதைகள் பற்றி எழுதி அனுப்பி விட்டார். ஒரு பக்கம் அதை படித்து மகிழ்ச்சி. மறு பக்கம் கல்யாண்ஜியிடம் வேறு வாங்கி உள்ளோமே என குழப்பம். கல்யாண்ஜி தந்ததை முன்னுரையாக போட்டு விட்டு சுஜாதா தந்ததை கடைசியில் வெளியிட்டோம்.

புத்தகத்தை நேரில் தந்து நன்றி சொல்ல சுஜாதா இல்லம் சென்றேன். சுஜாதாவை நேரில் சந்தித்து பேசியது ஒரே முறை அது தான். புத்தகம் வாங்கி கொண்டு, " இந்த வார குங்குமத்தில் லக்ஷ்மணன் கவிதைகள் பத்தி எழுதிருக்கேன்; படிங்க" என்றார். " சரி" என்றேன். சட்ட கல்லூரியில் படிக்கும் போது அவரிடிமிருந்து வந்த கடிதம், அவர் மீதான எனது பிரேமை எதுவும் சொல்ல தோன்ற வில்லை. இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது . என்றாலும் எதுவும் எதிர் பார்க்காமல் அவர் தந்த முன்னுரைக்கு நேரில் நன்றி சொல்வதே மரியாதை என்பதால் சென்றிருந்தேன்

எங்களுக்குள் பேசி கொள்ள ஏதுமில்லாதது போல் இருந்தது அந்த சில நிமிடங்கள்...உடன் கிளம்பி வந்து விட்டேன்.

சுஜாதா இறந்த போது இரு நாட்கள் திரும்ப திரும்ப மனதில் பல நினைவுகள். அவர் இல்லம் மாறி விட்டதா என தெரிய வில்லை. அவர் இறந்த நிலையில் அவரை சென்று பார்க்க மனம் விரும்ப வில்லை.
அந்த பிம்பம் என் மனதில் பதிய மனம் ஒப்பு கொள்ள வில்லை. சுஜாதா,  சுஜாதாவாகவே என்னுள் இருக்கட்டும் !   

**********
ப்ளாகில் எத்தனையோ புத்தக விமர்சனங்கள் எழுதுகிறேன். புத்தக விமர்சனம் என்றாலே ஹிட்ஸ் மிக குறைவு தான். ஆனால் சுஜாதா எப்போதோ எழுதிய நாவல்கள் குறித்து, புத்தக விமர்சனம் சமீப காலமாக எழுதுகிறேனே .. அதற்கு புது சினிமா விமர்சனத்துக்கு வாசிக்கிற மாதிரி ஏராளமான மக்கள் வாசிக்கிறார்கள் !

சுஜாதா குறித்த இப்பதிவும் மிக அதிகம் பேரால் வாசிக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை. பதிவின் உள்ளே வருவோர், வாசிப்போர் அனைவரும் சுஜாதா என்கிற மந்திர சொல்லுக்காக தான் வருகிறார்கள் !
**********
எத்தனையோ பேருக்கு ரோல் மாடலாக இருந்தவர் சுஜாதா !.. எனக்கு தெரிந்து இவருக்கு இருந்த அளவு ரசிகர்கள், வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும்  இதுவரை இருந்ததில்லை. இனி இருக்க போவதும் இல்லை  .

தமிழின் மீது எத்தனையோ பேருக்கு ஆர்வம் வர காரணமாக இருந்தது சுஜாதாவின் எழுத்துக்கள்!

தமிழ் இலக்கிய உலகம் என்றென்றும் சுஜாதாவை நினைவு கொள்ளும் !

Sunday, February 26, 2012

காதலில் சொதப்புவது எப்படி- விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி- டிரைய்லரிலேயே நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கல்லூரி + யூத் காதல் சப்ஜக்ட் - இன்றைக்கு தியேட்டருக்கு அதிகமாய் வரும் இளைஞர் கூட்டத்தை டார்கெட் செய்து எடுக்கப்பட்டது.

கதை: காதலர்களுக்கு இடையே இருக்கும் ஈகோ- சண்டை, பிரிவு, பின் இணைதல் இது தான் கதை. கூடவே நண்பர்களின் காதல் மட்டுமல்லாது அவர்கள் பெற்றோர் காதல் வரை அலசி ஒரு காதல் என்சைகிலோ பீடியா ஆக்க முயற்சித்துள்ளனர்.

படத்தில் ரசித்த விஷயங்கள் :

பத்து வருடத்துக்கு முன் கல்லூரி மாணவனாக பாய்ஸில் நடிக்க ஆரம்பித்த சித்தார்த் இன்னும் கல்லூரி மாணவனுக்கு துளி நெருடல் இன்றி பொருந்துகிறார். இந்த பாத்திரம் அவருக்கு டெய்லர் மேட்.


காதலியுடனான சண்டை பற்றி "உன்கிட்டே மட்டும் தான் சொல்றேன்; வேற யார்கிட்டே சொல்ல முடியும்" என சொல்லியவாறே எல்லா நண்பர்களிட மும், எல்லா இடங்களிலும் புலம்பும் ஹீரோ (இது எங்கேயும் நடக்கும் சமாச்சாரம் தான் !)

" பொம்பளைங்க பார்வை, சுவத்தில மாட்டின அழகான பெயிண்டிங் மாதிரி; யார் பார்த்தாலும், அது தன்னையே பாக்குற மாதிரி இருக்கும்" - டயலாக்

பஸ்ஸில் நடக்கும் ராகிங். "மேலே பல்பு மாட்ட தெரியுமா?" " தெரியும்" "மேலே பல்பு மாட்டிக்கிட்டே கீழே சைக்கிளுக்கு காத்தடி" (இதை செய்யும் ஒரு நபர் அழகா செய்றார்..இயக்குனரின் ராகிங் அனுபவம் தெரியுது )

ஹீரோவின் நண்பனுக்கு சிறு வயது பிளாஸ்பாக் என காட்டுகிறார்கள். டிராமாவில் ஒரு பெண் அவனுடன் ஜோடியா நடிக்க மாட்டேன்னு சொல்லி விட்டு ஓடியதாக காட்ட,  கடந்த கால எபிசோடில், நிகழ் காலத்திலிருந்து போய் சித்தார்த் பேசுவதாக காட்டுவது கியூட் ஐடியா.


அமலா பாலின் ஹேர் ஸ்டைல் ரொம்ப வித்யாசமா இருந்தது. தலையை முழுக்க பின்னிட்டு நாலைந்து முடி எப்போதும் முன்னே எடுத்து விட்டிருப்பது அந்த கேரக்டருக்கு எதோ ஒரு விதத்தில் தனி தன்மை கொடுத்துடுது

ஒரு பெண் " பாய் பிரண்ட மாத்திட்டேன்" என சாதாரணமாக சொல்ல, உடனே வரும் டயலாக் : " என்னடி Puppy-ய மாத்திட்டேன்கிற மாதிரி இவ்ளோ அசால்ட்டா சொல்ற ?"

அமலா பாலின் அம்மா -அப்பா சண்டை + சேர்தல் வெரி இன்டரஸ்டிங். அதிலும் சுரேஷ் தன் மகள் மூலமே, மனைவிக்கு லவ் லெட்டர் அனுப்புவது அழகு.

பெண்கள் அழுகை உலக பிரசித்தி பெற்றது. அதனை பெண்களே ரசிக்கும் படி என்னமா காட்டியிருக்கிறார் இயக்குனர் ! புல் க்ளோஸ் அப்பில் அமலா பால் முகம் சாதரணமாக காட்டி விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவர் அழ ஆரம்பிப்பதையும், அருவி கொட்டுவதையும் மாறி மாறி காட்டுகிறார். பின்னணியில் சித்தார்த் வாய்ஸ் " டேம் உடைச்சிகிச்சு" என்று சொல்லும் போது சிரித்து மாளலை.

காதலிக்கும் பெண் " அண்ணா" என கூப்பிடும் காட்சி. இதனை சுவாரஸ்யமா காட்சி படுத்திருக்காங்க. கல்லூரிகளில் இது மாதிரி நிறையவே நடக்கும். " அண்ணா" வில் ஆரம்பித்து பின் காதலிக்க ஆரம்பிப்பதை என் கல்லூரி நாள் முதல் இன்று வரை பார்த்து வருகிறேன் (இதனாலேயே பெண்கள்  " அண்ணா" எனும்போது அலர்ஜியா இருக்கும். நண்பனா இருந்து காதலுக்கு போவது நார்மல்; அண்ணாவிலிருந்து காதலன் ஆவது அப் நார்மல். பெட்டர் டு அவாய்ட் அப் நார்மல். )

எல்லா பெண்களிடமும் அறை வாங்கும் ஹீரோவின் குண்டு நண்பன் பாத்திரம் சற்றே மிகை படுத்தல் எனினும் (போற வர்ற பொண்ணுங்க எல்லாம் காரணமே இல்லாம இவரை அறையிற மாதிரி காட்டுறாங்க), மனுஷன் முக பாவங்களில் அசத்துகிறார். நன்கு சிரிக்க வைக்கிறார். நிச்சயம் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புண்டு.

படத்தில் சண்டையே இல்லை என்பது ஆறுதல். (அதுக்கு பதிலா தான் ஹீரோ- ஹீரோயின் எப்போதும் வாய் சண்டை போட்டு கிட்டே இருக்காங்களே !)

ஹீரோயின் மட்டுமல்லாது, பூஜா ( SS மியூசிக் - Compere ) மற்றும் " அண்ணா " என கூப்பிடும் பெண் இப்படி பல பெண்கள் அழகா காட்டியது மனசுக்கு நிறைவா இருக்கு :))

படம் சொல்லும் செய்தி " மேட் பார் ஈச் அதர்" ஜோடின்னு யாரும் கிடையாது. மத்தவங்க குறையை பெருசு படுத்தாம, அதை அப்படியே ஏத்துக்கிட்டு அட்ஜஸ்ட் செஞ்சு போனா, அது தான் " மேட் பார் ஈச் அதர்" ஜோடி !

படம் நெடுக நம்மை ரசித்து சிரிக்க வைக்கும் வசனங்களும், சிறு சிறு சம்பவங்களும் இறைந்து கிடக்கின்றன. படத்தை நம்மை பார்க்க வைப்பதும், ரசிக்க வைப்பதும் இவை தான்.

இனி சொதப்பல்கள் என்னென்ன என பார்ப்போம் :

ஹீரோ படம் முழுதும் நம்மை பார்த்து பேசுவது எரிச்சல். படத்தின் பின் பாதியில் பூஜாவிடம் தன் கதையை சொல்வதாக காட்டுகிறார்கள். இப்படி யாராவது நண்பரிடம் சொல்லும் பிளாஸ்பாக் ஆக கொண்டு போயிருக்கலாம். நம்மிடமே தொடர்ந்து பேசும் போது " இது சினிமா " என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி முக்கிய பாத்திரங்களுடன் ஒன்ற முடியாமல் செய்கிறது

பாடல்கள் அதிகம் இம்ப்ரெஸ் பண்ணலை . இத்தகைய படங்களுக்கு, பாடல்களில் பட்டையை கிளப்பி இருக்க வேண்டாமா?

கல்லூரி கதை என்றாலும் ஆசிரியர்கள் (ஒரு சிறு காட்சி தவிர) வேறு எங்குமே காணும் ! இப்படி ஆசிரியர்களே இல்லாத கல்லூரி எங்கு இருக்குன்னு தெரியலை !

கிளைமாக்ஸ் ரொம்ப சுமார். எந்த பன்ச்சும் இன்றி, இன்னொரு ஹீரோ- ஹீரோயின் சண்டையுடன், சற்று சினிமாட்டிக் ஆக அனைவரும் கை தட்ட முடிகிறது. நிச்சயம் கொஞ்சம் பெட்டர் கிளைமாக்ஸ் யோசிச்சிருக்கலாம். 
***
மொத்தத்தில்: 

மிக இளைஞரான இந்த இயக்குனர், குறைந்த பட்ஜெட்டில், 35 நாளில் இப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். ஹீரோவே படத்தின் தயாரிப்பாளரில் ஒருவர் என்பதால், படத்தின் பெரிய செலவு ஹீரோயின் அமலா பால் சம்பளம் மட்டும் தான் இருந்திருக்கும். 15 நாள் ஓடினாலே படம் லாபம் பார்த்திடும் என நினைக்கிறேன். இவர் மூலம் நிறைய இளைஞர்களுக்கு தமிழ் சினிமா இயக்குனர் வாய்ப்பு கிடைக்க இந்த படம் ஒரு காரணமாக அமையலாம்.

வாழ்த்துகள் இயக்குனர் பாலாஜி !

காதலில் சொதப்புவதை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !

Friday, February 24, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் -விமர்சனம்


முப்பொழுதும் உன் கற்பனைகள்- " பாக்காதீங்க; பாக்காதீங்க"ன்னு அனைத்து பதிவர்களும் கதறிய போதும் பார்த்தேன்.


கதை :  ஹீரோயினுடன் கற்பனையில் குடும்பம் நடத்துகிறார் ஹீரோ. அதை உண்மையாக்க சொல்கிறார் ஒரு டாக்டர். அப்படி நடிக்க ஆரம்பித்து ஹீரோவை பிடித்து போய், அவரையே கரம் பிடிக்கிறார் ஹீரோயின். (இந்த பட கதையை இவ்வளவு எளிதாய் சொன்னது எனக்கே ஆச்சரியமா இருக்கு !)

நல்ல விஷயங்கள் 

அதர்வா நடிப்பு மிக இயல்பா இருக்கு; ஜீவா மாதிரி நடிக்கிறதே தெரியாத வகையில் உள்ளது இவர் நடிப்பு. நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் தமிழில் ஒரு நல்ல நடிகராக வலம் வருவார்.

GV பிரகாஷின் பாடல்கள் மூன்று மிக இதமாய் ரசிக்கும் படி இருந்தது. இவ்வளவு சின்ன வயசில் GV. பிரகாஷின் திறமை வியக்க வைக்கிறது. பாடல்கள் பல இனிமை எனினும் பின்னணி இசையில் நிச்சயம் improvement தேவை ! படத்தில் பாடல் வரும் இடங்கள் தான் கொஞ்சமும் ஒட்டாமல், மக்களை கேண்டின் போக வைக்குது .

அமலா பால் உடல் ஒல்லியாக இருந்தாலும் கன்னம் உப்பலாக இருப்பது ரசிக்கும் படி உள்ளது. (ஹவுஸ் பாஸ் இதை படிப்பாரா? ஓ காட் !)

படத்தில் சந்தானம் ஆங்காங்கே வரும் காட்சிகள் + வசனம் மட்டும் தான் துருத்தி கொண்டு தெரிகிறது மற்றபடி அனாவசிய காட்சிகள் இன்றி கதையை ஒட்டியே படம் நகர்கிறது.

இத்தகைய " காதல் கொண்டேன்" டைப் கதை நிச்சயம் சோகமாய் தான் முடியும் என நினைத்தால், பாசிடிவ் ஆக, மகிழ்ச்சியாக முடித்தது ஆச்சரியம் !

சந்தானம் " நேத்து பெய்த மழையில் இன்னிக்கு முளைச்ச சாப்ட்வேர் மக்களே " என அழைக்கிறார். சந்தானம் சொல்வதால் பொறுத்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.
***
இனி சொதப்பல்கள் லிஸ்ட் :

அதர்வா ஆபிஸ் வந்ததுமே உடன் வேலை செய்யும் ஒரு பெண் அவரிடம் " நீ கிஸ் குடு; அப்ப தான் நீ சொன்ன வேலை செய்வேன்" என்கிறார். நானும் பல ஆபிசில் வேலை பார்த்துட்டேன். என் நண்பர்கள் மூலம் நிறைய கதை கேட்டுருக்கேன். இப்படி ஒரு சீன் கேட்டதே இல்லீங்க. பொண்ணுங்களை இப்படியா அவமான படுத்தனும்?

த்ரில்லர் படம் என்று சொல்கிறார்கள் ! ஆனால் படம் மிக மெதுவ்வ்வ்வாய் நகர்கிறது.

அதர்வா அம்மா குறித்த கதை மிக மிக நீளம். அதர்வா அம்மாவை "ஒட்டுண்ணி போல் சார்ந்திருந்தார்" என சொல்ல, இவ்ளோ நீட்டி முழக்கணுமா?

அமலா பால் சில காட்சிகளில் மிக அழகு; சில காட்சிகளில் சகிக்கலை. ஏன் இப்படி என்று தெரியலை.

இன்னும் எத்தனை தமிழ் படங்களில் தான் கல்யாணம் நிச்சயம் ஆன ஹீரோயின், நிச்சயம் செய்த மாப்பிள்ளையை விட்டுட்டு ஹீரோவை மணப்பார்னு தெரியலை . ஹும்

சந்தானம் காமெடி பெரிய லெட் டவுன். சிரிப்பே வரலை

அதர்வா பத்தி டாக்டர் ஒரு டயலாக் சொல்றார் பாருங்க: " நீ அவன் கூட இருக்கிறது தாயோட கர்ப்ப பையில் இருக்கிறதை விட பாது காப்பானது " !!இவரு டாக்டரா இல்லை அங்கிளா? (அங்கிளை தமிழில் சொன்னால் அசிங்கமா இருக்கும்!) முடியல !

கொலை குறித்த காட்சிகள் அனைத்திலும் லாஜிக் மீறல்கள் சொல்லி கிட்டே போகலாம். இயக்குனர் பெரிய அளவில் சொதப்பிய காட்சிகள் இவை .

***
மொத்தத்தில்:

அதர்வா, அமலா பால், சந்தானம் இசை அமைப்பாளர் GV பிரகாஷ் என நல்ல டீம் இருந்தும், தயாரிப்பாளர் Aggressive மார்கெட்டிங் செய்தும், திரைக்கதை சொதப்பலால், படம் தோற்று விடுகிறது !

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அதர்வா & இயக்குனர் எல்ராட்குமார் !

Thursday, February 23, 2012

சென்னை வங்கி கொள்ளையர் என்கவுண்டர் : சில கோணங்கள்

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு வங்கிகள் கொள்ளை போயின. முதலில் பெருங்குடி பாங்க ஆப் பரோடா...!  பணம் மட்டுமல்லாது லாக்கர்களில் இருந்து நகைகளும் இதில் கொள்ளை போனது. வங்கிகளில் பணம் தொலைந்தால் அதற்கு இன்சூரன்ஸ் கவர் இருக்கும், அதனால் அந்த பணம் திரும்ப கிடைக்கும் என நினைக்கிறேன். ஆனால் லாக்கரில் உள்ள நகை திருடு போனால் அவ்ளோ தான் ! அதற்கு வங்கியில் நாம் எதுவும் கேட்க முடியாது. உங்கள் லாக்கரில் எவ்வளவு நகை உள்ளது என வங்கிக்கு எப்படி தெரியும்? லாக்கர் துவக்கும் போது வாங்கும் கை எழுத்திலேயே " நகைகள் தொலைந்தால் வங்கி பொறுப்பல்ல" போன்ற கண்டிஷன்கள் அடங்கி விடும்.

அடுத்து கீழ் கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் பான்க் கொள்ளை அடிக்கப்பட்டது. சரியாக கரண்ட் போகும் நேரத்தில் வந்து இங்கு கை வரிசை காட்டினர் கொள்ளையர்கள்.

இரண்டு வங்கிகளும் பொது துறை வங்கிகள் என்பதோடு, அங்கு CCTV காமிரா இல்லை என்பதும் குறிப்பிட தக்கது. இனி வங்கிகளில் CCTV காமிரா அவசியம் கட்டாயமாக்க வேண்டும் என்பதை இரு கொள்ளைகளும் உணர்த்தின. (சென்னையில் மட்டும் CCTV இல்லாது 300 வங்கிகள் இருக்காம் !)

இந்த இரு கொள்ளை சம்பவத்திலும் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை குறித்து துப்பு சொன்னால் ஒரு லட்சம் பரிசு அறிவிக்க பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு வேளச்சேரி பகுதியில் தங்கியிருந்த கொள்ளையர் ஐவரை போலிஸ் வளைத்து பிடிக்க முயன்றதாகவும், அவர்கள் சுட்டதில் போலிஸ் இருவருக்கு காயம் ஏற்பட, கொள்ளையர் அனைவரும் சுட்டு கொல்ல பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது

இறந்த அனைவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பெயர்கள் வினோத் குமார், வினய் குமார், ஹரீஷ் பிரசாத், சகி கரே, அபே குமார் என்றும் போலிஸ் கூறியுள்ளது. இவர்களின் தலைவன் SRM கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்த மாணவனாம் !

வங்கி கொள்ளையர் சுட்டு கொல்ல பட்டதை கேட்கும் போது முதலில் தோன்றிய உணர்வு: நிம்மதி தான் ! கூடவே " அம்மா ஆட்சியில் மட்டுமே இப்படி அதிரடிகள் நடக்கும் ! போலிசுக்கு இப்படி செய்யும் தைரியம் வரும் " என்றும் தோன்றியது.

சற்று யோசிக்கும் போது வேறு சில கேள்விகள் வர தான் செய்கின்றன.

எதனால் கொள்ளையர் ஐந்து பேரும் சுட்டு கொல்ல பட வேண்டும்? நிச்சயம் ஒரு குண்டில் ஒவ்வொருவரும் இறக்க போவது இல்லை. அட்லீஸ்ட் ஒரு கொலையாளி உயிருடன் இருந்தாலாவது, வேறு யாரும் கூட்டாளிகள் இருந்தனரா என தெரியும். ஏன் இவர்கள் அனைவரையும் ஒருவர் விடாது இறக்கும் வரை சுட்டு தள்ள வேண்டும்?

அவர்கள் ஒருவரிடமும் பேசாது போலிஸ் எப்படி அவர்கள் தான் வங்கி கொலையாளிகள் என முடிவு செய்தது? அவர்கள் போலிசை நோக்கி சுட்டது உண்மை எனில் அவர்கள் தீவிர வாதிகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் வங்கி கொள்ளையர்கள் அவர்கள் தான் என அவர்களுடன் பேசாமலே எப்படி தெரிந்தது ?

தினமலர் வெப்சைட்டில் இந்த நியூஸ் வெளியாகி, அது பற்றி எண்பதுக்கும் மேற்பட்ட காமன்டுகள் வந்துள்ளன. அதில் சிலர் " அம்மா ஆட்சியில் விலை ஏற்றம், மின்சார தடை உள்ளிட்ட விஷயங்களை அமுக்கவே இப்படி செய்தி வந்துள்ளது; அவர்கள் தான் உண்மை கொள்ளை காரர்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

அவர்களிடமிருந்து நிறைய பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பணமும் வங்கியில் கொள்ளை போன பணமும் ஒன்று தான் எனில் அவர்கள் தான் வங்கி கொள்ளையர்கள் என நம்பலாம்.

சமீபத்தில் ஜூவியில் வாசித்த போலிஸ் குறித்த செய்தி ஒன்று: தன் கணவனை கொன்ற பெண் ஒருத்தியை போலிஸ் FIR கூட பதிவு செய்யாமல் விடுதலை செய்துள்ளது ! இந்த கொடூர கணவன் மனைவியை மிக கொடுமை படுத்தியதாக போலிஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் வந்து, " இனி அப்படி செய்ய மாட்டேன்" என எழுதி தந்து விட்டு சென்றவராம்; இருந்தும் மீண்டும் மீண்டும் மனைவியை கொடுமை படுத்தி உள்ளார். குறிப்பிட்ட நாளன்று தன் மகளுடனே தவறாக நடக்க முயற்சிக்க, மனைவி தலையில் தாக்கி அவரை கொன்றுள்ளார். போலிஸ் இந்த பெண்ணை கைது செய்து விசாரிக்க, விஷயம் தெரிந்து " தற்காப்புக்காக கொன்றார்" என முடிவெடுத்து அவர் மீது FIR கூட பதிவு செய்யாமல் அனுப்பி விட்டது ! வழக்கமாய் இத்தகைய வழக்குகளில் கோர்ட் தான் விசாரித்து விட்டு "நிரபராதி" என அறிவிக்கும். ஆனால் அதற்குள் சம்பந்தப்பட்டவர் சில வருடங்களாவது ஜெயிலில் இருந்திருப்பார் ! அநேகமாய் இந்தியாவிலேயே முதல் முறையாக போலிஸ் கொலையாளி என தெரிந்தும் ஒருவரை கைது செய்யாமல் விடுதலை செய்துள்ளது !

இந்த பதிவின் துவக்கத்தில் சொன்ன மாதிரி இத்தகைய சுதந்திரமான போலிஸ் நடவடிக்கை அ. தி,மு.க ஆட்சியில் தான் சாத்தியம் !

வங்கி கொள்ளையர்கள் கொலையை பொறுத்த வரை நிச்சயம் விடை தெரியா கேள்விகள் நிறையவே உள்ளன. அவர்கள் தான் நிஜ கொள்ளையர்கள் என்பதை போலிஸ் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவ வேண்டும்.

"என்கவுன்டர்கள் என்பவை தனி மனித உரிமை மீறல்; அவை முற்றிலும் தவிக்கப்பட வேண்டும் " என எப்போதும் சொல்வோரும் இருக்கிறார்கள்.

கொல்லப்பட்டது வங்கி கொள்ளையர்கள் தான் எனில், இது போன்று கொள்ளைகளை யோசிக்கும் பிற கூட்டத்துக்கு நிச்சயம் மனதில் கிலியையும், தயக்கத்தையும் இந்த என்கவுண்டர் ஏற்படுத்தும் என்பது மட்டும் நிஜம் !

திரிபாதி சார்: அப்படியே குழந்தைகளை கடத்தும் கும்பலுக்கும் ஒரு என்கவுண்டருக்கு ஏற்பாடு செய்யுங்க ! குழந்தை கடத்தல் கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் !

இந்த என்கவுண்டர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பின்னூட்டத்தில் சொல்லலாம் !

Wednesday, February 22, 2012

வானவில் - 77: தஞ்சை ஸ்பெஷல்

கடந்த பத்து நாளில் பாதிக்கு மேல் தஞ்சையில் (குறிப்பாய் ஆஸ்பத்திரியில்) இருந்ததால், மனம் முழுக்க அதுவே நிறைந்துள்ளது. இந்த வார வானவில் தஞ்சை மற்றும் ஆஸ்பத்திரி ஸ்பெஷல் .

தஞ்சையில் என்ன பிசினஸ் சூப்பரா போகுது? 




ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு வியாபாரத்தை முக்கியமாக கொண்டிருக்க, நகரின் பொருளாதாரம் அந்த வியாபாரத்தின் அடிப்படையில் சுழலும். திருப்பூருக்கு துணிகள் போல, தஞ்சைக்கு என்ன தெரியுமா? மருத்துவ மனைகள் !! தஞ்சை நகரம் முழுவதுமே சிறியதும் பெரியதுமாய் ஏராளமான மருத்துவ மனைகள் ! ராஜா மிராசுதார் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை என்று இரு பெரும் அரசு மருத்துவ மனைகள் தஞ்சையில் இருக்கின்றன.



தஞ்சை மற்றும் சுற்றி உள்ள ஏராளமான கிராமங்களில் மட்டுமல்லாது திருவாரூர், நாகை போன்ற மற்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். தஞ்சையில் அனைத்து துறைகளுக்கும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் உண்டு. ஒவ்வொரு தனியார் மருத்துவமனைக்கு அருகிலும் சில ஓட்டல்கள், பெட்டி கடைகள் இருக்கும். மருத்துவ மனைக்கு வரும் அட்டென்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் தான் இவற்றில் நிரம்பி வழிகிறது. தஞ்சையில் நிறைய கார் ஷோ ரூம்கள், ஏகப்பட்ட கார்கள் வலம் வருகிறது. தஞ்சையில் செல்லும் பெரும்பாலான கார்களில் டாக்டர் ஸ்டிக்கர் ஒட்ட பட்டிருப்பதை காண முடியும் !

அம்மா பேச்சு

அம்மாவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம். பத்து  நாளுக்கும்  மேலாக ஐ. சி. யூ வில் இருந்து விட்டு இன்று  வார்டுக்கு  மாற்றப்படுகிறார்.   

நினைவு வந்து, வந்து போகும் நிலையில் அம்மா பேசியதில் சில:
********
" நாளைக்கு ரிசல்ட்"

"யாருக்கு?"

" அஞ்சுவுக்கு" ( + 2 பரீட்சை எழுதும் பேத்தி - அவளுக்கு ரெண்டு வாரம் கழித்து தான் பரீட்சை ஆரம்பிக்கிறது !)

*****
"அந்த பல்பு தொங்கிட்டே இருக்கு. விழுந்துட போகுது "


*****
" நான் யார்? சொல்லு" என கேட்கிறேன்

"பாலாஜி"

" ம். மூணு ஆம்பள பிள்ளை பெத்துட்டு மாத்தி மாத்தி பேர் சொல்லுவியா?"

உதடுகள் லேசாய் அசைந்து சிரிக்கின்றன "சரியா சொல்லு " என அதட்டிய பின் , சரியாய் சொல்கிறார்.

****
நன்றாக நினைவு இருக்கும் ஒரு அதிசய நேரத்தில் அனைவரும் சுற்றி நிற்க, எங்கள் குடும்பத்துக்காய் மிக மிக உழைத்த, பல வருடங்களாய் தன்னுடன் பேசாத, அம்மாவுக்கு பிடிக்காது என அனைவரும் நினைக்கும் மருமகளை பார்த்து இப்படி சொன்னார் : " நம்ம குடும்பத்து குலவிளக்கே நீ தான்" அனைவரும் ஆச்சரியத்தில் சிரிக்க, அண்ணி கண்ணில் மட்டும் அழுகை !

ஆதி மனிதரின் அன்பு

ஆதிமனிதன் என்கிற பதிவரின் ப்ளாக் நீங்கள் வாசித்திருக்கலாம். அமெரிக்காவில் Software துறையில் பணியாற்றும் இவர் அமெரிக்கா குறித்து நிறைய பதிவுகள் எழுதுவார். மெயில் மூலம் பழக்கமான இவர் அம்மா உடல்நிலை குறித்து எழுதிய பதிவு வாசித்து விட்டு முதல் முறை தொலைபேசினார். பின் தஞ்சையில் இருக்கும் தன் அம்மாவை உடனே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற இவர் தாயார் எங்கள் ஊரான நீடாமங்கலத்திலும் பணியாற்றி உள்ளார்.. சீனு சார் பற்றி நிறைய விசாரித்து விட்டு தனக்கு 1960-களில் திருமணம் நடந்த போது கல்யாண பத்திரிக்கையே அடிக்க வில்லை என்றும், சீனு சார் " அதெப்படி பத்திரிக்கை அடிக்காமல் இருப்பீர்கள்? " என உரிமையாக தானே மன்னார்குடி சென்று பத்திரிக்கை அடித்து வந்து தந்தாகவும் இப்படி அவர் எல்லாருக்கும் உதவுவார் என்றும் நினைவு கூர்ந்தார்.

தன் கணவர் 1998-ல் கோமா நிலைக்கு போய், பிழைக்க சிரமம் என்று சொல்லிய போதும் , பிழைத்து வந்து அதன் பின் நல்ல உடல் நிலையுடன் 13 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்” என்றார். “எப்போது உயிர் போகும் என்பது எந்த டாக்டராலும் சொல்ல முடியாது" என்று இவர் சொன்னது மிக உண்மை !

சந்தித்த எழுத்தாளர்

மருத்துவமனையில் இருக்கும் போது சந்தித்த மற்றொரு சுவாரஸ்யமான மனிதர் இரா. இளங்கோ. என் அண்ணனின் நண்பரான இவர் ஒரு எழுத்தாளர். அறுபதுக்கும் மேற்பட்ட இவர் சிறுகதைகள் விகடன், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களில் வெளியாகி உள்ளது.

நர்ஸ் ஏதாவது வேண்டும் என்று கூப்பிடுவார்கள் என்பதால் ICU வெளியே தான் அமர்ந்திருக்க வேண்டும். அப்படி அமர்ந்து கொண்டு நானும் இளங்கோவும் இரண்டு மணி நேரம் தமிழ் இலக்கிய சூழல் குறித்து பேசி கொண்டிருந்தோம். (சுற்றி இருந்த மற்ற நோயாளிகளின் அட்டென்டர்கள் நாங்கள் பேசிய விஷயங்களை வைத்து எங்களை " கழண்ட கேசு" என நினைத்திருக்கலாம்)

ப்ளாக் பற்றி இவரிடம் கூறி " நீங்களும் ப்ளாக் ஆரம்பிக்கலாமே ! உங்கள் படைப்புகள் குறித்து உடனுக்குடன் feedback வந்துவிடும்" என்றேன். " யாருக்கு வேண்டும் Feedback ? நான் எழுதுவது என் திருப்திக்கு; அதுவே கொஞ்ச நாள் கழிச்சு வாசிச்சா கிடைக்க மாட்டேங்குது " என்றார். "புத்தகம் மத்தவங்க கிட்டே போகணும் என நினைப்பது செலவு பண்ண காசு திரும்ப வரணும் என்பதால் தான். ரெண்டு புக் போட்டிருக்கேன். முதல் புக்குக்கு லைப்ரரி ஆர்டர் கிடைச்சிடுச்சு. கடந்த அஞ்சு வருஷமா, Government லைப்ரரி ஆர்டர் யாருக்கும் கொடுக்கலை . இதனால் அடுத்த புக் விற்க முடியலை " என்றார்.

சாகித்ய அகாடமி விருதுகள் முழுக்க முழுக்க தெரிந்தவர்கள் அடிப்படையில் தான் வழங்கபடுகிறது என்றும் யார் யார் அதன் குழுவில் வந்த போது யார் யாருக்கு விருது கிடைத்தது என்றும் விளக்கினார். "சாகித்ய அகாடமி விருது வாங்குவது எப்படி? " என அதன் அரசியல் பற்றி சேலத்தை சார்ந்த ஒருவர் புக்கே போட்டுருக்கார்" என்றார் ! Interesting !!

கிருஷ்ண பவன் - ஸ்பெஷல்காபி

தஞ்சையில் வினோதகன் மற்றும் அனு என்கிற இரு மருத்துவமனைகளுக்கு நடுவே உள்ளது " கிருஷ்ண பவன்" ஹோட்டல். மிக தரமான உணவு இங்கு கிடைக்கிறது. மதியம் ஐம்பது ரூபாய்க்கு அன் லிமிடட் சாப்பாடு ! பெரும்பாலான சர்வர்கள் பெண்களாக இருப்பது ஆச்சரியம் ! வெயிட்டான சாதம் பாத்திரம் சுமந்தவாறு பெண்கள் வேகமாக ஓடி ஓடி பரிமாறுகிறார்கள். இந்த ஹோட்டலில் பொங்கல் உள்ளிட்ட பல டிபன் ஐட்டங்கள் நன்றாக இருக்கும் என்றாலும், தவற விட கூடாதது காபி தான் ! தஞ்சாவூர் காபிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. சென்னையின் எந்த ஹோட்டலிலும் அல்லது வீட்டிலும் இது மாதிரி காபி கிடைக்காது ! தஞ்சை செல்லும்போது இங்கு சென்று, அந்த காபி ஒரு முறை குடித்து பாருங்கள் !

வயதானவர்களும் குழந்தைகளும் 

ஒரு நிலைக்கு மேல் வயதானவர்கள், சிறு குழந்தைகள் போல் ஆகி விடுவதை மிக நன்றாய் உணர முடிந்தது. பிறக்கும் போது செய்தவை அனைத்தும் வாழ்வின் இறுதியிலும் செய்கிறோம்.

அம்மா சாப்பிடுவது அரை இட்லி அல்லது ஒரு இட்லி. அதையும் பாலில் ஊற வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தர வேண்டும். குழந்தை போல சாப்பிடும் போதே தூக்கமோ, மயக்கமோ அழுத்தும். " சாப்பாடு வேண்டாம்" என சொன்னாலும், குழந்தைக்கு கதை சொல்லி ஊட்டும் அம்மா மாதிரி, இப்போது அம்மாவிற்கு பேச்சு கொடுத்து சாப்பாடு தர வேண்டியுள்ளது.

குழந்தைக்கு செய்வது போல் உடுத்தி விட வேண்டியுள்ளது. பாத் ரூம் போனால் சொல்ல தெரிவதில்லை. எப்போதும் தூக்கம். தேவையற்ற பயம். இப்படி வாழ ஆரம்பித்த போது இருந்த அதே வாழ்க்கை, இறுதியிலும் வந்து விடுகிறது.

அட்டென்டர்கள் என்றொரு இனம்

நோயாளிகள் உடன் இருக்கும் அட்டென்டர்கள் ஒரு தனி சாதி. இவர்களின் பொது குணங்கள் :

* நாற்காலியில் அமர்ந்தவாறு தினத்தந்தி, தினகரன் இவற்றை வரி விடாமல் வாசிக்கிறார்கள். (அநேகமாய் ஓசி)

* எழுந்து போகும் போதும் தன் இருக்கை பறி போக கூடாது என பேப்பர் அல்லது பை வைத்து விட்டு போகிறார்கள்

* சத்தமாக மொபைலில் பேசுகிறார்கள்.

* கூட்டமாய் வரும் பெண்கள் தரையில் தான் அமர்ந்து கொள்கிறார்கள் (வாழ்க சமத்துவம்!) தரையில் அமர முடியாத வயதான பெண்கள் மட்டுமே சேரில் அமர்கிறார்கள்.

* பெரும்பாலும் நோயாளி பற்றியும் டாக்டர் சொன்னது பற்றியும் பிறரிடம் பேசி கொண்டிருக்கிறார்கள்.

* புகை பிடிப்போர், நொறுக்கு தீனி சாப்பிடுவோர் அடிக்கடி காணமல் போய் பக்கத்துக்கு கடையை நாடுகிறார்கள்.

* பிளாஸ்க்,துணிகள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட தங்கள் உடமையை பத்திரமாய் பாதுகாக்கிறார்கள். கடைக்கு போய் விட்டு வந்தால், அவை பத்திரமாய் உள்ளதா என செக் செய்து கொள்கிறார்கள்.

* நோயாளி உடல்நிலை மோசமானால் சத்தமின்றி அழுகிறார்கள். சிலர் அழுவோரை சமாதான படுத்துகிறார்கள்.

மிக பரிதாபமான இனம் இந்த அட்டெண்டர் இனம் ! அங்கிருக்கும் போது இவர்களின் பல குணங்கள் எனக்கும் இருக்கும் !

தொடர்புடைய பதிவு: தஞ்சையின்  மறக்க முடியாத இடங்கள்

Monday, February 20, 2012

சுஜாதாவின் விரும்பி சொன்ன பொய்கள்

விரும்பி சொன்ன பொய்கள் - என்ன அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல்.

கதை

ராதாகிருஷ்ணன் என்பவன் மதுரைக்கு வரும் தன் முதலாளி மனைவியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறான். சுருக்கமாக அவன் பிளாஸ் பேக் விரிகிறது. இதற்கு முன் சர்க்கஸில் வேலை பார்த்து தான் காதலித்த பெண் மீது வேண்டுமென்றே அம்பு எய்து காயப்படுத்தியதால் ஜெயிலுக்கு போய் திரும்பியவன். அவனது பழைய கதை தெரிந்து யாரும் வேலை தராத போது இந்த நிறுவனத்தில் தான் வேலை கிடைக்கிறது.

"மதுரை வரும் தன் மனைவியை பார்த்து கொள்" என சொல்கிறார் முதலாளி. வரும் மனைவியோ புயல் மாதிரி இருக்கிறாள். அலை பாயும் மனம் கொண்ட அவளின் செயல்கள் புதிராய் இருக்கின்றன. அவள் செல்லும் இடமெல்லாம் கூட செல்ல வேண்டும் என்ற பாஸின் கட்டளையால் அப்படியே செய்கிறான் ராதாகிருஷ்ணன். ஒரு இரவில் தனிமையான பீச்சில் இருவருக்கும் உறவும் நடக்கிறது. இதன் பின் மறு நாள் அவள் சென்னை சென்று விடுகிறாள். ராதா கிருஷ்ணனோ அவள் நினைவாக பித்து பிடித்து அலைகிறான்

அவளை காண சென்னை செல்கிறான். சந்திக்கவும் செய்கிறான். சந்தித்த அன்று இரவே அவள் இறக்கிறாள். அது தற்கொலையா கொலையா என ஆராயும் போலிஸ் சொல்லும் கதை ராதா கிருஷ்ணனை மட்டுமல்ல நம்மையும் தூக்கி வாரி போடுகிறது.

ராதா கிருஷ்ணனை வந்து சந்தித்தது வேறு பெண். அவர் முதலாளி மனைவி அல்ல. ராதா கிருஷ்ணனின் past-ஐ வைத்து அவனை இந்த வலையில் விழ வைப்பதுடன் கொலை பழியும் வருகிற மாதிரி செய்தது அந்த முதலாளி தான் என்கிற ரீதியில் கேள்வி குறி மட்டும் எழுப்பி கதையை நிறைவு செய்கிறார்.

***
முடிவில் இறந்த பெண் அவர் மனைவி தானா இல்லையா? இந்த கேள்விக்கு ஆம் என்பதா இல்லை என்பதா என்று கேட்டு விட்டு, அதனை வாசகர்களே நீங்களே சொல்லுங்கள் என முடிக்கும் போது நமக்கு ஏமாற்றம் ஆகி விடுவது நிஜம்.

சர்க்கஸ் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமாக முதல் சில பக்கங்களில் சொல்கிறார். ராதா கிருஷ்ணனின் ஜெயில் வாழ்க்கை பற்றி நீண்டு செல்லும் ஒரே வரியில் வலியை நமக்கு உணர வைப்பது டிபிகல் சுஜாதா !

கதையில் வரும் பாத்திரங்கள் பலவும் " கல்யாணம் பண்ணிக்காதே " என்கிறார்கள். (அவ்வப்போது சுஜாதாவின் பாத்திரங்கள் பிற கதைகளிலும் இந்த வரியை சொல்வதுண்டு")

சிவகங்கை அருகில் இரவு சென்று தங்கினார்கள் என கூறிவிட்டு பீச் சென்று குளிப்பதாக சொல்வது இடிக்கிறது. சிவகங்கை அருகே எங்கே பீச்?

முன்னுரையில் சுஜாதாவே " வாசகரிடம் முடிவை ஊகிக்க சொல்வது எனக்கு மிக பிடித்த உத்தி" என்கிறார்.ஆனால் இந்த கதையில் முடிவு தெரியாமல் நமக்கு சற்று என்னவோ போல் தான் உள்ளது !

விரும்பி சொன்ன பொய்கள் : Diehard Sujatha fans-க்கு மட்டும் பிடிக்கும்!

திண்ணை பிப்ரவரி 12, 2012  இதழில் வெளியான கட்டுரை

Thursday, February 16, 2012

காஞ்சி பயண கட்டுரை நிறைவு பகுதி

காஞ்சியின் மிக புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று வரதராஜ பெருமாள். சிவன் கோவில்கள் முழுக்க ஒரு பக்கம் இருக்க அதை சிவ காஞ்சி எனவும், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பிற விஷ்ணு கோயில்கள் வேறு பக்கம் இருக்க, அதை விஷ்ணு காஞ்சி என்றும் அழைக்கிறார்கள்.


வரதராஜ பெருமாள் கோயிலில் சரியான கூட்டம். சில மணி நேரங்கள் நின்று தான் தரிசனம் பார்க்க வேண்டியிருந்தது. அப்போது எங்கள் அருகில் ஒரு பாட்டியும், ஒரு பத்து வயது சிறுமியும் நின்றிருந்தனர். மிக அழகாக எப்போதும் சிரித்தவாறே இருந்த அந்த பெண் ஒரு மாற்று திறனாளி. கால் போலியோவில் பாதிக்கப்பட்ட மாதிரி இருந்தது. பெயர் என்ன என கேட்க சிரித்தவாறே " மதுர கவி" என்றாள். செம புத்திசாலி. சென்னையி சேர்த்த இவள் பல முறை இந்த கோவில் வந்ததாக சொல்லி, எங்களுக்கு பல தகவல்கள் சொன்னாள். அவர் பாட்டி சிறிது நேரத்தில் கியூவில் நிற்காமல் "அவளால் அதிக நேரம் நிற்க முடியாது" என கோவில் நிர்வாகிகளிடம் சொல்லி அழைத்து சென்று விட்டார். அந்த சிறுமியின் சிரிப்பும் முகமும் இன்னும் கண்ணில் நிற்கிறது !





இங்கு தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி மிகவும் விசேஷம். இதனை தொட்டு வணங்கினால் பல்லி மேலே விழுந்தால் வரும் தோஷம் வராது என்று நம்பிக்கை. ஏற்கனவே அன்று நிறைய கோயில்கள் சென்று விட்டதாலும் மிக மிக அதிக கூட்டம் இருந்தாலும் எங்கள் பெண் கியூவில் நிற்க முடியாது, கிளம்பலாம் என கூறி விட்டாள். இதனால் இந்த இடம் பார்க்காமல் கிளம்பினோம்.

இங்குள்ள குளத்தில் தண்ணீருக்கு உள்ளே ஒரு நாலு கால் மண்டபம் அமைத்து அதன் உள்ளே அத்திவரதர் சிலை உள்ளது. இந்த அத்தி வரதர் அறுபது வருடத்துக்கு ஒரு முறை தான் வெளியே வருவாராம் ! அப்படி வெளியே வரும் போது ஒரு மாதம் அவரை கோவிலில் வைத்திருப்பார்களாம். அந்த ஒரு மாதம் கூட்டம் குவியும் என்று சொல்கிறார்கள். என் மாமியார் தன் சிறு வயதில் அப்படி போய் அத்தி வரதரை பார்த்ததாக சொன்னார்.

கோயிலில் எடுத்த வீடியோ பாருங்கள்:





****
இங்கு ஒரு கல் மண்டபம் உள்ளது. இதற்கு உள்ளே செல்ல தனியே " இரண்டு ரூபாய்" டிக்கட் வாங்குகிறார்கள். அழகான கல் சங்கிலி பார்த்து வியந்தோம். இந்த மண்டபத்தில் எடுத்த வீடியோ மற்றும் படங்கள் இதோ:




டூரிஸ்டுகளுக்கு கைட் மாதிரி இருக்கும் பெரியவர் கல் மண்டபம் குறித்து விளக்குகிறார்










கல் சங்கிலி
குளத்தில் ஒரு குடும்பம் (கணவன், மனைவி, இரு குழந்தைகள்) அமர்ந்து  பேசி கொண்டிருந்தனர். குளத்தில் ஏகப்பட்ட மீன்கள் ! அந்த தந்தை மீன்களை பிடிக்க முயற்சித்தார். முடிய வில்லை. அந்த வீடியோ பாருங்கள்



கோயிலில் சாமி பார்க்க மேலே போகும் போது மிக குறுகலான படிகள். செங்குத்தான படிகள் முழுதும் கூட்டத்தை பாருங்கள்


வரதராஜர் கோயில் பிரசாதங்கள் செம அருமை. புளி சாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் மிக அற்புதம். பொதுவாய் ஒன்று மட்டும் ஆளுக்கு கொஞ்சம் சாப்பிடுவோம். இங்கு ஆளுக்கு ஒன்று வாங்கி சாப்பிடும் அளவு அருமையாக இருந்தது.
***
வரதராஜ பெருமாள் கோவில் அருகே தான் அறிஞர் அண்ணா பிறந்த இல்லம் தற்போது நினைவிடமாக உள்ளது. பார்க்க எண்ணினோம். மாலை ஐந்து மணிக்கு மூடி விடுவார்களாம. பார்க்க முடியலை


***
காஞ்சி செல்ல எளிய வழிகள்:


ரயிலில்: எனக்கு தெரிந்து இது தான் மிக எளிய மற்றும் செலவு குறைந்த வழி. சென்னை பீச்சில் இருந்து திருமால்பூருக்கு தினம் ஐந்து ரயில்கள் செல்கின்றன. அவற்றின் நேரம் (கிண்டியில்) இதோ:

Guindy to Kanchipuram:


7.30 AM

10.08

11.11

18.26

19.44

20.45

இவை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். அது ஒன்று தான் குறை. ஆனால் கையில் நல்ல புத்தகம் அலது பேச்சு துணைக்கு நல்ல தோழமை இருந்தால் செல்லும் இரண்டு மணி நேரம் எளிதாக போய் விடும். காஞ்சிபுரம் ஸ்டேஷன் திருமால்பூருக்கு முந்தைய ஸ்டேஷன்.


இதே போல் திரும்ப வரும்போதும் காஞ்சிபுரத்தில் இருந்து ரயிலில் வந்து விடலாம். ரயில் நேரம் இதோ:

Kanchipuram to Guindy:

5.30 AM

7.20

8.05

10.30

13.55

17.25

****
ரோடு வழி சென்றால்: கார் அல்லது பஸ் எதுவாய் இருந்தாலும் : போரூர், ஸ்ரீ பெரும்புதூர் வழியே செல்வது தான் சுருக்கு வழி. தி. நகரில் இருந்து தினம் அரை மணி அல்லது ஒரு மணிக்கு ஒரு ஏ. சி பஸ் காஞ்சிபுரம் செல்கிறது. இது ஒன்னரை மணி நேரத்தில் காஞ்சி அடைகிறது

டிக்கட் விலை ஒரு ஆளுக்கு ரூ. 150 போல் என அறிகிறேன்.


இதே ரயிலில் டிக்கட் விலை எவ்வளவு தெரியுமா? ஒரு ஆளுக்கு வெறும் 14 ரூபாய் தான் !

14 ரூபாயில், எந்த சிரமும் இன்றி, அரட்டை அடித்தவாறு பயண களைப்பு தெரியாமல் செல்ல ரயிலே நல்ல வழி என நினைக்கிறேன்

**
காஞ்சிபுரம் பயணம் நாங்கள் எதிர் பார்த்ததை விட மிக அருமையாக  இருந்தது. இன்னும் ஒரு முறையாவது காஞ்சி சென்று பார்க்க தவறிய இடங்களை பார்க்கும் ஆவல் உள்ளது.
***
இந்த தொடரை தொடர்ந்து வாசித்த தங்கள் அனைவருக்கும் நன்றி !

***
டிஸ்கி: எனது அம்மா உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு தஞ்சையில் மருத்துவ மனையில் உள்ளார். பிழைப்பது மிக சிரமமே. ஒரு வாரமாக தஞ்சைக்கும் சென்னைக்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு பிரார்த்தனையில் நம்பிக்கை இருந்தால் அந்த நல்ல ஆத்மா சிரம படாமல் மரணத்தை தழுவ வேண்டி கொள்ளுங்கள்.


இதனால் இணையம் பக்கம் வருவதும், பதிவுகளும் அடுத்த ஓரிரு வாரத்துக்கு என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் பின்னூட்டங்களை நான் உடனே பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு உடனே பதில் தர முடியாது மன்னிக்கவும்!  

தங்கள் புரிதலுக்கு நன்றி !

Wednesday, February 15, 2012

வானவில் 76:: ஆசிரியை கொலை, சாரு, BJP அமைச்சர் வீடியோ- சர்ச்சைகள்

சென்ற வாரம் "சர்ச்சை வாரம்" ஆக காட்சி அளித்தது ! சாரு Vs எஸ். ரா சர்ச்சை, பள்ளி ஆசிரியை கொலை, கர்நாடகா அமைச்சர்கள் செக்ஸ் வீடியோ என எத்தனை சர்ச்சைகள் !

இதில் சில சர்ச்சைகள் குறித்த என் கருத்தை பதிவு செய்கிறேன்.

சாரு Vs எஸ். ராமகிருஷ்ணன் சர்ச்சை

எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு ரஜினி வந்ததும், அழைப்பிதழில் ரஜினி படம் பெரிதாக போட்டதும், ரஜினி கடைசியாக பேசியதும் குறித்து விமர்சிக்கிறார் சாரு. இவரையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க கூடாது என்றாலும் சில விஷயங்களில் சும்மா இருப்பதும் தவறு என்பதால் சொல்ல வேண்டியிருக்கிறது

நடிகர் விழாவிற்கு வருவதே தவறு என்றால் குஷ்பூ, ஜோதிர்மயி என சாரு புத்தக வெளியீட்டுக்கு நடிகைகளை அழைத்தது எப்படி என்றால், " அவர்களை அழைத்தது மனுஷ்யபுத்திரன்; நானல்ல" என்கிறார் சாரு. புத்தக வெளியீட்டுக்கு நடிகைகள் வரக்கூடாது என சொல்லும் அளவு கூடவா அவருக்கு வாய்ஸ் இல்லை? விஷயம் இதுவல்ல; அந்த நடிகைகளை அழைத்தது சாருவாக இருக்கும் அல்லது வேறு யார் அந்த யோசனை சொன்னாலும், வழிந்து கொண்டே சரி என்றிருப்பார் என்பது அவரையும், அவர் எழுதியதை கொஞ்சம் படித்தவர்களால் கூட சொல்ல முடியும்.

ரஜினி கடைசியாக பேசியதில் என்ன தவறு? கலைஞர் போன்றவர்கள் விழாவில் பேசினால், நன்றியுரை கூட முன்பே பேசி விடுவார்கள். எஸ். ரா வை விட ரஜினி பிரபலம் என்பதில் என்ன சந்தேகம்? உடல் நலக்குறைவுக்கு பின் வரும் ரஜினியை பார்க்க கணிசமான ரஜினி ரசிகர்கள் வருவது இயல்பே. அவர்களில் பத்து சதவீதம் பேருக்கு எஸ். ராவின் இலக்கியம் சென்று சேர்ந்தால் போதுமே !

சாரு குதிப்பதன் காரணம் வேறு. சேட்டிங்கில் பெண்ணுடன் அசிங்கமாக பேசி மாட்டி கொண்டதில் இருந்து அவரை பெரும்பாலான பெருந்தலைகள் ஒதுக்கி விட்டனர். அவரது எக்சைல் நாவல் வெளியீட்டு விழாவின் போது "இனி நமக்கு என்ன இமேஜ் வேண்டி கிடக்கு? நம்மை மதிச்சு கூப்பிடுறதே பெரிசு "என்றோ, அல்லது இணையம் பரிச்சயம் இல்லாததால் இவரின் சேட்டிங் லீலைகள் தெரியாமலோ "வாலி, இந்திரா பார்த்தசாரதி" என்கிற எண்பது ப்ளஸ் வயதுள்ள இருவர் தான் கலந்து கொண்டனர். அவ்வளவு பெரிய மேடையில் ஈ ஆடியது, சாருவை அனைவரும் புறக்கணிப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால் எஸ். ராவுக்கு இவ்வளவு வி. ஐ. பி ஆதரவா என குதிக்கிறார் இவர் ! எக்சைல் சில ஆயிரம் புத்தகம் விற்பதால் பெரிய ஆள் ஆகி விட முடியாது. ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்தே அவர் மரியாதை காப்பற்றப்படும். சாரு மரியாதை இழந்து ரொம்ப காலமாகிறது !

ஒரு இலக்கிய விழாவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் வருவது அந்த எழுத்தாளரையும் விழாவையும் பெருமை படவைக்கும் விஷயம். விழா நிகழ்வை இப்படியும் நினைக்கலாம். சாரு போல கோணலாகவும் பேசலாம். பார்க்கும் பார்வையில் தான் கோளாறே தவிர வேறொன்றும் இல்லை.

மகாபாரதத்தில் தருமன் மற்றும் துரியோதனன் உலகை சுற்றி பார்த்தனர். தருமன் " அருமையான உலகம்; மக்கள் நல்லவர்கள்" என்றான். துரியோதனனோ " எல்லா பசங்களும் அயோக்கியன்" என்றான். இந்த விஷயத்தில் எஸ். ரா தருமனா என தெரியலை. ஆனால் "துரியோதனன்" யார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை !

பள்ளி ஆசிரியை கொலை

நானும் ஒரு ஆசிரியனாக இருந்திருக்கிறேன். இன்றும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் மிக நெருங்கி பழகுகிறேன். இந்த விஷயத்தில் இரு பக்க கஷ்டங்களும் நிச்சயம் அறிந்தவன் நான்.

இரண்டு பதிவு எழுதுமளவு விஷயம் மனதில் உள்ளது. இப்போது சுருக்கமாக ...

அந்த ஆசிரியை மரணம் மிக மிக மிக வேதனையானது. தந்தையும் உடன் இல்லாத நிலையில் அவரின் இரு பெண்களை நினைத்தால் மனது மிக வலிக்கிறது. ஆனால் அந்த மாணவனின் கோபமும், வெறியும் எத்தனையோ மாணவர்கள் மனதில் உள்ளது என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

ஆசிரியரால் கற்பழித்து கொலை செய்யப்பட பெண், ஆசிரியர் அடித்து கண் பார்வை போன மாணவி, திருடினாள் என்கிற சந்தேகத்தில் பெண்ணை நிர்வாணமாக்கிய ஆசிரியை இவை அனைத்தும் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்த சம்பவங்களே ! தவிர பாட சுமை தாங்காமல் இறக்கும் மாணவர்கள் தான் எத்தனை பேர் ! இந்த சம்பவங்களில் எழாத கூக்குரல் இப்போது ஓங்கி ஒலிக்கிறது.

இந்த மரணம், அந்த ஆசிரியையின் தியாகம் ஆசிரியர்களுக்கு ஒரு பயத்தை தரட்டும். இனியாவது ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பு கொடுத்து நடத்தட்டும்.

வருடம்தோறும் அந்த ஆசிரியை இறந்த நாளை நினைவு நாளாக கொண்டாடினாலும் தவறில்லை. இன்னொரு ஆசிரியை/ ஆசிரியர் மாணவனால் தாக்க படகூடாது என்று சொல்லும் அதே நேரம், இன்னொரு மாணவன் ஆசிரியரால் இறக்க கூடாது. அவமான படக்கூடாது. அந்த உறுதிமொழியை ஆசிரியர்கள் தரவேண்டும். தருவார்களா?

கர்நாடகா செக்ஸ் வீடியோ

செக்ஸ் வீடியோ பார்த்தால் தப்பா, யாராவது பார்க்காமல் இருக்காங்களா என இந்த கொடுமையை சப்போர்ட் செய்பவர்களும் இருக்கிறார்கள். செக்ஸ் வைத்து கொள்வது கூட தான் தவறில்லை. அதற்காக அந்த ஆண் + பெண் அமைச்சர் சட்டசபையில் செக்ஸ் வைத்து கொள்ள முடியுமா?

வீடியோ பார்த்தது தப்பில்லை. மக்கள் பிரச்னையை பேச வாக்களித்து, தேர்ந்தெடுக்க, அதை மறந்து விட்டு, அந்த நேரம் இப்படி வீடியோ பார்த்தது தப்பு தான். பீ.ஜே.பி இன்னும் அந்த அமைச்சர்களை சப்போர்ட் செய்வது, அதற்கும் காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையே காட்டுகிறது.

சில வேலைகளை சில இடத்தில் தான் செய்ய முடியும். வேறு இடத்தில் செய்தால் அசிங்கமாகிடும். இதற்கு மேல் விளக்கினால் மதியம் நீங்கள் சாப்பிட முடியாது !

மின்தடை

தஞ்சை சென்று வந்தேன். வழியெங்கும் உள்ள ஊர்களில் தினம் எட்டு மணி நேரம் மின்தடை. இதை விட மோசமான சூழல் தமிழகத்தில் இதுவரை இருந்ததில்லை. அரியலூரில் இறங்கி தஞ்சைக்கு பஸ் மாறும் போது, ரயில் நிலையத்தில் கும்மிருட்டு. தினம் இரவு கரண்ட் இருக்காதாம் !  நூற்றுகணக்கான மக்கள் இருளில் செடி கொடிகள், புதர்கள் நடுவே செல்கின்றனர். என்றைக்கு என்ன அசம்பாவிதம் நடக்குமோ தெரிய வில்லை.

எனக்கென்னவோ கூடங்குளம் மின்சாரம் எவ்வளவு அவசியம் என உணர்த்தத்தான் இவ்வளவு நேரம் மின்தடை செய்கிறார்களோ என தோன்றுகிறது !

ஆனந்த் கார்னர்

Be good enough to fogive someone, but not stupid enough to trust them again.

சூப்பர் சிங்கர் கார்னர்

இந்த வாரம் "டெடிகேஷன் ரவுண்ட்". விஜய் டிவியில் எந்த ஷோவில் யார் அழுதாலும், ஸ்லோ மோஷனில் அழ விட்டு, மியூசிக் எல்லாம் போட்டு அழுகையை விரிவாக காட்டுவார்கள். இருந்தாலும் இந்த வார டெடிகேஷன் ரவுண்ட்டில் சில நேரங்களில் அய்யாசாமிக்கு அழுகை வந்து விட்டது. மனைவியும் மகளும் பார்க்கா வண்ணம் கண்ணை துடைத்து கொண்டார்.

கிரிக்கெட் கார்னர்


மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் தொடரில் டெஸ்ட் மேட்சை விட பரவாயில்லாமல் இந்தியா ஆடுது. நேற்று காதலர் தினத்தன்று நடந்த மேட்ச்சில் சச்சின் நூறாவது செஞ்சுரி அடித்து எல்லாருக்கும் வாலண்டைன் டே கிப்ட் தருவார் என எண்ணி ஏமாந்தேன். சச்சினின் சிறந்த செஞ்சுரிகள் குறித்த பதிவை நூறாவது செஞ்சுரி அடித்த பின் தான் வெளியிடனும் என காத்திருந்து காத்திருந்து கிழவன் ஆகி வருகிறேன் !

Tuesday, February 14, 2012

சுஜாதாவின் "சிவந்த கைகள்": அலுவலக பாலிடிக்ஸ் குறித்த நாவல்

ஒரு நிறுவனம்.அதன் அரசியல், பதவி உயர்வுக்கான போட்டி இவற்றை பின்புலமாக கொண்ட நாவல். செம விறுவிறுப்பான எழுத்து. படிக்க ஆரம்பித்த பின் இருந்த வேலைகளை ஒத்தி போட்டு விட்டு முடித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன்

கதை

விக்ரம் என்கிற இளைஞன் இந்தியாவின் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். சேரும் முதல் நாளே " என்றாவது ஒரு நாள் எம். டி சீட்டை பிடிக்க வேண்டும்" என்கிற அளவு வேகம் உள்ளவன். எம். பி. ஏ படிப்பிருந்தால் தான் அந்த வேலை கிடைக்கும் என்பதால் பொய் சர்டிபிகேட் தயாரித்து தந்தான் என்பது அவன் மனதை உறுத்தியவாறே இருக்கிறது.

அவனது பாஸான அசோக் - எம். டி. க்கு மிக பிரியமானவன். அசோக் அடுத்த டைரக்டர் ஆக போகிறவன் என்கிறார்கள். விக்ரம், அசோக் இருவரும் எம். டி. மகளுடன் நெருக்கமாக பழகுகிறார்கள். அசோக்கை டைரக்டர் ஆக அறிவிக்கும் முன் ஹார்ட் அட்டக் வந்து உடல்நிலை பாதிக்கப்பட, டைரக்டர் ஆகும் வாய்ப்பு விக்ரமுக்கு வருகிறது. " ஆறு மாதம் observe-செய்து விட்டு அதன் பின் டைரக்டர் ஆக்குகிறேன்" என்கிறார் எம்.டி!


அந்த ஆறு மாதத்தில் பேய் மாதிரி உழைத்து நல்ல பேர் வாங்குகிறான். ஆனால் அவன் எதற்கு பயந்தானோ அது நடந்து விடுகிறது. அலுவலகத்தில் உள்ள ஒரு வயதானவர் விக்ரம் டிகிரி பொய் என்பதை கண்டு பிடிக்கிறார். அவன் எவ்வளவோ பேசி பார்த்தும் அவர் எம்.டி இடம் சொல்வேன் என மறுபடி மறுபடி சொல்ல, ஒரு sudden provocation-ல் அவரை கொன்று விடுகிறான் விக்ரம். அதற்கு பிராயச்சித்தமாக அவர் மகளுக்கு அதே நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறான்.

என்னடா கதை சம்பிராதயமாக முடிகிறதே, அதுவும் தப்பு செய்தவன் எந்த தண்டனையும் இன்றி தப்பிக்கிறானே என நினைக்கும் போது கடைசி பக்கத்தில் சின்ன டுவிஸ்ட் வைத்து வழக்கம் போல ஒரு கேள்வி குறியுடன் முடிக்கிறார் சுஜாதா.

இதன் முடிவு பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்க கடிதம் மேல் கடிதமாக சுஜாதாவிற்கும், நாவலை வெளியிட்ட மணியனுக்கும் எழுதித் தீர்த்தனர். எனவே ரசிகர்களின் ரசனைகேற்ப்ப இதன் இரண்டாம் பாகமாக "கலைந்த பொய்கள்" என்னும் நாவலை மணியன் மாத இதழில் எழுதினார். இதில் கதாநாயகி தந்தையைக் கொன்ற கதாநாயகனை பழிவாங்குவதாக கதையை அமைத்திருந்தார் சுஜாதா ! (தகவலுக்கு நன்றி: வாசகன் ).

***

அலுவலக அரசியல் வைத்து இத்தனை சுவாரஸ்ய கதை நிச்சயம் நான் வாசித்ததில்லை. விக்ரம் அந்த கொலை செய்யும் வரை நாம் எம்.பி ஏ என்கிற பொய்க்காக மாட்ட கூடாது என்று தான் நினைக்கிறோம். ஆனால் அந்த கொலை செய்த பின் நம் கோபம் அவன் மேல் திரும்பி விடுகிறது.

கதையின் துவக்க அத்தியாயங்களை சுஜாதா ஏனோ சிறு வாக்கியங்களிலேயே எழுதி உள்ளார். சில வாக்கியங்களில் இரண்டே வார்த்தைகள். சில நேரம் ஒரே வார்த்தை. ஆனால் இது மிக சுவாரஸ்யமாக உள்ளது.

பொய் சொல்வதற்கு சில விதிகள் என்று சொல்லி விட்டு இப்படி சொல்கிறார் சுஜாதா:

1. சின்ன விஷயங்களுக்கு பொய் சொல்லாதே.
2. குறிக்கோள் மிக முக்கியமானதாக இருந்தால் தான் பொய் சொல்ல வேண்டும்.
3. எவரும் எதிர் பாராத நேரத்தில் பொய் சொல்லு.
4. யோக்கியமாக பொய் சொல். அண்ட புளுகு புளுகாதே. நம்பும் படியாக இருத்தல் வேண்டும் உன் பொய்.

அதிசயமாய் கதையில் சில ஓட்டைகள். குறிப்பாய் விக்ரமுக்கு கார் ஓட்ட தெரியாது என்று சொல்லி விட்டு அடுத்த அத்தியாயத்தில் அவன் தனியே கார் ஓட்டி (அதுவும் ஐந்து மணி நேரம் தள்ளி உள்ள ஊருக்கு) சென்றான் என்று சொல்வது நெருடல்.

இந்த நாவல் ஒரு மாத நாவலாக மணியன் புத்தகத்தில் வந்தது என்பது ஆச்சரியம் தரும் செய்தி. இத்தனை குவாலிட்டி ஆன நாவல் மாத நாவலாக வந்துள்ளதா!! வழக்கமாய் மாத நாவல் எழுதுவோர் இந்த நாவலில் பாதி குவாலிட்டிக்கு எழுதினாலே போதும் !

விறுவிறுப்பு, நகைச்சுவை, மெசேஜ் என எல்லாம் கலந்த இந்த சுஜாதா
ஸ்டெயில் கதையை அவசியம் வாசியுங்கள் !

நாவல் பெயர்: சிவந்த கைகள்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 60

நன்றி: பதிவர் ரகு

திண்ணை பிப்ரவரி 5, 2012 தேதியிட்ட இதழில் வெளியானது

Saturday, February 11, 2012

காஞ்சிபுரம் : பட்டுபுடவை நெய்யும் காட்சி படங்கள் & வீடியோ

நண்பர்களே சென்ற பதிவில் சொன்னது போல் இது காஞ்சிபுரம் குறித்த நிறைவு பகுதி அல்ல. மீதம் இருக்கும் கோயில்கள் மற்றும் பட்டு புடவை நெய்யும் காட்சிகள் ஒரே பதிவில் அடக்கினால், மிக மிக நீளமாக போவதால் இந்த பதிவை தவிர இன்னும் ஒரு பதிவு இருக்கும். நிச்சயம் அது நிறைவு பகுதியாக இருக்கும் !

பட்டுபுடவை நெய்யும் காட்சி   காணும் முன் புகழ் பெற்ற  இரு கோயில்களை குறித்து வாசித்து விடுவோம் !

***
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 15-க்கும் மேல் காஞ்சிபுரத்திலேயே உள்ளது !! அதில் முதன்மையான கோயிலில் ஒன்று உலகளந்த பெருமாள் கோயில் ! இந்த கோயிலுக்கு வந்தால் 108-ல் மூன்று பேரை தரிசித்து விடலாம் ..திருக்காரகம், திருநீரகம், திரு கார்வண்ண பெருமாள் என மூன்று பெருமாள்கள் இங்கு உள்ளனர்.

பள்ளியில் படித்த போதே கேள்வி பட்ட கதை தான்: ஒரு அரசன் மக்களை மிகுந்த கொடுமை படுத்த பெருமாள் துறவி வடிவில் வந்து யாகம் செய்கிறார். அரசன் பெருமாளிடம் வந்து " தங்களுக்கு என்ன வேண்டும்?" என கேட்க, "மூன்றடி நிலம் வேண்டும்.. யாகம் செய்ய " என்கிறார் பெருமாள். "" மூன்றடி தானே எடுத்து கொள்ளுங்கள்" என்று சொல்ல, பெருமாள் முதலடியில் உலகையும், அடுத்த அடியில் வானத்தையும் தாண்டி விட்டு, மூன்றாவது அடி எங்கு வைப்பது என கேட்க, அரசன் தன் தலையில் அந்த காலை வைக்குமாறு பணிகிறான். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயில் தான் இது !!

இந்த கதையை நினைவு படுத்தும் விதமாக பெருமாள் ஒரு காலில் நின்ற வண்ணம் இருக்கிறார். தரையில் ஊன்றிய காலின் கீழே அந்த அரசனின் தலை உள்ளது. ஒரு கால் அந்தரத்தில் நிற்கிறது. ஒரு கை விண்ணையும், மண்ணையும் தாண்டியதை குறிக்கும் வண்ணம் இரண்டு விரல்களை காட்டுகிறது. மற்றொரு கை ஒரு விரல் மட்டும் காண்பிக்கிறது.




மிக பெரும் உயரத்தில் இருக்கும் இந்த பெருமாளுக்கு தினம் அபிஷேகம் செய்ய மாட்டார்களாம். குறிப்பிட்ட ஒரு தைலம் தான் சிலை மீது பூசுவார்களாம். மேலே எந்த வஸ்திரமும் போடுவதில்லை.

இதே கோயிலில் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் அர்ச்சகராக பணியாற்றி இருக்கிறார் என அங்கிருக்கும் சுவரில் எழுத பட்டிருக்கிறது.

ஒரு செட்டியார் குடும்பம் வசம் இந்த நிலம் இருந்ததாகவும் 1899 ஆம் ஆண்டில் அவர்கள் இதனை கோயில் நிர்வாகத்துக்கு தந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

இவ்வளவு புகழ் பெற்ற ஸ்தலத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வே மனதை என்னவோ செய்தது.
 கோயிலின் உள்ளே உள்ள பிரகாரம்
எங்கே உள்ளது: இக்கோயில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது. இக்கோயிலுக்கு அடுத்த தெருவில் புகழ் பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஓரிரு நிமிடத்தில் நடந்து போகும் தொலைவில் உள்ளது

**********

அடுத்து சொல்ல போவது : வைகுண்ட பெருமாள் கோயில். மிக அற்புதமான சிற்ப வேலை பாடுகளுடன் கூடியது. அற்புதமான தோட்டம், புல்வெளி இங்கு மிக நன்றாக பராமரிக்க படுகிறது.

பொதுவாக கோயில் உள்ளே அல்லது வெளியே எங்காவது ஒரு இடத்தில் தான் புல்வெளி இருக்கும். இங்கு உள்ளே, வெளியே இரு இடத்திலும் புல்வெளி மிக அழகு
வெளியிலிருந்து கோயிலின் தோற்றம்

கொடி மரம் அருகிலிருந்து எடுத்த படம்

அருமையான சிற்ப வேலைகள் 
இந்த கோயில் எவ்வளவு பெரியது, இங்கு சிற்ப வேலைகள் எவ்வளவு அழகு என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் 






கோயில் வெளி சுவரில் அமர்ந்திருக்கும் புறாக்கள் 

கோயிலுக்கு மிக அருகில் இருக்கும் தர்க்கா 
                                                    ****

பட்டு புடவை சமாசாரத்துக்கு வருவோம் !

காஞ்சிபுரத்தில் ஆட்டோவில் ஏறும் போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனர்கள் உங்களை பட்டு புடவை நெய்யும் இடத்துக்கும், கடைக்கும் கூட்டி செல்வதில் மிக ஆர்வமாய் இருப்பார்கள். " சார் இருபது ரூபா குடுங்க போதும்; கோயில் பாத்துட்டு புடவை கடைக்கு போகலாம்" என்கிறார்கள். கஸ்டமர் கொண்டு வந்தால் அவர்களுக்கு கமிஷன் உண்டு போலும் !! ஆனால் அவர்கள் கூட்டி செல்லும் கடைகளில் பட்டு நன்றாக இல்லை என்பது கவனத்துக்குரியது. தனியார் தறிகளுக்கு தான் அழைத்து போகிறார்கள். அரசாங்கம் நடத்தும் கடைகள் சில நம்பிக்கையானவை என தெரிந்தவர்கள் சொல்லியிருந்தார்கள். அங்கு கூட்டி செல்வதே இல்லை.

நாங்கள் ஒரு தனியார் கடையில் புடவை நெய்யும் விதத்தை பார்த்தோம் அங்கு எடுத்த படங்கள் இதோ :





நெய்து முடித்த புடவையை எப்படி மடிக்கிறார்கள் பாருங்கள். கையாலேயே மடித்து இரு கம்பிகள் இடையே புடவையை வைத்து நூல் போட்டு கட்டி விடுகிறார்கள்.


புடவை நெய்யும் விதத்தை நான் விவரிப்பதை விட இந்த வீடியோவில் நீங்களே பார்த்து மகிழலாம் !




இந்த வீடியோவும் பட்டு புடவை நெய்வது தான். அந்த பேனா மாதிரி சமாசாரத்தை (இதன் பெயர் "நாடா" ) போட்டு போட்டு எடுப்பதை மட்டும் முக்கியமாக எடுத்துள்ளேன் 



********
தொடர்புடைய பதிவுகள் :


பகுதி 1: காஞ்சி பயணக்கட்டுரை மினி டிரைலர்


பகுதி 2 : காஞ்சி: ஏகாம்பரேஸ்வர் கோவிலும் ஒரு நல்ல துணிக்கடையும்

பகுதி 3 : காஞ்சி காமாட்சி அம்மனும், காஞ்சியில் தங்க நல்ல இடமும்


அடுத்த (நிறைவு) பகுதியில் :


வரதராஜ பெருமாள் கோவில்

புகழ் பெற்ற தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி

காஞ்சிபுரம் எளிதில் செல்வது எப்படி?

Friday, February 10, 2012

மெரினா : விமர்சனம்

பசங்க- எனது Alltime favourite படங்களில் ஒன்று.  சிறுவர்களை பின்புலமாக கொண்ட படம் என்றாலே சற்று பிடிக்க தான் செய்யும். எனவே மெரீனா மீது சற்று எதிர்பார்ப்பு இருந்தது உண்மை. 

ஐந்து நாள் கழித்து விமர்சனம் எழுதுவதால் ப்ளாக் படிக்கும் அனைவருக்கும் இந்நேரம் கதை ( !!??) தெரிந்திருக்கும். சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில், "பீச்சில் வியாபாரம் செய்து பிழைக்கும் சிறுவர்கள் குறித்த கதை". இறுதியில் அவர்கள் படிக்க போவதாக காண்பித்து முடிக்கிறார்கள். (நிஜத்தில் இப்படி நடந்தால் நல்லா இருக்கும்!!)

சரி மற்ற விஷயங்களுக்கு வருவோம்

படம் வரும் முன் எதிர்பார்த்தது போல் சிவகார்த்திகேயன் ஹீரோ அல்ல. பக்கடா தான் ஹீரோ. சிவா அவ்வப்போது வந்து போகும் சிறு கேரகடர் செய்துள்ளார். விஜய் டிவியில் இவர் செய்யும் அமர்க்களம், அதில் இவரை ரசிக்கும் மக்கள் கூட்டம் மிக மிக பெரிது !

மெரினாவில் சிவா ஒகே என்றாலும் நடிப்பில் என்னமோ ஒன்று குறைகிறது. காமிரா conscious-ஆ என தெரியலை. சூர்யா, விஜய் மாதிரி இன்று கலக்கும் பெரும் நடிகர்களே முதல் சில படங்களில் சுமாராக தான் நடித்தனர். தனது தவறுகளில் இருந்து கற்று கொள்ளும் ஆர்வம் இருந்தால் சிவா நிச்சயம் மேலே வருவார்.

சிவா நண்பனா வருபவர் ஏகப்பட்ட காதல் பழமொழிகளை எடுத்து விடுறார். " காதல் பற்றிய அறிஞர்கள் பொன்மொழிகள்" ன்னு ஒரு புக் கிடைக்குது. இந்த பழமொழிகள் எல்லாம் இந்த புக்கில் ஏற்கனவே படிச்சுட்டேன் . அதே புக்கை தான் பாண்டிராஜ் வாங்கி சிவா நண்பரை விட்டு பேச வைத்துள்ளார். நிஜத்தில இந்த மாதிரி யார் எப்ப பார்த்தாலும் பொன்மொழிகளா பேசுறாங்க !! முடியல !

வணக்கம் சென்னை பாடல் நிஜமாகவே ரொம்ப நல்ல கான்செப்ட். சென்னை பற்றிய பாடல் என்பது எப்படி இதுவரை மற்ற இயக்குனர்களுக்கு தோன்றாமல் போயிற்று? சென்னை லட்சக்கணக்கான மக்கள் வாழும் ஊர் என்பதால் அத்தகைய பாடலுடன் நிறைய பேர் எளிதில் relate செய்து ரசிப்பார்கள்.

இப்பாட்டின் promo-பார்த்த போது " தெரிந்த பிரபலங்கள் வைத்து எடுத்துள்ளனரே.. !  சென்னையை  மட்டுமே முழுக்க  focus -செய்து எடுத்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்தேன். படத்தின் டைட்டிலில் இப்பாடல் வருகிறது. நாம் promo-வில் பார்த்தது போல் இல்லாமல் முழுக்க சென்னையை சுற்றியே பாடல் சுழல்கிறது !

புது இசை அமைப்பாளர் கிருஷ்ஜி ! சின்ன பையன் போல தான் இருக்கார். வர வர மிக இளைய இசை அமைப்பாளர்கள் தமிழ் திரை உலகுக்கு வர ஆரம்பித்து விட்டனர்.  இரு பாடல்கள் ஓகே ரகம் !

ஒரு சில பதிவர்கள் சொன்னது போல் பீச்சில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தான் எவ்வளவு ! இவற்றை தவிர்த்து விட்டு பீச் வாழ்க்கை மிக ஜாலி ஆனது என்கிற மாதிரி படம் எடுத்தது உறுத்துகிறது.
அதிஷா எழுதியது போல் இதை பார்த்து விட்டு சென்னைக்கு ஓடி போனால் ஜாலியாக பிழைக்கலாம் என்கிற எண்ணம் பாட சுமை உந்தி தள்ளும் பள்ளி சிறுவர்களுக்கு தோன்ற,  இந்த படம் ஒரு காரணமாக இருந்து விட கூடாது !


சில பெண்கள் சுமாராக தான் இருப்பார்கள். ஆனால் கொஞ்சமே கொஞ்சம் மேக் அப் போட்டால் செம அழகாய் தெரிவார்கள். ஓவியா அந்த ரகம் தான் !  அழகை பார்த்தோமோ, ரசித்தோமா என்று போயிடனும். அதுக்கு மேல் நடிப்பெல்லாம் எதிர்ப்பார்க்க கூடாது. இந்த கொள்கையுடன் பார்த்தால் ஓவியாவை ரசிக்கலாம்.

பீச்சில் எப்போதும் பழைய பாட்டு பாடுகிற ஆளாய் ஒருவர் வருகிறார். இவர் பாடும் போது யாராவது ஒரு சிங்கரை வைத்து அந்த பாட்டை பாட வைத்திருக்கலாம். ஆனால் TMS குரலில் அப்படியே அந்த பாட்டையே ஒலிக்க வைக்கிறார்கள். இது TMS பாட்டுக்கு இவர் வாய் அசைக்கிற உணர்வையே தருகிறது.

சிவா- ஓவியா காதல் நிச்சயம் பல சென்னை காதல்களை பிரதிபலிப்பதாக உள்ளது !

" பீச்சை வாடகைக்கு விட்டுருக்கேன்" எனும் மனநிலை சரியில்லாத நபர் அவ்வப்போது நன்கு சிரிக்க வைக்கிறார்.

சென்ற சில வாரங்களாக நல்ல படங்கள் ரிலிஸ் ஆகாத நிலையில் லோ பட்ஜெட்டில் எடுத்த இந்த படம் இரண்டு வாரம் ஓடினாலே அனைவருக்கும் நஷ்டமில்லாமல் காசு பாத்துடுவாங்கன்னு நினைக்கிறேன் !

சென்னை, குறிப்பாய் மெரீனா கடற்கரை குறித்த நல்ல ப்ளாட் + சிறுவர் கல்வி என்கிற நல்ல கருத்து இருந்தும், மனதை தொடும் கதை இல்லாததால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காமல் போகிறது.

இருப்பினும், சற்றே வித்யாசமான படம் என்கிற அளவில் ஒருமுறை பார்க்கலாம் !

டிஸ்கி: காஞ்சிபுரம் பயண கட்டுரை ஓரிரு நாட்களில் வெளியாகும் ! பொறுத்தருள்க !

Wednesday, February 8, 2012

வானவில் - 75; பதிவுகள் :300 !

மனதை வருத்திய மரணம் - 1

பதிவர் ராஜேஷ் (மாய உலகம்) இளம் வயதில் மரணம் அடைந்தது மிகவருத்தம் தந்தது. என்ன ஆனது, எப்படி இறந்தார் என்கிற தகவல் இது வரை எனக்கு புரிய வில்லை. இவர் மறைவை ஒட்டி, நேற்று துக்க தினமாக அனுசரித்து ஏராளமான பதிவர்கள் பதிவுகளை வெளியிடாமல் இருந்தனர். இந்த தகவல் சரியாக சென்று சேராததாலோ என்னவோ, ஒரு சிலர் பதிவுகள் வெளியிட்டாலும், பெரும்பான்மை பதிவர்கள் நேற்று பதிவு வெளியிடாமல் இருந்தது நெகிழ்வாக இருந்தது.


மனதை வருத்திய மரணம் - 2

 என் பெண்ணின் வகுப்பு தோழியின் தந்தை இந்த வாரம் இறந்து விட்டார்.நாற்பத்தைந்து வயது தான் இருக்கும். மாசிவ் ஹார்ட் அட்டாக் ! துக்கத்துக்கு சென்ற போது கேள்விப்பட்ட சில விஷயங்கள் மனதை சங்கடபடுத்தியது. அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்திருக்கிறது. அதற்கு எந்த மருந்தும் உட்கொள்ள வில்லை. டாக்டரிடம் செல்வதென்றாலே அவர் ஒத்துக்கொள்ள மாட்டாராம்.

குறிப்பிட்ட தினத்தன்று இரவு இடதுகை வலி என்று கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் அந்த கையில் அடி பட்டிருக்க, அதனால் தான் வலி என தைலம் தேய்த்துள்ளனர். "தரையில் படுக்க முடியலை" என சொல்லியிருகிறார் பின் பெட்டில் படுத்த பின் நிறைய வேர்த்து கொட்டியிருக்கிறது. டாக்டரிடம் செல்லலாம் என்றால் அவர் ஒத்து கொள்ள வில்லை. மிக வற்புறுத்தி அழைத்து செல்ல, வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது. + 1 மற்றும் 8th படிக்கும் இரு குழந்தைகளையும், ஹவுஸ் வைப் ஆன மனைவியையும் விட்டு விட்டு போய் விட்டார் !

இதனை விதி என்று சொல்வதை மனம் ஏற்க மறுக்கிறது. உடல்நலன் மேல் உரிய அக்கறை காட்டாதது தான் இந்த மரணத்துக்கு காரணம் !

ரத்த அழுத்தத்துக்கு உரிய மருந்து சாப்பிட்டு தொடர்ந்து மருத்துவர் ஆலோசனை பெற்றிருந்தால் இந்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது !

நம் உடலுக்கு சின்ன பிரச்சனை என்றாலும் டாக்டரிடம் காண்பித்து உரிய சிகிச்சை எடுப்பது எவ்வளவு முக்கியம் ! இதனை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் !

மறைந்த இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் ! அவர்தம் குடும்பத்தார் இதிலிருந்து மீண்டு வரும் வலிமையை இறைவன் அளிக்கட்டும் !

ரேஷன் கடையில் ஒரு அனுபவம்

நாங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பது அது ஒரு அடையாள அட்டை என்கிற காரணத்துக்காக தான். அதில் பொருட்கள் அவ்வப்போது வாங்கா விடில்- அட்டை invalid ஆகிவிடும் என்பதால் மூன்று மாதத்துக்கொரு முறை சர்க்கரை மட்டும் வாங்குவோம். இப்போது இந்த வருடத்துக்கு ரேஷன் அட்டை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. அதற்காக சென்றபோது " நீங்கள் ரெண்டு மாசமா ஏதும் வாங்கலை; அதனால் உங்களுக்கு renew பண்ண முடியாது; உங்க கார்ட் invalid-என அரசுக்கு சொல்லிட்டோம் " என்றனர்.

" அதெப்படி முடியும்? கடந்த பத்து வருஷமாக 2,3 மாதத்துக்கு ஒரு முறை தான் வாங்கி வருகிறேன். நீங்க தரும் நாலரை கிலோ சர்க்கரையை மாசா மாசம் வாங்கி நான் என்ன செய்வது?" என சற்று வாக்குவாதம் செய்ததும் உடன் ரேஷன் கார்ட் renew-செய்து தந்தனர். (அப்படினா என் கார்ட் invalid-என அரசுக்கு தகவல் அனுப்பியதா சொன்னது பொய் !) அப்புறம் சொல்றாங்க " நீங்க மாசா மாசம் வராட்டி கூட பரவாயில்லை; வர மாட்டோம்னு எங்க கிட்டே சொல்லிடுங்க" அட ! நாம முன்னாடியே சொல்லிட்டா அந்த பொருளை மத்தவங்களுக்கு வெளி மார்கெட்டில் வித்துடலாம் பாருங்க !

ஒரு அடையாள அட்டையாக ரேஷன் கார்டை வைத்து கொள்ள இப்படி போராட வேண்டியிருக்கு ! நீங்க இதுவரை ரேஷன் கார்ட் புதுப்பிக்காட்டி, உடன் செஞ்சுடுங்க !

வானவில் - 75 ! பதிவுகள் :300 !


நண்பர்களே, இது எனது 300-வது பதிவு. இதையொட்டி மிக சின்ன பிளாஷ்பாக்.

2008-ல் ப்ளாக் துவக்கினாலும் அப்போதெல்லாம் ஓரிரு மாதங்களுக்கு ஒரு பதிவு எழுதி விட்டு, எனது நண்பர்களுக்கு மெயில் மூலம் தகவல் தருவதோடு சரி. திரட்டிகள் பற்றி நவம்பர் 2009-ல் தான் தெரிய வந்தது. Follower gadget இணைத்தது, தமிழ் மணம் மற்றும் இன்ட்லியில் இணைத்தது எல்லாமே நவம்பர் 2009-ல் தான் ! என்னை பொறுத்த வரை நவம்பர் 2009- ஐ தான் ப்ளாக் உலகிற்கு வந்த நேரமாக கருதுகிறேன். (அதற்கு முன் எழுதியவை 12 பதிவுகளே !) இந்த இரண்டரை வருடத்தில் 300 பதிவுகள் என்பது வேகமான ஒன்றல்ல. மிதமான வேகத்தில் தான் செல்கிறது பதிவுலக பயணம்.

கடந்த சில மாதங்களாக வீடு திரும்பலில் பதிவுகள் நிறையவே வெளியானாலும் இணையத்தில் உலவும் நேரத்தை முடிந்த அளவு
குறைத்துள்ளேன். நெருங்கிய நண்பர்கள் பதிவுகள் வாசிக்க , தேவைப்படும் போது பின்னூட்டம் இட தவறுவதில்லை. ஆயினும் முன்பை விட இணையத்தில்  செலவிடும் நேரம் நிச்சயம் குறைத்தாயிற்று.
வானவில்லுக்கு இது 75-ஆவது பதிவு !! இதுவரை 300-பதிவுகள் எழுதியது ஆச்சரியமாக இல்லை. ஆனால் வானவில் 75 பதிவுகள் என்பது ஆச்சரியமாக தான் உள்ளது. இனி எத்தனையாவது வானவில் என்கிற எண்ணுடன் ( 76 / 77 என ) பிரசுரிக்க எண்ணம். இந்த வாரம் முதல் வானவில் வாரா வாரம் புதன் கிழமையில் வெளியாகும் !

தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள் !

சென்னை குறித்த பாடல் 

சென்னை குறித்தே ஒரு அழகான பாடல் !  நல்ல வரிகள் மற்றும் ரசிக்க வைக்கும் pictuarization ! சசிகுமார், விமல், ஸ்னேஹா ஆகியோர் வருகிற சில இடங்கள் எனக்கு மிக பிடித்தது. நா. முத்து குமார் பாடல் வரிகளில் நிறையவே ரசிக்கும் படி இருந்தது. இதுவரை பார்த்திராவிடில் பார்த்து மகிழுங்கள்.




போட்டோ கார்னர்

பக்கத்து வீட்டில் வளரும் நாய் "மில்க்கி" ! செம பயந்தாங்கொல்லி !! பயத்தாலேயே யாரை பார்த்தாலும் கன்னா பின்னாவென்று குலைக்கும். இங்கு சாதுவாக சேர் மேல் தாடை வைத்தவாறு உட்கார்ந்திருக்கிறது.


Zoom செய்து எடுத்த போட்டோ இது ! கிட்டே போனால் பயத்தில் கத்தி கொண்டு எழுந்திருக்கும். இந்த போஸ் கிடைத்திருக்காது !

Mrs.அய்யாசாமியும் மொபைல் போனும்
Mrs.அய்யாசாமி ஒரு நாள் அலுவலகத்திலிருந்து பதட்டமாக போன் செய்து தன் மொபைல் தொலைந்து போய் விட்டது என்றார். அய்யாசாமி எப்படி இதற்கு ரீ-ஆக்ட் செய்வது என்று புரியாமல் " தேடி பாரு கிடைக்கும்" என்றார். " எல்லா இடமும் தேடியாச்சு. டீ குடிக்க போனேன். நீங்க போன் பண்ணுவீங்கன்னு தான் எடுத்துட்டு போனேன்; காணா போச்சு; எல்லாம் உங்களால தான் !" என்றார் தடாலடியாக !

" கவலை படாதே. வீட்டுலே வந்து தேடி பார். இருக்கும்" என்றார்.. கம்பியூட்டரிலிருந்து கண்ணை எடுக்காமல் ! " டீ குடிக்க எடுத்துட்டு போனேன். காணா போச்சுங்கரேன்; வீட்டுல வந்து தேடி பாக்க சொல்றீங்க; உங்க கிட்டே போய் சொன்னேன் பாருங்க " என அடி பலமாக விழவே, அத்தோடு பேச்சு முடிந்தது. வீட்டுக்கு போனபின்னும் இந்த வாக்குவாதம் (!!) தொடர , " நாளை காலை ஆபீஸ்போகும் முன்னே ஒரு புது போன் வாங்கி இவளை அசத்திடனும்" என முடிவெடுத்தார் அய்யாசாமி. அப்படியே மறுநாள் புது போனும் வாங்கி விட்டார்.

அலுவலகம் வந்தவுடன் அவருக்கு போன். " என்னங்க என் போன் கிடைச்சிடுச்சு !" " எப்புடி?"

" அட்மினில் டீ கார பையங்க, அட்டெண்டர் இவங்களை எல்லாம் கூட்டி வச்சு பேசிருக்காங்க. அந்த அம்மாவோட வீட்டுக்காரர் " பயங்கரமான" வக்கீல். போலிசை கூட்டிட்டு வந்துடுவார். ஒழுங்கா எடுத்தவங்க அதே இடத்தில் வச்சிடுங்க" அப்படின்னு பயமுருதிறுக்காங்க. அதான் எடுத்த ஆள் போனை வச்சிட்டான். நீங்க வக்கீல் படிச்சதுக்கும் எதோ கொஞ்சம் யூஸ் இருக்கு " என்று சொல்ல,

கையிலிருந்த புது போனையே பார்த்தவாறு "இதை வாங்கினதுக்கு சாயந்திரம் என்னென்ன திட்டு விழுமோ !" என பயந்து நடுங்கி கொண்டிருந்தார் " படு பயங்கர" வக்கீலான அய்யாசாமி!
Related Posts Plugin for WordPress, Blogger...