Thursday, March 24, 2016

மூணு பந்து; 2 ரன்; 1 ரன்னில் வெற்றி.. இந்தியா வெற்றிக்கதை

ந்தியா Vs பங்களா தேஷ் மேட்ச் இவ்வளவு க்ளோஸ் ஆக இருக்கும் என யாரும் நினைக்க வில்லை.

அண்மையில் நடந்த ஆசிய கோப்பையில் 2 முறை பங்களா தேஷை நையப் புடைத்தோம். அதன்பின் 2 முக்கிய வீரர்கள் தடை  செய்யப்பட அவர்கள் அணி இன்னும் பலவீனமானது..

இந்நிலையில் இந்தியாவிற்கு ஜெயிக்க வேண்டிய இந்த லீக் மேட்ச்.

இந்தியா - இந்த மேட்சை ரன் ரேட் அதிக படுத்திக்கொள்ள பயன்படுத்தும் என்பதே பலர் எதிர்பார்ப்பாய் இருந்தது. கடைசியில் ஜெயித்ததே நம்ப முடியாத miracle  ஆனது !

இந்தியா பேட்டிங்

ஷீக்கர் தவான் மிகப் பெரும் influence உள்ள ஆளா? ஒன் டே, டெஸ்ட் மேட்ச், 20-20 எதுவாயினும்  5 - 6 மேட்சிற்கு ஒரு முறை 50 அடிப்பார். அதுவும் சர்வ நிச்சயமாய் இதற்கு மேல் தாங்காது; நிச்சயம் டிராப் தான் எனும் நிலையில் மட்டுமே அது நடக்கும். இவருக்கு கிடைக்கும் அளவு வாய்ப்புகள் கிடைத்தால் - நானே இந்திய அணியில் ஆடி விடலாம் :) 6 மேட்சிற்கு ஒரு முறை கொஞ்சம் ஸ்கோர் அடிப்பது பெரிய விஷயமா என்ன?

ரோஹித் முன்னே செல்ல, ஹட்ச் டாக் விளம்பரம் போல தவான் அவர் பின்னே நடையை கட்ட (நன்றி மீம்ஸ் கிரியேட்டர்கள் ) - 2 விக்கட் அவுட்.

ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கோலி மற்றும் அவுட் ஆப் பார்ம் ரைனா - நன்கு ஆடி சரிவிலிருந்து மீட்டனர். பின் இருவருமே அனாவசியமாய் அவுட் ஆக, யுவராஜும் திக்கி திணறி அவுட்

பாண்டியா - வந்த மாத்திரத்தில் சிக்ஸ் ஒன்றும் நான்கு ஒன்றும் அடிக்க, "தம்பி .. கொஞ்சம் நின்னு ஆடுப்பா " என்று சொல்வதற்குள் அட்டகாச கேட்ச் ஒன்றில் அவரும் வெளியேற....

தோனி - 20 ஓவர் ஆடினா போதும் என நிதனாமாய் ஸ்கோரை 146 ரன்னிற்கு கொண்டு வந்தார்...

இந்தியா ஜெயிக்க இந்த ஸ்கோர்  போதுமா என்பது நிச்சயம் சந்தேகம் !!!

பங்களாதேஷ் இன்னிங்க்ஸ் 

நெக்ரா, பும்ரா - 2 பவுலருமே - மிக மோசமான பீல்டர்களாய் இருக்கும் கொடுமையை என்ன சொல்வது !! பும்ரா ஒரு ரன் போக வேண்டிய பந்தை நான்கிற்கு வழிய விட்டதோடு, முக்கிய ஆட்ட காரருக்கு அல்வா கேட்ச் ஒன்றை நழுவ விட்டார்.

அஷ்வின் தன் பங்கிற்கு ஒரு கேட்ச் விட, பாண்டியா நான் மட்டும் சளைத்தவனா என தேவையின்றி - ஓவர் த்ரோ செய்து - எக்ஸ்ட்ரா - 2 ரன் தந்தார்.

இவ்வளவு குறைந்த ஸ்கோர் ஜெயிக்க ஒரே வழி - உயிரை கொடுத்து பீல்டிங் செய்வது தான். இங்கோ நிலைமை - கொடுமை... !!

துவக்கத்தில் அட்டகாசமாய் பந்து வீசியது அஷ்வின் தான். அதிலும் இடது கை மட்டையாளர்களுக்கு - அவர் போட்ட பந்துகள் - பாம்பு போல் வளைந்து சென்றன.

ஜடேஜா பந்தை கூட அவர்களால் அதிகம் அடிக்க முடியவில்லை. தோனி - ரைனா மற்றும் யுவராஜிற்கு கொஞ்சம் ஓவர்கள் கொடுத்து பார்த்திருக்கலாம்.. (ரைனா ஒரு ஓவர் போட்டார்) ; பிட்ச் நிச்சயம் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாய் இருந்தது.

10 ஓவரில் - 3 விக்கெட் மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது பங்களா தேஷ்.. விக்கெட் ஒரு பக்கம் விழுந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ரன் ரேட் அதிகம் ஏறாமல் - நன்கு ஆடினார்கள்.

கடைசி 4 ஓவர்கள் .. சௌமிய சர்க்கார் மற்றும் மகமதுல்லா என்ற 2 நல்ல பேட்ஸ்மேன்கள் ஆட .. 17வது ஓவர் பும்ரா பந்து வீசுகிறார்.. ஆறு பந்தும் மிக சரியான யார்க்கர்கள் !! எந்த இந்திய பவுலரும் இப்படி 6 சரியான யார்க்கர்கள் போட்டு பார்த்ததே இல்லை. மலிங்கா தவிர வேறு எந்த பவுலரும் 6 யார்க்கர் போட்ட நினைவில்லை. மிக அட்டகாசமான ஓவர் இது !

18 (நெக்ரா ), 19 வது (பும்ரா ) ஓவர்களும் ஓரளவு ஓகே. கடைசி ஓவரில் 11 ரன்னிருக்க - பாண்டியா கைவசம் பந்து வந்தது. 2வது மற்றும் 3 வந்து பந்தில் பவுண்டரி.. கடைசி 3 பந்தில் 2 ரன் - 2 செட் பேட்ஸ் மேன்கள் ஆடுகிறார்கள்.. இந்தியா ஜெயிக்கும் என இந்நிலையில் யாரும் பந்தயம் கட்டினால் - அவர் மிக பெரிய தைரியசாலி !!



(இப்போது நினைத்து பார்க்கும் போது அந்த கடைசி ஓவரில் Gambling - பல கோடிக்கு நடந்திருக்கும் ! வீரர்கள் இன்வால்வ்  ஆகியிருப்பார்கள் என சொல்ல வில்லை;  வெளி உலக Gambling - பற்றி சொல்கிறேன்; வீரர்கள் பங்கு பின்னாளில் தெரிய வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை  )

கடைசி ஓவர் - 4 மற்றும் 5 வது பந்தில் 2 வான வேடிக்கை; 2 பேர் அவுட். பவுலர் ஒருவர் இப்போது பந்தை எதிர்கொள்ள, ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர்; 2 என்றால் வெற்றி என்ற நிலையில் பாண்டியா பந்தை தொட முடியாமல் - தோணி ஓடி ரன் அவுட் செய்ய, இந்தியா கொண்டாடியது.....!!!!



***********
வெற்றிக்கு காரணம் ஒருவர் என இல்லாமல் - இது ஒரு டீம் effort தான். 30 ரன் அடித்த ரைனா, அட்டகாசமாய் பந்து வீசிய அஷ்வின் மற்றும் பூம்ரா, கடைசி பந்தை அருமையாக வீசிய பாண்டியா - தோனியின் கூல் கேப்டன்சி.. இப்படி எத்தனையோ காரணங்கள்..

உண்மையில் இந்த மேட்ச் நன்கு ஆடியது பங்களா தேஷ் தான்.. கடைசி 3 பந்து தவிர மற்ற அனைத்து நேரமும் அவர்கள் ஆதிக்கம் தான்.

இந்தியா Vs ஆஸ்திரேலியா மேட்ச் - ஒரு குவார்டர் பைனல் ஆகி விட்டது.. இரு அணிக்கும் சம வாய்ப்பு உள்ளது என்றே நினைக்கிறேன்..

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 3 - 20-20யிலும்   நாம் வென்றோம்; ஆனால் அப்போது அவர்களது நல்ல பிளேயர்கள் பலர் சவுத் ஆப்ரிக்கா (அடுத்த சீரிஸ்) சென்று விட்டனர். வார்னர், ஸ்மித், மேக்ஸ் வெல்- இந்த மூவரை எப்படி அவுட் ஆக்குகிறோம் என்பதில் இருக்கிறது நமது வெற்றியின் சூட்சுமம்..

இந்தியா பேட்டிங் மற்றும் பீல்டிங் -இரண்டிலும் முன்னேற்றம் காண்பது மிக அவசியம்.. பாண்டியாவிற்கு பதில் ஹர்பஜனை இறக்கினால் தவறில்லை; ஹர்பஜன் பந்திற்கு எப்போதும் ஆஸ்திரேலியர்கள் திணறுவர்; மேலும் பாண்டியா அடிக்கும் 15-20 ரன் - ஹர்பஜனும் 4 சுற்று சுற்றி எடுக்க கூடியவர்.. ஆனால் தோனி டீமை மாற்றுவது சந்தேகமே..
************
ஒரு ரன்னில் இந்தியா ஜெயித்த இந்த பங்களா தேஷ் மேட்ச் என்றேன்றும்   இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் ஒன்று.. !

1 comment:

  1. இந்தியா வெற்றியடையும் என்று கடைசிவரை நம்பிக்கையில்லாமல் பார்த்த மேட்ச் இதுதான்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...