Sunday, February 12, 2017

வானவில் - ஓ பி எஸ் vs சசிகலா - தள்ளி போகாதே- வாணி போஜன்

ஓ பி எஸ் vs சசிகலா 

ஓ பி எஸ் - ஜெ அவர்கள் சமாதியில் 40 நிமிடம் அமர்ந்துவிட்டு - பேசிய அந்த பிப்ரவரி 7 இரவில் - சமூக வலைத்தளங்களை பார்க்க வேண்டுமே.. அப்படியொரு தன்னெழுச்சி.. !

அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் நடந்திருந்தால் , சமூக வலைதள மக்கள் மட்டும் வாக்களித்தால் 234 தொகுதியிலும் ஓ பி எஸ் தான் ஜெயித்திருப்பார்  !

ஆனால் சோசியல் மீடியா மட்டுமே உலகம் இல்லையே !

நிற்க. ஓ பி எஸ் உத்தமர் அல்ல- தேனியில் பாதி ஊரை -  கடந்த சில வருடங்களில் வாங்கி விட்டார் என்பது சோசியல் மீடியா நண்பர்களிலும் பலர் அறிவர் .........என்றாலும், சசிகலா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் தான் ஓங்கி ஒலிக்கிறது.

Photo

118 என்பது தான் மெஜாரிட்டிக்கு தேவையான முக்கிய நம்பர் ! வெளிப்படையாய் 7 -8  MLA மட்டுமே ஓ பி எஸ் க்கு ஆதரவு தந்த நிலையில் இன்னும் 10-12 பேராவது சசி க்ரூப்பில் இருந்து வந்தால்  மட்டுமே சசி முதல்வர் ஆவதை தடுக்க முடியும்.

அல்லது கவர்னர் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக கருதி -மத்திய அரசின் கருத்தும் அதுவாக இருப்பின் -  ஆட்சியை கலைக்கவும் செய்யலாம்.

எனவே ஆட்சி கலைக்கப்பாட்டால் ஒழிய - சசிகலா முதல்வர் ஆகத்தான் வாய்ப்புகள் அதிகம்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதால் இப்போதுள்ள அதிமுக MLA க்களில் பலர் அடுத்த முறை தோற்பது உறுதி; அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை;  நான்கரை வருடம் சம்பாதித்தால் போதும்.

Photo

அதிமுக என்கிற கட்சி ஜெவுடன் இல்லாது போய்விடும் என பலரும் நினைத்தனர்; இப்போது ஓ பிஎஸ் என ஒரு தலைவர் - பொது மக்களால் ஏற்று கொள்ளும் அளவில் வந்துள்ளார். அவர் தலைமையில் ஆட்சி அமைந்தால்- அதிமுக நிச்சயம் வலுப்பெறும். நடுநிலை மக்கள் கூட ஓபிஎஸ் மற்றும் அதிமுகவை ஆதரிக்க வாய்ப்புகள் அதிகம்.

மாறாக சசிகலா தலைமையில் ஆட்சி அமைந்தால் - அதனை நடுநிலையாளர்களும், அதிமுக அடிமட்ட தொண்டர்களும் விரும்ப மாட்டார்கள். அப்போது கட்சி பெரிதும் வலுவிழந்து போகும்.



இந்த அடிப்படை உண்மை கூட உணராமல் நடந்து கொள்ளும் சட்ட மன்ற உறுப்பினர்களை என்னவென்று சொல்வது?

சொத்து குவிப்பு வழக்கில் - தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராய் இல்லாது போனால், அவர் முதல்வர் ஆக வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகும் .மாறாக தீர்ப்பு எதிராய் போனால், இன்னும் சுவாரஸ்ய காட்சிகளை காணலாம் !

Image may contain: 5 people, text

பார்த்த படம்: ஒப்பம் (மலையாளம் )

கண் தெரியாத மோகன்லால் ஒரு கொலையை துப்பறியும் கதை தான் ஒப்பம். கூடவே ஒரு கொலை காரனிடம் இருந்து ஒரு குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு அவருக்கு..

சற்று வித்தியாச கதைக்களம் தான்.. ஆனால் பாட்டு, சண்டை என மசாலா பட பாணியில் எடுத்தது  தான் இடறல்..

மோகன்லாலின் நடிப்பு மற்றும் வித்தியாச பிளாட்டுக்காக ஒரு முறை பார்க்கலாம் !

அழகு கார்னர் 
Image may contain: 1 person, closeup
வாணி போஜன் 
கிரிக்கெட் கார்னர் 

இந்தியா vs பங்களாதேஷ் இடையே நடக்கும் டெஸ்ட்டில் கோலி இன்னொரு 200 அடித்துள்ளார்.. தொடர்ந்து 4 சீரிஸாக -  குறைந்தது ஒரு 200 அடிக்கிறார் ! சென்ற மேட்சில் 300 அடித்த கருண் நாயரை விளையாட விடாமல் ஒதுக்கியது சற்று வருத்தம் தான். அப்புறம் Performance க்கு என்ன மரியாதை ??

இந்திய டெஸ்ட் அணியில் தற்போது ரசிக்கிற விஷயம் அஷ்வின், சாஹா , ஜடேஜா என மூவரும் தொடர்ந்து அசத்தலான பங்களிப்பை பாட்டிங்கில் செய்வது தான். இவர்கள் பங்களிப்பால் தான் 400 வர வேண்டிய ஸ்கொர் 600 வரை பலமுறை எட்டுகிறது .

முதல் இன்னிங்க்சில் பங்களாதேஷ் ஆட்டம் ஆச்சரிய தக்க வகையில் உள்ளது; இந்த டெஸ்ட் டிரா ஆனால், அது இந்தியாவிற்கு அதிர்ச்சி ஆகத்தான் இருக்கும்

போஸ்டர் கார்னர் 



பையன் பச்சை குழந்தையாம்; மருமகள் மட்டும் குரங்காம்.. ரணகளம் :)

என்னா பாட்டுடே : தள்ளி போகாதே

தமிழ் சினிமா பாடல்களில் -  காதலனும் காதலியும் பாடும் டூயட்கள் தான் மிக  அதிகமிருக்கும்.இந்த பாட்டும் ஒரு டூயட் தான்.. ஆனால் அந்த டூயட் எங்கு ஆரம்பிக்கிறது என்பதை நிர்ணயித்த இயக்குனர் கவுதம் மேனன்.. சபாஷ்  வாங்குகிறார்.

மிக பெரும் விபத்து.. அப்போது துவங்குகிறது பாட்டு.. தியேட்டரில் பார்க்கும்போது " என்னய்யா இந்த இடத்துலே பாட்டா " என முதலில் தோன்றினாலும், போக போக பாட்டை எப்படி யோசித்துள்ளார் என புரிந்து ரசிக்க முடிந்தது .

அடிபட்டு கீழே விழும் அரை மயக்க நிலை.. அப்போது அவனுக்கு தோன்றும் எண்ணங்கள்- நினைவு. கனவு ..

இந்த கனவினூடே நிகழ் காலத்தில் நடப்பதை காட்டி கொண்டே செல்வது அழகு.. !




வாசித்த புத்தகம் கருப்பு வெள்ளை 

வரலாற்று சிறப்பு மிக்க மனிதர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாய் சொல்லும் புத்தகங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு; அந்த வகையில் அமைதிக்கென நோபல் பரிசு வென்ற, அமெரிக்காவில் கறுப்பர் இன மக்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் குறித்த இந்த புத்தகம் பல தகவல்களை சொன்னது.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் - கருப்பு இனத்தினர் பேருந்தில் கடைசி சில சீட்களில் தான் அமர வேண்டுமாம். முன் பக்கம் முழுதும் வெள்ளையருக்கு; அந்த பக்கம் காலியாக இருந்தால் கூட - கறுப்பர் அங்கு சென்று அமர அனுமதி இல்லை; மேலும் பள்ளி - கல்லூரியிலும் பல்வேறு பாகுபாடுகள்.

இவற்றை எதிர்த்து போராடி - அவற்றில் பலவற்றை தளர்த்த உதவியோரில் முக்கியமானவர் மார்ட்டின் லூதர் கிங்  ! அமைதிக்கான நோபல் பரிசு வென்று அடுத்த சில ஆண்டுகளில் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது சுட்டு கொல்லப்பட்டார். அப்போது அவரது வயது வெறும் 39 ! காந்தியடிகளின் சத்யாகிரஹ முறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பின்பற்றியது அஹிம்சை முறைகளை மட்டுமே  !

மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவு நனவானாலும் கூட அதற்கு விலையாக அவர் உயிரை இளம் வயதில் தர நேர்ந்தது வருந்த வேண்டிய ஒரு விஷயம் தான் !
***
அண்மை பதிவு :

சிங்கம் 3 - சினிமா விமர்சனம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...