Tuesday, May 7, 2013

யாருடா மில்லர்? கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு Visual ட்ரீட்

நேற்றைய பெங்களூரு Vs பஞ்சாப் மேட்ச் ரொம்ப கொஞ்ச நேரம் தான் பார்த்தேன்.

வீட்டிற்கு வந்த போது எனது அபிமான டீ வில்லியர்ஸ் தனது டிரேட் மார்க் அதிரடி ஆட்டம் ஆடி கொண்டிருந்தார். AB Delivers என்று ஸ்டேடியத்தில் இருந்த பெரிய திரை காட்டியது சுவாரஸ்யம் !

பின் பஞ்சாப் 10 ஓவரில் 58 ரன் என்றதும் இனி மேட்ச் சுவாரஸ்யமாக இராது என ஆப் செய்து விட்டு தூங்க சென்று விட்டேன். காலை பேப்பரில் பஞ்சாப் ஜெயித்ததை அறிந்து ஆச்சரியம் !

நினைத்து பாருங்கள்: கடைசி 7 ஓவரில் 98 ரன் எடுக்கணும். ஓவருக்கு 14 ரன். மில்லர் தவிர உருப்படியான ஆட்கள் வேறு யாரும் இல்லை. 7 ஓவரில் 98 அடிப்பதே கடினம் என்றால், அந்த ஸ்கோரை 2 ஓவர் முழுசாய் மிச்சம் வைத்து அடித்து முடித்த மில்லரை எப்படி பாராட்டுவது! T - 20 ல் ஒன் ஆப் தி பெஸ்ட் ஆட்டம் இது !


24 பந்தில் - முதல் 50; அடுத்த 50 க்கு எடுத்து கொண்டது வெறும் 13 பந்துகள் !

பல ஷாட்டுகள் லாங் ஆன், லாங் ஆப் அல்லது ஸ்ட்ரைட் டிரைவ் அடித்தது அட்டகாசம் !

அவரது தந்தை மில்லருக்கு இப்படி சொல்லி கொடுப்பாராம்....

'If it's in the V, in the tree; if it's in the arc, it's out of the park.

அதை நேற்று நிகழ்த்தி காட்டியிருக்கிறார் மில்லர் !

இதற்கு முன்பும் இதே டோர்னமெண்ட்டில் சென்னை மற்றும் மும்பையுடன் ரொம்ப அட்டகாசமாக ஆடி, வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தார். அவருக்கு சரியான சப்போர்ட் இன்றி அந்த மேட்ச்கள் தோற்றனர். புனேயுடன் பெரிய ஸ்கோர் Chasing - இதே போல் ஒரு அதிரடி ஆடி தான் ஜெயித்து கொடுத்தார்.

டேவிட் மில்லர் - has finally arrived ! இவர் ஆடிய 37 பந்துகள் மட்டும் அடங்கிய ஹை லைட்ஸ் இது. பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.. கிரிக்கெட்டை விரும்பும் அனைவரும் ரசிக்க கூடிய இன்னிங்க்ஸ் இது !



(If you cannot see it here, Please click " Watch on You tube " and you can see the highlights)

6 comments:

  1. எனக்கும் காலையில் ஆச்சரியம் தான்!

    ReplyDelete
  2. Anonymous3:04:00 PM

    டேவிட் ஹஸ்ஸி அவுட் ஆனவுடன் இனி பஞ்சாப் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று தூங்கிவிட்டேன்..அருமையான ஒரு மேட்சை மிஸ் பண்ணிட்டேன்.

    ReplyDelete
  3. பேப்பர் பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியாமாக இருந்தது

    ReplyDelete
  4. மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார்; மின்சார ஒழுங்கு முறை ஆணைத்தில் கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்
    அலுவலர்களின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும் நடைபெறும் ஊழல் காரணமாகவும் 2006 ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் மின்வாரியம். மக்களுக்கு மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வு எல்லை மீறிய மின்வாரிய ஊழல் எதற்கும் துணிந்த அதிகாரிகள், கண்காணிக்கத் தவறும் ஆணையம் கண்டிக்கத் தவறும் அரசு மின் கட்டண உயர்வால் மக்கள் அவதி இந்நிலை என்று மாறும்? இதயம் பலவீனமுடையோர் இரத்தக் கொதிப்பு உள்ளவர்களும் படிக்க வேண்டாம் அதனால் உங்களுக்கு பாதிப்பு வரலாம் உண்மை அப்படி.
    மேலும் படிக்க » http://vitrustu.blogspot.in/

    ReplyDelete
  5. நாங்க பார்த்தோம்ல.. என்னா அடி..

    ReplyDelete
  6. நன்றி இளையராஜாஜி

    நன்றி கலிய பெருமாள்

    நன்றி சக்கர கட்டி

    நன்றி பாலா

    நன்றி கோவை ஆவி (என்னா பேர் சார் இது ! அட !)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...