Saturday, June 25, 2016

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா -புத்தக விமர்சனம்

தற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தொடர் - குமுதத்தில் வெளியான போது நான் ஒரு தீவிர பாலகுமாரன் ரசிகன். ஒவ்வொரு வாரமும் தவறாமல் வாசிப்பேன். .



ஆனால் பல ஆண்டுகள் கழித்து இப்போது வாசிக்கும்போது இந்த சுய சரிதை வேறு சில சிந்தனைகளை தந்தது..

 17 வருடத்துக்கு மேல் வேலை பார்த்த "டபே" நிறுவனத்தை எப்போது குறிப்பிட்டாலும் " ட்ராக்டர் கம்பனி" என்றே கூறுவார் பாலகுமாரன் ..  எதனால் இப்படி? நிறுவனம் பெயர் தெரிய கூடாது; சொல்ல கூடாது என்பதாலா? ஆனால் அந்த ட்ராக்டர் கம்பனி- என்கிற ரீதியில் சொல்லும்போது - ஒரு வித அலட்சியம் தெரிகிற மாதிரி ஓர் எண்ணம்..

போகட்டும்.. ட்ராக்டர் கம்பனியில் பாலகுமாரன் 17 வருடம் இருந்து விட்டு வேலையை ராஜினாமா செய்வதில் துவங்குகிறது இந்த மினி சுய சரிதை.. அதற்கு முன் வேலையை விட தயங்கி கமலிடம் பேசியது; சுஹாசினியிடம் பேசியது என சில அத்தியாயங்கள்..

வேலையை விட்டு விட்டு தன்னிடம் சேர சொன்னது பாக்யராஜ் தான்.. ஆனால் பாலகுமாரன் கவிதாலயாவில் (பாலசந்தர்) சேருகிறார்... பின் இந்த நாவல் முழுவதுமே அடுத்த இரு படங்களில் பாலசந்தரிடம் - இவர் வேலை செய்த அனுபவங்கள் - அப்போது சினிமா காரர்களுடன் உள்ள அனுபவம் இவை மட்டுமே பேசுகிறது

இந்த சுய சரிதையில் ஒன்றுமே இல்லை.. அது தான் உண்மை.. ! கமலுடன் ஒரு மணி நேரம் பேசினேன் தெரியுமா என்றால் " அப்படியா ?" என வாயை பிளப்போருக்கு மிக சுவாரயமாய் இருக்கும் இப்புத்தகம். சிவகுமார், அனந்து, பாலசந்தர் என நமக்கு தெரிந்த சினிமா நட்சத்திரங்கள் குணாதிசயம், அவர்கள் பேசிய வார்த்தைகள் ..இதற்கு ஒரு புத்தகமா?

இதில்.. சினிமாவில் நான் இயக்குனராக எப்படி சாதிப்பேன் என்கிற வீர வசனம் வேறு .. பாலகுமாரன் சினிமாவில் என்ன சாதித்தார்  என யோசித்தால், பாஷா மற்றும் ஷங்கரின் ஒரு சில படங்களுக்கு வசனம் எழுதியதை தவிர வேறு பெரிதாய் எதுவும் செய்யவில்லை (பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு டைரக்ஷன் - பாலகுமாரன் என்று டைட்டிலில் போடுவார்கள்.. அதற்கு பின் டைரக்ஷன் மேற்பார்வை என பாக்யராஜ் பெயரை போடுவார்கள் :)

புத்தகத்தின் இறுதியில் ஓரிரு படங்களில் வேலை செய்து விட்டு பாலசந்தரிடம் இருந்து நின்று விடுகிறார் பாலகுமாரன்.. அப்புறம் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியோடு புத்தகம் நிறைவு பெறுகிறது..

இரண்டே இரண்டு படம்.. உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு சினிமா இண்டஸ்ட்ரியே புரிந்து விட்ட மாதிரி ஒரு புத்தகம் எழுத பால குமாரனால் மட்டுமே முடியும்.. !

பாலகுமாரனின் முன் கதை சுருக்கம் என்கிற பயோ கிராபி நிச்சயம் இதை விட நன்றாக இருக்கும் என நினைவு ...

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - சினிமா ஆசை கொண்டோர் அல்லது பாலகுமாரன் தீவிர ரசிகர்களுக்கு மட்டும் !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...