Wednesday, February 22, 2017

Airlift & Seventh day.. தவற விடக்கூடாத .படங்கள்... சினிமா விமர்சனம்

ஏர்லிப்ட் (Airlift - Hindi) 

குவைத்தில் வாழும் பிசினெஸ் மேன் அக்ஷய் குமார். 1980களில் ..... ஒரு நாள் அவர்கள் வாழ்க்கை திசை மாறுகிறது.

சதாம் ஹுசைன் குவைத் மீது குண்டு மழை பொழிகிறார். குவைத்தியர்களை கொன்று குவிக்கிறது ஈராக் ராணுவம்.


Related image

பணக்காரரான அக்ஷய் குமார் நினைத்தால் தன் குடும்பத்தோடு சேர்ந்து விமானத்தில் இந்தியாவிற்கு பறந்திருக்க முடியும். ஆனால் முதலில் தனது அலுவலக ஊழியர்கள்.. பின்னர் அங்கு வாழும் இந்தியர்.. இவர்களை காப்பாற்ற எண்ணி - அவரது நண்பர்களுடன் சேர்ந்து - அனைவரும் ஒன்றாய் இந்தியா செல்ல எடுக்கும் முயற்சிகளே  .. படம்.

இறுதியில் ......இந்தியன் ஏர்லைன் நிறுவனம் - 488 விமானங்கள் மூலம் 1500க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக இந்தியா கொண்டு வந்து சேர்த்த சம்பவத்துடன் படம் நிறைகிறது..

ஆனால் அது நடப்பதற்குள் அக்ஷய் மற்றும் குழு மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இந்திய அரசியல்வாதிகள்.. நமது red tapism..!!!

ஒரு நிஜ சம்பவத்தை எப்படி சுவாரஸ்ய படமாக்கலாம் என்பதற்கு இப்படம் ஓர் நல்ல  உதாரணம்.

அக்ஷய் குமார்.. அட்டகாசமான நடிப்பு. படத்தை நாம் பெரிதும் ரசிக்க மிக முக்கிய காரணம் இவரே. சாதாரண மனிதரான இவர் - ஒரு உள்ளுணர்வு உந்தலில் தான் அனைவருக்குமாக சேர்ந்து .போராடுகிறார். துவக்கத்தில் மனைவியே இதனை எதிர்க்கிறார்.. "ஏன் வாழ்க்கையை ரிஸ்க் எடுக்கிறாய்.. நாம் மட்டும் இந்தியா போய் விடலாமே" என்கிறார். போகப்போக அவரும் புரிந்து கொண்டு  ஒத்துழைக்கிறார்.

அக்ஷய் குமாரை எப்போதும் எதிர் கேள்வி கேட்கும் ஒரு பாத்திரம் சுவாரஸ்யமான படைப்பு; போலவே குவைத்தில் இருக்கும் சதாம் படையின் தலைவராக வருபவரும் இயல்பான நடிப்பிலேயே மிரட்டுகிறார்

Image result for airlift

கடைசி 10 நிமிடங்களில் - தேசிய உணர்வை தட்டி எழுப்பி எமோஷனல் ஆக முடிக்கிறார்கள்.

2016 ஜனவரியில் வெளியான இந்த இந்தி படம் .. ஒரே நேரம் விமர்சர்கள் பாராட்டையும் வசூலையும் சேர்த்தது..

தவற விடக்கூடாத ஒரு நல்ல படம்.. Airlift !

செவென்த் டே (Seventh day ) 

மலையாள திரை உலகில் தான் இப்படிப்பட்ட அழகிய த்ரில்லர்கள் காண கிடைக்கின்றன.

போலீஸ் அதிகாரி பிரிதிவிராஜ் - சாலையில் செல்லும்போது  - அவரது ஜீப் ஒரு  பைக் மீது மோதுகிறது. விபத்தில் அடிபட்டவனைக் கொண்டு போய் மருத்துவமனையில்  சேர்க்கிறார்.ஆனால் அன்றிரவே அவன் தற்கொலை செய்து கொள்கிறான். ஏன் அப்படி  நடந்தது என அவர் செய்யும் இன்வெஸ்டிகேஷன்  தான் படம் !

மேலே சொன்ன 2 வரியிலேயே பல விஷயம் தலை கீழாவது தான் திரைக்கதை ! படம் முழுதுமே அந்த மர்மத்தின் பல விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகிறது;  கடைசி 10 நிமிடத்தில் ஏராள சஸ்பென்ஸ்கள்  தெரிய வருவது.. செம சுவாரஸ்யம்; படம் முடிந்த பின் ஒரு திகீர் சஸ்பென்ஸ்சும் போனஸாக சொல்லி ஸ்டைலாக படத்தை முடிக்கிறார்கள்.

பிரிதிவிராஜ் மிக இயல்பான நடிப்பு; படத்தை முழுவதும் சுமப்பது  இவரே. நம்ம ஜனனி ஐயர் அழகிய சிறு பாத்திரத்தில்  வருகிறார்.

Image result for the seventh day malayalam movie

குற்றத்தின் காரணம் பணம் என்ற ரீதியில் சென்று.. கிளைமாக்சில் பெண் தான் அடிப்படை என மாறி - முடியும் நிமிடம் ....எல்லாவற்றிற்கும் மேல் பணம் இருப்பதை சொல்லி  அசத்துகிறார்கள்.

மாறிக்கொண்டே இருக்கும் பாத்திரங்கள்.. உண்மைகள்.. நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவம் தரும்.

த்ரில்லர் விரும்பிகள் மிக ரசிக்க கூடிய படம் - செவென்த் டே !

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...