Saturday, January 26, 2013

வீட்டில் போலிஸ் சோதனை (Search Warrant) : ஏன் எதற்கு எப்படி?

ரு வீடு அல்லது நிறுவனத்தில் முழுதாய் சோதனை இட வழங்கப்படுவது சோதனை ஆணை (Search Warrant ). இது கீழ்க்காணும் விஷயங்களுக்காக வழங்கப்படலாம்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் இருக்கும் ஆவணங்கள் அல்லது பொருட்களை கைப்பற்றுவதற்காக

களவுப் பொருட்கள், போலி ஆவணங்கள் போன்றவை இருக்க கூடும் என சந்தேகம் உள்ள வீட்டை சோதனையிட

அரசாங்கம் தடை செய்த வெளியீடுகள் அங்கிருக்கிறது என தகவல் வந்தால் அவற்றை கைப்பற்ற

சட்ட விரோதமாக/ தவறான முறையில் அடைத்து வைத்திருக்கும் நபரை தேடி கண்டு பிடிக்க

****
மேலே சொன்ன காரணங்களுக்காக குறிப்பிட்ட இடத்தை சோதனையிடவும், ஆட்சேபத்திற்குரிய பொருட்களை கைப்பற்றவும் போலிசுக்கு சோதனை ஆணை (Search Warrant) அதிகாரம் அளிக்கிறது.


இத்தகைய ஆணை காண்பிக்கப்பட்ட பின் வீட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தால், போலிஸ் சட்டபூர்வமாக வீட்டினுள் நுழைய பலாத்காரத்தையும் பயன்படுத்தலாம்

குறிப்பிட்ட நபர் தன் வசம் (உடல் அல்லது உடைக்குள்) சில பொருட்களை மறைத்து வைத்திருக்கிறார் எனில் அவரையும் சோதனை இடலாம். அது பெண்ணாய் இருந்தால் அவரை ஒரு பெண் போலிஸ் தான் சோதனையிட வேண்டும்

போலிஸ் கடைபிடிக்கவேண்டிய நடைமுறை: 

அந்த பகுதியில் வசிக்கும் இரண்டு மரியாதைக்குரிய நபர்களை சோதனையில் கூடவே இருக்கும் படி செய்யவேண்டும்.

அவர்கள் முன்னிலையிலேயே சோதனை நடக்கவேண்டும். கட்டிடடத்தின் உள்ளே சோதனை நடக்கும்போது சாட்சிகள் கட்டிடத்தின் வெளியே நின்றால் சோதனை சட்ட விரோதமானதாகி விடும்.

அந்த இடத்தில கைப்பற்றிய பொருட்கள், அவை எந்த இடத்திலிருந்து கைப்பற்ற பட்டன என்று பட்டியலிடவேண்டும்

அந்த பட்டியலில் சாட்சிகள் கையொப்பம் பெறவேண்டும்

யார் வீடு சோதனை இடப்படுகிறதோ அவரும் உடனிருக்க அனுமதிக்க வேண்டும். அவர் கேட்டு கொண்டால் பொருட்களின் பட்டியல் நகலை அவருக்கு தரவேண்டும்

நீதிமன்றம் அழைத்தால் ஒழிய அந்த இரு சாட்சிகளும் நீதிமன்றம் வந்து சாட்சி அளிக்க தேவை இல்லை

சோதனையிடப்படும் இடத்தில் குடியிருப்பவரின் உரிமைகள்

எந்தவொரு குற்றசாட்டிலும் தன்னை சம்பந்தப்படுத்தக் கூடிய ஆவணத்தை அல்லது பொருளை தர சொல்லி போலிஸ் கட்டாயபடுத்த முடியாது. இப்படி எந்த பொருளையும் சோதனை இட அல்லது கைப்பற்ற நீதிமன்ற ஆணை அவசியமாகிறது

சோதனையிடப்படுபவர் தன் வீட்டை போலிஸ் சோதனை இடும்முன் நீதிமன்ற ஆணையை பார்க்கலாம். அதன் பின்பே போலிஸ் உள்ளே நுழைய அனுமதிக்கலாம். நீதிமன்ற ஆணை இன்றி போலிஸ் உள்ளே நுழைவதை தடுக்க வீட்டாருக்கு உரிமை உண்டு

நீதிமன்றம் வீட்டில் குறிப்பிட்ட சில இடங்களை மட்டும் பரிசோதிக்க அனுமதி தந்திருந்தால், அந்த இடங்களை மட்டும் பார்க்குமாறு கூறலாம்.
***
டிஸ்கி : ACS Institute-விழாவில் நடந்த லட்சுமன் சுருதி இசை நிகழ்ச்சி இன்று ராஜ் டிவி-யில் காலை 10 மணி முதல் 12.30 வரை, குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. நண்பர்கள் முடிந்தால் பார்க்கவும். 

5 comments:

  1. இதில இவ்வளவு விஷயம் இருக்கா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன்

      Delete
  2. Replies
    1. நன்றி முரளி சார்

      Delete
  3. சிறப்பான தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...