Friday, December 25, 2009

எழுத்துக்கு அங்கீகாரம்

ஒவ்வொரு மனிதனும் அங்கீகாரம் எதிர் பார்க்கவே செய்கிறான். எனது எழுத்துக்கும் இதோ சில recognition:

*******

நண்பர் குறும்பனிடமிருந்து ஒரு மடல். இதோ அவர் எழுத்துக்களில்:

ஹலோ மோகன் சார்,

நல்லாருக்கீங்க‌ளா? டாப் 10 பாட‌ல்க‌ள், ப‌ட‌ங்க‌ள்னு போட்டு அச‌த்துறீங்க‌. உங்க‌ அள‌வுக்கு இல்லாட்டாலும் அதுல‌ பாதியாவ‌து ப‌ண்ண‌லாம்னு, நானும் க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டேன். என்னோட‌ ஃபேவ‌ரைட் ப‌திவ‌ர்க‌ள் எழுதின‌துல‌ இந்த‌ வ‌ருஷ‌த்தோட‌ (என‌க்கு புடிச்ச‌) டாப் 5 பதிவுகளை செல‌க்ட் ப‌ண்ணியிருக்கேன்.

கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ஃபில்ட‌ர் ப‌ண்ணின‌துல‌ 5க்கு ப‌தில் 6 வ‌ந்திருக்கு. கூடவே ஏன் என‌க்கு இந்த‌ ப‌திவுக‌ள் புடிச்சிருக்குங்க‌ற‌துக்கான‌ கார‌ண‌ம்.

ஜென் க‌தைக‌ள் ‍

முத‌ல் க‌தைக்கு நீங்க‌ சொல்லியிருக்க‌ற‌ க‌ருத்து ந‌ல்லாயிருந்த‌து


வ‌ழ‌க்க‌றிஞ‌ர் போராட்ட‌ம் சில‌ பார்வைக‌ள்....

பொது ம‌க்க‌ள் பார்வையில் நீங்க‌ள் க‌ருத்து சொல்லிய‌ வித‌ம் அருமை....(ச‌சிகுமார் ஸ்டைலில்)உங்க‌ நேர்மை என‌க்கு புடிச்சிருக்கு

ஏல‌கிரி - சென்னைக்க‌ருகே ஒரு hill station

ஏல‌கிரி போக‌ற‌துக்கு ஒரு தூண்டுத‌லாக‌வும், அதே ச‌ம‌ய‌ம் ப‌ய‌னுள்ள‌‌ விவ‌ர‌ங்க‌ளோடும் இருந்த‌து இந்த‌ ப‌திவு

க‌ண‌வ‌ன் - ம‌னைவி ச‌ண்டை (யூத் விக‌ட‌னில் வெளியான‌து)

உங்க‌ளோட‌ ஹ்யூம‌ர் சென்ஸ் அருமையாக‌ வெளிப்ப‌ட்ட‌ ப‌திவு

க‌ன‌வு க‌ன்னிக‌ள்

த‌ங்க‌ த‌லைவி த‌ம‌ன்னாவுக்காக‌வே இந்த‌ ப‌திவு, ஆனா ஸ்னேகாவை பின்னுக்கு த‌ள்ளிய‌தில் கொஞ்ச‌ம் வ‌ருத்த‌ம்தான்:(

பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் மாபெரும் த‌வ‌றுக‌ள்..ப‌ட‌ங்க‌ளுட‌ன்

யாரையுமே புண்ப‌டுத்தாத‌, ஆனால் ப‌டிக்கும்போது ஒரு ஸ்மைலை வ‌ர‌வ‌ழைக்கும் உங்க‌ள் எழுத்துக்காக இந்த‌ ப‌திவு. குறிப்பாக‌ அப்துல்லா அவ‌ர்க‌ளை ப‌ற்றி நீங்க‌ குறிப்பிட்டிருந்த‌து ஸோ நைஸ்:) பாருங்க‌, நானும் அவ‌ரை மாதிரியே ஸ்மைலி போட்டுட்டேன்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

என்றும் அன்புடன்

குறும்பன்
*********
நன்றி குறும்பன். மிகுந்த மகிழ்ச்சி. அனைத்து பதிவுகளும் தேடி வாசித்ததுடன் சரியான லிங்குகளும் அனுப்பி நெகிழ வைத்து விட்டீர்கள்

உங்களில் பலர் எனது பதிவுகளை சமீபமாக தான் வாசித்திருப்பீர்கள். குறும்பன் சொன்னதில் சில பதிவுகள் நீங்கள் வாசிதிராவிடில் அவர் தந்துள்ள லிங்க் மூலம் வாசித்து பாருங்கள். நன்றாக இருந்தால் குரும்பனுக்கு நன்றி சொல்லலாம்; நல்லா இல்லா விடில் எழுதிய என்னை திட்டலாம் :))

*********

நண்பர் பா. ரா நமக்கு ஒரு விருது தந்திருக்கிறார்.




கூடவே "திறந்த மனதுடன் சக பயணியை சிலாகிக்கும் மோகனுக்கு" என்று சொல்லியிருக்கிறார். நன்றி பா. ரா.

******

இவர்கள் இருவரும் மகிழ்வித்த அதே அளவு மகிழ்ச்சி நண்பர் அப்துல்லா சென்ற பதிவின் பின்னூட்டத்தில் "சிறந்த புது முக பதிவர் மோகன் குமார்" என்று எழுதிய போது கிடைத்தது. கூடவே கேபிள் தான் வழி மொழிவதாக வேறு சொல்லி விட்டார்.

மிகுந்த மகிழ்ச்சி.
******
சிறந்த படங்கள் மற்றும் சினிமா சம்பந்த பட்ட விருதுகள் எழுதியது போல, பதிவர்களுக்கான வித்யாசமான விருதுகள், மற்றும் bloggers எழுதியதில் நான் ரசித்த சில நல்ல கட்டுரை/ கவிதை/ சிறுகதை வெகு விரைவில் ஒரு பதிவில் பகிர்ந்து கொள்வேன்.

இந்த பதிவு பிடித்திருந்தால் ஓட்டும், பின்னூட்டமும் தந்து ஊக்குவியுங்கள். நன்றி

19 comments:

  1. எண்ணம்போல் வாழ்வீர் மோகன்..!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மோகன்!விருதை பகிரலையா?

    ReplyDelete
  3. வாழ்த்துகள் மோகன்.

    ReplyDelete
  4. இன்று ஏலகிரி போகவேண்டும் என்று 1 மாதத்திற்கு முன் போட்ட ப்ளான். என்னால் இன்று போக இயலவில்லை. உங்கள் ஏலகிரி பதிவைப் பார்த்ததும் அந்த குறை விலகியது.

    நீங்க பெரிய பிரபல பதிவர் ஆகி ரொம்ப நாள் ஆச்சு. இனி விருதுகள் குவியும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. "2009 Blogger Appreciation Award", "சிறந்த புது முக பதிவர்"...கலக்குங்க மோகன்.

    புது வருடம் உங்களுக்கு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. "2009 Blogger Appreciation Award", "சிறந்த புது முக பதிவர்"...கலக்குங்க மோகன்.

    புது வருடம் உங்களுக்கு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வாழ்த்துகள் மோகன்.. இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய மெடல்கள் இருக்கு..

    ReplyDelete
  10. நல்வாழ்த்துகள் மோகன்

    ReplyDelete
  11. வாழ்த்துகள் மோகன்குமார்.

    நிறைய விருதுகள் பெற வாழ்த்துகள்.

    அங்கீகாரம் அவசியம் என்பதை உணர்த்தும் இடுகை. நன்றாக சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  12. நன்றி கேபில்ஜி

    நன்றி உண்மை தமிழன். உங்களை பற்றி நிறைய கேள்வி பட்டுள்ளேன்.

    பா. ரா ஏற்கனவே இதே விருது குறும்பன் தந்த போது நான்கு பேருக்கு பகிர்ந்தேன். இப்போதும் செய்திருக்கனுமோ?

    நன்றி வானம்பாடிகள் சார்

    ReplyDelete
  13. பின்னோக்கி said...

    //நீங்க பெரிய பிரபல பதிவர் ஆகி ரொம்ப நாள் ஆச்சு//

    அப்புடிங்கறீங்க? நன்றி பின்னோக்கி!

    நன்றி தேவன் மாயம் அவர்களே

    நன்றி ஆதி மனிதன்

    நன்றி ராமலக்ஷ்மி

    ரிஷபன் சார் நன்றி

    சீனா சார் நன்றி

    ராகவன் நன்றி

    ReplyDelete
  14. புது வருடம் உங்களுக்கு மேலும் சிறப்பாக
    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் மோகன்குமார். விட்டுப் போன பதிவுகள படிச்சிடறேன் :)

    ReplyDelete
  16. Anonymous8:07:00 AM

    //கூடவே "திறந்த மனதுடன் சக பயணியை சிலாகிக்கும் மோகனுக்கு" என்று சொல்லியிருக்கிறார். நன்றி பா. ரா//

    உண்மைதானே மோகன் குமார். வாழ்த்துக்கள் விருதுக்கு

    ReplyDelete
  17. திறந்த மனதுடன் சக பயணியை சிலாகிக்கும் மோகனுக்கு வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் மோகன்.

    ReplyDelete
  19. கமலேஷ்: முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    சுசி: நன்றி.

    சின்ன அம்மணி: தேங்க்ஸ்ங்கோ

    ஸ்ரீ மதி: நன்றி.

    வாங்க விக்கி. நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...