Wednesday, April 11, 2012

சென்னையில் இன்றைய நிலநடுக்கம் : நேரடி ரிப்போர்ட்

சென்னையில் நிலநடுக்கம் : சென்னைக்கு சுனாமி எச்சரிக்கை

பதிவர் ரகுவுடன் மதியம் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்தேன். அலுவலகம் வந்தால் அனைவரும் வெளியே நிற்கிறார்கள். கேட்டால் "உங்களுக்கு தெரியாதா? பில்டிங் ஆடுச்சு" என்றனர்.

சிலர் பையை தூக்கி கொண்டு வீட்டுக்கு அல்லது குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் மனநிலையில் இருந்தனர்.

வெளியே நின்ற அனைவரும் தத்தம் மனைவிகளுக்கு போன் செய்து கொண்டிருந்தனர் :" உனக்கு தெரிஞ்சுதா? வீடு ஆடுச்சா? " என்று சிலரும் " உங்க ஆபீசில் என்ன செய்றாங்க? " என வேலை பார்க்கும் கணவர்களும் கேட்ட வண்ணம் இருந்தனர். ஒரு கும்பல் பில்டிங்கில் எங்கும் விரிசல் இருக்கா என பார்த்து கொண்டிருந்தது

அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரின் மனைவி ராமச்சந்திரா மருத்துவமனையில் வேலை செய்கிறார். மருத்துவ மனையில் இருந்து நோயாளிகள் மருத்துவர் அனைவரும் வெளியே ஓடி வந்து விட்டதாக
அவர் போனில் சொன்னார்.

எங்க வீட்டம்மாவுக்கு போன் செய்தால் போனை எடுக்கலை. பின் அவரே போன் செய்து "நாங்க யாரும் வெளியே வரலை ஆபிசில் தான் இருக்கோம்" என்றார்.

சற்று நேரத்தில் இந்தோனேசியாவில் தான் நிலநடுக்கம்; இங்கல்ல என சொல்லி அலுவலகத்துக்கு உள்ளே அனுப்பினர். உள்ளே போய் தினமலரை பார்த்தால் அது இப்படி சொன்னது

"தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தோனேஷியா, இந்தியா, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது."

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=446238

*********
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்

சென்னையின் சில பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மதுரையில் கட்டடங்களில் விரிசல்: இந்த நில அதிர்வு மதுரையின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=446237

***********
சென்னையை மாலை 5 மணிக்கு சுனாமி தாக்க கூடும் என்று டிவியில் Flashnews ஓடுவதாக " Careful ஆ இருந்துக்கோ" என தஞ்சையில் இருந்து அண்ணன் போன் செய்கிறார்

****
5 மணிக்கு சுனாமி வருவதாக தகவல் உள்ளதால் என் மனைவி அலுவலகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தற்போது உடனடியாக  ஊழியர்களை அனுப்பி கொண்டுள்ளனர்.

போலிஸ் தி. நகர் உள்ளிட்ட கூட்டம் கூடும் இடங்களில் ஆட்களை கூடாதீர்கள் என அனுப்பவதாகவும் தகவல்

பல மொபைல் நெட் வொர்க்குகள் வேலை செய்ய வில்லை. எனது செல்போனும் தற்போது வேலை செய்யலை !

****
இன்று மதியம் சாப்பிட்ட போது அதிசயமா பர்சை திறந்து அய்யாசாமி பில்லுக்கு பணம் கட்டிட்டார். அதனால் தான் இவ்வளவும் ! இதுக்கு தான் அவர் செலவே செய்றதில்லை. இப்ப பார்த்தீங்களா?எவ்ளோ பெரிய சமாசாரம் நடந்திருச்சு ! சரியா அவர் பில் கட்டி அடுத்த சில நிமிடத்தில் கட்டிடம் ஆடியதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
****
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நண்பர்களே எச்சரிக்கையா இருங்க !

27 comments:

  1. பெங்களூரிலும் உணரப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  2. மோகன் குமார்,

    நானும் உணரவில்லை ,நெட் பார்த்து தான் செய்தி உறுதி செய்தேன். எனது கைப்பேசி இணைப்பு வேலை செய்வதால் எல்லாருக்கும் அழைத்து சொன்னால் என்னையே அப்படியா என்று கேட்கிறார்கள்.

    எப்படியோ அறிவிப்பு அறிவிப்பாக மட்டும் இருந்து சுனாமியாகாமல் இருந்தால் நல்லது.

    ReplyDelete
  3. இங்கு என்னால் உணர முடிந்தது. அமர்ந்திருந்த நாற்காலி தொடர்ந்து மெலிதாக ஆடியது. முதலில் பிரமையோ என்று கூட நினைத்தேன்.

    //அறிவிப்பு அறிவிப்பாக மட்டும் இருந்து சுனாமியாகாமல் இருந்தால் நல்லது.//

    ஆம்.

    ReplyDelete
  4. இந்த விஷயமே உங்க பதிவு பார்த்து தான் தெரிந்தது.

    //அறிவிப்பு அறிவிப்பாக மட்டும் இருந்து சுனாமியாகாமல் இருந்தால் நல்லது.//

    ஆமாங்க. கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  5. செய்தி உண்மையாகாம இருக்கணும்ன்னு வேண்டுவோம்..

    ReplyDelete
  6. உங்கள் நகைச்சுவை உணர்வு துயரங்களை வெல்லும் தன்மையுடையதாக இருக்கிறது. இருக்கட்டும்.

    ReplyDelete
  7. // இன்று மதியம் சாப்பிட்ட போது அதிசயமா பர்சை திறந்து அய்யாசாமி பில்லுக்கு பணம் கட்டிட்டார். //

    எனவே மக்கள் நலன் கருதி அய்யாசாமி அவர்கள் இனிமேல் முடிந்தவரை.. (!) சாப்பிடாமல் (!!) இருப்பார்..

    ReplyDelete
  8. எனக்கும் அலுவலகம் சென்ற பின்புதான் தெரிந்தது. உங்களுக்கு கால் பண்ண முயற்சித்தேன். சிக்னல் பிரச்சினையால் லைன் கிடைக்கவேயில்லை.

    //இன்று மதியம் சாப்பிட்ட போது அதிசயமா பர்சை திறந்து அய்யாசாமி பில்லுக்கு பணம் கட்டிட்டார். அதனால் தான் இவ்வளவும் ! இதுக்கு தான் அவர் செலவே செய்றதில்லை.//

    கம்முனு பணத்தை எதிர்ல உட்கார்ந்திருந்தவனோட பர்ஸ்ல வெச்சிருக்கலாம்ல...இப்ப பாருங்க எவ்வளோ பீதி கிளம்புது ;))

    ReplyDelete
  9. எனக்கு பயங்கர தலை வலி ஏற்பட்டது...பிறகு தான் தெரிந்து கொண்டேன் Spinal Chord பிரச்சனை இருந்தால் இது மாதிரி நேரங்களில் தலை வலி வரும் என்று...

    புது post போட்டு இருக்கிறேன்..படித்து விட்டு கருத்தை பகிரவும்

    தங்க ராஜா வடிகட்டி

    http://vazhithunai.blogspot.in/2012/04/blog-post_11.html

    ReplyDelete
  10. சென்னையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க.. கவலைப்பட வேண்டாம். இறைவன் காப்பாத்துவான்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. இனிமே பர்ஸ் நீங்க வைச்சுக்காதீங்க... நண்பர்கள் கிட்ட கொடுத்துடுங்க முதல்லேயே!

    ReplyDelete
  13. Indian said...

    பெங்களூரிலும் உணரப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    **
    ஆம் பதிவர் ராமலட்சுமி கூட இங்கே பின்னூட்டத்தில் சொல்லியிருக்கார்

    ReplyDelete
  14. வவ்வால் said...


    எப்படியோ அறிவிப்பு அறிவிப்பாக மட்டும் இருந்து சுனாமியாகாமல் இருந்தால் நல்லது.


    நீங்கள் சொன்னது பலித்து விட்டது நன்றி

    ReplyDelete
  15. ராமலக்ஷ்மி said...

    இங்கு என்னால் உணர முடிந்தது. அமர்ந்திருந்த நாற்காலி தொடர்ந்து மெலிதாக ஆடியது.

    *****
    எழுத்தாளர் நாற்காலி பூகம்பத்தில் ஆடிடுச்சா? தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  16. கோவை2தில்லி said...

    இந்த விஷயமே உங்க பதிவு பார்த்து தான் தெரிந்தது.

    **
    பதிவு போட்டதில் பலன் இருக்கு என அறிகிறேன் நன்றி

    ReplyDelete
  17. அமைதிச்சாரல் said...


    செய்தி உண்மையாகாம இருக்கணும்ன்னு வேண்டுவோம்..

    ****
    நல்லெண்ணத்துக்கு நன்றி அமைதிச்சாரல்

    ReplyDelete
  18. அப்பாதுரை said...


    உங்கள் நகைச்சுவை உணர்வு துயரங்களை வெல்லும் தன்மையுடையதாக இருக்கிறது. இருக்கட்டும்.

    ஹி ஹி நன்றிங்கோ

    ReplyDelete
  19. Madhavan Srinivasagopalan said...

    // இன்று மதியம் சாப்பிட்ட போது அதிசயமா பர்சை திறந்து அய்யாசாமி பில்லுக்கு பணம் கட்டிட்டார். //

    எனவே மக்கள் நலன் கருதி அய்யாசாமி அவர்கள் இனிமேல் முடிந்தவரை.. (!) சாப்பிடாமல் (!!) இருப்பார்..

    **
    அட பாவி நீயெல்லாம் ஒரு நண்பனா? தம்பியா? எவ்ளோ கஷ்டப்பட்டு செலவு பண்ணாம் இருக்க வழி கண்டு பிடிச்சா, தீர்த்து கட்ட வழி கண்டு பிடிக்கிறியே :))

    ReplyDelete
  20. ர‌கு said...


    எனக்கும் அலுவலகம் சென்ற பின்புதான் தெரிந்தது. உங்களுக்கு கால் பண்ண முயற்சித்தேன். சிக்னல் பிரச்சினையால் லைன் கிடைக்கவேயில்லை.

    ஆம் இருவரதும் ஏர்டெல்


    //கம்முனு பணத்தை எதிர்ல உட்கார்ந்திருந்தவனோட பர்ஸ்ல வெச்சிருக்கலாம்ல//

    நீங்க Bill க்கு பணம்
    குடுக்குறேன்னு துடிசீங்க. உங்களையே குடுக்க விட்டுருக்கலாம் :))

    ReplyDelete
  21. Ramasubramaniam said...

    எனக்கு பயங்கர தலை வலி ஏற்பட்டது...பிறகு தான் தெரிந்து கொண்டேன் Spinal Chord பிரச்சனை இருந்தால் இது மாதிரி நேரங்களில் தலை வலி வரும் என்று...

    *****
    அப்படியா? இப்போது தான் அறிகிறேன்

    ReplyDelete
  22. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    சென்னையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க.. கவலைப்பட வேண்டாம். இறைவன் காப்பாத்துவான்.
    ******

    நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  23. வெங்கட் நாகராஜ் said...

    இனிமே பர்ஸ் நீங்க வைச்சுக்காதீங்க... நண்பர்கள் கிட்ட கொடுத்துடுங்க முதல்லேயே!

    **

    நல்லா குடுக்குரீங்கையா ஐடியா !

    ReplyDelete
  24. THOSE WHO ARE IN GROUND FLOOR AND FIRST FLOOW DIDNT FELT BUT THOSE WHO WERE IN UPPER FLOORS FELT

    I FELT THE TREMOR AND IT WAS SCARY

    ReplyDelete
  25. Ramasubramaniam said...

    //எனக்கு பயங்கர தலை வலி ஏற்பட்டது...பிறகு தான் தெரிந்து கொண்டேன் Spinal Chord பிரச்சனை இருந்தால் இது மாதிரி நேரங்களில் தலை வலி வரும் என்று...//


    எனக்கும் இந்தப் பிரச்னை இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு மிகத் தீவிரமான தலைவலியால் பாதிக்கப்பட்டேன்.மாலை மூன்று மணி முதல் இரவு பதினோரு மணி வரை அவதிப்பட்டேன். நோ டிவி, கம்பியூட்டர், புக், போன்,

    தலைவலிக்கு என்ன காரணம் என்று தீவிரமாக யோசித்து வரும் நிலையில், இப்படி ஒரு காரணம் இருக்குமா என்று யோசிக்க வைத்துள்ளார் திரு ராமசுப்பிரமணியன்.

    *************

    சுட சுட பதிவுப்போட்டு, நேரடி ரிப்போர்ட் கொடுத்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
    நன்றி.

    ReplyDelete
  26. தன்ஸ்: தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  27. நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...