Friday, January 25, 2013

விஸ்வரூபம் தடை சரியா? மக்கள் கருத்து

அமுதன், வழக்கறிஞர், ஆலந்தூர்

கமலுக்கு நடப்பது ரொம்ப அநியாயம். ஒரு படைப்பாளியாக அவர் தன் படைப்பை மக்கள் முன் வைக்க தடை செய்வது எந்த விதத்திலும் சரி என தோன்ற வில்லை. அப்புறம் எதற்கு சென்சார் போர்டு என்று ஒரு அமைப்பு இருக்கு? இத்தனைக்கும் அந்த சென்சார் போர்டில் ஒரு இஸ்லாமிய உறுப்பினரும் இருந்திருக்கிறார். ஒரு படத்தை பொறுத்த வரை சென்சார் போர்டு சொல்வது தான் இறுதி என்கிற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்ன ஆனது? இத்தனை நாள் விஜய காந்த் தன் படங்களில் காட்டிய போது பேசாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் கோபப்பட வேண்டும்? கமல் மீது மட்டும் ஏன் எப்போதும் அம்பு எய்யப்படுகிறது? ஒரு இந்துவை தீவிரவாதியாக காட்டினால் தவறில்லையா? அப்போது இந்து அமைப்புகள் எதிர்க்காதா?


ஒரு படைப்பாளி Creative - ஆக இருக்கவே தனி மனநிலை வேண்டும். இத்தனை பிரச்சனைகளையும் சந்தித்த பிறகும் Creative - ஆக இருப்பது பெரும் சிரமம். கமல் என்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக அறியப்பட்டதில்லை என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

பதிவர் சீனு (திடங்கொண்டு போராடு)

இன்று காலை காட்சிக்கு 3 டிக்கெட் புக் செய்திருந்தேன். படம் முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும் என மிக ஆவலாக இருந்தேன். தமிழகத்தில் தடை செய்யப்பட்டது ரொம்ப வருத்தமாக இருக்கு. ஆரோ 3 - D சவுண்ட் டெக்னாலஜியில் வரும் முதல் இந்திய படம் இது தான். உலக அளவில் இதற்கு முன் ரெட் டெயில்ஸ் என்ற ஒரே படம் தான் வந்திருக்கு. இப்படி டெக்னாலஜியை எவ்வளவோ முன்னே கொண்டு போகும் படம் என்பது தான் என் ஆர்வத்துக்கு காரணம்

டிக்கெட் காசு என்ன செய்வாங்கன்னு தெரியலை. தியேட்டருக்கு போன் செய்தால் , போனே எடுக்கலை. மூணு டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் என்பது எனக்கு பெரிய அளவு பணம் தானே ? இதனால் படம் ரிலீஸ் ஆகாட்டி கூட தியேட்டருக்கு அந்த ஷோ நேரம் போய் என்ன செய்றதுன்னு கேட்கணும். ஹும் !

ரவிகுமார் மடிப்பாக்கம்

டிரைலரில் பார்க்கும் போதே முஸ்லிம்களை சற்று புண்படுத்தும் விதமாக  தான் சித்தரிப்பது சர்வ நிச்சயமாக தெரிகிறது. இருந்தும் கமல் அப்படி இல்லவே இல்லை என மறுத்து வந்தார். இப்போது முஸ்லிம் இயக்கத்தினர் தங்கள் மனம் வருந்தும் படி இருப்பதாக சொல்கிறார்கள். இஸ்லாமியர் பண்டிகையான மிலாடி நபி நாளில் இப்படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.

படம் ரிலீஸ் ஆனபின் போராட்டம், தியேட்டர் ரகளை என்றெல்லாம் ஆகாமல் இந்தஅளவில் நின்று விட்டதே என கமல் உடனடியாக தேவையான காட்சிகளை நீக்கி விட்டு படத்தை ரிலீஸ் செய்ய பார்க்க வேண்டும்.

ரமேஷ், வேளச்சேரி

எனக்கு தெரிந்து சமீபத்தில் டேம் 999 -என கேரளாவில் எடுத்த படம் தான் தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது. அது கேரளாவின் பக்கம் மட்டுமே பேசுவதாக, தமிழர்கள் உணர்வை காயப்படுத்தும் என்று அந்த நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வளவு பெரிய படம் வெளிநாட்டில் பல இடங்களில் ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் மட்டும் ரிலீஸ் ஆகலை. மற்ற இடத்தில் ரிலீஸ் ஆனதால், மிக விரைவில் (இன்னும் ஓரிரு நாளில்) DVD -ல் வெளிவந்து விடும். DVD வந்த பின் தமிழகத்தில் ரிலீஸ் ஆனால் அப்புறம் காசு கொடுத்து தியேட்டர் போய் யார் பார்ப்பார்கள்? தமிழகம் தான் இப்படத்துக்கு மிக பெரும் மார்கெட். அது அடி வாங்க போகிறது. கமலுக்கு மிக பெரிய நஷ்டம் காத்திருக்கிறது. இது வருந்த வேண்டிய ஒரு விஷயம்.

பழனியப்பன், குரோம்பேட்டை

நான் படமெல்லாம் அதிகம் பாக்குறதில்லை. கமல் படம் ஏதும் இப்போ வர போகுதா என்ன ?

வீரராகவன், பல்லாவரம்

DTH -க்கு முதலில் பணம் கட்டியிருந்தேன். அதிலும் படம் வரலை. இப்போ சனிக்கிழமைக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். அதுவும் போச்சு. தியேட்டர் காரங்க பணத்தை ரிட்டன் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். கமலுக்கு உள்ள நஷ்டத்தை ஒப்பிட்டா நம்ம நஷ்டம் கம்மி தான்.

இவ்வளவு பிரச்சனைக்கு பிறகு அடுத்த தடவை தியேட்டர் போய் இந்த படம் பாக்க தயக்கமா தான் இருக்கு.

படம் ரிலீஸ் ஆன பின் ரெண்டு மூணு நாலு இவ்வளவு சர்ச்சை மற்றும் விளம்பரத்தால் ஓடுமே ஒழிய அதுக்குப்புறம் என்ன ஆகும்; கூட்டம் வருமான்னு தெரியலை.

ஒண்ணு மட்டும் நிச்சயம். " இதுக்கு போயி ஏன் இவ்ளோ பிரச்சனை நடந்துச்சு ; அப்படி ஒண்ணும் இல்லியே" ன்னு நிறைய பேர் சொல்லுவாங்க. "சர்ச்சைக்குரிய விஷயம் என்ன இருக்கு " அப்படிங்கற கண்ணோட்டத்தில் தான் பலரும் படம் பாக்க போறாங்க. ஏமாற போறாங்க

கோகுல கிருஷ்ணன், சென்னை

கமலை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு. நிச்சயம் கடந்த சில நாளில் அவர் தூங்கிருக்கவே மாட்டார். நம்ம தலைமுறையின் மிக சிறந்த நடிகருக்கு நாம் தரும் பரிசு இது தானா ?

அஸ்கர் அலி, சென்னை

துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய மதத்தினரை மட்டுமே தீவிரவாதியாய் காட்டியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பிய பின் அந்த காட்சிகளை நீக்குவதாக படக்குழுவினர் கூறினர். இப்படி சொல்லப்பட்டு ஐந்து நாள் கழித்து தியேட்டரில் இரண்டாம் முறை படம் பார்க்கிறேன் ஒரு காட்சியும் கட் செய்யப்படலை. அதற்கு பிறகேனும் கட் செய்தனரா என தெரியாது. அதை விட மோசம் இணையத்திலும் DVD -லும் இன்றைக்கும் உலவும் துப்பாக்கி படம் அத்தகைய காட்சிகள் அனைத்தையும் கொண்டதாகவே உள்ளது.

இதைவிட இஸ்லாமியர் மனம் வருந்த தக்க காட்சிகளை நீக்கி விட்டு படம் வருவது நல்லது தானே?

இன்னொரு விஷயம். தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை தீவிர வாதிகளாக தான் காட்டுகிறார்கள். எங்கோ ஒரு சிலர் செய்யும் அத்தகைய செயலால் கோடிக்கணக்கான முஸ்லீம்களை சந்தேக கண் கொண்டு பார்ப்பதை, அதனால் அவர்கள் படும் வருத்தத்தை, மை நேம் இஸ் கான் போல தமிழில் ஏன் காட்ட மறுக்கிறார்கள்? தீவிரவாதியாய் காட்டும் படம் 10 வருகிறது எனில் எங்கள் வேதனையை காட்டும் படங்களும் அதே அளவு வரலாம் இல்லையா?

பாலகுமார் வழக்கறிஞர்

இந்த தடை சரியா தவறா என்ற விஷயத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஜனவரி 26 அன்று நீதிபதிகள் படத்தை பார்க்கிறார்கள். வெங்கட்ராமன் என்கிற நீதிபதி மிக அறிவாளி . நேர்மையாளர். நிச்சயம் சரியான தீர்ப்பை தருவார்.

கமலின் தசாவதாரம் கூட வழக்குகளில் சிக்கி கொண்டது. அந்த கதையே என்னுடையது என்றார் ஒருவர். இன்னொரு பக்கம் சைவ- வைணவ சண்டை வேறு. அப்போது நீதிமன்றம் தான் கமலுக்கு உதவியது. இம்முறையும் நீதிமன்றம் மூலம் விரைவில் விஸ்வரூபம் ரிலீஸ் ஆகும் என நினைக்கிறேன். ஒன்று அப்படியே ரிலீஸ் ஆகலாம். அல்லது சில கட்- களை பரிந்துரைக்கலாம். தமிழக அரசை பொறுத்த வரை " நாங்கள் தடை செய்தோம்; இப்போது நீதிமன்றம் தான் அனுமதித்துள்ளது " என்ற நிலைப்பாடு எடுக்க கூடும். ஆனால் நீதிமன்ற ஆணைப்படி எந்த Cut-ம் இன்றி படம் வந்து, இஸ்லாமியர்கள் தியேட்டர்களில் எதிர்ப்பை காட்டினால் என்ன ஆகும் என்று தெரிய வில்லை. ஜனவரி 26- பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரிய வரும்

****
 இவ்விஷயத்தில் உங்கள் கருத்து என்ன? சொல்லுங்கள் !
****
தொடர்புடைய பதிவுகள் :

விஸ்வரூபம் பாடல்களில் எத்தனை ஓகே?

40 comments:

  1. I AM THE HERO, I AM THE VILLAIN

    ReplyDelete
  2. தமிழர்கள் எல்லோரும் 'அருவாளும் கையுமா' அலையிற மாதிரி படம் எடுக்கிறாங்களே, அதை தடுக்க யாரும் முன் வராதது வருத்தமாக உள்ளது!

    ReplyDelete
  3. Anonymous11:45:00 AM

    ம்ம்ம்.. :/

    ReplyDelete
  4. விஸ்வரூபம் எத்தனை தடைகள் வந்தாலும் பார்த்தே தீருவேன்

    ReplyDelete
  5. //சீனு

    விஸ்வரூபம் எத்தனை தடைகள் வந்தாலும் பார்த்தே தீருவேன்//


    கவுண்டமணி: திங்கறதுக்கு சோறு இருக்கா..அப்பறம் எதுக்கு கிரிக்கெட் ஸ்கோரு??

    ReplyDelete
  6. //கவுண்டமணி: திங்கறதுக்கு சோறு இருக்கா..அப்பறம் எதுக்கு கிரிக்கெட் ஸ்கோரு??//

    ஹா ஹா ஹா யோவ் மெட்ராஸ் திங்க சோறு... கிரிகெட்டு ஸ்கோரு எதுவும் வேணாம் வேண்டும் ஆஸ்கார்..

    இவன் மெட்ராஸின் விழுதுகள்

    ReplyDelete
  7. சினிமாவை சினிமாவாக பார்ப்போம்னு சொல்றாங்க, அப்புறம் ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளா சித்தரிக்கனும்..... சினிமாதானே, உண்மையில்லையே ஒரு கற்பனைக்காக என்று இந்துக்களை தீவிரவாதிகளா சித்தரித்து ஒருதடவை எடுக்கலாமே? (உண்மையில் இந்து தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) முதலில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் சூழல் இங்கு உள்ளதா? இன்னும் முதல்வர்களை தமிழ்சினிமாவில் இருந்தே தேர்ந்தெடுக்கும் மனமுதிர்ச்சியில்தானே தமிழன் இருக்கிறான்?

    முஸ்லிகள் விவாகாரம் வந்தவுடன் மட்டும் பல நடுசென்டர்கள், கருத்து சுதந்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுவதை பார்க்கும் போது அச்சமாகவே இருக்கிறது.

    அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் என்று போர்னோகிராபிகள் கூடத்தான் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு ஓடுகின்றன. அது போல் இங்கும் கருத்து சுதந்திரம் செய்யலாமே? பரிந்துரைப்பீர்களா? மாட்டீர்கள் ஏன்? ஒரே ஒரு நிமிடம் சிந்தித்தால் உங்களுக்கு எல்லாமே புரியும். ஆனால் மாட்டிக் கொண்டது முஸ்லிம்கள், அதனால் மௌனம் சாதிப்பீர்கள். இதே சூழலில் இந்துத்துவ இயன்க்கங்கள் இருந்திருந்தால் இந்த திடீர் கருத்து சுதந்திர ஆதரவுவாதிகள் என்ன செய்திருப்பார்கள்? திருடனுக்கு தேள்கொட்டியது போல் இருந்திருக்கும்.

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்து இயக்கங்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட செய்திகள் வருகின்றன. உள்துறை அமைச்சர் காவி தீவிரவாதம் என்று சொன்னதற்கே பரிவாரங்கள் சாமியாடுகின்றன. பாராளுமன்றத்தையே இயங்கவிடாமல் தடுப்போம் என்று பிஜேபி மிரட்டுகிறது. இந்து தீவிரவாதத்தை வைத்து படம் எடுக்க இதே கமல் முன்வருவாரா? படம் எடுப்பது இருக்கட்டும், அதைப்பற்றி பேசித்தான் பார்க்கட்டுமே, அப்புறம் தெரியும் உங்கள் கருத்து சுதந்திரத்தின் லட்சணம்.


    குஜராத் கலவர வழக்குகளின் நிலையை அறிவீர்கள். அதே நேரத்தில் கோத்ரா வழக்குகள் எவ்வளவு வேகமாக நடத்தி முடிக்கப்பட்டன என்றும் அறிவீர்கள், மும்பை கலவரம் குண்டுவெடிப்பு, கோவை கலவரம், குண்டுவெடிப்பு எல்லாம் இதுபோலவே கையாளப்பட்டன. குஜராத், மும்பை, கோவை என்று நீதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் திரைத்துரை, மீடியாக்கள், பத்திரிக்கைகள் அனைத்தும், இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்திலேயே சித்தரித்து வருகின்றன. இதே கமலின் உன்னைப்போல் ஒருவன் முஸ்லிம்களை எப்படியெல்லாம் காயப்படுத்தும் விதமாக இருந்தது என்பதையும் பெரும்பாலோனோர் அறிவோர்கள். அதைத் தொடர்ந்து துப்பாக்கி படம். அதன் தொடர்ச்சியான விளைவே இந்த விஸ்வரூப எதிர்ப்பும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். சற்று நேரம் அவர்கள் பக்கம் இருந்து புரிந்து கொள்ள முயல்வோம். காயப்பட்டுக்கிடக்கும் ஒரு சமூகத்தை இப்படி அன்னியப்படுத்த வேண்டாம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வக்கிரங்களை ஆதரிக்க வேண்டாம்.

    யதார்த்தை பிரதிபலிக்கிறோம் என்கிறார்களே சினிமாக்காரர்கள், குஜராத்தில் எப்படியெல்லாம் அப்பாவிகளும், பெண்களும் குழந்தைகளும் ஓட ஓட விரட்டி, வெட்டி, எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று படம் எடுக்க வேண்டியதுதானே? 10 ஆண்டுகள் ஆகியும் எவனும் மூச்சுக்கூட விடவில்லையே? ஏன்?

    சமூகதளங்களில் ரஜினையையோ, விஜயையோ விமர்சித்துப்பாருங்கள். எவ்வளவு தரக்குறைவான தாக்குதல்கள் வருகின்றன என்று பார்க்கலாம். இப்படிப்பட்ட முதிர்ச்சியான சமூகத்தை வைத்துகொண்டு விஷப்பரிட்சைகள் எதற்கு? ஏன் இந்த விஷ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கே கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எத்தனை பேர் விஷம் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கின்றீர்கள்தானே? சர்ச்சையான விஷயங்களை ஆரோக்கியமாக விவாதிக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சியான சமூகமாக நாம் மாறும் வரையில் இது போன்ற தடைகள் அவசியமே.

    ReplyDelete
    Replies
    1. #இந்து தீவிரவாதத்தை வைத்து படம் எடுக்க இதே கமல் முன்வருவாரா?#
      மேலூர் ராஜா அவர்களே கமலின் ஹேராம் பார்த்துவிட்டு எழுதவும்

      Delete
    2. "இது போன்ற தடைகள் அவசியமே. "

      உங்கள் ஆசை புரிகிறது. நீங்கள் யார் என்றும் தெரிகிறது

      Delete
    3. DiaryAtoZ,அவருடைய ஆசை எல்லோருக்கும் தெளிவாய் புரிகிறது. //உண்மையில்லையே ஒரு கற்பனைக்காக என்று இந்துக்களை தீவிரவாதிகளா சித்தரித்து ஒருதடவை எடுக்கலாமே?//
      ஆனா பயங்கரவாதம் செய்யும் இஸ்லாமியர்களை விஸ்வரூபம் படத்தில் காட்டியிருக்க கூடாதாம்.

      Delete
    4. @மேலூர் ராஜா ராஜா
      //இந்துக்களை தீவிரவாதிகளா சித்தரித்து ஒருதடவை எடுக்கலாமே? //
      //அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் என்று போர்னோகிராபிகள் கூடத்தான் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு ஓடுகின்றன. அது போல் இங்கும் கருத்து சுதந்திரம் செய்யலாமே?//
      //உள்துறை அமைச்சர் காவி தீவிரவாதம் என்று சொன்னதற்கே பரிவாரங்கள் சாமியாடுகின்றன. பாராளுமன்றத்தையே இயங்கவிடாமல் தடுப்போம் என்று பிஜேபி மிரட்டுகிறது. இந்து தீவிரவாதத்தை வைத்து படம் எடுக்க இதே கமல் முன்வருவாரா?//
      //குஜராத்தில் எப்படியெல்லாம் அப்பாவிகளும், பெண்களும் குழந்தைகளும் ஓட ஓட விரட்டி, வெட்டி, எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று படம் எடுக்க வேண்டியதுதானே? 10 ஆண்டுகள் ஆகியும் எவனும் மூச்சுக்கூட விடவில்லையே? ஏன்?//

      நச்சுன்னு நாலு கேள்வி, வந்து பதில் சொல்லுங்க காவி..

      Delete
  8. நமது சமூக சூழலுக்கேற்றவாறு படம் எடுக்கத்தெரியாத கமல் ஹாசனையெல்லாம் என்ன சொல்வது? எவ்வளவு அறிவு ஜீவியாக மேதாவியாக இருந்து என்ன பயன்? தானே பள்ளத்தை வெட்டி அதில் குதித்து விட்டு, விழுந்து விட்டேன் என்று கதறுகிறார் கமல். இதற்கு 100 கோடி விரயம் வேறு. இதுவே ஒரு பெரிய சமூக குற்றம். இஸ்லாமிய வெறுப்பு என்பது ஏற்கனவே மீடியாக்களில் நன்கு விற்பனையாகிக் கொண்டிருப்பது, சினிமாக்களிலும் இருந்து வருவதுதான். ஆனால் கமலின் இந்த முயற்சி பொன்முட்டையிடும் வாத்தினை அறுப்பது போல, அவ்வளவுதான்

    ReplyDelete
    Replies
    1. "நமது சமூக சூழலுக்கேற்றவாறு படம் எடுக்கத்தெரியாத கமல் ஹாசனையெல்லாம் என்ன சொல்வது?"

      அண்ணே கமலுக்கு ட்டுசன் எடுக்கிரிங்களா?

      Delete
  9. Cinema is waste.. it causes more harm than benefit to the humankind.

    & btw.. //மூணு டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் என்பது எனக்கு பெரிய அளவு பணம் தானே ? //

    Then why did you book(spend) for cinema..? One can do more useful thing with Rs.500.

    ReplyDelete
  10. ஆதித்யா சேனல்னு நினைக்கிறேன் டாடி எனக்கொரு டவுட்ன்னு ஒரு சின்ன நிகழ்ச்சி வருது. அதுல ஒரு நாள் ,” மது அருந்தும் சீன் வந்தா- மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுன்னு போடறாங்க, சிகரெட் பிடிச்சா- புகை உடலுக்கு கெடுதல்னு போடறாங்க, அப்ப ஏன்ப்பா, கத்தியால குத்தும் சீன் வரும்போது ஒண்ணும் போடமாட்டாங்கன்னு கேட்டு, சொல்லுங்கள் டேடி சொல்லுங்கள் டேடி கேட்டது காமெடியா இருந்தாலும் நிஜம் அதுதானே. இதுக்கு திரையுலகத்தினர் பதில் சொல்வாங்களா!! பலவித ”காட்சிகள்”, குறைந்த உடை, கத்தி குத்து, அருவா வெட்டு” இதெல்லாம் மனதை பாதிக்காதா. :((

    என்னவோ போடா மாதவா கதைதான்!!!!

    ReplyDelete
  11. nanri nanri raja avarhale

    ReplyDelete
  12. இந்த கருத்து கந்தசாமிகள் உங்களுக்கு தனிப்பட கடிதம் போட்டவர்களா:)

    ReplyDelete
  13. கிருஷ்ணலீலை அவர்களே, அதையும் பார்த்துவிட்டுதான் சொல்கிறேன். ஹேராம் படத்திலும் முஸ்லிம்கள் கொடூரமான, இரக்கமற்ற கலவரக்காரர்களாகவே காட்டப்பட்டார்கள். அதற்கு பழிவாங்கவே இந்து இயக்கங்கள் முயல்வதாக நியாயப்படுத்தப்பட்ட காட்சிகளே அதிகம் (படமே அதற்குத்தான் என்றும் வைத்துக் கொள்ளலாம்).மணிரத்தினம் பாம்பே படத்தில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் வேண்டுகோளுக்கு (மிரட்டல்?) இணங்க இந்து கலவரக்காரர்கள் காட்சியை குறைத்து இருதரப்பு கலவரக்காட்சிகளையும் சம அளவில் வைத்தது உங்களுக்கு மறந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. "ஹேராம் படத்திலும் முஸ்லிம்கள் கொடூரமான, இரக்கமற்ற கலவரக்காரர்களாகவே காட்டப்பட்டார்கள்."

      கண்ணாடி போட்டு படத்த பாத்திங்களா?

      Delete
  14. முன்பெல்லாம் ஒரு பரபரப்பு செய்தினா அது பத்திரிக்கைகளுக்கு நல்ல தீனி. இப்போ அது வலை உலகுக்கும் பொருந்துது(என்னையும் சேர்த்து தான்). என்னை பொறுத்த வரையில் யார் மனதும் புண் படாம ஒரு சினிமா என்னங்க, நம்ம வீட்ல ஒரு விசேசம் கூட நடத்த முடியாது. அப்படி பார்த்தா காதலை விரும்பாத அனைத்து பெற்றோர்களையும் புண்படுத்தி தான் தமிழ் சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. அது மட்டுமா ஒவ்வொரு படத்திலும் போலீசை, அரசியல்வாதியை, கல்லூரி மாணவர்களை என யாராவது ஒருவர் மனம் புண்பட்டுக்கொண்டு தான் இருக்கும். சினிமாவுல இதெல்லாம் சகஜம்ங்க...

    எனக்கு, என் அண்ணனுக்கு, எங்கள் குடும்ப நண்பர்கள் என்று பலர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். இப்போ ரெண்டு நாளா பேசிக்கொண்டிருக்கும் போது கூட யாரும் 'விஸ்வரூபத்தை' பற்றி பேசவில்லை. இதெல்லாம் பியூர் அரசியல் என்பது தான் என் கருத்து.

    நான் இப்படி சொல்வது கூட சிலரை புண்படுத்தலாம். அதற்காக சொல்லாமல் இருக்க முடியுமா?

    ஹாலிவுட் படங்களில் சைனாவையும், ரஷ்யாவையும் எப்போதுமே அமெரிக்க எதிரிகளாக சித்தரித்து தான் படம் எடுப்பார்கள். சைனாக்காரன் எப்பவுமே வில்லனா தான் இருப்பான். ரஷ்யாக்காரன் அமெரிக்காவை அழிப்பதிலேயே குறியா இருப்பான். அதற்காக அமெரிக்கர்கள் சைனாகாரர்களை எதிரிகளாக பார்ப்பதில்லை. இதுவும் என் கருத்து தான். ஆமா சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete
  15. கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் இந்து கடவுளையும், பெண் போலீஸையும் அவமதிக்கும் வகையில் இருக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு இந்து மகாசபா நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/kanna-laddu-thinna-aasaiya-trouble-168065.html

    இந்த செய்தியை படிக்கும் போது மண்குடம், பொன்குடம் சொலவடை ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இது ஒன்றல்ல இது போல ஏகப்பட்ட நிகழ்வுகள் இருக்கின்றன. அனைத்தும் வசதியாக மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு விடுகின்றன. கமலை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் பெரும்பாலானோர் தமது முஸ்லிம் வெறுப்பையே சவுகர்யமாக கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. மேலூர் ராஜா,

      கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தை தடை பண்ணிடன்களா? என்ன?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  16. ஆக, கொஞ்ச நாள் ஊடகங்களுக்கும் பதிவுலகிலும் பொழுது காரசாரமாகப் போகும்.

    ReplyDelete
  17. ஒவ்வொருவருக்கும் பிடிக்காத காட்சிகளை வெட்ட ஆரம்பித்தால் திரைப் படம் என்பது ஒரு ஸ்லைட் ஷோவாக மட்டுமே இருக்கும். படம் பிடிக்காதவர்கள் பார்க்க வேண்டாமே, அதை விட்டு விட்டு படத்தை திரையிடக் கூடாது என்று சொல்வது வன்முறையே.

    ReplyDelete
  18. DiaryAtoZ, நீங்கள் மட்டுமல்ல, இன்னும் பல நடுநிலை வேஷம் போடும் பலருடைய உண்மை நிலையும் வெளிவந்துவிட்டது. அந்த வகையில் கமலுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தை தடை பண்ணுவது அரசின் கையில்தான் உள்ளது. விஷ்வரூபம் படத்தை தடை செய்தது அரசுதான் முஸ்லிம் அமைப்புகள் அல்ல. நான் சொல்ல வந்தது மதவாதிகள் அனைவரும் ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள், ஆனால் நடுநிலைவாதிகளான நாம் இந்துக்களுக்கு ஒரு அளவுகோளும், முஸ்லிம்களுக்கு ஒரு அளவுகோளும் வைத்திருக்கிறோம். புரிந்தால் சரி (புரியத்தான் செய்யும் ஆனால் ஒத்துகொண்டால் அப்புறம் நாம் சொல்வது தப்பாகிவிடுமே என்று ஈகோ தடுக்கும்)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் இராஜா

      இதுதான் நடுநிலையா!!

      நீங்க நடுநிலைவாதி என்றால் ஹி ஹி நான் ஒரு ஓரத்தில் இருக்கவே விரும்புகிறேன்!!
      வாழ்க வளமுடன்!!

      நன்றி!!

      Delete
    2. ஹி ஹி ஹி
      சகோ, அவங்களிடம் நடுநில என்று ஒன்றே கிடையாது அஜராக மார்க்க நிலைமட்டுமே.

      Delete
  19. தடை பண்றதா இருந்தா, "ரோஜா" படத்தை கூட தடை பண்ணியிருக்கணும்.

    நல்லா ஓடி வசூல் ஆனப்புறம்தான், "நியூ" படத்தை ஆபாசமா இருக்குன்னு சட்ட ரீதியா தடை பண்ணாங்க. இப்போ விஸ்வரூபம் பார்க்காமலேயே இப்படித்தான் இருக்கும்னு முடிவு பண்ணிட்டாங்க.

    1. பாபா (சிகரெட் - பா.ம.க. விவகாரம்)
    2. சண்டியர் (புதிய தமிழகம் கிருஷ்ணசாமி)
    3. தசாவதாரம் & எந்திரன் (என்னுடைய கதைன்னு ஒருத்தர் கேஸ் போட்டார்)

    ரஜினியும், கமலும் easy and soft targetsனு தோணுது.

    ReplyDelete
  20. திரு. மேலூர் ராஜா ராஜா,

    நாகரிகமான முறையில் நீங்கள் விவாதத்தை தொடர்வது சந்தோஷம்.

    ஒரு வேளை, படத்தில் தடை செய்யுமளவுக்கு ஒன்றுமில்லை என்று அறிவிப்பு வந்தால், என்ன செய்வீர்கள்? தடை செய்யுமளவுக்கு தூண்டியவர்களை விமர்சிப்பீர்களா?

    ஹிந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ, என் சொந்தக்காரரோ, பக்கத்து வீட்டுக்காரரோ......என்னை பொறுத்தவரை, யார் பண்ணாலும், தப்பு தப்புதான்.

    ReplyDelete
  21. பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள் இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் " நம்பள்கி, நிம்பள்கி" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு?

    முஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம்? பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.

    இந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் "கைது செய்யப்பட்டது" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)

    சமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி?? என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு "இந்துத்துவ தீவிரவாதிகள்" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் "காவி தீவிரவாதம்" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.

    இந்த சூழ்நிலையில் தான் "துப்பாக்கி" திரைப்படம் தனது வழமையான "முஸ்லிம் தீவிரவாதி" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் "ஸ்லீப்பர் செல்" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.

    பொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு!!

    இந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.

    ReplyDelete
  22. விஸ்வரூபம் படத்தை வரவேற்கும் நல்லவர்களே(?) கமல் நடித்த மருதநாயகம் ஏன் தடை செய்யப்பட்டது.........?

    காரணம் மருதநாயகம் என்ற அரசன் இறுதியில் முஸ்லிமாக மாறி மரணிப்பதாக கதை முடிகிறது.
    அது சில ஹிந்து மதத்தவர்கள் மனதை தாக்கி இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளது....

    எனது பொதுவான கேள்வி...

    கமல்ஹாசனுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சிந்தனை., ஜாதி, மதம் சில இனங்களையே அசிங்க படுத்தி அதில் காசு சம்பாதிக்கும் மனம்....?

    ஏன் அவர் படத்தில் Comman Man என்ற கதாபாத்திரத்தில் படம் எடுத்தால் அந்த படம் ஓடாதா என்ன.......?

    முஸ்லிம்கள் இப்படிதான் இருப்பார்கள் தலையில் தொப்பி, தாடி, பெரிய ஜிப்பா முஸ்லிமின் கலாச்சாரத்தை தீவிரவாதம் என்று கருதினால் எப்படி எங்களால் அதை பார்த்து கொண்டு பொறுமையாக இருக்க முடியும்.......?

    ReplyDelete
  23. Tamilnadu Govt is now developing Islam leaders as heroes. This will create another Madani (Kerala leader) and TN has to face it.

    They now succeed in U.S consulate attack, Duppaki and now Viswaroopam, so they will try to become a deciding factor in all matters.

    Even in kerala the movie is not banned (muslims are also a deciding factor in kerala politics)

    Like Bin Laden, Bindranwalae TN Govt is going to suffer a lot in future

    ReplyDelete
  24. reviews frm u.s & u.k r nt good.....so it will be another flop fr kamal........

    ReplyDelete
  25. திரு. Raghu Ekambaram,
    நன்றி. இது போன்ற விஷயங்களில் ஆரோக்கியமான விவாதம் செய்யக் கூட ஆள் இல்லை (இருதரப்பிலும்தான்) என்ற நிலையில் இன்று தமிழர்கள் இருக்கிறோம். வேறு என்ன சொல்வது? முஸ்லிம்கள் பக்கம் இருந்தும் சிந்தித்து பாருங்கள் என்று சொல்வதற்கு கூட வக்கிர வெறுப்பை உமிழும் அளவுக்கு இங்கே வெறுப்பு விதைக்கப்பட்டிருக்கிறது.

    தடை செய்தது தவறென்று கோர்ட் முடிவு செய்தால் அரசைத்தான் தண்டிக்க வேண்டும். (முஸ்லிம்கள் செய்தது தடை கோரி மனு கொடுத்தது மட்டுமே, இவ்வளவு அவசரமாக முடிவெடுத்தது அரசுதான், அதுதான் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்?) தவறான கோரிக்கையோ, சரியான கோரிக்கையோ, விஸ்வரூபம் படத்தை தடுத்துவிட்டார்கள் என்று படுமோசமான வக்கிர, வெறுப்பு பிரச்சாரங்கள் செய்யப்பட்டுவிட்டன.இது சரியானதல்ல.

    ReplyDelete
  26. /////ஆனா பயங்கரவாதம் செய்யும் இஸ்லாமியர்களை விஸ்வரூபம் படத்தில் காட்டியிருக்க கூடாதாம்.////

    நண்பர் வேகநரி, இஸ்லாமியர்களைத்தான் 10-15 வருடங்களாக தீவிரவாதிகளாக காட்டிக் கொண்டிருக்கிறோமே? அர்ஜுன், விஜயகாந்த் எல்லாரும் அதை வைத்து தானே பிழப்பை ஓட்டினார்கள்? ஒரு மாற்றத்திற்காக இந்து தீவிரவாதத்தையும் வைத்து எடுக்கலாமே? பாபர்மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் கலவரங்கள் என்று இந்து தீவிரவாதத்தின் கோரமுகங்களையும் காட்டி யதார்த்தத்தை பதிவு செய்யலாமே?

    ReplyDelete
  27. /////ஆனா பயங்கரவாதம் செய்யும் இஸ்லாமியர்களை விஸ்வரூபம் படத்தில் காட்டியிருக்க கூடாதாம்.////

    பயங்கரவாதம் செய்யும் இந்துத்துவாக்களையாவது விஸ்வருபம் இரண்டாம் பாகத்தில் கமல் காட்ட தயாரா? தீவிரவாதத்தை அளக்க இரட்டை அளவுகோல் எதற்கு? தீவிரவாதத்தை கண்டிப்பதிலே கூட நேர்மையில்லாத பாரபட்ச போக்கு அதனை மென்மேலும் தூண்டத்தான் துணைசெய்யும்.



    //இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளும் நாசவேலைகளையும் கட்டவிழ்த்துவிட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் வைத்து சதித் திட்டங்களை தீட்டியதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி கண்டறிந்துள்ளது.

    ஹிந்துத்துவா தீவிரவாதக்குழுவின் தலைவன் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி 2006-ஆம் ஆண்டு மே மாதம் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரை நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளான்.

    ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும் வாங்குவதற்காக அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சியுமான பரத்துடன் சேர்ந்து தான் இந்திரேஷ்குமாரிடமிருந்து ரூ.50 ஆயிரம் வாங்கியதாக சுனில் ஜோஷி சுவாமி அஸிமானந்தாவிடம் கூறியிருந்தான். விசாரணையின்போது பரத் இதனை ஒப்புக்கொண்டுள்ளான். நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் வைத்து இந்திரேஷ்குமார், ஜோஷிக்கு ரூ.50 ஆயிரம் அளித்ததையும் பரத் தெரிவித்துள்ளான்.

    1999-ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் துங்கர்காவோனில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஜோஷியும் இதர இரண்டு நபர்களும் டெட்டனேட்டர்களை சோதனை நடத்தியதற்கும் சாட்சிகள் உள்ளனர். அஜ்மீர் குண்டுவெடிப்பை நடத்துவது தொடர்பான அனைத்து கூட்டங்களும் ஜார்க்கண்டில் உள்ள மிஹிஜாம் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.

    2007-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி சுனில் ஜோஷியை கொலைச் செய்த பிறகு துப்பாக்கிகளையும், எலக்ட்ரிக் வயர்களும் அடங்கிய இரண்டு பைகளை மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பாதுகாத்து வைத்திருந்ததற்கும் சாட்சி உண்டு. ராம்ஜி கல்சங்கரா என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவன் இதில் ஒரு பையை எடுத்துவிட்டு மற்றொன்றை நர்மதா நதியில் எறிந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறுகின்றனர்.தற்போது எந்த வழக்கிலும் இந்திரேஷ்குமார் குற்றவாளி இல்லை என்றாலும், புலனாய்வு ஏஜன்சிகளின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.// Source: Thoothuonline

    ReplyDelete
  28. இங்கே ஒரு விஷயத்தை எல்லோரும் மறந்துவிட்டோம் (வசதியாக). முஸ்லிம் அமைப்புகள் தடைகோரி அரசிடம் மனு அளித்தார்கள். அரசும் தடை விதித்தது. அவர்கள் பா.ம.க, சிவசேனா போன்ற சில கட்சியினர் போல தியேட்டரை உடைக்கவில்லை. படக்காட்சிகளை நிறுத்தவில்லை. அரசிடம் முறையிட்டார்கள். அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் இணையத்தில் ஒவ்வொருத்தருடைய கருத்துக்களையும் பார்க்கும் போது ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு விஷ்வரூபம் ஓடும் தியேட்டர்கள் முன் நிற்பது போல நினைத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. கமல் என்பதால் இந்த ரியாக்சனா, இல்லை முஸ்லிம்கள் என்பதால் இந்த ரியாக்சனா? இதுவே அர்ஜூன், விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு இதே பிரச்சனை என்றால் இவர்கள் ரியாக்சன் என்ன என்பது சிந்திக்கத்தக்கது.

    இந்த பிரச்சனைக்குப் பிறகு சமூகத்தின் மீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது, நன்றி. வணக்கம்!

    ReplyDelete

  29. இந்த மாதிரியான போராட்டத்தின் மூலம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருந்ததில் தான், திரும்ப திரும்ப "முஸ்லிம் என்றால் தீவிரவாதி" என்ற பிரச்சார பயங்கரவாதம் தொடர்ந்து சினிமாக்களில் சித்தரிக்கப்பட்டு பொது புத்தியில் ஆணி அடிக்கப்பட்டது.

    அச்சு ஊடகங்களில் "இஸ்லாமிய தீவிரவாதம் " முஸ்லிம் தீவிரவாதி" என்ற சொல்லாடல் பல காலமாக சொல்லப்பட்டு வந்தது. தீவிரவாதத்தை சுட்டும் போது ஏன் மதத்தோடு தொடர்புப்படுத்துகிறீகள்? தீவிரவாதியை அவன் சம்பந்தப்பட்ட இயக்கத்தோடு சொல்லுங்கள் என்று முஸ்லிம்கள் போராடியதன் பலன், இப்போதெல்லாம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்ட அச்சு ஊடகங்கள் அந்த போக்கை தவிர்த்து விட்டன.

    எனவே, ஜனநாயக நாட்டில் போராட்டம் மூலம் தான் கோரிக்கைகளை முன் வைக்க முடியும். ஜனநாயகத்திற்கு புறம்பான வன்முறைகளைத் தான் நாம் கண்டிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான இந்த மாதிரியான சினிமாக்களை எதிர்த்து போராடாமல் இருந்தால், தொடர்ந்து இது போல வரும் சினிமாக்களாலும் தான் முஸ்லிம்களைப் பற்றிய தவறான பிம்பம் உருவாக்கப்படும். ஜனநாயகத்தில் சட்டத்திற்கு கட்டுப்பட்டு போராடுபவர்களை கொச்சைப்படுத்தினால் தான் வேறு வகையான விளைவுகள் ஏற்படும்.

    விஸ்வரூபம் எங்கள் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்று கோரிக்கை வைக்கிறார்கள். கோரிக்கையில் உள்ள நியாயத்தையும் சட்ட ஒழுங்கு பிரச்சினையையும், (குடியரசு தின பாதுகாப்பு, மீலாடி நபி விடுமுறை) கருத்தில் கொண்ட அரசாங்கம் இரு வார தடையை ஆணையிடுகிறது. இந்த தடைஆணையை எதிர்த்து, கமல் நீதிமன்றம் போகிறார், இதன் மீதான தீர்ப்பை வரும் 28ந்தேதி நீதிபதி வெளியிடவிருக்கிறார். இதில் எங்குமே சட்டம் மீறப்படவில்லை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...