Sunday, February 17, 2013

ஆதிபகவன்- பெரிய சைசில் ஏமாற்றிய யுவன்- பாடல் விமர்சனம்

திபகவன் ....அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம். சில பல ஆண்டுகளாக ப்ரோடக்ஷனில் இருந்து வருகிற 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்திலேயே மிக ஊறி போனதால் ஜெயம் ரவிக்கு சென்ற ஆண்டு முழுக்க ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை.

இதற்கிடையில் இப்படம் குறித்து சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. ஜெயம் ரவிக்கும் -இயக்குநர்க்கும் முட்டி கொண்டது என ஒரு நியூஸ்; பின் ஆதி பகவன் என தலைப்பு வைத்து இந்து கடவுள்களை அவமதிக்கிறார் என்று விஸ்வரூப பிரச்சனை சமயத்தில் இன்னொரு ரகளை.. மிக சமீபத்தில் படத்திற்கு "A  " சான்றிதழ் கிடைக்க, அதனால் வரிச்சலுகை கிடைக்காது என்பதோடு, டிவிக்களில் காட்டுவதும் பிரச்சனை. நிற்க படத்தின் தயாரிப்பாளர் ஜெ. அன்பழகன்.  - தி.மு.க வின் தற்போதைய MLA !

ஏழெட்டு மாதம் முன்பு வெளிநாட்டில் வைத்து ரிலீஸ் செய்த பாடல்கள் எப்படி? வாங்க பார்க்கலாம்


காற்றிலே மிதந்தேனே

பாடியவர்கள்: உதித் நாராயண் & ஸ்வேதா பண்டிட்
பாடல்: அறிவுமதி

"பிரியமான பெண்ணை ரசிக்கலாம்- தப்பில்லை"; என்ற வரிகளை "பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்; தப்பில்லே " என்று பாடிய உதித் நாராயண் தான் இப்பாட்டையும் பாடியிருக்கிறார்.

கிளாசிக்கல் போல துவங்கும்போது அதிகம் ஈர்ப்பில்லா விடினும், சரணத்தில் பாட்டை முழுதாய் ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆண் -பெண் இரு குரலும் இணைந்து ஒலித்தாலும் சோகப்பாட்டு போல ஒரு வலி இந்த பாட்டில் உணர முடிகிறது. இந்த ஆல்பத்தில் ரசிக்க முடிகிற சில பாடல்களுல் ஒன்று.

ஒரு துளி விஷமாய்

பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல், ஷரிப் சப்ரி
பாடல்: ஸ்நேஹன்

தலைவி ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் பெரும்பாலும் சோரம் போவதில்லை. பாட்டு படிப்பது என்பார்களே... பாடலின் பல்லவி அதனை தான் நினைவு படுத்துது ! Literal -ஆக, பாட்டை பேசுகிற பாணியில் படிக்கிறது ஆண்குரல்.

காற்றிலே மிதந்தேனே பாடல் போலவே - டூயட் ஆக இருந்தாலும் கோபம் அல்லது வருத்தத்தில் பாடுகிற ஒரு பாட்டாக தான் இதுவும் தெரிகிறது.

எந்த வகை பாட்டு என்றே வகைப்படுத்த முடியாத இந்த பாட்டு ஷ்ரேயா கோஷல் பாடி ஜெயிக்காத வெகு சில பாடல்களில் ஒன்றாக சேரக்கூடும்.

*******
இஸ்ஸலாமே

பாடியவர்கள்: மானசி, ராகுல் நம்பியார்
பாடல்: சிநேகன்

க்ளப் சாங் போல இருக்கிறது . படத்தின் ஹீரோ ஒரு கேங்க்ஸ்டர் (அல்லது அப்படி நடிப்பவர்) என்பதால் கிளப்பில் பாடுகிற மாதிரி வருகிறது போலும். பாட்டில் ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை கூட கண்டுபிடிக்க முடியாத படி இருப்பது தான் பாட்டின் சிறப்பம்சமே. பாடல் துவங்கும் முதல் வார்த்தையே புரியாமல் இணையத்தில் தேடி பார்த்து தான் தெரிந்து கொண்டேன். "ஊ ஊ ஊ ஊ " என கோரஸ் பாடும் இடமும் அந்த இடத்து இசையும் மட்டும் தான் கேட்கிற மாதிரி இருக்கு. மற்றபடி முழு சொதப்பல் பாட்டு.

*******
அகடம் பகடம்

பாடியவர்: மொஹிட் சவுஹான்
பாடல்: மனோஜ்

முழுக்க முழுக்க ஒரு ஹிந்தி பாட்டு. வேகமாக போகும் பாட்டு- கதையை ஒட்டி- திரைக்கதையை நகர்த்தி செல்ல உதவ கூடும். ஹிந்தி பாடல் புரிந்தவர்களால் மட்டுமே முழுதும் ரசிக்க முடியும். இப்போதைக்கு சில இடங்களில் இசை மட்டுமே ஈர்க்கிறது. மற்றபடி ஒரு தமிழ் பட ஆல்பத்தில் எதற்கு முழு ஹிந்தி பாட்டு என்ற கேள்வி தான் வருகிறது.


*******
பகவான் - ராப் சாங்

பாடியவர்கள்: சத்யன் , The Prophecy.

போன பாட்டு முழுக்க ஹிந்தி வரிகளை கொண்டது என்றால் இப்பாட்டு முழுக்க ஆங்கில வரிகளை கொண்ட ராப் பாடல். ரொம்ப உற்று கேட்டால் ஹீரோவின் அருமை பெருமைகளை சொல்கிற பாட்டு என்று புரிந்து கொள்ள முடிகிறது

"பகவான் பகவான் " என வருகிற இடமும் அப்போது ஒலிக்கும் இசையும் மட்டுமே ரசிக்கிற விதத்தில் உள்ளது.
*******
யாவும் பொய் தானா

பாடியவர்: மதுஸ்ரீ
பாடல்: சிநேகன்

பில்லா - 2 படத்தில் வரும் பெண் குரல் பாடலான " இதயம்..இதயம் " பாடலை ஏனோ நினைவு படுத்துகிறது இப்பாட்டு.

பொதுவாய் காதல் தான் பொய் என்று பாடுவார்கள். இப்பாட்டிலோ " யாவும் பொய் தானா.. காதல் தவிர? " என்று கேட்கிறார் நாயகி. கேட்க கேட்க ஓரளவு பிடிக்கிறது பாட்டு
***
மொத்தத்தில்:

ஓரிரு பாட்டை தவிர மற்றவை ஈர்க்கவே இல்லை ! யுவன் -அமீர் காம்பினேஷன் பெரும்பாலும் ஜெயிக்கும். இம்முறை கோட்டை விட்டு விட்டனர் என்று தான் வருத்ததோடு சொல்ல வேண்டியுள்ளது :((

5 comments:

  1. One of the forgettable albums of Yuvan, I say :)

    ReplyDelete
  2. இப்போதெல்லாம் பல படங்களின் பாடல்கள் இப்படித்தான் சொதப்புகிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. Anonymous12:32:00 AM

    என்னவோ போங்க வர வர மாமியார் கழுதையா போறக் கதையா, தமிழ் சினிமா மீண்டும் தேயத் தொடங்கியுள்ளது போல ... ஒன்னையும் பார்க்க முடியல ..

    ReplyDelete
    Replies
    1. இக்பால்: உண்மை தான்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...