Tuesday, March 19, 2013

ஈழ பிரச்சனை- கலைஞர் நிலை - விகடன் கட்டுரை

"ண்ணா பிசியா?  பேசலாமா? "

தேவா என்னுடனான தொலைபேசி பேச்சை இப்படித்தான் ஆரம்பிப்பான்.

அறை மணிக்கு முன் தனியறையில் ஆப்பு வாங்கியிருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் " சொல்லு தேவா " என்பேன்.

" விகடனில் ஈழ பிரச்சனை பத்தி திருமாவேலன் எழுதிய கட்டுரை படிச்சேன். என்னமோ போல ஆகிடுச்சு. கடைசி பகுதி மட்டும் படிக்கிறேன் கேளுங்க" என சொல்லி விட்டு போனிலேயே - பெரியார் சொன்ன வரிகளும் கட்டுரையின் கடைசி வரியையும் படிக்க "திடுக்" என்று தாக்கியது. அதன்பின் வழக்கம் போல் இருவரும் அது பற்றி பேசி ஆத்து போனோம். " இவர் மட்டுமா? எல்லா அரசியல் வாதியும் இலங்கை பிரச்னையை வச்சு அரசியல் தானே பண்றாங்க? " என்ற ரீதியில் போனது எங்கள் பேச்சு. 

மாலை வீடு வந்ததும் முதல் வேலையாக அந்த கட்டுரையை அச்சு வடிவில் - புத்தகத்தில் நிதானமாய் வாசித்தேன். 

அடுத்த சில நாட்களில் கூகிள் பிளஸ் அல்லது முகநூலில் யாரேனும் இக்கட்டுரை பற்றி எழுதுவார்கள் என நினைக்க, யாரும் பகிர்ந்த மாதிரி தெரியலை. உடன்பிறப்புகள் பொங்கிய மாதிரியும் தெரியலை. (என் கண்ணில் படாமலும் இருந்திருக்கலாம்)

என் தந்தை கலைஞருடன் திருவாரூர் மற்றும் குடந்தையில் நாடகத்தில் நடித்தவர். நகர தி.மு. க. பொருளாளராக இருந்து எமெர்ஜென்சியில் சிறை சென்றவர். அந்த ஈர்ப்பில் இன்றும் தி.மு.க தவிர வேறு கட்சிக்கு ஓட்டு போட மாட்டார். எனக்கும் தி. மு. க மீது சற்று ஈர்ப்பு உண்டு என்றாலும் நல்லது கெட்டது என வரும்போது தி.மு.க வை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நபர் இல்லை. சொல்ல போனால் கடந்த 15 ஆண்டுகளாக ஆளும் கட்சி எதுவாயினும் அதற்கு எதிர்த்து ஓட்டு போடும் சாதாரண மனிதனாகவே இருந்து வருகிறேன். 

இன்றைய தி.மு.க வில் எனக்கு பிடிக்காத விஷயங்கள் 3-

1. குடும்ப ஆதிக்கம்.

2. ஊழல் (இது - தி.மு.க - அ .தி.மு.க இரண்டு கட்சிக்கும் பொதுவே; இவ்விஷயத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை)

3. ஈழ விஷயத்தில் போடும் நாடகம் - ஆட்சியிலிருந்த போது அவர்களுக்கு எதுவும் செய்யாமல் போனது

நிற்க . பொங்கும் உடன்பிறப்புகள் இந்த கட்டுரையில் சொன்ன விஷயங்களுக்கு தகுந்த விளக்கங்களுடன் பொங்கலாம்.. !

விகடனில் வரும் கட்டுரைகளை ப்ளாகில் பகிர்வது எனக்கு அறவே பிடிக்காத விஷயம். அது இன்னொருவர் உழைப்பை திருடி குளிர் காயும் ஈன காரியம் என்று நினைப்பேன். இருந்தும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் இன்னும் ஆயிரம் பேருக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இங்கு பகிர்கிறேன்.

இன்றைய தேதியில் Draft-ல் இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை: 56. விகடனில் மட்டுமல்ல பிற பத்திரிக்கைகளில் வெளியாகும் கட்டுரைகள் வீடுதிரும்பலில் தொடர்ந்து வராது. நம்ம பதிவை தினம் ஒன்று போட்டாலே பல மாசம் தாங்கும் !

இனி விகடனில் வெளியான கட்டுரை ....

************

'சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம்.கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.

ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது,தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில்அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்திகருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்... பச்சைத் துரோகம்!

முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால்,இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

''இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம்ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும்,நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில்'முதல்வராக’ இருந்தபோது, ''நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப்பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லதுவெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்'' என்று சொல்லிச் சமாளித்தவர்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச்சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை.'கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர்ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்தியஅரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ''பதவி என்தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி'' என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!

''இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்'' என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார்கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களைஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை,ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ''அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன்,பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன?கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பானஇடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டுகள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள்உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.

''நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லிஉண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால்,அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?'' என்று மனசாட்சி உள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ''மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்'' என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள் கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்றுநிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்காவது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 'கொன்றுவிட்டார்கள்... கொடுமைப்படுத்தினார்கள்... சித்ரவதை செய்தார்கள்’என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. 

அப்போதும் 'முதல்வர்’ கருணாநிதி, ''இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல''என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ''போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை'' என்றார்.

அதாவது,இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.

''இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும்இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன்,சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்''என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார்.

போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும்.'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக்காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.

''போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல'' என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ''அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது'' என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும்.''ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்'' என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.

போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ''முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து'' என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ''அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்'' என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப்பட்டபோது, ''இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்'' என்று மிரட்டல் விடுத்து, பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக்கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.

சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக்கொடுக்கிறது. 

உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ''பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்'' என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ''விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்''என்று கிண்டல் அடித்ததும், ''இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்பவர், அன்று, ''ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்'' என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.

ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால்,பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக்கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது.

அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களைவிரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல்இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு,கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத்தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். 

பெரியாரைக்காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ''ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்குயாரும் விதிவிலக்கு இல்லை!'' என்று தந்தை பெரியார் சொன்னார்.

அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?

14 comments:

  1. you always need some issue to keep alive your party. if u keep quiet when u r not in power, u will be nowhere when next elections come.

    Thalaivar knows this much more than most of us.
    enna thaan irunthaalum intha vayasilum active aa irukkaru paarunga.

    subbu thatha.

    ReplyDelete
  2. எழுதியவர் விகடன் ஆசிரியர் ப.திருமாவேலன். திருமாவளவன் இல்லை

    ReplyDelete
  3. காஷ்மீரில் நடக்கும் போராட்டத்தை தங்கள் நிலத்துக்கான விடுதலைப் போராட்டம் என்று அங்குள்ள அமைப்புகள் சொல்கின்றன. தீவிரவாதம் என்று சொல்லித் ராணுவத் தாக்குதல் நடத்துகின்றோம் நாம். அந்த நிலப்பரப்பில் உள்ளவர்கள் இஸ்லாமியர்கள் என்று மதத்தை அடிப்படையாக வைத்து பாக்கிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் முதல் - அமைச்சர் மனது வைத்தால் காஷ்மீருக்கு விடுதலை வாங்கித் தரமுடியும் என்றும் நமது ராணுவத் தாக்குதல்களை அறவே நிறுத்த முடியும் என்றும் யாரேனும் கூறினால் நாம் எதனால் சிரிப்போம்? ஆனால் அதே நேரத்தில் ஈழத்தில் விடுதலை கேட்பவர்கள் நம்மவர்கள் என்பதாலும், அங்கு ராணுவத்தால் அநியாயமாக சித்திரவதைப்படுவது நம்மவர்கள் என்பதாலும் தமிழக முதல்வர் பதவியில் இருப்பவர் அதை முற்றிலும் தீர்க்க முடியும் என்று நம்பவும், அப்படிச் செய்யவில்லை என்று ஆத்திரமும் படுகிறோம். சர்வதேச அழுத்தம் என்பது இத்தனை காலம் இல்லாது போனது ஈழப்போராட்டத்தின் மிகப்பெரிய பின்னடைவு. யார் செய்தது சரி யார் செய்தது தவறு என்று ஆராய்வதைவிட சர்வதேச அழுத்தத்திற்கு என்ன வழி என்று ஒன்றுகூடி முயற்சிப்பதே உருப்படியான செயல். விகடன் கட்டுரைப் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் அது அவர்களின் அஜென்ட்டா. இந்த வாரம் ஈழம் குறித்து கலைஞரைத் திட்டி எழுதியாயிற்று. அடுத்த இதழில் இதே பிரச்சனையில் செல்வி.ஜெயலலிதா அவர்களின் செயல்பாடு குறித்தும் இதே அளவில் கட்டுரை எழுதினால் நான் உபயோகித்த "அஜென்ட்டா" என்ற வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டு திரும்பப் பெறுகிறேன்.

    ReplyDelete
  4. "அடுத்த சில நாட்களில் கூகிள் பிளஸ் அல்லது முகநூலில் யாரேனும் இக்கட்டுரை பற்றி எழுதுவார்கள் என நினைக்க, யாரும் பகிர்ந்த மாதிரி தெரியலை."

    காவிரிமைந்தன் என்பவரின் http://vimarisanam.wordpress.com/ என்ற தளத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். இருப்பினும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

    ReplyDelete
  6. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

    ReplyDelete
  7. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

    ReplyDelete
  8. அரசியல்வாதிகள் பேசி பேசி ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மீது தான் ரொம்ப கோபம் வருகிறது. ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தார்கள்?எவ்வளவு சொத்து தான் வேண்டுமோ?

    ReplyDelete
  9. அருமையான கட்டுரை பகிர்வு! கருணாநிதியின் முதலைக் கண்ணீரையும் நாடகத்தையும் அவர்களின் தொண்டர்கள் கூட இப்போது நம்புவது இல்லை! அவர்களும் பாழாய்ப் போன அரசியலுக்காக அவரை தொடர்கிறார்கள்! நீரற்ற குளத்தில் இருந்து பறவை பறந்து விட்டது! அவ்வளவுதான்! நன்றி!

    ReplyDelete
  10. அண்ணே நானும் தி மு க அனுதாபி தான் ஏண்ணா வேற வழி இல்ல அந்த அம்மா விட இந்த ஆளு ஏதோ பரவா இல்ல அப்படிங்குற எண்ணம் தான்

    ReplyDelete
  11. ஏதோ கருணாநிதியால்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீராதது போலவும், அவர் அப்போதே காங்கிரஸை விட்டு விலகி இருந்தால் எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கும் என்பது போலவும் எழுதியும் பேசியும் வருகிறார்கள். கருணாநிதியும் மற்றவர்களைப் போல ஒரு இந்திய அரசியல்வாதிதான். கருணாநிதி அப்போதே விலகி இருந்திருந்தாலும் இலங்கையில் என்ன நடந்ததோ அதுதான் நடந்து இருக்கும். ஏன் எனில் போரில் இலங்கையின் முக்கிய இலக்கு யார் என்பது உலகுக்கே தெரியும். கருணாநிதி விட்டுப் போன இடத்தில் ஜெயலலிதா காங்கிரசோடு கூடடணி வைத்து இருந்திருப்பார். அவ்வளவுதான்.

    ஒரு குவைத்திற்காக ஈராக்கின் மீது போர் தொடுத்த அமெரிக்கா, இலங்கையை அப்போது ஏன் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. காரணம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மற்றவர்கள் அதன் உள்நாட்டுப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்கள்.

    எல்லாமே அரசியல். எல்லோரும் இங்கிருக்கும் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஒரே சமயம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.



    ReplyDelete
  12. Anonymous7:34:00 PM

    தமிழ் இளங்கோ வின் கருத்து மெத்த சரி.!.. விகடன் பத்திரிகைகள் காசுக்கு மாரடிக்கும் வேலையை எப்பவோ தொடங்கியாயிற்று!... கலைஞர் 1981 முதல் ஈழத்தமிழர்களுக்காக செய்தவற்றை புதிய தலைமுறையில் தெளிவாக கூறினார்கள்!.. நாடகம் போடுவது யார் என்று நடுநிலைமையோடு யோசியுங்கள்! சகோ! 2009 ல் திமுக அமைச்சர்கள் பதவி விலகி மத்திய அரசு கவிழ்ந்து இருந்தாலும் பல்வேறு நாடுகள் துணை இலங்கைக்கு உண்டு என்பதை மறவாதீர்! இலங்கை இந்தியாவை சட்டை செய்து ரொம்ப ஆண்டுகளாகி விட்டது! சகோ மோகன் அவர்களே ! வாய் கிழிய பேசும் கோ,மான், லலிதா , இவர்கள் யாரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் விட போவதில்லை ! இது சர்வ நிச்சயம்! இவர்கள் யாரும் கலைஞரை பேச தகுதியில்லை! கடந்த சட்டமன்ற தேர்தலில் லலிதா பகிரங்கமாக கான்கிரஸை கூட்டணிக்கு அழைத்தது அனைவருக்கும் தெரியும்! எல்லோருமே சுயநல அரசியல் லாபி தான்! ஆட்சியில் இருந்தாலும் திட்டுவது! இல்லவிட்டாலும் அவரை திட்டுவது என ஊடக பொறு...கிகள் குறிப்பிட்ட சாதீயமயமாகி ,, சையான்சப்பா பாடுவது அறிவுள்ளோர் அனைவரும் எளிதில் அறிவர்!

    ReplyDelete
  13. நானும் விகடனில் வாசித்தேன் மனம் கனக்கிறது. இப்போதைக்கு அநேகமாகஎல்லா அரசியல்வாதிகளுமே சுயநலவாதிகள் தான் அதற்கு வேண்டுமானால் ராஜதந்திரம் என பெயர் வைத்துக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகளை விடுங்கள் ... நாம் கூட அடிப்படையில் கொஞசம் சுயநலவாதிகள்தானே..நம் வீடு வாசலுக்கு பிரச்சனை வராதவரை பேசிக்கொண்டேதான் இருக்கிறோம்.

    ReplyDelete
  14. தி.தமிழ் இளங்கோ,
    புதுகை.அப்துல்லா,
    சரியான கருத்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...