Wednesday, November 28, 2012

வானவில்- நீர்ப்பறவை- நடுவல பக்கத்தை காணும்- பூஜா

நீர்ப்பறவை-நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்- தலாஷ்

இவ்வாரம் வெளியாகும் இந்த மூன்று படங்களுமே மிக எதிர்பார்க்கும் படங்கள் தான்.

நீர்ப்பறவை - தென் மேற்கு பருவகாற்றில் நம் மனதை கவர்ந்து போன சீனு ராமசாமி இயக்கம் - மிக அற்புதமான பாடல்கள்- அழகு ஹீரோயின் சுனைனா - இவற்றால் எதிர்பார்க்க வைக்கிறது

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்-இந்த வருடம் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் வலம்வரும் விஜய் சேதுபதி ஹீரோவாய் நடிக்கும் படம். வெளிவரும் முன்னே நல்ல talk இருக்கு. இயக்குனருக்கு நடந்த ஒரு விபத்தில் இடையில் சில மாதங்கள் நடந்த விஷயங்கள் மறந்து போனாராம். அதனை வைத்தே இக்கதை உருவாகியுள்ளது. 2012-ல் சிறு படங்கள் தான் அதிக வெற்றி என்கிற விதத்தில் எதிர்பார்க்க வைக்கிறது இப்படம்.

தலாஷ்- ஆமிர் கான் கடைசியாய் ஹீரோவாய் நடித்த படம் எது தெரியுமா? 3 இடியட்ஸ் ! மூன்று வருஷத்துக்கு பின் ஆமிர் ஹீரோவாய்/ போலிசாய் நடிக்கும் இப்படம் வெளிவருகிறது. (இந்த மூன்று வருஷத்தில் தோபி காட் போன்ற ஓரிரு படத்தில் கெஸ்ட் நடிகராய் தலை காட்டியதோடு சரி). இப்படத்துக்காக 45 வயதில் தான் நீச்சல் கற்றிருக்கிறார் ஆமிர். இப்படி பெரும் இடைவெளி விட்டு படம் நடிப்பது இவரின் வழக்கம் தான் ! ஆமிர் வீ ஆர் வெயிட்டிங்.

அழகு கார்னர்

தமிழ் பெண்ணாகவும் இருந்து, அழகாகவும் இருந்தால் நம்ம இயக்குனர்கள் ஹீரோயினாய் ஏற்று கொள்வார்களா என்ன? காதலில் சொதப்புவது எப்படியில் துக்கடா ரோல் தான் தந்தது தமிழ்த் திரை உலகம். அம்மணி இப்போ வெள்ளையாய் உருண்டையாய் ஒரு பையனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.


மனதை வருத்திய செய்தி

பொம்மையார் பாளையம் என்கிற ஊரில் துணை தாசில்தாராக இருந்த பெண் -சிவஞானம். ஒரு நாள் இரவு கணவருக்கும் இவருக்கும் சற்று வாக்குவாதம் வர, கணவர் மற்றும் இரு குழந்தைகள் தூங்கிய பின் தன் உடலுக்கு தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு விழித்து காப்பாற்ற போன கணவரும் தீயில் சிக்க, பின் அந்த அறையே தீக்கிரையாகி குடும்பத்தில் நால்வரும் இறந்து விட்டனர்.

இதன் பின் வந்த இன்னொரு அதிர்ச்சி தகவல்: குடும்ப சண்டையில் அவர் தீக்குளிக்க வில்லை ! மேலதிகாரிகளால் பதவியிறக்கம் செய்ததால், மனமுடைந்து அதையே சொல்லி புலம்பி கொண்டிருந்ததாகவும், அதனால் தான் இறந்தார் என உறவினர்கள், கலெக்டர் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி சாலைமறியல் செய்துள்ளனர்.

இறந்த அப்பெண், தன் குடும்பம் முழுதும் இறக்கும் என நினைத்திருக்கவே மாட்டார். எவ்வளவு மடத்தனமான செயல் ! நாட்டில் வேலை கிடைக்காதோர் கோடிக்கணக்கில் இருக்க துணை தாசில்தாராய் இருந்தவர் ஏன் இப்படி செய்தார் ? கொடுமை... !

ஆனந்த் கார்னர்                 (நண்பர் ஆனந்த் அனுப்பும் SMS-ல் இருந்து)

Every great improvement comes after repeated failures. Virtually nothing comes out right first time. Never loose your confidence at any time.

வீட்டில் தீபத்தன்று எடுத்த படம்

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துகள் !



ரயிலில் காதலர்கள் 

பறக்கும் ரயிலில் எனக்கு நேர் எதிரே வந்து அமர்ந்தனர் இளம் காதலர்கள். கூடவே இன்னும் சில நண்பர்கள் - அருகில் இடமில்லாமல் சற்று தள்ளி அமர்ந்திருந்தனர். வந்தது முதல் இருவருக்கும் செம சண்டை நான் ஜன்னல் வெளியே பார்த்திருந்தாலும் காதில் அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது. எதிரில் இருப்போரை பற்றி கவலையின்றி எவ்வளவு சத்தமாய் சண்டையிடுகிறார்கள் !

"ஏன் நீ செலவே பண்ணலை ? அவனையே டிக்கெட் எடுக்க விட்டே?" -

"விடு ! டிக்கெட் அவன் எடுத்தான் நான் எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தேன் "

" டிக்கெட் விலையும் ஐஸ்க்ரீம் விலையும் ஒண்ணா ? ஐஸ்க்ரீமுக்கு கூட என் பர்சில் இருந்து தானே காசு எடுத்து குடுத்தே?"


"........"

" எப்பவும் உன் காசை செலவே பண்ண மாட்டியா ? அசிங்கமா இருக்கு "

விவாதம் சற்று வலுக்க, " ஆமா நான் அப்படித்தான் என்று, என்னவோ சொல்லி திட்டி விட்டான். அழுகை.........

வேளச்சேரி வந்துவிட்டது. பெண் இப்போது " நமக்கு சரிப்பட்டு வராது இனி எனக்கு போன் பண்ணாதே; பேசாதே ! ரயிலில் கீழே இறங்கி என் பின்னாடி வந்தே அசிங்கமா திட்டுவேன் "...

ரயில் நிற்க, அவர்கள் இறங்கி கூட்டத்தில் மறைந்து போனார்கள்.

ஒன்றாய் போனார்களா இல்லையா.. அந்த காதல் அன்றோடு முடிந்ததா, அது வெறும் ஊடலா,, ? என்ற யோசனை ஒருபுறமிருக்க, "ஒரே காதல் ஊரில் இல்லையடா " என முணுமுணுத்தவாறே ஸ்டாண்டில் இருந்த பைக்கை எடுத்து உதைத்தேன்.

போஸ்டர் கார்னர் 


அய்யாசாமி / சென்னை ஸ்பெஷல்

அய்யாசாமிக்கு சென்னையில் மிக பிடித்த சாலை ..கிண்டியில் ரேஸ் கோர்சை ஒட்டிய ரேஸ் கோர்ஸ் இன்னர் ரிங் ரோடு ! இருபுறமும் மரங்கள் சூழ, சில இடங்களில் சூரியன் மட்டுமல்ல வானமே தெரியாமல் கிளைகளும் இலைகளும் விரிந்து கிடக்கும். அகலமான, மேடு பள்ளம் இல்லாத நீ.........ண்ட சாலை இது. சென்னை வந்த காலம் தொட்டே, இந்த சாலையில் மரங்களின் கீழே தன் காதலியுடன் பேசியவாறு நடந்து போகவேண்டும் என்பது அய்யாசாமிக்கு ஒரு கனவு. சமீபத்தில் தீபாவளி பர்ச்சேஸ் முடித்து விட்டு மனைவியை முதல் முறையாய் இச்சாலை வழியே பைக்கில் அழைத்து வந்தார். தன் கனவு பற்றி நைசாய் பேச, மனைவி " செம அழகா இருக்கே இந்த ரோடு !" என்று ரசித்தார். "வண்டியை நிறுத்திட்டு கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோமா" என்றார் அய்யாசாமி கனவை நனவாக்கும் ஆசையில் !

Mrs. அய்யாசாமி. என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கிறீங்க? ஊகியுங்களேன் ... பாக்கலாம் !
***
அண்மை பதிவுகள்:

முடி திருத்துவோர் வாழ்க்கை - பேட்டி

தொல்லை காட்சி: சன் எக்ஸ்பிரசும், உங்களில் யார் பிரபுதேவா பைனலும்

32 comments:

  1. தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...

    கலர்ஃபுல் வானவில்...

    இரண்டு கார்னர்களும் சூப்பர்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபால் சார். நீங்கள் சொல்லி தான் ஒவ்வொரு முறையும் வலைச்சரம் பார்க்கிறேன்

      Delete
  2. சிறப்பான வானவில்.

    அழகு கார்னர் அம்மணி யார்னு சொல்லிடுங்களேன்...

    அய்யாசாமி வாங்கிக் கட்டிக்கொண்டு இருப்பார்! :)

    ReplyDelete
    Replies

    1. அம்மணி பெயரை எப்பவும் பதிவின் தலைப்பில் சொல்லுவேன் வெங்கட் கவனியுங்கள்

      Delete
  3. வருத்திய சம்பவம் அதிர்ச்சியாகவே உள்ளது.

    ReplyDelete
  4. Replies
    1. வாங்க சவுந்தர் நன்றி

      Delete
  5. முதலில் சொன்ன மூன்று படங்களும் ரிசர்வ்ட்!!

    ReplyDelete
  6. பூஜா புகைப்படம் சான்ஸே இல்லை... please give me the original source of that photograph...

    ReplyDelete
    Replies

    1. கல்யாணம் நிச்சயம் ஆன பய புள்ளை கேட்குற கேள்வியா இது !

      Delete
  7. போஸ்ட் கார்னர் செம..

    ReplyDelete
  8. Anonymous11:28:00 AM


    //இயக்குனருக்கு நடந்த ஒரு விபத்தில் இடையில் சில மாதங்கள் நடந்த விஷயங்கள் மறந்து போனாராம்//

    தவறு. இயக்குனர் அல்ல. ஒளிப்பதிவாளர் ப்ரேமின் வாழ்வில் நடந்த கதை.

    ReplyDelete
    Replies

    1. அப்படியா சிவா? மாத்திடலாம் ! நன்றி

      Delete
  9. Anonymous11:30:00 AM

    @Philosophy

    //பூஜா புகைப்படம் சான்ஸே இல்லை... please give me the original source of that photograph...//

    ஏன்? அதுல வேற மாதிரி சிரிப்பாங்களாக்கும்.

    ReplyDelete
  10. @ ! சிவகுமார் !
    //
    ஏன்? அதுல வேற மாதிரி சிரிப்பாங்களாக்கும் //

    சிவா... இங்கே இருப்பது பாதி புகைப்படம் தான்... "photography" என்ற வார்த்தை புகைப்படத்தில் தெரிகிறது பார்க்கவும்...

    முழு புகைப்படம் கிடைத்தால் யாருடைய photography என்று தெரிந்துக்கொள்ளலாம்... அத்துடன் வால்பேப்பராக வைத்துக்கொள்ளலாம்...

    ReplyDelete
  11. வானவில் ஒளிர்கிறது! கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!!

    Mrs. அய்யாசாமி - பர்சேஸ் பண்ண பாக் வெயிட் தூக்கிட்டு நடக்கவச்சதுக்கு பலமா திட்டுவிழுந்ததா?

    பூஜா - அழகா இருக்காங்க..
    கண்தானம் - எனக்கு ரொம்ப நாள் ஆசை!!

    நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சமீரா. அய்யாசாமி புதிர் விடை மேலே சொல்லிருக்கேன் பாருங்க

      Delete
  12. சிவகுமார் ! said
    முதலில் சொன்ன மூன்று படங்களும் ரிசர்வ்ட்!!

    *****

    அட பாவி மனுஷா ! சின்ன புள்ளையை உசுப்பி விட்டுட்டீர். அந்த மூணில் நானும் ரெண்டு படமாவது இந்த வீக் எண்டில் பார்ப்பேன் என முரண்டு பிடிக்கிறார் அய்யாசாமி !

    ReplyDelete
  13. தற்கொலை என்ற பெயரில் கொலை! என்ன ஒரு தவறான முடிவு? பக்கங்கள் காணாத தலைப்பே சுவாரஸ்யத்தைச் சொல்கிறது. பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீராம் சார். இரண்டு விஷயம் பற்றியும் சரியான கோணத்தில் சொல்லிருக்கீங்க

      Delete
  14. வானவில் கலக்கல்...

    மனம் வருத்திய செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

    தீபங்களின் ஊடே உங்கள் வீடு அழகு.

    mrs அய்யாசாமி நேரமாகுது வீட்டுக்கு போகலாம்னு சொல்லியிருப்பாங்க...:)

    ReplyDelete
    Replies
    1. அட ஓரளவு சரியா கெஸ் பண்ணிட்டீங்க ! நன்றி ரோஷினி அம்மா

      Delete
  15. ! சிவகுமார் !10:43:00 AM
    முதலில் சொன்ன மூன்று படங்களும் ரிசர்வ்ட்!!//

    இதெல்லாம் சரி இல்லை ... ...பார்த்துக்கோங்க //

    ReplyDelete
    Replies

    1. அதே தான் நானும் சொன்னேன் அரசன்

      Delete

  16. துணை தாசில்தார் இறப்பு வருத்தத்தை தருகிறது அண்ணே

    ReplyDelete
  17. TODAY MY YOUNGER DAUGHTER ASKED ME 'YENNAPA INNAIKU VEEDUTHIRUMBAL PAKALAYA?;. VEEDUTHIRUMBAL ENTERED IN MY DAILY LIFE. VOW!!

    ReplyDelete
    Replies
    1. அட உன் பொண்ணு வரை வீடுதிரும்பல் பேமஸ் ஆகிடுச்சா மிக மகிழ்ச்சி அன்பு

      Delete
  18. அய்யாசாமி குறித்த கடைசி பகுதிக்கான பதில்:

    " பொண்ணு ஸ்கூலில் இருந்து வந்திருப்பா; வீட்டுக்கு வண்டியை விடுங்க" இதான் Mrs அய்யாசாமி சொன்னது ; அப்புறம் அப்பீல் ஏது ?

    ReplyDelete
  19. சார்... சிவா நீர்ப்பறவை மற்றும் தலாஷ் படங்களுக்கு அய்யசாமிக்கும் சேர்த்து தான் டிக்கெட் புக் பண்ணியிருக்கார்... வேண்டுமென்றால் போன் செய்து உறுதிப்படுத்திக்கொள்ளவும்...

    ReplyDelete
  20. வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...