Tuesday, December 30, 2008

அபியும் நானும் -சுட சுட ஒரு விமர்சனம்


ரொம்ப நாளாகவே நான் எதிர் பார்த்து காத்திருந்த படம், வருட இறுதியில் release ஆனது. மிக நிறைவாக ஒரு படம் பார்த்த திருப்தி. இவ்வளவு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாய் படம் பார்த்து எவ்வளவு காலம் ஆகி விட்டது!!

ஒரே பெண் பெற்ற தந்தை அவளை வளர்த்து படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுப்பதும், அதில் உள்ள வலியும் தான் கதை. இவ்வளவு simple கதையில் நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள்.. பிரகாஷ் ராஜின் அற்புதமான நடிப்பு, ராதா மோகனின் இயக்கம் இவையே படம் நம்மை பாதிக்க காரணங்கள்.

Prakash raj has literally lived the character!! குறிப்பாக என்னை போன்ற ஒரே பெண் பெற்ற எந்த ஒரு தந்தையும் சுலபமாய் தன்னை அந்த character, நடிப்புடன் relate செய்து கொள்ள முடிகிறது. இது தான் படத்தின் மிக பெரிய plus point.

"காலில் வெந்நீர் கொட்டிடுடுச்சு" என குழந்தை அலற ஒடுவதாகட்டும், முதல் முறை cycle-ல் அவள் பள்ளி செல்லும் போது பின்னாலேயே பத்திரமாக செல்கிறாளா என பார்க்க போவதாகட்டும், "உன் கூட டிராயர் போட்டுட்டு school-க்கு வர முடியலையே" என வருந்துவதாகட்டும் (இதே dialogue -நான் என் பெண்ணிடம் பல முறை கூறியுள்ளேன்) பல நிகழ்வுகள்.. நாம் வாழ்கையை நினைவு படுத்திகிறது.

உண்மையில் குழந்தை வளர்ப்பில் அப்பாக்கள் எதற்கெடுத்தாலும் பயந்து தள்ள அம்மாக்கள் தான் தைரியமாய் உள்ளனர். இதையும் இந்த படம் காட்டுகிறது. ஐஸ்வர்யா அம்மாவாக சரியாக நடித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் character--ல் உள்ள அளவு depth & details த்ரிஷா character-ல் இல்லை. இது ஒரு குறையே. (ஆனால் த்ரிஷா school going kid-க்கும் அதிசயமாய் பொருந்துகிறார்). த்ரிஷா சம்பந்த பட்ட காட்சிகளில் அந்த பௌர்ணமி இரவு ஓடை காட்சி நல்ல ஒரு கவிதை.

முதல் பாதி realistic. மறு பாதி cinematic. என்றாலும், second half-ம் நிறையவே சிரிக்க வைக்கிறார்கள். (அந்த இரு சிறுவர்கள் அவ்வபோது செய்யும் லூட்டி ரசிக்கும் படி உள்ளது..)

த்ரிஷா ஜோடி ஆக வரும் கணேஷ் character-இறுதியில் பெரிய size ஆக்கி விடுகிறார்கள். (இது போன்ற மாப்பிள்ளை என்றால் பெற்றோர் லவ் marriage-க்கு OK சொல்லி விடுவார்கள்.. அவர்கள் கவலையே நல்ல பையன் ஆக இருக்க வேண்டும் என்பதே.)

Beggar ரவி சாஸ்திரி, பெரிய Singh என சில பாத்திரங்கள் மனதில் பதிகின்றன.

இரு பாடல்கள் OK. இடைவேளைக்கு பின் வரும் பாடல்களுக்கு கத்திரி போட்டிருக்கணும்.

மிக நெகிழ்வாய், அழகாய் படத்தை முடிக்கிறார்கள். எங்கோ இருக்கும் பெண், கல்யாணம் ஆன பின்பும், அப்பா இன்னும் walking முடித்து வீட்டுக்கு வரலையா, ஏன் late என phone-ல் கேட்பது இன்னும் நம் ஊரில் நடந்து கொண்டு தானே உள்ளது.

ஒரு நல்ல Feel good film பார்க்க வேண்டுமென்றால் அவசியம் அபியும் நானும் பாருங்கள்..

Tuesday, December 23, 2008

2008 - ஒரு அலசல்




எனது அபிமான எழுத்தாளர் சுஜாதா ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வருடம் குறித்த அலசல் விகடனில் வெளியிடுவார். இந்த வருடம் அவர் மறைந்து விட்டார். அவரின் வருட நிறைவு analysis படிக்காமல் என்னவோ போல் உள்ளது.

அவர் அளவுக்கு எனக்கு அறிவோ எழுத்து திறனோ இல்லா விடினும், எனக்கு தெரிந்த அளவில் 2008-ன் சிறப்பம்சங்களை தொகுத்து வெளியிட்டுள்ளேன்..

2008


சிறந்த பாடல்கள் : கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்)
அன்பே என் அன்பே (தாம் தூம் )
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை (வாரணம் ஆயிரம்)

சிறந்த குத்து பாடல்கள் : நாக்க மூக்க (காதலில் விழுந்தேன் )
கத்தால கண்ணால (அஞ்சாதே)

சிறந்த படங்கள் : சுப்ரமணியபுரம்
சந்தோஷ் சுப்ரமணியன்
அஞ்சாதே

சிறந்த நடிகர்: கமல் (தசாவதாரம்) (Only for the variety of his characters; but certain make ups were let down).

சிறந்த நடிகை : ஜெனிலியா (சந்தோஷ் சுப்ரமணியன்)

சிறந்த இயக்குனர் : மிஸ்கின் (அஞ்சாதே) சசிகுமார் (சுப்ரமணியபுரம்)

சிறந்த காமெடி நடிகர் : வடிவேல்

சிறந்த புது முகம் : பார்வதி ( பூ)

சிறந்த இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம் , தாம் தூம் )

Biggest disappointment : குசேலன் .

சிறந்த ஆண் பாடகர் : ஹரிஷ் (அன்பே என் அன்பே -தாம் தூம் )

சிறந்த பெண் பாடகர் : மகதி (முதல் மழை -பீமா)

சிறந்த பாடலாசிரியர் : தாமரை (வாரணம் ஆயிரம் )

சிறந்த ஒளிப்பதிவாளர் : ரவி வர்மன் (தசாவதாரம் )

சிறந்த சிறு படங்கள் : பூ , கண்ணும் கண்ணும் and பிடிச்சிருக்கு .


TV CATEGORY

TVயில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சி (Serials தவிர..) : மானாட மயிலாட - கலைஞர் TV (ஏன்தான் , எப்படித்தான் இத்தனை பேர் பார்க்கிறார்களோ)

சிறந்த talk show on TV: நீயா நானா - விஜய் TV (Very good show; please do watch on 9 PM on Sunday's).


நினைவில் நிற்கும் விளையாட்டு நிகழ்வுகள்

1. ஒலிம்பிக்ஸ்யில் தனி நபர் category -யில் அபினவ் பிந்த்ரா கோல்ட் மெடல் வாங்கியது.

2. அமெரிக்க நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக்ஸ்யில் 8 கோல்ட் மெடல் வாங்கியது.

3. ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா ஆஸ்திரேலியாவை ஒரு நாள் போட்டி தொடரில் வென்றது.

4. சச்சின் டெஸ்ட் போட்டிகளில் மிக அதிக ரன் எடுத்த வீரர் ஆனது.

5. ஆனந்தின் செஸ் வெற்றி

6. சென்னையில் இங்கிலாந்து-ற்கு எதிராக இந்தியாவின் 387 ரன் சேசும், ஆஸ்திரேலியா-விற்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் 414 ரன் சேசும்.

**************************


மக்களை அதிகம் அவஸ்தைப்பட வைத்த விஷயங்கள்:

1. RESCESSION 2. விலை வாசி உயர்வு 3. மின் தடை (Power cut)


MOST SHOCKING EVENT IN 2008: Mumbai terror attack and other blasts in various cities.


சிரிப்பு பொலிடிசியன் : ஆற்காடு வீராசாமி (தமிழ் நாடு மின்சார துறை அமைச்சர் )
Related Posts Plugin for WordPress, Blogger...