Showing posts with label தொல்லை காட்சி பெட்டி. Show all posts
Showing posts with label தொல்லை காட்சி பெட்டி. Show all posts

Friday, October 24, 2025

சூப்பர் சிங்கர் - சீசன் 11 - அம்மா ஸ்பெஷல் - ஒரு பார்வை

சூப்பர் சிங்கர் எபிசோடுகளை ஹாட்ஸ்டார் மூலம் தொடர்ந்து கண்டு வருகிறேன்; நா. முத்துக்குமார் ஸ்பெஷல், பின் இளையராஜா 50 வருட கொண்டாட்டம், இப்போது அம்மா ஸ்பெஷல்...என கான்செப்ட்கள் - தொடர்ந்து பார்க்க வைத்துவிட்டது .

                  

அம்மா ஸ்பெஷல் பாட்டுக்கள் பல இடங்களில் நெகிழ்த்தியது. கண்ணீர் சிந்த வைக்க ஏதுவாய் அனைத்து விஷங்களும் செய்தார்கள்; நமக்கும் கண்ணீர் அவ்வப்போது எட்டி பார்க்கவே செய்தது

இம்முறை வெகு சிலரை தவிர்த்து - பல போட்டியாளர்களும் மிக சாதாரண அல்லது ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்திருக்கின்றனர்; அதிலும் பாதி பேராவது " சிங்கிள் மதர்" ! தனியாக குழந்தையை வளர்த்து இத்தகைய போட்டி வரை கொண்டு வருவது பெரிய விஷயம் தான்

சரண் என்கிற இளைஞர் எப்போதும் இளையராஜா பாடல்களையே பாடுவார்; இளையராஜா சுற்றில் பாடும் முன் " நான் ஏழை என்பதாலோ, தாழ்த்தப்பட்டவன் என்பதாலோ எல்லா இடங்களிலும் ஒதுக்க படுகிறேன். என்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள்? " என்று கேள்வி எழுப்பினார்; தன்னை சமமாய் நடத்தாத சில நிகழ்வுகளையும் கூற, மிஷ்கின் அவரை சமாதானம் செய்தார்

இம்முறை அவர் அம்மா முதலில் வரவில்லை என்று கூறிவிட்டு, அவர் பாடும்போதே வரவைத்து - அவரையும் பார்க்கும் பலரையும் அழ வைத்தனர்;

போட்டியாளர்களுக்குள் இருக்கும் நட்புணர்வு - இந்த கதைகள் சொல்லப்படும்போதெல்லாம் அவர்களில் பலரும் அழுகின்றனர்; அல்லது அழுபவர்களை மட்டும் காமிரா காட்டுகிறது

அம்மா குறித்தான இந்த எபிசோட் பார்க்கும் போது எனக்கு மறுபடி மறுபடி ஒரே விஷயம் தான் தோன்றிக் கொண்டே இருந்தது

அம்மா- அப்பா உயிருடன் இருப்போர் எவ்வளவு அதிர்ஷ்ட சாலிகள் ! அம்மா- அப்பா இருக்கும் வரை குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு பாதுகாப்பு வளையம் வந்துவிடும். பெற்றோர்க்கு முதல் குறிக்கோள் குழந்தைகள் நலன்  தான் - அதற்காக எந்த எல்லை வரையும் செல்வர்; இது தான் குழந்தைகளுக்கு மேற்சொன்ன பாதுகாப்பு வளையமாக செயல் படுகிறது !

என்னைப் போல பெற்றோரை இழந்தவனுக்கு தான் அந்த அருமையும் அவர்கள் இல்லாத வலியும் தெரியும். பெற்றோர் இருக்கும்போது - அவர்கள் அருமையை நாம் உணர்வதே இல்லை; மேலும் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் ஏசலாம்; அவர்கள் திருப்பி தர போவதில்லை

பெற்றோர்- குறிப்பாக அம்மா ! அவரது ஒரு எக்ஸ்ட்டென்சன் தான் நாம். எனவே நமக்கு நடக்கும் பல விஷயங்கள் நாம் சொல்லாமலே கூட அவர்கள் உணர்வார்கள்; தனிப்பட்ட முறையில் எனக்கு மனதில் ஏதோ பிரச்சனை ஓடி கொண்டிருக்கும்; அது பற்றி அவரிடம் வெளிப்படையாய் பேசாவிட்டாலும் அம்மாவின் பேச்சில் அதற்கு ஏதோ ஒரு தீர்வு- ஒளி கிடைக்கும்; எப்படிம்மா என் மனசை படிச்ச மாதிரி பேசுறே என பல முறை யோசித்திருக்கிறேன்; ஒரு முறையும் சொன்னது இல்லை

சூப்பர் சிங்கருக்கு வருவோம்

எத்தனை எத்தனை கண்ணீர் கதைகள்

வடசென்னையில் சிறு இட்லி கடை வைத்திருக்கும் அம்மாவின் மகன் பூமணி -

                       
   
இம்முறை அனைத்து சுற்றிலும் தானே பாட்டெழுதி புதிய கானா பாட்டுக்களை பாடுகிறான். மிக ஏழ்மையான குடும்பம் - பல முறை இருப்பதிலேயே அதிக பாயிண்ட்கள் எடுக்கிறான் இந்த இளைஞன்

வெங்கடாச்சலம் என்னும் இளைஞர் - எல்லாரையும் விட சற்று வயதில் கூடியவர் (30-35 வயது) - மைக் சிஸ்டம் வாடகைக்கு விடும் கடையில் வேலை செய்பவர்- எப்படியோ இந்த அளவு வந்து விட்டார்

மனோ என்னும் இளைஞரின் தாய் ஏழ்மை காரணமாக அவரை பாட்டு டீச்சர் வீட்டிலேயே விட்டு விடுகிறார்- அங்கேயே மகன் போல தங்கி விடுகிறார் அவர்

ஆப்ரஹாம் - தான் சொந்த பிள்ளை இல்லை- வளர்ப்பு பிள்ளை - ஆனால் தனக்காக பின் அவர்கள் குழந்தையே பெற்று கொள்ளவில்லை - தன்னை எப்படி அன்புடன் வளர்த்தனர் என பேசினார்

இலங்கை தமிழ் பெண் திஷாதனா - - இவரும் மிக ஏழ்மை குடும்பம் - படிப்பு செலவிற்கு மிஷ்கின் முழுமையாய் உதவுவதாக சொன்னார்.

பொதுவாக ஜீ தமிழில் தான் இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களுக்கு மிக அதிக வாய்ப்புகள் தருவர்; இம்முறை விஜய் டிவியில் இது நிகழ்ந்துள்ளது

பாடகர்களில் தவசீலி குரல் மிக வசீகரிக்கிறது; அந்த கால ஜென்சி , சுவர்ணலதா போல தனித்துவம் வாய்ந்த குரலாக இருக்கிறது ;


பெரும்பாலும் நன்றாகவே பாடுகிறார்

ஆண்களில் ஹ்ருதை & ஆப்ரஹாம் குரல் அட்டகாசமாக இருக்கிறது.

ஆர்கெஸ்டரா நிஜமாகவே ரொம்ப அற்புதமாய் வாசிக்கின்றனர்;

அம்மாக்கள் அனைவரும் இருக்கும் போது எலிமினேஷன் இருக்காது என நினைத்தால், 2 பேரை எலிமினேட் செய்துவிட்டனர்.

OTT வந்த பிறகு டிவி பார்க்கும் வழக்கம் வெகுவாக குறைந்தாலும் இந்த சீசன் சூப்பர் சிங்கர் மட்டும் - வித்யாசமான கான்செப்ட்களால் OTT-ல் தொடர்ந்து பார்க்க வைக்கிறது !

************
அண்மை பதிவுகள் 
- - - - - -

Sunday, January 29, 2017

வானவில்+தொல்லைக்காட்சி: அச்சமின்றி - சந்திர நந்தினி -ஜல்லிக்கட்டு போராட்டம்

பார்த்த படம் : அச்சமின்றி

சமுத்திரக்கனி, விஜய் வசந்த் நடித்த இப்படம்.. ஒரு நல்ல விஷயத்தை அடிப்படையாக கொண்டது.. கல்வி துறையில் நடக்கும் ஊழலில் துவங்கி மார்க் வாங்க வைக்க பள்ளிகள் செய்யும் அக்கிரமங்கள் வரை பலவற்றை பேசுகிறது.. ஆயினும், லாஜிக் மீறல்கள், நல்ல ஹீரோ இல்லாதது, சற்று தொய்வான திரைக்கதை (பாட்டும் , சண்டையும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது !) ..இவற்றால் இலக்கை எட்டாமல் போகிறது.

Image result for achamindri

படத்தின் உருப்படியான விஷயம் அது உரக்க பேசும் கல்வி துறை பற்றிய கடைசி அரை மணி நேரம் தான் !

டிவியில் பார்த்த படம் : வை ராஜா வை

ஜெயா டிவியில் காணும் பொங்கல் அன்று ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை ஒளிபரப்பினர். பின்னால் நடக்க போவதை முன் கூட்டியே அறியும் ஹீரோ பாத்திரம்.. இதை வைத்து காசு செய்ய நினைக்கின்றனர் சிலர்.. கதை இதன் அடிப்படையிலேயே செல்கிறது. ஓரளவு நல்ல முடிச்சு என்றாலும் - படம் ஏனோ மிக பெரும் தோல்வியை சந்தித்தது; எப்படி முடிப்பது என தெரியாமல் அவசரம் அவசரமாக முடித்துள்ளனர் படத்தை.. ஒரு proper conclusion இல்லாமல் படம் முடிகிறது..

QUOTE CORNER


நல்ல சீரியல்: சந்திர நந்தினி

விஜய் டிவியில் மாலை 7.30க்கு ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல் சந்திர நந்தினி ! வீட்டம்மணியின் அலுவலகத்தில் சிலர் சொன்னதால் பார்க்க ஆரம்பித்தார். நானும் அவ்வப்போது (மட்டும்) கண்டு வருகிறேன்.

Image result for chandra nandini tamil

சந்திர குப்த மௌரியர் என்கிற நல்ல அரசர் பற்றி பள்ளியின் வரலாற்று பாடங்களில் படித்திருப்போம். அவர் தான் கதை  நாயகர்.நந்தினி என்பது அவரது மனைவி பெயர். இவர்கள் இருவரின் கதை தான் சந்திர நந்தினி. கூடவே சாணக்கியர் பாத்திரமும் !

நடந்த கதை என்பதால் - வரலாறு அறியும் ஆர்வம்.. கூடவே அதனை சுவாரஸ்யமாக பதிவு செய்த டீம்.. இவை இரண்டும் தான் சீரியலை அவ்வப்போது காண வைக்கின்றன.

ஜல்லிக்கட்டும் மாணவர் போராட்டமும் 

ஜல்லி கட்டு பற்றி ஏன் எதுவும் எழுத வில்லை என நான்கைந்து நண்பர்களெனும் கேட்டு விட்டனர்.

பொதுவான மக்கள் கருத்துக்கெதிராக நம் கருத்து இருக்கும் போது அமைதியாக இருப்பது நல்லதென நினைக்கிறேன்.

இருப்பினும் இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் - மிக அற்புதமாக போராட்டம் நடத்தியதை ரசிக்காமலும், பாராட்டாமலும் இருக்க முடியாது.

போராட்டத்தை சரியான நேரத்தில் முடித்திருக்க வேண்டும்!  தலைமை என்று எதுவும் தெளிவாக இல்லாததால் வந்த விளைவு. கடைசி நாளில் போலீஸ் வன்முறை நிச்சயம் கண்டிக்க தக்கது. ஆனால் பெரும்பான்மை மக்கள் அதை பற்றி அதிகம் கண்டு கொள்ளாமல் " அடுத்த வேலையை பார்க்கலாம்" என நகர்ந்து விட்டனர் .

மெரினாவில் இனி போராட கூடாது என 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள் கவனித்தீர்களா? இறுதி நாள் வன்முறையே - இனி இப்படி கூட்டம் கூடக்கூடாது என மிரட்ட தான்... ! அதுவே ஒரு மினி 144 தான் !


கல்யாணம் முதல் காதல் வரை 

வீட்டில் அவ்வப்போது பார்த்து வந்த சீரியல் "கல்யாணம் முதல் காதல் வரை" பழைய ப்ரியாவிற்காக நானும் அவ்வப்போது பார்த்து வந்தது உண்டு.

ப்ரியா என்ன காரணத்தாலோ விலகிய பின் கதையே மிக பெரும் அதள பாதாளத்தில் விழுந்து விட்டது; சினிமா பாணியில் - 2 காரெக்டர் - ஆள் மாறாட்டம் என நம்ப முடியாத படி சென்று திடீரென ஒரே நாளில் கதையை முடித்து சுபம் போட்டு விட்டார்கள் !

பலரால் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு சீரியலை - எப்படி கொடுமைப்படுத்தி - வெறுக்கடிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக முடிந்து விட்டது கல்யாணம் முதல் காதல் வரை !

****
அண்மை பதிவு


அதே கண்கள்: சினிமா விமர்சனம்

Monday, June 13, 2016

தொல்லை காட்சி: கலக்கபோவது யாரு செமி பைனல்: அச்சம் தவிர் இன்ன பிற

அச்சம் தவிர்

அச்சம் தவிர்  ஒரே நாள் தான் பார்த்தேன்.. பார்த்தவுடன் தோன்றியது .. "இந்நிகழ்ச்சியை தவிர்" !!

போட்டி ஆரம்பித்து அது தான் ரெண்டாவது நாளாம்.. அதற்குள் 2 டீமும் ஒருவருக்கொருவர் ஜென்ம எதிரி போல சண்டை போட்டு கொண்டார்கள்.. போட்டியை விட - இந்த சண்டையை தான் முக்கால்வாசி நேரம் காட்டி வெறுப்பேற்றினார்கள்  !

சினிமாவில் பார்த்ததை விட 2 மடங்கு பருமனான காயத்ரி ரகுராம், என்ன காரணத்தாலோ தொண்டை பாழாகி கர்ண  கொடூரமாக பேசும்  பிரியங்கா, வெறும் சட்டை போன்ற உடை மட்டுமே (கீழே... முழு விடுதலை) அணிந்த DD .. என எல்லா பக்கமும் கொடுமையாய் இருந்தது.. வேறு சானல் எகிறி விட்டேன்..

நிகழ்ச்சி விரைவில் நிறுத்தப்படும் என நிச்சயம் நம்பலாம்  !

ஜீ  தமிழ் டாப் 10 செய்திகள்

செய்திகளில் சற்று சுவாரஸ்யம் + நிறைய வெரைட்டியுடன் பார்க்க வேண்டுமெனில் ஜீ  தமிழில் டாப் 10 செய்திகள் நிச்சயம் பார்க்கலாம். அரசியல், தமிழ்நாடு, இந்தியா, சினிமா என எல்லாற்றிலும் முக்கிய செய்திகளை டாப் 10 என தருகிறார்கள். ரசிக்கும் விதம் உள்ளது.. இயலும் போது அவசியம் பார்க்கும் செய்திகள் இது..

ஆதித்யாவில் குறும்படம் 

சில நேரம் குறும்படங்களில் என்னமாய் சிந்திக்கிறார்கள் ! ஆதித்யாவில் குறும்படங்கள் பற்றிய நிகழ்ச்சி பாப்கார்ன் டைம்ஸ் என்கிற பெயரில் ஒளிபரப்பாகிறது.. ஒரு பெண் பின்னே சுற்றும் இளைஞன்.. திடீரென ஒரு சக்தி மூலம்.. இருவர் உடலும் மாறி விடுகிறது..

ஆண் உடலில் அந்த பெண்ணின் மனது.. பெண்ணின் உடலுக்குள் ஆணின் மனம்..

இருவரும் ஒரு வாரம் - மறு பாலினத்தவராக வாழ, அப்போது நிகழும் சம்பவங்கள் தான் கதை..

சுவாரஸ்ய பிளாட்.. ஓரளவு நன்கு எடுத்திருந்தனர்.. கடைசியில் ஆண்கள் பெண்ணை மதிக்க கத்துக்கணும்; பெண்கள் ஆணின் கஷ்டம் புரிஞ்சுக்கணும் என மெசேஜ் சொல்லி முடித்ததை தவர்த்திருக்கலாம் !

டிவியில் பார்த்த படம் - சண்டமாருதம் 

நோ.. நோ.. அப்படி ஒரு படம் வந்ததா அப்படின்னு கேட்க கூடாது.. 

நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் நடிச்சு அநேகன் ரிலீஸ் ஆன அதே நேரம் இந்த படமும் 2015ல் தான் வந்துருக்கு.. அதக்குள் சன் டிவியில் போட்டு முடித்து - கே டிவியில் ஓடி கொண்டிருந்தது.. 

ஹீரோ மட்டுமல்ல - மோசமான வில்லனும் சரத் குமார் தான்.. ! கெமிக்கல் பாம் கண்டு பிடித்து நாசவேலை செய்யும் வில்லன் சரத்தை - போலிஸ் சரத் போட்டு தள்ளும் ஹைதர் கால கதை.. 


பொழுது போகாமல் 15 நிமிடம் பார்த்து கொண்டிருக்க, மிக சரியாக ஓவியா வரும் நேரம் - எனது மகள்  " சரத் குமார் நடிக்கிற படத்தையெல்லாம் பாக்குறியே.. ச்சே !!" என சானல் மாற்றி விட்டாள் !

கலக்க போவது யாரு 

கலக்க போவது யாரு சீசன் 5 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று திருச்சியில் பைனல் நடந்து முடிந்து விட்டது. ஆனால் விஜய் டிவியில் இப்போது தான் செமி பைனல் நடக்கிறது.. அப்புறம் ...வொயில்ட் கார்ட் ரவுண்ட் வேறு சில வாரம் நடக்கும்...



வாரா வாரம் கலகலக்க வைக்கும் பலர் செமி பைனலில் மிக சுமாராய் செய்து வெளியேறினர்... செமி பைனல் நிகழ்ச்சி போலவே இல்லை.. சொல்ல போனால் சாதாரண வாரங்களே நன்றாக இருக்கும் !! வொயில்ட் கார்ட் ரவுண்ட்டை சுவாரஸ்யமாக்க திட்டமிட்டு  ஏதும் செய்தனரா என தெரிய வில்லை..

இதில் ஓகே ஓகே மற்றும் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாராவில் காமெடி நடிகையாய் நடித்த மதுமிதா ஜட்ஜாய் வந்து ஊர்பட்ட அலம்பல் செய்து கொண்டிருந்தது.. !

ஒரு வரி விமர்சனம்....

விஜய் டிவி நிகழ்சிகள் பலவும் போர் அடிக்கும் நிலையில் கிங்க்ஸ் ஆப் டான்ஸ் மட்டும் நன்றாகவே செல்கிறது.. நிஜமாக நடன திறன் உள்ளோர் கலக்குகின்றனர்.

ஜெகன் தொகுத்து வழங்கும் கனக்ஷன்ஸ்  நிகழ்ச்சி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு டீமாக கலந்து கொள்கிறார்கள்; சுவாரஸ்யம் குறைவே !

மாலை நேரம் நியூஸ் பார்க்கலாம் என டிவி போட்டால் பல சானல்களும் விவாதம் என வெறுப்பேத்துறாங்க ! எத்தனை மணிக்கு தான் நியூஸ் போடுவாங்களோ தெரியலை.. 

Monday, June 6, 2016

தொல்லைகாட்சி: ஐ லவ் யூ மெசேஜ்-கல்யாணம் முதல் காதல் வரை

சன் மியூசிக்கில் ஐ லவ் யூ மெசேஜ்-கள் 

சன் மியூசிக்கில் பாட்டு போடும்போது கீழே ஸ்க்ரோல் ஆகும் வரிகளைக் கவனித்துள்ளீர்களா?

ரமேஷ்... ஐ லவ் யூ; கவிதா யூ ஆர் மை செல்லம் என்கிற ரீதியில் இருக்கும்...

ரமேஷ், கவிதா என்கிற பெயர்கள் இருக்கட்டும். சற்று வித்யாசமான யாருக்கும் எளிதில் வைக்காத பெயர்கள் போட்டு இத்தகைய மெசேஜ்  வரும்போது வீட்டில் பார்த்தால் பிரச்சனை ஆகாதா?

காதலை நேரில் சொல்ல பயப்படுபவர்கள் இங்கு மெசேஜ் அனுப்பிவிட்டு " சன் மியூசிக் பாரு" என காதலிக்கு தகவல்  அனுப்ப மட்டுமே இது பயன்படும்... இதனை எதற்கு ஊக்குவிக்கிறார்களா தெரிய வில்லை !!

சீரியல் கார்னர்: கல்யாணம் முதல் காதல் வரை 

நம்ம ப்ரியா இருப்பதால் எப்பவாவது ஒரு முறை பார்ப்பதுண்டு. இந்த வாரம் ஏழெட்டு பேர் சேர்ந்து கொண்டு ப்ரியாவிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக காட்சி (வில்லன் ஏற்பாடு)

இதனால் ப்ரியா ரொம்ப அப்செட்.. குடும்பத்தில் ஒவ்வொருவரும் அப்செட் ..இதனை வைத்து கொண்டே சில வாரம்   ஓட்டுவார்கள் ...



நான் கவனித்தவரை எந்த ஒரு சீரியலாய் இருந்தாலும் அதன்  கான்செப்ட் இது  தான் : நல்லவன்(ள்) - கெ ட்டவன்(ள்)- என 2 க்ரூப் எஸ்டாப்ளிஷ் செய்து  விடுகிறார்கள். பின் கெட்டவர்கள் - நல்லவர்களுக்கு ஏதேனும் சோதனை தர, நல்லவர்கள் முதலில் பிரச்சனையில் மாட்டி கொள்கிறார்கள். பின் நிச்சயம் ஓரிரு வாரத்தில் அந்த பிரச்சனை சரியாகிறது.. இப்படி நல்லவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருவதும், தீர்வதும் தான் எந்த சீரியலிலும் திரைக்கதையாய் இருக்கிறது ! (டிவி சீரியலுக்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதும் கோஷ்டியில் சேர்ந்துடலாம் போலிருக்கு !)

ஆதித்யா டுப்ஸ்மாஷ்சில் நடிகர்கள்

டுப்ஸ்மாஷ் வந்த புதிதில் சில அட்டகாச நகைச்சுவைகள் காண முடிந்தது. தற்போது வருபவை பெரும்பாலும் ரசிக்கும்படியோ - சிரிக்கும் விதமோ இல்லை..

சினிமா நடிகர்கள் விஷால், K S ரவிக்குமார், சூரி, கார்த்திக், பாக்யராஜ், நாசர், மும்தாஜ் நடித்த டுப்ஸ்மாஷ் ஆதித்யாவில் ஒளிபரப்புகிறார்கள்.. எல்லோருமே பக்காவாக நடிக்கிறார்கள்.. நடிப்பு ஒரு பயிற்சி என்பதும், தொடர்ந்து அதை செய்பவர்களுக்கே  நன்கு வரும் என்பதும் உணர முடிகிறது..

கிரிக்கெட்

சரியோ தவறோ இந்தியர்களில் பெரும்பான்மை மக்களுக்கு பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. கிரிக்கெட் ஆட்டத்தின் பல்வேறு நுணுக்கங்களை விரிவாக அலசுகின்றனர் இந்நிகழ்ச்சியில்.

சிறந்த பழைய கிரிக்கெட் மேட்ச்கள், அற்புத படங்கள், வீடியோக்கள், பவுலிங் டெக்னிக், பேட்டிங் டெக்னிக் என பிரித்து மேய்கிறார்கள். லெக் ஸ்பின் எப்படி வீசுவது, சுவீப் ஷாட், ஸ்கொயர் டிரைவ் இப்படி பல விஷயங்களை பற்றி தங்கிலிஷில் பேசுகிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர்

சனிக்கிழமை மாலை 7.30 க்கு சன் நியூஸ் தொலை காட்சியில் வருகிறது இந்த நிகழ்ச்சி..

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

அரவிந்த்சாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி துவங்கி விட்டது; ஒரே ஒரு நாள் தான் பார்த்தோம். நிச்சயம் எதிர்பார்த்த அளவு இல்லை ! இந்த நிகழ்ச்சி நடத்த தேவையான சுறுசுறுப்பு, உற்சாகம் போன்றவை அரவிந்த்சாமியிடம் மிஸ்ஸிங்.

மட்டுமல்ல, எந்த சாமி வந்தாலும் விஜய் டிவியை திருத்த முடியாது. ஹாட் சீட்டில் அமர்ந்து பதில் தந்த இருவரை - ரோஸ் குடுத்து, முட்டி போட்டு ஐ லவ் யூ சொல்லுங்க என அரவிந்த்சாமி கெஞ்சு கெஞ்சென்று கெஞ்சியதை காண சகிக்க வில்லை !

நீயா நானா

+2 வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இரண்டு பக்கமும் இருந்து பேசினர்; ஒரு பக்கம் அரசு பள்ளி மாணவர்கள்; இன்னோர் பக்கம் தனியார் பள்ளி மாணவர்கள்.

தனியார் பள்ளி மாணவர்கள் - அவர்கள் பள்ளிகளில் எப்படி எல்லாம் பரீட்சைக்கு தயார் செய்வார்கள் என சொன்னது ஆச்சரியமாய் இருந்தது; அவர்கள் சொன்ன டெக்னிக்குகள் பரீட்சை எழுதும் பலரும் - தனியார் பள்ளி/ கல்லூரி நடத்தும் எவரும் பின்பற்றலாம். தேவைபட்டால் இணையத்தில் நேற்றைய நிகழ்ச்சி ( 5 ஜூன் 2016) தேடி பாருங்கள்..

அரசு பள்ளிகளில் மிக அதிக மதிப்பெண் வாங்கிய பெண் வந்திருந்தார். 195.5 கட் ஆப் வாங்கிய அந்த பெண்ணுக்கு அண்ணா யுனிவர்சிட்டியில் சீட் கிடைப்பது கஷ்டமாம் ! மாநில அளவில் அரசு பள்ளியில் முதல் இடம் பெற்ற பெண்ணுக்கே இந்த கதி என்றால்?? தலையை சுற்றுகிறது !

அரசு பள்ளிகளில் - அநேகமாய் ஒரு பாடத்திற்காவது ஆசிரியரே இன்றி மாணவர்கள் படித்த நிலை அதிகமாக இருப்பதை அறிய முடிந்தது. மேலும் அவர்கள் ஒவ்வொரின் பெற்றோரும் அநேகமாய் மிக சாதாரண வேலை செய்பவர்கள்.. 1130, 1150 என அவர்கள் மார்க் சொன்ன போதும் BC என்பதால் - தனியார் கல்லூரிகளில் மட்டும் தான் அவர்களுக்கு சீட் கிடைக்க கூடும் என்றனர் ..

சாதி சார்ந்த இட ஒதுக்கீடு ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடை - குறைந்த அளவிலாவது அறிமுகப்படுத்தினால் நலமாய் இருக்கும் என எண்ண வைத்தது இந்த நிகழ்ச்சி !

பிற்சேர்க்கை: 

இதே நிகழ்ச்சியை பார்த்த பத்ரி நாராயணன் என்கிற நண்பர் முகநூலில் பகிர்ந்தது இது:

Yesterday's Neeya Naana program in Star Vijay was one of the best san controversies. The way in which the entire episode was modulated deserves appreciation. The plight of corporation school students was brought to light. The determination with which those poor students, sons and daughters of weekly wage laborers of measly sums preparing for exams in not a good environment deserves lot of appreciation. The teachers of those schools helping poor students monetarily and otherwise are close to God. Wish and pray these students come up well in their life. May God bless all of them.

Monday, May 30, 2016

தொல்லைகாட்சி: ஐ.பி.எல் பைனல்-அச்சம் தவிர்

ஓவர் அழுகாச்சி இன் கிங்க்ஸ் ஆப் டான்ஸ் 

பொதுவாய் விஜய் டிவி என்றாலே நெஞ்சை நக்கும் செண்டிமெண்டுக்கு நிறைய வாய்ப்பளிப்பார்கள் ...இம்முறை  கிங்க்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியிலும் அது தொடர்ந்தது.

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை, புற்று நோயால் இறப்பவரின் கடைசி நாட்கள் போன்ற காட்சிகளை வைத்து அனைத்து டான்சும் அமைத்திருந்தனர். 2 கான்செப்ட் பார்த்ததுமே - இது வேலைக்காகாது என   எகிறி விட்டேன்..

ஐ.பி. எல் கார்னர் 

ஐ.பி. எல் பைனலில் எனது அபிமான கோலி & டீ வில்லியர்ஸ் - இடம் பெற்ற  பெங்களூரு தோற்றது சற்று வருத்தமே. ஆனால் "May the better team win " என்ற சொல்லுக்கேற்ப, அன்று நன்கு ஆடியது ஹைதராபாத் தான். டி 20 - பேட்ஸ் மேன்கள் ஆட்டம்.. அடித்து ஆட கூடிய நல்ல வீரர்கள் இருக்கும் அணி வெல்லும் என்பதற்கு மாறாக - நல்ல பவுலர்கள் உள்ள அணி வென்றுள்ளது.. கோலியின் ஆட்டம் இந்த ஐ. பி.எல்முழுவதுமே மிக சிறப்பு; இந்த முறை அவர் அடித்த ரிக்கார்ட் நிச்சயம் கொஞ்ச வருஷம் யாராலும் பீட்  செய்ய முடியாது; 3 முறை பைனல் வந்து - ஓர் முறையும் கோப்பை வெல்லாமல் தென் ஆப்ரிக்கா போல காட்சியளிக்கிறது பெங்களூரு !

புது நிகழ்ச்சி : அச்சம் தவிர் 

விஜய் டிவியில் வர இருக்கும் புது நிகழ்ச்சி அச்சம் தவிர்.. அவ்வப்போது அட்வென்ச்சர் சீரிஸில் டிவி நட்சத்திரங்களை வைத்து விஜய் டிவி செய்யும் அதே நிகழ்ச்சி தான் இப்போது புது பெயரில்.. இம்முறை சோனியா அகர்வாலும் விஜயம்..

தொடர்ந்து பார்ப்பதில்லை; அவ்வப்போது சானல் மாற்றும் போது நிறுத்தி சற்று பார்க்க காரணம் - ஹீ ஹீ அழகான பெண்கள் தான்..

டிவியில் பார்த்த படம்: மைக்கேல் மதன காம ராஜன்

மைக்கேல் மதன காம ராஜன் ரிலீஸ் ஆன 1991ல் சட்ட கல்லூரி நண்பர்களுடன் படம் பார்த்தோம்.. யாருக்குமே படம் பிடிக்கலை !! என்ன படம்டா இது.. ரொம்ப செயற்கையா இருக்கு என பேசிக்கொண்டு வந்தோம்.. அந்த படம் 25 ஆண்டுகள் கழித்தும் லட்சகணக்கான பேரால் ரசிக்கப்படும் என நிச்சயம் நினைக்க வில்லை ..

போர் அடித்த சனிக்கிழமை மதியம்..இன்னொரு முறை ஜெயா டிவியில் பார்த்த போது வியந்த விஷயம் கமல் தான் !

இடைவேளைக்கு பின் 4 பாத்திரமும் மீசை இல்லாமல் கண்ணாடி போட்டுக்  கொண்டு ஒரே மாதிரி இருப்பார்கள்.. ஆனால் அவர்கள் ஒரு வரி பேசினாலே அது எந்த பாத்திரம் என நமக்கு தெரிந்து விடும்.  கமல் அந்தந்த பாத்திரத்தையும் அத்துணை அற்புதமாக செய்திருப்பார்.. இப்போது பார்க்கும் போதும் கூட ஆங்காங்கு வரும் சீரியஸ்நெஸ்சை தவிர்த்து காமெடி இன்னும் கூட்டியிருக்கலாம் என்றே தோன்றியது..

கமலின் சிறந்த படங்கள் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும்  மைக்கேல் மதன காம ராஜன் !

அழகு கார்னர்



நின்று போன நல்ல நிகழ்ச்சிகள் 

தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கிற நல்ல நிகழ்ச்சிகள் இருப்பதே அரிது தான். தொடர்ந்து பார்த்து தற்போது நின்று போன நல்ல நிகழ்ச்சிகள் சில ..

தினமும் விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர்

ஞாயிறு கலைஞர் டிவியில் வரும் நாளைய இயக்குனர்

மக்கள் டிவி யில் மறு ஒளிபரப்பாகி வந்த பாலு மகேந்திராவின் கதை நேரம்

விஜய் டிவி யில் தவறாமல் பார்த்து வந்த மகா பாரதம்

இப்படி நல்ல நிகழ்சிகள் பல முடிந்து - சானல் உலகம் சற்றல்ல நிறையவே போர் அடிக்கிறது..

விஜய் டிவி புதிதாய் துவங்கும் சில நிகழ்சிகளாவது சற்று சுவாரஸ்யம் தருகிறதா என பார்க்கலாம் !
*****
அண்மை பதிவுகள்:

இது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ ! சினிமா விமர்சனம்

சென்னையில் பி.காம் அட்மிஷன் + சிறந்த 10 கல்லூரிகள் : ஒரு பார்வை 

Tuesday, May 17, 2016

தொல்லைகாட்சி: அர்விந்த் சுவாமி- சரவணா விளம்பரம்- கிங்க்ஸ் ஆப் டான்ஸ்

தொல்லை காட்சி- நம் வீடுதிரும்பலில் முன்பு வாரா வாரம் திங்கள் வெளியாகும். நண்பர்கள் மிக அதிகம் வாசித்த ஒரு பகுதி இது..

தொடர்ந்து வெளியாகுமா அல்லது வானவில்லில் மட்டுமே சில பகுதிகள் வருமா என நிச்சயமாய் சொல்ல முடிய வில்லை..

இப்போதைக்கு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்.. தொல்லை காட்சி

டிவி கார்னர் : கிங்க்ஸ் ஆப் டான்ஸ்

விஜய் டிவி எப்போதும் ஒரு டான்ஸ் ஷோ நடத்தும். இதற்கு முன் டிவியில் நடிப்போரை வைத்தே மிக அதிக ஜோடி டான்ஸ் ஷோக்கள் நடத்தின. இம்முறை டான்ஸ் குழுக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி.. கிங்க்ஸ் ஆப் டான்ஸ் என்கிற பெயரில் வருகிறது.



எல்லோரும் டான்சர்கள் என்பதால் - சில நடனங்கள் மிக அருமை !

நடுவர்களாக (அழகு) ப்ரியாமணி மற்றும் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் . இந்த வாரம் நடிகை ராதா மறுவிஜயம்.

கொஞ்ச நாள் நமது பேவரைட் விஜய் டிவி ப்ரியா தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்; தற்சமயம் அவர் வருவதில்லை என்பது சோகமான விஷயம் :(

ராஜ் டிவி முதல்வன் விருதுகள்

ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் சில இடங்கள் வாங்கும் மாணவர்களுக்கு ராஜ் டிவி சென்னைக்கு அழைத்து விருது தந்து பாராட்டுகிறது. நம்ம ஸ்ரீநாத் கூட இப்படி விருது வாங்கியிருக்கிறார் !

இவ்வருடம் பரிசு வாங்க வந்த அனைவரையும் ராஜ் டிவி க்கு அழைத்து சென்று அங்கு நியூஸ் எப்படி தயார் ஆகிறது, எப்படி எடிட் ஆகிறது என முழுவதும் ஒரு நாள் காண்பித்துள்ளனர். டிவி சானல் உள்ளே சென்று பார்த்த excitement உடன் பேசினார் அந்த மாணவ, மாணவிகள்.

பெரும்பாலும் மொக்கை போட்டாலும் ராஜ் டிவி வருடா வருடம் செய்யும் நல்ல காரியம் இந்த முதல்வன் விருதுகள் !

நீயா நானா 

வர வர  நீயா நானா ரொம்பவும் களை இழந்து விட்டது. இந்த வாரம் பெரிய சைஸ் பைக் வைத்திருக்கும் இளைஞர்கள் ஒரு பக்கம்- அவர்கள் பெற்றோர் மறு பக்கம் என பேசினர்.

கோட் போடாமல் - சாதா சட்டை- பேண்ட்டில் கோபி  !!  அதுவே பார்ப்பது நீயா நானாவா என சந்தேகம் கொள்ள வைத்தது...

தொடர்ந்து வாரா வாரம் பார்ப்பதில்லை.. வைக்கிற சில நேரமும் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.. நீயா நானா டீம் விழித்து கொண்டு - வேலை செய்வது நல்லது !

ஐ. பி. எல் கார்னர் 

RCB Vs குஜராத் லயன்ஸ் மேட்சில் டீ வில்லியர்ஸ் & கோலி உரித்து எடுத்தனர்.. பந்துக்கு பந்து 4, 6 என அடித்தது கண் கொள்ளா காட்சி. 20-20 என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். 14 மே அன்று நடந்த இந்த மேட்ச் ஹை லைட்ஸ் - குறிப்பாக RCB பேட்டிங் கீழே உள்ள லிங்க் மூலம் காணுங்கள்..

http://www.iplt20.com/videos/media/id/4893673025001/m44-rcb-vs-gl-match-highlights

இருப்பதிலேயே மட்டமான டீமாய் தோனியின் புனே மாறி போனது  வருத்தமே.குறிப்பாக நல்ல கிரவுண்டில் 138 ரன் எடுக்க முடியாமல் 4 ரன்னில் தோற்றார்கள்.. 4 நல்ல வீரர்கள் - இஞ்சுரியால்  இல்லாமல் போனது எல்லாம் இருக்கட்டும்.. அவர்கள் இருந்த போதும் கூட புனே சரியாக ஆட வில்லை என்பதே உண்மை.

கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு , டில்லி. மும்பை இவற்றில் 4 டீம் Play off செல்ல கூடும்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி 

மீண்டும் விஜய் டிவி யில் துவங்குகிறது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி . இம்முறை நடத்துபவர் அரவிந்த் சாமி !  இளைஞர்கள், பெண்கள் இருவரையும் நிகழ்ச்சி பார்க்க வைக்க இவர் ஒரு மிகசரியான சாய்ஸ்  !



தனியாய் HR payroll நிறுவனமும் நடத்திவரும் அர்விந்த் சுவாமிக்கு நிச்சயம் ஓரளவு பொது அறிவு இருக்கும் என்றும் நம்பலாம். மனிதர் ஜென்டில் ஆக நடந்து கொள்வது, மென்மையாக பேசுவது என நிச்சயம் கவருவார்..

சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் விளம்பரம் 

தமன்னா மற்றும் ஹன்ஷிகாவுடன் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் வரும் விளம்பரம் பற்றி கிண்டலடித்து ஏராளமானோர் எழுதி விட்டனர்... இன்னொரு பக்கம் உழைப்பால் உயர்ந்தவர் வருவது தப்பா?  அழகாய் இருப்பவர்கள் மட்டும் தான் நடிக்கணுமா என்று கொந்தளிக்கும் சமூக போராளிகள் இன்னொரு பக்கம் .. 

இதற்கு நடுவில் இந்த விளம்பரத்துக்கு தேவைக்கு அதிகமான கவனம் கிடைத்து விட்டது.. அண்மையில் கொரட்டூர் செல்லும்போது வார நாளின் மதிய பொழுதில்  - இந்த புது கடைக்கு வெளியே  மாபெரும் ட்ராபிக் ஜாம். உள்ளே மக்கள் கூட்டம் அலை மோதுகிறது... 

நிற்க. விளம்பரத்திற்கு மீண்டும் வருவோம்... எனது ஒரு ரூபாய் கருத்து: விளம்பரத்தில் இவர் தான் நடிக்கணும் என்றில்லை; ஆனால் கொஞ்சமாவது நடிக்க தெரியனும்; முக பாவம்???? ஹூம்.. நடிப்பில் பவர் ஸ்டார் வகையறா ஆளாக  இருக்கிறார் இந்த சரவணன்....

அந்த விளம்பரம் டிவி யில் வரும்போது தமன்னா, ஹன்ஷிகாவை விட நாம் அந்த ஆணை தான் அதிகம் கவனிக்கிறோம்.. இல்லையா??

****
அண்மை பதிவு: 

சென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே? எது நாட் ஓகே?

Wednesday, November 18, 2015

தொல்லை காட்சி: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்- கமல், வைரமுத்து இன்னும் பிற

தீபாவளி படங்கள் டிவி யில்..

தீபாவளி படங்களை பொறுத்த வரை சன் டிவி மற்றும் ஜெயா டிவி முந்தியது என்று தான் சொல்லவேண்டும். விஜய் டிவி மாரி மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற ரெண்டு சுமாரான படங்களை திரையிட, சன் ரிலீஸ் செய்த வேலை இல்லா பட்டதாரி குடும்பங்கள் விரும்பி பார்க்கும் படமாய் அமைந்து விட்டது..இப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக,  மாலை ஜெயா டிவி பாகுபலி ஒளிபரப்பி TRP ஐ தன்  பக்கம் திருப்பியது..

விஜய் ஸ்டார்ஸ் தீபாவளி ஸ்பெஷல் ஷோ

தமிழ் சானல்களில் விஜய் டிவி காம்பியர்கள் தான் பெயர் சொன்னாலே - அதிக மக்களுக்கு தெரியும் என்கிற அளவில் இருக்கிறார்கள். இதனால், அவர்கள் காம்பியர்களை வைத்தே - விஜய் ஸ்டார்ஸ் என ஒரு நிகழ்ச்சி நடத்தி விட்டனர்....



பாட்டு, டான்ஸ் என ஒரு மணி நேரம் சென்ற நிகழ்ச்சியில் உருப்படியான/ ரசிக்க வாய்த்த ஒரே விஷயம் கலக்க போவது யாரு டீமிலிருந்து வந்து சிரிக்க வைத்தது தான் !

வைரமுத்து சிறப்பு பட்டி மன்றம்

விஜய் டிவியில் வைரமுத்துவின் சிறுகதைகள் பற்றி பட்டி மன்றம்.. !

இப்படி தனி ஒரு மனிதர் பற்றிய பட்டி மன்றம் என்றாலே ரெண்டு பக்கமும் புகழ்ந்து தான் தள்ளுவார்கள்.. இந்நிகழ்ச்சியும் அவ்விதமே.



ஒரு பக்கம் அவரது கதை/ அதன் களன் அற்புதம் என்று பேச, இன்னொரு பக்கம் அவர் ரசனை, மொழி வளம் பற்றி வியந்தனர்..

நிமிடத்திற்கொரு முறை வைரமுத்து ரசிக்கும் விதத்தை காட்ட ஒரு க்ளோஸ் அப்..

அரை நிமிடத்தில்  நடுவர் அவசர தீர்ப்பு தர (நிஜமாய் அரை நிமிடம் மட்டுமே !! மீதம் எடிட்டிங்கில் போனதா தெரியாது ) பின் அரை மணி நேரம் வைரமுத்து பேசினார்; சிரித்தார்; அழுதார்..

சினிமாவில் இருந்து கொண்டு எழுதுவதால் மட்டுமே இந்த மரியாதை என்பதும், தமிழில் மிக அதிக ரசிகர்கள் கொண்டிருந்த சுஜாதாவிற்கு கூட  இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவில்லை என்பதும் மனதை தைத்தது !

வேதாளம் சிறப்பு நிகழ்ச்சி

விஜய் டிவி தீபாவளி இரவு 10 மணிக்கு வேதாளம் பட சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பினர்.

அஜீத்திடம் என்ன பிடிக்கும் என சம்பிரதாய கேள்வி; அவர் நடை, சிரிப்பு என ரசிகர்களின் அதே வித பதில், பெண்கள் சிலிர்ப்புடன் பேசுவது என 5 நிமிடத்துக்கு மேல் பார்க்க முடியாமல் தாண்டி விட்டேன்..

சினிமா ஒரு என்ட்டர்டேயின்மென்ட்; பிடிக்கிறதென்றால் பார்த்து விட்டு போக வேண்டும்; அதை விட்டு விட்டு  இன்னும் எத்தனை காலம் தான் நடிகர்களை - மீடியா இப்படி உயர்த்தி பிடிக்குமோ !!

காபி வித் DD - கமல் பேட்டி 



தூங்காவனம் ரிலீஸ் மற்றும் தனது பிறந்த நாள் இரண்டையும் முன்னிட்டு கமலை பேட்டி எடுத்தார் DD.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றே ! கமலுடன் சேர்ந்து அமர்ந்து பேச ஒவ்வொருவராய் வந்தனர்.. படத்தின் இயக்குனர் ராஜேஷ் அதில் ஒருவர்..

ஆனால் படம் பற்றி அவர் எதுவுமே பேசவில்லை ! அவரை வைத்து கொண்டும் கமல் தான் பேசி கொண்டிருந்தார். இயக்குனர் ராஜேஷ் எதுவும் பேசாமல் - DD " நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி" என சொல்லி அனுப்பி விட்டார் !!

கமலுக்கு எதற்கு இப்படி ப்ராக்ஸி இயக்குனர்கள் தேவை என புரியவில்லை ! தனது பெயரிலேயே இயக்கி விட்டு போய் விடலாம் !!

நம்ம வீட்டு கல்யாணம் - அட்லி- ப்ரியா & சாந்தனு- கீர்த்தி

முன்பு வாரம் ஒரு முறை DD நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்வை தொகுத்து வழங்குவார். அதை நிறுத்தி ரொம்ப காலமாயிற்று. தீபாவளிக்கு இரண்டு சினிமா பிரபலங்கள் திருமண நிகழ்வை காட்டினர்..

அட்லி - ப்ரியா திருமணம் பற்றிய சில தகவல்கள் சுவாரஸ்யம்.

அட்லி மட்டுமே ஒரு தலையாய் காதலிக்க, நண்பர் வட்டத்தில் அனைவருக்கும் தெரியுமாம்.

ஒரு முறை ப்ரியா தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வருவதாக தெரிவிக்க, அட்லி நானும் அப்ளை செய்யட்டுமா என கேட்டுள்ளார். முதலில் விளையாடுகிறார் என பிரியா நினைக்க, அப்புறம் நண்பர்கள் மூலம் விஷயம் தெரிந்துள்ளது. அப்புறம் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி, 1 மாதத்தில் திருமணம் நடந்துள்ளது. ஆக - நாங்கள் காதலர்களாக இருக்கவோ, சுற்றவோ இல்லை என அட்லி புலம்பினார்.

ஹனிமூன் வெளிநாடு செல்லுபோது ப்ரியா பிறந்த நாள் வர- சும்மா வெளியில் போகலாம் என கடலுக்குள் அழைத்து, பின் சினிமா மாதிரி வழி மாறி போய் விட்டோம் என ஒரு நடுக்கடல் ரிசார்ட் கூட்டி சென்று - அங்கு ஒரு பெரிய திரையில் அவரது சிறு வயது முதல் உள்ள புகைப்படங்களால் வீடியோ காட்டி அசத்தி உள்ளார்.. Interesting & Romantic !!

Monday, November 2, 2015

தொல்லை காட்சி- விஜய் டிவி யில் ஜேசுதாஸ் நிகழ்ச்சி & மகாபாரதம் - ஒரு பார்வை

விஜய் டிவியில் ஜேசுதாஸ்- 50  நிகழ்ச்சி

ஹவுஸ் பாஸ் - நான் - இருவருக்கும் இருக்கும் அரிதான ஒற்றுமைகளுள் ஒன்று - இருவரும் ஜேசுதாஸ் குரலுக்கு ரசிகர்கள். எனவே இந்நிகழ்ச்சியை பெரிதும் எதிர்பார்த்தோம்.



உண்மையை சொல்ல வேண்டுமெனில் நிகழ்ச்சியில் ஜேசுதாஸ் பாடியது இருவருக்குமே ஏமாற்றம் தான். 70 வயதுக்கு மேல் ஆகியும் குரல் நன்றாக தான் உள்ளது. ஆயினும், பாடலை - இயல்பில் உள்ளது போல் பாடாமல் மெட்டை சற்று மாற்றி பாடும்போது - அப்பாடல் கேட்கும் சுகம் கிடைப்பதில்லை.

முதுமையினால் மெட்டு அவருக்கு மறந்திருக்கலாம். அப்பாடல்களை பல முறை கேட்ட நமக்கு - பாடல் குறிப்பிட்ட விதத்தில் தான் மனதில் பதிந்துள்ளது. வேறொரு version கேட்கும் போது ஏமாற்றமே.

மற்ற படி நிகழ்ச்சியில் ஜேசுதாஸ் நிறைய பேசவும் செய்தார். அவற்றில் சில நினைவுகள் ரசிக்கும் படி இருந்தது.

மேலும் விஜய் ஜேசுதாஸ் மற்றும் இளம் பாடகர்கள் ஜேசுதாஸ் பாடல்கள் பலவற்றை - மெட்டு மாற்றாமல் பாடினர்.. அவையும் ரசிக்க வைத்தது.

டிவியில் பார்த்த படம்: தளபதி

கே டிவியில் எதேச்சையாக தளபதி படம் ஒளிபரப்பாவது கண்டேன்..

ரஜினி- மம்மூட்டி என்ற இரு ஸ்டார்களுக்கு இடையே அரவிந்தசாமியை தைரியமாக அறிமுகம் செய்திருந்தார் மணிரத்னம்.

மகாபாரத கர்ணன் கதை என்பதாலும் - கர்ணன் சூரியனின்  மகன் என்பதாலும் படம் பெரும்பகுதி அதிகாலை அல்லது மாலை நேரம் படம் பிடிக்கப்பட்டதாக மணிரத்னம் சொல்லிய நினைவு..

இம்முறை பெரிதும் ரசித்து - வயிறு வலி வருமளவு சிரித்தது மணி ரத்னம் ப்ராண்ட் டயாலாக்ஸ்க்கு தான்.

ரஜினி ஷோபனா இருவரும் காதலிக்கின்றனர்.   ஆனால் சூழ்நிலை காரணமாக ஷோபனா - ரஜினியின் தம்பி அரவிந்த் சாமியை மணக்கிறார்.

ஒரு முறை ரஜினி ஷோபனா இல்லம் வரும் போது நடக்கும் உரையாடல்..

"எப்டி இருக்கே? "

" நீங்க எப்டி இருக்கீங்க ?"

" நல்லா பாத்துக்குறாரா"

" அவர் ரொம்ப நல்லவர் "

கேட்ட கேள்விக்கு பதில் வராமல், மணி டைப் டயலாக்ஸ் Hilarious ..!

நீயா நானா 

இந்த வாரம் - வயதான பெற்றோர் ஏன் நகரம் வந்து பிள்ளைகளுடன்  தங்குவதில்லை என்ற தலைப்பில் பேசினர்.

ஒரு பக்கம் பிள்ளைகள் - " நாங்கள் எவ்வளவோ கூப்பிடுகிறோம்; அவர்கள் வருவதில்லை" என பேச, இன்னொரு பக்கம் பெற்றோர் " எங்கள் வீட்டில் படுத்தால் தான் தூக்கம் வரும்; உறவு நெருங்கினால் கெட்டு போய் விடும்; எனவே தான் தள்ளி இருக்கிறோம்" என்ற காரணங்களை பேசினர்

அன்றைக்கு கோபிக்கு என்ன கோபமோ தெரியவில்லை; எந்த பக்கம் யார் என்ன பேசினாலும்  அவர்களை விளாசி தள்ளினார். பேசும் கருத்துகளை மறுத்து விட்டு வழக்கத்தை விட அதிகம்- வரிக்கு ஒரு முறை " ரைட்டா ? ரைட்டா?" என்றார் கோபி..

எங்களை கூப்பிட்டு இப்படி நோஸ் கட் செய்வது ரைட்டு இல்லை சார் .. என்று யாராவது சொல்வார்கள் என எதிர்பார்த்தேன். .. ஹூம் ...

வசந்த் டிவி யில் ராஜா படுத்தும் பாடு 

இளையராஜா இசை அமைத்த சில நல்ல பாடல்களை ஞாயிறு இரவு 8.30-9 வரை ஒளிபரப்புகிறது வசந்த் டிவி.ராஜா படுத்தும் பாடு என்கிற வித்யாச தலைப்பில்..



ஒவ்வொன்றும் செம ஹிட் ஆன பாட்டு தான். ராஜா ரசிகர்கள் மிக ரசிக்கும் வண்ணம், அப்படம் மற்றும் பாடல் குறித்து சில சுவாரஸ்ய தகவலும் கூட சொல்கிறார்கள்.. என்ன ஒன்று அந்த தகவல் எல்லாம் பாடல் ஒளிபரப்பாகும் போதே - இசை மட்டும் வருகிற சமயத்தில் சொல்கிறார்கள்.. இதனால் பாடலை முழுதும் ரசிக்க முடியாமல் ஒரு இடைஞ்சலாக இது உள்ளது. மாறாக பாடலின் துவக்கத்தில் இத்தகைய தகவல்கள் சொல்லி விட்டு பாடலை - முழுதும் தொந்தரவின்றி ஒளிபரப்பினால் நன்கு ரசிக்கலாம்.

மகாபாரதம்

ரொம்ப நாளாக ஒரு தனி பதிவாக எழுத நினைத்து முடியாமலே போனது..

மகாபாரதம்- எனக்கு மிக பிடித்தமான ஒரு கதை.. நீடாமங்கலத்தில் வருடா வருடம் சொல்லப்படும் மகாபாரத கதை கேட்க, கேட்க இன்னும் தான் ஈடுபாடு அதிகமாகும்.

சில முறை இது டிவியில் வந்தபோதும், இம்முறை விஜய் டிவியில் வருவது அட்டகாசம் ! சென்ற முறை வந்தபோதே முழுவதும் பார்த்தோம். சீரியல் முடிந்த பின்னும், அடுத்த சில மாதங்களில் மறு ஒலிபரப்பு துவக்கி விட்டனர்.

டப்பிங் சீரியல் என்றாலும் - பீஷ்மர், துரியோதனன், சகுனி , அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன், தர்மன், பாஞ்சாலி  என அத்தனை பாத்திரத்துக்கும் தேர்ந்தெடுத்துள்ள நபர்கள் அவ்வளவு பொருத்தம் ! அதிலும் ஆண்கள் அனைவரும் மிக அட்டகாசமான உடல் அமைப்பு கொண்டுள்ளோராக  பார்த்து பார்த்து எடுத்துள்ளனர்.

மகாபாரதம் - சினிமா பார்க்கும் திருப்தி+ பிரம்மாண்டத்தை இந்த சீரியல் தந்து விடுகிறது



எனக்கு ரொம்ப பிடித்த பகுதி.. போர் துவங்கிய பின் வரும் பாகம் தான். பல சூழ்ச்சிகள், திட்டங்கள், அரசியல், எதிர்பாராத திருப்பம்.. என இப்பகுதி அட்டகாசமாய் இருக்கும்.  மறு ஒளிபரப்பில் அது இப்போது தான் துவங்கியுள்ளது. இயலும்போது மீண்டும் பார்க்க துவங்கி உள்ளோம்.. விருப்புமுள்ளோர் கண்டு மகிழுங்கள் !


Tuesday, December 16, 2014

தொல்லை காட்சி - நீயா நானா - ஆபிஸ் -விஜய் டிவி ஸ்பெஷல்

பெண்கள் Vs ஆண்கள் 

நரசுஸ் காபிக்கான விளம்பரம் இது:

அம்மா - சிறு பெண்ணுக்கு காபி போட சொல்லி தருகிறார். காபி போட்டு முடித்ததும் சரியாக அப்பா உள்ளே நுழைந்து காபியை குடித்து விட்டு " பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லா இருக்கு " என்கிறார்

" இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் " என கோரசாக சொல்கிறார்கள் அம்மாவும்,பெண்ணும் !

சாப்பிட்டு விட்டு கருத்து சொல்வது மட்டுமே ஆணின் வேலை - அவனை நல்ல சாப்பாட்டால் குஷிபடுத்துவ்து பெண்ணின் பொறுப்பு ("" இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் " ) இப்படி பழமை ஊறிய சிந்தனையில் எடுக்கிறார்களே ! இன்னிக்கு உலகம் எவ்வளவோ மாறி போச்சு !

அப்பாவும் பெண்ணும் காபி போட்டு, வேலைக்கு சென்று திரும்பும் அம்மாவிற்கு தருவது போல் காட்டியிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும் ! (சனிக்கிழமை மாலைகளில் எங்க வீட்டில் நடக்குறதை சொன்னேன் பாஸ் ! )

அழகு கார்னர்

விஜய் டிவி கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் வரும் ப்ரியா பவானி ஷங்கர்..

சீரியல் பார்ப்பதில்லை. சேனல் மாற்றும் போது இந்த அம்மணி கண்ணில் பட்டால் மட்டும் நின்று சற்று இளைப்பாறுவது உண்டு. கோதுமை நிறம், பேசும் விழிகள் என அம்மணி ............ரசிக்கும் அழகு !



நீயா நானா - கார்பரேட்டால் வேலை இழந்தோர் 

"அடடா நாம கலந்து கிட்டுருக்க வேண்டிய தலைப்பல்லவா ? " என எண்ண வைத்த டாப்பிக்.

கம்பனிகளில் வேலை இழந்தோர் ஒரு புறமும், நிறுவனங்கள் வேலையை விட்டு அனுப்புவது ஏன் என HR உள்ளிட்டோர் மறு புறமும் பேசினர்.

ஓரளவு சுவாரஸ்யமான மற்றும் சில அவசிய தகவல்கள் பகிர்ந்த நிகழ்ச்சி என்றாலும் சட்ட ரீதியான ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசிய தகவல்களை சொல்லாமல் சென்றனர்...

நிறுவனம் - தான் நினைத்த படி ஒருவரை உடனே வேலையை விட்டு அனுப்ப முடியாது - தவறு செய்திருந்தால் - ஒரு என்கொயரி நடத்தி - அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை தரமுயும் என்பதையும், அத்தண்டனை கூட தவறுக்கு நிகரான அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும் கூற வில்லை. (வேலையை விட்டு அனுப்புவது மரண தண்டனை போல அரிதான நேரங்களில் மட்டுமே தரப்பட வேண்டும் !)

குறிப்பாக நிர்வாகம் மிரட்டுகிறது என்பதற்காக வேலையை விட்டு செல்ல ரிசைநேஷன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. " என் மீது தவறு என்றால் அதை நிரூபியுங்கள்" என்றால் - நிர்வாகம் இறங்கி வந்து '" உனக்கு சில மாதங்கள் டைம் தருகிறோம்; அதற்குள் வேறு வேலை பார்த்து கொண்டு செல் " என சொல்லும் என்கிற தகவலை சொல்லியிருந்தால் லட்சக்கணக்கான மக்களுக்கு அது பயனுள்ள வகையில் இருந்திருக்கும் !

ஆபிஸ்

ஹவுஸ் பாஸ் பார்ப்பதால் - கூடவே நானும் "கேட்கும்" (கண்- கணினி மீது) ஒரே சீரியல் இது...

லட்சுமிக்கு நடிக்க விருப்பமில்லை என விலகிய பின் - அவரது காரக்டர் வெளியூர் சென்றதாக காட்டி முடித்து விட்டனர். போலவே இன்னொரு முக்கிய பெண்மணி (சூசன்) நிஜ வாழ்வில் கர்ப்பம் என்பதால் - கதையில் அவரை இறக்க வைத்து காரக்டரை காலி செய்தனர்....

இந்த இருவரும் இன்றி இரண்டாம் பாகம் துவங்கி - ஒரு மாதிரியாக போய்க்கொண்டிருக்கிறது... கலர்புல் பெண்கள்.... காமெடி என்ற பெயரில் மரண மொக்கை... சின்ன சின்ன சஸ்பென்ஸ் என்று செல்லும் கதையில் - நிச்சயம் முதல் பாக சுறுசுறுப்பில்லை.... இழுவையாக செல்வதை உணர்ந்து கதையை ஒழுங்கு செய்தால் நலம் !

மேலும் மிக கொடுமையான நேரத்தில் (இரவு 10.30) ஒளிபரப்புகின்றனர்.. பழையபடி 10 மணிக்கு மாற்றா விட்டால் - மக்கள் தேவையான போது யூ டியூபில் மட்டும் பார்த்து கொள்ள துவங்கி விடுவர் !

பார்த்த படம் - தங்கபதக்கம்

ஒரு ஓய்வு நாளின் மதிய வேளையில் - பாதியிலிருந்து பார்த்தோம். எங்கள் ஊர் காவேரி தியேட்டரில் தரை டிக்கெட்டில் அமர்ந்து பார்த்து அழுது விட்டு வந்தது அவ்வப்போது நினைவுக்கு வந்தது. இப்போது பார்க்க பல இடங்கள் காமெடியாக தான் இருந்தது. குறிப்பாக சிவாஜி - கஞ்சி போட்ட போலிஸ் யூனிபார்ம் போல செம விறைப்பாக நடிப்பது செம என்டர்டெயின்மென்ட் . வீட்டில் சாப்பிடும்போதும் மனைவி கூட பேசும்போதும் கூட அதே விறைப்பு தான்.


ஸ்ரீ காந்த் மாடுலேஷன் அதற்கு மேல். ஒவ்வொரு வசனம் பேசும்போதும் உடலை ஒருவாறு ஆட்டியபடி, அல்லது சற்று எம்பி எம்பியபடி அவர் பேசுவது ஸ்டெயிலாமாம் !!

இப்படத்துக்கு பதிவர் சிபி விமர்சனம் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் என தோன்றியது (குறிப்பாய் கே ஆர் விஜயா மற்றும் பிரமிளா பற்றிய அவரது வர்ணனைகள் மற்றும் படத்தின் லாஜிக் மீறல்கள் )

பேக் டு ஸ்கூல்

ஏகப்பட்ட விளம்பரங்கள் - பில்ட் அப் தந்து வந்த இந்நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப சுமார்.

குஷ்பூவை சில குழந்தைகளுடன் விளையாட விடுகிறார்கள். இதில் பொது அறிவு கேள்விகள் வேறு... ஐந்தாறு வயது குழந்தைகளுக்கு எப்படி பெரியவர்கள் அளவு பொது அறிவு இருக்கும் !

எவ்வித சுவாரஸ்யமும் இன்றி கொட்டாவி வர வைத்த நிகழ்ச்சி. போக போகவாவது இம்ப்ரூவ் செய்கிறார்களா என பார்க்கலாம் !

Tuesday, May 13, 2014

சூப்பர் சிங்கர் ரோஷன் உடன் ஒரு சந்திப்பு

சூப்பர் சிங்கரில் பைனல் வரை வந்த ரோஷன்... எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் தான் கடந்த சில  வருடங்களாகவே குடியிருக்கிறான். அடுத்த தெரு என்றாலும் - 50 மீட்டர் தான் தூரம்.. பல முறை அவனது வீட்டிலும் சாலைகளிலும் பார்ப்பது உண்டு.  அவனை பார்த்து புன்னகைத்தால், வெட்கத்துடன் சிரித்த படி சென்று விடுவான். என்றாவது ஒரு நாள் அவனை நிறுத்தி பேசணும் என்று எண்ணி, எண்ணி அண்மையில் தான் அது சாத்தியமானது..

ஈஸ்டர் தினம்.. சாலையில் செல்லும் போது அவர்கள் வீட்டிலிருந்து பாடல் வழிகிறது " நான் தான் சகல கலா வல்லவன் " .. கேட்டபடியே சென்று விட்டு - அரை மணி கழித்து திரும்பும் போது மீண்டும் இன்னொரு பாடல் கசிகிறது " நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் "

சரி.. இன்றைக்கு அவனை நேரில் பார்த்து விடலாம் என அவர்கள் இல்லத்தின் உள்ளே சென்றேன்...

ரோஷன் ஹாலிலேயே லேப்டாப் உடன் அமர்ந்திருந்தான்.. அப்போது பாட்டு பாடியது? அவனது தம்பி ராபின்... ! இது அங்கு சென்றபின் தான் உணர முடிந்தது

உள்ளே ராபினுக்கு அவனது தந்தை பாட்டு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.

நான் ரோஷன் மற்றும் அவனது தாயுடன் பேசிக்கொண்டிருந்தேன்

ரோஷன் குடும்பம் முதலில் கோட்டூர் புரத்திலிருந்துள்ளது. இங்கு சொந்தமாய் வீடு வாங்கி கொண்டு 3 வருடம் முன்பு தான்  வந்துள்ளனர். ரோஷனுக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை. அப்பா பெப்சிகொவில் விற்பனை துறையில் பணியாற்றுகிறார்

தற்போது +2 அக்கவுண்ட்ஸ் க்ரூப் படிக்கும் ரோஷன் C A படிக்க விருப்பம் என்று சொல்ல, எங்கள் ACS கோர்ஸ் பற்றியும் அவனிடம் பகிர்ந்து கொண்டேன். நான் அவனது துறை சார்ந்து தான் படித்துள்ளேன் என்பதை அறிந்ததும் நன்கு பேசத் துவங்கினான் ரோஷன்.

முறைப்படி கர்னாடிக் எல்லாம் கற்று கொள்ள வில்லை என்றும், ஹிந்துஸ்தானி சமீபத்தில் கற்று கொண்டதாகவும் சொன்னான். முக்கிய பயிற்சி அப்பாவிடமிருந்து தானாம் !.

ரோஷன் தாய் மற்றும் தந்தை பேச்சில் மலையாள வாடை தெரிகிறது. ரோஷனின் பேச்சில் சுத்தமாய் இல்லை. இங்கேயே பிறந்து வளர்ந்தமையால் இருக்கலாம்...

சிறிது நேரத்தில் ரோஷனின் தந்தையும் எங்கள் பேச்சில் வந்து சேர்ந்து கொண்டார்.

+2 என்பதால் ரோஷன் தற்போது படிப்பில் கவனம்  செலுத்த,அவனது தம்பி ராபின் தான் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சன் சிங்கரில் கலக்கி வருகிறான்.

அன்று கூட சூப்பர் சிங்கர் ஜூனியரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் செலெக்ட் ஆகி விட்டு அப்போது தான் இல்லம் திரும்பியிருக்கிறார்கள். உடனே அடுத்த சில நாட்களில் வரும் நிகழ்ச்சிக்கான பயிற்சி !!

ராபின் எந்தெந்த நிகழ்ச்சியில் தற்போது வருகிறான், எங்கெங்கு பாடுகிறான் என்று தாயும் தந்தையும் பெருமை பொங்க பகிர்ந்து  கொண்டனர்.

சூப்பர் சிங்கர் பற்றியும் ஜட்ஜ்கள் பற்றியும் கூட கொஞ்சம் பேசினோம்.

அலுவலகத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு ஒவ்வொரு முறை தனது மகன்கள் பாடும்போதும் விடுப்பு எடுத்து கொண்டு கூடவே செல்லும் அவனது தந்தையை - மனம் விட்டு பாராட்டினேன்.

அவர்கள் படிக்கும் வேல்ஸ் பள்ளியும் கூட இது போன்ற திறமைகளை நன்கு ஊக்குவிப்பதாக மகிழ்ச்சியாக  சொன்னார்.பல பள்ளிகள் "படிப்பு படிப்பு " என விடுப்பே தர மாட்டார்கள்; அதனால் தான்  அங்கு சேர்க்க வில்லை" என்றும்  கூறினார்.



ரோஷனின் தம்பி - ராபின் - குட்டி பையன் . ரோஷன் போல இன்றி சற்று சதைபிடிப்புடன் இருப்பதால் செம அழகாக இருக்கிறான்.

இருவரை விட இன்னும் கியூட் அவர்கள் தங்கை. ஆறு வயது தான் இருக்கும். கண்ணில் குறும்பு கொப்பளிக்கிறது. அண்ணன்கள் இருவரும் பாட மட்டுமே செய்வார்களே ஒழிய முகத்தில் எந்த ரீ ஆக்ஷனும் இருக்காது. இவளது முகத்திலோ அத்தனை முகபாவங்கள் வந்து போகிறது...

எங்கள் வீட்டில் கிளிகள் இருக்கின்றன என்றதும், வந்து பார்க்கணும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள் குட்டி பெண். ரோஷன் அல்லது அப்பாவுடன் இன்னொரு முறை வா என்று கூறி விட்டு விடை பெற்றேன்.

படிப்பு, படிப்பு என இருக்கும் இந்த காலத்தில் இத்தகைய பிற திறமைகளை ஊக்குவிக்கும் ரோஷன்- ராபின் தந்தை தான் வீடு நோக்கி நடக்கும்போது மனதில் நிறைந்திருந்தார் .. !

Monday, August 19, 2013

தொல்லைகாட்சி -நீயா நானா பார்வை - பிலிம்பேர் விருதுகள்

கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்

தற்போது தொலை காட்சியில் வரும்  பாடல்  நிகழ்ச்சிகளில் பார்க்கும் விதத்தில் உள்ளது இந்த நிகழ்ச்சி. காரணம் ஜூனியர் சூப்பர் சிங்கரில் நன்கு பாடிய பலரும் பாடுவது தான் !

இந்த வாரம் Folk   ரவுண்ட். வழக்கம் போல பெண்கள் அணி தான் தூள் கிளப்பியது.ரெண்டு அணி மார்க்கும் ஏறக்குறைய சமமாய் இருக்கணும் என்பதை மனதில் கொண்டு ஜட்ஜ்கள்  தரும் மார்க் தான் நிகழ்ச்சிக்கு திருஷ்டி பொட்டு. பாடல் வரிகளை மறந்து விட்டு பாடிய கெளதமுக்கு - மிக அழகாய் பாடிய பிரியங்காவை விட அதிகமார்க் தந்தது  ஒரு  உதாரணம்

 குட்டீஸை பொறுத்தவரை பல்வேறு கான்செப்ட் வைத்து அசத்தி விட்டனர். அநேகமாய் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி இது !

நீயா நானா - "பார்வை " குறித்த நிகழ்ச்சி

வார நாட்களின் பகல் பொழுதில் நீயா நானா - "மகளிர் மட்டும்" என்ற  நிகழ்ச்சியை நடத்துகிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட கலந்து கொள்கின்றனர். இங்கு பரிசளிப்பு இல்லை. மற்றபடி அதே கான்செப்ட் - சிறப்பு விருந்தினர் , etc. etc

ஆண்கள் கண்ணை பார்த்து தான் பேசணும் என பெண்கள்  தவறு என்றும் அப்படி பார்ப்பதில்  உள்ள கஷ்டங்கள் பற்றியும் விரிவாக பேசினர். " அந்த பக்கத்தில்  யார் அழகு?" , " யார் சிரிப்பு சூப்பர்?" போன்ற அறிவார்ந்த கேள்விகளும் உண்டு

ஜெயா டிவியில்  நலம் தரும் நட்சத்திர கோவில்கள்

ஞாயிறு காலை ஏழரை முதல் எட்டரை மணி வரை ஜெயா டிவி யில் - ஒவ்வொரு நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில்களை பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தினமலர் நாளேடு தனது இணைய தளத்தில் இத்தகைய கோவில் ஒவ்வொன்று பற்றியும் விரிவாக பகிர்ந்துள்ளது. இருப்பினும் அந்த கோவிலை - அதன் அமைப்பை வீடியோ மூலம் இந்த நிகழ்ச்சியில் காணலாம்

மேலும் பொதுவான சில ஆன்மீக விஷயங்களும் நிகழ்ச்சியில் பேசுகிறார்கள் நம்பிக்கை + விருப்பம் இருப்போர் காணலாம் !

ஆகஸ்ட் 15 நிகழ்ச்சிகள்

இந்த வருட நிகழ்சிகள் ஓரளவு தான் காண முடிந்தது ஒரு விஷயம் மகிழ்ச்சி தருகிறது. இந்த முறை சினிமா நடிகர்கள் பேட்டிகள்  ஓரளவு குறைந்திருந்தது. ( புது சினிமா குறித்த நிகழ்ச்சிகள் தவிர)

ஜெயா டிவி - நீதானே என் பொன் வசந்தம்- விஜய் - கடல் என்று போட்டாலும் - சன் டிவி போட்ட சுந்தர பாண்டியன் - தான் மிக அதிக மக்களால் காணப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு டிவியில் காந்தி திரைப்படம் ஒளிபரப்புவர். அதை கொஞ்ச நேரமேனும் பார்ப்பது எல்லா வருடமும் தொடர்கிறது !

புதிய தலைமுறையின் புதிய முகம்

புதிய தலைமுறையில் செய்தி வாசிக்கும் சத்யப்ரியா செம அழகு.

முகநூலில் இவர் பற்றிய போஸ்டரை பாருங்கள் :




இவர் எந்த நேரத்தில் நியூஸ் வாசிக்கிறார்னு சொன்னா அந்த நேரத்தில் செய்திகள் பார்த்து நாங்க பொது அறிவை வளர்த்துக்குவோம் !



அம்மணியின் முகநூல் பக்கம் : https://www.facebook.com/newsreadersathyapriya

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

இந்த வாரம் தமிழில் சில நாவல்கள் பற்றி பேச்சாளர்கள் பேசினர். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம், பாலகுமாரனின் உடையார், ஜெயகாந்தனின் ரிஷிமூலம், தீபம் பார்த்தசாரதியின் " குறிஞ்சி மலர் " போன்ற நாவல்கள் நிகழ்ச்சியில் அலசப்பட்டன

பெரிய குறை நாவல் பற்றி பேச ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 3 நிமிடங்கள் ! இதற்குள் நாவல் பற்றி என்ன பேசிவிட முடியும்? பேசி முடித்ததும் நடுவர்கள் அது பற்றி 10 நிமிடம் விவாதிக்கின்றனர். அந்த நேரத்தை குறைத்து விட்டு பேசுவோருக்கு இன்னும் அதிக நேரம் ஒதுக்கியிருக்கலாம்

நடுவர்கள் இந்த நாவல்கள் ஒவ்வொன்றையும் படித்து விட்டு வந்திருந்தது சிறப்பு.

தமிழில் வரும் நல்ல நிகழ்சிகளில் இதுவும் ஒன்று

பிலிம் பேர் விருதுகள் 

சென்ற வருட பிலிம் பேர் விருதுகள் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. கும்கி, வழக்கு எண் 18/9 ஆகிய இரு படங்களுமே ஏராள விருதுகளை அள்ளியது

வாணி ஜெயராமிற்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டபோது 5 மொழிகளில் சிறு காகிதமும் இன்றி - பாடி அசத்தினார். பேசும்போது கூட அவர் குரல் இன்னமும் மிக இனிமை !

வாணி ஜெயராம் பாடும்போதும் பேசும்போதும் அவருக்கு தந்த விருதை மீண்டும் வாங்கி வைத்து கொண்டு பொறுமையாய் காத்திருந்தார் AR ரகுமான் !

ஹைதராபாத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு தமிழில் பேசும் கோபி மற்றும் DD காம்பியர் ஆக இருந்த மாதிரி ஒட்டு வேலையை பக்காவாக செய்திருந்தது விஜய் டிவி !

வெறுப்பேற்றும் விளம்பரம்

இந்துலேகா என்கிற தலைக்கு தேய்க்கும் எண்ணைக்கு விளம்பரம் வைக்கிறார்கள். ஆறாவது படிக்கிற 2 பசங்க - பேசி கொண்டு செல்ல, அதில் ஒரு பையனின் ஆளு - அவள் அஞ்சாம் வகுப்போ என்னவோ முன்னே கோபமாய் போகிறாள்..

" ஏண்டா மச்சான் கோபமா போறா ? " என ஒருவன் கேட்க

" அனுஷ்கா மாதிரி தலை முடி வேணுமாண்டா மச்சான். அதான் கோபமா போறா " என்கிறான் இன்னொருத்தன்

ஏற்கனவே சினிமா பார்த்து பசங்க கெட்டு போக தயாராய் இருக்க - அஞ்சாம் வகுப்பு ஆறாம் வகுப்பு பசங்க - இப்படி பேசி கொள்வதை காட்டுவது தேவையா?

இதே இந்துலேகாவிற்கு இன்னும் சில விளம்பரங்கள் வருகின்றன. அவை இப்படி மோசமில்லை. இந்த குறிப்பிட்ட விளம்பரம் நிறைய எரிச்சல் படுத்தவே செய்கிறது !

Monday, August 5, 2013

தொல்லை காட்சி -ஆபிஸ் லட்சுமி - சூப்பர் சிங்கர் வைஜயந்தி

சீரியல் பக்கம் ஆபிஸ் 

இந்த சீரியலை 10 மணிக்கு மாத்தினாலும் மாத்துனாங்க - வீட்ல - இந்த சீரியல் பார்க்காமல் தூங்குறதில்லை .........ஹூம் !

ஐ லவ் யூ சொல்றேன் என்று பல வாரமா ஜவ்வு மிட்டாய் ஆக்கிட்டுருக்காங்க. இன்னொரு பக்கம் ஒரு வில்லன் Boss- ஆ வந்திருக்கார். இவ்ளோ மோசமான ஒரு பாஸ் நான் என்றும் பார்த்ததில்லை !

இவ்வளவு கொடுமையிலும் சீரியல் பார்க்க வைக்கும் ஒரே நபர் இரண்டாம் ஹீரோயினாக வரும் லட்சுமி ! அம்மணியின் குரலும் குறும்பு கொப்பளிக்கும் சிரிப்பும் ரசனை !

முக்கிய விஷயம் : லட்சுமியின் தங்கை - எனது பெண் படிக்கும் அதே பள்ளியில் இன்னொரு செக்ஷனில் படிக்கிறாள். " லட்சுமி நம்பர் வாங்கி தா; நேரில் பார்த்து ஒரு பேட்டி எடுத்து ப்ளாகில் வெளியிடணும் " என்றால் பெண் முறைக்கிறாள்; இருந்தும் "முயற்சியது கை விடேல் !" என தொடர்ந்து வருகிறேன். ஒரு நாள் அவரை சந்தித்து பேசினால் - உங்கள் அனைவருக்கும் புகை வருமளவு பேசி விட்டு பேட்டி வெளியாகும் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன் :)

ஜோடி சீசன் - 6

இந்த வாரம் " Folk டான்ஸ் " ரவுண்ட் - வந்த போதே ஜட்ஜ்கள் நல்ல மூடில் இருந்தனர் எல்லாரையும் ஆஹோ ஓஹோ வென பாராட்டியதிலேயே இன்று யாரையும் அவுட் ஆக்க போவதில்லை என தெரிந்தது

நிகழ்ச்சிக்கு ராதா என்று ஒரு ஜட்ஜ் போதும் கூடவே வரும் அம்பிகா,  ராதா என்ன மார்க் தருகிறாரோ அதே தான் தருகிறார்; ராதா  சொல்வதை ஒட்டிய கருத்துக்களையே பிரதிபலிக்கிறார் !

நிகழ்ச்சியில் இப்போது இருப்பது 5 ஜோடிகள் தான். இவர்கள் - ஒரு பாட்டுக்கு முழுசையும் ஆடுவதில்லை ; 3 நிமிடம் தான் ஆடுகிறார்கள். 5 குழு இப்படி ஆடினால் 15 அல்லது 20 நிமிடத்தில் நிகழ்ச்சி முடியனும் இல்லியா? ஆனால் இந்த நிகழ்ச்சி 2 மணி நேரம் ஓடுது !

எப்படி 2 மணி நேரம் ஓடுது என்கிறீர்களா? நடுவே அத்தனை பேரையும் அழைத்து, உப்பு மூட்டை தூக்க சொல்வதும் , ஒரு நிமிடம் " எப்படி வேண்டுமானாலும் தூக்கி கொண்டு ஆடுங்க " என்பதும் ...அடேங்கப்பா நம்ம கிராமத்து திருவிழாவில் நடக்கும் செக்ஸ் டான்ஸ் நிகழ்ச்சிகள் தோற்றது போங்க !

டிவி போஸ்டர்

பார்த்த படம் - தொடரும்

அஜீத் குமார் தேவயானி மற்றும் ஹீரா நடித்து நடிகர் ரமேஷ் கண்ணா இயக்கிய படம் இப்போது தான் காண முடிந்தது

பொஸசிவ் மனைவியான தேவயானி - கணவனை எப்போதும் சந்தேகப்படுகிறார். தனக்கு இதய நோய் இருப்பதால் இறப்பது உறுதி (!!??) என தெரிந்து - ஹீராவை - அஜீத்துக்கு மணம் முடித்து விட்டு ஒரு பெண் குழந்தையை ஈன்று விட்டு இறக்கிறார்.  படத்தின் முக்கிய முதுகெலும்பாய் இருக்க வேண்டிய தேவயானி பாத்திரம் தான் அதீத எரிச்சல் ஊட்டுது . படம் தோற்க இதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும்

ஒல்லியான அஜீத் கண்ணாடி போட்டு கொண்டு - விவேக்கை நினைவு படுத்துகிறார். மணிவண்ணன் மற்றும் வடிவேலு காமெடி பார்ட் சில நேரம் சிரிப்பு; பல நேரம் எரிச்சல்.

இசை இளையராஜா - இந்த படத்துக்கு இவ்வளவு போதும் என நினைத்து விட்டார் போலும்; ஒரு பாட்டும் ஹிட் ஆகலை !

அஜீத்தே கூட மறக்க நினைக்கிற படம் என தோன்றுது !

சூப்பர் சிங்கர் வைஜயந்தி

சென்ற சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலக்கிய " நித்யஸ்ரீ "யின் அக்கா - வைஜயந்தி !



நித்யஸ்ரீ அளவுக்கு நன்றாக பாடுகிறார் என்று சொல்ல முடியாது ; சில நேரம் மிக நன்றாக பாடுவார். முதல் 15 க்குள் வருவார் என்று தான் நினைக்கிறேன். பி சுசீலா வந்தபோது அவர் பாடிய "என்ன என்ன வார்த்தைகளோ "- இங்கு



இந்த வாரம் 16 வயது இளைஞரான ராஜகோபால் வெளியேற்றபட்டார். அது ஓகே . சவுண்டு சவுந்தர்யா - அபாய கட்டம் வரை வந்தது தான் ஆச்சரியம் !

லயோலா கல்லூரி விழா

தங்கள் பழைய கல்லூரி மாணவர்கள் பலரை அழைத்து லயோலா கல்லூரி நடத்திய விழா விஜய் டிவியில் ஒளிபரப்பானது. (அதென்ன சினிமா நடிகர்கள் மட்டும் மேடைக்கு அழைக்கப்படுகிறார்கள் ?) ஆனந்த் பாபு நடனம் ஆட, பிரபு சிவகுமார் போன்றோர் பேசினர்.

ராதாரவி பேசும்போது மாணவனாய் இருந்தபோது செய்த அராஜகம் பற்றியெல்லாம் பேசிவிட்டு, "நான் இங்கு படித்தது PUC மட்டும் தான்; எனக்கு அப்ப BA Economics - கல்லூரியில் சேர ரவுடி என சீட் குடுக்கலை ; இப்ப பாருங்க எனக்கு சிறந்த மாணவன்னு பரிசு தர்றாங்க" என்று கல்லூரி நிர்வாகத்தை செமையாய் வாரினார்.

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு 

இந்த வாரம் தமிழ் சினிமாவில் வந்த சில அற்புத பாத்திரங்கள்  பற்றி பேசினர். வழக்கமாய் வரும் நெல்லை கண்ணனுடன் - எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் மற்றும் நடிகர் மோகன்ராம் ஆகியோர் நடுவர்களாக வந்திருந்தனர். பராசக்தி சிவாஜி மற்றும் எம். ஆர். ராதா பற்றி அவர்கள் பேசியது மிக சுவாரஸ்யம் ! பார்க்காவிடில் யூ டியூபில் தேடி பாருங்கள் !

Monday, July 29, 2013

தொல்லை காட்சி - கேடி பாய்ஸ் -அல் கேட்ஸ் - சில்லுன்னு ஒரு காதல்

கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியரில் முதல் 10 இடங்களை பிடித்த குட்டீஸ் - இன்று ((சற்று வளர்ந்து ) பாடுகிறார்கள்

ஆண்கள் பக்கம் - ஷ்ரவன், ரோஷன் ஸ்ரீ காந்த் போன்றோர் ; பெண்களில் பிரியங்கா ஸ்ரீ நிஷா, சுகன்யா, யாழினி, அனு போன்றோர். பெயர்களை பார்க்கும் போது பெண்கள் அணி தான் சற்று பலமாய் இருக்கு !



துவக்க நிகழ்ச்சியில் பெண்கள் அணி தான் மொத்தத்தில் மட்டுமல்ல பெரும்பாலான ஒன் ஆன் ஒன் னிலும் வென்றனர்.

ஒவ்வொரு ஞாயிறும் காலை 10.30 க்கு விஜய் டிவி யில் ஒளிபரப்பாகிறது. முழுதாய் பார்க்கா விட்டாலும் இயலும்போது பார்க்கலாம். யார் ஜெயிக்கிறார்கள் என்பதற்காகவோ, விஜய் டிவி போடும் சீன்களுக்காகவோ அல்ல - நிகழ்ச்சியில் மிக நன்றாக பாடும் சிலருக்காக

விண் டிவி யில் பங்குகள் பற்றிய நிகழ்ச்சி 

நிஜந்தன் அவர்கள் விண் டிவி யில் பங்கு சந்தை குறித்து ஒரு எக்ஸ்பர்ட் உடன் பேசிய நிகழ்ச்சி ஒரு நாள் கண்டேன்

கிட்டத்தட்ட 10 பங்குகள் பெயரை குறிப்பிட்டு - "இவற்றை வாங்குங்கள் ; இவை விலை நிச்சயம் ஏறும் " என்று கருத்து சொல்லி கொண்டிருந்தார் அந்த நபர்.

கிட்டத்தட்ட ஜாதகம் மற்றும் ராசி பலன் சொல்வது போல் தான் இதுவும் ! நான் ஒரு நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி ஆக உள்ளேன். எங்கள் நிறுவன பங்கு எப்போது ஏறும் இறங்கும் என்பதை - உள்ளே என்ன நடக்கிறது என்று அறிந்த என்னால் கூட சொல்ல முடியாது என்பதே உண்மை !

இவர்கள் சொல்வதை கேட்டு யாரும் இன்வெஸ்ட் செய்கிறார்களா - அதனால் பலனடைந்தார்களா என தெரிய வில்லை !

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு 

அருமையான இந்த நிகழ்ச்சி மீண்டும் விஜய் டிவி யில் துவங்கி உள்ளனர். அடடா பசங்க என்னமா பேசுகிறார்கள் ! அட்டகாசம் ! இந்த தலை முறை இளைஞர்கள் இவ்வளவு சுத்தமாய் தமிழ் பேசுவார்களா என்று ஆச்சரியமாய் உள்ளது !

சென்ற வாரம் 3 பேர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினர். மூவரும் நடுவர்களில் ஒருவரான நெல்லை கண்ணன் மீது எவ்வளவு மதிப்பு வைத்துள்ளனர் என்பது வெளியேறி செல்லும்போது பேசியதில் தெரிந்தது. அவர்கள் பேசிய வரிகளில் நெல்லை கண்ணன் நெகிழ்ந்து கண் கலங்கி விட்டார்.

நிகழ்ச்சியில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் உபயோகிக்காமல் பேச்சாளர்களும், நடுவர்களும் பேசுகிறார்கள்.. நல்ல விஷயம் ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் தான் " தமிழ் பேச்சு எங்கள் மூச்சு " Powered By என்று சொல்லி விளம்பர தாரர் பெயர் சொல்கிறார்கள் எல்லோரையும் திருத்தும் நடுவர்கள் காம்பியர்களிடம் " Powered By என்று சொல்லாமல் " நிகழ்ச்சியை வழங்குபவர்கள் என்று சொல்ல சொல்லலாமே !

சூப்பர் சிங்கர் கார்னர் - அல் கேட்ஸ்
அழகேசன் என்ற 61 வயது பெரியவர் சூப்பர் சிங்கரில் பாடி வருகிறார். இவர் பேரை அல் கேட்ஸ் என்று மாற்றியதில் துவங்கி இவரை செமையாக கிண்டல் செய்கிறார்கள் அது புரியாமல் தலையை தலையை ஆடுகிறார் இந்த பெரியவர்



பழைய பாடல்கள் என்றால் ஓரளவு நன்கு பாடினாலும் முறையான பயிற்சி இல்லாமை மற்றும் புதிய பாடல்களில் ரொம்ப சுமாராக பாடுவதால் முதல் 20 க்கு முன்பே வெளியாகும் நபராக இவர் இருக்க கூடும்
கிரிக்கெட் கார்னர்
இந்தியா பல ஆண்டுகளுக்கு பின் ஜிம்பாப்வே சென்று ஆடி வருகிறது. தோனி, அஷ்வின், மற்றும் முக்கிய வேக பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா - A போன்ற ஒரு அணி தான் சென்றாலும், ஜிம்பாப்வே மிக வீக் ஆக இருப்பதால் இந்தியா எளிதில் வென்று வருகிறது

புஜாராவிற்கு வாய்ப்பு தராமல் ராயுடுவுக்கு தருவது ஏன் என்று புரிய வில்லை. ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்க போன்ற வெளிநாடுகளில் உள்ள கடினமான பிட்ச்களில் நன்கு விளையாட கூடிய புஜாராவிற்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு தருவது அவசியம். போலவே ரசூல் மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோருக்கும் அடுத்த 2 போட்டிகளிலாவது வாய்ப்பு தர வேண்டும் !

பார்த்த படம் - சில்லுன்னு ஒரு காதல்

முணுக்குன்னா இந்த படத்தை கலைஞர் டிவியில் போட்டுடுறாங்க. எப்ப போட்டாலும் நம்ம வீட்டம்மணி உட்கார்ந்து முடிஞ்சவரை பார்ப்பார். பார்ப்பது மட்டுமல்ல ஜோதிகா மாதிரி தன்னை மனதில் நினைத்து கொண்டு அநியாயத்துக்கு பீலிங்க்ஸ் + கமண்ட் விடுவார்

கதைப்படி சூர்யா - பூமிகாவை கல்லூரி காலத்தில் லவ் பண்ணிட்டு அப்புறம் ஜோதிகாவை கல்யாணம் பண்ணிக்குறார். ஆனா அவரு (நம்மளை மாதிரி ) மனைவியிடம் தன் பழைய காதலை சொல்லலை; ஒரு நாள் ஜோதிகா அம்மணி டயரி எடுத்து படிக்க, மாட்டிக்கிறார். " ஒரு நாள் கூட அவளோட வாழலை " என பீலிங்க்ஸ் பார்த்துட்டு ஜோதிகா - பழைய காதலியை தேடி சென்று கூட்டி வருகிறார்..

படம் ஓடும்போது எங்களுக்குள் நடந்த டயலாக்

" நான் கூட காலேஜ் டேஸ் முழுக்க டயரி எழுதினேன் எல்லாம் - மேலே புக் ஷெல்பில் தான் இருக்கு "

" லவ் மேட்டரெல்லாம் எழுதிருக்கீங்களா ? நான் படிச்சதே இல்லியே !"

"சூர்யா மாதிரி முழுக்க யாராவது எழுதுவாங்களா ? அப்படியே லைட்டா எதோ இருக்கும் நீயா படிச்சு புரிஞ்சிக்க வேண்டியது தான் "

" அட பாவி "

" நம்ம லவ்வர்சில் யாரையாவது இப்படி பேசி கூட்டிட்டு வாயேன் "

" ம்ம்? நான் ஏன் போய் கூப்பிடனும் ?"

" சினிமாவில் ஜோதிகா தானே போயி கூட்டிட்டு வந்தார்; அது மாதிரி நீ தான் போயி சொல்லணும் இந்த மாதிரி இந்த மாதிரி .. . அவரு உன்னையே நினைச்சு உருகுறாருன்னு "

படம் பார்த்த சுவாரஸ்யத்தில் குண்டு ஏதும் வெடிக்கலை; பின்னாளில் வேறு ஏதாவது ஒரு சண்டையின் போது இதற்கான பலன் தெரிய வரும் :))

*********
அண்மை பதிவு

உணவகம் அறிமுகம் - -ஆதம்பாக்கம் சுவாமீஸ் கபே

Monday, July 22, 2013

தொல்லை காட்சி- சூப்பர் சிங்கர் வைஷாலி -வாலி - தாயுமானவன்

வாலி 1000

கடந்த சில வாரங்களாக வசந்த் டிவியில் "வாலி 1000" என்கிற நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வாலி அவர்கள் தன் சினிமா வாழ்க்கை குறித்து பல செய்திகளை பகிர்கிறார். கவிஞரின் மரணத்துக்கு முன் எடுத்த பேட்டி. மிக மெதுவாக இப்போது ரீ டிலி காஸ்ட் வருகிறது.

நான் பார்த்த அன்று - LR ஈஸ்வரி வாலி அவர்களை பேட்டி எடுத்து கொண்டிருந்தார். 1958ல் பாடல் எழுத சென்னை வந்தது - முதல் பாட்டு எழுதிய பின்னும், பல வருடங்கள் வாய்ப்பின்றி இருந்தது பின் MGR படத்தின் பாடல் எழுதிய பின் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது என பல விஷயங்கள் பகிர்கிறார். ஆர்கெஸ்ட்ரா வைத்து அவரின் பிரபல பாடல்கள் சில அவர் முன்னணியில் பாடுகிறார்கள்

வாரம் ஒரு நாள் மட்டும் (புதன் அல்லது வியாழன் என நினைக்கிறேன்) மாலை நேரத்தில் வரும் இந்நிகழ்ச்சியை முடிந்தால் காணுங்கள் !

சூப்பர் சிங்கர் கார்னர் - வைஷாலி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பாடுவோர் சிலரை பற்றி அவ்வப்போது இங்கு எழுத ஐடியா .....



வைஷாலி - இவரை எனக்கு பிடிக்க ஒரே காரணம் தான்.. இந்த சீசனில் என் கண்ணுக்கு அழகாய் தெரிபவர் இவர் தான். கல்லூரி மாணவி என நினைக்கிறேன். கண்களும் சிரிப்பும் செம அழகு. பாடுவது அவுட் ஸ்டாண்டிங் அளவில் இல்லை - ஆவரேஜ் தான் என்பதால் கடைசி 10 க்குள் எல்லாம் வர வாய்ப்பில்லை



வைஷாலி நன்கு பாடிய பாடல் ஒன்று



சீரியல் பக்கம் - தாயுமானவன்

எப்போதோ சில முறை பார்த்ததில் புரிந்த வரை சொல்கிறேன் :

4 பெண் குழந்தைகளை தாய் இன்றி வளர்க்கிறார் ஒரு தந்தை (யாருங்க அவர்? இதுவரை வேறெங்கும் பார்த்ததில்லை). முதல் பெண்ணுக்கு திருமணம் முடியும் முன்பே இரண்டாவது பெண் சொல்லாமல் கொள்ளாமல்  கல்யாணம் முடித்து வந்து விடுகிறார். அந்த மருமகனோ - முதல் நாளே அனைத்து கெட்ட பழக்கங்கள் கொண்டவர் என்பது தெரிய வருகிறது

சரவணன் - மீனாட்சியில் சரவணன் பெற்றோராக வரும் குயிலி மற்றும் ராஜசேகர் அதே பாத்திரங்களாக இக்கதையில் வருகிறார்கள் (ஒரு சீரியல் பாத்திரங்கள் இப்படி திடீர் திடீரென மற்ற சீரியலில் வருவார்கள் என ஹவுஸ் பாஸ் சில உதாரணங்களுடன் சொல்கிறார்) !!

பல வருடங்கள் இழுக்க தேவையான அனைத்து விஷயங்களும் இருப்பது புரிகிறது

சன் சூப்பர் சிங்கர் 

விஜய் டிவி சூப்பர் சிங்கர் போலவே சன் டிவியிலும் குட்டி பசங்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. ஆனால் குவாலிட்டி நிச்சயம் விஜய் அளவிற்கு இல்லை.

இந்த வாரம் செமி பைனல் நடத்தினர். கரகாட்டக்காரன் பாடலை ஒரு பெண் பாட அப்போது கங்கை அமரன் சொன்னது : " கதை என்று எதுவும் சொல்லாமல் கரகாட்டக்காரன் படத்துக்கு பாடல்கள் இளையராஜாவிடம் வாங்கினோம் ஒரு டூயட்; ஒரு சோக பாட்டு, ஒரு சாமி பாட்டு இப்படி சொல்லி- அதற்கு அவர் மெட்டு தர - பாடல்கள் ரெடி ஆனது "

நிகழ்ச்சி முழுக்க பார்க்க முடிய வில்லை. ப்ரோமோவில் 3 பேர் மட்டும் தான் பைனல் செல்கின்றனர் என்று ஜட்ஜ் அனுராதா ஸ்ரீராம் சொல்ல, மாஸ்டர் (!!!??) கங்கை அமரன் கோபித்து கொண்டு கிளம்புவதை காட்டி காட்டி மக்களை பார்க்க வைக்க சொல்லி கூவி கொண்டிருந்தனர் . கடைசி டிராமாவை பார்க்க வில்லை; எப்படி முடிந்தது என தெரியலை !

விஜய் டிவி யில் PBS நினைவாக ...

PBS நினைவாக என விஜய் டிவி யில் அவர் பல பாடல்களை - பிற பாடக பாடகிகள் பாடுவதை ஒளிபரப்பினர்

இளம் பாடகர்கள் பாடியது ஓரளவு ஓகே. ஆனால் P. சுசீலா, LR ஈஸ்வரி இருவரும் - பாட்டி வயதில் இருந்து கொண்டு - இப்ப வந்து பாடுறேன் என பாடல்களை கொடுமை செய்தனர்

ரோஜா மகளே ராஜகுமாரி எவ்வளவு அருமையான பாட்டு - அதை இன்றைய P. சுசீலா குரலில் கேட்பது கொடுமையிலும் கொடுமை. இன்னொரு பக்கம் LR ஈஸ்வரி " ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள் " என இழுப்பதற்குள் குரல் முழுமையாய் கட்டி கொண்டு கர்ண கொடூரமாய் ஒலிக்கிறது ! முடியல !

சூப்பர் சிங்கரில் தாளம் பற்றி பேசும் நடுவர் ஸ்ரீனிவாஸ் அன்று பாடிய பாட்டில் தாளம் ஒரு பக்கம் போக இவர் வேறு பக்கம் போனார் (நிலவே என்னிடம் நெருங்காதே )

இந்த கொடுமைகளுக்கு சிகரம் வைத்தார் போல " ஆயிரம் நிலவே வா " பாட்டை கூறு போட்டு கொலை செய்தனர் ஹரிஹரனும் சுசீலாவும் ! 

குறிப்பிட்ட சரணத்தில்  இவர் ஒரு வரி பாட, அடுத்த சரணத்தின் வரியை இன்னொருவர் பாடி கொண்டிருந்தார். கடைசி வரை தப்பு தப்பா பாடுகிறோம் என தெரியாமல் இஷ்டத்துக்கு இழுத்து நடுவில் வரிகளை விட்டு விட்டு " லா லா லா " பாடி கடைசியில் எதோ பெரிய காரியம் சாதித்த முக பாவத்துடன் பாட்டை முடித்தனர் !

ஆளை விடுங்கடா சாமிகளா என 4 பாட்டினில் எஸ் ஆகிட்டேன் !

மெகா டிவியில் வாணி ஜெயராம் 

பழைய பாடகிகள் எல்லார் குரலும் மோசமாகி விடலை என அடுத்த நாளே மெகா டிவி யில் வாணி ஜெயராம் பாடிய போது அறிய முடிந்தது. மெகா டிவி நிறுவனர் - தங்கபாலு வருட வருடம் இசை துறையை சார்ந்த ஒருவருக்கு விருது தருகிறார். இவ்வருட விருது சில மாதங்களுக்கு முன் நடந்த விழாவில் வாணி ஜெயராம்க்கு கிடைத்தது அதே விழாவில் வாணி ஜெயராம் பல பாடல்கள் அற்புதமாய் பாடியதை தான் மெகா டிவியில் ஒளி பரப்பி கொண்டிருந்தனர்.

வாணி ஜெயராம் பாடியதை கேட்ட போது ஒன்று புரிந்தது. சினிமா அல்லது மேடையில் பாடுகிறாரோ இல்லையோ இத்தனை வருடங்களாக விடாமல் தினம் அவர் பயிற்சி எடுத்திருக்கிறார். அந்த பயிற்சி இன்றி - பழைய பாட்டை கேட்பது மாதிரியே அவரால் பாடியிருக்கவே முடியாது !

இதே பயிற்சியை தினம் நமது விருப்பத் துறையிலும் காட்டினால் நாமும் ஷைன் பண்ணுவோம் இல்லையா ?

நீயா நானாவில் பெண்களை பற்றிய வர்ணனை

நேற்றைய நீயா நானாவில் பெண்களை பற்றிய வர்ணனை குறித்தான "போட்டி" நடந்தது . வித்யாசமான ஒரு தலைப்பு. துவக்கத்தில் வந்த வர்ணனைகள் பல "அட !"போட வைத்தாலும் பின் 6 பேரை மட்டும் தேர்ந்தெடுக்கிறோம்; ஆறில் இருந்து 4; நான்கில் இருந்து 3 என குறையும் போது சுவாரஸ்யம் குறைந்து விட்டது

மக்களை சுதந்திரமாக பேச விடும்போது தான் நன்கு பேசினர். "இத்தனை பேரை தேர்ந்தெடுக்கிறோம் " என்று பாதியில் சொன்ன பிறகு எதோ டென்ஷனிலேயே அவ்ளோ கவித்துவமாக பேசலை ! முடிந்தால் இந்நிகழ்ச்சியின் முதல் 45 நிமிடம் யூ டியூபில் காணுங்கள். ரசிப்பீர்கள் என நம்புகிறேன்
******
அண்மை பதிவு :

உணவகம் -அறிமுகம் ரிலாக்ஸ் பாஸ்ட் புட்ஸ் நங்கநல்லூர்

Monday, July 15, 2013

தொல்லைகாட்சி: ஜோடி சீசன் - தோனி- Pursuit of Happiness

பார்த்த படம் - Pursuit of Happyness

வில் ஸ்மித் நடித்த அற்புதமான இப்படத்தின் தமிழ் பதிப்பை இந்த வாரம் சன் டிவியில் காண முடிந்தது

சேல்ஸ்மேன் ஸ்மித்துடன் ஒரு மன கசப்பில் மனைவி அவரை விட்டு பிரிகிறார். தனது 5 வயது மகனுடன் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை. ரயில்வே கழிப்பறை, சர்ச், பஸ் என பல இடங்களில் மகனுடன் தினமும் தங்கும் ஸ்மித், தனது தொழிலில் மீண்டும் சாதித்து - நிரந்தர வேலை அவருக்கு கிடைப்பதுடன் படம் நிறைகிறது



கார்ட்னெர் என்கிற மனிதரின் வாழ்வில் நிகழ்ந்ததையே படமாக்கி உள்ளனர். அதன் பின் சுய தொழில் தொடங்கி பெரும் பணக்காரரான அவர் - இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் !
File:Chrisgardner.jpg
The Real Chris Gardner, whose story was shot in this film 
வீடின்றி அவர்கள் இருவரும் தவிப்பது மனதை உருக்கி விடும். விடா முயற்சியும், துன்பத்தை சகித்து கொள்ளும் பொறுமையும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் எனபதை நிஜ வாழ்விலிருந்து எடுத்து சொல்லும் இந்த படம் அவசியம் காண வேண்டிய ஒன்று !

ஜோடி சீசன் - 6

இந்த வாரம் ரிலேஷன்ஷிப் ரவுண்ட் என சென்டிமென்ட்டாக பிழிந்தனர். ரிலேஷன்ஷிப் என்றாலே கண்ணை கசக்கனும் என முடிவெடுத்துட்டனர் போலும்.. ஒரே அழுகாச்சி தான் !

ராதாவின் தம்பி மற்றும் பூர்ணிமா மகன் சாந்தனு வந்து அவர்களுக்கு " இன்ப அதிர்ச்சி " தந்தது ஒரு புறமிருக்க, பாக்யராஜ் உடன் போனில் பேசினர். அப்ப அவர் விஜய் டிவிக்கு சரியான செக் வைச்சார் !

" நிகழ்ச்சியிலே எல்லாம் ஓகே; ஒரு விஷயம் தான் எனக்கு பிடிக்கலை. எலிமிநேஷன்னு சொல்லிட்டு ஒருத்தரை வெளியே அனுப்புறீங்க அடுத்து அவர் அழுகுறார். பாக்க கஷ்டமா இருக்கு. ஒண்ணு யாரையும் எலிமிநேட் செய்யாதீங்க இல்லாட்டி யார் எலிமிநேட் ஆகுராங்கன்னு சொல்லாம விட்டுடுங்க. அடுத்தட ரவுண்ட் போறவங்க பேரை மட்டும் சொல்லிட்டு இவங்க பேரை சொல்லாட்டி - பரிட்சை பேப்பரில் நம்பர் வராத மாதிரி அவங்களே தெரிஞ்சுப்பாங்க இல்லியா ? " என்றார்

கேட்ட DD -க்கே சிரிப்பை அடக்க முடியலை ! இந்த ஆள் விஜய் டிவி அடி மடியிலேயே கை வைக்கிறாரே என ! பின்னே? அந்த செண்டிமெண்ட் சீன்களை வச்சு தானே பல புரோகிராம் ஓடிட்டு இருக்கு !

சீரியல் பக்கம்

சீரியல்கள் பார்க்க செம கடுப்பாக இருந்தாலும் சிலவற்றை பார்த்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம். வீட்டுக்கு வந்தவுடன் ஓடி கொண்டிருப்பது சீரியல் எனும் நிலையில் அதிலிருந்து நேரே தப்பி ஓடி, கணினி முன் உட்கார முடியாது ! அப்படி உட்கார்ந்தால் பின் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என்பதால் "வீட்டோடு நேரம் செலவிடுகிறேன் " என்ற பேரில் டிவி முன் உட்கார வேண்டியுள்ளது !

Photo

சரவணன் மீனாட்சியில் - சரவணன் மற்றும் மீனாட்சி பல வாரங்கள் பேசாமல் இருந்து - அப்புறம் சரவணன் மாறு வேஷம் எல்லாம் போட்டு (நம்மை தவிர யாருக்கும் தெரியாதாம் !) ஒரு வழியா பேசிட்டார். அதுக்கப்புறம் ஒரே ரொமான்ஸ் மேட்டரா ஓடிக்கிட்டு இருந்தது

ஆபிஸ் சீரியல் பார்க்கும் நேரத்தில் இன்னொரு சீரியலும் ஓடுவதால் - அம்மணியால் பார்க்க முடிவதில்லை; இரவு 10.30 க்கு ரீ டெலிகாஸ்ட் பண்றான் அப்ப பார்க்கணும் என மிரட்டி வருபவரை சமாளித்து அதற்கு முன்பே டிவியை ஆப் செய்து வருகிறேன்

விஜய் டிவியின் VJ Hunt 

எல்லா டிவியிலும் தான் தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய் டிவி ஒரே ஒரு ஆண் தொகுப்பாளர் மற்றும் ஒரே ஒரு பெண் தொகுப்பாளர் தேர்ந்தெடுக்க - ஊர் முழுக்க சுற்றி வருகிறார்கள். இதை வைத்து ஒரு நிகழ்ச்சியும் ஒப்பேற்றி விட்டனர்

ஏராள ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்க - சுமாராய் பேசுவோரை - அங்கேயே கிண்டல் செய்து வெளியே அனுப்புகிறார்கள்

ஒரு சில முறை டிவி நிகழ்சிகளில் கலந்து கொண்டவன் என்ற முறையில் கோபிநாத் போன்ற பல வருட அனுபவம் உள்ள தொகுப்பாளரே - ஒவ்வரு ஷூட்டும் துவங்கும் போது பல டேக்குகள் வாங்குவதை பார்த்துள்ளேன். ஆனால் புதியவர்களான இவர்கள் - கிடைத்த சில நொடிகளில் தயக்கமே இன்றி பேச வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் !

தோனி ஸ்பெஷல்

இலங்கையுடனான பைனல் மேட்சில் தோனி ஆடிய ஆட்டத்தை மறுநாள் காலை ஹை லைட்ஸ் மூலம் தான் பார்க்க முடிந்தது. டூர் செல்லும் முன் பிக்சிங் என்று பேச்சு அதிகம் எழுந்தது. இப்போது அதே தோனியை கிரிக்கெட்டின் சிறந்த பினிஷர் என்றும் இந்தியாவின் மிக சிறந்த கேப்டன் என்றும் சொல்கிறார்கள். Nothing succeeds like Success !

அந்த கடைசி ஓவர் த்ரில்லை மிஸ் செய்தவர்கள் இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்:


இந்திய அணியின் ஆட்டம் - 3 நிமிட ஹை லைட்ஸ் - 


இஞ்சினியரிங் மோகம் - நீயா நானா 

இந்த வார நீயா நானாவில் இஞ்சினியரிங் மோகம் பற்றிய விவாதம்; இரண்டு பக்க நியாயமும் பேசினர். சீட்டு தர ஒவ்வொரு கல்லூரியும் பணம் வாங்கும் முறையை கேட்டாலே - பணம் வாங்க இம்புட்டு ஐடியாவா என இருந்தது ! தெரு முனை மளிகை கடை போல - எந்த பில்லும் தராமல் அனைத்து கல்லூரிகளும் பணம் வசூலிக்க - அரசாங்கங்கள் இது தெரிந்தே தான் பேசாமல் இருக்கின்றன.

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் கூட முன்னேறியது- மிக இளம் வயதிலேயே நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தது - விரைவில் செட்டில் ஆவது - வெளிநாட்டு வாய்ப்புகள் - வேறு வேலைக்கு அதிக சம்பளம் இல்லை - என இஞ்சினியரிங் மோகம் உள்ளோர் சொன்ன காரணங்கள் அவர்கள் பார்வையில் நியாயமானவையாகவே தெரிந்தது.

அடுத்த வாரம் "பெண்களை இளைஞர்கள் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள்" என்கிற தலைப்பு;  அவர்கள் "அடுத்த வாரம்" என காட்டிய சில துளிகள் செம சுவாரஸ்யமாக இருந்தது ! பார்க்கணும் !
*******
அண்மை பதிவு :
சிங்கம் 1 Vs சிங்கம் 2 விமர்சனம்

Monday, July 8, 2013

தொல்லைகாட்சி - சூப்பர் சிங்கர் -அன்னக்கொடி- நாளைய இயக்குனர்

அன்னக்கொடி டீம் கேப்டன் டிவி யில் ...

அன்னக்கொடி படம் - மொத்தமே சில லட்சங்கள் தான் வசூலித்ததாக சொல்கின்றனர். படம் தியேட்டரை விட்டு போயி 4 நாள் கழிச்சு - கேப்டன் டிவியில் மனோஜ், கார்த்திகா, ஹீரோ லக்ஸ்மன் ஆகியோர் வந்து படத்தை பற்றி அளந்து விட்டனர் !

"அந்த சீன் சூப்பர்; இந்த சீன் சான்சே இல்லை; பாட்டெல்லாம் என்னாமா இருக்கு  என மனோஜ் பேசியதை காண செம சிரிப்பாய் இருந்தது; இடையில் " படம் Dry subject- தான் " என ஒரு வரி ஒப்புதல் வாக்குமூலமும் தந்தார்.

                            

ஆங்காங்கு பார்த்த சீன்கள் - கிராமத்தில் வாழும் அத்தனை பெரும் கெட்டவர்கள் என்பது போல் காட்டியது !

மனோஜ் " அமீர் பாத்திரத்தில் நான் நடிக்கலை படம் பெரிதாக இருந்ததால் - ரெண்டு பாகமாக பிரித்து விட்டார் அமீர் - இனியா வைத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் எடுப்பார் " என சொல்லி கிலியூட்டவே " போதுமடா சாமி" என சானல் மாறிட்டேன் !

பிலிம் பேர் அவார்ட்ஸ் 

விஜய் டிவியில் பிலிம் பேர் அவார்ட்ஸ் ஒளிபரப்பினர். சென்னையில் நடந்தாலும் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் தான் பேசினர். தொகுத்து வழங்கியது பாடகர்கள் கார்த்திக் - சின்மயி.

எங்கேயும் - எப்போதும் அஞ்சலி ஸ்ரீ ராம ராஜ்ஜியம் நயன் என பல சரியான தேர்வுகள் இருந்தாலும் தெய்வ திருமகனுக்கு விக்ரமிற்கு கொடுத்தது தான் பெரிதும் உறுத்தியது ! எப்படி தான் மனசாட்சியே இல்லாமல் அப்படத்திற்கு - விக்ரமிற்கு சிறந்த நடிகர் விருது தருகிறார்களோ? காப்பி அடிப்பதை கண்டிக்காமல் மீடியாவே விருது வழங்கி பாராட்டினால் எப்படி? என்னமோ போடா மாதவா !

சூப்பர் சிங்கர் 


வெஸ்டர்ன் ரவுண்ட் என 5 நாள் பாட,  இசை அமைக்க வந்த பேன்ட் - அருமையாக வாசித்தனர். எல்லாம் 3 முடிந்து பேரை " டேஞ்சர் சோன் " என நிறுத்தி சகட்டு மேனிக்கு திட்டி, " மூவரையும் வெளியேற்றுகிறோம் " என சீன் போட்டு விட்டு " மூவருமே படு கேவலமாய் - பாடியதால் யார் மோசம் என முடிவு செய்ய முடியலை - எனவே மூணு பேரும் அடுத்த ரவுண்ட் போங்க " என கூறி விட்டனர். அடங்கொன்னியா ! 40 வார நிகழ்ச்சியை 50 வாரம் ஆக்க செய்கிற வேலை இதெல்லாம் !

நல்ல நிகழ்ச்சி - மந்திரம் ஒரு தந்திரம் 

ஞாயிறு காலை 10.30 மணிக்கு ஜெயா டிவி யில் ஒளிபரப்பாகிறது " மந்திரம் ஒரு தந்திரம்" என்கிற மேஜிக் நிகழ்ச்சி. தயா என்கிற இளைஞர் கோட் சூட் எல்லாம் போட்ட படி கடந்த 2 வருடமாக இந்த நிகழ்ச்சி நடத்தி வருகிறார்

ஒரு பொருளை உங்களிடம் கொடுத்து விட்டு பின் இன்னொருவரிடம் இருந்து அதை எடுப்பது, உங்கள் கையிலிருந்து லிங்கம் வரவைப்பது, பிளேயிங் கார்ட் வைத்து நிறைய விளையாட்டுகள் ... என்று செல்லும் இந்த நிகழ்ச்சி குட்டிசுக்கு மட்டுமல்ல, பெரியார்களுக்கும் கூட நிறையவே பிடிக்கலாம் !

அசத்தல் அரங்கம் 

சானல் மாற்றி கொண்டே வரும்போது கேப்டன் டிவியில் "அசத்தல் அரங்கம்" கும்பகோணத்தில் நடக்க " அட நம்ம ஊராச்சே " என பார்த்தேன்.

குடந்தையின் பெருமைகள் என 5 நிமிடம் பேசினார் ...அடடா ..மகாமகம் துவங்கி, தாராசுரம் கோவில், டிகிரி காபி, ஆலங்குடி குருஸ்தளம் என அடுக்கி கொண்டே போக - அட என பெருமையாக இருந்தது.

நாளைய இயக்குனர்

தொடர்ந்து பார்க்க விரும்பும் ஆனால் எப்போதேனும் மட்டுமே பார்க்க முடியும் நிகழ்ச்சி இந்த சீசனில் இயக்குனர்கள் சிம்புதேவன் மற்றும் " பசங்க"பட இயக்குனர் பாண்டிராஜ் நடுவர்களாக உள்ளனர். இருவரும் பட டீமை காயப்படுத்தாது மென்மையாய் தங்கள் கருத்துகளை பதிவு செய்கிறார்கள்

ஆனால் செட் துவங்கி, நடத்தும் கீர்த்தி சொல்லும் டெம்பிளேட் வார்த்தைகள், கோட் அணிந்த இயக்குனர்கள் என அனைத்தும் மிக monotonous - ஆக உள்ளது. வித்யாசமான ஒரே விஷயம் குறும்படங்கள் மட்டுமே. மற்றவை டிட்டோ !
இவ்வாரம் விளையாட்டு மற்றும் பாண்டசி கதைகள் 3 ஒளிபரப்பினர்.

நெல்லு சோறு என்கிற கதை - வறுமையின் காரணமாக - அரிசி சோறு கிடைக்காத பெண் - கடவுளிடம் சென்று வேண்ட, விருந்தாடிகள் வந்தால் தான் அரிசி சோறு என்பதால் ஒவ்வொரு முறையும் கடவுள் ஒவ்வொரு விருந்தாளி உருவில் வருகிறார். பின் பள்ளிகளில் இலவச மதிய உணவு தர துவங்கியதும் , அவளை பள்ளியில் சேர்க்கிறார் அம்மா.

கடைசியில் மெசேஜ் எல்லாம் திரும்ப திரும்ப சொல்லாமல் சிம்பிள் ஆக முடித்திருக்கலாம் ...... மற்றபடி  Good !

***********
அண்மை பதிவு


உணவகம் அறிமுகம் - ரத்னா கபே , வேளச்சேரி

Monday, July 1, 2013

தொல்லைகாட்சி: வாரண்ட் குறும்படம் -ஸ்டுவர்ட் லிட்டில்- பெண்ணோவியம்

பார்த்த குறும்படம் - வாரண்ட்

விஜய் அவார்ட்சில் விருது வாங்கிய "வாரண்ட்" அப்போது ஒளிபரப்பவில்லை; எதோ ஒரு நாள் இரவு 11.30 மணிக்கு விஜய் டிவி யில் ஒளிபரப்பினர்.

கதை இது தான்: போலிசால் தேடப்படுகிறான் ஒருவன். நண்பன் ஒருவன் அவனுக்கு அடைக்கலம் தந்திருக்கிறான். அவனது காதலி (சிபி பாஷையில் 20 மார்க் பிகர்) வீட்டில் பிரச்சனை என கிளம்பி இவனை காண வருகிறாள்.

போலிஸ் இன்னொரு நண்பனை பிடித்து மிரட்டி- அவனை போன் செய்ய வைத்து குற்றவாளியை வளைத்து பிடிக்கிறது.

அந்த பெண் சென்னை வந்து இவனுக்கு போன் செய்ய, அப்போது அவன் போலி ஜீப்பில் சென்று கொண்டிருக்கிறான்

இது தான் கதை ! நான் ரொம்ப கஷ்டப்பட்டு புரிஞ்சுகிட்டு எளிமையா (!!!??) சொல்லிருக்கேன். கலைஞர் டிவியில் வாரா வாரம் இதை விட பல நல்ல கதைகளை பார்த்திருக்கோம் !



நல்ல நிகழ்ச்சி - ஊர் சுற்றலாம் வாங்க 

ஞாயிறு மதியம் 12 மணிக்கு மக்கள் டிவி யில் வருகிறது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சி. வார நாட்களில் " சொல்லி அடி " என தமிழ் வார்த்தைகளை வைத்து போன் செய்யும் மக்களை கேள்வி கேட்கும் அதே சித்ரா தான் (அம்மணி நல்ல அழகு !) இந்த நிகழ்ச்சியும் நடத்துகிறார்

சென்னையின் பல்வேறு இடங்களை நமக்கு அறிமுகம் செய்து, நமக்கு தெரிந்த இடங்கள் பற்றி தெரியாத பல விஷயம் சொல்கிறார்கள். நிச்சயம் பார்க்க தகுந்த நிகழ்ச்சி

ஜெயா மேக்ஸ், முரசு, சன் லைப் சானல்கள்

ஒவ்வொரு சானலும் இப்போது பாடல்களுக்கென்று - ஒன்றுக்கு மேற்பட்ட சானல்கள் வைத்துள்ளன. சன் மியூசிக்கில் பெரும்பாலும் சற்று புது பாடல்கள் வருகிறது -என்றால் பழைய பாடல் பிரியர்களுக்காக அவர்களே சன் லைப் சானல் வைத்துள்ளனர். கலைஞர் டிவியும் இசையருவி தாண்டி முரசு சானல் துவங்கியுள்ளது

பழைய மற்றும் 80- களில் வெளியான ராஜா பாடல்களை இந்த சானல்கள் விளம்பரங்கள் அதிகமின்றி ஒளிபரப்புகின்றன. ரேடியோ போல இந்த சானல்களை வைத்து விட்டு, தொடர்ந்து பாடல் கேட்டபடி நம்ம வேலையை பார்க்கலாம் !

பார்த்த படம் - ஸ்டூவர்ட் லிட்டில்

ஸ்டூவர்ட் லிட்டில் சீரிஸ் மிக பிரபலமான ஒன்று. ஒரு சிறுவன் அவனுக்கு தம்பியாக ஒரு சின்ன எலி (ஆம் பேன்ட் சட்டை எல்லாம் போட்ட கார்ட்டூன் எலி.. !) இவர்களின் குறும்புகள் தான் கதை

இந்த வாரம் சன் டிவி -யில் இதன் முதல் பாகம் ஒளிபரப்பானது. பெண்ணுடன் அமர்ந்து சிரிக்க சிரிக்க பார்த்தேன். ரொம்ப ரசித்தது - வீட்டில் வளரும் பூனையை தான் ! அது பேசும் மெட்ராஸ் பாஷை தமிழாகட்டும், எலியை சாப்பிட முடியாமல் புலம்புவதாகட்டும் அமர்க்களம் ! இதில் அதன் சக நண்பர்களான பூனைகள் விடும் டயலாக் எல்லாமே செம சிரிப்பு வர வைத்தது.

ஸ்டூவர்ட் லிட்டிலின் ரசிகராக்கி விட்டது இந்த குட்டீஸ் படம் !

ஜோடி சீசன்.. 

விஜய் டிவியின் டான்ஸ் ஷோவில் இந்த வாரம் அம்பிகா - ராதா இருவரும் நடுவர்களாக வந்தனர். அம்பிகாவின் அலட்டல் ஓவர் ! சரோஜா தேவி மாதிரி என சொல்லி விட்டு என்னமோ மாதிரி அவர் முகபாவம் காட்ட DD -யோ உங்களை மாதிரி யாரும் நடிச்சதில்லை என வஞ்ச புகழ்ச்சி அவிழ்த்து விட்டார்

அடுத்த வாரம் எல்லாரும் ஜோடி மாற்றி ஆடனுமாம் ! " உங்களுக்கு எந்த ஆள் வேணும்" என கேட்க " எனக்கு இவர் தான் வேணும்" என ஆள் ஆளுக்கு "தங்கள் விருப்பத்தை " தெரிவித்தனர் (என்னமா உதவி பண்றாங்கப்பா !!)

ஆனந்தி சற்று கிளாமராக ஆடினார் . அவர் எப்ப ஆடுவார் என காத்திருந்தால், " எங்க கிட்டே இருக்கிறது அழகான ஒரே ஒரு பொண்ணு தாண்டா " என கடைசி ஆளாக ஆட வைத்தனர் !


பெண்ணோவியம்

சானல் மாற்றி கொண்டே செல்லும்போது வசந்த் டிவியில் - பெண்கள் குறித்தான நிகழ்ச்சி வர ஹவுஸ் பாஸ் அப்படியே நிறுத்தி விட்டார்

பெரிய ஷாப்பிங் மாலில் சென்று பெண்களுக்கான உடை உள்ளிட்ட அனைத்து ஆக்சசரிஸ் வாங்குகிறார்கள். ஒவ்வொரு துணிக்கும் அதற்கு ஏற்ற கலரில் - பேக், செருப்பு, வளையல் என அனைத்தும் ஷாபிங் செய்வதை காட்ட " பாத்தீங்களா? பாருங்க.. எப்படி ஷாப்பிங் செய்யுறதுன்னு காட்டுறாங்க பாருங்க. பாத்து தெரிஞ்சுக்குங்க ; அப்பவாவது இதே மாதிரி வாங்கி தர்றீங்களா பாப்போம் " என்றார்

நானும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு " நல்லாருக்கு " என சொல்ல " எது துணியா? Bag -ஆ ? "

" இல்லை அந்த பொண்ணு " என்று பதில் சொல்லி வாங்கி கட்டி கொண்டேன்

நீதி : தயவு செய்து இந்த நிகழ்ச்சி வந்தால் - சானல் மாத்திடுங்க சார் !

Friday, June 28, 2013

சமையலில் உள்ள சங்கடங்கள் -நீயா நானா நிகழ்ச்சி- ஒரு பார்வை

நீயா நானா ப்ரோமோ-வில் சமையலில் உள்ள சங்கடங்கள் என்பது தான் தலைப்பு என்று தெரிந்தவுடன் ஹவுஸ் பாஸ் " அவசியம் இந்த நிகழ்ச்சி பார்க்கணும் " என சொல்லி வந்தார்.




























ஒரு பக்கம் - சமையல் செய்வது அவசியமே என சொல்லும் பெண்கள் (இவர்கள் பெரும்பாலும் 40 அல்லது 50 வயதை கடந்தவர்கள்) ; இன்னொரு பக்கம் - வேலைக்கும் சென்று கொண்டு சமையலும் செய்வது ரொம்ப கஷ்டம் என சொல்லும் இளம் பெண்கள் (அந்த அணியிலும் ஓரிரு வயதானவர்கள் இருந்தனர்)

இருவர் சொன்ன கருத்துகளிலும் ஒப்பு கொள்ள தக்க விஷயங்கள் நிறையவே இருந்தன..

ஒரு பெண்மணி சொன்னது :

"ஒவ்வொரு வேளைக்கும் சமைக்கணும் என்பது பெரும் கஷ்டமா இருக்கு. அதிலும் என் வீட்டு காரர் நைட்டு சாப்பாடு வைக்கும் போதே " நாளைக்கு என்ன சாப்பாடு ? " என கேட்பார். செம கடுப்பா வரும். அதை விடிஞ்சதுக்கு அப்புறம் பாத்துக்கலாம் என்பேன். 2 நாள் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஊருக்கு போகலாம்னா அப்ப கூட குழம்பு, காய் எல்லாம் தயார் பண்ணி பிரிட்ஜில் வச்சிட்டு போகணும் " ( ஹீ ஹீ ... இந்த ரெண்டும் எப்பவும் அய்யாசாமியும் செய்து வாங்கி கட்டி கொள்வார் )

வேலைக்கு போகும் பெண்மணி ஒருவரின் கருத்து

" சமையலுக்கு ஆள் வச்சிட்டேன். அதனால் எனக்கு நிறைய நேரம் கிடைக்குது. பசங்க கூடவும் கணவர் கூடவும் நேரம் செலவு செய்ய முடியுது. ஒரு காபி குடிச்சிகிட்டு டிவி பார்க்க முடியுது. ஆபிசில் இருந்து வந்த உடனே அப்படியே சோர்வுடன் கிச்சனில் நுழையும் அவசியம் இல்லை. குழந்தை பசியா இருக்குமே என்று கவலை பட வேணாம். சமையல் செய்யும் பெண்மணி ஏதாவது செய்து தந்திருப்பார் "

(இந்த பெண்ணை எதிர் அணியில் பலரும் எதிர்க்க - அவர் இந்த கருத்தை பின் சொன்னார் )

" சமையலுக்கு ஆள் இருப்பதால் ஏழரை எட்டுக்கேல்லாம் வேலை முடிஞ்சிடுது; அதனால் பசங்களை சீக்கிரம் தூங்க வச்சிட்டு கணவரோட நேரம் செலவு செய்ய முடியுது. நாமளே எல்லாம் செஞ்சிட்டு போனா - அவர் "அது வேணும்னு கேட்டா, மனசு உடம்பு ரெண்டும் சோர்வா இருக்கிறதால் நோ -ன்னு சொல்ல கூடும். இப்போ அந்த பிரச்சனை இல்லை "

ரொம்ப காம்ப்ளிகேட் விஷயத்தை பூடகமா - ஆங்கிலத்தில் சொன்னார் அவர்.

எதிரணியில் ஒரு பெண்மணி யோசித்து விட்டு இப்படி பதில் சொன்னார் : " உங்களுக்கு உங்க கணவரை மயக்க ஒரு விஷயம் தான் (உடல் !) இருக்கு. எனக்கு 2 விஷயம் இருக்கு. (சமையல் + உடல் !)

அடேங்கப்பா ! நம்ம அறிவு ஜீவிகள் எல்லாம் இதுக்கு எப்படி வேண்ணா கருத்து சொல்லலாம் ! ஆனா அவர் சொன்னதில் நிச்சயம் ஓரளவு உண்மை இருக்கவே செய்யுது !

பெண்கள் சமையல் அவசிய செய்யணும் என சொன்ன பெண்கள் இப்படி கூறினர் :
## சமையல் கட்டு என்பது நம்ம ராஜ்ஜியம்; கோட்டை. அது நமக்கே நமக்கான இடம்ங்கிற பீலிங் வரும். அதை எப்படி விட்டு கொடுக்க முடியும்?

** சமையல் என்பது ஒரு பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீப். அது ஒரு கிரியேட்டிவ் அனுபவம்

## நேரத்தை பிளான் பண்ணி செய்தால் சமையலை நிச்சயம் ஈசியா முடிக்கலாம். குறிப்பா காலை நேரம் - ஒரு மணியில் எல்லா சமையல் வேலையும் முடிச்சிடலாம்

** இப்படி சமையல் அவசியம் என்று சொன்ன அதே பெண்களிடம் " உங்கள் மகள்களுக்கு சமையல் சொல்லி தந்து விட்டீர்களா? " என்று கேட்டதற்கு அனைவரும் கற்று தரலை என்றே ஒருமித்து கூறினர் ! " படிக்கிறா; அதுவே பெரிய கஷ்டம். இது வேறயா? "

" சமையல் கட்டுக்கு வந்தா, அங்கேயே உட்கார வச்சிடுவாங்க அவ முன்னேற முடியாது நான் தான் கஷ்டப்பட்டேன் அவளாவது வேலைக்கு போகட்டும்" என்று பேசினர் சமையலை ஆதரித்த அதே பெண்கள் !

****
விருந்தினராக வந்த தமிழ் செல்வனுக்கு ஏனோ உட்கார சீட் தரவே இல்லை. அவர் ஆண்கள் சமைப்பதன் அவசியம் பற்றி ஒரு புத்தகமே எழுதிருக்காராம் ! அவர் சொன்னது :

" சமையல் என்கிற விஷயம் நிச்சயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. இருவருமே அதை செய்யணும். ஆனால் முக்கால் வாசி ஆண்கள் அந்த காலம் தொட்டு சமையலில் அதிகம் உதவலை. கணவன் மார்கள் மட்டும் உருப்படியா ஏதும் செய்யாம - சும்மா உலாத்தி வந்திருக்காங்க. "

நான் அப்படித்தான் செய்யுறேன், காலை நேரம் நான் தான் சமைப்பேன். மனைவியை உள்ளே கூட விடுவதில்லை நாங்கள் சார்ந்துள்ள தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் - ஆண்கள் அனைவரும் சமையலில் பெரிதும் உதவ வேண்டும் என்று முடிவெடுத்து செயல் படுத்தியும் வருகிறோம் "

" குழம்பு வைப்பது, காய் செய்வது இவற்றை விட, மேல் வேலைகள் தான் வீட்டில் அதிகம் இருக்கும். அவற்றையும் சேர்த்து பெண்கள் செய்வது மிக மிக கஷ்டமான விஷயம் "

" ஆண் கண்டிப்பா சமைக்கணும். வெறும் உதவி என்று சொல்லி தப்பிக்க கூடாது. பெண்களை கிட்சன் பக்கமே விடாமல் முழுதும் சமைக்கிற அளவு ஆண்கள் கற்று கொள்ளணும் "
****
சரி இதில் நம் கருத்து + வேலைக்கு செல்லும் தம்பதியான நம்ம அனுபவம் எப்படி இருக்கு ?

வருடம் 365 நாளும் - 3 வேளையும் சமைக்கணும் என்பது பெண்கள் மேல் ஏற்றிய சிலுவை மாதிரி தான். (வாரம் ஒரு முறை ஹோட்டலில் வாங்கலாம் ; அது ரொம்ப ரொம்ப சின்ன அளவே; )

பல ஆண்களை சமைக்க தெரியாமலே அம்மாக்கள் வளர்த்து விடுகிறார்கள். எனக்கு திருமணத்தின் போது அடுப்பு பற்ற வைக்க கூட தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு - ஓரளவு உதவி வருகிறேன்

நாட்கள் போக போக வீட்டு வேலையில் நான் செய்யும் உதவிகள் அதிகமாக தான் ஆகிறது . ஆனாலும் எனது பங்களிப்பு 25 % தான். 75 % மனைவி தான் செய்கிறார். காரணம் எனக்கு முழுதாய் சமைக்க தெரியாததே ! எனக்கு கற்று தரும் பொறுமையும் - வேலைக்கு செல்லும் மனைவிக்கு இல்லை. மிக மெதுவாக கற்று கொள்ளும் என்னை போன்ற ஆளை திட்டினால் " நான் எதுக்கு கத்துக்கணும். நீ திட்டுறே போ " என ஓடி வந்து விடுவேன் !

துணிகள் வாஷிங் மிஷினில் போடுவது காய வைப்பது; மடித்து வைப்பது, அயனுக்கு தந்து வாங்குவது

பெண்ணின் படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகள் - பாடம் சொல்லி தருவது - பள்ளிக்கு கூப்பிட்டால் செல்வது

வெங்காயம் - பூண்டு போன்றவை உரிப்பது ; கட் செய்வது

காலை சமையல் முடித்து விட்டால் - மூவருக்கும் எடுத்து வைத்து பேக் செய்வது
அவசரத்துக்கு இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தயார் செய்வது (மாவு ரெடியாய் இருக்கணும் !)

போன்றவையே நான் செய்யும் வேலைகள் !

இது மிக குறைவு தான் ! இன்னும் நிறைய உதவணும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. ம்ம் பார்க்கலாம் ..
**********
நீயா நானாவில் வெற்றி பெறுவோரை " மஞ்ச சட்டை போட்டவருக்கு பரிசு; சிகப்பு புடவை கட்டிய பெண்மணிக்கு பரிசு " என்கிற ரீதியில் சொல்வதேன்.. பெயர் சொல்லி பரிசு தர கூடாதா என ஆதங்கப்பட்டு எழுதியது நினைவிருக்கலாம் ! இந்த எபிசோடில் பரிசு பெறுவோரை பெயர் சொல்லி அழைத்ததை காண ஆச்சரியமாய் இருந்தது ! (பெரும்பாலும் இப்போதெல்லாம் கடைசி வரை பார்ப்பதில்லை மற்ற எபிசோடில் இது தொடர்கிறதா தெரியவில்லை )
**********
இந்த எபிசொட் பார்க்காதவர்கள்க்கு முழுதாக இதோ ....

Wednesday, June 26, 2013

தொல்லைகாட்சி- அகரம் சூர்யா- ஆபிஸ் சீரியல் -ஹரிதாஸ்


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

இந்நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் பிளாப் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் போதும். முன்பெல்லாம் சினிமா நடிகர்கள் எப்போதோ ஒரு முறை தான் நிகழ்ச்சிக்கு வருவர். இப்போது வாரம் ஒரு சினிமா நடிகர் வருகிறார். அதுவும் அந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்று சொல்லாமல் " இந்த வாரம் 8 மணிக்கு " என்று அரை மணிக்கொரு முறை விளம்பரம் போட்டு - கெஞ்சுகிறார்கள். நடிகர் சூர்யாவிற்கு அடுத்து வர உள்ள சினிமா பிரபலம் ஹன்சிகா !

சூப்பர்ப்... எக்சலண்ட்.. வொண்டர்புல்.. அப்படின்னு பிரகாஷ் ராஜ் அடிக்கடி சொன்னாலும் நிகழ்ச்சி பத்தி அப்படி சொல்ல முடியலை. கொட்டாவி வர வைக்கும் தரத்தில் தான் இருக்கு !

சூர்யாவின் அகரம் செயல்பாடுகள் மற்றும் அதனால் பயனடைந்தோர் பற்றிய பகுதி மட்டும் நெகிழ்ச்சி !

ஐ. சி. சி பைனல்

இங்கிலாந்தில் இம்முறை டோர்னமென்ட் வைத்தது அநியாயம் ! மழையால் பல மேட்ச்கள் பாதிக்கப்பட்டு விட்டன. பைனலை முடித்தே ஆகணும் என எதோ ஒரு விதமாய் முடித்து வைத்தனர்.அடிக்கடி மழை வந்து குறுக்கிட்டதால் வெறுத்து போய் ஆப் செய்து விட்டு தூங்க போயாச்சு. மறுநாள் ஹை லைட்ஸ் பார்த்து தான் தகவல்கள் அறிய முடிந்தது . இனி இங்கிலாந்தில் உலக கோப்பை - அது இதுன்னு பேசட்டும் - ராஸ்கோல்களா !!

சீரியல் பக்கம் - ஆபிஸ்

அண்மையில் ஓரளவு பிரபலமான சீரியல் இது தான் போலிருக்கு. ஆபிசில் வேலை செய்வோர் பலர் நிகழ்ச்சி பார்த்து ஜொள்ளு விடுவதாக நம்பமுடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன



நான் பார்த்த நிகழ்ச்சியின் சாராம்சம் இது - " ஆபிஸ் டே " கொண்டாடுறாங்க. அதுக்கு ஆண்கள் வேஷ்டியிலும் பெண்கள் புடவையிலும் வர்றாங்க. ஹீரோவோட பெண் மேனேஜர் புடவை கட்டாம வர,  ஹீரோ போயி " ஏன் புடவை கட்டலை?" என கேட்கிறார். " ஒரு பிரச்சனை; அதான் கட்டலை " என்கிறார் பெண் மேனேஜர். பெண்கள் இப்படி சொன்னால் நாம அத்தோட பெண்கள் சமாசாரம் என அதிகம் கேட்காமல் விலகிடுவோம். ஆனா ஹீரோ " என்ன பிரச்சனை என தோண்டி துருவி கேட்கிறார். " அயன் செய்த போது புடவை கிழிஞ்சுடுச்சு என மேனேஜர் சொன்னபோதும் நம்பாமல் " எங்கே புடவையை காட்டு " என்று சொல்ல, அவரும் எடுத்து காட்டுகிறார்

அடுத்து ஹீரோவையே அந்த பெண் " எனக்கு ஒரு புடவை வாங்கி வா " என்று கேட்க, ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிக்கும் ஹீரோ - இந்த அம்மணிக்கு புடவை வாங்கி வர ஓடுகிறார் (" நீயே போகலாமே; ஆபிசில் இருக்கும் பெண்களை போக சொல்லலாமே" என்று கேள்விகள் கேட்க மறக்க வில்லை)

இன்னோர் பக்கம் சேல்ஸ் டீமில் இருப்போர் - கோடு போட்ட அண்ட்ராயர் தெரிகிற மாதிரி வேஷ்டியை தூக்கி கட்டிய படி ஆபிசினுள் நடந்து வர..

ஹலோ.... ஹலோ.. எங்க சார் ஓடுறீங்க !

சூப்பர் சிங்கர் கார்னர்

கிராமத்து திருவிழா என சென்ற வாரம் முழுதும் - நாட்டுபுற பாடல்கள் பாடினர்.

நண்பர் சௌம்யன் கூகிள் பிளஸ்சில் இப்படி சொல்லியிருந்தார் :

" நல்லா பாடுற பசங்களை எல்லாம் குத்தம் சொல்றாங்க. மலையாளிங்க எப்படி பாடினாலும் பாராட்டுறாங்க "

சுஜாதா பேசும் சில நேரம் எனக்கும் இதே விதமாய் தோன்றுகிறது. பார்வதி போன்ற சிலரை ஆஹோ ஓஹோ என அவர் பாராட்டுவது " நம்ம ஆள் " என்கிற எண்ணம் தான் !

இவர் இப்படி என்றால் - இன்னும் சில ஜட்ஜ்களும் கூட " நம்ம ஆள் " என்று பாராட்டும் நிலை இருக்கவே செய்கிறது (யார் என்று சொல்லாமல் உங்கள் ஊகத்திற்கு விடுகிறேன். பெரும்பாலும் நீதிபதிகளா அவங்க தான் வர்றாங்க )

மார்க் போடும் ஆட்கள் இப்படி பாரபட்சமாய் இருந்தால் அது கொடுமையான சூழ்நிலை தான் !

டிவி யில் பார்த்த படம் - ஹரிதாஸ்

ஜீ தமிழ் டிவியில் ஒரு சாதாரண ஞாயிறின் மாலையில் - எந்த பெரிய அதிரடி விளம்பரங்களும் இல்லாமல் - அண்மையில் வெளியான ஹரிதாஸ் படம் ஒளிபரப்பினர்.

படம் வெளியான போதே பார்த்திருந்த போதும் மீண்டும் ஒரு முறை பார்க்க வைத்தது - அருமையான கதையும், கிஷோர் மற்றும் சிறுவனின் நடிப்பும். நீங்கள் இதுவரை பார்க்காவிடில் இனி அடிக்கடி ஜீ தமிழ் டிவியில் போடுவார்கள். பாருங்கள்

இதே டிவியில் இன்னும் சில வெற்றி பெற்ற தமிழ் படங்களும் ஒளிபரப்பாக உள்ளது - அவர்கள் போடும் ப்ரோமோவில் தெரிந்தது !

எங்கிருந்தாலும் வாழ்க

ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நெஞ்சில் ஒரு ஆலயத்தில் இடம் பெற்ற மறக்க முடியாத பாடல் " எங்கிருந்தாலும் வாழ்க ".

இதே பெயரில் - இசை அருவியில் சற்றே சோகமான காதல் பாடல்கள் ஒளி பரப்புகின்றனர். ஒரு நாள் பார்க்க ஆரம்பித்து சானல் மாற்ற முடியாமல் தொடர்ந்து பார்த்தேன்

மன்னிப்பாயா - விண்ணை தாண்டி வருவாயா
எப்போ புள்ள சொல்ல போறே - கும்கி
போ போ போ - மனம் கொத்தி பறவை

இவையெல்லாம் அடுத்தடுத்து அவர்கள் ஒளிபரப்பிய பாடல்கள் !

இனி எப்பவாவது இந்த நிகழ்ச்சி வந்தால் பார்க்க வேண்டும் என எண்ண வைத்து விட்டது !

****
அண்மை பதிவு

ஆலப்புழா எப்போது செல்லலாம்; எங்கு தங்கலாம் FAQ

Related Posts Plugin for WordPress, Blogger...