Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, March 28, 2020

கொரோனா @ சென்னை

கொரோனா குறித்த தகவல்கள் வந்த துவக்கத்தில் அது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என நினைக்கவில்லை

இந்தியா முழுதும் மட்டுமல்ல உலகின் பல நாடுகளும் ஒட்டு மொத்தமாக லாக் அவுட் ஆகியிருப்பது சரித்திரத்தில் முதல் முறையாக இருக்கலாம் (உலக போரின் போது இப்படி மக்கள் வெளிவராமல் இருந்தனரா .. தெரியவில்லை )



ஆறுதலான விஷயங்கள்

1. இந்தியாவிற்கு மிக தாமதமாக வந்தது, மற்றவர்களிடமிருந்து நாம் ஓரளவு பாடம் கற்று கொள்ள முடிந்தது ; இருப்பினும் நமது நடவடிக்கை துவங்க சற்று தாமதம் தான்

2. பொதுவாகவே இந்நோயால் இறப்போர் எண்ணிக்கை 2 % தான் என்பது பெரும் ஆறுதல். மிக எளிதாக பரவுவது தான் பெரும் பிரச்சனை. இப்போது self quarantine செய்வது பரவுவதை ஓரளவு குறைக்கலாம்

சில குழப்பங்கள் - பிரச்சனைகள்

1. சென்னையை பொறுத்தவரை அரசு பல விஷயங்களில் மாறி மாறி அறிவிப்புகள் வெளியிடுவது பெரும் குழப்பம்.

முதலில் - மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறந்திருக்கும். பின் காலை 6 to  10 தான் திறந்திருக்கும். மறுபடி இல்லை இல்லை நாள் முழுதும் திறந்திருக்கும். இன்று மீண்டும் அதனை மாற்றி அறிவிப்பு

ஆவின் பால் காலை 10 மணி வரை மட்டுமே கிடைக்கும் என ஒரு அறிவிப்பு - பின் நாள் முழுதும் கிடைக்கும் என்று தகவல்

மக்கள் ரோட்டிற்கு வர இந்த அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை வந்து விடுமோ என்ற ஐயமே காரணம்

எங்கள் ஏரியாவில் மளிகை பொருட்கள் பல கடைகளில் விரைவாக காலியாவதால், அடுத்து எப்போது மளிகை பொருட்கள் கடைகளுக்கு வரும் என்ற கேள்விக்குறி உள்ளது. காய்கறி கிடைப்பதில் இதுவரை பிரச்சனை இல்லை

2. ரெசிடென்ஷியல் ஏரியாவில் வாகனங்கள் வழக்கமான அளவு போய் வந்த வண்ணம் உள்ளது. போலீஸ் தடுப்பதெல்லாம் மெயின் ஏரியா தான். மக்களுக்கு இன்னும் தீவிரத்தை உணர வில்லையா என்று தான் எண்ண வேண்டியுள்ளது

3. எங்கள் ஏரியாவிலேயே ஒரு வயதான பெண்மணி தனியாக அமெரிக்காவிலிருந்து ஒரு சில வாரம் முன்பு வந்துள்ளார். அவர் எந்த விதத்திலும் தனிமை படுத்த வில்லை. இது போன்று இன்னும் எத்தனை பேர் என்று தெரியவில்லை

4. ஏப்ரல் 14 உடன் இது முடியுமா என்றால் ..வாய்ப்புகள் மிக குறைவு என்று தான் தோன்றுகிறது

காரணம் .. மிக எளிதான ஒன்று. நோய் பரவல் குறைந்தால் தான் மறுபடி அனைத்தும் திறக்க முடியும். ஆனால் இந்தியா தமிழ் நாடு இரண்டு இடத்திலும் தினமும் கவுண்ட் கூடி கொண்டே போகிறது . நோய் கட்டுக்குள் வந்தால் தான் மறுபடி நார்மல் நிலை வர வாய்ப்புகள் உண்டு.


5. ஆந்திராவில் இருக்கும் நண்பர் ஒருவர் ஏராள விவசாய நிலம் அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும், அறுவடை செய்யாவிடில் நெல் முழுதும் கொட்டி விடும் என்றும் கூறினார். இது வருத்தப்படவைத்தது என்பதோடு , பின்னர் பஞ்சம் வரவும் இவை காரணமாக அமையும் என்ற ஐயமும் வருகிறது

எப்படி போகிறது பொழுது

வீட்டுக்குள் தான். அரிதாக காய்கறி வாங்க சென்றதையும் இனி குறைக்க யோசனை

சினிமா, டிவி, பாட்மிண்டன், வீட்டு மாடியில் நடை என கழிகிறது பொழுது

முடிந்த அளவு பாசிட்டிவ் ஆக இருக்க தான் பார்க்கிறோம். விரைவில் நிலைமை சரியாகவேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே .. மனதினுள் !

Monday, November 16, 2015

மழையில் திணறும் வேளச்சேரி & மடிப்பாக்கம் - படங்கள்

வேளச்சேரி ஓவர் பிரிட்ஜ் அருகே படகு சேவை.. பெரும் சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர் 

மடிப்பாக்கம்.. பெரும்பாலான வாகனங்களில் நீர் புகுந்தது.. மெக்கானிக்குகள் அடுத்த சில வாரங்களுக்கு செம பிசி 




மடிப்பாக்கம் - தரை தளத்தில் இருக்கும் பலர்  சொந்த காரர் இல்லங்களுக்கு சென்று கொண்டுள்ளனர். சில கிலோ மீட்டர் நடை.. எங்கே போய்  பஸ் அல்லது ஆட்டோ பிடிப்பார்களோ ?


சாலைகளில் ஓடும் ஆறு... தண்ணீரின் வேகத்தை பாருங்கள்.. 






வேளச்சேரி கிராண்ட் மால் அருகே 

வேளச்சேரி வெங்கடேஸ்வரா சூப்பர் மார்கெட் & நாதெள்ளா நகை கடை அருகில் 

அண்மை பதிவு:

தூங்காவனம் சினிமா விமர்சனம்

Friday, November 13, 2015

கனமழை.. எப்படியிருக்கிறது சென்னை? சென்னை வாசிகள் பேட்டி + படங்கள்

சென்னை.. மழையின் (அன்பு) பிடியில் சிக்கி தவிக்கிறது.. ஜூன் முதல் செப்டெம்பர் வரை தென் மேற்கு பருவ மழை அதிகமில்லை; இதனால் தண்ணீர் பற்றாக்குறை வருமோ என்கிற பயம் என் போன்றோருக்கு வந்து விட்டது..

அக்டோபர் மத்தியில் துவங்கும் வட கிழக்கு பருவ மழையும் தாமதம் ஆனது.. ஆனால் தீபாவளி நேரம் மழை பிச்சு உதறி விட்டது. தீபாவளிக்கு முதல் நாள் செம்ம்ம்ம மழை.. பட்டாசு வியாபாரம் டமார் ஆனது. தீபாவளி அன்று மழையின்றி குட்டி பசங்க இருந்த வெடிகளை  வெடித்து கொண்டாட, ஓரிரு நாளில் மீண்டும் கன  மழை துவங்கி விட்டது. இம்முறை சோகம் என்னவெனில் - முன்பு பெய்த மழை நீர் வடியும் முன்பே அடுத்த மழை வந்ததால் - தெருக்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன..




சென்னை வாசிகள் சிலர் சென்னை மழை பற்றி தங்கள் அனுபவம் பகிர்கிறார்கள் :

லட்சுமி 



எனது வீடு வளசரவாக்கம்; அலுவலகம் இருப்பது நுங்கம்பாக்கம் ஸ்டேர்லிங் சாலை.

தினம் பஸ்ஸில் தான் செல்வேன். இன்று மழை அதிகம் என ஆட்டோ முயற்சித்தேன். ஒருவரும் வரவில்லை; அடுத்து கால் டாக்சி எடுக்க முயல, ஓலா, Uber, TaxiForSure என யாருமே கார் அனுப்ப தயாராய் இல்லை.

TaxiForSure 30 % டிஸ்கவுன்ட் தருவதாகவும், இந்த டிஸ்கவுன்ட் இன்று ( 13 நவம்பர்) வரை மட்டுமே என்றும் அறிவித்திருந்தது. ஆனால் கூப்பிட்டால் கார் வரவில்லை !!

வேறு வழியின்றி பஸ்ஸில் செல்ல முடிவு செய்தேன். வழக்கமாய் கிளம்புவதை விட 15 நிமிடம் சீக்கிரம் 8.45க்கு கிளம்பியும், 11 மணிக்கு தான் அலுவலகம் வர முடிந்தது. ( 3 மடங்கு அதிக நேரம் !!)

வரும் வழியில் சாலைகள் எங்கிலும் தண்ணீர்.. தண்ணீர்.. தண்ணீர். பஸ்ஸில் செல்கிறோமா அல்லது Underwater விளையாட்டு விளையாடுகிறோமா என சந்தேகம் வந்துவிட்டது..



வடபழனி, கோடம்பாக்கம் பாலம் இவற்றை தாண்ட நீண்ட நேரம் ஆகிறது. மேலும் அலுவலகம் இருக்கும் ஸ்டேர்லிங் ரோடு தாழ்வான பகுதி... எனவே நீச்சல் குளம் போல் தண்ணீர். இதில் பல இடங்கள் தண்ணீர் செல்ல ஓட்டைகள் திறந்து வைக்க பட்டிருக்க அவற்றில் விழாமல் வருவது பெரும் சோதனை.. கிட்டத்தட்ட அப்படி ஒரு பள்ளத்தில் விழ வேண்டியது.. எப்படியோ தப்பி அலுவலகம் வந்தேன் !

சரஸ்வதி பிரியதர்ஷினி 



முகப்பேர் இல்லத்திலிருந்து புழலில் இருக்கும் அலுவலகத்திற்கு - ஆபிஸ் காரில் வருவது வழக்கம். ஆபிஸ் கார் என்பதால் - தவிர்க்க முடியாமல் கார் வந்து விட்டது. வீட்டிலிருந்து கார் பிக் அப் செய்யும் இடம் வரை தினம் ஆட்டோவில் வருவேன்; இன்று எந்த ஆட்டோவும் வர தயாராய் இல்லை; ரொம்ப கஷ்டபட்டு ஒரு ஆட்டோ காரரை சம்மதிக்க வைத்தேன் (ம்ம்ம் ! டபிள் ரேட் தான் !!)

நாங்கள் கார் ஏறும் திருமங்கலம் ஜங்க்ஷன் கொடுமையான நிலையில் இருந்தது. வேறு இடத்தில் எங்களை அழைத்து கொள்வதாக சொல்லி விட்டு கார் டிரைவர் - அந்த இடத்திற்கு வந்தார். ஆபிஸ் வர 20 நிமிடம் வழக்கமாய் ஆகும்.. இன்று ஒரு மணி நேரம் ஆனது.. பயணத்தில் எடுத்த படங்கள் சில இதோ..

க்றிஸ்டினா



எனது அலுவலகம் - மவுண்ட் ரோடு; வீடு- கோவிலம்பாக்கம். மழை காரணமாக ஒரு வாரமாய் கால் டாக்சி மூலம் தான் சென்று வருகிறேன். இன்று ஆபிஸ் செல்ல 3 மணி நேரம் ஆனது. (வழக்கமாய்: 45 நிமிடங்கள்)



சென்னை சாலைகளை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது; தண்ணீர் தான் கண்ணுக்கு தெரிந்தது,.... சாலைகள் அல்ல.. மேலும் சாலைகளில் ஆங்காங்கே பல Pathholes திறந்து கிடப்பதை காண அதிர்ச்சியாக இருந்தது.

போலவே பணக்காரர்கள் ஏரியா என கருதப்படும் கோட்டூர் புரத்தின் கொடுமையான மறுபக்கத்தை இன்று கண்டேன்..  !

அம்பரீஷ் 



வேளச்சேரியில் வீட்டிலிருந்து கிண்டியில் உள்ள ஆபீசுக்கு பைக்கில் தான் செல்வேன். இன்று மழை அதிகம் என்பதால் காரில் செல்லலாம் என எண்ணி முயன்றால் - எந்த கால் டாக்சியும் வர தயாராய் இல்லை.

வேறு வழியின்றி பைக்கில் சென்றேன்.. நீந்தி சென்றேன் என்று தான் சொல்லவேண்டும்..



15 நிமிட பயணம் - இன்று ஒரு மணி நேரம் ஆனது. சாலைகளில் மழை  நீர் ஓடும்போது, அப்படி ஓடாத சாலைகளாக பார்த்து நீங்கள் மாறி மாறி பயணிக்க வேண்டும்.. இதனாலும், அதிக ட்ராபிக் - காரணமாகவும் - பயண நேரம் அதிகமாகிறது

சென்னையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேற போதுமான அளவு வசதிகள் இல்லை. இது தான் மழை நீர் அதிகம் தேங்க காரணம். இப்படி மழை நீர் தேங்கும் போது, அதில் கழிவு நீர் (Drainage water) சேர்ந்து கொள்ள, தோற்று நோய்கள் பரவும் வாய்ப்பு மிக அதிகம்..

கிண்டி மற்றும் ஆதம்பாக்கம் NGO காலனி போன்ற இடங்களில் மரங்கள் விழுந்து கிடப்பதால் - பைக்கில் மட்டுமல்ல காரில் செல்வோரும் கூட - பாதிக்க படுகின்றனர்.

மிக  அதிகம் பாதிக்க படுவது நடந்து செல்வோர் தான். திறந்து கிடக்கும் ஓட்டைகள், மின்சார ஒயர்கள் இருக்குமோ என்ற பயம் வேறு..

ட்ராபிக் போலிசை பெரிதும் குறை சொல்ல முடியாது. மழையில் நின்ற படி - முடிந்த வரை சரியான பாதைகளை சொல்லி தான் அனுப்புகிறார்கள்.

தெருவில் வசிக்கும் விலங்குகள் நிரம்ப பாதிக்க படுகின்றன. அவற்றிற்கு இந்த நேரம் சாப்பிட எதுவும் கிடைப்பதில்லை. சில நாள் முன் நான் மழையில் செல்லும் போது - ஒரு பைக் ஓட்டி - ஒரு பூனை மீது ஏற்றி விட்டு நேரே சென்று விட்டார். தலையில் நல்ல அடி.. பின்னாலேயே வந்த நான் - அதனை ப்ளூ க்ராஸ் எடுத்து சென்றும் அந்த பூனை இறந்து விட்டது. மழையும் காரணமாக இத்தகைய விபத்துகள் - மனிதர்களுக்கும் நடக்கிறது

வேளச்சேரி- தரமணி லிங்க் ரோடு - படகு விடும் நிலையில் தான் உள்ளது; இன்னும் முன்னேற்றம் இல்லை

Velachery- Tharamani link Road...

மிக முக்கியமாக சொல்ல  வேண்டியது - சென்னையில் டிரைனேஜ் சிஸ்டம்- இதனை நாம் இம்ப்ரூவ் செய்தே ஆக வேண்டும்.. இது தான் மழையின் போது வரும் தொந்தரவுகளுக்கு  நல்ல தீர்வை தரும். .
************

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் ! (Thanks: Tamil Hindu - For this part...)


தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் அறிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

தெற்கு அந்தமானில் நிலை கொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் வங்கக்கடலில் தென் கிழக்கே நிலை கொண்டது. இந்த தாழ்வு நிலையானது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். என்பதால் தமிழகத்தில் மழை தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புழல் பகுதியில் 21 செ.மீ, மீனம்பாக்கத்தில் 15 செ.மீ., தரமணி, கொலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது." என்றார்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை:
அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும். சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
***********
தொடர்புடைய பதிவு:

சென்னை மழை: நவம்பர் 2015... பல்வேறு இடங்கள்.. பிரத்யேக படங்கள்..

அண்மை பதிவு:

வேதாளம் - விமர்சனம் 

சென்னை மழை: நவம்பர் 2015... பல்வேறு இடங்கள்.. பிரத்யேக படங்கள்..

மடிப்பாக்கம்

RK நகர் (வட சென்னை)


பேருந்திற்கு காத்திருக்கும் மக்கள் 


முகப்பேர் அருகே 


வேளச்சேரி - தரமணி லிங்க் ரோடு 

மேற்கு மாம்பலம் 


பல்வேறு இடங்களில் சாலைகள்/ பாலங்கள் நிலை குறித்த தனி பதிவு இதோ ..

கனமழை.. எப்படியிருக்கிறது சென்னை?  சென்னை வாசிகள் பேட்டி + படங்கள் . 

அண்மை பதிவு:

வேதாளம் - விமர்சனம் 
Related Posts Plugin for WordPress, Blogger...