Monday, January 30, 2012

வானவில் 73- வேட்டை சினிமாவும் பதிவர் அமைதி அப்பாவும்

பார்த்த படம் - வேட்டை


வேட்டை குறித்து இரு வேறு extreme-களில் விமர்சனம் வருகிறது. சிலர் மொக்கை என்று சொல்ல, வேறு சிலரோ "ஜாலியோ போகுது; வெரி நைஸ் " என்கிறார்கள். நிஜம் இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ளது. வேட்டை ஜஸ்ட் டைம் பாஸ் படம். படத்தின் ஹீரோ ஆர்யா தான் ! அனைத்து பாட்டு + சண்டை ஆர்யாவுக்கு தான். இதனாலேயே மாதவன் கிட்ட தட்ட செகண்ட் ஹீரோ மாதிரி வருகிறார். படத்தின் பெரும் ஆறுதல் அமலா பால் ! பெரும் எரிச்சல் சமீரா ரெட்டி. இந்த ரெட்டி பையனை வைத்து கொண்டு கௌதமும் லிங்குசாமியும் எவ்வளவு நாள் தான் அழுவார்களோ? ஏகப்பட்ட க்ளோஸ் அப்பில் முடியலடா சாமி ! இயக்குனர்களுக்கு பத்திரிக்கை மற்றும் இணையம் படிக்கும் வழக்கமே இல்லையா? அனைத்து ஊடகங்களும் சமீரா ரெட்டி குறித்து ஒரே மாதிரி எழுத, இன்னும் எப்படி அவர் பல படங்களில் இடம் பிடிக்கிறார் என்பது புரியாத புதிரே.

காஞ்சி கோயில் குறித்த பதிவில் சிறு திருத்தம்

நண்பர்களே காஞ்சி கோயில்கள் குறித்த சென்ற பதிவில் சிறு தவறு நிகழ்ந்து விட்டது. கச்சபேஸ்வரர் கோவில் என சொல்லிவிட்டு வேறு கோயிலின் வீடியோ இணைப்பை தந்து விட்டேன். நண்பர் வெங்கட் நாகராஜ் சொன்ன பின் தான் தவறு தெரிந்து, இப்போது சரியான இணைப்பு தந்துள்ளேன். கச்சபேஸ்வரர் ஆலய வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு...ஒரு நிமிடத்துக்கும் குறைவான அளவு நேர வீடியோ தான் இது.

துவக்கத்தில் நாதஸ்வரம் வாசிக்கும் அந்த கலைஞர், இறுதியில் வாசிப்பை நிறுத்தி விட்டு தீபாராதனை பார்க்க போவது வீடியோ கடைசியில் தெரியும்



மனதை பாதித்த மரணம் 

சக கம்பனி செகரட்டரி ஒருவரின் மரணம் இந்த வாரம் மனதை மிக பாதித்தது.  72-வயதான பிபின் ஆச்சாரியா என்கிற அந்த பெரியவரை நான் சந்தித்ததே இல்லை. எங்களுக்கென்று தனியே யாகூ குழுமம் உண்டு. அதில் இந்தியா முழுதும் உள்ள கம்பனி செகரட்டரிகள் தினம் உரையாடுவோம். தத்தம் சந்தேகங்களை தெளிவு செய்து கொள்ளுவோம். அதில் இவர் activeஆக இருப்பார். மிக இளையவர்களின் வெகு சாதாரண சந்தேகங்களை கூட தெளிவாய், விரிவாய் விளக்குவார். இத்தனைக்கும் எங்கள் Institue-ல் பெரும் பதவியில் முன்பு இருந்தவர் அவர். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். இருவரும் வேலை, திருமணம் என செட்டில் ஆகி விட்டனர். பாரலிசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியை மிக பத்திரமாய் பார்த்து வந்தவர். கம்பனி செகரட்டரிகளுக்கான சில உரிமைகளுக்காக மிக போராடி வந்தவர். 

சினிமா தியேட்டர் சென்று படம் பார்க்கும் போது ஹார்ட் அட்டக் வந்து இறந்து விட்டார். அவர் இறந்த செய்தி அவர் மெயிலில் இருந்தே எங்களுக்கு செய்தியாக வந்தது ! அவர் மகன் தான் அனுப்பி இருந்தார். நேரில் அவரை இதுவரை பார்க்கவிடினும் மிக வருத்தமாய் இருந்தது. அவருடன் Forum-ல் பல முறை விவாதம் செய்யும் என் சென்னை நண்பர் ஒருவர் அழுது ஓய்ந்து பல முறை எனக்கு போன் செய்து மாய்ந்து மாய்ந்து போனார். அவர் இறந்த பிறகு தான் பலரும் அவரை பாராட்டி எழுதினோம். அவர் இருந்த போதே எழுதி இருந்தால் அவராவது படித்து மகிழ்ந்திருப்பார் :(( 

ரசித்த கவிதை  

ஐயோ !

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்

அற்புத உலகம்
அற்புத மாக்கள்.
-ஆத்மா நாம்

போட்டோ கார்னர்/ சென்னை ஸ்பெஷல் 

சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் எஸ். ராம கிருஷ்ணனை சந்தித்தது குறித்து எழுதியது நினைவிருக்கலாம். அவரை சந்திக்க அவசரமாக வண்டியில் செல்லும் போது இந்த சிலையை கண்டேன். கையில் காமிரா இருந்ததால், அந்த அவசரத்திலும் நிறுத்தி புகைப்படம் எடுத்தேன். கோவிலும் சிலையும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ளது.
 

சென்னையில் மாடர்ன் அடையாளங்களில் ஒன்றான கத்திபாரா பாலத்திற்கு மிக அருகில், கிராமத்தில் இருப்பது போல் இத்தகைய சிலை இருப்பது எவ்வளவு ஆச்சரியம் பாருங்கள் ! விசாரித்த போது கிராமத்து கோவில் என இதை காண்பித்து அவ்வப்போது சினிமா ஷூட்டிங் நடக்கும் என்றார்கள் !அந்த இடமே இன்னும் நிஜ கிராமம் போல் தான் உள்ளது !

350- தொடர்வோரும் தமிழ் மணம் டாப் 20-ம் 

பதிவெழுதுவதில் அவ்வப்போது சில மகிழ்ச்சிகள் கிட்டவே செய்கின்றன. வீடுதிரும்பலை தொடர்வோர் 350 என்கிற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இருநூறு தொடர்வோர் சேர்ந்தது சென்ற ஆண்டு ஜனவரியில் - இது அப்போது எழுதிய வானவில் மூலம் தெரிகிறது. சென்ற ஜனவரி முதல் இந்த ஜனவரி வரை ஓராண்டில் 150 பேர் சேர்ந்துள்ளனர். நினைத்தால் மலைப்பாய் தான் உள்ளது. இது தவிர 2011-ல் தான் இன்ட்லியில் தொடர்வோர் வசதி வந்தது. அதிலும் 140க்கும் மேற்பட்ட நண்பர்கள் தொடர்கிறார்கள். மகிழ்ச்சி.

சென்ற வார தமிழ் மணம் டாப் 20-ல் வீடு திரும்பல் 9-ஆம் இடத்தில். இது நீயா நானா என்கிற பதிவு செய்த வேலை. நன்றி நண்பர்களே !

பதிவர் அமைதி அப்பாவுடன் ஒரு சந்திப்பு
குடியரசு தினத்தன்று ACS Institute நடத்தும் ஒரு மீட்டிங்குக்கு குரோம்பேட்டை செல்ல வேண்டியிருந்தது. அமைதி அப்பா நீண்ட நாளாக "எங்கள் வீட்டுக்கு ஒரு முறை வாருங்கள்" என அன்புடன் அழைத்து வந்தார். " இம்முறை வருகிறேன்" என சொல்லியிருந்தேன். மீட்டிங் நடத்தும் நான்கு பேரில் நானும் ஒருவன் என்பதால் கணக்கு வழக்கு பார்த்து விட்டு கிளம்ப மிக தாமதம் ஆகி விட்டது. சொன்ன நேரத்தை விட இரண்டு மணி நேரம் தாமதமாக செல்கிறோமே என குற்ற உணர்வாய் இருந்தது.

அமைதி அப்பா குடும்பத்தினர் தங்கள் அன்பில் திக்கு முக்காட வைத்து விட்டனர். இரவு நேரம் ஆகி விட்டதால், விரைவில் கிளம்பும் எண்ணத்தில் இருந்தேன். இருந்த 15 நிமிடத்தில் சாப்பிட்டவை சுவீட், காராசேவு, வடை, சட்னி மற்றும் காபி !! (இதுக்கே இருபது நிமிஷம் ஆகுமே? )

அம்மா- அப்பா - பையன் என்கிற மாதிரி இல்லாமல் நல்ல நண்பர்கள் மாதிரி அவர்கள் பழகும் அன்னியோனியத்தை சாபிட்டவாரே பார்த்து ரசித்தேன். அமைதி அப்பா எழுதும் பதிவுகள் அவர் மனைவி மற்றும் மகன் படித்து சென்சார் செய்த பின் தான் வெளியாகுமாம். " ப்ளாக் எழுத ஆரம்பிச்ச புதுசுல நைட் பதிவு போட்டுட்டு விடிகாலைல எழுந்து கமன்ட் வந்துருக்கானா பார்ப்பார் " என்றார்கள். " ஏன் சார் இப்படி எல்லாம் பண்றீங்க" என்றேன். நானும் அப்படி செய்த கதையை மறைத்து !

கிளம்பும் போது, எங்கள் வீட்டுக்கு பாதி வழி வரை அவரும் கூடவே பைக் ஓட்டி வந்து வழி காட்டினார். இவ்வளவும் முடித்து விட்டு அடுத்த நாள் மெயில் அனுப்புகிறார்" நீங்கள் வந்து போது நாங்கள் உங்களை சரியாக உபசரிக்க வில்லையோ என கவலையாக உள்ளது !"

இவரை என்ன பண்ணலாம்குறீங்க?

Saturday, January 28, 2012

சுஜாதாவின் விபரீதக் கோட்பாடு

சில நேரங்களில் நாவல்களின் தலைப்புக்கும் கதைக்கும் உள்ள தொடர்பை மூளையை கசக்கி கொண்டு தேட வேண்டும். ஆனால் இந்த நாவலுக்கு இதை விட அருமையான தலைப்பு இருக்க முடியாது.

கணேஷ்- வசந்த் நாவல்கள் பெரும்பாலும் கதாசிரியர் சொல்லும் பாணியில் தான் எழுத பட்டிருக்கும். அரிதாக இந்த நாவல் கணேஷ் பார்வையில் (நான் என்று துவங்கி கதை சொல்வதாக) அமைந்துள்ளது


கணேஷை சந்திக்க வரும் ஒரு இளைஞன், காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடித்து அவளிடமிருந்து டைவர்ஸ் வாங்கி தர சொல்கிறான். அவர்கள் இருந்த வீட்டுக்கு கணேஷ் சென்று பார்வையிட சில தடயங்கள் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து அவள் ஊட்டியில் இருக்கிறாள் என தெரிந்து அவளுடன் கணேஷ் போனில் பேசுகிறான். பின் நேரில் சந்திக்க செல்ல, அவள் அதற்குள் கொலை செய்ய படுகிறாள். அந்த கொலையை செய்தது யார் என கணேஷ்- வசந்த் கண்டு பிடிப்பது தான் கதை.

நாவலை எடுத்தால் கீழே வைக்காமல் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். அவ்வளவு விறுவிறுப்பு. நமக்கு யார் மீது சந்தேகம் உள்ளதோ அது சரியாகவே உள்ளது. ஆனால் அவள் வீட்டை விட்டு ஓடியதும், கொலைக்கான காரணங்களும் தான் நாம் நினைக்க முடியாத படி இருக்கும்.

பெண்களை வசந்த் பார்வையில் வர்ணிக்கும் சுஜாதா ஸ்டெயில் அப்படியே !! உதாரணமாய் " அவள் ஆண்பிள்ளை மாதிரி பனியன் அணிந்திருந்தாலும், பெண் என்பதற்கான அடையாளங்கள் நிறையவே தெரிந்தன.. நிறையவே" ஆண்கள் பலரும் இதனை வாசித்து சிரிப்பார்கள் என்றாலும் பெண்கள் இதனை வாசிக்கும் போது என்ன நினைப்பார்கள் என தெரியலை.

கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டேன் என இருப்பவனிடம் எதோ ஒரு தவறு உண்டு என அவ்வப்போது சொல்வார் சுஜாதா ! இந்த கதையிலும் அக்கருத்து அடி நாதமாக தெரிகிறது.


பெண்ணை வசியபடுத்தி படமெடுக்கும் விஷயத்தை அவர் எழுபதுகளின் துவக்கத்தில் எழுதியது ஆச்சரியமாக உள்ளது. பின்னாளில் ப்ரேமானந்தாக்களும், நித்யானந்தாக்களும் அடித்த லூட்டியை பல வருடங்களுக்கு முன்பே எழுதி விட்டார் வாத்தியார் !

ஒரு சுவாரஸ்யமான திரில்லர் கதையை சுஜாதா நடையில் கணேஷ்- வசந்த் என்கிற சுவாரஸ்யத்துடன் வாசிக்க விருப்பம் எனில் இந்த புத்தகத்தை நீங்கள் நாடலாம்.

நாவல்: விபரீத கோட்பாடு
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 60

டிஸ்கி: நாவலை வாசித்துவிட்டு எனக்கு பார்சல் செய்த நண்பர் ரகுவிற்கு நன்றி !

Friday, January 27, 2012

காஞ்சி: சித்ரகுப்தனுக்கு கோயில் !! எந்த திசையில் தீபம் ஏற்றவே கூடாது?

காஞ்சிபுரம் குறித்த இந்த தொடருக்கு உங்கள் தொடர் ஆதரவு ஆச்சரிய படுத்துகிறது. "கோயில்கள் குறித்த பதிவு நிறைய பேர் வாசிக்க மாட்டார்கள்" என்று சொன்ன அய்யாசாமிக்கு செம பல்பு கொடுத்த   உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த பதிவில் காஞ்சியின் வேறு சில சிறப்பான கோயில்களையும் மற்றொரு நல்ல ஹோட்டலையும் பார்க்கலாம்

***
கச்சபேஸ்வரர் கோவில் ! இதுவும் காஞ்சி அம்மன் கோயிலுக்கு அருகே நடந்து போகும் தூரத்தில் தான் உள்ளது. இதனை ஒரு சிவ விஷ்ணு ஆலயம் என்று கூட சொல்லலாம். காரணம் முக்கிய சிவன் சன்னதிக்கு எதிரிலேயே பெருமாளுக்கும் சந்நிதி உள்ளது.

கச்சபேஸ்வரர் கோவில்
" கச்ச" என்றால் ஆமை என்று பொருள். இந்த இடத்தில், பெருமாள் ஆமை வடிவில் வந்து சிவனுக்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். இங்கு உள்ள கோயில் குளத்தில் ஏராளமான ஆமைகள் உண்டு.
கோயிலின் நுழைவு வாயில்
இந்த கோயிலில் நான் மிக ரசித்த விஷயம் ஒன்று உண்டு. சிவனை மிக வழிபட்ட வாழ்ந்து மறைந்த மனிதர்களான நாயன்மார்களுக்கு இங்கு சிலை இருப்பதுடன் அவர் எதனால் சிறப்பு பெற்றார் என்பதை ஓரிரு வரிகளில் எழுதி வைத்துள்ளனர். உதாரணத்துக்கு சில:

அதிபத்தர்: இந்த நாயன்மார் ஒரு மீனவர். கடலில் பிடிக்கும் முதல் மீன் சிவனுக்கு என்று கடலில் விட்டு விடுவாராம். இவரை சோதித்து பார்க்க ஒரு முறை முதல் மீன் தங்க மீனாக வர வைத்தாராம் சிவன். அதையும் " சிவனுக்கு" என்று சொல்லி கடலில் போட்டாராம் அதிபத்தர்.

புகழ் சோழர்: போரில் வென்ற தலைகளில் சடை முடியுடன் கூடிய தலை கண்டதும் சிவபக்தனை கொன்ற பாவம் தீர தீக்குள் புகுந்தவர்.


நாங்கள் சென்ற போது அங்கு ஒருவர் விஷ்ணு துர்கை சந்நிதி அருகே அருமையாக நாதஸ்வரம் வாசிக்க, அந்த பின்னணி இசையுடன் இந்த கோயிலை ஒரு வீடியோ எடுத்தேன் பாருங்கள்



கோபுரத்தில் அமர்ந்திருக்கும் கிளிகள்

***********
காஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். நாங்கள் சென்ற ஞாயிறு காலை செம கூட்டம் ! சிறிய கோயிலாக தான் உள்ளது.உலகிலேயே சித்திர குப்தனுக்கு கோயில் இருப்பது இங்கு தான் என்பது குறிப்பிட தக்கது







இங்கே விளக்கு ஏற்றுவது குறித்து படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

கிழக்கே தீபம் ஏற்ற - துன்பம் ஒழியும் !

மேற்கே தீபம் ஏற்ற - கடன் தொல்லை/ பங்காளி பகை நீங்கும் !

வடக்கே தீபம் ஏற்ற - திருமண தடை/ கல்வி தடை நீங்கும் !

தெற்கு திசை நோக்கி மட்டும் தீபம் ஏற்ற கூடாதாம் !!

***

மேலும் இங்கு ஸ்ரீமன் நாராயணன் வாக்கு என்று, " கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை பின் பற்றினாலே போதும்... வாழ்வில் முன்னேறலாம் !" என்று போட்டிருந்தார்கள். ஆர்வமாய் ஒன்று தானே Follow செய்தால் போச்சு என்று படித்தால், எல்லாமே பின் பற்ற கஷ்டமாய் இருந்தது.. உதாரணத்துக்கு சில..

தன்னலமற்ற சேவை

அவா விடுத்தல்

பெற்றோர் பேச்சிற்கு முழுதும் கீழ்படிதல்

*****************
சித்ர குப்தன்   கோயிலுக்கு சற்று எதிரிலேயே எமனுக்கும் கோயில் உள்ளது. நாங்கள் சென்ற காலை பதினோரு மணிக்கே பூட்டியிருந்தது. அதிகம் திறப்பதில்லை என்றார்கள். மிக சிறிய கோயிலாக தான் தெரிகிறது. வெளியே உள்ள சுவரில் சிவன் ஓவியம் தான் உள்ளது. உள்ளே எம தர்மருக்கு விக்ரகம் இருக்கும் போலும் !!


சித்திர குப்தன் கோயில் எதிரில் உள்ள எமதர்மன் கோவில் 
*************



காஞ்சிபுரத்தில் உள்ள மற்றொரு நல்ல சிறு ஹோட்டலை அறிமுக படுத்துகிறேன். காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகிலேயே உள்ளது அன்னபூர்ணா பவன் ஹோட்டல். பிராமண குடும்பம் ஒன்று அவர்களே சமைத்து பரிமாறுகிறார்கள். மதிய சாப்பாடு நாங்கள் சாப்பிட்டோம். குறிப்பாய் வத்தல் குழம்பு செமையாக இருந்தது. காய்கறிகளும் அருமை. நாற்பது ரூபாய்க்கு மிக நிறைவான சாப்பாடு. காஞ்சி காமாட்சி கோயில் சென்றால், வெளியே வந்த பின் நிச்சயம் இங்கு சாப்பிடலாம் நீங்கள் !







அடுத்த பதிவில் :


பாண்டவ தூத பெருமாள் - மகா பாரதத்தில் இடம் பெற்ற கோவில்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தோர் அவசியம் செல்ல வேண்டிய கோவில்

கைலாச நாதர் - ஒரு வித்தியாசமான கோவில்

Wednesday, January 25, 2012

நீயா நானா - ஷூட்டிங் அனுபவங்கள்

நீயா நானாவில் இரண்டு முறை கலந்து கொண்டவன் என்ற முறையில் இந்நிகழ்ச்சி எப்படி படமாக்கப்படுகிறது என்பதை பற்றி கூறுகிறேன். உங்களில் சிலர் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நினைத்தால் உதவ கூடும்.மற்றவர்களுக்கும் இதில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும் !

**********
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதிலிருந்து துவங்குவோம்.

நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் உங்களை குறித்த தகவல்களை nnshow@gmail.com என்கிற அவர்கள் மெயில் ஐ.டி.க்கு அனுப்ப வேண்டும். கூடவே போட்டோவும் அனுப்பினால் நலம்.


இப்படி அனைவரும் அனுப்பும் தகவல்களை எல்லாம் அவர்கள் தங்கள் டேட்டா பேசில் பதிந்து விடுகிறார்கள். பின்  அவரவரும் குறிப்பிட்டுள்ள ஆர்வத்தை பொறுத்து அது சம்பந்தமான தலைப்பு வந்தால் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வார்கள். அப்போது நீயா நானா டீமில் இருந்து பேசுகிறோம் என தெரிவித்து விட்டு, தலைப்பை சொல்லி கருத்தை கேட்பார்கள். நீங்கள் முதலில் எந்த அணியில் (For or against) பேச விரும்புகிறீர்கள் என சொல்ல வேண்டும். சில நேரம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரிவில்  பேச ஏற்கனவே நிறைய பேர் இருப்பார்கள். அப்போது நீங்கள் " சரி நான் அதற்கு எதிர் தலைப்பில் பேசுகிறேன்" என்றால், " இல்லீங்க. நீங்க முதலில் சொன்னது தான் உங்க உண்மையான வியூ. அதற்கு எதிர் அணியில் பேசினால், சரியாக இருக்காது " என சொல்லி விடுவார்கள் !!

தலைப்பு பொருந்தி, போனில் நீங்கள் சொன்ன கருத்துகளும் பிடித்தால், மீண்டும் தொடர்பு கொண்டு என்றைக்கு படப்பிடிப்பு, நீங்கள் எத்தனை மணிக்கு வர வேண்டும் போன்ற தகவல்கள் தருவார்கள். இப்படி பேசுவது பெரும்பாலும் Visual Communication படிக்கும், அல்லது அப்போது தான் படித்து முடித்து கல்லூரி பெண்களாக இருக்கும் !

நீங்கள் பெரிய சொற்பொழிவு அல்லது உரை நிகழ்த்துவது போல் தயார் செய்து கொண்டு செல்வது சரிப்படாது. அந்த தலைப்பு குறித்து உங்கள் கருத்துகள், உங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த யாருக்கும் நிகழ்ந்த நிஜ அனுபவங்கள் ஒரு தாளிலோ மனதிலோ குறித்து வைத்து கொள்ளலாம். மற்றபடி பேசுவது அங்கு நடக்கும் விவாதத்தை ஒட்டியே அமையும்.

**********
நான் பேசியபோது எடுத்த சில வீடியோக்கள்.. புத்தகம் வாசிக்கும் பழக்கம் தேவையா என்கிற தலைப்பில் பேசிய போது எடுத்தது ! நம்ம கை காமிராவில் எடுத்ததால் quliaty சுமாராக இருக்கும். பொருத்தருள்க !



கோபி பாராட்டுகிற க்ளிப்பிங் கீழே


நீயா நானா ஒரு நாளைக்கு மூன்று ஷோ ஷூட்டிங் நடக்கிறது ! முதல் ஷோ காலை பதினோரு மணிக்கு துவங்கி மதியம் மூன்று மணி போல் முடிப்பார்கள். பின் ஓரிரு மணி நேரம் ப்ரேக் விட்டு மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு அடுத்த ஷோ துவங்குவார்கள். இது முடிய ஒன்பதரை அல்லது பத்து மணி ஆகும். அடுத்த ஷோ இரவு பதினோரு மணிக்கு துவங்கி நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணிக்கு முடியும் ! (என்ன கண்ணை கட்டுதா?)

ஒரு முறை செட் போட்டால், குறைந்தது ஏழு முதல் பத்து நாள் வரை ஷூட்டிங் நடக்கிறது.. தினம் மூன்று ஷோவாக...இப்படி ஒரே வாரத்தில்  20 , 25 பகுதிகளை எடுத்து முடித்து விட்டு அதைதான் அடுத்த சில மாதங்களுக்கு ஒளி பரப்புகிறார்கள் !!

நீங்கள் இரண்டாவது ஷோவில் பேசுகிறீர்கள் என்றால் மதியம் ஒரு மணிக்கு வாருங்கள் என்பார்கள். நீங்கள் அலறி அடித்து ஒரு மணிக்கு போனால் முதல் ஷோ வில் பாதி கூட முடிந்திருக்காது. ஒரு விதத்தில் ஷோ எப்படி நடக்கிறது, பேசும் வாய்ப்பு எப்படி கிடைக்கிறது என்பதை வெளியே உட்கார்ந்து பார்த்தால், நீங்கள் பேச உதவியாக இருக்கும் தான் !

ஒரு மணிக்கு சென்ற நீங்கள் மூன்று மணி வரை முதல் ஷூட்டிங் வேடிக்கை பார்ப்பீர்கள். பின் இரண்டு மணி நேரமாவது ப்ரேக் விடுவார்கள். (தொடர்ந்து பேசும் கோபிநாத் குரலுக்கு ரெஸ்ட் தேவை !!) நான்கு மணி நேர காத்திருப்புக்கு பின் செட்டில் உங்களை உட்கார வைப்பார்கள்.

பின் அசிஸ்டண்டுகள் நீங்கள் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்லுவார்கள். மைக்கை அடுத்தவரிடமிருந்து பிடுங்காதீர்கள் என்பது முக்கிய குறிப்பாய் இருக்கும்.

அப்புறம் கோபி வருவார். அவருக்கு ஒருவர் கோட் மாட்டி விடுவார். (ஆம் சினிமா நடிகர் போல் இன்னொருவர் கோட் மாட்டி விடுவது, மேக் அப் போடுவது நடக்கும் !)






துவக்கத்தில் தலைப்பு குறித்து கோபி 15 நிமிடமாவது பேசுவார். (அதில் முக்கால் வாசி எடிட் ஆகி கொஞ்சம் தான் ஒளி பரப்பாகும் !) பின் ஏதேனும் ஒரு கேள்வி + அதற்கான பதில்களை கேட்டு நிகழ்ச்சி ஆரம்பிப்பார். இப்படி கேள்விகள் கேட்கும் போது உங்களுக்கு அது பற்றி கருத்து இருந்தால் கையை தூக்கினால் மைக் உங்களுக்கு வரலாம். ஆனால் நிறைய பேர் இப்படி பேச விரும்புவதால் மைக் எப்போது வரும் என சொல்ல முடியாது. மைக் உங்கள் கைக்கு வர சிறந்த வழி உங்கள் இரு பக்கமும் அமர்ந்துள்ளோர் பேசி முடித்ததும் அவரிடமிருந்து நீங்கள் மைக் வாங்கி பேசுவது தான்.

குறிப்பிட்ட சில கருத்துக்கள் ஒட்டி விவாதம் நகரும் போது உங்களுக்கு அது பற்றி சொல்ல நிச்சயம் நல்ல பாயின்ட் இருக்கும். மைக் மைக் என்று கேட்டாலும் அப்போது கிடைக்காது. பின் உங்கள் அருகில் இருப்பவர் மூலம் மைக் வரும்போது உங்களுக்கு அதிக ஈடு பாடு இல்லாத விஷயம் போய் கொண்டு இருக்கும். நீங்கள் பழைய கேள்வியை நினைவு படுத்தி பேச ஆரம்பித்தால் " அந்த டாபிக் முடிஞ்சுடுச்சு. இப்போ உள்ளதை பேசுங்க" என்பார்கள். இது தான் பேசுவதில் உள்ள பெரிய சிரமம் ! சரியான நேரத்தில் மைக் உங்களுக்கு வரா விடில் உங்கள் கருத்துகளை நன்கு சொல்ல முடியாது !

தலைப்பு குறித்த கேள்விகளாக கேட்டு அனைவர் கருத்தும் கேட்கும் ரவுண்டுகளே நான்காவது இருக்கும் என்பதால் நீங்கள் நான்கு முறை பேச வாய்ப்பு வரலாம். ஒவ்வொரு ரவுண்டிலும் பேச முயன்றால்தான் சில எடிட் ஆனால் கூட மீதம் சில வரும். நீங்கள் பேசியதே இரு முறை தான் எனில் அதில் ஒன்று எடிட் ஆகி ஒரு முறை மட்டும் வர வாய்ப்பு உண்டு. ஓரிரு முறை மட்டுமே பேசினால், உங்கள் நண்பர்கள் "நீ பேசுனியா என்ன? நான் பார்க்கவே இல்லியே " என துக்கம் விசாரிக்கும் நிலைமை வந்து விடும் !

அடுத்து மைக் கிடைத்து பேசும் போது ஒரு சில நிமிடங்களாவது பேசுகிறது போல் பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் பேச ஆரம்பித்து 15 வினாடிகள் கழித்து தான் கேமரா உங்கள் க்ளோஸ் அப் காட்டும். 30 வினாடிக்கு குறைவாக பேசினால் நீங்கள் தான் பேசினீர்கள் என்பது டிவியில் பார்த்தால் உங்களுக்கு மட்டும் தான் தெரியும். உங்களை கிட்டே காண்பிப்பதற்குள் அடுத்த நபரிடம் கேமரா சென்று விடும் !
 
 டிவியில் வருகிற மாதிரி ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ப்ரேக் விட மாட்டார்கள். ஓரிரு மணி நேரம் விவாதம் தொடர்ந்து நடக்கும். கடைசியில் பரிசெல்லாம் குடுத்து முடித்த பிறகு தான் ப்ரேக்குக்கும்,  பிரேக் முடிந்து திரும்ப வருவதற்கும்  கோபி ஒரே நேரத்தில் பேசுவார். (அடுத்தடுத்து அவர் இதை பேசுவதை  பார்க்க வேடிக்கையாக தான் இருக்கும் !)
 
லாஸ்ட் பட் நாட்  தி லீஸ்ட்: அவர்கள் ஒவ்வொரு முறை ப்ரேக் விடும் போதும் ரெஸ்ட் ரூம் சென்று வந்து விடுவது நல்லது. ஒரு முறை அய்யாசாமி கலந்து கொண்ட போது ஏசி குளிரில் இது பெரிய பிரச்சனை ஆகி விட்டது. " இதோ பிரேக் விட்டுடுவாங்க. போயிடலாம், போயிடலாம் " என பொறுத்து பொறுத்து பார்த்து " டேய் நிறுத்துறீங்களா? இல்லியா? டேன்க்  வெடிச்சிடும்பா " என அய்யா சாமி கத்தும் முன் நல்ல வேளையாக ப்ரேக் விட, மிகுந்த கோபத்துடன் முதல் ஆளாக அய்யாசாமி செட்டை விட்டு வெளியேறினார் ..ரெஸ்ட் ரூமுக்கு !

Monday, January 23, 2012

சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்

அழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. சுஜாதாவின் "ஏறக்குறைய சொர்க்கம்" சொல்ல வருவது இதனை தான் 

குமுதம் பத்திரிக்கையில் தொடர் கதையாக வெளி வந்த போது, வாரா வாரம் கத்தரித்து பைன்ட் செய்து, யாரோ வாசித்ததை பழைய புத்தக கடையிலிருந்து கிடைக்க பெற்றேன்.

கதை 


ராம்சந்தர் என்கிற 27 இளைஞனின் பார்வையில் கதை சொல்ல படுகிறது. காமாட்சி (காமு) என்கிற பெண்ணை, பெண் பார்த்து திருமணம் செய்கிறான். திருமணமான அன்றே ராமின் தாயார் மரணமடைகிறார். "பெண் ராசி அற்றவள் " என பலரும் சொல்ல, அதையெல்லாம் காதில் வாங்காமல் அவள் அழகில் மயங்கி கிடக்கிறான் ராம். வங்கியில் பணி செய்யும் ராமின் நண்பன் சந்துரு, ராமின் மேனஜர் என பலருக்கும் காமுவின் மீது ஒரு கண். " உங்க நண்பன் சந்துரு என்னிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தார்" என்கிறாள் காமு. சந்துருவை பார்க்க போனால், அவன் " உன் மனைவி நடத்தை சரியில்லை. என்னிடம் தப்பா நடந்து கொள்ள பார்த்தாள்" என்கிறான். சந்துரு சொன்ன வேறு சில விஷயங்கள் சரியாக இருக்க அவனை திட்டாமல் திரும்புகிறான் ராம்.

ராமின் மேனஜர் மூலம் ஒரு சினிமா டைரக்டர் காமுவை வந்து பார்த்து விட்டு காமுவை தன் படத்தில் நடிக்க சொல்லி அழைக்கிறார். ராம் இதை மறுக்கிறான்.

காமுவின் நடவடிக்கைகள் ராமுக்கு தொடர்ந்து சந்தேகம் தர, வேலைக்கு செல்லாமல் அவளை உளவு பார்த்து கொண்டு திரிகிறான். கர்ப்பமாகும் காமுவை அபார்ஷன் செய்ய சொல்லி விடுகிறான். இதன் பின் தன் வீட்டுக்கு போகும் காமு திரும்பவே இல்லை. நீண்ட நாள் அலைந்து காமு அவள் சித்தப்பா மூலம் சென்னை சென்று நடிகை ஆகி விட்டதை அறிகிறான். இந்நிலையில் அவன் வேலையும் இழந்து இருக்க, "எந்த தொந்தரவும் தராமல் வீட்டில் இருந்தால், உன்னை இங்கு இருக்க அனுமதிக்கிறோம்" என்கிறார்கள் சித்தப்பாவும், காமுவும். தினம் தண்ணி அடித்து கொண்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி ஒரு நடிகையின் கணவன் வேலையை பார்க்க துவங்குகிறான் ராம். இந்த வாழ்க்கையை பொறுத்து கொண்டால் "ஏறக்குறைய சொர்க்கம்" என ராம் சொல்வதுடன் கதை முடிகிறது

எண்பதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்ட நாவல் இது. ஒவ்வொரு வாரம் முடிக்கும் போதும் ஒவ்வொரு சஸ்பென்ஸ் உடன் முடிக்க, வாசகர்கள் நிச்சயம் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்கிற ஆவலுடன் இருந்திருப்பார்கள்.

கதை முழுக்க முழுக்க காமு என்கிற அழகிய பெண்ணை சுற்றியே சென்றாலும் கூட, அவள் அழகை பற்றி தான் பேசுகிறதே ஒழிய, அவள் உணர்வுகள் அல்லது அவள் என்ன நினைக்கிறாள் என்பதை எங்குமே சொல்ல வர வில்லை. சொல்ல போனால் இது தான் கதையின் மிக பெரிய புதிரே.

ராம் தன் மனைவி மேல் சந்தேகப்படும் போது நாம் எந்த நிலை எடுப்பது என தடுமாறுகிறோம். ராமுக்கு உள்ளது சந்தேகம் என்கிற நோயா அல்லது அவன் சந்தேகப்படுவதில் உண்மை இருக்குமோ என்று குழம்புகிறோம். சுஜாதா விரும்பவதும் இதையே என்று தோன்றுகிறது.

இறுதி பகுதியில் சந்துரு இப்படி சொல்கிறான்.

" யோசிச்சு பார்த்தன்னா உலகத்தில் எல்லா செயல்களும் தனிப்பட்டது; உலகத்தில் எத்தனையோ தெரிஞ்சும் தெரியாமலும் பாதங்கங்கள் நடக்குது. அது ஒவ்வொன்னையும் நம்மை பாதிக்க விட்டா நம்மால உயிர் வாழவே முடியாது".

உலகத்தில் நடக்கிற எல்லாம் உனக்கு தெரிந்தா நடக்கிறது? அதுக்கெல்லாம் கவலை பட முடியுமா என அறிவுரை சொல்கிறான் நண்பன். கடைசியில் ராம் அந்த வாழ்க்கைக்கு ஒப்பு கொள்வதும் இதன் அடிப்படையில் தான்.

இந்த நாவலை 90-களில் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும், ஏறக்குறைய சொர்க்கம் என்றதும் உடனே நினைவுக்கு வருவது "அழகான மனைவி- நடிகையாகும் கதை" என்பது தான்.

சுஜாதாவின் பெஸ்ட் என்று சொல்ல முடியா விட்டாலும் சுஜாதா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் இந்த நாவலை.

திண்ணை டிசம்பர் 18 இதழில் வெளியான கட்டுரை

Friday, January 20, 2012

காஞ்சிபுரம்: குமர கோட்டமும் அருமையான ஒரு மெஸ்சும்

ஏகாம்பரேஸ்வரர் என்கிற சிவன் (அப்பா) கோயிலுக்கும், காஞ்சி காமாட்சி என்கிற அம்மா கோயிலுக்கும் நடுவில் இருக்கிறது இந்த முருகன் கோயில். (இந்த பசங்க எப்பவும் அம்மா- அப்பாவுக்கு நடுவில் தான் இருக்கும் போல !!)


குமர கோட்டம் என்கிற இந்த கோயில் மிக விசேஷமானது. வழக்கமான கோயில் போல நேராக இல்லாமல் மிக கோணலாக வளைந்து இருக்கிறது... இந்த வடிவில் வேறெங்கும் கோயில் இல்லை என்கிறார்கள்.


காஞ்சியில் பல்வேறு கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஆங்காங்கு உடைந்து காணப்படும். ஆனால் இங்கு உள்ள சிற்பங்கள் தெளிவாக, அழகாக உள்ளன. ஒரு வேளை சற்று புதிய கோயில் என்பதால் இருக்குமோ என்னவோ ?

சிற்ப வேலைப்பாடுகள் தெளிவாய்
பாம்பன் சுவாமிகள் காஞ்சிபுரம் வந்து விட்டு இந்த கோயிலுக்கு வராமல் சென்று விட்டாராம். அவரை முருகன் சிறுவனாக சென்று இந்த கோயிலுக்கு மறுபடி அழைத்து வந்ததாக புராண கதை உள்ளது.



கோயிலுக்கு வெளியே பிரகாரத்தில் கிருபானந்த வாரியாருக்கு சிலை ஒன்று உள்ளது. அதன் அருகே உள்ள கோயில் அலுவலகத்தில்  கோயில் குறித்து விசாரித்து கொண்டிருக்க, ரொம்ப ஆர்வமாய் விசாரிக்கிறாரே இந்த ஆள் என, ஒரு புது மாலையை என்னிடம் குடுத்து " அந்த வாரியார் சிலைக்கு இந்த மாலையை போடுங்க சார்" என்றார் அங்கிருந்தவர்.


கந்த சஷ்டி திருவிழாவின் போது கூட்டம் நிரம்பி வழியுமாம். இங்குள்ள முருகன் மிக அழகாக இருக்கிறார் என்பது உபரி தகவல்
****
குமர கோட்டம் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது கோகுல் மெஸ். மிக அருமையான சாப்பாடு இங்கு கிடைக்கிறது. இவர்களுக்கு காஞ்சி காமாட்சி கோயில் பின் பக்க வாசல் அருகே இன்னொரு பிரான்ச் உள்ளது. அங்கு தான் முதல் நாள் இரவு டிபன் சாப்பிட்டோம். மெஸ் என்றதும் சற்று தயங்கி தயங்கி வந்த மனைவியும், மகளும் கோகுல் மெஸ்ஸில் சாப்பிட்டு செம குஷி ஆகி விட்டார்கள். இட்லி பூ மாதிரி மென்மையா இருந்தது. சைட் டிஷ் அனைத்தும் அருமை. சப்பாத்தி நன்றாக இருந்தது. இவை எல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி இருந்தது ஆனியன் தோசை. முதல் நாள் இரவு சாப்பிடும் போதே அவர்கள் குமர கோட்டம் எதிரே உள்ள மற்றொரு கோகுல் மெஸ் பற்றி கூறி விட்டனர்.




எனவே மறு நாள் காலை இங்கு சாப்பிட்டோம். பொங்கல் மற்றும் பூரி. செம tasty!! பின் நேற்றைய பாதிப்பில் ஆனியன் தோசை கேட்டு சாப்பிட்டோம். (ஆளுக்கு மூணு ஐட்டமா என நினைக்காதீர்கள். உதாரணமாய்  ஒரு தோசை வாங்கினால் ஆளுக்கு கொஞ்சம் பிய்த்து எடுத்து விடுவோம் !!) காபியும் கூட திவ்யமா இருந்தது. ஒவ்வொரு வேளைக்கும் சாப்பாடு மூவருக்கும் சேர்த்து நூறு ரூபாய்க்குள் தான் வந்தது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் !!


கிராமத்தில் உள்ளது போல் தாழ்வாரம்; இதன் அடியில் தான் சாப்பாட்டு மேசை 

பழங்காலத்து வீட்டை மெஸ் ஆக்கியுள்ளனர். கதவுகளை பாருங்கள்

காமாட்சி கோயில் பின் புறம் அருகே உள்ள மற்றொரு பிரான்ச் 
கோகுல் மெஸ்ஸில் முறுக்கு சீடை, அப்பளம் உள்ளிட்டவை கிடைக்கின்றன. நாங்கள் அரிசி அப்பளம் வாங்கி வந்தோம். மிக மிக அருமையாய் இருந்தது.

முறுக்கு சீடை, அரிசி அப்பளம்

காஞ்சிபுரம் சென்றால் அவசியம் ஒரு விசிட் அடியுங்கள் கோகுல் மெஸ்சுக்கு !
***********

தொடர்புடைய பதிவுகள் :


பகுதி 1: காஞ்சி பயணக்கட்டுரை மினி டிரைலர்

பகுதி 2 : காஞ்சி: ஏகாம்பரேஸ்வர் கோவிலும் ஒரு நல்ல துணிக்கடையும்

பகுதி 3 : காஞ்சி காமாட்சி அம்மனும், காஞ்சியில் தங்க நல்ல இடமும்

*************

அடுத்த பதிவில் :

உலகிலேயே சித்திர குப்தனுக்கு ஒரே கோயில் -விவரங்கள்

எந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்..? எத்திசையில் விளக்கு ஏற்ற கூடாது?- கோயிலில் படித்த தகவல்கள்

ஆமை வடிவில் சிவனுக்கு பூஜை செய்த விஷ்ணு..

இன்னொரு நல்ல ஹோட்டல் அறிமுகம்

Thursday, January 19, 2012

வானவில் : விகடன் விருதுகளும் மம்பட்டியானும்

விகடன் விருதுகளும் வீடுதிரும்பல் விருதுகளும்

விகடன் விருதுகள் அறிவிக்கப்படும் முன்னரே வீடுதிரும்பல் ப்ளாகில் விருதுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இவற்றில் நம் ப்ளாகில் சொன்ன பல விஷயம் விகடனிலும் அங்கீகரிக்க பட்டிருந்தது.

சிறந்த இயக்குனர் - வெற்றி மாறன்

சிறந்த நாயகி- அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)

சிறந்த இசை அமைப்பாளர் - GV பிரகாஷ் குமார்

சிறந்த படம் - ஆடுகளம்

சிறந்த நகைச்சுவை நடிகர் -சந்தானம்

சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் -சிவ கார்த்திகேயன்

என நாம் சொன்ன விருதுகளுடன் நிறைய ஒற்றுமைகள் ! ஆயினும் விகடன் சிறந்த நடிகர் விருதை தெய்வ திருமகள் விக்ரமுக்கு தந்தது தான் அநியாயம் ! விகடன் விருது குழுவில் ஒருவர் கூடவா ஐயம் சாம் பார்க்க வில்லை? நடை, உடை என அனைத்தும் காப்பி அடித்து நடித்ததற்கு விருது எனும் போது சற்று கோபம் வருகிறது

பார்த்த படம்- மம்பட்டியான்

எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும் நான் படம் பார்க்கும் போது தூங்க மாட்டேன். இந்த படம் பார்க்கும் போது பாதிக்கும் மேல் தூங்கி விட்டேன். அதிலேயே தெரிந்து கொள்ளுங்கள் படம் எப்படி இருக்கும் என !! வடிவேலுவின் Comeback எதிர்பார்த்த மாதிரி சிறப்பா இல்லை ! பழைய காலத்து கதை இன்றைய சூழலுக்கு ஒத்து வரும் என எப்படி நினைத்து எடுத்தார்களோ? திரை உலகில் திறமை மட்டுமே இருந்தால் போதாது என்பதற்கு உதாரணம் பிரசாந்த். வேறென்ன சொல்வது?

காணும் பொங்கலும் குடியும்

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு போகும் வழியில் அந்த காட்சியை கண்டேன். டாஸ்மார்க் கடை அருகே ஏழெட்டு பேர் செமையாக அடித்து புரண்டு கொண்டிருந்தார்கள். பின் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் நான் பெட்ரோல் போட்டு கொண்டு நிற்கும் போது இரண்டு பேர் அங்கே ஓடி வந்தனர். ஒருவன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டுகிறது. வெள்ளை டி ஷர்ட் முழுக்க ரத்தம் ! கையால் தலையை அழுத்தி பிடித்து கொண்டிருந்தான்.

மற்றொருவன் பெட்ரோல் பங்கில் இருப்போரிடம் " சார்.. பஸ்ட் ஐயிட் ஏதும் இருந்தா குடுங்க. அடிச்சிட்டாங்க" என கேட்டு கொண்டிருந்தான். பெட்ரோல் பங்கில் அவர்களை தவிர்க்க மாட்டாமல் ஏதோ பழைய துணி எடுத்து கொடுத்தார்கள். அதை தலையில் கட்டி கொண்டார் அடிபட்ட பையன். போன் செய்து நண்பர் யாருக்கோ இருவரும் பேசினார்கள். " டேய் உடனே வேளச்சேரி கைவேலிக்கு வாடா. ராஜை அடிச்சிட்டாங்க" இதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தனர். எதிர் முனை ஆள் வர விருப்பம் இல்லை போலும். மிக வற்புறுத்தி கூப்பிட்டனர். தலையில் அடிபட்ட ஆள், போதையிலோ ரத்த இழப்பிலோ தள்ளாடினான். இவ்வளவு அடிபட்டும் டாக்டரிடம் கூட போகாமல், தங்களை அடித்தவர்களை திரும்ப அடிக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அருகில் போய் " டாக்டர் வீட்டுக்கு முதலில் போங்க" என சொல்லலாமா என்கிற எண்ணத்தை அவர்கள் எப்படி ரீ-ஆக்ட் செய்வார்களோ என்கிற எண்ணம் தடுக்க, என் வண்டியை கிளப்பினேன்.

சமீபத்தில் எடுத்த போட்டோ

தாம்பரம் மாமனார் வீடு சென்ற போது எடுத்த Sunset

QUOTE CORNER

I hear- I forget.
I see- I remember
I do - I understand
Action is more important than words.

தமிழ் மணம் வாராந்திர ரேங்கிங்கில் வீடு திரும்பல் ஆறாம் இடம்


என்ன தான் தமிழ் மணத்தை விமர்சித்தாலும், அதன் வாரந்திர ரேங்கிங்கில் அவ்வப்போது நம் ப்ளாக் பெயர் வரும் போது மகிழ்ச்சியாக தான் உள்ளது. வருட இறுதி பதிவுகள் (2011 ஸ்பெஷல்) எழுதிய வாரம் வீடுதிரும்பலுக்கு 13-ஆம் இடம் வந்தது. இந்த வாரம் ஆறாம் இடம் !

அவ்வப்போது முதல் இருபதுக்குள் வந்தாலும், ஆறு என்பது தான் இதுவரை எடுத்ததில் மிக குறைந்த இடம் ! சென்ற வாரம் ஐந்து பதிவுகள் (ஒரு புது பட விமர்சனம் உட்பட) எழுதியதால் இது நடந்திருக்கலாம். ஆயினும் ரேங்கிங் பின்னால் ஓட போவதில்லை. எழுத்து ஒரு ஹாபி தான். இதை தவிர செய்ய வேண்டிய வேலை ஏராளம் இருக்கு !!

Mrs.அய்யாசாமியின் லஞ்ச் பேக்

அய்யாசாமி தினமும் வீட்டில் செய்யும் வேலைகளில் ஒன்று : அனைவருக்கும் சாப்பாடு கட்டி எடுத்து வைப்பது. இதில் Mrs.அய்யாசாமி சாப்பாட்டு பையில் மட்டும் குளறுபடி செய்து, ஏதாவது ஒன்றை வைக்க மறந்து விடுவார். குழம்பு அல்லது காய் வைக்க மறந்து விட்டு, அதன் பின் கண்டு பிடித்து Mrs.அய்யாசாமி அலுவலகம் வரை போய் பவ்யமாக கொடுத்து வருவதும் உண்டு. சில நேரம் அப்படி வைக்க மறந்ததே சாயங்காலம் தான் தெரிய வரும். அப்புறம் என்ன நடக்கும் என கல்யாணம் ஆனவர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. கல்யாணம் ஆகாதோருக்கு? வேணாம் விடுங்க.. அவங்க ஏதேதோ கனவில் இருப்பாங்க. அதை ஏன் கெடுக்கணும்?

இப்போல்லாம் அய்யாசாமி உஷாராகி Mrs.அய்யாசாமி பையை வைக்கும் போது மட்டும் பள்ளி மாணவன் தன் புத்தக பையில் எல்லா புத்தமும் சரியாக இருக்கா என சரி பார்ப்பது போல், " சாதம் இருக்கு; குழம்பு இருக்கு" என தனக்கு தானே பேசி கொண்டு சரி பார்ப்பார். காலை எட்டரை மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தால் இந்த காட்சியை பார்த்து ரசிக்கலாம் !

Wednesday, January 18, 2012

மௌன குரு / இளையராஜா இசை நிகழ்ச்சி-விமர்சனம்

மௌன குரு

இணைய உலகில் படம் வெளி வந்து சில வாரங்களுக்கு பின் எழுதும் விமர்சனங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இருந்தும் ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்வில் அந்த உணர்வை பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பதிவு....

திறமைகள் எங்கெங்கு தான் ஒளிந்திருக்கின்றன ! வருட கடைசியில் சிறந்த படங்கள் பட்டியல் நான் ப்ளாகில் எழுதும் நேரம் தான் இந்த படம் வெளியானது. ஆயினும் அலட்சியமாக இப்படத்தை பார்க்காமலே, கணக்கில் எடுத்து கொள்ளாமல் விட்டேன். பார்த்திருந்தால், சென்ற வருட சிறந்த படங்கள் பட்டியலில் இணைத்திருப்பேன்.

படத்தின் கதை மிக எளிதாக சொல்லி விட முடியாது. இருந்தும் சுருக்கமாக சில வரிகளில்...

சந்தர்ப்ப வசத்தில் ஒரு மோசமான போலிஸ் கும்பலிடம் மாட்டுகிறான் ஹீரோவான கல்லூரி மாணவன். பெரும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு, அதை மறைக்க கொலை மேல் கொலை செய்து கொண்டிருக்கிறது அந்த போலிஸ் கூட்டம். ஹீரோவை " மன நிலை சரியில்லாதவன்" என பட்டம் கட்டி ஆஸ்பத்திரி அனுப்பி விடுகிறது. அதிலிருந்து மீண்டு, உண்மையை எப்படி வெளி கொண்டு வருகிறான் ஹீரோ என்பதே கதை.

இந்த படம் முழுக்க முழுக்க சாந்த குமார் என்கிற இயக்குனரின் படம். அவரை பாராட்ட பல காரணங்கள் உண்டு. சிலவற்றை மட்டும் இங்கே தந்துள்ளேன்.

1. படத்தில் தேவையில்லை என்கிற வகையில் சிறு சம்பவமும் இல்லை. எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகளே. சொல்ல போனால் ஓரிரு சம்பவங்களை கவனிக்காமல் விட்டால், அடுத்தடுத்து வரும் காட்சிகள் புரியாமல் போகும் அபாயமும் உண்டு. மிக Complicated-ஆன சம்பவங்கள் + திரைக்கதை. ஆனால் மிக கவனமாக, அழகாக எடுத்து சென்றுள்ளார் இயக்குனர். சென்ற வருட தமிழ் படங்களில் சிறந்த திரைக்கதைக்கு இவருக்கு விருது தந்தாலும் தவறு இல்லை !

2. படம் துவங்கும் போதே ஹீரோ குறித்த ஒரு சிறு காட்சி காட்டுகிறார் இயக்குனர். வீட்டுக்குள் வந்து விட்ட பாம்பை ஹீரோ எடுத்து கொண்டு வெளியே காடு மாதிரி இருக்கும் இடத்தில சென்று விட்டு விட்டு வருகிறார். அந்த பாம்புக்கு மட்டுமின்றி, அதனால் மற்றவர்களுக்கும் தொந்தரவு வர கூடாது என நினைக்கிறான் என்பதை எவ்வளவு அழகாக establish செய்து விட்டார் !

3. படத்தில் ரெண்டரை பாடல்களே. முதல் பாடல் டைட்டில் போடும் போது வந்து விடுகிறது. மீதம் ஒண்ணரை பாடலும் படத்தின் பின்னணியில் தான் ஒலிக்கிறது. அதாவது படத்தில் யாரும் பாட்டு பாடவில்லை. இதுவே படத்தை நிஜத்துக்கு மிக அருகில் கொண்டு சென்று விடுகிறது.

4. வெவ்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம்- ஹீரோ, வில்லன்,
உமா ரியாஸ் பாத்திரம், பாதர் பாத்திரம், அவர் மகன், இன்னும் சில போலிஸ்கள் அனைவரும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் இருக்கிறார்கள்.

காரக்டர்களுக்கான detailing பிரமாதம் ! உதாரணமாக கல்லூரி Principal -ன் மகன் ஏன் கெட்டவன் ஆனான் எனபதற்கு கூட தெளிவான லாஜிக் சொல்கிறார்கள்.

5. உமா ரியாஸ் பாத்திரம் மட்டும் Fargo என்கிற ஆங்கில படத்திலிருந்து உருவப்பட்டுள்ளது தெரிகிறது. ஆனால் படத்தின் கதை Fargo கதையல்ல. நிச்சயம் இந்த பெண் போலிஸ் காரக்டரும் சரி உமா ரியாஸ் நடிப்பும் சரி அசத்துகிறது.

6. ஹீரோ அருள்நிதியின் தந்தை தான் தயாரிப்பாளர். ஹீரோவின் சொந்த படம் என்பதால் அதீத பில்ட் அப் இன்றி, சொல்ல போனால் இறுதி அரை மணி தவிர மற்ற காட்சிகளில் ஹீரோ செமையாய் அடி வாங்குகிறார்.
அருள்நிதிக்கு அந்த பாத்திரம் இயல்பாக பொருந்துகிறது. மேலும் அவர் இன்னும் அதிக பிரபலம் ஆகாததால் அருள்நிதி நினைவுக்கு வராமல், அந்த பாத்திரமே நினைவுக்கு வருகிறது ஒரு ப்ளஸ்.

7. கதை நிச்சயம் டிராமா வகையை சேர்ந்தது தான். நிஜத்தில் இப்படி நடக்குமா என சொல்ல முடியாது. ஆனால் நிஜம் போல நம்ப வைத்தது தான் சாமர்த்தியம். உதாரணமாய் கார் ஆக்சிடன்ட் ஆகி
போலிஸ் கையில் பணம் கிடைக்கும் சீன். கொஞ்சம் careless ஆக எடுத்தாலும் நாடகம் போல் ஆகியிருக்கும். ஆனால் ரொம்ப இயல்பாக எடுத்திருப்பார் அந்த காட்சியை !

8. திருமணமான அண்ணன்- தம்பி இடையே உள்ள இடைவெளி ஆகட்டும் போலிஸ் இடையே உள்ள அரசியலாகட்டும் மிக துல்லியமாக காட்டியுள்ளார் இயக்குனர்.

படத்தின் குறைகள் என எனக்கு தெரிவது இரண்டு விஷயம் தான். அந்த அம்மா பாத்திரம் எப்போதும் தன மகனை (ஹீரோ) குறை சொல்லி கொண்டே இருக்கும். உண்மையில் அம்மாக்கள் எந்த மகன் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆகலையோ அவன் மீது தான் பரிதாபப்படவும், அவர்களை தான் சப்போர்ட் செய்யவும் செய்வார்கள். இங்கு அதற்கு நேர் எதிராக காண்பித்துள்ளார்.

மற்றொரு விஷயம்: அந்த மருத்துவ மனை ! மருத்துவர்களில் சிலர் காசுக்காக சிசேரியன் செய்யும் ஆட்களாக இருப்பது உண்மை தான். ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை தெரிந்தே அழிக்க மாட்டார்கள். ஒரு மருத்துவர் தான் அப்படி என்றால், அங்கிருக்கும் பணி ஆட்கள் கூட " நிரந்திர எதிரி" மீது பாய்வது போல் பாய மாட்டார்கள்.

படத்தை நல்ல வேளையாக பாசிடிவ் ஆக முடித்தார். கடைசியில் சேது போல் முடியுமோ என்கிற பயம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

சினிமா என்பது கூட்டு முயற்சி; அனைவரும் சேர்ந்தால் தான் நல்ல படம் கொடுக்க முடியும் என்பார்கள். அந்த கூற்றை மாற்றி இந்த படம் வெல்ல காரணம் கதாசிரியரும் இயக்குனருமான சாந்தகுமார் தான் என உறுதியாக கூறலாம். ஒரு இயக்குனர் தான் சொல்ல வரும் விஷயத்தில் தெளிவாக இருந்தால், கூடவே தயாரிப்பாளர் தரப்பில் தலையீடு இல்லாமல் இருந்தால் ஒரு நல்ல படம் தர முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது மௌன குரு.

வாழ்த்துகள் சாந்த குமார் ! தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய வரவாக இருக்கிறீர்கள். உங்கள் அடுத்த படைப்புக்கு காத்திருக்கிறோம்!
*******************************************

ஜெயா டிவியில் இளையராஜா இசை நிகழ்ச்சி ரெண்டு நாள் மட்டும் பார்த்தேன். (இதற்கென அரை நாள் லீவு வேறு போட்டாச்சு). மிக மிக அருமையாய் இருந்தது. சில சுவாரஸ்யங்கள் மட்டும் உங்களுடன் பகிர்கிறேன்:

** பல பாடகர்கள் பாட்டில் எப்படி இருக்குமோ அதே போல் பாடினர். நமக்கு நன்கு பழக்கமான பாட்டை வேறு விதமாய் பாடும் போது சற்று ஏமாற்றமாய் இருக்கும். கடைசியில் சற்று improvise செய்தால் பரவாயில்லை. பல இடங்களில் மாற்றி பாடினால் நம்மால் அதை ரசிக்க முடியாது! நல்லவேளை அது நடக்கலை

**பருவமே பாடல் எப்படி இசை வடிவமாக்கினர் என இளையராஜா சொன்னது interesting ! அந்த பாடல் முழுதும் ஓடி கொண்டே இருக்கும் சத்தம் வரும். அதற்கு பல விதத்திலும் முயன்று கடைசியில் மடியில் ரெண்டு கையாளும் மாறி மாறி தட்டி, மைக் முன் அதை ரிக்கார்ட் செய்ததாக சொன்னார். நிகழ்ச்சியிலும் ஒருவர் அப்படியே செய்து இசை வரவைத்தார்.


**போலவே இன்னொரு மழை பாடலுக்கு ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து அதனை சத்தபடுத்தி மழை பெய்யும் சத்தம் வர வைத்தனர்.

** சூப்பர் சிங்கரில் வந்த பலர் ஆர்கெஸ்ட்ராவில் " லாலா " என ஹம்மிங் பாடினர்.

** ஜானகி மற்றும் சுசீலா பாடிய பல பாடல்கள் சித்ரா பாடினார். அடடா அருமை !! அந்த அருமையான பாடல்களை சித்ரா பாடினால் எப்படி இருக்கும் என நாம் அனுபவிக்க முடிந்தது.

** கண்ணதாசன் குறித்த சில நெகிழ்வான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார் ராஜா. தொகுத்து வழங்கிய பிரகாஷ் ராஜ் அனாவசியமாக பேசாமல் நறுக்கென்று பேசினார்.

** நிகழ்ச்சியில் பாட தேர்ந்தெடுத்த பல பாடல்கள் ஆல் டைம் ஹிட்ஸ் / பெஸ்ட் ! இறுதி பாடல் வரை ஒவ்வொரு பாட்டுக்கும் மிக உற்சாகமாக கை தட்டி பெரிதும் ரசித்தனர் கூடியிருந்த மக்கள்.

** பெரிதும் பாராட்ட வேண்டியது வெவ்வேறு வாத்தியம் வாசித்த குழுவினரை தான் !! அப்படியே பாட்டை கேட்கும் பீலிங் வர வைத்தனர். இறுதியில் அவர்களை குறிப்பிட்டு ராஜா பாராட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது.

மொத்தத்தில் ராஜா ரசிகர்கள் மிக மிக என்ஜாய் செய்யும் விதத்தில் இருந்தது நிகழ்ச்சி.

ஒரு வேளை நீங்கள் பார்க்க தவறியிருந்தால் ஜெயா டிவியில் மறு ஒளிபரப்பு செய்வார்கள். அப்போது அவசியம் பாருங்கள் !
************
சமீபத்திய இடுகை


நண்பன் நிச்சய வெற்றி- விமர்சனம் 

Monday, January 16, 2012

ஜல்லிகட்டு தேவையா - கிராமத்து பொங்கல் நினைவுகள்


தஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்போது சென்னையில் வாழ்பவன் என்கிற முறையில் பொங்கல் குறித்தான ஒரு பார்வை இது : 

தஞ்சையும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் பொங்கல் பண்டிகையின் போது தான் வயல்களில் அறுவடை முடியும் காலம்...!! அதனால் கிராமத்தில் இருப்போரிடம் அப்போது தான் பண புழக்கம் ஓரளவு இருக்கும். கிராமங்களில் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் !

முதல் பண்டிகை போகி !! சரியாக போகியன்று தான் பொங்கல் பொருட்கள் வாங்க கிராமத்தில் இறுதி பலரும் அருகில் உள்ள சிறு நகரத்துக்கு வருவார்கள். அதென்னவோ ஏழைகள் தீபாவளி ஆகட்டும், பொங்கல் ஆகட்டும் முதல் நாள் தான் துணி மற்றும் முக்கிய பொருட்கள் வாங்குகிறார்கள்.

போகி தினத்தில் தெருவில் இருக்கும் குப்பைகளை சேர்த்து எரிய விடும் வழக்கம் உண்டு என்றாலும் இந்த விஷயத்தில் சென்னை தான் ரொம்ப மோசம் ! அன்று முழுதும் வெளியில் வர முடியாத அளவு சென்னை புகை மண்டலமாக இருக்கும். டையர் போன்ற எரிக்க கூடாத விஷயங்களையும் எரித்து நாசம் செய்வோரும் உள்ளனர் என்பது வருததுக்க்குரிய விஷயம்.

போகிக்கு அடுத்த நாளான பொங்கலுக்கு வருவோம்.

2012- பொங்கலுக்கு எங்கள் வீட்டில் மனைவியும் பெண்ணும் வரைந்த கோலம் 

 கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தான் மிக அற்புதமாக இருக்கும். தை பொங்கல் என்பது சூரியனுக்கான விழா அல்லவா? கிராமத்து தெருக்களின் நடுவே பானை + அடுப்பு வைத்து பொங்கல் செய்வார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பொங்கல் பானை வைத்து வழிபடுவது அருமையாக இருக்கும். ஒரு முறை என் நண்பன் கருணாநிதி (பெயர் தான் கருணாநிதி ! ஆனால் இவன் பக்கா ADMK ) ஊரான காவராபட்டுக்கு சென்ற போது இப்படி தெருவின் நடுவே பொங்கல் வைப்பதை பார்த்து ரசிக்க முடிந்தது. அந்த ஊரில் பல வீட்டிலும் வீட்டுக்கே வெளியே, தெருவில் கயிற்று கட்டில் போட்டு தான் இரவில் தூங்கவே செய்கிறார்கள் !! ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

பொங்கலின் போது மூன்று நாளும் எங்க ஊர் நீடாமங்கலத்தில் அம்சவல்லி & காவேரி தியேட்டரில் மூணு ஷோ சினிமா நடக்கும். (வழக்கமா மாலை மற்றும் இரவு காட்சி மட்டுமே நடக்கும்!) மக்கள் கரும்பு, பொங்கல் மற்றும் வாழை பழங்களுடன் தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். படம் முடிந்ததும் கரும்பு சக்கை தியேட்டர் முழுதும் கொட்டி கிடக்கும். இதை சுத்தம் செய்து அடுத்த காட்சி ஆரம்பிக்க தாமதமாகும். போன வருட பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன படங்கள் பொங்கலுக்கு தான் எங்க தியேட்டருக்கு வரும். ஆனாலும் பண்டிகைகளில் தியேட்டரில் மிக அதிக கூட்டம் வருவதன்னவோ பொங்கலின் போது தான் !!

ஒரு காலத்தில் அம்சவல்லி, காவேரி, சரவணபவன் என மூன்று தியேட்டர் இருந்த எங்க ஊரில் இப்போது ஒரு தியேட்டரும் இல்லை!

தை பொங்கலுக்கு மறு நாள் மாட்டு பொங்கல் !

மாட்டு பொங்கல் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமெனில் நீங்கள் நிச்சயம் கிராமத்துக்கு தான் செல்ல வேண்டும். அவரவர் வீட்டில் இருக்கும் மாட்டுக்கு குளிப்பாட்டி, பொட்டு வைத்து அலங்காரங்கள் செய்வார்கள். கொம்பில் வர்ணம் பூசுவார்கள். மாட்டின் உடலில் கலர் காகிதத்தில் செய்த அலங்காரங்கள் அலங்கரிக்கும். அன்றைக்கும் பொங்கல் தான் செய்வார்கள். கோமாதாவுக்கு நன்றி சொல்லி செய்யும் பொங்கல் இது.

ஜல்லி கட்டு நடக்கும் நேரமும் கூட இது தான். ஜல்லி கட்டு தேவை/ தேவையில்லை என இரு வேறு கருத்து உண்டு. நான் நிச்சயம் ஜல்லி கட்டு தேவையில்லை என நினைப்பவன். மாடுகளை துன்புறுத்துகிறோம் என்பது ஒரு முக்கிய காரணம். அதை விட பெரிய காரணம் உண்டு.

என் அக்கா கிராமத்து மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். அவர் இருக்கும் கிராமத்தில் வருடா வருடம் ஜல்லி கட்டு நடக்கும். சரியாக ஜல்லி கட்டு போட்டி நடக்கும் நேரம், வெவ்வேறு நேரத்தில் டியூட்டி பார்க்கும் அனைத்து டாக்டர்களும், நர்சுகளும் மருத்துவ மனையில் இருந்தாக வேண்டும். குத்து பட்ட நிலையில் மனிதர்கள் வந்த வண்ணம் இருக்க, வரிசையாக தையல் போட்டு போட்டு ஓய்ந்து போவார்கள். நிலைமை மோசம் என்றால் பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போக சொல்வார்கள். இந்த ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று பேராவது ஜல்லி கட்டில் உயிர் இழக்கிறார்கள். அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆகும்? ஒவ்வொரு வருடமும் கை, கால் என உறுப்புகள் இழப்பவரும் உள்ளனர். ஜல்லி கட்டு வேண்டாம் என நினைக்க முக்கிய காரணம் இது தான்.

கன்னி பொங்கல் அல்லது காணும் பொங்கல், இந்த வரிசையில் கடைசி பண்டிகை தினம் ! இந்த நாளன்று நம் தெருவிலும், பக்கத்துக்கு தெருக்களிலும் உள்ள பலரும் ஒன்றாக சேர்ந்து மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் கிடைத்த வாகனங்களில் கூட்டமாக அருகில் உள்ள மூணாம் தலைப்பு என்னும் இடத்துக்கு செல்வார்கள். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிக்னிக் ஸ்பாட் அது தான் . மூன்று ஆறுகள் ஒன்றாய் கூடுமிடம்... சின்ன அணை போல இருக்கும் ... சுற்றி நிறைய மரங்களும், காலி இடமும் இருக்கும்.

புளி சாதம், தயிர் சாதம் என கட்டு சோறு கட்டி காலையே சென்று, நாள் முழுதும் அங்கு விளையாடி விட்டு வருவார்கள். சில வருடங்கள் முன்பு ஒரு காணும் பொங்கலன்று அக்கா, அண்ணன் குழந்தைகளுடன் அந்த இடம் சென்றேன். இப்போது முன்பு போல் அதிக கூட்டமில்லை. நமது நல்ல பழக்க வழக்கங்களில் சிலவற்றை நாம் இழந்து வருகிறோமோ என சற்று வருத்தமாக இருந்தது.

கேஸ் அடுப்பில் பொங்கல்வைத்து, சாப்பிட்டு முடித்ததும் சாலமன் பாப்பையா பட்டி மன்றமும், டிவியில் போடும் புது படமும் பார்க்கும் நகர வாசிகள் ஒரு முறையாவது பொங்கல் விடுமுறையில் கிராமங்கள் பக்கம் சென்று வரலாம். நம் பாரம்பரியம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பதை நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பு !!

Saturday, January 14, 2012

டிவி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் லிஸ்ட்: எதை பார்ப்பது? பரிந்துரை

அய்யா சாமி பண்டிகை நாட்களில் டிவி சிறப்பு நிகழ்ச்சி எதையும் விடாம ரிமோட் மூலம் மாற்றி மாற்றி பார்ப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த முறை அவருக்கு பொங்கலுக்கு எத்தனை நாலு லீவு தெரியுமா? ஒரே ஒரு நாள்!  அதுவும் பொங்கல் தினமான ஞாயிறு மட்டும் !! இதில் அய்யா சாமி மிக காண்டாகிட்டார். டிவியில் நாலு நாளும் ஸ்பெஷல் நிகழ்ச்சி உண்டு என ஆபிசில் மிகவும் வாதிட்டார். எதுவும் நடக்கலை.

பின் அவர் "திடீர் தியாகி"யாகி நான் பார்க்காட்டி என்ன, என் நண்பர்கள் பார்த்து மகிழட்டும் என நாலு நாள் டிவி நிகழ்ச்சிகளை இங்கு தொகுத்து கொடுத்துள்ளார். அடைப்பு குறிக்குள் நிகழ்ச்சியை பார்க்கலாமா வேண்டாமா என அவர் கமன்ட்டும் உள்ளது.

உங்களுக்கு சிரமம் தர வேண்டாமென அவசியம் பார்க்க வேண்டிய நிகழ்சிகளை மஞ்சள் கலரில் ஹை லைட் செய்துள்ளார். படித்து மகிழுங்கள் !
**********
14th ஜனவரி சனிக்கிழமை: போகி பண்டிகை :


சன் டிவி

10:00 – பழனி – திரைப்படம் (ஒடுங்க ஒடுங்க )

2:00 PM – காளை – திரைப்படம் – (என்னா மாதிரி படம்லாம் போடுறாங்க பாருங்க !)

4:30 PM – ரஜினிகாந்த் இன்டர்வியூ (என்னிக்கு எடுத்ததோ?)

5:30 PM – பேராண்மை – திரைப்படம் (யப்பா ஓரளவு நல்ல படம் ஒன்னாவது இன்னிக்கு போடுறாங்களே !)

9:00 PM – Celebrity Cricket League (CCL) 2 – Mumbai Heros Vs Chennai Rhinos (ஏன்யா ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சா நைட் ஒரு மணிக்கு முடியுமா? காலையில எழுந்து பொங்கல் வைக்க வேணாம்? என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு ?)
********************
கலைஞர் டிவி

10.00 மாஞ்சா வேலு   திரைப்படம்

4.30 PM யாவரும் நலம்-  திரைப்படம்  (செம படம் ! இது வரை பார்க்காட்டி அவசியம் பாருங்க !) 

*********************************************************************
15th January 2012 ஞாயிறு :  தை பொங்கல் 


சன் டிவி

08:00 – ஓய் திஸ் கொலை வெறிடி – தனுஷ் , ஐஸ்வர்யா தனுஷ் Interview

08:30 - நண்பன் படம் ஸ்பெஷல் Program

09:30 - சிறப்பு பட்டிமன்றம் – சாலமன் பாப்பையா (இது இவங்க ரெகுலர் பட்டிமன்றம்; ஜெயிக்கும் அணியில் பாரதி பாஸ்கர்; தோற்கும் அணியில் ராஜா இருப்பார் !!)

11:00 – மாப்பிள்ளை – படம் (அட பாவிங்களா ! பொங்கலும் அதுவுமா இந்த படமா பாக்குறது ! இது தான் ஸ்பெஷல் படமா? கொடுமைடா சாமி !)

2:00 PM – வேட்டைக்காரன் – படம் (ஏற்கனவே போட்டுட்டாங்க. சேனல் மாற்றும் போது தலைவி நடிக்கும் சீன இருந்தால் கொஞ்ச நிமிஷம் பார்த்து விட்டு பின் ஓடலாம் என பரிந்துரை செய்கிறோம் )

5:00 PM – நட்சத்திர கொண்டாட்டம் – வெங்கட் பிரபு வின் லூட்டி

6:00 PM– எந்திரன் – படம் – நிஜமான ஸ்பெஷல் படம்னா அது இது தான்யா !!

*********
விஜய் டிவி

8.00 சிவகுமார் உடன் நேருக்கு நேர் (ரெண்டு மணி நேர நிகழ்ச்சி. எல்லாரும் பொங்கல் கிண்டுவதில் பிசியா இருப்போம். அப்பப்போ பாக்கலாம்) 

10.00: உலக நாயகனின் விஸ்வரூபம். கமல் பேசுறாராம் !! தமிழ் டு தமிழ் டிக்ஷனரி இருந்தா பக்கத்திலேயே வச்சிக்கிட்டு பாருங்க. புரிய வாய்ப்பிருக்கு !

11.00: எங்கேயும் எப்போதும் (இது தான்யா படம் ! பொங்கல் வச்சி முடிச்சுட்டு இந்த படம் போட்டுட வேண்டியது தான். இதுவரை பார்க்காதவர்கள் நிச்சயம் பாருங்க !)

4.30 PM: வேட்டை ஸ்பெஷல். மாதவன், ஆர்யா, அமலா பால் விளையாடி காட்ட போறாங்க. அமலா பாலுக்காக நிகழ்ச்சி பாக்கலாம்ப்பா !!


6.30 :PM மெரீனா திரைபடம் - ஒரு பார்வை (முடிஞ்சா பாக்கலாம். ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் நமக்கு வேண்டியவங்க. )

7.00 PM: உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஸ்பெஷல் ஷோ

9.00 PM நீயா நானா - நகரத்து பெண்களும், கிராமத்து பெண்களும் (நிச்சயம் ஸ்கிப் பண்ணிடலாம் )
***************
கலைஞர் டிவி

9.30 திண்டுக்கல் லியோனி பட்டி மன்றம் (ஒரு பக்கம் சமையல்; மறுபக்கம் இந்த நிகழ்ச்சி காதில் வாங்குதல் என்கிற முறையில் கேட்டு சிரிக்கலாம் - அய்யா சாமி )

10.30 வேல் திரைப்படம் (என்னய்யா படம் போடுறீங்க !!)

02.30 P.M – வேட்டை டீம் Live – ஆர்யா , மாதவன் , அமலா பால் & லிங்குசாமி

03.30 P.M – கோ – திரைப்படம் (இதுவரை பார்க்காட்டி பாருங்க.)


07.30 P.M – மானாட மயிலாட சீசன் 7 (அடேங்கப்பா சீசன் 7-ஆ? கலா அக்கா கலா பாட்டி ஆகும் வரை நடத்துவீங்க போல இருக்கே ?)
***********
ஜெயா டிவி


10 :30 இளைய ராஜா இசை நிகழ்ச்சி (விளம்பர நேரம் escape ஆகிட்டு மற்ற நேரம் பார்க்கலாம் )

2.30 PM 180 திரைப்படம் (ஜனவரி 1-தான் போட்டீங்க. பொங்கல் அன்னிக்கு மறுபடியுமா?)

8.00 PM ஜாக்பாட் ஸ்பெஷல்

9.30 PM அரவான் திரைப்படம் ஒரு பார்வை
*****************************************************************************
January 16, 2012 திங்கள் கிழமை :  மாட்டு பொங்கல்  


சன் டிவி

10:00 – பட்டிக்காடா பட்டணமா Conducted by ஸ்ரீகாந்த் தேவா (Part-1) முன்னாடி கங்கை அமரன் நடத்துவார். இப்போ ஸ்ரீகாந்த் தேவாவா? நான் சின்ன குழந்தையா இருக்குறதில் இருந்து இருபது வருஷமா பொங்கல்னா இந்த நிகழ்ச்சி விடாம நடத்துறாங்கய்யா !)

11:00 – மாவீரன் – திரை படம் – ராம் சரண் , காஜல் அகர்வால் நடித்த தெலுகு டப்பிங் படம்

2:00 PM – சந்தோஷ் சுப்ரமணியம் – படம் (நல்ல படம்; எத்தனையாவது தடவையா போடுறீங்க?)

5:00 PM– வயலோடு விளையாடுவோம் – Game show With திருமதி செல்வம் and தங்கம் மெகா சீரியல் குடும்பங்கள் ( நோ கமன்ட் - எங்க மாமியார் கோச்சீபாங்க)
6:00 PM– சிங்கம் – படம் – (தலைவி வாழ்க !!)
*********
விஜய் டிவி


8:00 காபி வித் அனு : அனு ஹாசன் நடிகை சினேகாவை பேட்டி காண்கிறார் (கல்யாணம் பத்தி புதுசா ஏதாவது சொல்வாரா? Any change plan ?)

11:00 முரண் திரைப்படம் (இது வரை பார்க்கா விடில், நேரம் இருந்தால் பார்க்கலாம்)


2.30 PM: அவன் இவன் திரைப்படம் (ஒரு புது படம் கிடைச்சா அடுத்தடுத்த மாசம் விடாம போட்டுடுவாங்க விஜய் டிவியில் !)
***************
கலைஞர் டிவி : No special program for மாட்டு பொங்கல் !!
******
ஜெயா டிவி


10 :30 இளைய ராஜா இசை நிகழ்ச்சி (அன்னிக்கு ஆபிசில் இருப்பேன். பார்க்க முடியாதே :((

கார்த்திகா, விஜய் அன்டனி, தனுஷ் ஆகியோரின் பேட்டி இன்று ஒளி பரப்பாகிறது (என்னடா பண்டிகை நாளில் சினிமா நடிகைகளிடம் பேட்டி எடுக்கும் வழக்கம் ஒழிஞ்சிடுமொன்னு நினைச்சேன். ஜெயா டிவி பழசை மறக்காம இருக்காங்க )
*********************************************************************************
17th January 2012 செவ்வாய் கிழமை: காணும் பொங்கல்  


ஜெயா டிவி : 


10 :30 இளைய ராஜா இசை நிகழ்ச்சி

5.30 PM. ஆட்ட நாயகன் திரைப்படம் (ஹீரோவே மறக்க நினைக்கும் படம்)

*********
விஜய் டிவி 

11:00 ௦௦ பொய் சொல்ல போறோம் திரைப்படம் 


2.30 PM மைனா திரைப்படம்
****
நேயர்களே !! நாலு நாளும் டிவி பாருங்கள் !! உங்க வீட்டு கரண்டு பில்லு நல்ல்ல்ல்லா ஏறட்டும் !!
*********
டிஸ்கி:
நண்பன் : நிச்சய வெற்றி விமர்சனம் - இங்கே

Friday, January 13, 2012

காஞ்சி காமாட்சி அம்மனும், காஞ்சியில் தங்க நல்ல இடமும்

காஞ்சிபுரத்தில் மிக அதிக புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று காஞ்சி காமாட்சி அம்மன். " காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்பார்கள். இந்த மூன்று கோயில்களும் ரொம்ப விசேஷமானவை.


கோயிலில் நுழைந்தவுடன் அழகிய இரு யானைகள் நம்மை பெரிதும் கவர்கிறது. குளித்து முடித்து அழகாக மேக் அப் செய்து கொண்டு நம்மை வசீகரிக்கிறது இந்த யானைகள் இரண்டும்.


அய்யாசாமி யானைகளை தூரத்தில் இருந்து ரசிப்பார் !  கிட்டே போய் காசு தரவே சற்று பயப்பட தான் செய்வார். காசு தரும் போது பல முறை கீழே போட்டு விடுவார். இப்படி கீழே போட்டால் யானைக்கு தன்னை ஏமாற்றுகிறார்கள் என கோபம் வந்து, தன்னை மிதித்து விடுமோ என சின்ன வயது முதல் கொஞ்சம் பயம் !! எப்படியோ பயந்து கொண்டு காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினார்.

காசு கொடுத்து விட்டு தூரம் நின்று ஆசீர்வாதம் பெறும் அய்யா சாமி
பின் யானைக்கு பழம் தரலாம் என வாழைப்பழம் வாங்கி விட்டு அருகில் போனார். இரண்டு யானையும் எனக்கு எனக்கு  என தும்பிக்கையை  நீட்டியது.



அய்யா சாமி இரண்டு பழம் வைத்திருந்தார். ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொண்ணு குடுக்கலாம் என ! முதல் யானை ஒரு பழம் வாங்கி விட்டு அடுத்த நொடியே " இன்னொரு பழமும் எனக்கே குடு " என தும்பிக்கை நீட்ட, அய்யாசாமி பயந்து போய் பழத்தை கொடுத்து விட்டார்.

இன்னொரு யானை எமாந்திருக்க்குமே பாவம் ஆச்சே" என மறுபடி போய் இரண்டு பழம் வாங்கினார். அப்போது கடைக்கார அம்மா, " என்ன.. ஒவ்வொரு யானைக்கு ஒரு பழம் குடுக்க பாத்தீங்களா? அதுங்க ஒரே நேரத்தில் ஒரு டஜன் சாப்பிடும்" என அய்யாசாமிக்கு பல்பு கொடுத்தார்.

குட்டி யானையாக இருந்தாலும் பயந்தவாறே ரெண்டு பழங்களும் தந்து முடித்தார் அய்யாசாமி !

யானைகள் காசு தந்தால் மட்டும் தான்  ஆசீர்வாதம் செய்கின்றன. பழம் தந்தால் சாப்பிட்டு விட்டு "ம்ம் அப்புறம் ?' என்கிற மாதிரி பார்க்கின்றன. ஆசீர்வாதம் செய்வதில்லை !!
 
****
சரி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருவோம் !

எப்போதும் மிக அதிக கூட்டம் இருக்கும் கோயில் இது. சாமி பார்க்க சிறப்பு தரிசனம் எதுவும் இல்லை. அனைவரும் பொது வழியில் தான் பார்க்க வேண்டும். வி. ஐ. பி. களும், கோயில் ஆட்களை தெரிந்தவர்களும் கியூவில் நிற்காமல் குறுக்கு வழியில் சென்றாலும், மற்ற படி அனைவரும் கியூவில் தான் நிற்கணும்.

மதுரை மீனாட்சி கையில் கிளி இருக்குமாம். காமாட்சி அம்மன் கையிலோ கரும்பு இருக்குமாம். எங்களுக்கு அது சரியே தெரிய வில்லை. (செம கூட்டம் !!)
இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கியூவில் நிற்கும் கூட்டம்
காமாட்சி அம்மன் வேலை விஷயமாய் உள்ள பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்கிறார்கள். நல்ல வேலை கிடைக்க, வேலையில் இருக்கும் பிரச்சனை சரியாக, வேலை மாற்றம் நிகழ என வேண்டி கொண்டு நிறைய பேர் வருவார்கள் என்று கேள்வி படுகிறேன்.

காஞ்சியில் சிவனுக்கும் பெருமாளுக்கும் எவ்வளவோ கோயில் இருந்தும் அம்மனுக்கு என்று இருக்கும் கோயில் இது மட்டும் தானாம் ! அதனால் சுற்று வட்டத்தில் உள்ள எந்த கோயில் விசேஷம் என்றாலும், அதன் உற்சவர் ஊர்வலம், காஞ்சி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெருக்களை வலம் வரும் என்று கூறினார்கள்.

இங்கு அம்மனுக்கு அல்லி மலர்  மாலை விசேஷமாக சாத்துகிறார்கள். அல்லி மலர் மாலை சில இடங்களில் மட்டும் தான் பார்க்க முடியும். கீழே உள்ள படத்தில் அல்லி மலர் மாலை நீங்கள் பார்க்கலாம் !

அல்லி மலர் மாலை
காஞ்சியில் பெரும்பாலான கோயில்கள் மதியம் 12 மணிக்கு பூட்டி விடுகிறார்கள். ஆனால் அம்மன் கோயில் மட்டும் 12 .30 போல் மெயின் கதவை சாத்தினாலும் உள்ளே உள்ளவர்கள் தரிசனம் பார்த்து வெளியே வரவே மூன்று மணி ஆகி விடும்.

காஞ்சியில் பொதுவாய் மதியம் 12 முதல் மாலை 4 வரை எந்த கோயிலும் போக முடியாது. ஆனால் நீங்கள் மதியம் 12 மணிக்கு காமாட்சி அம்மனை பார்க்க வந்து விட்டால், தரிசனம் முடிந்து வெளியே வரவே ரெண்டு அல்லது ரெண்டரை மணி ஆகிடும். பின் மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு நான்கு மணி முதல் மற்ற கோயில்கள் பார்க்க ஆரம்பிக்கலாம் !

***********
அடுத்து நாங்கள் தங்கிய இடத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். காஞ்சியில் நல்ல ஹோட்டல் எது என்று கேட்டபோது பலரும் MM Hotel-ஐ தான் கூறினர். போனில் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய போது ஏ. சி ரூம் இருக்கு; ஒரு நாள் வாடகை 1500 ரூபாய்  என்றனர். இந்த குளிரில் ஏ.சி தேவை இல்லை என்றாலும், வேறு வழி இல்லை என நினைத்து கொண்டு சென்றிருந்தோம்.

ஆனால் துவக்கத்திலேயே காமாட்சி அம்மன் கோயில் செல்ல, அங்கு அருகில் இந்த யாத்ரி நிவாஸ் பார்த்தேன். காஞ்சி மடம் சார்பில் நடத்தப்படும் இந்த இடத்தில் மொத்தம் 25 ரூம்கள் உள்ளன. வாடகை ஏ. சி. 600 மற்றும் நான் ஏ சி. : 300 ரூபாய் தான் !! முதலில் ரூம் இல்லை என்றார்கள். காஞ்சி மடத்திலிருந்து முன்பே சொன்னால் தான் ரூம் கிடைக்குமாம் ! நான் " லக்கேஜ் இங்கு வைத்து விட்டு செல்கிறோம். மாலை வரும் போது ரூம் இருந்தால் தாருங்கள். இல்லா விடில் வேறு ஹோட்டல் சென்று விடுகிறேன்" என்றேன். ஒத்து கொண்டார்கள். பின் மாலை, நாங்கள் வரும் முன்னே எங்களுக்கு போன் செய்து ரூம் இருப்பதை உறுதி செய்தார்கள்.

மிக டீசன்ட்டான ரூம். மூந்நூறே ரூபாய் !! இன்னொரு படுக்கை வேண்டுமானால் அதற்கு நூறு ரூபாய் ! அவ்வளவு தான் செலவு !


நாங்கள் சென்ற போது கீழே உள்ள ஹாலில்   இலவச கண்  மருத்துவ முகாம் நடந்தது. அதன் பேனர் மாட்டப்பட்டுள்ளது 
கண் மருத்துவ முகாம் குறித்து யாத்ரி நிவாஸ் வெளியே மாட்ட பட்ட பேனர்  

காஞ்சிபுரத்தில் ஆங்காங்கு சில குதிரை வண்டிகளை காண முடிந்தது. கிளம்பும் முன் ஒரு முறையாவது குதிரை வண்டி சவாரி செய்ய வேண்டும் என நினைத்தோம் (போய் ரொம்ப நாள் ஆச்சு !!) முடிய வில்லை !

குதிரை வண்டி சவாரி

காஞ்சி கோயில் கோபுரங்களும் அதன் முன்னே பறக்கும் பறவைகளும்

ரூம் மிக வசதியாக இருந்தது. என்ன ஒன்று காமாட்சி அம்மன் கோயில் அருகில் இருப்பதாலும், மார்கழி என்பதாலும் அதிகாலை நான்கு மணிகெல்லாம் ஸ்பீகரில் சாமி பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அதன் பின் சற்று விட்டு விட்டு தூங்கும் படி ஆனது. மற்ற படி அருமையான ரூம், மிக குறைந்த விலையில்.. நீங்கள் காஞ்சி சென்று
தங்க வேண்டுமெனில் நிச்சயம் இங்கு தங்கலாம். சம்பந்த பட்ட நபர் மொபைல் எண் தந்து உங்கள் நண்பர்கள் வேண்டுமானால் முன்பே சொல்லி விட்டு வர சொல்லுங்கள் என்றார். மொபைல் எண் பொதுவில் பகிர முடியாது. நீங்கள் செல்வதாக இருந்தால், அவர் பெயர், போன் நம்பர் என்னிடம் பெற்று கொள்ளலாம்.

அடுத்த பதிவில்
கோணலான வடிவில் இருக்கும் விஷேக முருகன் கோவில்

காஞ்சியில் அவசியம் செல்ல வேண்டிய மெஸ் 

வீட்டுக்கு தேவையான Very very tasty அரிசி அப்பளம் உள்ளிட்டவை கிடைக்கும் இடம்

இந்த படத்தில் யாருக்கு மாலை போடுகிறார் அய்யா சாமி ?



இந்த கேள்விகளுக்கு விடை அடுத்த வெள்ளியன்று வெளியாகும் பதிவில் தெரிய வரும் !
*****
 
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!

Thursday, January 12, 2012

நண்பன் : நிச்சய வெற்றி : விமர்சனம்

விஜய் சுமாரான கதையில் நடித்தாலே படம் ஓடி விடும். அதிலும் 3 இடியட்ஸ் மாதிரி மிக அழுத்தமான கதையில் நடித்தால் எப்படி இருக்கும்? அதை விட ஷங்கர் என்கிற பிரம்மாண்ட இயக்குனர் இயக்கத்தில் முதல் முறை விஜய் என்கிற போது கேட்கவா வேண்டும்? எதிர் பார்ப்புகள் எகிறின. இவற்றை படம் பூர்த்தி செய்ததா? வாங்க பார்க்கலாம்.



கதை

( 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் இந்த பகுதியை ஸ்கிப் செய்து விடலாம்)

விமானத்தில் உள்ளே அமர்ந்துள்ள ஸ்ரீகாந்தை அவர் நண்பர் சத்யன் போன் செய்து கூப்பிடுகிறார். "விஜய் இருக்கும் இடம் தெரிந்து விட்டது " என்றதும் விமானத்தில் இருந்து உடம்பு சரியில்லாத மாதிரி நடித்து நைசாக இறங்கி விடுகிறார் ஸ்ரீகாந்த். சத்யனும் ஸ்ரீகாந்தும் கூடவே ஜீவாவும் சேர்ந்து விஜய்யை பார்க்க காரில் செல்கிறார்கள். Flashback-ல் படம் விரிகிறது.

முதலாம் ஆண்டு இன்ஜினீயரிங் மாணவர்கள் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த். இவர்களின் கல்லூரி பிரின்சிபால் சத்ய ராஜ் . வழக்கமான கல்லூரி குறும்புகளுடன் வாழ்க்கை நகர்கிறது. மூவரும் படிக்காமல் கொட்டம்

அடிக்கிறார்கள். மனப்பாடம் செய்து படிக்க கூடாது என்றும் கல்வி முறைக்கு எதிராகவும் பேசும் விஜய் முதல் மார்க் வாங்குகிறார். ஸ்ரீகாந்த் ஜீவா இருவரும் கடைசி இரு இடம் பெறுகிறார்கள். ஸ்ரீகாந்தை அவர் விரும்பும் புகைப்பட துறையில் சேர வைக்கிறார்  விஜய். ஏழையான ஜீவா படித்து முடித்து கேம்பஸில் வேலைக்கு சேர்கிறார்.

இதனிடையே உடன் படிக்கும் சத்யனுடன் சண்டை வருகிறது. அதில் பத்தாண்டுகள் கழித்து அனைவரும் சந்திப்போம், அப்போது யார் பெரிய நிலையில் உள்ளார்கள் என பார்ப்போம் என சவால் விடுகிறார் சத்யன்.

பத்தாண்டுகள் கழித்து சந்திக்கும் போது யார் யார் எந்த நிலையில் உள்ளார்கள் என்பது இடைவேளைக்கு பின் சிரிக்கவும் அழவும் நெகிழவும் வைத்து சொல்கிறார்கள் .

*********

3 இடியட்ஸ் படம் பார்த்து விட்டு நம் ப்ளாகில் நான் இப்படி பகிர்ந்திருந்தேன் :


" படத்தில் முதலில் நம்மை கவருவது இதன் கதை. பிறர் சொல்கிறார்களே என ஏதோ ஒரு கோர்ஸ் படிக்காமல் தனக்கு மிக ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து படிப்பதும், அதே துறையில் வாழ் நாளை கழிப்பதும் தான் வெற்றி பெற ஒரே வழி என்பதே படம் சொன்ன சேதி. அமீர் 19 வயது இளைஞனாக நடித்தும், எந்த உறுத்தலுமின்றி ரசிக்க முடிகிறது. ஹீரோயினுடன் ஒரே ஒரு பாடல் காட்சி. இதை தவிர்த்து தேவையற்ற சண்டை, வன்முறை ஏதுமில்லை.

அமீர் கானின் புதிரான பாத்திரமும், கடைசி அரை மணி நேரத்தில் அவர் பற்றிய முழு கதையும் விரிவதும் நம்மை ஈர்க்கிறது. அமீர், புரொபசர், மாதவன் என அற்புதமாய் கேரக்டர்கள் உருவாக்கிய கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படம் நெடுகிலும் அமீர் சொல்லும் " ஆல் இஸ் வெல்" ...அருமை ! வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு !!இந்த காட்சி முழுவதுமே வெரி இன்டரஸ்டிங். இந்த சீன் முடிந்து வெள்ளத்தின் நடுவே நின்று கொண்டு, புரொபசர் அமீருக்கு பேனா தருவார் பாருங்கள் கிளாஸ் !! "

***********
பிரபலமான படங்கள்  ரீ மேக் செய்யும் போது ஒரிஜினளுடன் ஒப்பிட்டு " இது சரியில்லை அது சரியில்லை" என சொல்வார்கள். இங்கு அப்படி சொல்ல முடியாத படி எடுத்து அசத்தி விட்டார்கள் அசத்தி !!

என் மனைவியும் மகளும் " இந்தி படத்தை விட இது தான் மிக பிடித்தது" என்றார்கள். இத்தனைக்கும் 3 இடியட்ஸ் நாங்கள் பல முறை பார்த்த படம். போர் அடித்தாலே DVD-யில் 3-இடியட்ஸ் போட்டு பார்ப்போம். " வசனம் முழுக்க புரிஞ்சிது. அதில் சப் டைட்டில் பார்க்கிரதிலேயே இருப்போம்" என்பது தான் அவர்கள் சொன்ன முக்கிய காரணம். 

98 சதவீதம் 3 இடியட்ஸ் படத்தை விட்டு கேமிரா ஆங்கில வரை எதையும் மாற்ற வில்லை (மாதவன் தன் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது அப்பா தொட்டில் அருகே நின்று குனிந்தபடி " இஞ்சினியர் பிறந்திருக்கான்" என்பது ஓர் உதாரணம்). மேலும் ஹிந்தி போலவே விஜய் எப்போதும் ரவுண்ட் நெக் டி ஷர்ட் போட்டிருப்பார். ஸ்ரீகாந்த் எப்போதும் காலர் வைத்த டி ஷர்ட்டும், ஜீவா ஜிப்பா மாதிரி ஒரு முழு கை சட்டையும் அணிந்திருப்பார்.  

பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். அஸ்க லஸ்கா பாட்டு தான் படம் போகும் முன் எனது favourite. சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் என்ற இரு செம பாடகர்கள் பாடியது. பாட்டின் மெட்டு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

இதனை படமாக்கிய விதம் டிபிகல் ஷங்கர் ஸ்டைல் என நாம் சொல்லும் முன் அந்த பாட்டில் ஷங்கரே வந்து "  Foreign  லொகேஷன் " " குத்து பாட்டு " என்றெல்லாம் கார்ட் காட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது. இந்த பாட்டின் கடைசியில் ரயிலுக்கு பெயின்ட் அடித்து வயல் நடுவே ஓட விட்டிருக்கும் ஷாட், ஷங்கர்  ஸ்டைல் எனினும் செம அழகு !!

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த என மூன்று ஹீரோ இருக்கும் போது இன்னொரு நபருக்கு (வசந்த் டிவி ஓனர் பையன்- அவர் பேரும் விஜய் என ஞாபகம் ) பாட்டு வைத்திருப்பது ஆச்சரியம் !!

CASTING 


நடிப்பில் முதலிடம் விஜய் சத்யராஜ் இருவருமே தட்டி செல்கிறார்கள். விஜய் அமீர் அளவு செய்ய மாட்டார் என முதலிலேயே நினைத்திருந்தேன். ஆனால் அவருடன் ஒப்பிட எண்ண முடியாத படி தன் பாணியில் அசத்தி விட்டார். அந்த காரக்டர் மிக சரியாக பொருந்துகிறது என்பதுடன் டான்சில் அசத்தி இருக்கிறார். காமெடி, செண்டிமெண்ட் என கலந்து கட்டி அடிக்கும் லட்டு மாதிரி காரக்டர். சத்ய ராஜிடம் அவர் ஸ்டைலில் " டைம் அப்! டைம் அப் " என தகடு தகடு மாதிரி சொல்வது cute. மற்ற அனைவருக்கும் நடிக்க வாய்ப்பு தந்ததுடன் எந்த விதத்திலும் இயக்குனரின் வேலையில் தலையிடாதது தெளிவாய் தெரிகிறது. விஜய் படத்தில் சண்டை ஒன்று கூட இல்லை என்பது எத்தனை பெரிய ஆச்சரியம் !!

விஜய், நடிகர் சூர்யா போல படங்களை பொறுமையாய் தேர்வு செய்து இது போன்ற படங்களில் நடித்தால் தான் என்ன? வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று படம் ரிலீஸ் ஆகணுமா என்ன? வேலாயுதம், திருமலை போன்ற படங்கள் வெற்றி என்றாலும் அவற்றை விடுத்து meaningful படங்களில் நடிப்பது மட்டுமே அவரை உயர்த்தும் !

சத்யராஜ்... அடடா. அசத்தல் ! நடிக்க வந்த புதிதில் வில்லன் காரக்டரில் வெற்றி கொடி நாட்டியவர் தானே ! நெகடிவ் காரகடரில் நிச்சயம் நன்கு நடிப்பார் என ஊகித்து அவரை பிடித்துள்ளார் இயக்குனர். பின்னி விட்டார் மனிதர். திருச்சி ஜோசப் கல்லூரியில் இதே மாதிரி ஒரு eccentric புரபசர் இருப்பார்.  அவர் பேப்பர் திருத்தினால் ரெண்டு மூணு பேர் பாஸ் செய்வதே கஷ்டம். ஒவ்வொருவரும் இது போன்ற காரக்டரை நிச்சயம் சந்தித்திருப்பார்கள் ! சத்தியராஜுக்கு ஹீரோ பாத்திரம் கிடைக்க விடில் நாசர் (முந்தைய) ரகுவரன் போல இத்தகைய காரக்டரில் அவரால் முடியும் வரை நடிக்கலாம் !!

ஜீவா- தற்போதைய இளம் நடிகர்களில் எனக்கு பிடித்தவர்களில் ஒருவர். அருமையாக செய்துள்ளார். 

ஸ்ரீகாந்த்- படமே இவர் பார்வையில் தான் விரிகிறது. எவ்வளவு பெரிய Opportunity! நன்கு பயன் படுத்தியுள்ளார். 

இலியானா - சில காட்சிகளில் அசத்தலாகவும் சில காட்சிகளில் சொதப்பலாகவும் செய்தாலும் மொத்தத்தில் பாஸ் செய்து விடுகிறார். தொடர்ந்து தமிழில் நடித்தால்,  இடுப்பழகி சிம்ரன் இடத்தை பிடிக்க வாய்ப்புண்டு. கிளைமாக்சில் நண்பர்கள் விஜய் யார் என அறிந்து கொண்டு ஆச்சரியமாக பேச, இவர் ஒரு பக்கம் " என்ன உன் பேரு? கொச கொசன்னு.. எனக்கு பிடிக்கலை. அந்த பேரை என் பேர் பின்னாடி போட்டுக்க மாட்டேன் " என  பேசி கொண்டிருப்பது நைஸ்

 சத்யன் : என்ன சொல்லி பாராட்டுவது ! இத்தனை important காரக்டர் இது வரை இவர் செய்ததில்லை. ஒரு பெரிய starcast உள்ள படத்தில் ஷங்கர் இவ்வளவு முக்கிய பாத்திரம் எப்படி நம்பி கொடுத்தார் என தெரிய வில்லை. ஆனால் அதனை முழுதும் சரி என நிரூபித்து விட்டார். குறிப்பாய் கல்லூரி விழாவில் இவர் மைக்கில் பேசும் ஐந்து நிமிடமும் தியேட்டர் விடாமல் குலுங்கி குலுங்கி சிரிக்கிறது. தொடர்ந்து ஐந்து நிமிடம், கொஞ்சமும் நிறுத்தாமல் எந்த படத்தில் சிரித்தோம் என நிஜமாய் தெரிய வில்லை. அதே போல இவருக்கு இன்னொரு அருமையான சீன் லைப்ரரி சீன். ஸ்ரீ காந்த் மற்றும் விஜய் போனில் இவருடன் " நீங்க தான் பாம்ப் போடுரீங்கலாமே" என போலிஸ் போல பேசும் டையலாக் செம காமெடி. சத்யனுக்கு இது Lifetime Character ! . இதை விட பெட்டர் காரக்டர் இவர் இனி செய்வது நிச்சயம் கஷ்டம் !

ரின்சன்: விஜய் டிவியில் டான்ஸ் ஆடும் ரின்சன் மில்லி மீட்டர் என்கிற காரக்டரில் நன்கு நடித்துள்ளான். முதல் படம் மாதிரியே தெரியலை. 

டைரக்டர் ஷங்கர் :

தொடர்ந்து தன் கதைகளையே எடுத்த ஷங்கர் இந்த படத்தை மிக relaxed ஆக எடுத்திருப்பார் என நினைக்கிறேன். இந்த கதை தோற்காது என அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஒரிஜினல் படம் பார்க்காதோர் ரொம்ப ரொம்ப ரசிப்பார்கள். அதனை பார்த்தவர்களும் ஏமாற மாட்டார்கள். அந்த விதத்தில் படம் எடுத்தது பெரிய விஷயம் !

சரியான ஆட்களை தேர்ந்தெடுத்ததில் பாதி வேலை முடிந்து விட்டது. ஒரு ரீ மேக் படத்தை மிக சரியாக தெளிவாக அதன் -soul - குலையாத படி எப்படி எடுப்பது என்பதை இந்த படம் பார்த்து நிச்சயம் தெரிந்து கொள்ளலாம்.


கல்லூரி கதை என்றாலே காதல் பக்கம் தான் அதிகம் போய் விடுவார்கள். அதை விடுத்து அவர்கள் career என்பதை மட்டுமே பேசும் கதை இது. இந்தி culture-க்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஆனால் ஆச்சரியமாய் இந்த படம் முழுதும் நமக்கும் பொருந்துகிறது

ஒரு சில ஸ்லிப்ஸ் இருக்கின்றன. படம் 98-ல் நடப்பதாக காட்டுகிறார்கள். மாதம் ரெண்டாயிரம் சம்பாதிக்கும் ஜீவா தந்தை அப்போதே செல்போன் வைத்திருப்பாரா என்ன ? "இருக்கான்னா..இடுப்பிருக்கான்னா " பாடல் கொட்டாவி வர வைத்து விடுகிறது. படம் தொய்வடையும் ஒரே இடம் அது தான். அந்த பாடலை வெட்டி இருக்கலாம்.

தியேட்டர் சிப்ஸ் :

வேளச்சேரி ராஜ லட்சுமியில் தான் பார்த்தோம். பாக்ஸ் ஏ. சி செய்து நல்ல சவுண்ட் எபக்ட் தந்துள்ளனர். பாக்ஸ் மட்டும் நீட் ஆக உள்ளது. மற்றபடி சுமாரான தியேட்டர் தான்.

டிக்கெட் புக் பண்ண போகும் போது ஏழாம் அறிவு படம் ஓடி கொண்டிருந்தது. பாக்ஸ் எப்படி இருக்கு என பார்க்கலாமா என கேட்க, " வாங்க சார் பாருங்க" என்றனர். திரையில் ஏழாம் அறிவு வில்லன் போலிசை சுட்டு கொன்று கொண்டிருக்க, பாக்ஸ் உள்ளே நுழைந்து சற்று நேரம் பார்த்தேன். நல்ல ஏ. சி. சவுண்ட் எபக்ட்டும் ஓகே என்ற பிறகு தான் நண்பன் டிக்கட் வாங்கினேன். இப்படி ஒ. சி யில் ஒரு தியேட்டரில் படம் ஓடும் போது நுழைந்து பார்த்தது வேடிக்கையான அனுபவமாக இருந்தது.

நண்பன் படம் தியேட்டர் எபக்ட் நிச்சயம் நன்றாகவே இருந்தது 


3 பைனல் பன்ச்:

1. படம் கிட்ட தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. இது ஒரு குறையா? படம் பார்க்க போவதே மகிழ்ச்சியாக இருக்க தானே ! இப்படி ஒரு படம் மூன்று மணி நேரம் சிரிக்கவும் அழவும் வைக்கிறதென்றால் அந்த நேரம் முழுக்க செம enjoyment தான் !

2. படம் பார்த்து ஒரு மணி நேரமாக நாங்கள் மூவரும் செம மகிழ்ச்சியாக எந்த இடம் பிடித்தது, எங்கு சிரித்தோம் என பேசி கொண்டிருந்தோம். குடும்பத்தோடு பார்த்து மகிழ கூடிய படம். எனக்கு தெரிந்த வரை one of the best movies of Vijay !

3. படம் தயாரிப்பாளருக்கு லாபம் தர கூடிய ஹிட் என்பது நிச்சயம். எவ்வளவு பெரிய ஹிட் என பொறுத்திருந்து பார்க்கலாம்

நண்பன் - இவன் அனைவரும் ரசிக்கிற நண்பன் !

Wednesday, January 11, 2012

சென்னை புத்தக சந்தை: பிரபல எழுத்தாளர்கள் வாசிக்க சொல்லும் புத்தக லிஸ்ட்

புத்தக சந்தை பற்றிய சென்ற பதிவில் " நீங்கள் வாங்கிய புத்தகத்தை சொல்லியே ஆகணும்" என நண்பர்கள் பலரும் கூறினர்.

"நான் அவ்ளோ வொர்த் இல்லீங்க"ன்னு சொன்னாலும் கேட்கலை. சரி நம்ம இமேஜ் டேமேஜ் ஆனாலும் பரவாயில்லை என அந்த லிஸ்ட்டை இங்கு பகிர்கிறேன்.


நான் மிக மிக அதிகம் வாசித்தது 15 வயது முதல் 25 வயது வரை தான். ( 26 வயதில் கல்யாணம் ஆன பின் வாழ்க்கையை படிக்கவே நேரம் சரியா போச்சு). தீவிர வாசிப்பில் இருந்த காலத்தில் தினம் குறைந்தது ஒரு புத்தகம் வாசிப்பேன். (இப்போது வாரம் ஒன்று !) சுஜாதா, பால குமாரன், தி. ஜானகிராமன் இவர்களின் படைப்புகள் பெரும்பாலும் படித்திருப்பேன். மேலும் பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன் படைப்புகளும் நிறைய வாசித்திருப்பேன். ரொம்ப அனுபவித்து, சிரித்து, ரசித்து பிடித்தமான எழுத்துகளை வாசித்த காலம் அது !

தமிழின் சிறந்த நாவல், சிறுகதைகள் பலவற்றை கல்லூரி காலத்தில் வாசித்ததால், இப்போது வாங்கும் புத்தக லிஸ்டில் அவை இல்லை என்பதை அறிக ! மேலும் தற்போது சீரியஸ் வகை எழுத்துகள் படிக்க நேரம் + பொறுமை இல்லை. கி. ரா உள்ளிட்ட சிலரின் புத்தகங்கள் வாங்கி சில வருடங்களாக படிக்காமல் இன்னும் அப்படியே உள்ளது. இந்த முஸ்தீபு எதற்கு என்றால் நான் வாங்கிய புத்தக லிஸ்ட் ரொம்ப light ரீடிங் வகையாக இருக்கும் என்பதை உங்களுக்கு உணர்த்தவே !

நான் வாங்கிய புத்தக லிஸ்ட்டை மட்டுமே பகிர்ந்தால் உங்களுக்கு அதிக பலன் இருக்காது என பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் புத்தக லிஸ்ட்டும் தந்துள்ளேன்.

நான் வாங்கிய புத்தகங்கள் :

1 . எஸ். ரா வின் "உலக இலக்கியம்" குறித்த பேச்சுக்கள் அடங்கிய ஏழு DVD-க்கள் (டிஸ்கவரி புக் பேலஸில்)  (Rs. 630)
2 . சிவகுமாரின் " என் கண்ணின் மணிகளுக்கு" (அல்லையன்ஸ் பதிப்பகம்)  (Rs. 55)
3. அன்னா ஹசாரே குறித்த ஜெயமோகன் புத்தகம் (கிழக்கு) (Rs. 20)
4. அடி தி. ஜானகிராமன்  (Rs. 10)
5. அபூர்வ மனிதர்கள் - தி. ஜானகிராமன் (Rs. 40) 
6. கூடங்குளம்  விழித்தெழும்   உண்மைகள் - அ. முத்து கிருஷ்ணன் (Rs. 15) 
7. தகவல் பெறும் உரிமை பயன்படுத்துவது எப்படி (Rs. 35) 
8. கைதானால் உங்கள் உரிமைகள் (ஹலோ இது உங்களுக்காக ஒரு பதிவு எழுத  தான் )(Rs. 12) 
9. விரும்பி சொன்ன பொய்கள் -சுஜாதா(Rs. 40) 
10. விபரீத கோட்பாடு -சுஜாதா(Rs. 45) 
11. ஆஸ்டின் இல்லம் -சுஜாதா(Rs. 30) 
12. அப்பா  அன்புள்ள அப்பா -சுஜாதா(Rs. 30) 
13. மத்யமர் -சுஜாதா(Rs. 65) 
14.ஸ்ரீரங்கத்து தேவதை கள் -சுஜாதா (Rs. 80) 
15. மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா (Rs. 45) 
16. You are the world - J. Krishnamoorthy  (Rs. 40)
17. Freedom from the unknown J. Krishnamoorthy (Rs. 20)
18. தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டி (Rs. 125)
19. மெட்ராஸ்- சென்னை (கிழக்கு பதிப்பகம்)- (Rs. 30)
20. வனவாசம்-  கண்ணதாசன் (Rs. 120)-  கண்ணதாசன் பதிப்பகம் 

இவை தவிர என் பெண்ணுக்கும் மனைவிக்கும் நிறைய புத்தகங்கள் வாங்கினேன். 

****

இனி பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் புத்தக லிஸ்ட்...... 

இது "வேர்கள்" என கல்லூரி மாணவர்கள் நடத்தும் இதழில் வெளியிட்டுள்ளனர். இந்த இதழ் புத்தக சந்தையில் ஒரு ஸ்டாலில் கிடைத்தது

மனுஷ்ய புத்திரன்

பாரதியார் கவிதைகள் மற்றும் கதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள்
ஸ்ரீரங்கத்து தேவதை கள் -சுஜாதா
பேரிசுக்கு போவோம் - ஜெயகாந்தன்
தண்ணீர் அசோகமித்திரன்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
கு. அழகிரிசாமி கதைகள்
கோபல்ல கிராமம் - கி. ராஜ நாராயணன்
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்

பழ. நெடுமாறன் 
பாஞ்சாலி சபதம் - பாரதியார்
திருக்குறள் - திருவள்ளுவர்
புதுமைப்பித்தனின் கதைகள்
சிவகாமியின் சபதம் - கல்கி
பிற்கால சோழ சரித்திரம் - சதாசிவ பண்டாரத்தார்
அழிவற்ற காதல் - ஆப்ரஹாம் லிங்கன்
மாசொவின் நெடும் பயணம்
Story of Civilization – Will Durant
History of English speaking people – Winston Churchill

சுப்ரஜா

நைலான் கயிறு -சுஜாதா
ராமர் காவியம் - வாலி
எங்கே போகிறோம் - அகிலன்
மரப்பசு - தி. ஜானகிராமன்
பசித்த மானுடம் - கரிச்சான்
தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
Cather in the rain – J.D. Salinger
Veronika decide to die – Paulo Cohelo
தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி
எல்லாமே எங்கே போகிறோம் - இந்திரா பார்த்த சாரதி

யுக பாரதி 
ஜே. ஜே சில குறிப்புகள்
என் கதை - நாமக்கல் கவிஞர்
தாய் - மாக்சிம் கார்க்கி
அபிதா - லா. சா. ராமாமிர்தம்
அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்
கள்ளம் - தஞ்சை பிரகாஷ்
சிறுகதைகள் - சுப்ரமணியம்
மூன்றாவது உலகம் - ஜெயமோகன்
கோபல்ல கிராமம் - கி. ராஜ நாராயணன்

சாரு நிவேதிதா

ரோமியோ ஜூலியட் - ஷேக்ஸ்பியர்
புயலிலே ஒரு தோனி- பா . சிங்காரம்
Thief’s journal – Jean Genet
Zobra the greek – Nicos Kazantzakis
Nota for the underground – Fyodor Dostoyersky
Mexie Corelli Norel
நவீனின் டையரி - நகுலன்
காகித மலர்கள் - ஆதவன்
உன்னை போல ஒருவன் - ஜெயகாந்தன்

மணா
ஊர் சுற்றி புராணம்
தமிழ் நாடு – A.K. செட்டியார்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
காலச்ச்சுவடு - வெங்கடாசலபதி
பொய்த்தேவு - க. நா. சு
ஜே. ஜே சில குறிப்புகள்
தாய் - மாக்சிம் கார்க்கி
புதுமைப்பித்தனின் கதைகள்
ஜே. ஜே சில குறிப்புகள்
காகித மலர்கள் - ஆதவன்

காசி ஆனந்தன்
சிவகாமியின் சபதம் - கல்கி
சித்திர பாவை - அகிலன்
ஆத்மாவின் ராகங்கள் - தீபம் பார்த்த சாரதி
கல்லுக்குள் ஈரம் - நல்ல சிவம்
செம்மீன் - சிவ சங்கரன் பிள்ளை
ஹோசிமின், மா சே துங் - கவிதைகள்
தாய் - மாக்சிம் கார்க்கி
சிறுகதைகள் - ஜெயகாந்தன்
பாரதியார், பாரதிதாசன்கவிதைகள்
அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்

***
மேலும் இலக்கிய சூறாவளி கோபி தன் ப்ளாகில்  சில பிரபலங்களின் பரிந்துரைகளை கொடுத்திருந்தார். அதனை நீங்கள் இந்த லிங்குகளில் பார்க்கலாம் :

தமிழின் சிறந்த பத்து நாவல்கள்


பதிவர்கள் / பஸ்ஸர்கள் பரிந்துரைக்கும் நாவல்கள்

************
டிஸ்கி: நாளை மாலை குடும்பத்துடன் நண்பன் பார்க்க போறோம் ! அதன் விமர்சனம் விரைவில்....
Related Posts Plugin for WordPress, Blogger...