Tuesday, April 29, 2014

கோவாவின் சிறந்த 2 பீச்களும், அற்புத பீச் விளையாட்டுகளும்

கோவாவின் முக்கிய பீச்களான பாகா (Bhaga ) & கலங்கட் பற்றி இந்த பதிவில்  பார்க்கலாம்.. 

கோவா - வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என இரு பிரிவுகளை கொண்டது. வடக்கு கோவாவில் தான் பல முக்கிய பீச்கள் மற்றும் பீச் விளையாட்டுகள் உள்ளன. தெற்கு கோவாவில் உள்ள பீச்கள் அதிகம் மக்கள் செல்லாதவை.. மிக அமைதியானவை.. வெளி நாட்டவர் வந்து சன் பாத் எடுக்க கூடிய இடங்கள்.... (ஆஹா அப்ப அங்கே தான் போகணும் அப்படிங்கறீங்களா? ரைட்டு !)

பாகா மற்றும் கலங்கட் பீச் - இந்த 2 இடத்தில் மட்டும் தான் மிக அதிக அளவு  பீச் விளையாட்டுகள் நிகழ்கின்றன. 

ஏன் பீச் விளையாட்டு விளையாட வேண்டும் ? 

கோவாவில் இருக்கும் எல்லா பீச்களையும் சும்மா பார்த்து, கால் நனைத்தால் போதுமா?  ஒவ்வொரு ஊரின் சிறப்பம்சத்தை பொறுத்து அமைக்கப்படும்  இத்தகைய விளையாட்டுகளை அவசியம் விளையாட வேண்டும்... அது தான்... Fun part  யே ! உதாரணமாய் குளு மனாலி சென்றால் - பனிக்கட்டி சருக்கல் - ஆற்றில் செல்லும் ரிவர் ராப்டிங் செல்லாமல் வரவே கூடாது.. அங்கு பனி அதிகம் என்பதால் அதை அடிப்படையாய்  கொண்டு விளையாட்டுகள் இருக்கும்;  )

நாங்கள் பாகா பீச்சிற்கு சென்ற முதல் நாள் மாலையே சென்று விட்டோம். நாங்கள் சென்று சேர்ந்த போது மாலை ஆறு மணி. எனவே விளையாட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன.


காதலியின் பிறந்த நாளை கடற்கரையில் கேக் வெட்டி இந்த ஜோடி கொண்டாடியது; அந்த நிகழ்வை அவர்கள் காமிராவில் வீடியோ எடுக்க சொல்லி அவர்கள் கேட்டது... அடியேனை ! 

கோவா முழுவதும் இருப்பது அரேபியன் கடல் தான் என்றாலும், ஒவ்வொரு பீச்சும் மாறுபடுவது அது எந்த சூழலில் அமைந்திருக்கிறது என்பதில் தான்... பாகாவை பொறுத்த வரை அதனை சுற்றி ஒரு புறம் மலை அழகாக விரிந்து கிடக்கிறது. மேலும் பெரிய கரை.... அதன் ஓரத்தில் சன்பாத் எடுக்க பல படுக்கைகள் அமைத்திருக்க, காதலர்களும், வெளிநாட்டவரும் அதில் படுத்த வண்ணம் கடலை ரசிக்கின்றனர் ...

பாகா பீச் அருகே பல அருமையான ஹோட்டல்கள் உள்ளன. நாங்கள் சாப்பிட்டது பிரிட்டோ  என்ற ஹோட்டலில். ரொம்ப அட்டகாசமான ஹோட்டல் அது. பாதிக்கும் மேல் வெளிநாட்டவர் தான் ஹோட்டலை நிறைத்திருந்தனர். நாங்கள் கோவாவில் சாப்பிட்ட இடங்களிலேயே விலை அதிகம் என்றால் இங்கு தான் என நினைக்கிறேன்.

உணவின் சுவை அற்புதம். சில மீன்கள், பெரிய நண்டு போன்றவை அங்கேயே காட்சி பொருளாக வைத்துள்ளனர்.



அதை பார்த்து இந்த மீன் அல்லது நண்டு வேண்டும் என்று சொன்னால், அதன் பின் சமைக்கிறார்கள்.

ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ள விதமே - ஒரு சினிமா செட் போல ரசிக்கும் வண்ணம் உள்ளது.



பாகா - நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால் கடலில் கால் நனைத்து விட்டு - சற்று உலாத்தி விட்டு- மேற்சொன்ன ஹோட்டலில் உணவை முடித்து கொண்டு கிளம்பி விட்டோம்,

அடுத்து - கலங்கட் பீச் பற்றி பார்ப்போம்.....

மதியம் 2 மணி அளவில் கலங்கட் பீச் சென்றடைந்தோம்.... ஏராளமான பீச் விளையாட்டுகள் நடக்கின்றன.

குறிப்பாக பாரா சைலிங், பம்பர், பனானா ரைட் போன்ற நான்கு விளையாட்டுகள் சேர்த்து 1500 ரூபாய் வாங்குகிறார்கள். தனி தனி என்றால் கிட்டத்தட்ட இதே ரேட் வந்து விடும். நன்கு பீச் விளையாட்டை என்ஜாய் செய்யும் ஆள் என்றால் இந்த பேக்கேஜ் எடுத்து கொள்வது நல்லது. ஒவ்வொரு விளையாட்டு முடிந்ததும் எது free - ஆக உள்ளதோ அதற்கு சென்று விடலாம். ஒவ்வொன்றாய்  வாங்கினால்... ஒவ்வொரு முறை சென்று டிக்கெட் வாங்க வேண்டும்.. காத்திருக்க வேண்டும்...

விளையாட்டுகள் பற்றி ...

பாரா சைலிங்

விளையாட்டுகளில் சற்று காஸ்ட்லி இது தான். ஒரு ஆளுக்கு 600 ரூபாய். தவற விட கூடாத விளையாட்டு இது. கோவா போன்ற வெகு சில இடங்களில் மட்டுமே விளையாட முடியும்.

10 அல்லது 12 பேரை ஒரு படகில் நடுக்கடலுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு இன்னொரு படகிற்கு  நம்மை மாற்றி ( துப்பாக்கி பட கிளை மாக்ஸ் இந்த நேரம் நியாபகம் வருகிறது !) அந்த படகில்  ஒரு பாராசூட்டை  அமைக்கிறார்கள். பின் நம் இடுப்பில் பாராசூட் ஹூக்கை கட்டிவிட்டு நம்மை மேலே ஏற்றி கடலின் நடுவே 100- 150 அடி உயரத்தில் பறக்க வைக்கிறார்கள்..

வாவ்... அட்டகாசமான உணர்வு அது...

படகில் இருப்போருக்கு 200 ரூபாய் டிப்ஸ் தந்தால் - "டிப் "(Dip ) என்று சொல்லி நம்மை ஆரம்பத்திலும், கடைசியிலும் கடல் தண்ணீரில் சற்று முங்க வைக்கிறார்கள்.

டிப் "(Dip ) அவசியம் செய்யுங்கள். செம ஜாலியாக இருக்கும். மேலும் அவர்களுக்கு டிப்ஸ் தந்து டிப் செய்வோருக்கு மட்டும் தான் 5 நிமிடம் போல பறக்க வைக்கிறார்கள். மற்றவர்களை ஓரிரு நிமிடத்தில் இறக்கி விடுகிறார்கள்.

டிப்புக்கு எவ்வளவு பணம் என்பதில் மட்டும் சரியாக பேசி வைத்து கொள்ள வேண்டும். சில இடங்களில் ஒவ்வொரு முறைக்கும் 200 ரூபாய் என சில நேரம் "3 முறை டிப் செய்தோம் 600 ரூபாய் தா " என கேட்கும் நிகழ்வும் நடக்கிறதாம்... எங்கள் போட்டில் அப்படி நடக்க வில்லை. 200 ரூபாய் என்பது ஸ்டாண்டர்ட்  ஆக வைத்திருந்தனர்.

முதல் முறை பாரா சைலிங் செல்லும்போது மனைவி மற்றும் மகள் இருவருமே வர வில்லை- நான் மட்டுமே சென்றது அவ்வளவு உகப்பாக இல்லை. காரணம் ... அங்கிருக்கும் எல்லாரும் குருப்பாக  தான் வருகிறார்கள். ஒருவர் மேலே பறக்கும் போது கீழிருந்து கை தட்டி, குரல் எழுப்பி உற்சாகப்படுத்துகிறார்கள். நாமும் மேலே பறக்கும் போது கையசைத்து நமது மகிழ்வை சொல்ல யாரேனும் வேண்டும் இல்லையா ?

உதாரணமாய் மற்றவர்கள் பறந்த போது அவரவர் நண்பர் அல்லது உறவினர் மிக உற்சாகமாய் குரல்  எழுப்பினர்.பறந்தவரும் கீழே இருக்கு தம் நண்பரை பார்த்து மகிழ்ச்சியாய் கை அசைத்தனர். இதுவே நான் பறந்தபோது அப்படி எதுவும் இல்லாமல் அமைதியாய் பறந்தேன்.

பாரா சைலிங் முடித்து விட்டு வந்து மகளிடம் "ரொம்ப அருமையாக இருந்தது...மிஸ் செய்துடாதே... பயப்பட ஒன்றும் இல்லை; போட்டில் நீச்சல் தெரிந்த 3 போட் காரர்கள்  உள்ளனர்.கீழே விழுந்தாலும் அவர்கள் வந்து தூக்கி விடுவார்கள் " என தைரியம் சொல்லி மீண்டும் ஒரு முறை பாரா சைலிங் சென்றோம்...

மகள் செமையாக என்ஜாய் செய்தாள் ...

மற்ற இரு விளையாட்டுகள்

ஜம்பர்

டியூப் ஒன்றில் நாம் அமர்ந்து கொள்ள அதனை ஒரு போட்டில் கட்டி விட்டு - Boat - நம்மை கடலுக்குள் இழுத்து சென்று நனைக்கிறது... இருவராக விளையாடும் விளையாட்டு இது. இதுவும் ரொம்ப ஜாலி ஆன ஒரு விளையாட்டே...

பனானா ரைட்

வாழைப்பழம் போல சைசில் இருக்கும் படகில் - 5- 6 பேரை கடலுக்குள் அழைத்து செல்கிறார்கள். செல்லும்போது அலைகள் நம் மீது அடிக்க - அதுவே ஒரு கொண்டாட்டம். பின் ஒவ்வொருவராய் கடலுக்குள் சற்று நேரம் டிப் செய்து வெளியே எடுக்கிறார்கள்...

இவை தவிர இன்னும் பல விளையாட்டுகளும் உள்ளன. .



முக்கிய விஷயம்.. கலங்கட்  பீச் கரையை நீங்கள் தொட்டதுமே பல ப்ரோக்கர்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்... இந்த விளையாட்டுகளுக்கு அழைத்த படி.. டிக்கெட்டுக்கு மேல் 100 அல்லது 200 ரூபாய் வைத்து இவர்கள் சொல்கிறார்கள். அரசாங்கமே மொத்தமாய் அனைத்து போட்டிற்கும் சேர்த்து டிக்கெட் தருகிறது. அது எந்த இடம் என பார்த்து அங்கு சென்று டிக்கெட் வாங்கி கொள்ளலாம். அங்கு பார்கெயின் எதுவும் செய்ய முடியாது ( வேறு சில பீச்களில் தனி நபர்களே இத்தகைய விளையாட்டுகள் நடத்துகிறார்கள். அவர்கள் விலை சற்று அதிகம் சொல்வர். அங்கு பார்கெயின் செய்ய முடியும் )

முதலிலேயே சொன்னது போல பாகா &  கலங்கட் - இந்த இரு பீச்களில் தான் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறைய இருக்கும். கலங்கட் மிக அதிக கூட்டம் இருக்கும். எனவே நீங்கள் விளையாடி முடிக்க நேரமாகும். பாகா - கூட்டம் சற்று குறைவு எனவே நன்கு என்ஜாய் செய்யலாம்.. 

கோவா செல்லும் எவராலும் - அங்கிருக்கும் எல்லா பீச்களையும் பார்ப்பது கடினம். பாகா மற்றும் கலங்கட் - இரண்டுமே தவற விடக்கூடாத பீச்...
***********

அடுத்த பதிவில்...

கோவா தலைநகரில் இனியதொரு கப்பல் பயணம் 

Tuesday, April 22, 2014

வானவில் - வோட்டர் ஐ. டி குளறுபடி-சாக்லேட் ரூம்- உஸ்தாத் ஹோட்டல்

வோட்டர் ஐ. டி குளறுபடிகள் 

இன்னொரு தேர்தல் வந்து விட்டது. மடிப்பாக்கம் வந்து ஏழு வருடமாக தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்காக போராடி வருகிறேன். இதுவரை எத்தனை முறை அதற்கான பாரம் நிரப்பி கொடுத்தேன் என்று கணக்கே இல்லை. தாம்பரம் - தலைமை அலுவலகம் பல முறை சென்றும் பார்த்தாகி விட்டது. ஊஹூம்

நமக்கு தான் இப்படி என்றால் - புழுதிவாக்கம் அரசு பள்ளிக்கு சமீபத்தில் சென்றபோது அங்குள்ள ஆசிரியை இது ரொம்ப சாதாரணம் என்றார். 10 - 15 முறைக்கு மேல் அப்ளிகேஷன் நிரப்பி தந்தும் வாக்காளர் அடையாள அட்டை வருவதே இல்லையாம்.. வி. ஏ . ஓ அலுவலகம், தாம்பரம் ஆபிஸ், அது இது என்று அலைய  விடுகிறார்களே ஒழிய வாக்காளர் அடையாள அட்டை கைக்கு வருவதே இல்லை.

என்னிடம் பேசிய டீச்சர் தனது மகளுக்கு இந்த அட்டை வாங்குவதற்குள் தான் பட்ட பாட்டை சொல்லி நொந்து கொண்டார். " நாங்க தான் எல்லா வீட்டுக்கும் போய் தகவல் வாங்குறோம்; எங்களுக்கே ரொம்ப நாள் கார்ட் தரலை. பெண்ணுக்கு ஏதாவது ஒரு ஐ. டி கார்டாவாது வேண்டும் என ரொம்ப போராடி வாங்கினோம்" என்றார்

நாம் இதற்கான அப்ளிகேஷன் நிரப்பி தந்தும் ஏன் அரசாங்கத்தால் சரியாக கார்ட் தர முடியவில்லை? நாம் நிரப்பி தருகிற அப்ளிகேஷன் என்ன ஆகிறது ? ஒவ்வொரு முறை போய் கேட்கும் போதும் புதிதாக நிரப்பி தர சொல்லி அவர்கள் தான் சொல்கிறார்கள்..

அரசாங்கம் மீதும் அரசு துறைகள் மீதும் வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் தருகிற விஷயங்களாக இவை இருக்கின்றன... ஹூம்

அழகு கார்னர் 

நிவேதா தாமஸ்.. போராளி உள்ளிட்ட படங்களில் நடித்தவரை ஜில்லாவில்விஜய்க்கு தங்கையாக்கினர்  :((

அழகு, திறமை இரண்டும் இருந்தும் தமிழ் திரை உலகம் ஏன் இன்னும் கண்டு கொள்ளாமல் இருக்கிறதோ தெரியவில்லை




டிவி பக்கம்

ஆதித்யா சானலில் கல்லூரிகளுக்கு சென்று தமிழில் பேச சொல்லி நடத்தும் நிகழ்ச்சி செம காமெடியாக உள்ளது. ஆங்கிலத்தில் சில வரிகளை சொல்லி தமிழில் சொல்லுங்க என்பதும், அவர்கள் தரும் பதிலுக்கு நிகழ்ச்சி காம்பியர் தரும் கவுண்டர் மற்றும் முக பாவமும் பட்டாசு !

இதில் யாரேனும் ஒரு பிரபலத்தின் புகைப்படம் காட்டி " யார் இவர்? " என கேட்டு கல்லூரி மாணவர்களின் அறியாமை வேறு பறை சாற்றுகிறார்கள்.

இந்த வாரம் ம. பொ. சி புகைப்படத்தை காட்டி யாரென்று கேட்க, " பாரதியார் சொந்தக்காரர்" என்றும் " வ. உ  சி" என்றும் அவர்கள் சொன்ன பதில் தமிழ் ஆர்வலகளுக்கு கோபத்தை வரவழைத்திருக்கும்.. !

உணவகம் அறிமுகம் - சாக்லேட் ரூம் வேளச்சேரி 



வேளச்சேரி 200 அடி சாலையில் உள்ளது சாக்கேலேட் ரூம்; பெயருக்கேற்ப சாக்லேட் வகை இங்கு அதிகமாக கிடைக்கிறது. 11 காலை டு 11 இரவு கடை திறந்திருக்கும் . மாலை தான் கூட்டம் ! மிக அழகான ஆம்பியன்ஸ்...

பிட்சா போன்றவையும் இங்கு உண்டு; ஆனால் சாக்கலேட் தான் பலரும் விரும்புகிற உணவாக இருப்பதாக கடைக்காரர் கூறினார். (கீழே இவர்களுக்கு ஒரு துணிக்கடை உண்டு.. அது நாங்கள் வழக்கமாய் செல்லும் கடை.. இரண்டிற்கும் ஓனர் ஒருவரே என்பதால், அவர் பல ஆண்டுகளாக நல்ல பழக்கம்)

பெண்களுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் அவர்களை தான் அதிகம் காண முடிகிறது ( ஹீ ஹீ )

நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவத்திற்காக ஒரு முறை விசிட் அடியுங்கள்



பாடல் கார்னர் 

இந்த வாரம் வெளிவர உள்ள " என்னமோ எதோ" படப்பாடல் இது..

இமான் என்றால் துள்ளல் இசை தான் அதிகம் இசைப்பார் என்பதற்கு மாறாக ஒரு சோக மற்றும் மெலடி பாடல் இது.. பாடியவர் ரொம்ப ஸ்பெஷல் ஆன ஒருவர்... பாருங்கள்...




ஐ. பி. எல் கார்னர் 

இந்த வருட ஐ. பி. எல் லில் பாவரைட் அணி எதனையும் இப்போதைக்கு சொல்ல முடியவில்லை. ஆனாலும் மொஹாலி அணி அதன் இரண்டு வீரர்களுக்காக கவனத்தை கவர்கிறது..

மேக்ஸ் வெல்  மற்றும் மில்லர். அடுத்தடுத்து 205 மற்றும் 190 ரன்களை இந்த இருவரணி அனாயசமாக அடித்து ஜெயித்தது கண் கொள்ளா காட்சி.

மேக்ஸ் வெல் ஆட்டத்தை இதுவரை பார்க்கா விடில் இன்று மாலை நடக்கும் மேட்சில் அவசியம் பாருங்கள் ( இன்று மொஹாலி Vs   சண் ரைசர்ஸ் ) அடேங்கப்பா. என்னா அடி.. 5- அல்லது 10 பந்துகளுக்கு பிறகு ஒரே சிக்சர் மழை தான். இந்த வருட ஐ. பி. எல் லில் அசத்த போகிற வீரர்களில் மேக்ஸ் வெல்லுக்கு மிக பெரிய இடம் இருக்க போகிறது. அவரை விரைவில் அவுட் ஆக்காமல் 30 - 40 பந்துகள் ஆட விட்டால் எந்த அணியும் ரத்த கண்ணீர் சிந்த வேண்டியது தான்.

இன்னொரு பக்கம் கில்லர் மில்லர்... 20 பந்துகளில் 50 அடிப்பதை வழக்கமாக  கொண்டுள்ளார்.

இந்த இருவரை தவிர இந்த அணியில் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை எனினும் இதுவரை இந்த இருவர் அணியே வெற்றி தேடி தந்து  கொண்டிருக்கிறது

சென்னை முதல் மேட்சை விட நல்ல பவுலிங் வரிசையை அமைத்து கொண்டு நேற்று மிக பெரும் வெற்றியை ஈட்டியது மகிழ்ச்சி. இருப்பினும் பிரேவோ இல்லாதது பெரும் பின்னடைவு தான்..

பார்த்த படம் - உஸ்தாத் ஹோட்டல் 

அட்டகாசமான படம்.. எப்படித்தான் இவ்வளவு அழகான கதையெல்லாம் யோசிக்க முடிகிறதோ ?

பெண்களுடனே வளர்ந்து சமையலின் மீது ஆர்வம் கொண்ட ஹீரோ- ஒரு சந்தர்ப்பத்தில் தனது தாத்தாவுடன் சில மாதங்கள் இருக்க நேரிடுகிறது. தாத்தா வைத்திருக்கும் ஹோட்டலின் பெயர் தான் உஸ்தாத் ஹோட்டல். வெளிநாடு செல்ல துடிக்கும் அவனை உஸ்தாத் ஹோட்டல் என்ன செய்தது என்பது தான் கதை.

அன்பு தான் படத்தின் அடிநாதம். நகைச்சுவை மேலும் மனிதர்களின் மென் உணர்வுகளை அழகாக தொட்டு செல்கிறார் இயக்குனர்.

முக்கிய பாத்திரத்தில் திலகன்  .. என்னா நடிப்புடா சாமி ! இறுதியில் அவரை ஒட்டி வரும் ஒரு டுவிஸ்ட் கவிதை.. (அதை அறிய - டைட்டில் ஓடி முடியும் கடைசி ஷாட் வரை காத்திருக்க வேண்டும்.. )

மலையாளத்தின் அற்புதமான படங்களில் ஒன்றான இப்படத்தை அவசியம் பாருங்கள் !

Saturday, April 19, 2014

தெனாலி ராமன் - சினிமா விமர்சனம்

டிவேலு நடித்து சில ஆண்டுகள் கழித்து ஒரு படம்... அதுவே முதல் நாள் - முதல் காட்சி பார்க்க காரணம்...

நாகேஷ், கவுண்டமணிக்கு பிறகு என்னை அதிகம் கவர்ந்த - அவர்களை விடவும் இப்போது நான் அதிகம் ரசிக்கும் காமெடியன் வடிவேலு. இன்றைக்கும் சிரிப்பொலி மற்றும் ஆதித்யாவில் அவரது காமெடி பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பது தொடர்கிறது.

ஜெ -வை ஒரு தேர்தலில் எதிர்த்தார் என - ஒட்டுமொத்த சினிமா உலகமும் மார்க்கெட் உச்சத்தில் இருந்த அவரை ஒதுக்கி வைததது காலக்கொடுமை ! நம்ம ஊரில் தான் இப்படிப்பட்ட விஷ(ய)மெல்லாம் நடக்கும்..

இருக்கட்டும் தெனாலி ராமனுக்கு வருவோம்..



ஒரு ஊரில் ஒரு ராஜா.. .(நம்ம வடிவேலு) செம ஜாலியாக வலம் வருகிறார். மக்கள் கஷ்டம் அவருக்கு தெரியாததால் புரட்சி படை ஒன்று அவரை கொல்ல நினைக்கிறது. இன்னொரு வடிவேலு அந்த புரட்சி படையை சேர்ந்தவர்... அரண்மனைக்குள் வந்து ராஜாவையும் மாற்றி, மக்களையும் எப்படி காக்கிறார் என்பது கதை...


ஹலோ.. நான் சொன்னது 23- ஆம் புலிகேசி கதை மட்டுமல்ல ... தெனாலி ராமன் கதையும் இதே தான் !

அவுட்லைன் மட்டும் அப்படியே வைத்து கொண்டு - நாம் சிறுவயதில் கேட்ட தெனாலி ராமனின் குட்டி கதைகளை மானாவாரியாகமிக்ஸ் பண்ணி அடித்துள்ளனர்!

துவக்கம் ஓரளவு ரசிக்க வைத்தாலும் போக போக தெரிந்த காட்சிகள்; அதை ஜவ்வு மாதிரி இழுப்பது..என நோகடித்து விடுகிறார் புது இயக்குனர்.

" எல்லாம் நன்மைக்கே " என்று ஒரு கதை நாம் கேள்விபட்டிருப்போம்.. வேட்டைக்கு போகும் முன் - ராஜா கை வெட்டுப்பட - அதனால் காட்டு வாசிகள் அவரை கொல்லாமல் விடும் கதை.. படம் முடியும் தருவாயில் இதனை 15 நிமிடம் பிளாஸ்பேக்காக ஓட்டுகிறார்கள் .. முடியல ! (அதில் 10 நிமிடம் செம தூக்கம் ....)

வடிவேலு இல்லாமல் வேறு யார் நடித்திருந்தாலும் படத்தை முழுதும் பார்க்கவே முடியாது; நாங்கள் பார்த்த தாம்பரம் வித்யா தியேட்டரில் இடைவேளைக்கு பின் கால் வாசி மக்கள் அப்பீட் ஆகி விட்டார்கள் ;



ஹீரோயின் பார்க்க மட்டும் அழகு. அப்பா போல இருக்கும் வடிவேலுவுடன் அவர் ஜோடி போட்டு பாடுவதெல்லாம் (ஆணழகா... என ஒரு பாட்டு.. யாரு... வடிவேலு !!) நெளிய வேண்டியிருக்கிறது. இமான் இசையில் பாடல்கள் ஸெல்ப் எடுக்க வில்லை. பின்னணி இசை ஓகே,

படத்தின் மிக பெரிய மைனஸ்.. எல்லா காட்சிகளும் ஊகிக்கும் படியோ, முன்பே தெரிந்தோ இருப்பது தான். மேலும் காமெடி என அவர்கள் செய்வதெல்லாம் நமக்கு பெரிய அளவு சிரிப்பை வரவழைக்க வில்லை; வடிவேலு மேனரிசம் மற்றும் நடிப்பு சிறு புன்முறுவலை நம்முள் வரவழைக்கிறது .. அவ்வளவே!

கிளை மாக்ஸ் ஆரம்பிக்கிறது என நினைக்கும்போது திடீரென படத்தை முடித்து டைட்டில் போடுகிறார்கள்... ஜாலியான அல்லது இன்னும் சற்று வெயிட் ஆன கிளை மாக்ஸ் வைத்திருக்கலாம்.

இந்திர லோகத்தில் அழகப்பன் அளவு மோசமில்லை என்றாலும் தியேட்டரில் காசு கொடுத்து பார்க்கும் அளவு வொர்த் இல்லை.. விரைவில் டிவியில் போடும்போது நிதானமாக பார்த்து கொள்ளலாம்...

நிற்க. என்னுடன் 13- 15 வயது பசங்க மூவரை அழைத்து சென்றிருந்தேன். அவர்களுக்கு படம் மிகவும் பிடித்திருந்தது !!

வடிவேலு என்கிற மனிதரின் திறமை சற்றும் குறையாமல் அப்படியே இருக்கிறது.. அவரை காமெடி காரக்டர்களில் தமிழ் சினிமா தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்..தெனாலி ராமன் படம் சொல்லும் சேதி இதுவே !

தெனாலி ராமன் குழந்தைகளுக்கான படம் தான்.. கூடவே நாமும் ரசிக்கும் படி எடுத்திருக்கலாம் ! ஹூம் !

Wednesday, April 16, 2014

கோவா பயணம் - புகைப்படங்கள்.. ஒரு ஜாலி ட்ரைலர்

கோவா பயணம் இனிதே முடிந்தது. 3- 4 பதிவுகளாக கோவா பயணம் பற்றி எழுதுகிறேன்.

பயணத்தில் எடுத்த படங்கள் ஒரு ட்ரைலராக இதோ..


நாங்கள் தங்கிய ஹோட்டல்.. நிச்சயம் யாருக்கும் தைரியமாக பரிந்துரைப்பேன்.. விபரங்களுக்கு காத்திருங்கள்... 

ஆண் - பெண் இணைந்து ஆடும் இந்த ஆட்டத்தில் அய்யாசாமி தம்பதியர் என்ன செய்தனர் ? 

உள்ளே போகலாம் என்றால்... அனுமதி இல்லை... என தடுத்து விட்டனர். என்ன பில்டிங் இது? 

அப்படியே யூ டர்ன் அடிச்சு அந்த பக்கம் பாய்ஞ்சாலும் புண்ணியமா போகும்.. ஹூம் 


இவ்வளவு மக்கள் எதற்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள் ?
இன்னா செட்டுப்பா இது !



இப்படி ஒரு குட்டி சுனாமி வர யார் காரணம்? கவர்ச்சி படத்துக்கு காத்திருங்கள் !



கொலுசு போட்டு பாக்குற இடத்தை கவனிச்சீங்களா ?

மினி கப்பலில் அட்டகாசமான பயண அனுபவம் வீடியோக்களுடன் 

ச்சே.. Boat -டை என்னமா ஓட்டுறான்யா இந்த ஆளு.. 

கவர்ச்சி கண்ணன்.. 12 மணி வெய்யிலில் 

இந்த படத்தை வாட்ஸ் அப் நண்பர்கள் கூட்டத்தில் ஷேர் செய்தேன். 2 மணி நேரம் கதற கதற அழ விட்டாங்க. அவர்களிடம் சொல்லாத பட ரகசியம் வீடுதிரும்பலில் மட்டும் பகிரப்படும் 


கோவாவில் பாலங்கள்.. பாதசாரிகள் எப்படி நடப்பார்கள்? 

குருவாயூரப்பா ..குருவாயூரப்பா ..
கோவாவில் நாங்கள் வாங்கியது.. ..விலை என்ன இருக்கும்? ரொம்ப கொஞ்சமா சொல்லி என்னை அழ வைக்காதீங்க.. சில ஆயிரம் என க்ளூ கொடுத்து வைக்கிறேன் 

இந்த போட்டோவை முகநூலில் போட்டால் " என்னப்பா இன்னொரு கல்யாணமா என்று கேட்கிறான் நண்பனொருத்தன்.. ஒரு ப்ளாகருக்கு கிடைக்கும் முதல் மரியாதையை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லை.. சே ! என்ன மாதிரியான சமூவத்தில் வாழ்கிறோம் நாம்?


கோவாவின் மிக புகழ் பெற்ற கோவில்... பெயர் என்ன? தெரிந்தவர் சொல்லுங்கள் ! 


சினிமாவில் மட்டுமே கண்ட காசினோவில் ஒரு நாள் இரவு.. நேரடி அனுபவம்.
பயண கட்டுரை கூட படிச்சிடலாம்; நடுவுல வர்ற இந்த மாதிரி படத்தை நினைச்சாதான் திக்குன்னு இருக்கு... 

Farmhouse   பயணம் ஒன்றில் திடீர் என என்ட்ரி கொடுத்த யானை.. பின் சமர்த்தாக குளிக்கிறது 

போவியா.. ப்ளாக், பேஸ் புக்கு, வாட்ஸ் அப், மீட்டிங். அங்கே இங்கேன்னு போவியா? போவியா?




விரிவான பயண கட்டுரை விரைவில்..

Friday, April 11, 2014

வானவில் -குக்கூ- Go - வா - நான் சிகப்பு மனிதன்

"அட வானவில் .." என்கிறீர்களா ..."வானவில்லா.. அப்படின்னா?" என்கிறீர்களா எனத் தெரிய வில்லை.. 

வானவில் எழுதி எத்தனை மாதம் ஆனது !!  வீடுதிரும்பலில் பதிவுகளும் கூட ஏகமாய் குறைந்து தான் போய் விட்டன..

ஆகஸ்ட் 29, 2013-ல் கம்பனி சட்டம் வெளியானது முதல் அது சம்பந்தமாக படிக்க, எழுத, பேச நிறைய  வாய்ப்புகள் அமைந்து விட்டன. மனதில் இருப்பதை தான் எழுத முடியும்... இங்கு தொடர்ந்து கம்பனி சட்டம் குறித்து எழுத முடியுமா ? அதனால் தான் எப்போதாவது சினிமா பார்க்கும்போது அதன் விமர்சனத்தை மட்டும் எழுதி வருகிறேன்... 

செய்த பயணங்களும், சாப்பிடும் உணவகங்களும் குறித்து எழுத எவ்வளவோ இருந்தும் mood-ம் இல்லை - நேரமும் இல்லை.

மேலும் இப்போது கம்பனி சட்டம் குறித்து ஆங்கிலத்தில் ஒரு ப்ளாக் துவங்கி தினம் ஒரு பதிவு அங்கு எழுதி வருகிறோம்.. (கடந்த ஒரு வாரமாய் அங்கும் வாரத்திற்கு 3 என மாற்றி விட்டோம்) ; இங்கு நான் மட்டுமல்ல என்னோடு சேர்ந்து 10க்கும் மேற்பட்ட கம்பனி செகரட்டரிகள் எழுதுகிறார்கள்..

உங்களுக்கு அந்த ப்ளாக் எவ்வளவு சுவாரஸ்யம் தரும் என தெரியவில்லை; இருப்பினும் ப்ளாக் முகவரி பகிர்கிறேன்

http://corporatelaws.blogspot.in/

வானவில் தொடர்ந்து வருமா என உறுதி சொல்ல முடியவில்லை; இயலும்போது எழுதுகிறேன் !

பார்த்த படம் - குக்கூ

ரிலீஸ் ஆகி மூன்றாம் நாளே பார்த்தாகி விட்டது . ராஜூ முருகன் எழுத்தை போலவே மனதை வருடும் படம். படத்தில் என்னை ரொம்ப ரொம்ப அசத்திய விஷயம் ஹீரோ தினேஷ் நடிப்பு. அடேங்கப்பா.. பின்னி எடுத்துட்டார்... க்ளாஸ் ! தினேஷ் செல்ல வேண்டிய உயரம் இன்னும் நிறைய இருக்கிறது. இயக்குனர்கள் இவரை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Elango and Nandhini in Cuckoo

அடுத்து இசை அமைப்பாளர் சந்தோஷ்.. அட்டகாசமான பாடல்கள்; உறுத்தாத பின்னணி இசை ; ராஜூ முருகனின் பாசிடிவ் அப்ரோச்..., சின்ன சின்ன பாத்திரங்கள் மனதை அள்ளுவது என ஒரு அருமையான பீல் குட் மூவி !

படத்தில் என்னை உறுத்திய விஷயம் ஹீரோயின் தான். நடிப்பில் தினேஷ் எங்கோ ஒரு உயரத்தில் இருக்க, அவருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை இந்த பெண்ணால்! கண்ணை மேலும் கீழுமாக மாற்றி அவர் பார்ப்பது வேறு கண் தெரியாதவர் என்ற உணர்வை தர மறுக்கிறது

இன்னொரு சிறு குறை - மெலோ டிராமாடிக் கிளைமாக்ஸ். ஆனால் அதை கூட பொறுத்து கொள்ளலாம்

ராஜூ முருகன்.. நிச்சயம் ஒரு நம்பிக்கை தரும் இயக்குனராக இருக்கிறார். தஞ்சை மண் என்பதில் கூடுதல் பெருமை !

என்னா பாட்டுடே

எளிய மனிதர்களின் காதல்.. இதுதான் பாடலின் பின்புலம்.. 

மிக அழகான மெலடி.. அற்புதமான வரிகள்.. 

கல்லும் மண்ணும் வீடுகள் இல்லை....
அன்பின் வீடோ அழிவது இல்லை

வெறும் தரையில் படுத்துக் கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கை எதுவும் தேவை இல்லையடி

ஆடியோ வடிவில் எப்போது கேட்டாலும்  மனதை என்னவோ செய்யும் இந்த பாட்டு ....




படித்ததில் பிடித்தது

மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மணமக்கள் பெயரை பட்டுபுடவையில் நெய்து தரும் விளம்பரம் பார்த்து இருப்பீர்கள்.. சிறுமுகையில் மணமக்கள் படத்தையை அழகாக நெய்து தருகிறார்கள் அற்புத கலைஞர்கள் விளம்பரம் செய்ய வசதியற்றவர்கள். சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம் ஒளிந்திருக்கிறதோ !



(ஃபேஸ்புக்கில் பார்த்தது . நம்பர் எடுக்கவில்லை .தரம் சரியில்லை என்பதெற்கெல்லாம் கம்பெனி பொறுப்பல்ல )

:))

புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில் விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு விளம்பரம் செய்ய போதிய பணம் இல்லை இருந்தும் மக்கள் தானாகவே முன்வந்து விளம்பரம் செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களின். பெருமைக்குரிய விடயம். ஷேர் பண்ணூங்க.. ஏழை கலைஞர்களுக்கு விளம்பரமாகட்டும்

போஸ்டர் கார்னர் 



ரிலீஸிங் டுடே   - நான் சிகப்பு மனிதன் 

மான் கராத்தே படம் பார்க்கும் போது அதே தியேட்டரில் " நான் சிகப்பு மனிதன் " ட்ரைய்லர் போட்டனர். வித்யாசமான கதை களம். ஹீரோவுக்கு பகலில் கூட திடீர் திடீர் என தூங்கி விடும் வியாதி. இதை வைத்து வரும் பிரச்சனைகளை மையமாக கதை பின்னப்பட்டுள்ளது தெரிகிறது.



ஹீரோ விஷால்  அதான் சற்று மிரட்சியாக உள்ளது. லக்ஷ்மி மேனன் உடன் இரண்டாவது படம் உடனே  நடிக்கிறார்... பீச் கில்மா காட்சி மற்றும் முத்த காட்சிகள் உண்டு என வேறு ஹைப் கிளப்புகிறார்கள்...

4 நாள் கழித்து ரிவியூ நன்றாக இருந்தால் செல்ல எண்ணம் ! பார்க்கலாம் !

Go  - வா !

யெஸ் .. கொலம்பஸ். கொலம்பஸ். விட்டாச்சு லீவு...

கோவா பயணம் விரைவில்; நேரம் இருப்பின் சுருக்கமாக எழுதுகிறேன் ..

Thursday, April 10, 2014

மான் கராத்தே....சினிமா விமர்சனம்

ந்தேகமே இல்லை- எதிர் நீச்சல் பார்ட் டூ தான். காதலியை கவர - புதிதாய் ஒரு விளையாட்டை கற்று - போட்டியில் வெல்கிறார் சாதாரண ஹீரோ.

இங்கு அடிஷனலாக கொஞ்சம் பாண்டஸி சேர்த்துள்ளனர். .. !( முதல் காட்சிலேயே கிளை மாக்சில் நடப்பதை புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள்)

ஒரு படம் எதற்கு பார்க்கிறோம் ? கவலை மறந்து சிரிக்க, விசில் அடிக்க, பாட்டு வரும்போது ஆட ! .... ஆட தயங்குவோர் - கால்களை ஆட்டி ரசிக்க, படம் முடிந்து வரும்போது மகிழ்ச்சியாக எழுந்து வர .. இதானே சார் வேண்டும் !

இவை அத்தனையும் உண்டு மான் கராத்தேயில் !

விஜய் போலவே அறிமுகமாகிறார் ஹீரோ.. .. டான்சில் .. அடேங்கப்பா.... எவ்ளோ பெரிய பாய்ச்சல்.. + முன்னேற்றம் ! சான்சே இல்லை !



சிவாவை நாம் ரசிக்க காரணம் - நம்ம வீட்டு பையன் போல இருப்பதால் தான்..

டிவி அல்லது சினிமா என எங்கு 2 நிமிடம் பார்த்தாலும் சில தடவையாவது சிரிக்க வைத்து விடுகிறார்... இது தான் அவரது மிக பெரிய பலம்.

படம் ரிலீஸ் ஆகி 5 நாள் கழித்து வார நாளில் மதிய காட்சி ... திருவான்மியூர் S -2 !  இளைஞர் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரஜினி, விஜய் , அஜீத் ரேஞ்சுக்கு அறிமுக காட்சி, பாடல்களில் அப்ளாஸ் தூள் பறக்கிறது...

தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுவது ( பீ கேர்லஸ் !) - அப்பாவியாக பல்பு வாங்குவது என சிவகார்த்தி ப்ராண்ட் காமெடி தான்... ஆனால் அட்டகாசமாக வொர்க் அவுட் ஆகிறது !

குட்டி பசங்க மற்றும் இளைஞர்களை படம் மிகவும் ஈர்க்கிறது. எந்த சந்தேகமும் இல்லை.

அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் விஜய் , அஜீத்துக்கு அடுத்த லெவலில் இருக்கும் விஷால், ஜெயம் ரவி, ஆர்யா போன்றோரை - சிவகார்த்தி அசால்ட்டாக தாண்டி அடுத்த ரேஞ்சுக்கு சென்று விட்டார்.

அப்புறம் ஏன் முதல் சில நாளில் படம் பற்றி அவ்வளவு சுமாரான ரிவியூ ?

அநேகமாய் நிறைய எதிர்பார்ப்புடன் மக்கள் சென்றிருப்பர் என நினைக்கிறேன்...

முதல் சில நாள் வரும் விமர்சனங்கள் சில நேரம் தவறாகவும் இருக்கும் என இப்படம் உணர்த்துகிறது...

விமர்சனம் எழுதணும் என்ற மனநிலையுடன் போனால் இப்படத்தை கிழித்து தொங்க விட்டு விடலாம்.. அவ்ளோ லாஜிக் ஓட்டைகள்..

உதாரணமாய் " எந்த அப்பா 10 திருக்குறள் சொன்னால் மகளை திருமணம் செய்து தருவேன் ?" என்பார் என லாஜிக் பேசலாம்.. ஆனால் அந்த லாஜிக் மறந்துவிட்டு  பார்த்தால்  - திருக்குறள் சம்பந்தமான அந்த 10 நிமிஷமும் பட்டாசு மாதிரி சிரிப்பு.. ரகளை !

கிளைமாக்சுக்கு சற்று முன்பு தான் சற்று செண்டி மெண்ட் ; அதை தவிர மற்ற எல்லா காட்சியும் சிரிக்க வைக்கவே முயல்கிறார்கள். பெருமளவு வெற்றியும் பெறுகிறார்கள்



பாடல் காட்சியில் பெரும்பாலும் நாம் - எதிர் பாலினத்தினரை  தான் அதிகம் கவனிப்போம்.. ( நாம் ஆண் என்றால் ... ஹீரோயினை ! ) ஆனால் இங்கு - இளைத்து அவ்ளோ அழகாக ஹன்ஷிகா இருந்தும் பாடல் காட்சியில் சிவகார்த்தியை விட்டு கண்ணை நகர்த்த ரொம்ம்ம்ப கஷ்டப்பட வேண்டியுள்ளது ! செம ஸ்கரீன் ப்ரெசென்ஸ் !

ஹன்ஷிகா அந்த பாத்திரத்துக்கு apt ! நன்கு  இளைத்திருந்தாலும் ஒரு பாடலில் தொப்பை குலுங்குவது சற்று பயமுறுத்துகிறது !

சிவா மற்றும் ஹன்ஷிகா காஸ்டியூம்ஸ் யூத் & கலர்புல் !

சூரி வரும் காட்சிகள் அனைத்தும் தியேட்டர் குலுங்குகிறது. அந்தக் கால நாகேஷ் நடிக்க வேண்டிய பாத்திரம் அது.. அவரை மனதில் வைத்து கொண்டு தான் முயற்சித்துள்ளார் போலும். கலக்கல் !

சதீஷ் மற்றும் அவர் நண்பர்களில் 2 பெண்கள் ..ஓகே. ஓகே மிதுனா (கீழுள்ள படத்தில் கண்ணாடி அணியாதவர் ) சில நேரம் அழகாக இருந்தாலும் சில கோணங்களில் Aunty  போல் இருக்கிறார்.



படத்தில் குறைகளே இல்லையா ?

நிச்சயம் இருக்கு.

லாஜிக் .....மூச் ! யோசிக்கவே கூடாது !

சூப்பர் டூப்பர்  பாட்டு அனிரூத் தந்திருந்தாலும் எதற்குமே லீட்  சரியில்லை; அட்டகாசமான பாட்டுகள் ஆங்காங்கு செருகப்பட்டிருக்கின்றன.. பாடல் வரும் சூழலுக்கு இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம் (கும்கி போன்ற சில படத்தில் பாடல் அட்டகாசமான இடத்தில் அமைந்திருக்கும்   !)

இவை இரண்டை தவிர வேறு ஏதும் பெரிதாய் குறைகள் இல்லை

விஜய் நடித்த திருமலை போன்ற மெகா ஹிட் (??) படங்களை விட இப்படம் 100 மடங்கு மேல். அட்லீஸ்ட் மனசு விட்டு சிரிக்கிறோம் !

நிச்சயம் இது தோல்விப்படமாய் இருக்கப்போவதில்லை .. கோடை விடுமுறையில் போட்ட காசுக்கு மேல் வசூலிக்க தான் போகிறார்கள்...!

இப்படியே தொடர் வெற்றி தந்தால் சிவகார்த்திகேயன் விஜய் - அஜீத் லெவலுக்கு வர வாய்ப்புகள் மிக, மிக  அதிகம் ! 

மான் கராத்தே .....விடா முயற்சி விஸ்வரூப வெற்றி !
Related Posts Plugin for WordPress, Blogger...