Tuesday, June 23, 2009

மிக பிடித்த இரு கவிதைகள்

எனக்கு மிக மிக பிடித்த இரு கவிதைகள்.. இரண்டும் கல்லூரி காலத்தில் படித்தவை.. இவை என் வாழ்க்கையோடு ஒன்றி போய் விட்டன.

****************

கவிதை -1

எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்.
கத்திகள் எங்கிருந்தும் முதுகில் பாயலாம்
யாரும் யாரையும் எதுவும் பேசலாம்...
கூளமாய் நரகலாய் நினைக்கலாம்
எல்லாம் அவர்களை அவர்கள் காட்டும் காரியம்
நீ போய்க்கொண்டிரு...
-ஜெயந்தன்


கவிதை -2

எதையேனும் சார்ந்திரு...
கவித்துவம்.. தத்துவம்
காதல்.. சங்கீதம்...
இங்கிதம்.. இப்படி
எதன் மீதேனும்
சார்ந்திரு...
இல்லையேல்
உலகம்
காணாமல் போய் விடும்..
-வண்ண நிலவன்
Related Posts Plugin for WordPress, Blogger...