Saturday, March 28, 2020

கொரோனா @ சென்னை

கொரோனா குறித்த தகவல்கள் வந்த துவக்கத்தில் அது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என நினைக்கவில்லை

இந்தியா முழுதும் மட்டுமல்ல உலகின் பல நாடுகளும் ஒட்டு மொத்தமாக லாக் அவுட் ஆகியிருப்பது சரித்திரத்தில் முதல் முறையாக இருக்கலாம் (உலக போரின் போது இப்படி மக்கள் வெளிவராமல் இருந்தனரா .. தெரியவில்லை )



ஆறுதலான விஷயங்கள்

1. இந்தியாவிற்கு மிக தாமதமாக வந்தது, மற்றவர்களிடமிருந்து நாம் ஓரளவு பாடம் கற்று கொள்ள முடிந்தது ; இருப்பினும் நமது நடவடிக்கை துவங்க சற்று தாமதம் தான்

2. பொதுவாகவே இந்நோயால் இறப்போர் எண்ணிக்கை 2 % தான் என்பது பெரும் ஆறுதல். மிக எளிதாக பரவுவது தான் பெரும் பிரச்சனை. இப்போது self quarantine செய்வது பரவுவதை ஓரளவு குறைக்கலாம்

சில குழப்பங்கள் - பிரச்சனைகள்

1. சென்னையை பொறுத்தவரை அரசு பல விஷயங்களில் மாறி மாறி அறிவிப்புகள் வெளியிடுவது பெரும் குழப்பம்.

முதலில் - மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறந்திருக்கும். பின் காலை 6 to  10 தான் திறந்திருக்கும். மறுபடி இல்லை இல்லை நாள் முழுதும் திறந்திருக்கும். இன்று மீண்டும் அதனை மாற்றி அறிவிப்பு

ஆவின் பால் காலை 10 மணி வரை மட்டுமே கிடைக்கும் என ஒரு அறிவிப்பு - பின் நாள் முழுதும் கிடைக்கும் என்று தகவல்

மக்கள் ரோட்டிற்கு வர இந்த அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை வந்து விடுமோ என்ற ஐயமே காரணம்

எங்கள் ஏரியாவில் மளிகை பொருட்கள் பல கடைகளில் விரைவாக காலியாவதால், அடுத்து எப்போது மளிகை பொருட்கள் கடைகளுக்கு வரும் என்ற கேள்விக்குறி உள்ளது. காய்கறி கிடைப்பதில் இதுவரை பிரச்சனை இல்லை

2. ரெசிடென்ஷியல் ஏரியாவில் வாகனங்கள் வழக்கமான அளவு போய் வந்த வண்ணம் உள்ளது. போலீஸ் தடுப்பதெல்லாம் மெயின் ஏரியா தான். மக்களுக்கு இன்னும் தீவிரத்தை உணர வில்லையா என்று தான் எண்ண வேண்டியுள்ளது

3. எங்கள் ஏரியாவிலேயே ஒரு வயதான பெண்மணி தனியாக அமெரிக்காவிலிருந்து ஒரு சில வாரம் முன்பு வந்துள்ளார். அவர் எந்த விதத்திலும் தனிமை படுத்த வில்லை. இது போன்று இன்னும் எத்தனை பேர் என்று தெரியவில்லை

4. ஏப்ரல் 14 உடன் இது முடியுமா என்றால் ..வாய்ப்புகள் மிக குறைவு என்று தான் தோன்றுகிறது

காரணம் .. மிக எளிதான ஒன்று. நோய் பரவல் குறைந்தால் தான் மறுபடி அனைத்தும் திறக்க முடியும். ஆனால் இந்தியா தமிழ் நாடு இரண்டு இடத்திலும் தினமும் கவுண்ட் கூடி கொண்டே போகிறது . நோய் கட்டுக்குள் வந்தால் தான் மறுபடி நார்மல் நிலை வர வாய்ப்புகள் உண்டு.


5. ஆந்திராவில் இருக்கும் நண்பர் ஒருவர் ஏராள விவசாய நிலம் அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும், அறுவடை செய்யாவிடில் நெல் முழுதும் கொட்டி விடும் என்றும் கூறினார். இது வருத்தப்படவைத்தது என்பதோடு , பின்னர் பஞ்சம் வரவும் இவை காரணமாக அமையும் என்ற ஐயமும் வருகிறது

எப்படி போகிறது பொழுது

வீட்டுக்குள் தான். அரிதாக காய்கறி வாங்க சென்றதையும் இனி குறைக்க யோசனை

சினிமா, டிவி, பாட்மிண்டன், வீட்டு மாடியில் நடை என கழிகிறது பொழுது

முடிந்த அளவு பாசிட்டிவ் ஆக இருக்க தான் பார்க்கிறோம். விரைவில் நிலைமை சரியாகவேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே .. மனதினுள் !

சைக்கோ, Chappak, பக்ரீத் - விமர்சனங்கள்

சைக்கோ 

இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது சைக்கோ

த்ரில்லர் வகை படங்கள் பிடிக்கும் என்பதால் பார்த்தேன்.


பெண்களை தொடர்ந்து கொள்ளும் ஒரு சைக்கோவை - physically challenged ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிடிக்கும் கதை.

கண் தெரியாத ஹீரோ நீண்ட தூரம் கார் ஓட்டுவது போன்ற லாஜிக் மீறல்களை கூட பொறுத்து கொள்ளலாம். அத்தனை கொலைகள் செய்தவனை -அவன் ஒரு குழந்தை என்ற ரீதியில் கடைசி நிமிடம் பேசுவதை தாங்கவே முடியவில்லை. அன்புக்கு ஏங்குகிறான் என்பதை establish செய்ய எந்த காட்சியும் அமைக்கப்படவில்லை

கடைசி இரு நிமிடத்தையும், சற்று கோர காட்சிகளையும் பொறுத்து கொண்டு த்ரில்லர் விரும்பிகள் மட்டும் காணலாம்

Chappak -ஹிந்தி 

தீபிகா படுகோனே ஆசிட் விக்டிம் சர்வைவர் ஆக நடித்த இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது

அந்த பெண்ணின் போராட்டம் இண்டியன் பீனல் கோடில் ஆசிட் வீசுவோருக்கென்று தனி செக்ஷன் வரவும், தண்டனை அதிகமாகவும் காரணமாக அமைந்தது



தீபிகா அற்புதமான நடிப்பு ! படத்தின் தயாரிப்பாளர்களில் இவர் ஒருவர். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஓரளவு லாபமும் சம்பத்தாதிருக்கிறது இப்படம்

இரண்டே மணி நேரம் கொண்ட இப்படம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று !

பக்ரீத் - தமிழ் 

சென்ற ஆண்டு இறுதியில் ஒரு தமிழ் சானலில் 2019ல் வெளிவந்த நல்ல சிறு படங்கள் என ஒரு 10 படங்களை கூறினர் .. அதில் ஒரு படமாக பக்ரீத் இடம் பெற்றிருந்தது



படம் ஒட்டகம் வளர்க்கும் ஒரு குடும்பத்தின் கதை. ஒட்டகம் எதிர் பாராத விதமாக இக்கும்பத்திடம் வந்து சேர்கிறது. அதற்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவர் அது ராஜஸ்தானில் இருப்பது தான் சரி, இங்கு தட்பவெப்பம் ஒத்து கொள்ளாது என சொல்ல, ஹீரோ விக்ராந்த் அதனை ராஜஸ்தான் அழைத்து செல்வதும், அவர் அதனை அங்கேயே விட்டாரா என்பதும் தான் படம்

படத்தின் சுவராஸ்யங்களில் ஒன்று .. துவக்கத்தில் நெகட்டிவ் ஆக காட்டப்படும் சில பாத்திரங்கள் - பின் அவர்களின் நல்ல தன்மையில் வெளிப்படுத்துவது தான்

நாய் , பூனை, கிளி என செல்ல பிராணிகள் விரும்பும் இவ்ருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்



Wednesday, March 25, 2020

ஓ மை கடவுளே & 375 - இரு நல்ல படங்கள் விமர்சனம்

நாடு முழுதும் கரோனா பற்றியே பேச்சிருக்க, நாம் சில நல்ல படங்கள் பற்றி பேசுவோம்

ஓ மை கடவுளே

நல்லதொரு நாட்..அதனை அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அசோக் செல்வன் மற்றும் ரித்திகா - Just perfect ! வாணி போஜன் தான் மிக சுமாரான பேர்பார்மன்ஸ் ..



நாம் வாழும் வாழ்வில் விருப்பமே இன்றி எதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பதை நாம் உணர்வதே இல்லை.

போலவே, நம் மீது அன்பு செலுத்துவோரை ரொம்ப ஈசியாக எடுத்து கொள்கிறோம். அவர்களின் அன்பும் அதன் ஆழமும் நமக்கு புரிவதே இல்லை

கடவுள் என்கிற சுவாரஸ்ய பாத்திரம் மூலம் வாழ்வை மறுபடி வேறு மாதிரி வாழ்ந்து பார்க்க வாய்ப்பு தருவதே செம கான்செப்ட். அதனை வீணடிக்காமல் ரசிக்கும் வண்ணம் திரைக்கதை செய்துள்ளனர்.

அவசியம் பாருங்கள்.. இந்த கடவுளை !

Section 375 (ஹிந்தி)


ஒரு அட்டகாசமான படம் ! கோர்ட் ரூம் டிராமா !

375 என்பது இந்தியன் பீனல் கோட் செக்ஷனை குறிப்பது. கற்பழிப்பு குறித்த சட்டப்பிரிவு.

ஒரு நடிகர் - ஓர் இளம்பெண்ணிடம் தவறாக நடந்ததாக, கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது

விசாரணை- வாக்கு வாதங்கள் - இவை தாண்டி இறுதியில் உண்மை தெரியும் போது திடுக்கிட்டு போவோம்...

375 செக்ஷனில் இருக்க கூடிய ஓட்டைகளை எடுத்து காட்டும், இந்த பற பற படத்தை காண தவறாதீர்கள் !
Related Posts Plugin for WordPress, Blogger...