Showing posts with label வானவில். Show all posts
Showing posts with label வானவில். Show all posts

Friday, July 13, 2018

வானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்

பார்த்த படம்- இரும்பு திரை 

பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்...

நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப்படவேண்டிய விஷயம் தான் .. ஆன்லைனில் நாம் தரும் பல்வேறு தகவல்கள் எப்படி விற்கப்படுகிறது -அது எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது தான் பின்புலம்.

Image result for irumbu thirai

ஆனால் தேவைக்கு சற்று அதிகமாகவே பயமுறுத்திவிட்டனர். நெட்பாங்கிங் பயன்படுத்துவதே ரிஸ்க்; ஆன்லைனில் பொருள் வாங்குவது - தகவல் தருவதே அபாயம் என சற்று ஓவரா தான் போயிட்டாங்க. ஒரு லிமிட் உடன் நிறுத்தியிருக்கலாம்.

தனி ஒருவன் போல வில்லன் காரக்டர் மிரட்டலாக வைத்து எடுக்க எண்ணம் போலும். அந்த அளவு இல்லாவிடினும் அதில் முக்கால் பங்காவது கலக்குகிறார் வில்லன் அர்ஜுன்.

ஒரு டூயட் கூட இல்லாமல் செல்கிறது படம். விஷால் குடும்பம் குறித்த டீட்டையிலிங் குறைத்திருந்தால் கதை இன்னும் ஷார்ப் ஆக இருந்திருக்கும்

வித்தியாச பின்புலனுக்காக நிச்சயம் ஒரு முறை காண வேண்டிய படம் !

இப்படம் - எங்க ஊர் மடிப்பாக்கம் - குமரன் தியேட்டரில் பார்த்தோம். தனி ஒருவனுக்கு பிறகு மீண்டும் இந்த தியேட்டருக்கு இப்போது தான் செல்கிறோம். அப்படம் பார்த்த போது தியேட்டர் மிக நன்றாக பராமரிக்கப்படுவது குறித்து எழுதியிருந்தேன்.. இப்போது பார்த்தால் சீட்கள் கிழிந்தும் - கழிவறை சுத்தமின்றியும் இருக்கிறது; இன்னொரு முறை இங்கு அழைத்து வராதீர்கள் என மகளும் மனைவியும் சொல்லும்படி ஆகிவிட்டது; வேளச்சேரி PVR-ம் பீனிக்ஸ் மாலும் தான் சரி ... போலிருக்கிறது !

அற்புத சென்னை கிளைமேட் 


சென்னைக்கு என்ன ஆனது.. நான்கைந்து நாளாக வெய்யில் அதிகமின்றி பகலும் கூட இனிதாக இருக்கிறது; மதியம் ஒருமணிக்கு வெளியில் சென்று விட்டு இல்லம் திரும்பினால் வெய்யில் மெல்லிய மந்தகாசமாக அடிக்கிறது.  மாலையில் அளவோடு மழை பெய்து மகிழ்விக்கிறது. சென்னையை சிலருக்கு பிடிக்காத ஒரே காரணம் அதிக வெய்யில் தான்..வெளியூர் ஆட்கள் சென்னைக்கு  டிசம்பர் - ஜனவரியில் வருவதை விரும்புவதும் இதனால் தான். இப்போதைய கிளைமேட் போல் வருடத்தில் பாதி நாள் இருந்தாலே சென்னை சொர்க்கமாகி விடும்!

போனில் வரும் மரண தகவல் 

கடந்த சில மாதங்களில் இரண்டு முறை - நண்பர் தவறியதாக அவரது போனில் இருந்தே தகவல் வந்தது. நண்பர் மரணத்துக்கு பின் அவர்கள் உறவினர் - அவரது போனில் இருந்தே - இறந்தவரின் நண்பர்களுக்கு அனுப்பினர்...

இனி இது வழக்கமாகி விடுமா? நான் இறந்த பின்னும் எனது போனில் இருந்து தான் குடும்பத்தினர் தகவல் அனுப்புவார்களா என சிந்தனை ஓடியது

நண்பர் போனில் இருந்தே அவர் இறந்த தகவல் வருவது பெரும் அதிர்வை/ அதிர்ச்சியை உண்டாக்கவே  செய்கிறது!

அண்மையில் இறந்தவர் - 56 வயது; மகனுக்கு திருமணம் முடிந்த மறுநாள் உடல் நலம் குன்றியது. மகனுக்கு ரிசப்ஷன் நடக்க இருந்ததை இதனால் தள்ளி வைத்தனர். மருத்துவ மனையில் இருந்த போதும் அடுத்த சில நாளில் இதய பாதிப்பால் - இறந்துவிட்டார்

மனிதர் 56 வயதில் - 80 வயதுக்கான உழைப்பை கொடுத்து விட்டார். எப்போதும் வேலை-வேலை தான். மிக அவசரமாக தான் தொலை பேசியில் பேசுவார். தன்னால் முடிந்ததை விட அதிகம் இழுத்து போட்டு கொண்டு செய்துள்ளார் என இப்போது தான் யோசிக்கிறேன்

நிதானமாக - ரசித்து வாழ்வது எத்தனை முக்கியம் என்பதை இவரது மரணம் உணர்த்தியது !

படித்ததில் பிடித்தது 

ஒரு விஷயத்தை நன்றாக செய்து முடிப்பதோடு உன் வேலை முடிந்தது. உன்னை பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு

பிக் பாஸ்

பிக் பாஸ் என்பது 100 நாள் நடக்கும் ஒரு சீரியல். இதில் பல விஷயங்கள் (எல்லாம் அல்ல !) ஸ்க்ரிப்ட் தான் !

தினம் சண்டை வரவேண்டும் என்பது அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை போல.. அப்போது தான் சுவாரஸ்யம் இருக்கும் என. ஆனால் எரிச்சல் தான் வருகிறது

இவ்வாரம் பாலாஜி,  நித்யா,பொன்னம்பலம் மற்றும் யாஷிகா எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர். பாலாஜி,  நித்யா- வை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டார்கள். (இந்த சீரியலில் முக்கிய சஸ்பென்ஸ் அவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்பது தான்...ஆகவே... )


யாஷிகா போன்ற அழகு பெண்ணை அவ்வளவு சீக்கிரம் அனுப்புவது சிரமம்.. எனவே பொன்னம்பலம் தான் கிளம்புவார் என நினைக்கிறேன்

ஆனால் இணையத்தில் மிக அதிக சப்போர்ட் இருப்பது பொன்னம்பலத்துக்கு தான். மாறாக மிக அதிக எதிர்ப்பு இருப்பது யாஷிகாவிற்கு.

நிஜமாக ஓட்டுகளை எடுத்தால் யாஷிகா தான் அவுட் ஆக வேண்டும்... எலிமினேஷனில் மேட்ச் பிக்சிங் இருக்கா என்பது இவ்வார இறுதியில் தெரியும் !

கவிதை பக்கம்

தகப்பனாக இருப்பது
---------------------------------

“அப்பா இன்னும் வரலை”
எனக் கூறும்
மகனின் பொய்யைக்
கேட்டுக்கொண்டு இருக்கிறேன்,

வீட்டினுள்
இருந்தபடி.

“போயிட்டாருப்பா”
எனத் திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.

கடன்காரனாய்
இருப்பதையும்விடக்
கொடுமையானது

சிலநேரம்...

தகப்பனாய்
இருப்பது.

- பா. ராஜாராம்

இக்கவிதையை எழுதிய அற்புதமான மனிதர் பா. ராஜாராம் மறைந்தது இந்த வாரம் கிடைத்த இன்னொரு அதிர்ச்சி !

கிரிக்கெட் கார்னர்

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடு செல்லும்போதெல்லாம் எனது எதிர்பார்ப்புகளை குறைத்தே வைத்து கொள்வேன். இம்முறை அற்புத பார்மில் இருக்கும் இங்கிலாந்து அணியை 20-20ல் 2-1 என வென்றது மிக ஆச்சரியம் + மகிழ்ச்சி. வென்ற இரண்டு மேட்ச்சும் நிறைய பந்து மீதம் இருக்கும் போது வென்றனர். தோன்ற மேட்ச் கடைசி வரை கொண்டு சென்றனர்.

ஹர்டிக் பாண்டியா நல்லதொரு பவுலிங் ஆல் ரவுண்டர் ஆக உருவாகி வருவது நிறைவு. சில நேரம் கண்டிஸ்டன்ட் ஆக இருப்பதில்லை என்றாலும் கூட இவர் போன்ற மல்டி டைமன்சன் வீரர் அவசிய தேவை தான் !

KL ராகுல் எனக்கு மிக பிடித்த வீரர்களுள் ஒருவர்.  அவருக்கு நிறைய வாய்ப்புகள் தற்போது வழங்க துவங்கியுள்ளார். பயன்படுத்தி கொண்டால் இந்திய அணிக்கும் அவருக்கும் மிக நல்லது !

நேற்று துவங்கிய ஒரு நாள் தொடரிலும் முதல் போட்டியை 40 ஓவரில் விளாசி அட்டாகாசமாக துவங்கியுள்ளது இந்திய அணி.

குல்தீப் பந்து வீச்சில் ஆறு  விக்கெட் எடுக்க, ரோஹித் இன்னொரு பெரிய சதம் அடித்து வெற்றி தேடி தந்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்தியா இதுவரை ஒரு நாள் போட்டி தொடர் வென்றுள்ளதா என தெரியவில்லை; ஆனால் அப்படி வெல்ல இது நல்லதொரு வாய்ப்பு ! பார்க்கலாம் !

Friday, July 6, 2018

வானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2

டிக் டிக் டிக் -விமர்சனம்

சென்னையை ஒரு asteroid தாக்கி பெரும் உயிர் சேதம் நடக்க போகிறது  - அதனை தடுக்க 5 பேர் கொண்ட குழு வானிற்கு செல்கிறது..அவர்கள் வென்றார்களா என்பதே டிக் டிக் டிக்

Image result for tik tik tik

நல்ல விஷயங்கள் முதலில்: தமிழின் முதல் ஸ்பேஸ் பிலிம் என்று தான் மார்க்கெட்டிங் செய்தனர். அவ்விதத்தில் வித்யாசமான படம். ஹீரோ - ஹீரோயின் உண்டு. அவர்களுக்குள் காதல் இல்லை- அவர்கள் ஜோடியும் இல்லை- அனாவசிய பாடல்கள் இல்லை. அங்கங்கு கிச்சு கிச்சு மூட்டும் காமெடி - சின்ன சஸ்பென்ஸ் (அதன் விடையை கிளை மாக்சிற்கு மிக முன்பே சொல்லி விடுகிறார்கள்)  ....

பிரச்சனை என்னவென்றால்- டிக் டிக் டிக் என்ற பெயருக்கேற்ப அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு சிறிதும் இன்றி மிக நிதானமாக செல்வது தான் !  விறுவிறுப்பாக இருந்திருந்தால் படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும்  !

போஸ்ட்டர் கார்னர்



பிக் பாஸ் -2 

பிக் பாஸ் -1 ஓவியா இருக்கும் வரை பார்த்தேன். இந்த சீசன் சனி, ஞாயிறு பெரும்பாலும் பார்க்கிறேன். மற்ற நாள்  -அவ்வப்போது மட்டும்....

கடந்த வார இறுதியில் விஸ்வரூபம் 2 பாடல் ஒளிபரப்பை பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே ஒரு மணி நேரம் ஓட்டி ......கொலையாய் கொன்றார்கள். கமல் - என்னை பத்தி நானே சொல்ல கூடாது - நீங்க தான் சொல்லணும் என சொல்லிச் சொல்லி - மற்றவரை பேச வைத்து அகமகிழ்ந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஆட்கள் - கமல் பட பாட்டு நன்றாக இல்லை என்றா சொல்லுவார்கள் ! ஆஹா ஓஹோ என்று அவர்கள் சொன்ன பாட்டு - எதுவும் சொல்லிக்கொள்கிற மாதிரியே இல்லை !

முதல் பார்ட்டில் வரும் "எவனென்று நினைத்தாய்" என்ன ஒரு  அட்டகாசமான பாட்டு. அதனை மறுபடி வேறு ராகத்தில் பாடுகிறேன் - என வாய்க்கு வந்த மாதிரி பாடி வைத்திருக்கிறார்கள்.

சரி பிக் பாஸுக்கு வருவோம்.

பிக் பாஸ் நினைத்தால் - யாரையும் நல்லவராக்கலாம். யாரையும் கெட்டவராக்கலாம். சென்ற வாரம் நித்யாவை வில்லி போல காட்டி விட்டு இவ்வார இறுதியில் கமல் குறும்படம் காட்டியபின் பார்வையாளர்களே  நித்யாவை நினைத்து கர்சீப் எடுத்து கண்ணை துடைக்கும் வண்ணம் செய்தனர்.

துவக்கத்தில் ஐஸ்வர்யாவின் குழந்தை தனம் ரசிக்கும்படி இருந்தது. இப்போது அந்த childishness  எங்கோ காணாமல் போய்விட்டது.

அனந்த் வைத்தியநாதன் - பொன்னம்பலம் இருவரும் பலரிடமும் ஒட்டாமல் - டாஸ்க்குகளில் கலந்து கொள்ளாமல் தள்ளி நிற்கிறார்கள். விரைவில் திரும்ப வந்து விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்

மஹத் தான் வாழ்கிறார் !

டேனியல் - மும்தாஸ் - யாஷிகா - ஜனனி ... இறுதி கட்டம் வரை வருவார்கள் என நினைக்கிறேன். ஓரளவு சர்ச்சை இன்றி நடப்பதும் matured ஆக பேசுவதும் டேனியல் தான். அவர் 100 நாள் இருப்பார் என்பது நிச்சயம் !

QUOTABLE QUOTE


Every one has some special talent. It is our duty to find ours and use them well.

டிவியில்  படம் - கவிக்குயில்

கவிக்குயில் என்றால் ....உடன் நினைவுக்கு வருவது பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய "சின்ன கண்ணன் அழைக்கிறான்" பாடல் தான். இப்பாடல் படத்தின் மிக முக்கிய பகுதியாக படத்தை நிறைவு செய்யும் பாடலாகவும் இருக்கிறது.

இரண்டு காதல் ஜோடிகள்.. சிவக்குமார் - ஸ்ரீதேவி மற்றும்  ரஜினி - படாபட் (கதாநாயகிகள் இருவரும் இப்போது உயிருடன் இல்லை !)

சிவக்குமார் - ஸ்ரீதேவி காதல் சற்று எல்லை மீற ஸ்ரீதேவி கர்ப்பமாகிறார். சிவகுமார் ஓர் விபத்தில் நினைவிழக்க ஸ்ரீதேவியை பார்த்து  "யார் நீ ?" என்கிறார்.

பணக்கார குடும்பங்களாக சிவகுமார் மற்றும் படாபட் பெண் பார்த்து மணமுடிக்க முடிவு செய்கிறார்கள். மண மேடையில் எங்கோ ஒலிக்கும் சின்ன கண்ணன் பாடலை கேட்டு சிவகுமாருக்கு நினைவு திரும்ப - மாலையை தூக்கி எறிந்துவிட்டு ஸ்ரீதேவி நோக்கி ஓடுகிறார்.

படாபட் அப்பா திருமணம் திடீரென நின்றதால் வேலைக்காரர் ரஜினியை படாபட்டுக்கு தாலி கட்ட சொல்கிறார்.

இரண்டு ஜோடிகளும் இணைய சுபம் !

படம் பற்றி சிறு தகவல் கூட தெரியாமல் பார்த்ததால் -ஓரிரு மணி நேரம் பார்க்க முடிந்தது.(அந்த காலத்திலேயே 2 மணி நேரத்திற்கும் குறைவாய் ஓடக்கூடிய படம் !)

ரசித்த கவிதை

எந்தக் கிளையும் இதுவரை
முறிந்ததில்லை
பறவைகளின்

எடை தாங்காமல்.- வண்ண தாசன்

நீயா நானா

நீயா நானாவில் அதிக மதிப்பெண் பெற்ற கிராமப்புற மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூலி வேலை செய்பவர், விவசாயி என பல்வேறு சாதாரண மனிதர்களின் குழந்தைகள் 1200க்கு 1100க்கு மேல் வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும்..

இவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சியுற்றோர் பலர் இருந்தாலும் - மருத்துவம் கிடைக்குமளவு மார்க் வாங்கியது ஒருவர் மட்டுமே.

நீட் இல்லாவிடில் இவர்களில் குறைந்தது 15 பேராவது மருத்துவம் சேர்ந்திருப்பர்.

இதனை பற்றி எழுத்தாளர் சமஸ் மிக அழகாக பேசினார். அரசின் நடவடிக்கைகள் - அரசையே நம்பியுள்ள ஏழைகளை பாதிக்கும்  வண்ணமும், அரசின் உதவி தேவையில்லாத மக்களுக்கே உதவிகள் கிடைப்பதாகவும் அவர் கூறியது சிந்திக்க வைத்தது

இந்த பிரச்சனைக்கு தீர்வு அரசியலில் இருந்து மட்டுமே கிடைக்கும் என்று சொன்னதும் சரியே !

மறுபுறம் பேசிய இன்னொரு கெஸ்ட் - இந்தியாவிலேயே தமிழகம் தான் படிப்பில் முன்னணியில் இருப்பதாகவும் நீட்டில் அதிக பேர் தமிழகத்தில் இருந்து சேராவிடினும் கூட  தமிழகம் கல்வியில் குறைந்து விடாது என்றும் கூறினார்.

நீட் ஏற்படுத்தும் தாக்கம் நமக்கு முழுதாய் புரிய இன்னும் கொஞ்ச காலம் ஆகும் !

**********
அண்மை பதிவு:

காலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள் 

Saturday, May 6, 2017

வானவில் :நயன்தாராவின் டோரா + விஜய் டிவி மாப்பிள்ளை எனும் மெகா காவியம்

பார்த்த படம்- டோரா

நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா நடித்த த்ரில்லர் படம் ...டோரா. படத்தின் சில காட்சிகள் எங்கள் வீட்டருகே படமானது (இரண்டாவது வில்லனை காரில் துரத்தும் காட்சிகள்)

பேய் - வில்லன்களை பழி வாங்கும் வழக்கமான கதை தான். 2 வித்யாசம்.. இங்கு பேய்.. ஒரு நாய் !! மேலும் அது வந்து இறங்குவது மனிதர் மேல் அல்ல.. ஒரு காரின் மீது.

Image result for dora movie

இந்த 2 அம்சங்கள் மற்றும் காரை வைத்து கொஞ்சம் வித்யாசமாக எடுக்க முயன்றது தான் பார்க்க வைக்கிறது. மற்றபடி பெரிதாக ஈர்க்க எதுவும் இல்லை.

தம்பி ராமையா காமெடி செய்ய முயன்று மொக்கை போடுகிறார். ஸ்லிம் ஆன நயன் மட்டுமே ஆறுதல் !

தவற விடக்கூடாத படமெல்லாம் இல்லை. சனி, ஞாயிறில் ரொம்ப போர் அடிக்கிறது என்றால்... 2 மணி நேரம் சும்மா  பார்த்து வைக்கலாம்..அவ்வளவே !

ஐ. பி எல் கார்னர் 

மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே இவை தான் play off செல்லும் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதில் மாறுதல் வர.....ஹைதராபாத், புனே இனியுள்ள அனைத்து மேட்ச்சும் தோற்கணும்..டில்லி அல்லது பஞ்சாப் இனி வரும் அனைத்து மேட்சும் ஜெயிக்கணும். இவற்றுக்கு probability கம்மி தான் !

இந்த வாரத்தின் சிறந்த ஆட்டம் டில்லி வீரர் ரிஷப் பாண்ட்   குஜராத்துக்கு எதிரே அடித்த 97 ரன்கள். சச்சின் இந்த ஆட்டத்தை இதுவரை நடந்த ஐ. பி எல்லில் ஒரு மிக சிறந்த இன்னிங்ஸ் என கூறியிருக்கிறார்.

19 வயது பையன்.. பயமின்றி வெளுத்து வாங்குகிறான்.. ஏற்கனவே 5 நாள் ரஞ்சி போட்டிகளிலும் 100 முதல் 300 வரை அடித்து விட்டான். இப்போது 20-20ல் தன்னை நிரூபித்து வருகிறான்..

Mark my words......பையன் இந்தியாவுக்கு ஆடி கலக்கப்போவது உறுதி !

போஸ்ட்டர் கார்னர்



நானே சிந்திச்சேன் 

எந்த ஒரு துயரும் .. அந்த நேரத்தில் தான் அதீத வலி தருகிறது. மனம் அதனை சுற்றியே உலாவுகிறது. ஆனால் காலம் எல்லா துயரையும் கழுவிப்போகிறது..தீராத துயரென்று எதுவும் இல்லை.

உலகின் மிகப்பெரும் துயர் என்றால் குழந்தைகயை இழப்பது தான் என நினைக்கிறேன்.ஆனால் அத்தகைய பெற்றோரும் கூட சில மாதங்களில் மெல்ல எழவும், சில வருடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பவும் ஆரம்பிக்கிறார்கள். இந்த துயரிலிருந்தே மீள முடிந்தால் மற்ற துயரெல்லாம் பெரிதா என்ன?

கவிஞர் வைரமுத்து சொன்னது போல்

விடியாதே இரவென்று எதுவும் இல்லை
முடியாத துயரென்று எதுவும் இல்லை

ரசித்த காமெடி

மறைந்த மலையாள இயக்குனர் வி எம் சி ஹனிபாவை சரியாக பயன்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். அவரது  முகபாவம்,மாடுலேஷன் எல்லாமே வித்யாசமாக  இருக்கும்.

சிவாஜி படத்தில் அவர் கத்தி குத்து வாங்கும் காட்சி ..அதற்கு பிறகு வரும் ஓரிரு நிமிடங்கள் அட்டகாச சிரிப்பு..

வயிற்றில் கத்தியால் குத்த, டாக்டர் தையல் போட்டதும் ஹனீபா கேட்கும் கேள்வி: பிரைனுக்கு ஒண்ணும் ஆகலியே?

ரஜினி கிளம்பும்போது " பாஸ் கத்தி குத்தெல்லாம் வாங்கியிருக்கேன். அந்த பணத்தை குடுக்க கூடாதா? " என பரிதாபமாக கேட்பதும், அதற்கு ரஜினி பதிலும்.. செம !




வைப்ரன்ட் வேளச்சேரியில் நடந்த சைக்கிளிங் ஈவென்ட் 

இது நடந்து இரு வாரங்கள் ஆனபோதும் நல்லொதொரு நிகழ்வு என்பதால் - தாமதமானாலும் பரவாயில்லை என பதிவு செய்கிறேன்

சென்னையில் பல ரன்னிங் மற்றும் சைக்கிளிங் குழுக்கள் உள்ளன. ஆனால் ரன்னிங் மற்றும் சைக்கிளிங் இரண்டும் இணைந்து, இரண்டிற்கும் நிறைய முக்கியத்துவம் கொடுத்து ஒரே குழுவில் செய்வது... மிக அரிது. வைப்ரன்ட் வேளச்சேரி அப்படி ஒரு அரிதான குழு.

இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சைக்கிளிங் ஈவென்ட் ஏற்பாடு செய்கிறார்கள். 50 மற்றும் 100 கிமீ சைக்கிளிங்... என இரண்டு கேட்டகரி.. இரண்டிற்குமே நுழைவு கட்டணம் ரூ 300 (வழியில் கூல் ட்ரிங்ஸ், குடி நீர், பழங்கள் மற்றும் முடியும் போது காலை உணவு இவற்றுக்கான கட்டணம் இது )

இந்த ஈவெண்ட்டில் கலந்து கொள்ள ஒரு வாரம் முன்பு தான் ஹைபிரிட் சைக்கிள் வாங்கினேன். எனவே 50 கி, மீ தூரத்தை தேர்ந்தெடுத்தேன்

நிகழ்ச்சியை அறிவித்து 36 மணி நேரத்துக்குள் 150 பேருக்கும் மேல் ரிஜிஸ்டர் செய்ய உடனே குளோஸ் ஆகி விட்டது !! (வைப்ரன்ட் வேளச்சேரி குழு மட்டுமல்ல, வெளியில் உள்ள நண்பர்களும் கலந்து கொள்ளலாம் !)

நிகழ்ச்சியன்று திரு சைலேந்திர பாபு ஐ.பி எஸ் தனது காவல் படை வீரர்களுடன் எங்களுடன் 50 கி மீ சைக்கிள் ஓட்டினார்.

நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமல்லாது ஏராள பெண்களும் கலந்து கொண்டு வெளுத்து வாங்கினர்.

100 கி மீ தூரத்தை இரண்டரை மணி தூரத்தில் ஓட்டி கடந்த அஷ்வின். அருகே வைப்ரன்ட் வேளச்சேரியை துவங்கிய திரு அனில் ஷர்மா 

வைப்ரன்ட் வேளச்சேரி வாலன்டியர்கள் பல இடங்களிலும் இருந்து உதவினர்;குறிப்பாக சைக்கிள் பஞ்சர் ஆனவர், ஓட்டும்போது வேறு பிரச்சனை வந்தவர்.. இவர்களுக்கெல்லாம் வாலன்டியர்கள் வெய்யிலை பொருட்படுத்தாமல் அற்புதமான உதவிகள் செய்த வண்ணம் இருந்தனர்.

50 கி மீ தூரத்தை நான் 2 மணி நேரம் 16 நிமிடத்தில் முடித்தேன். அவ்வப்போது 20,30 கி மீ ஏற்கனவே ஓடியதால் அதிக சிரமப்படலை. 100 கி மீ ஒட்டியிருக்கலாமே என தோன்றியது


அடுத்த முறை வைப்ரன்ட் வேளச்சேரி இந்த நிகழ்வு நடத்தும் போது நிச்சயம் 100 கி மீ ஓட்டுவேன் !

விஜய் டிவி - மாப்பிள்ளை எனும் காவிய சீரியல் 

விஜய் டிவியில் வரும் மாப்பிள்ளை எனும் மாபெரும் காவியத்தை எங்கள் இல்லத்தில் கண்டு களிக்கிறார்கள். இதனால் நானும் காண வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிறேன்.

ஹீரோவும், ஹீரோயினும்  காதலிச்சு அதை சொல்ல முடியாம, மெல்ல முடியாம பல மாசம் ஓட்டினாங்க. (இதுல ரெண்டு பேருக்குமே இன்னொருத்தங்க லவ் பண்றாங்கன்னு தெரியும்) ஒரு வழியா லவ்வை சொன்ன பிறகு ரெண்டு வீட்டுலையும் பேசி நிச்சய தார்த்தம் வந்துச்சு.

அய்யா.. நிச்சய தார்த்தம் சீனை எவ்வளவு நாள் ஓட்டுவாங்கன்னு நினைக்கிறீங்க? நாலு வாரம் !!!!!!!! ஒரே ஒரு நாள் நடக்குற நிச்சய தார்த்த சீனை நாலு வாரம் ஓட்டி நாக்கு தள்ள வச்சாங்க

இப்ப பத்திரிக்கை எடுத்துக்கிட்டு ஒவ்வொருத்தரா பாத்து கொடுத்துக்கிட்டுக்கங்க. எப்படியும் இந்த வருஷம் முடியறதுக்குள் பத்திரிக்கை கொடுத்து முடிப்பாங்கன்னு நினைக்கிறேன்..

இந்த சீரியல்ல ஒரு நல்ல விஷயம் என்னான்னா .. நீங்க சில பல வாரம் பாக்காம - மறுபடி வந்து பாத்தாலும் ஒண்ணும் மிஸ் பண்ணிருக்க மாட்டீங்க. கதை அங்கேயே தான் நின்னுக்கிட்டு இருக்கும்....

ஒரு நாள் நடக்குற நிச்சய தார்த்தத்துக்கே 4 வாரம் ஓட்டினவய்ங்க... கல்யாணத்தை எத்தனை மாசம் எடுப்பாங்கன்னு நினைச்சாதான் கொஞ்சம் கெதக்குன்னு இருக்குது....


Tuesday, May 2, 2017

வானவில்: பாகுபலி சர்ச்சை- ஞாபகமறதி கணவர்கள் குறித்த நீயா நானா

பார்த்த படம்: Parched (ஹிந்தி)

அஜய் தேவ்கான் தயாரிப்பில் வெளியான இப்படம் ஏராள தேசிய விருதுகளை வென்றது; நாங்கள் படம் பார்க்க இதுவே காரணம்

ஒரு கட்டு பெட்டியான, மூட நம்பிக்கைகள் நிறைந்த கிராமம் .. மிகுந்த போராட்டத்திற்கு பின் தான் மொபைல் அனுமதிக்கப்படுகிறது; இன்னும் டிவி க்கு அனுமதி இல்லை; இந்த கிராமத்தில் இருக்கும் 4 பெண்களின் கதை தான்   Parched.

Image result for parched

நால்வரில் மூவர் தோழிகள். நான்காவது ஒரு சிறு வயதில் மணமுடிக்கும் ஒரு இளம்பெண்;திரைக்கதை முழுதும் இந்த பெண்களை - ஆண்கள் எப்படி பயன்படுத்துகின்றனர் - உதாசீனப்படுத்துகின்றனர் - வன்முறையை உபயோகிக்கின்றனர் என்றே பயணிக்கிறது.. இவற்றில் இருந்து அவர்கள்  எப்படி தீர்வு காண்கிறார்கள் என முடிகிறது படம்

ஜாலியாய் ஒரு படம் பார்ப்போம் என்போர் தவிர்க்க வேண்டிய படம்; போலவே குடும்பத்துடன்/ குழந்தைகளுடன் பார்க்கவும் ஏற்றதல்ல.

நல்ல சினிமா - ஆர்ட் பிலிமில் ஆர்வமுள்ளளோர் மட்டும் தனியே கணினியில் அல்லது டிவியில் காணலாம் !

பிட்னெஸ் பக்கம் 

அண்மையில் கலந்து கொண்ட ஒரு சுவாரஸ்ய போட்டி - நங்கநல்லூர் பண்டிட் ரன்னர்ஸ் நடத்திய "டெம்பிள் ரன்".

மூன்று பேர் கொண்டது ஒரு அணி; இந்த மூவர் அணி 20 கோயில்களை சென்றடைந்து விட்டு புறப்பட்ட இடம் வரவேண்டும். அனைவரும் 20 கோயிலுக்கும் செல்ல அவசியமில்லை; ஒருவர் 6 கோவிலும் மற்ற இருவர் ஆளுக்கு 7 கோவிலும் சென்றால் கூட போதும்.

போட்டிக்கு முதல் நாள் 20 கோவில்கள் லிஸ்ட் தரப்பட - ஒவ்வொரு அணியும் நங்கநல்லூரை அலசி ஆராய்ந்தது.

போட்டியன்று 20 அணிகள் கலந்து கொண்டன. அதில் 6 அணிகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 45 நிமிடத்திற்குள் 20 கோவிலை தொட்டு வந்தன (அதில் எங்கள் அணியும் உண்டாக்கும் !) வெற்றி பெற்ற அணி 27 நிமிடத்திற்குள் அனைத்து கோவிலையும் தொட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

அருமையான வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹெல்தி ஸ்நாக்ஸ், அனைவருக்கும் மரக்கன்று என தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. !

Image may contain: outdoor
Photo courtesy: Shumon Singha 

இந்த நங்கநல்லூர் ரன்னர்ஸ் தினம் நங்கநல்லூர் சுதந்திர தின பூங்காவில் இருந்து தான் ஓடுகின்றனர். நீங்கள் அந்த ஏரியா வாசி எனில் இவர்களுடன் இணையலாம்.. !

இவர்களின் முகநூல் பக்கம் : https://www.facebook.com/groups/181620802198310/

ஐ பி எல் கார்னர் 

வழக்கமாய் கடைசி நேரம் வரை எந்த அணிகள் Play off  உள்ளே வரும் என்பது தெரியாமல் இருக்கும். இம்முறை கொல்கத்தா, மும்பை மற்றும் ஹைதராபாத் Play off செல்வது அநேகமாய் உறுதியாகி விட்டது. போலவே பெங்களூரு, டில்லி மற்றும் குஜராத் Play off உள்ளே செல்ல வாய்ப்பே இல்லை என்பதும் நிச்சயம். Play off உள்ளே செல்லும் நான்காவது அணி புனேவா அல்லது பஞ்சாபா என்பது மட்டும் தான் முடிவாக வேண்டும். (புனேவிற்கு வாய்ப்புகள் அதிகம்)

இளம் வீரர்களில் மும்பைக்கு ஆடும் ராணா மற்றும் டில்லி வீரர் ரிஷாப் பாண்ட் இந்திய அணிக்கு விளையாட பிரகாச வாய்ப்பு இருக்கிறது; குறிப்பாக இவ்வருடத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்பு ராணா.

பவுலிங்கில் எத்தனையோ வெளி நாட்டு வீரர்கள் இருந்தாலும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா தான் அசத்தி வருகிறார்கள்;  இவர்களுடன் ஷாமியும் சேர்ந்து விட்டால் இந்திய அணியின் பவுலிங் ஒரு நாள் மற்றும் 20-20 ல் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை தருகிறது

இம்முறை கோப்பை வெல்வது கொல்கத்தா அல்லது ஹைதராபாதாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.

என்னா பாட்டுடே :என்னுள்ளே என்னுள்ளே (வள்ளி)

வள்ளி படத்தில் இடம் பெற்ற இப்பாட்டு ராஜாவின் மேதைமைக்கு ஒரு அட்டகாச எடுத்து காட்டு.

படத்தில் ஒரு ஏடாகூட காட்சியில் - பாடல் சற்று கிளாமராக வரும் என்பதால் - ஆடியோ வடிவத்தை மட்டும் இங்கு ஷேர் செய்கிறேன்

மெட்டு, வாத்திய கோர்வை, சுவர்ண லதாவின் குரல் அனைத்தும் சேர்த்து பாடலை வேற லெவலுக்கு எடுத்து போகிறது

சரணத்தில் மெட்டு அங்கும் இங்கும் அலை பாய்வதும், ஸ்வர்ண லதாவின் மயக்கும் குரலும்..வாவ் !!



பாகுபலி சர்ச்சை 

பாகுபலி குறித்து 90 % பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் 10 % பேர் அதனை எதிர்த்து எழுதுகிறார்கள். இதில் தவறில்லை; எந்த  படைப்பும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் பாகுபலியை ஆதரிப்போரை நக்கல் அடிப்பதும், பாகுபலியை ஒன்றுமே இல்லாத குப்பை என ஏசுவதும் தான் உறுத்துகிறது.

சிலருக்கு ஒருவரை பிடிக்க வில்லை என்றால் அவர் என்ன செய்தாலும் பிடிக்காது. எப்படி குறை கண்டு பிடிக்கலாம் என்று தான் அலைவர்.. பாகுபலி விஷயத்திலும் இது நடக்கிறது; முதல் பாகம் வந்தபோதே - அது மாபெரும் வெற்றி கண்டபின்னும் -50 நாள் கழித்து பாகுபலியை விமர்சித்து எழுதியோர் இருந்தனர். அதே நபர்கள் மீண்டும் இப்போது முதல் நாளே பார்த்து விட்டு மீண்டும் விஷம் கக்குவதை பார்த்து சிரிக்கத்தான் வேண்டியுள்ளது

பாகுபலியில் லாஜிக் குறை பேசுகிறார்கள். எத்தனை ஹாலிவுட் சினிமாவில் லாஜிக் பார்த்துள்ளோம்.. அங்கெல்லாம் செய்தால் வாயை மூடி கொள்வோம். உள்ளூரில் ஹாலிவுட் தரத்தில் ஒரு படம் தந்தால் முதல் ஆளாய் கல் எறிவோம்

பாகுபலியில் குறைகள் இல்லாமல் இல்லை;ஆனால் அவற்றை விட நிறைகள் அதிகம். பாகுபலியை ஆதரிப்போர் பார்ப்பது நிறைகளை; விமர்சிப்போர் குறைகளை மட்டுமே காண்கின்றனர்

சரி ..சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்கட்டும் ஜாலியாக இந்த பாகுபலி மீம்ஸ் கண்டு சிரியுங்கள் !

போஸ்ட்டர் கார்னர் - பாகுபலி ஸ்பெஷல் 

Why Kattappaa killed Bahubali - Funny reason 







நீயா நானா -  ஞாபகமறதி கணவர்கள் 

ஞாபக மறதி கணவர்கள் பற்றி மனைவிகள் பேசிய நீயா நானா - எனக்கு மகிழ்ச்சியை தந்தது; வீட்டம்மாவை "அவசியம் பாரு" என  உட்கார வைத்தேன். நான் ஒன்றும் ஞாபக மறதி ஆசாமி கிடையாது; வீட்டில் பத்து பொருள் சொன்னாலும் சரி, ஒன்றே ஒன்று சொன்னாலும் சரி எவ்வளவு வேலை/ எந்த முக்கிய மீட்டிங் முடிந்து திரும்பினாலும் நினைவோடு வாங்கி வருகிற ஆள் தான். இருந்தும் வீட்டில் திட்டு என்ன குறைவாகவா கிடைக்கிறது !!

அதற்கு தான் அம்மணியை அமர்ந்து பார்க்க சொன்னேன்...பிறந்த நாள், கல்யாண நாளை  மறப்பது, வீட்டில் சின்ன வேலை சொன்னாலும் மறந்து விட்டு செய்யாமல் போவது என ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல - நம்ம மேடம் " நீங்க எவ்வளவோ பரவாயில்லை" என சர்டிபிகேட் கொடுத்து விட்டார்.

டிவியில் வழக்கம் போல கோபிநாத் " அவரு மறக்கும்போது உங்க மனநிலை எப்படி இருக்கும்? உங்களுக்கு அது எவ்வளவு கஷ்டமா இருக்கும் " என குடும்பத்திற்குள் குண்டு வைத்து கொண்டிருந்தார்... !

Wednesday, March 29, 2017

வானவில்: ஆர் கே நகர் இடைத்தேர்தல்+ இந்தியா ஆஸி சீரிஸ் ஒரு பார்வை

ஆர் கே நகர் இடைத்தேர்தல் 

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்ற நிலை மாறி ரொம்ப நாள் கழித்து நல்ல போட்டியுடன் ஒரு இடைத்தேர்தல்.

தினகரன் மற்றும் தி.மு.க இருவரில் ஒருவர் தான் ஜெயிப்பார் என நினைக்கிறேன்.

தினகரன்.. ப்ளஸ் பண பலம் மற்றும் அதிகார பலம்... மைனஸ் ... இவை தவிர மற்ற எல்லாம்.. குறிப்பாக இரட்டை இலை  சின்னம் இல்லாமை மற்றும் ஜெ மரணத்தின் மர்மம்

தி.மு.க - பலம் அதிமுக உடைந்தது; தனது வழக்கமான 30 % வாக்கு வாங்கினாலே வெல்லும் வாய்ப்பு அதிகம். மைனஸ் - இத்தொகுதி traditional ஆக அதிமுக கோட்டை...

நீண்ட நாளுக்கு அதிமுக பிரிந்து இருக்கும் என தோன்றவில்லை; ஜானகி- ஜெ அணி இணைந்தது போல் - பாராளுமன்ற தேர்தலுக்கு பின் எந்த அணிக்கு வாக்கு வாங்கி அதிகமோ அதனுடன் மற்ற அணி இணைய வாய்ப்புகள் அதிகம்.

கிரிக்கெட் கார்னர்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்ட்டில் இந்தியா வென்றது மிக நிறைவான ஒன்றாய்  இருந்தது.

இந்த சீரிஸில் குறிப்பிடத்தக்க பர்பாமன்ஸ் செய்த சிலர் பற்றி

ராகுல்: கடினமான பிட்சில் 7 இன்னிங்ஸ் ஆடி - 6 - 50கள் எடுத்த ராகுல்.. ஒரு ஓப்பனிங் பாட்ஸ்மான் ஆக நிலை நிறுத்தி கொண்டுள்ளார்.

ஜடேஜா - பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் மட்டுமல்லாமல் - இரு முறை கடினமான நேரத்தில் நன்கு பாட்டிங் செய்து இந்தியாவை காப்பாற்றி  கொடுத்தார்.

புஜாரா - ராகுல் திராவிடுக்கு சரியான replacement இவர் தான் ! பொறுமை மற்றும் விடா முயற்சி இவரது இலக்கணம். மிஸ்டர் கன்சிஸ்டண்ட்

உமேஷ் யாதவ் : இந்திய பிச்சில் இப்படி ஒரு பவுலர் அசத்துவது ஆச்சரியம். சாதாரண பவுலராக வந்து - மிக நன்றாக தற்போது வீசி  தன்னை நிலை நிறுத்தி  கொண்டுள்ளார்.

சாஹா : முதல் 2 மேட்சில் பாட்டிங்கில் அடிக்கலை; ஆனால் கடைசி 2 மேட்சில் சூப்பர்  பாட்டிங்.

சுமார் performers :

ரஹானே : டெஸ்ட் சீரிஸில் பெரிய இல்லை; ஆனால் கடைசி மேட்சில் காப்டன்சி மற்றும் 2 விக்கெட் போன நேரத்தில் உள்ளே வந்து அதிரடியாய் சில சிக்ஸர் அடித்து மேட்சை விரைவாய் முடித்தது அட்டகாசம் !

அஷ்வின்: ஜடேஜா - பாட்டிங், பவுலிங் இரண்டிலும் தன்னை விஞ்சுவார் என அஷ்வின் நினைத்திருக்கவே  மாட்டார். ஆஸ்திரேலியா இவரது பந்து வீச்சுக்கு நிறைய திட்டமிட்டு வந்தது காரணமாய்  இருக்கலாம்.

கோலி - ஒரு 50 கூட அடிக்கலை; ஆனால் aggressive captaincy !

அழகு கார்னர் 


Related image
நிவேதா தாமஸ் 

ஹெல்த் கார்னர் : மசக்கை சில குறிப்புகள் 

கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடுங்கள் 

சாப்பாட்டிற்கு அரை மணி முன் தண்ணீர் குடியுங்கள் சாப்பாட்டின் போது வேண்டாம்  

நாள் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக திரவ ஆகாரம் அருந்துங்கள் 

குமட்டல் ஏற்படுத்தும் உணவை தவிருங்கள் அந்த உணவு வாசனையை விட்டு விலகி இருங்கள் 

நன்றாக தூங்குங்கள். முடிந்தால் பகலிலும் சற்று தூங்கலாம் 

உஷ்ணம் குமட்டலை அதிகரிக்கும். உஷ்ணம் நிறைந்த இடங்களை தவிருங்கள் 

உடற்பயிற்சி செய்யுங்கள்.
எலுமிச்சை முகருங்கள். இஞ்சி கலந்த ஜூஸ் அல்லது தர்பூசணி குமட்டலுக்கு நல்லது 

சாப்பிட்டதும் படுக்காதீர்கள் 
பட்டினி கிடக்காதீர்கள் வேளைக்கு சாப்பிடுங்கள். உணவை தவிர்க்காதீர்கள் 

ஸ்பைசி உணவை சமைக்காதீர்கள் சாப்பிடாதீர்கள் 

- குமுதம் ஹெல்த் இதழில் இருந்து 

என்னா பாட்டுடே

ஓகே கண்மணியில் நானே வருகிறேன் பாடல் .. ரகுமான் லைவ் இசை நிகழ்ச்சி ஒன்றில் வாசித்த போது எடுத்த வீடியோ இது.. என்னா மாதிரி பாட்டு.. பெண் குரலும் சரி, குறைவாக ஒலிக்கும் ஆண் குரலும் சரி.. அற்புதம் !



QUOTE CORNER

A man of wealth has many enemies, while a man of knowledge has many friends.

அழகு கொஞ்சும் ECR சாலை

மிக அழகான ECR சாலையில் 30 கி. மீ சைக்கிள் பயணம் அண்மையில் சென்றேன். சைக்கிளிங் செல்லும் பலர் ECR ஐ விரும்புவதன் காரணம் புரிந்தது. அதிக டிராபிக் இல்லாத அற்புதமான சாலைகள்..வாவ் !

காலை 6 மணிக்கு அக்கரை கடற்கரையில் சூர்யோதயம் காணும் வாய்ப்பு. 

Image may contain: one or more people, ocean, sky, twilight, beach, outdoor, nature and water

கடலில் சூர்யன் உதிக்கும் போது - அதற்கு எதிரில் 10 பேர் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தனர்.

Image may contain: one or more people, ocean, sky, outdoor, nature and water

அக்கரை ஏரியாவிலிருக்கும் பங்களா ஒவ்வொன்றும் செம !
பொதுவாய் வெவ்வேறு பகுதியில் சைக்கிள் ஓட்ட நினைக்கும் என்னை ECR அடிக்கடி இழுக்கும் என நினைக்கிறேன்.

Wednesday, March 15, 2017

வானவில் : 5 மாநில தேர்தல் முடிவுகள் ஒரு அலசல்- சாக்ஸ் shocks !

பார்த்த படம்: Fan

ஷாரூக் இரு வேடத்தில் நடித்த Fan திரைப்படம் ..ஒரு வித்யாசமான அனுபவம்.

முதல் பாத்திரம் - ஷாரூக்கை ஒத்த ஹீரோ; மற்றொன்று அவரின் விசிறி. இந்த விசிறி அவரை போலவே தோற்றம் கொண்டவன். ஹீரோவை அவரது இல்லத்தில் காண வந்து - முடியாமல் ஏமாற்றமடைகிறான்.இன்னும் சில சம்பவங்களுக்கு பின் அந்த விசிறி - ஹீரோவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதே கதை.... கிட்டத்தட்ட ஹீரோவின் பெயரை நாசம் செயகிறான் .. அதிலிருந்து ஹீரோ எப்படி மீண்டார்.. அந்த விசிறி என்ன ஆனான் என்பது கிளை மாக்ஸ்..

விசிறி பாத்திரம் தான் கதையின் உயிர்நாடி. கல்லூரியில் படிக்கும் சின்ன வயது பையன் போல நடித்து அசத்தியிருக்கிறார் ஷாரூக். சிற்சில குறைகள் இருந்தாலும் நிச்சயம் ஒரு வித்தியாச அனுபவம் தரும் படம்.

ரசித்த பதிவு 

எங்க ஊருக்கருகே உள்ள திருவையாறு அசோகா அல்வாவிற்கு புகழ் பெற்றது. அல்வா பற்றிய சமஸ் அவர்களின் இந்த பதிவு நாவில் நீர் சொட்ட வைக்கும் அட்டகாசமான ஒன்று.. வாசிக்க தவறாதீர்கள் !

அழகு கார்னர் 

Image may contain: 1 person, smiling, closeup
ஜாக்குலின் 

நானே ஜிந்திச்சேன்

ஜாகிங் என்பது அண்ணன் மாதிரி; ஆரம்பத்தில் வெறுப்போம். நாள்பட நாள்பட தான் அருமை தெரியும்.

வாக்கிங் தம்பி போல. எப்பவும் ஜாலி .. Fun ! அண்ணனால் உதவ முடியாவிடினும், தம்பி நிச்சயம் உதவுவான் !

- இன்றைய நடை பயிற்சியில் தோன்றியது (நானே ஜிந்திச்சேன் )

சாக்ஸ் shocks !!

காலையில் அலுவலகம் கிளம்பும் போது சாக்ஸ் தேடுவதே ஒரு பெரும் பிரச்சனை; என்ன பிரச்சனை என்கிறீர்களா?

இந்த சாக்ஸ்கள் எப்போதும் தமது ஜோடிகளை விட்டு பிரிந்தே காலம் கழிக்கின்றன. பத்து சாக்ஸ் இருக்கும். ஆனால் அதில் சரியான ஒரு ஜோடியை தேடி கண்டு பிடிக்கணும்.பத்து சாக்சில் நிஜமாவே ஒன்று மட்டுமே இணையோடு இருக்கும். மற்றவை எல்லாம் ஒண்டி கட்டைகளாக திரு திரு என முழிக்கும்.

துவைக்கும் இடத்திலோ, காயும் இடத்திலோ எப்படியோ ஜோடியை தொலைத்து விடுகின்றன.

பேசாம - யூனிபார்ம் மாதிரி கரும்நீல நிறத்தில் மட்டும் சாக்ஸ் வாங்க யோசித்து வருகிறேன். அப்போ - நிச்சயம் 2 காலுக்கும் ஒரே மாதிரி சாக்ஸ் கிடைச்சுடும் இல்லையா !

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நிச்சயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. டீமானிடைசேஷனுக்கு பிறகு நடக்கும் பெரிய தேர்தல் இது; டீமானிடைசேஷனில் பெரும்பான்மை மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இருந்தும் ஐந்தில் -நான்கு மாநிலம் பிஜேபி வசம் எப்படி வந்தது ! (கோவா மற்றும் மணிபூரில் இரண்டாம்  இடம் வந்தும் சாமர்த்தியமாக காயை நகர்த்தி பிஜேபி ஆட்சியை கைப்பற்றியது )

டீமானிடைசேஷன் துயரத்தை எதிர்த்து எதிர் காட்சிகள் போதிய பரப்புரை செய்ய வில்லை; மாற்றாக இது என்னவோ பணக்காரர்கள் பணத்தை வாங்கி ஏழைக்கு கொடுக்க வைக்க நடக்கும் நிகழ்வு என பிஜேபி செய்த பிரச்சாரம் எடுபட்டது என்றே தோன்றுகிறது

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபியை அசைக்கவே முடியாது! இது நல்லதா கெட்டதா..தெரிய வில்லை !

Tuesday, February 28, 2017

வானவில்- லன்ச் பாக்ஸ் சினிமா - அதிமுக அரசியல் -சென்னை கிளைமேட்

லன்ச் பாக்ஸ் ( ஹிந்தி )

மும்பையில் டப்பா வாலாக்கள் மதிய சாப்பாட்டை  கொண்டு வந்து தரும்போது இருவரின் சாப்பாடு முற்றிலும் மாறிப்போய் விடுகிறது. இதில் ஒரு வித்தியாச காதல்  உதிக்கிறது;

Related image

ஆண் - மனைவியை இழந்தவன்- ஓரிரு  மாதத்தில் ரிட்டையர் ஆக போகிறவன்.. பெண்.. கணவனால் முழுதும் நிராகரிக்கப்படும் ஒருத்தி.. மேலும் கணவன் இன்னொரு பெண்ணோடு உள்ள தொடர்பினால் இவளை கண்டு கொள்வதே இல்லை..

இந்த இருவருக்கும் கடிதம் மூலம் காதல்  வளர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண் கணவனை தூக்கி எறிந்து விட்டு வெளியே வர நினைக்கிறாள்.. கடித காதலனுடன் அவள் இணைந்தாளா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் விடையை நம் ஊகத்திற்கு விட்டு படத்தை நிறைவு செயகிறார்கள்

நிச்சயம் வித்யாசமான படம் .. சந்தேகமே இல்லை. இர்பான் கான் மற்றும் நிம்ரத் கவுர் நடிப்பு  அட்டகாசம். திரைக்கதை - இயக்கம் இரண்டும் பாராட்டும் வண்ணம் இருந்தது.

வசூல் ரீதியிலும் வெற்றி பெற்ற இப்படத்தை ..........நல்ல படம் விரும்புவோருக்கு நிச்சயம் பரிந்துரைக்கிறேன் !

டெக்கான் கிரானிக்கில்

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பதிப்பு சென்னைக்கு வரும் முன் டெக்கான் கிரானிக்கில் பத்திரிக்கை ஒரு கலக்கு கலக்கியது; டைம்ஸ் ஆப் இந்தியா வந்த பின் டெக்கான் சுத்தமாய் படுத்து விட்டது என நினைக்கிறேன்.

பல பெட்ரோல் பங்குகளில் காலை வேளை டெக்கான் கிரானிக்கில் பத்திரிக்கை இலவசமாய் தருகிறார்கள். புதிதாக வந்த பத்திரிக்கைக்கு தான் இப்படி பிரபலமாகும் வரை இலவசமாய் தரும் வேலை நடக்கும். இங்கு டெக்கான் கிரானிக்கில் வந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் இது நடக்கிறது. பல மாதங்களாக கவனிக்கிறேன். இது தொடர்கிறது ! பத்திரிக்கை நடத்துவது எவ்வளவு பெரிய கஷ்டமான காரியமாக மாறி வருகிறது !!

ரசித்த பதிவு - ஹானர்ஸ் செல்வகுமார்

பதிவர் யுவகிருஷ்ணா போலியோவால் பாதிக்கப்பட்டு - கல்லூரியில் சீட்டு மறுக்கப்பட்டு போராடி, கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்வில் உயர்ந்த செல்வகுமார் என்பவரை குறித்து எழுதிய கட்டுரை - அற்புதமானதோர் தன்னம்பிக்கை கட்டுரை.. 

இக்கட்டுரையை நீங்கள் இங்கு வாசிக்கலாம் !

//அனுதாபம் என்பதும் ஒருவகை அன்புதான். அதை மறுக்கக்கூடாது. நாம் மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் நம் மீது அன்பு செலுத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் கோயில் படிகளில் நான் தவழ்ந்து ஏறும்போது சில வடநாட்டு யாத்ரீகர்கள் காசு கொடுப்பார்கள். கவுரவம் பார்க்காமல் அதை வாங்கிக் கொள்வேன். மகிழ்ச்சியோடு போவார்கள். அந்த காசை கொண்டுபோய் கோயில் உண்டியில் போடுவேன். ‘பிச்சைக்காரன்னு நெனைச்சியா?’ என்று அவர்களிடம் நான் கோபத்தை காட்டியிருந்தால், அவர்களது அன்பை மறுக்கக்கூடியவனாக ஆகியிருப்பேன். ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருது வாங்கும் மேடையில் சொன்னாரே, ‘அன்பு வழி என் வழி’ என்று. என்னுடைய வழியும் அதுதான். அன்பு வழியை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தோல்வியே இல்லை// 

அருமை !

அழகு கார்னர் 

மஞ்சிமா மோகன் 

பயணத்துக்கு தமிழில் ஒரு டிவி !!

தமிழில் ட்ராவல் XP என்றொரு சானல் அண்மை காலமாக ஒளிபரப்பாகி வருகிறது;தமிழ் டப்பிங்கில் இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றை சுற்றி .காட்டுகிறார்கள். மேலும் அங்குள்ள சிறப்பம்சங்களும் பேசுகிறார்கள்.பயணத்தில் ஈடுபட்டுள்ளோர்க்கு இந்த சானல் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் !

அதிமுக அரசியல் 

பிரேக்கிங் நியூஸ் எல்லாம் முடிந்து - ஆட்சி (!!) பொறுமையாக துவங்கி  விட்டது.

ஜெ அவர்கள் விலக்கி வைத்த TTV தினகரன் ஒரே நாளில் கட்சியில் சேர்க்கப்பட்டு அன்றே துணை பொது செயலாளர் ஆனதெல்லாம் அநியாயம் ! தொண்டர்கள் இதையெல்லாம் கேள்வி கேட்கவே மாட்டார்களா?

இன்னொரு பக்கம் செங்கோட்டையன் இந்த ஆட்சி சசிகலா வழி காட்டுதலின் படி தான் நடக்கிறது என்று பேட்டி  கொடுக்கிறார். கொடுமைடா சாமி !

அலுவலகத்தில் சில தீவிர அதிமுக நண்பர்கள்  இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாருமே சென்னைக்கு வெளியே சொந்த ஊரை  கொண்டவர்கள். சசிகலாவை தீவிரமாக  வெறுக்கிறார்கள். பன்னீர் மற்றும் தீபா தான் உண்மையான அதிமுக என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். (தீபாவை எப்படி சார் ஏத்துக்குறாங்க !!)

அடுத்த சில வருடங்களில் அதிமுக மிக மிக  வலுவிழக்கும்.எப்போது சட்ட மன்ற தேர்தல் நடந்தாலும் திமுக எளிதில் நிச்சயம் வெற்றி  பெறும் (சட்ட மன்ற தேர்தல் என்று தான் சொன்னேன். பஞ்சாயத்து தேர்தல் எப்படி போகும் என தெரிய  வில்லை; பல நேரம் ஆளும் கட்சி தான்  பஞ்சாயத்து தேர்தலில் பல தகிடுதத்தங்களுடன் ஜெயிக்கும் )

மிக வலுவிழந்த ஒரு முதல்வர் நீண்ட நாள் நீடிப்பது தமிழகத்திற்கு எந்த விதத்திலும் நல்லது இல்லை.. ! புது investments வராது;  நல்ல ப்ராஜெக்ட்கள் கிடைக்காது ; மாநிலத்தின் முன்னேற்றமே சற்று  பின் தங்கி விடும் !!

சென்னை கிளைமேட் 

என்னை போல காலையில் வாக்கிங் போகும் ஆசாமிகளுக்கு சென்னையின்  கிளைமேட் ஒரு நூதனமான பிரச்னையை தருகிறது; காலை 6 மணி வரை வெளிச்சம் எட்டி பார்க்காமல் இருளோன்னு இருக்கிறது. சரி வெளிச்சம் வரட்டும் என்றே காத்திருப்பேன் (இருட்டில் நடக்கும் போது பாம்பை மிதித்தால் என்னாவது என்ற பயம் ஒரு காரணம்... !)  ஆறு - ஆறே காலுக்கு வெளிச்சம்  வருகிறது;அடுத்த அரை மணியில் வெய்யில் சுளீர் என அடிக்க ஆரம்பித்து  விடுகிறது. ஒன்றரை மணி நேரம் நடை + ஓட்டத்தில் 10 கிலோ  மீட்டர் தூரம் தினம் கடக்க  நினைப்பேன். இந்த இருள் + வெய்யில் சேர்ந்து செய்யும் சதியால் சில நேரம்  முடிவதில்லை.

கோடை துவங்குகிறது.. பார்க்கலாம்.. இனியாவது வெய்யில் அதிகம் இல்லா வெளிச்சம் ஒரு மணி நேரமாவது நீடிக்கிறதா என !

Friday, February 24, 2017

வானவில்: Ghasi Attack- தந்திரா - மிருணாளினி-ஆசிஃப் பிரியாணி

பார்த்த படம் : Ghasi Attack

1971ல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடலில் நடந்த ஒரு சண்டையை பற்றி சொல்லும் படம் தான் காசீ அட்டாக்.

இந்தியாவில் முதல் submarine story என்று பெரும் எதிர்பார்ப்புடன்  கடந்த வாரம் வெளியானது. பாகுபலி புகழ் ராணா ஹீரோவாக நடிக்க, இன்னும் சிலர் முக்கிய பாத்திரங்களில்..

Image result for ghazi attack

உண்மையில் படம் என்னை பெரிதாக ஈர்க்க வில்லை; நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள் ஏதும் இல்லை; போர் படத்தில் எந்த காட்சியும் நம்மை சீட் நுனிக்கு கொண்டு செல்லவில்லை; ஜெயிக்க போவது இந்தியா தான்  என முன்பே தெரியும் என்பதால் - பாத்திரங்களில் யார் உயிரோடு மிஞ்சுவர் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கிறது. மேலும் படம் மிக மெதுவாக நகர்கிறது

காசீ அட்டாக் - Avoidable

ரசித்த பதிவு.. சாணை பிடிப்பவரின் பேட்டி

வீடுதிரும்பலில் முன்பெல்லாம் சாதாரண மனிதர்களின் பேட்டி இடம் பெறும். அத்தகைய ஓர் பேட்டியை விகடனில்  வாசிக்க முடிந்தது. சாணை பிடிப்பவரின் பேட்டி ! நிச்சயம் நமது எழுத்தை விட பல மடங்கு அருமையாக எழுதியிருக்கிறார்கள்.. விகடனில்.. குறிப்பாக அந்த நிருபர் அதிகாலை  துவங்கி நாள் முழுதும் அந்த சாணை பிடிப்பவருடன் பயணித்தது ஆச்சரியமாக உள்ளது.

வானவில்லில் சாணை பிடிப்பவருடன் பேசியதை ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். இவர்களை காணும் போதல்லாம் எனக்கு வரும் ஆச்சரியம் எப்படி அவ்வளவு வெயிட் தூக்கி கொண்டு இவ்வளவு தூரம் நடக்கிறார்கள் என்பது தான். இப்பதிவு அதை பற்றி மிக முக்கியமாக பேசுகிறது.

பேட்டியின் முடிவில் இந்த தொழில் தான் எனக்கு சோறு போடுது; ஆனா எங்க காலத்து பிறகு இந்த தொழிலே இருக்க கூடாது என்று அவர் சொல்லுவதும் அதற்கான காரணமும் நெகிழ்ச்சி ..

பேட்டியை இங்கு வாசிக்கலாம்.

அழகு கார்னர் 

Mirnalini Ravi (Dubsmash) - Nagal
மிருணாளினி 
Image result for mrinalini ravi




Dubsmash புகழ் மிருணாளினி முதல் முறை தமிழ் படமொன்றில் நடிக்கிறார். பார்க்கலாம்.. அம்மணி பெரிய திரையில் சாதிக்கிறாரா என !

உணவகம்: ஆசிஃப் பிரியாணி

Demonetization துன்பம் உச்சத்தில் இருந்த நேரம்.. ஒரு மதிய நேரம் ஆசிஃபி பிரியாணி கடைக்கு சென்றோம். அந்த நேரம் எல்லா கடைகளிலும் டெபிட்/ கிரெடிட் கார்ட் கூட இயங்கவில்லை. இருப்பினும் கடை ஹவுஸ் புல் ஆக இருந்தது !

எல்லா உணவு வகையும் 250 முதல் 300 ரூபாய் ரேஞ்சிலேயே இருக்கிறது; விலை சற்று அதிகம் தான். இருப்பினும் அளவு கூடுதலாக உள்ளது; ஒரு பிரியாணி என்று ஆர்டர் செய்தால் - நிச்சயம் அதனை ஒரே ஆள் சாப்பிட முடியாது; 2 பிரியாணி வாங்கினால் 3 பேர் சாப்பிடலாம்.

அட்டகாசமான டேஸ்ட் .. பிற கடை பிரியாணிகளை விட கொஞ்சம் வித்யாசமாக இருந்தது; நெய் அடிச்சு விட்டிருந்தனர் ! நிச்சயம் கொஞ்சம் குறைக்கலாம் !

பிரியாணி பிரியர்கள் அவசியம் ஒரு முறை விசிட் அடிக்கலாம்.. !

ஆசிப் பிரியாணி கடைக்கு சென்னையில் 10க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.. நாங்கள் சாப்பிட்டது மடிப்பாக்கத்தில் !

கிரிக்கெட் கார்னர் 


இந்திய ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்டில் இந்தியா இவ்வளவு மோசமாக உதை வாங்கும் என யாரும் நினைத்திருக்க முடியாது. கடைசி 2 பவுலர்கள் தவிர மற்ற எல்லாருமே பேட்டிங் செய்ய கூடிய இந்திய அணி 105 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது அநியாயம். போலவே கடைசி விக்கெட்டுக்கு அவர்களை 60 ரன் அடிக்க விட்டதும் ! இந்த பிட்சில் 350 போன்ற நான்காவது இன்னிங்ஸ் ஸ்கொர் அடிப்பதெல்லாம் நடக்காத காரியம். அடுத்தடுத்த மேட்சிலாவது இந்தியா நிமிரும் என நம்புவோம் !


என்னா பாட்டுடே : தந்திரா 

அதே கண்கள் படத்தின் தந்திரா பாடல்.. நெகட்டிவ் பாத்திரத்தில் வரும் பெண்மணியை அடிப்படையாக கொண்டது. படத்தில் ஆங்காங்கு வரும் இப்பாட்டில் அதிசயிக்க வைப்பது ஒவ்வொரு முறை பாடல் வரும்போதும் அந்த பெண் பாத்திரம் தரும் ஆச்சரியம்..



கீச்சு கிளிகள் ..(From Twitter )

பெருங்காயம்™ ‏@Perungayam 

நானும் இந்த தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லது நடந்துடாதான்னு காத்துகிட்டு இருக்கேன் அத தவிர எல்லாம் நடக்குது

மதுரையான் ‏@CitizenSaravana

சசிகலாவை ஒரு நாள் கூட முதல்வராக இருக்கவிடாமல் செய்ததே ஓபிஎஸ்’ன் முதல் வெற்றிதான். தமிழகமக்கள் இதை எப்போதும் மறக்கமாட்டார்கள்

ஆல்தோட்டபூபதி ‏@thoatta

ஸ்டாலின் தன்னை பார்த்து சிரிக்காதவாறு இருக்க, சட்டசபையில் சோட்டா பீம் மாஸ்க் அணிந்து வர எடப்பாடியார் ஐடியா செய்துள்ளார்

டிமிட்ரி இவ்நோஸ்கி‏@karthekarna

எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை எம்ஜிஆர் அம்மாவுக்கு ஏன்டா தீபா பேர வைக்கணும்?

Thursday, February 16, 2017

வானவில் :ஜெ மரண மர்மங்கள் -எடப்பாடியும் ஒ பி எஸ்சும்-காதலர் ஸ்பெஷல் நீயா நானா

பார்த்த படம் : கசபா (மலையாளம் )

மலையாளத்திலும் இப்படிப்பட்ட படங்கள் வரும் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். கமர்ஷியல் படம் எடுக்க நினைத்து படு சுமாரான படம் தரும் நம்ம தமிழ் சினிமா மாதிரியே இருக்கிறது.

கல்யாணம் ஆகாத போலீஸ் அதிகாரியாக மம்மூட்டி ! பெண்கள் எல்லாம் அவர் மேல் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். அண்ணன் அதை சைலண்ட்டாக என்ஜாய் செய்து கொண்டு அடுத்த கட்டம் செல்லாமல் போலீஸ் வேலையை பார்க்கிறார் ! விபச்சார விடுதி நடத்தும் வில்லனுக்கும் இவருக்கும் நடக்கும் Tug of war தான் படம் !

மம்மூட்டியை தவிர சொல்லி கொள்கிற மாதிரி எதுவும் இல்லை .. நம்ம சரத் குமார் மகள் வரலட்சுமி நெகட்டிவ் பாத்திரத்தில் படித்துள்ளார்.. வில்லன் கூட தமிழ் நடிகர் சம்பத் தான் ! (சென்னை 28/ கோவாவில் நடித்தவர் !)

பொழுது போகாத ஒரு ஞாயிறு மாலை பார்த்து வைத்தோம். நீங்கள் ரெண்டரை மணி நேரத்தை வீணாக்க வேண்டாம்.. !

எடப்பாடி Vs ஒ பி எஸ்

உச்ச நீதி மன்ற தீர்ப்பு நெத்தி அடியாக வந்தது; குன்ஹா என்ற அற்புத நீதிபதியின் தீர்ப்பை அப்படியே டிக் அடித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் - அவர் சொன்ன தண்டனை மற்றும் அபராதத்தையுமே சரியென உறுதி செய்ய சசிகலா ஜெயிலுக்கு செல்லும் முன் அடுத்த அடிமையை தயார் செய்தார்

எடப்பாடி பற்றி தற்போது சுழன்று வரும் ஒரு தகவல்: Demonetisation பிரச்சனையின் போது அவருக்கு மிக மிக மிக வேண்டிய ஒருவர் 5.70 கோடி - 2000 ரூபாய் நோட்டுகளுடன் பிடிக்கப்பட்டு தற்சமயம் சிறையில் உள்ளாராம்.. இவரா அடுத்த முதல்வர் என குரல்கள் எழுகின்றன.

இதுவரை கவர்னர் மௌனம் சாதித்தது சசிகலா வழக்கு தீர்ப்புக்கு தான். இனியும் தாமதம் செய்யாமல் Composite Floor test க்கு உத்தரவிடுவதே நல்லது ! அதாவது எந்த ஒருவரையும் பதவியேற்க அழைக்காமல் - சட்ட சபையில் இருவரும் ஒரு மினி தேர்தல் நடத்தி அதில் 118 ஓட்டுகள் பெறுபவர் முதல்வர் என அறிவிக்கலாம். இல்லாத பட்சம் ஜனாதிபதி ஆட்சி மற்றும் மறு தேர்தல் நடத்தலாம். இதை தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை

100 பேர் போல எடப்பாடி பக்கம் இருப்பதால் அவர் முதல்வர் ஆகவே வாய்ப்புகள் அதிகம். இல்லையேல் மறு தேர்தல் !

நிற்க. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டது துவங்கி தொடர்ந்து ஏதேனும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இன்னொன்று ..அப்போல்லோ மர்மம் துவங்கி, ஜல்லி கட்டு, ஆட்சி மாற்றம் என ஒவ்வொரு விஷயமும் தேவைக்கு அதிகமான காலம் ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டே போகிறது.. கவனித்தீர்களா?

என்னா பாட்டுடே - ஓகே கண்மணி- மலர்கள் கேட்டேன் 

காதலிப்போர் இதை காதல் பாடலாக கொள்ளலாம்; ஆனால் இதனை கடவுள் நோக்கிய பாட்டாக கூட யோசிக்க முடியும்... ! எளிய வரிகள். அருமையான மெட்டு.. சித்ராவின் குரல் அற்புதம் !

மலர்கள் கேட்டேன் வரமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமுதம் தந்தனை
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்ந்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்ந்தனை
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்



டிவி பக்கம் : காதலர் தின ஸ்பெஷல்  நீயா நானா 

ஒவ்வொரு வருடமும் காதலர் தின நீயா நானா வைப்பது விஜய் டிவியின்  வழக்கம்.இம்முறை காதலும், சினிமா பாடல்களும் என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பேசினர் (இப்போதெல்லாம்  பல நீயா நானா ஷோக்கள்  ஒன்றரை மணி நேரமாவது செல்கிறது; ஏனோ இந்நிகழ்ச்சி சரியே ஒரு மணி நேரத்தில் முடித்தனர் )

நன்கு பாட்டு பாடும் ஆண்கள் .. பெண்களை impress செய்ய  முயற்சிக்க,அதற்கு பெண்கள் கொடுத்த கமன்ட் எல்லாம் " நாம எந்த உலகில் இருக்கோம் ?" என யோசிக்க வைத்தது. " சார்.. அவரை அப்படியே கடிச்சு சாப்பிடலாம்  போல இருக்கு சார் " .. இது ஒரே ஒரு  உதாரணம்.

காதல் பாடல்கள் ஒரு மனிதனின் வாழ்வோடு எப்படி இணைகிறது என்ற நல்ல லைனை - நீயா நானா டீம் - கொஞ்சம் சொதப்பி விட்டனர். ஹூம் :(

அழகு கார்னர் 

Image result for manjima mohan
மஞ்சிமா மோகன்

ஜெ மரண மர்மங்கள் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணம் குறித்து நக்கீரன் கோபால் அவர்கள் 
எழுப்பும் சில கேள்விகள் இந்த வீடியோவில் உள்ளது. 

மிக முக்கியமான கேள்வி.. ICU வில் CCTV இல்லாதது சரி.. அவர் இருந்த தளத்தில் காரிடார் 
துவங்கி மற்ற அனைத்து இடங்களிலும் எப்போதும் இருக்கும் CCTV காமிராக்கள் ஏன் வேலை 
செய்யவில்லை அல்லது அகற்றப்பட்டன? 

மேலும் செப்டிசீமியா நோய் என்றும்,இன்னும் முன்னால் வந்திருந்தால் பிழைத்திருக்கலாம் 
என்றும் பீலே சொல்வதை சுட்டி காட்டி - முன்னே ஏன் அழைத்து செல்ல வில்லை 
என்பதற்கும் நிச்சயம் பதில் தேவை 

இந்த விஷயத்தில் நியாயமான நீதி விசாரணை நடந்தால் பல உண்மைகள் வெளிவரும். 

Sunday, February 12, 2017

வானவில் - ஓ பி எஸ் vs சசிகலா - தள்ளி போகாதே- வாணி போஜன்

ஓ பி எஸ் vs சசிகலா 

ஓ பி எஸ் - ஜெ அவர்கள் சமாதியில் 40 நிமிடம் அமர்ந்துவிட்டு - பேசிய அந்த பிப்ரவரி 7 இரவில் - சமூக வலைத்தளங்களை பார்க்க வேண்டுமே.. அப்படியொரு தன்னெழுச்சி.. !

அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் நடந்திருந்தால் , சமூக வலைதள மக்கள் மட்டும் வாக்களித்தால் 234 தொகுதியிலும் ஓ பி எஸ் தான் ஜெயித்திருப்பார்  !

ஆனால் சோசியல் மீடியா மட்டுமே உலகம் இல்லையே !

நிற்க. ஓ பி எஸ் உத்தமர் அல்ல- தேனியில் பாதி ஊரை -  கடந்த சில வருடங்களில் வாங்கி விட்டார் என்பது சோசியல் மீடியா நண்பர்களிலும் பலர் அறிவர் .........என்றாலும், சசிகலா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் தான் ஓங்கி ஒலிக்கிறது.

Photo

118 என்பது தான் மெஜாரிட்டிக்கு தேவையான முக்கிய நம்பர் ! வெளிப்படையாய் 7 -8  MLA மட்டுமே ஓ பி எஸ் க்கு ஆதரவு தந்த நிலையில் இன்னும் 10-12 பேராவது சசி க்ரூப்பில் இருந்து வந்தால்  மட்டுமே சசி முதல்வர் ஆவதை தடுக்க முடியும்.

அல்லது கவர்னர் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக கருதி -மத்திய அரசின் கருத்தும் அதுவாக இருப்பின் -  ஆட்சியை கலைக்கவும் செய்யலாம்.

எனவே ஆட்சி கலைக்கப்பாட்டால் ஒழிய - சசிகலா முதல்வர் ஆகத்தான் வாய்ப்புகள் அதிகம்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதால் இப்போதுள்ள அதிமுக MLA க்களில் பலர் அடுத்த முறை தோற்பது உறுதி; அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை;  நான்கரை வருடம் சம்பாதித்தால் போதும்.

Photo

அதிமுக என்கிற கட்சி ஜெவுடன் இல்லாது போய்விடும் என பலரும் நினைத்தனர்; இப்போது ஓ பிஎஸ் என ஒரு தலைவர் - பொது மக்களால் ஏற்று கொள்ளும் அளவில் வந்துள்ளார். அவர் தலைமையில் ஆட்சி அமைந்தால்- அதிமுக நிச்சயம் வலுப்பெறும். நடுநிலை மக்கள் கூட ஓபிஎஸ் மற்றும் அதிமுகவை ஆதரிக்க வாய்ப்புகள் அதிகம்.

மாறாக சசிகலா தலைமையில் ஆட்சி அமைந்தால் - அதனை நடுநிலையாளர்களும், அதிமுக அடிமட்ட தொண்டர்களும் விரும்ப மாட்டார்கள். அப்போது கட்சி பெரிதும் வலுவிழந்து போகும்.



இந்த அடிப்படை உண்மை கூட உணராமல் நடந்து கொள்ளும் சட்ட மன்ற உறுப்பினர்களை என்னவென்று சொல்வது?

சொத்து குவிப்பு வழக்கில் - தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராய் இல்லாது போனால், அவர் முதல்வர் ஆக வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகும் .மாறாக தீர்ப்பு எதிராய் போனால், இன்னும் சுவாரஸ்ய காட்சிகளை காணலாம் !

Image may contain: 5 people, text

பார்த்த படம்: ஒப்பம் (மலையாளம் )

கண் தெரியாத மோகன்லால் ஒரு கொலையை துப்பறியும் கதை தான் ஒப்பம். கூடவே ஒரு கொலை காரனிடம் இருந்து ஒரு குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு அவருக்கு..

சற்று வித்தியாச கதைக்களம் தான்.. ஆனால் பாட்டு, சண்டை என மசாலா பட பாணியில் எடுத்தது  தான் இடறல்..

மோகன்லாலின் நடிப்பு மற்றும் வித்தியாச பிளாட்டுக்காக ஒரு முறை பார்க்கலாம் !

அழகு கார்னர் 
Image may contain: 1 person, closeup
வாணி போஜன் 
கிரிக்கெட் கார்னர் 

இந்தியா vs பங்களாதேஷ் இடையே நடக்கும் டெஸ்ட்டில் கோலி இன்னொரு 200 அடித்துள்ளார்.. தொடர்ந்து 4 சீரிஸாக -  குறைந்தது ஒரு 200 அடிக்கிறார் ! சென்ற மேட்சில் 300 அடித்த கருண் நாயரை விளையாட விடாமல் ஒதுக்கியது சற்று வருத்தம் தான். அப்புறம் Performance க்கு என்ன மரியாதை ??

இந்திய டெஸ்ட் அணியில் தற்போது ரசிக்கிற விஷயம் அஷ்வின், சாஹா , ஜடேஜா என மூவரும் தொடர்ந்து அசத்தலான பங்களிப்பை பாட்டிங்கில் செய்வது தான். இவர்கள் பங்களிப்பால் தான் 400 வர வேண்டிய ஸ்கொர் 600 வரை பலமுறை எட்டுகிறது .

முதல் இன்னிங்க்சில் பங்களாதேஷ் ஆட்டம் ஆச்சரிய தக்க வகையில் உள்ளது; இந்த டெஸ்ட் டிரா ஆனால், அது இந்தியாவிற்கு அதிர்ச்சி ஆகத்தான் இருக்கும்

போஸ்டர் கார்னர் 



பையன் பச்சை குழந்தையாம்; மருமகள் மட்டும் குரங்காம்.. ரணகளம் :)

என்னா பாட்டுடே : தள்ளி போகாதே

தமிழ் சினிமா பாடல்களில் -  காதலனும் காதலியும் பாடும் டூயட்கள் தான் மிக  அதிகமிருக்கும்.இந்த பாட்டும் ஒரு டூயட் தான்.. ஆனால் அந்த டூயட் எங்கு ஆரம்பிக்கிறது என்பதை நிர்ணயித்த இயக்குனர் கவுதம் மேனன்.. சபாஷ்  வாங்குகிறார்.

மிக பெரும் விபத்து.. அப்போது துவங்குகிறது பாட்டு.. தியேட்டரில் பார்க்கும்போது " என்னய்யா இந்த இடத்துலே பாட்டா " என முதலில் தோன்றினாலும், போக போக பாட்டை எப்படி யோசித்துள்ளார் என புரிந்து ரசிக்க முடிந்தது .

அடிபட்டு கீழே விழும் அரை மயக்க நிலை.. அப்போது அவனுக்கு தோன்றும் எண்ணங்கள்- நினைவு. கனவு ..

இந்த கனவினூடே நிகழ் காலத்தில் நடப்பதை காட்டி கொண்டே செல்வது அழகு.. !




வாசித்த புத்தகம் கருப்பு வெள்ளை 

வரலாற்று சிறப்பு மிக்க மனிதர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாய் சொல்லும் புத்தகங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு; அந்த வகையில் அமைதிக்கென நோபல் பரிசு வென்ற, அமெரிக்காவில் கறுப்பர் இன மக்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் குறித்த இந்த புத்தகம் பல தகவல்களை சொன்னது.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் - கருப்பு இனத்தினர் பேருந்தில் கடைசி சில சீட்களில் தான் அமர வேண்டுமாம். முன் பக்கம் முழுதும் வெள்ளையருக்கு; அந்த பக்கம் காலியாக இருந்தால் கூட - கறுப்பர் அங்கு சென்று அமர அனுமதி இல்லை; மேலும் பள்ளி - கல்லூரியிலும் பல்வேறு பாகுபாடுகள்.

இவற்றை எதிர்த்து போராடி - அவற்றில் பலவற்றை தளர்த்த உதவியோரில் முக்கியமானவர் மார்ட்டின் லூதர் கிங்  ! அமைதிக்கான நோபல் பரிசு வென்று அடுத்த சில ஆண்டுகளில் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது சுட்டு கொல்லப்பட்டார். அப்போது அவரது வயது வெறும் 39 ! காந்தியடிகளின் சத்யாகிரஹ முறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பின்பற்றியது அஹிம்சை முறைகளை மட்டுமே  !

மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவு நனவானாலும் கூட அதற்கு விலையாக அவர் உயிரை இளம் வயதில் தர நேர்ந்தது வருந்த வேண்டிய ஒரு விஷயம் தான் !
***
அண்மை பதிவு :

சிங்கம் 3 - சினிமா விமர்சனம்

Monday, February 6, 2017

வானவில் : துருவங்கள் 16- ராகவா லாரன்ஸ் - முதல்வர் சசிகலா

பார்த்த படம் : துருவங்கள் பதினாறு 

பாட்டு இல்லை; க்ரைம் கதை.. ஆனால் சண்டை இல்லை; ஹீரோயினும் இல்லை (கதையின் மையம் 2 இளம் பெண்களை ஒட்டியது; ஆனால் அவர்கள் வரும் நேரம் 15 நிமிடம் கூட இருக்காது !)

ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோர் எழுதும் க்ரைம் நாவல் போல ஒரு படம்.

கதை எதை நோக்கி நகர்கிறது.. என்ன நடக்கிறது என்பதெல்லாம் புரிய.. எந்த காட்சியையும் தவற விடாமல் உற்று நோக்க வேண்டியிருக்கிறது..

ஒரு கொலை.. அதனை பார்த்த வெவ்வேறு நபர்கள் .....அவர்கள் கோணத்தில் சொல்ல ..உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது.. கடைசி 10 நிமிடத்தில் தான் முழு கதையும் நமக்கு புரிபடுகிறது.

கொலை செய்தவன் நல்லவன். கொலை செய்யப்பட்டவன் கெட்டவன்.. இந்த ஒரு வரியிலிருந்து தான் கதை பின்னப்பட்டிருக்க வேண்டும்..

நிச்சயம் வித்தியாச முயற்சி தான். ஆனால் மலையாளத்தில் இதை விட அற்புதமான த்ரில்லர்கள் வருகிறது. மும்பை போலீஸ் போன்ற படங்கள் கற்பனை செய்ய முடியாத அளவு சஸ்பென்ஸ் கொண்டது ! (படம் முழுதும் கொலையை துப்பறியும் போலீஸ்க்கு ....இறுதியில் அந்த கொலை செய்ததே தான் தான் என தெரிந்தால் அப்படி இருக்கும்.. ! அதற்கு மிக சரியான காரணமும் சொல்லியிருப்பர் மும்பை போலீசில் !)

துருவங்கள் 16 - படம் வெளியான போது நிறைய பாசிடிவ் விமர்சனங்களை கண்டது; இப்போது டோரேண்டில் நல்ல காப்பி வந்த பின் சிலர் பார்த்து விட்டு சுமார் தான் என முகநூலில் எழுதி வருகின்றனர்.

படம் சரியான வெற்றி  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; சின்ன பட்ஜெட்டில் எடுத்து - நிறைந்த லாபம் அடைந்து விட்டனர்...

22 வயது இயக்குனரின் அடுத்த படம் நிச்சயம் எதிர்பார்க்க வைத்து விட்டது !

அழகு கார்னர் 

Image result for anandhi actress

ராகவா லாரன்ஸ் 

ராகவா லாரன்ஸ் மீது எனக்கு இதற்கு முன் நல்ல அபிப்ராயம் இருந்தது; நிறைய ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறார்; முடிந்த வரை பிறருக்கு உதவுகிறார்.. இன்ன பிற..

சென்ற ஆண்டு விகடன் மூலம் 100 இளைஞருக்கு 1லட்சம் வீதம் தந்து ஒரு கோடி ரூபாய் அளவிற்கு தமிழக மக்களுக்கு உதவ போவதாக செய்திகள், படங்கள் அனைத்தும் வந்தன.

இப்போது 100 இளைஞர்களில் - வா. மணிகண்டன் உள்ளிட்ட சிலர் பணம் தங்களை வந்தடைய வில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இது நிச்சயம் அதிர்ச்சி தரும் விஷயம்.

நிஜமாகவே பணம் தாராவிடில் எதற்கு அப்படி விளம்பரம் செய்ய வேண்டும்? பல அரசியல் செய்திகளுக்கு பாலோ அப் அப்டேட் போடும் விகடன் - இதற்கு ஏன் எந்த கருத்தும் - பின் தெரிவிக்க வில்லை ?

இப்படி சிலர் பணம் வரவில்லை என்று சொன்ன பிறகாவது ராகவா லாரன்ஸிடம் அது பற்றி கேட்டு கருத்து வெளியிட வேண்டாமா? கள்ள மௌனம் சாதிப்பதால் விகடன் மதிப்பும் சரிகிறது !

ராகவன் லாரன்ஸை பொறுத்த வரை அரசியல் மீது அவருக்கு ஒரு கண் என தெளிவாக தெரிகிறது; வரட்டும்.. ஆனால் நமது டிபிக்கல் அரசியல் வாதி போல் வெறும் அறிவிப்பு மட்டும் விட்டு - நிஜமாக உதவாத மனிதர் இவர் எனில்.. அப்புறம் இவருக்கும் மற்ற அரசியல் வாதிக்கும் என்ன வித்தியாசம்?

ராகவா லாரன்ஸ்- விகடன் இருவரும் வாய் மூடி இருப்பதில் அர்த்தமே இல்லை.. அவர்கள் பேச வேண்டிய தருணம் இது !

முதல்வர் சசிகலா 

ஓ. பன்னீர் செல்வம் ராஜினாமா செய்து சசிகலா முதல்வர் ஆவதை - சோசியல் மீடியாவில் உள்ள பெரும்பாலானோர் விரும்பவில்லை; தங்கள் ஏமாற்றத்தை - வருத்தத்தை காட்டி வருகின்றனர்.

மக்களால் நேரடியே தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் - இதுவரை அரசியலில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர், மக்களுக்கு எந்த பணியும் செய்யாதவர் - நேரடியே ஒரு மாநில முதல்வர் ஆவதை மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை; இது நிச்சயம் புரிந்து கொள்ளப்பட கூடிய ஒரு உணர்வு தான்.

அ திமுக எம் எல் ஏக்களை, மந்திரிகளை பொறுத்தவரை - "மீதமிருக்கும் நான்காண்டு காலத்தை சரியே பயன்படுத்திக்கொள்ளவேண்டும் " என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். முதல்வராய் யார் இருந்தால் என்ன... !! தனது கல்லா நிரப்புவதில் பிரச்சனை இருக்க கூடாது அவ்வளவே !

விரைவில் மக்களை கவரும் வண்ணம் சில குபீர் நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படலாம் !

தமிழகத்தில் இருக்கும் தலைவர்களில் இப்போதைக்கு நம்பிக்கை தரும் விதத்தில் இருப்பது ஸ்டாலின் மட்டுமே ! (அவர் 100 % தூய்மையானவர் என்று கூற வில்லை; ஆனால் இருக்கிற ஆப்ஷன்களில் - ஆந்திராவில் ஒரு சந்திரபாபு நாய்டு போல ஒரு ஆக்டிவ் முதல்வராய் இருக்க வாய்ப்புகள் அதிகம் !)

QUOTE CORNER



டிவி கார்னர் : விகடன் விருதுகள் 

முதன் முறையாக விகடன் சினிமா விருதுகளை நிகழ்ச்சியாக கொண்டாடினர்.

நான் ரசித்த விஷயம்.. ஒவ்வொரு கேட்டகரியிலும் கடந்த 5 ஆண்டுகளில் யார் யார் விருது வாங்கினர் என்பதை காண்பித்ததை தான்.. ! விகடன் விருதுகள் 75 % ஒத்து கொள்ளும் விதத்தில் இருக்கும். மீதம் 25 % ..இவருக்கு ஏன் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது !

சென்ற வருட சிறந்த ஹீரோ .. ரஜினியாம் !

உண்மையில் ரஜினி, SPB போன்றோரை விடுத்து - அடுத்தடுத்த ஜெனெரேஷன் பக்கம் செல்வது நல்லது.. இல்லையா?

பைரவா - நில்லாயோ 

ரேடியோவில் அடிக்கடி "நில்லாயோ" பாடல் ஒளி பரப்புகிறார்கள்.. சில முறை கேட்ட பின் - மெட்டும், பீட்டும் ரசிக்க வைத்து விட்டது.

திரையில் பாடலை சரியான முறையில் படமாக்க வில்லை - இருப்பினும் கேட்க நிச்சயம் இனிமையான பாடல் தான் .. நில்லாயோ !


*****

அண்மை பதிவுகள் :

போகன் சினிமா விமர்சனம்

2016 சிறந்த பத்து பாடல்கள் 

Sunday, January 29, 2017

வானவில்+தொல்லைக்காட்சி: அச்சமின்றி - சந்திர நந்தினி -ஜல்லிக்கட்டு போராட்டம்

பார்த்த படம் : அச்சமின்றி

சமுத்திரக்கனி, விஜய் வசந்த் நடித்த இப்படம்.. ஒரு நல்ல விஷயத்தை அடிப்படையாக கொண்டது.. கல்வி துறையில் நடக்கும் ஊழலில் துவங்கி மார்க் வாங்க வைக்க பள்ளிகள் செய்யும் அக்கிரமங்கள் வரை பலவற்றை பேசுகிறது.. ஆயினும், லாஜிக் மீறல்கள், நல்ல ஹீரோ இல்லாதது, சற்று தொய்வான திரைக்கதை (பாட்டும் , சண்டையும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது !) ..இவற்றால் இலக்கை எட்டாமல் போகிறது.

Image result for achamindri

படத்தின் உருப்படியான விஷயம் அது உரக்க பேசும் கல்வி துறை பற்றிய கடைசி அரை மணி நேரம் தான் !

டிவியில் பார்த்த படம் : வை ராஜா வை

ஜெயா டிவியில் காணும் பொங்கல் அன்று ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை ஒளிபரப்பினர். பின்னால் நடக்க போவதை முன் கூட்டியே அறியும் ஹீரோ பாத்திரம்.. இதை வைத்து காசு செய்ய நினைக்கின்றனர் சிலர்.. கதை இதன் அடிப்படையிலேயே செல்கிறது. ஓரளவு நல்ல முடிச்சு என்றாலும் - படம் ஏனோ மிக பெரும் தோல்வியை சந்தித்தது; எப்படி முடிப்பது என தெரியாமல் அவசரம் அவசரமாக முடித்துள்ளனர் படத்தை.. ஒரு proper conclusion இல்லாமல் படம் முடிகிறது..

QUOTE CORNER


நல்ல சீரியல்: சந்திர நந்தினி

விஜய் டிவியில் மாலை 7.30க்கு ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல் சந்திர நந்தினி ! வீட்டம்மணியின் அலுவலகத்தில் சிலர் சொன்னதால் பார்க்க ஆரம்பித்தார். நானும் அவ்வப்போது (மட்டும்) கண்டு வருகிறேன்.

Image result for chandra nandini tamil

சந்திர குப்த மௌரியர் என்கிற நல்ல அரசர் பற்றி பள்ளியின் வரலாற்று பாடங்களில் படித்திருப்போம். அவர் தான் கதை  நாயகர்.நந்தினி என்பது அவரது மனைவி பெயர். இவர்கள் இருவரின் கதை தான் சந்திர நந்தினி. கூடவே சாணக்கியர் பாத்திரமும் !

நடந்த கதை என்பதால் - வரலாறு அறியும் ஆர்வம்.. கூடவே அதனை சுவாரஸ்யமாக பதிவு செய்த டீம்.. இவை இரண்டும் தான் சீரியலை அவ்வப்போது காண வைக்கின்றன.

ஜல்லிக்கட்டும் மாணவர் போராட்டமும் 

ஜல்லி கட்டு பற்றி ஏன் எதுவும் எழுத வில்லை என நான்கைந்து நண்பர்களெனும் கேட்டு விட்டனர்.

பொதுவான மக்கள் கருத்துக்கெதிராக நம் கருத்து இருக்கும் போது அமைதியாக இருப்பது நல்லதென நினைக்கிறேன்.

இருப்பினும் இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் - மிக அற்புதமாக போராட்டம் நடத்தியதை ரசிக்காமலும், பாராட்டாமலும் இருக்க முடியாது.

போராட்டத்தை சரியான நேரத்தில் முடித்திருக்க வேண்டும்!  தலைமை என்று எதுவும் தெளிவாக இல்லாததால் வந்த விளைவு. கடைசி நாளில் போலீஸ் வன்முறை நிச்சயம் கண்டிக்க தக்கது. ஆனால் பெரும்பான்மை மக்கள் அதை பற்றி அதிகம் கண்டு கொள்ளாமல் " அடுத்த வேலையை பார்க்கலாம்" என நகர்ந்து விட்டனர் .

மெரினாவில் இனி போராட கூடாது என 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள் கவனித்தீர்களா? இறுதி நாள் வன்முறையே - இனி இப்படி கூட்டம் கூடக்கூடாது என மிரட்ட தான்... ! அதுவே ஒரு மினி 144 தான் !


கல்யாணம் முதல் காதல் வரை 

வீட்டில் அவ்வப்போது பார்த்து வந்த சீரியல் "கல்யாணம் முதல் காதல் வரை" பழைய ப்ரியாவிற்காக நானும் அவ்வப்போது பார்த்து வந்தது உண்டு.

ப்ரியா என்ன காரணத்தாலோ விலகிய பின் கதையே மிக பெரும் அதள பாதாளத்தில் விழுந்து விட்டது; சினிமா பாணியில் - 2 காரெக்டர் - ஆள் மாறாட்டம் என நம்ப முடியாத படி சென்று திடீரென ஒரே நாளில் கதையை முடித்து சுபம் போட்டு விட்டார்கள் !

பலரால் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு சீரியலை - எப்படி கொடுமைப்படுத்தி - வெறுக்கடிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக முடிந்து விட்டது கல்யாணம் முதல் காதல் வரை !

****
அண்மை பதிவு


அதே கண்கள்: சினிமா விமர்சனம்

Monday, January 16, 2017

வானவில்- ஜோக்கர்- கேதார் ஜாதவ் - அசீம் பிரேம்ஜி

பார்த்த படம்- ஜோக்கர் 

சென்ற வருடம் வெளியான ஜோக்கர் இப்போது தான் காண முடிந்தது. அரசியல் வாதிகளை நேரடியே கிழி கிழி என கிழிக்கிறது படம்! கலைஞர் தொடங்கி ஆளும் கட்சி வரை - வித்யாசமே இன்றி தோலுரிக்கிறார்.  படம் எப்படி சென்சாரை தாண்டி இந்த அளவில் வந்துள்ளது என்பதே ஆச்சரியம் தான் !

Image result for joker tamil movie

படம் துவங்கும் போது நமக்கும் குழப்பமாக தான்  உள்ளது; ஹீரோ தன்னை ஜனாதிபதி என்று சொல்லி கொள்கிறார் என்றால் - கூடவே சிலர் அவரை ஜனாதிபதி என்று சொல்கிறார்கள் !!

அழுத்தமான பிளாஷ் பேக் ..  நம்மை உலுக்குகிறது.. நமது அரசியல் வாதிகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.. கழிவறையில் மட்டுமல்ல  சுடுகாட்டில் கூட ஊழல் இல்லாமல் கட்ட முடியாது அவர்களால்..

மனதை கனக்க வைத்து விட்டு -போராட்டம் தொடரும் என முடிகிறது படம்.

ஹீரோவாக வரும் குரு சோமசுந்தரம்  நடிப்பு அற்புதம். வாழ்ந்திருக்கிறார் மனுஷன். தலையை ஒரு கையால் கோதியபடியும் கண்ணை சிமிட்ட படியும் இருப்பது.. பகத் சிங்கை திறந்து விடட்டுமா என கேட்பது என அசத்துகிறார். அவருடன் எப்போதும் கூட வரும் பெரியவர் டிராபிக் ராமசாமியை நினைவு படுத்தும் பாத்திரம்.. படத்தின் இறுதியில் இவர் சொல்லும் ஒரு வசனம்.. " நாம் யாருக்காக போராடுறோமோ அவங்களே நம்மளை மதிக்க மாட்டேங்குறாங்க ; பைத்தியம்னு சொல்றாங்க" என்பது தான் இப்படம் தரும் மிகப்பெரும் செய்தி

ஜோக்கர் - நல்ல மாற்று சினிமா விரும்புவோர் அவசியம் காண வேண்டிய படம்.

படித்த புத்தகம்: அசீம் கம்பியூட்டர்ஜி 

சொக்கன் எழுதிய அசீம் பிரேம்ஜி வாழ்க்கை வரலாறு அண்மையில் வாசித்தேன் .

பிரேம்ஜியின் வாழ்க்கை வரலாறு என்பதை விட விப்ரோ என்கிற நிறுவனம் பற்றி தான் அதிகம் எழுதியுள்ளார்.

வெளிநாட்டில் கல்லூரியில் படிக்கும்போது தந்தை இறந்து விட- படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நிறுவனத்தை கவனிக்க இந்தியா வருகிறார் பிரேம்ஜி. ஏதேதோ பிசினஸ் செய்து வந்த அவர்கள் கணினி துறைக்குள் நுழைந்தது எப்படி, அத்துறையில் அவர்களின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி இவற்றை பேசுகிறது இப்புத்தகம்.

விப்ரோவை கிட்டத்தட்ட நெடுஞ்செழியன் போன்றோருடன் ஒப்பிட முடிகிறது; எப்போதும் இரண்டு அல்லது மூன்றாம் நிலை தான். இன்போசிஸ் மற்றும் T C S எப்போதும் முதல் 2 இடங்களை பிடித்துக் கொள்ள, மூன்றாம் ரேங்க் மாணவனாகவே இருக்கிறது விப்ரோ. "நாங்கள் எப்போதும் அதிக ரிஸ்க் எடுப்பதில்லை" என்பதை தங்கள் குறைகளில் ஒன்றாக ஒப்புக் கொள்கிறார் பிரேம்ஜி.

மேலும் கணினி துறை தவிர அவர்களின் பிற நிறுவனங்கள் அந்த அளவு Turnover / வளர்ச்சியை காணவில்லை; இதற்கு பிரேம்ஜி சொல்லும் விளக்கம்: "அவையெல்லாம் நன்கு செட்டில் ஆன நிறுவனங்கள் .. டாப் மேனேஜ்மென்ட்டின் நேரத்தை அதிகம் எடுத்து கொள்வதில்லை.."

அசீம் பிரேம்ஜி அவர்களை எனக்கு  மிக பிடிக்க ஓர் காரணம்: அவர் செயகிற CSR (Charity) விஷயங்களுக்கு தான் ! பள்ளி கல்வி துறையில் எத்தனையோ ஏழை குழந்தைகளுக்கு இந்நிறுவனம் செய்யும் தொண்டு பாராட்ட படவேண்டிய ஒன்று.

சென்னை ஸ்பெஷல் - பல்லாவரம் மீன் மார்க்கெட்

பல்லாவரத்தில் புதிதாக ஒரு மீன் மார்க்கெட் வந்துள்ளது; பல்லாவரத்திலிருந்து - பம்மல் செல்லும் சாலையில் ஹோட்டல் மார்ஸ் அருகே வந்துள்ள இந்த மார்க்கெட் . சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் இயங்குகிறது.

மீன்களின் விலை  மிக குறைவாக கிடைக்கிறது; குறிப்பாக வஞ்சிரம் மீன் புதிதாக இருப்பதுடன் வெளியில் உள்ள கடைகளை விட 50 % விலை குறைவாக உள்ளது.  பல்லாவரம், குரோம்பேட்டை, நங்கநல்லூர், மடிப்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள நண்பர்கள் சிறிது தூரம் என்றாலும் நல்ல மீன்- குறைவான விலையில் வாங்க இங்கு ஒரு விசிட் அடிக்கலாம் !

டிவியில் பார்த்த படம்- கடவுள் இருக்கான் குமாரு 

இயக்குனர் ராஜேஷ் தனது காரியரின் துவக்கத்தில் சில சிரிக்கும் படியான காமெடி படங்களை தந்தவர்.. அதற்குள் சரக்கு மொத்தமும் காலியாகிடுச்சா ! கடைசி சில படங்கள் செம மொக்கை வாங்குகிறது. அதிலும் இந்த படம் தாங்க முடியலை.. சிரிப்பு என்பது மருந்துக்கும் இல்லை; ஓசியில் .....டிவியில் பார்த்த நமக்கே இப்படி இருக்கே.. காசு தந்து தியேட்டரில் பார்த்தவர்கள் எப்படி நொந்து போயிருப்பார்கள்.. ! இதில் இன்னொரு கொடுமை இப்படம் போட்டது விஜய் டிவியில்.. 3 மாசத்துக்கு ஒரு முறை கண்டிப்பா போட்டு கொலையா கொல்லுவாங்க ! ஹூம் :(

QUOTE CORNER


கிரிக்கெட் கார்னர் 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் மேட்சில் இங்கிலாந்து 350 ரன் அடிக்க,இந்தியா 60க்கு 4 விக்கெட் என்றதும், "வேற வேலையை பார்க்கலாம்" என நகர்ந்தாச்சு; அவ்வப்போது க்ரிக் இன்போவில் ஸ்கொர் பார்த்து கொண்டிருந்தேன். கோலி அடித்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை; (ஹர்ஷா போக்லே ட்வீட்டில் கோலிக்கு செஞ்சுரி அடிப்பது .......பல் துலக்குவது, குளிப்பது போல இன்னொரு தினசரி வேலை என எழுதியிருந்தார் )

கேதார் ஜாதவ் 60 பந்தில் செஞ்சுரி அடித்தது ரணகளம் ! உண்மையில் இந்த இன்னிங்ஸ் தான் மேட்சை நம் பக்கம் திருப்பியது; ஜெயிக்க  60 ரன் இருக்கும்போது இருவரும் அவுட் ஆனாலும் பாண்டே பொறுப்புடன் ஆடி ஜெயிக்க வைத்தார். இந்திய அணி கோலியின் தலைமையில் fearless and aggressive ஆட்டம் ஆடிவருவது ரசிக்கும்படி உள்ளது. தொடரட்டும் !

சின்னத்திரை குறித்த நீயா நானா 

சின்னத்திரை நடிகர்கள் - இந்த மீடியா குறித்து பேசிய  நிகழ்ச்சி பல தகவல்களை தந்தது:

* இங்கு நடிகர்களுக்கு குறைந்த பட்ச தினசரி சம்பளம் 500 முதல் 750 ரூபாய் தானாம் ! கேரக்டர் ரோல் செய்வோருக்கு தினசரி 1000 ம் - ஹீரோயின் போன்றோருக்கு 3000 முதல் 6000 வரை கிடைக்குமாம். அதுவும் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே வேலையும், சம்பளமும் கிடைக்குமாம் !

* குடும்ப செலவுகளுக்கே சரியான வருமானம் இல்லா நிலையில் வேறு வேலை பார்க்கலாம் என நினைக்கும் போது புதிதாய் ஒரு வாய்ப்பு வருவதும், பின் அதன் பின்னே ஓடுவதும் என கழிகிறது காலம் .. புலிவால் பிடித்த கதையாக தான் இருக்கிறது வாழ்க்கை .

* திருமணம் என்பது பொதுவாகவே கடினம் எனினும், ஆண்களுக்காவது பெண் கிடைத்து விடுமாம். நடிகைகளுக்கு வரன் கிடைப்பது குதிரை கொம்பாம். காதல் திருமணம் தான் ஒரே வழி என்று பேசினர்...

சின்னத்திரை நட்சத்திரங்கள் வாழ்க்கை நிச்சயம் கவலைக்குரிய ஒன்று தான் !

Monday, December 26, 2016

வானவில்: லைட்ஹவுஸ் ஒரு பார்வை-மெக்டொனால்ட்ஸ் ஏமாற்று வேலை- ஜெயலலிதா தெரு

சென்னை லைட் ஹவுஸ் - ஒரு விசிட் 

அண்மையில் சென்னை கலங்கரை விளக்கம் சென்று வந்தோம். மெரினா பீச்சில் - கமிஷனர் அலுவலகம் தாண்டி ஆல் இந்தியா ரேடியோவிற்கு எதிரில் உள்ளது கலங்கரை விளக்கம் !

9 மாடி கட்டிடத்தின் மேல் செல்ல லிப்ட்டில் மட்டுமே அனுமதி (படிக்கட்டில் நோ !) சிறிது நேர காத்திருப்பிற்கு பின் 9 வது மாடிக்கு சென்று பின் அங்கிருந்து ஒரு மாடி மட்டும் படியேறி மேல்பகுதி வந்து சேர்கிறோம். ஞாயிறு என்பதால் நல்ல கூட்டம்; சில இடங்களில் மட்டும் காற்று பிய்த்து கொண்டு அடிக்கிறது; அனைவரும் போட்டோ எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். மாலை நேரம்.. பீச், எதிரில் உள்ள கிரிக்கெட் கிரவுண்ட், காமராஜர் சாலை வாகனங்கள் என 10-15 நிமிடம் பார்த்து விட்டு திரும்ப வேண்டியது தான்..



கீழே சின்னதாய் - கலங்கரை விளக்கம் குறித்த கண்காட்சி உள்ளது. நுழைவு கட்டணம் - 20 ரூபாய்.

பெரிய எதிர்பார்ப்பின்றி ஒரு முறை விசிட் அடிக்கலாம் லைட் ஹவுஸிற்கு !

இப்படியும் நடக்குது  மெக் டொனால்ட்ஸ்சில்   

அண்மையில் வேளச்சேரி மெக் டொனால்ட்ஸ் கடைக்கு சென்ற போது "கார்ட் வேலை செய்யாது" என எழுதி  போட்டிருக்க,2000 ரூபாய்க்கும் சில்லறை இல்லை என்ற நிலையில், இருந்த நூறுகளை தேற்றி அதற்கேற்ப ஆர்டர் செய்யும் நிலை..

சாஃட் ட்ரிங்க்ஸ் வந்து சேர, " இதை ஆர்டர் செய்யவே இல்லையே!" என்றதும் " இது free - பா" என்றால் மகள்..

பின் சற்று யோசித்து விட்டு மகளே   கேட்டாள் : "நாம நினைச்சதை விட 150 ரூபாய்க்கு மேல் அதிகமா இருக்கு" என்று கவுண்ட்டரில் போய் கேட்க, அது   சாஃட் ட்ரிங்க்ஸ்க்கான பணம் என தெரிந்தது.

இதற்கு ஏன் இலவசம் என சொல்லி தலையில் கட்டணும்? அப்புறம் அதை பில்லில் போடணும்? (காம்போ என போட்டு விடுவதால் பலர் கவனிப்பதில்லை !)

அமர்ந்திருக்கும் அனைத்து டேபிள்களிலும் கோக் அல்லது பெப்சி என ஏதேனும் ஒரு சாஃட் ட்ரிங்க்ஸ்  இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன் !

என்னமா ஏமாத்துறாங்க ! ஹூம் !

எதிர்பார்ப்பில் - புரியாத புதிர் 

புதுமுக இயக்குனரின் புரியாத புதிர் ட்ரைலர் வித்யாசமாக உள்ளது; ஏற்கனவே வெளியான இப்பட பாடல்கள் ரசிக்கும் வண்ணம்  உள்ளன. த்ரில்லர் சப்ஜெக்ட்... ட்ரைலர் தரும் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்தால் .. மகிழ்ச்சி !



வேளச்சேரி வியாபாரிகளின் புலம்பல் 

புயலால் இணையம் உள்ளிட்ட சேவைகள் பாதித்தது ஒருபுறம் என்றால், வேளச்சேரியில் இன்னொரு பிரச்சனை. விஜய நகர் பேருந்து நிலையம் எதிரில் மேம்பாலம் ஒன்று அமைக்கும் பணி  நடைபெறுகிறது ; இதனால் சாலைகள் தோண்டியதில், பல கடைகளில் இணைய இணைப்பும் - Debit / Credit சேவையும் இல்லை ! அவை வேலை செய்யலை.. இதனால் பிரதமரின் கனவான பணமில்லா வர்த்தகம் நடக்க முடியவில்லை; பண வர்த்தகம் மட்டுமே சாத்தியம் ! அதிலும் 2000 ரூபாய் நோட்டு- அதற்கான சில்லறை இன்மை.. போதிய அளவு 100 ரூபாய் நோட்டுகள் இல்லாதது.. இதனால் விஜய நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பல கடைகளில் வியாபாரம்  படுத்து விட்டது.. மருந்து கடைகள் கூட இதற்கு விதி விலக்கில்லை. பரிதாபம் !

போஸ்ட்டர் கார்னர் 



சென்னையில் ஜெயலலிதா தெரு

நடை பயிற்சி மேற்கொள்ளும் போது வெவ்வேறு ரூட் மற்றும் தெருக்களில் நடக்கும் வழக்கும் உண்டு. அப்படி ஒரு முறை நடக்கும் போது வேளச்சேரி/ மடிப்பாக்கம் இரண்டும் சந்திக்கும் இடமான கைவேலி அருகே ஜெயலலிதா தெரு என்ற பெயர் பலகை கண்டேன். முன்னாள் முதல்வர் .. எனவே அவர் பெயரில் தெரு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவரை இப்படி பெயர் சொல்லி அழைப்பதே மரியாதை குறைவு என எண்ணும் அவர் ஆட்சி காலத்திலேயே இந்த தெரு இருந்து வந்திருக்கிறது.. அம்மா  ஜெயலலிதா தெரு என்றிருந்தால் ஆச்சரியம் வந்திருக்காது .. ஜெயலலிதா தெரு என்பது தான் புருவம் உயர்த்த வைத்தது !

Saturday, December 10, 2016

வானவில்:தமிழக அரசியல் நிலவரம் - கவலை வேண்டாம்

பார்த்த படம்: கவலை வேண்டாம் 

ஜீவா எப்போது கடைசியாக தனி ஹிட் படம் கொடுத்தார் என யாருக்காவது நியாபகம் இருக்கா? இதோ இன்னொரு ஜீவா படம் !

பிரிந்து வாழும் மனைவியுடன் - டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட ஒரு வாரம் மட்டும் சேர்ந்து வாழ சொல்கிறார் ஜீவா; அந்த ஒரு வாரத்தில் மன மாறுதல் ஏற்பட்டு இருவரும் சேர்வார்கள் என்பதை சொல்லணுமா என்ன ?

காமெடியை நம்பியே படமெடுத்துள்ளனர்...வேறு எந்த விஷயமும் இல்லை.. பார்க்கும் போது சிரித்து விடுகிறோம்.. ஆனால் அப்புறம் தான் அது மோசமான டபிள் மீனிங் வசனம் என புரிகிறது.. இப்படி இரட்டை அர்த்த வசனங்களில் தான் படம் முச்சூடும் நகர்கிறது.. ஹூம்

படம் பெட்டிக்குள் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

அழகு கார்னர் 


டிவி பக்கம்: ஜோடி நம்பர் ஒன் 

T ராஜேந்தரை வைத்து கொண்டு மரண மொக்கை போடுகின்றனர். கூட இருக்கும் சதாவும் சரி இவரும் சரி, சுமாராக ஆடுவோரை கூட அருமை, ஆஹா ஓஹோ என்கிறார்கள்.. யாருமே வெளியேற்ற படுவதில்லை..

T ராஜேந்தர் அடுக்கு மொழியில் அறுத்து தள்ளுவதை கலந்து கொள்வோரே கேட்டு சிரி சிரி- யென சிரிக்கிறார்கள்.

மகள் டான்ஸ் நிகழ்ச்சி என இதனை தொடர்ந்து பார்த்து வந்தாள் .. அவளே விரைவில் ஒதுக்கி தள்ளி விடுவாள் என நினைக்கிறேன் !

தமிழக நிலவரம் 

ஒரு மாநில முதல்வர் இறந்து இவ்வளவு அமைதியாக - வன்முறையின்றி அடக்கம் செய்யப்பட்டு ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பியது ஆச்சரியமாக இருக்கிறது.. ! இதற்கு(ம்)  de monetization தான் காரணம் .. கையில் பணமில்லாததால் ரவுடிகளை கடைகள் உடைக்க பயன்படுத்த முடியவில்லை என்கிறார்கள் மோடி பக்தர்கள். எனக்கு அது சரியாக தோன்ற வில்லை; 2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் செய்ய மாட்டார்களா? அல்லது தஞ்சை இடை தேர்தலில் தந்தது போல் 500 ரூபா பழைய நோட்டு தந்தாலே ரைட்டு என இறங்க மாட்டார்களா?

நிச்சயம் முதல்வர் மரணத்தில் மர்மம் இருக்கிறது; 25 ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் எம்ஜியார் அவர்கள் இருந்த போது கூட சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டனர். ஏன் இப்போது எந்த படமும் எடுக்க வில்லை? வெளியிட வில்லை? ஏன் சசிகலா தவிர வேறு யாரும் முதல்வரை பார்க்க அனுமதிக்க பட வில்லை? இப்படி ஏராள கேள்விகளுக்கு விடையே இல்லை..

நிச்சயம் இது பற்றி ஒரு நேர்மையான விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியாகும் ! அது நடக்கும் என தோன்ற வில்லை :(

போஸ்டர் கார்னர் 



கிரிக்கெட் கார்னர் 

இரண்டாவது மற்றும்  மூன்றாவது டெஸ்ட் மேட்சில் இந்தியா எளிதில் வென்றது; நான்காவது டெஸ்ட் நிஜமான சவாலாக இருக்க போகிறது; மும்பை விக்கெட்டில் 400 ரன் எடுத்துள்ளது  இங்கிலாந்து. இவ்வளவு ரன் எடுத்த எந்த அணியும் தோற்றது இல்லையாம் !

கோலி மற்றும் புஜாரா தொடர்ந்து நல்லபடியே பாட்டிங் செய்ய, அப்புறம்  அஷ்வின்,ஜடேஜா போன்றோரின் பங்களிப்பால் தான் இந்தியா தப்பித்து வருகிறது. துவக்க மற்றும் நடுநிலையில் பிற பேட்ஸ்மேன்கள் சொதப்பி   வருகின்றனர்.

அஷ்வின் விக்கெட்டுகள், ரன்கள் இரண்டிலும் அசத்தி வருவது அட்டகாசம். (அதுக்காக இவர் பாட்டிங்கை லக்ஷ்மனுடன் ஒப்பிட்டு வருகிறது ஒரு கூட்டம்.. அநியாயம் !) 

Friday, October 28, 2016

வானவில்: ரெக்கை- ஏறுமாறான கேஸ் சிலிண்டர் விலை-தீபாவளி படங்கள்

பார்த்த படம் : ரெக்கை 

விஜய் சேதுபதிக்கு மாஸாய் ஒரு படம் நடிக்க ஆசை; அதில் ஒன்றும் தப்பில்லை; ஆனால் கதையில் ஒரிஜினாலிட்டி மற்றும் சுவாரஸ்யம் இருந்திருக்க வேண்டும் !

கில்லி படத்தில் இருந்து inspire ஆன கதை என நினைக்கிறேன். கில்லியில் பாடல்கள், காமெடி இரண்டுமே ரசிக்கும்படி இருக்கும். இங்கு இரண்டும் படுத்து விட்டது.

போதாக்குறைக்கு ஹீரோயின்... !! தமிழ் சினிமாவில் ஹீரோயினை லூசு பெண்ணாய் காட்டுவதில் ஆச்சரியமே இல்லை;  "இதுவரை வந்த எல்லா லூசு ஹீரோயினுக்கும் ராணியாக இருக்கிறார்- இந்த பட ஹீரோயின் " என ஹிந்து பத்திரிக்கை மிக சரியாக எழுதியது.

லூசுத்தனம் ஒரு புறம் என்றால்- ஏழெட்டு ரவுண்டு அதிகமாய் போட்ட மேக் அப் வேறு பயமுறுத்துகிறது. கிட்டத்தட்ட ஒயிட் வாஷ் செய்த மாதிரி தான் இருக்கிறார் லட்சுமி மேனன் (அவரது நிஜ கலரை கும்கியில் பார்த்திருக்கோமே!)

சண்டைகளில் - ஹீரோ அடித்தால் எல்லாரும் அந்தரத்தில் பறக்கிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் ஹீரோவிற்கு அடுத்த அதிக செலவு - சண்டையில் ரோப் கட்டி பறக்க வைத்தமைக்கு தான் இருக்க வேண்டும்.

50 பேராக வந்து ஹீரோவோடு சண்டை போடுகிறார்கள். 50 பேரையும் ஹீரோ பறக்க விடுகிறார். ஒவ்வொருவராய் மட்டுமே வந்து அடி வாங்குகிறார்கள். கொடுமை !

ரெக்க - மொக்க !

அழகு கார்னர் 

ஸ்ரீ திவ்யா 
கேஸ் சிலிண்டர் விலை 

கேஸ் சிலிண்டர் விலை முன்பெல்லாம் ஒரே நிலையில் இருக்கும்; சற்று விலை ஏற்றம் நிகழ்ந்தால் பெரும் சத்தம் எழும். ஆனால் சமீப காலத்தில் கேஸ்  விலை ஒவ்வொரு மாதமும் மாறி கொண்டே இருக்கிறது.. ஆனால் எந்த சத்தமும் காணும் !

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்; எல்லா நேரமும் விலை ஏற்றம் மட்டுமே நிகழவில்லை; சில நேரம் குறையவும் செய்கிறது ! ஒன்றாம் தேதி மாறும் விலை - அந்த மாதம் முழுதும் நீடிக்கிறது.

இருக்கட்டும்.. சிலிண்டர் போடும் பசங்க செய்யும் அநியாயம் மட்டும் மாறவே இல்லை; 40 ரூபாய்க்கு ஒரு ரூபாய் கம்மியாய் தந்தாலும் கன்னா பின்னாவென்று கத்துகிறார்கள் ! தருவதோ டிப்ஸ் ! இதில் நாமாய் பார்த்து தருவதை - வாங்கி கொள்ளாமல் அவங்க போடுற சவுண்ட் ஓவராய் இருக்குது மை லார்ட் !

ஜீ தமிழில் Fat VS Fit நிகழ்ச்சி

தமிழ் தொலை காட்சியில் 100 கிலோவிற்கு மேல் இருக்கும் ஆண்/ பெண் 8 பேரை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி Fat VS Fit. கொஞ்ச நாள் முன்பு தான் விஜய் டிவியில் ஒல்லி பெல்லி என இது போல ஒரு நிகழ்ச்சி வந்தது.

ஒவ்வொருவரையும் அழைத்து "குண்டா இருக்கறதுக்கு நீங்க வருத்தப்படுறீங்களா ? (பின்னே சந்தோஷப்படுவாங்களா?) எப்ப ரொம்ப பீல் பண்ணீங்க " என ஒரே மாதிரி கேள்விகள்.

குறிப்பிட்ட காலத்தில் யார் அதிக எடை குறைக்கிறார்கள் என்பது தான் போட்டி. சென்னையை சேர்ந்த கலர்ஸ் என்கிற நிறுவனம் இதனை  நடத்துகிறது; எனவே நிகழ்ச்சி நடக்கும்போதே திரையில் அவர்கள் நிறுவனம் குறித்த விளம்பரங்கள் ஓடி கொண்டே இருப்பது பெரும் இடைஞ்சல்.

என்ன கொடுமை சார் இது !

தென்காசி அருகே சர்க்கரை நோய்க்கு புதிதாக - தானே தயாரித்து மருந்து  கண்டு பிடித்தேன் என ஒரு டாக்டர் (??) அறிவித்து, அந்த மருந்தை நோயாளிகள் சிலருக்கு (அனைவரும் 40 வயதை ஒட்டியவர்கள்)  தந்திருக்கிறார். மூவர் உடனே  மயங்கி  விழ, மருந்தில் ஒன்னும் பிரச்சனை இல்லை என  நிரூபிக்க தானும் குடித்து  காட்டியுள்ளார்.சில நிமிடங்களில் நோயாளிகள் மூவர் மட்டுமல்ல, மருத்துவரும் இறந்து விட்டார் !

மருத்துவர் என சொல்லி கொண்டு இருக்கும் Quack களை எப்போது தான் முழுவதுமாக ஒழிக்க போகிறோமோ?

கிரிக்கெட் கார்னர்

டெஸ்ட் மேட்ச்களில் வழிந்து கட்டிய நியூசிலாந்து ஒன் டே மேட்ச்களில் நன்றாகவே ஆடுகிறது. இருப்பினும் இந்தியா தோற்ற 2 மேட்ச்களும் ஜெயித்திருக்க வேண்டியவை ! 240-260 ரன்களை இந்த 2 மேட்ச்களிலும் அடிக்காமல் இந்தியா தோற்றது அநியாயம் ! இரண்டு மேட்சிலும் கோலி சீக்கிரம் அவுட் என்பது கவனிக்க படவேண்டிய  விஷயம்.ஒரு காலத்தில் சச்சினை நம்பியிருந்தது போல் இப்போது கோலியை தான் இந்திய அணி பெரிதும்  நம்புகிறது.இத்தகைய Over dependency அணிக்கு நிச்சயம் நல்லதல்ல !

பேட்டிங்கில்  கோலி  தவிர,தோனி தான் ஓரளவுக்கு அடிக்கிறார். ரோஹித் மற்றும் ரஹானே ஒரு மேட்சிலும் நல்ல ஓப்பனிங் தரவில்லை; நல்ல 2 வீரர்கள் இவர்கள் இருவரும்.. அனுபவம் வாய்ந்தவர்களும் கூட.. இந்திய பிட்சில் கூட அடிக்கா விட்டால் என்ன சொல்வது !

மிடில் ஆர்டரும் மிக புதியவர்கள் .. மனிஷ் பாண்டே மற்றும் கேதார் ஜாதவ்.. இருவரும் சொல்லி கொள்கிற மாதிரி இதுவரை ஸ்கொர் செய்யவில்லை (பாண்டே முன்பு ஆஸ்திரேலியாவில் ஒரு செஞ்சுரி அடித்தவர் !)

யுவ்ராஜிற்கு ஏன் வாய்ப்பு தவறவில்லை என்பது புரியாத புதிர் !

தீபாவளி படங்கள்

காஷ்மோரா மற்றும் கொடி என தீபாவளிக்கு வெளியாகும் 2 படங்களுக்கும் டிக்கெட் போட்டாச்சு. இன்று இரவு/ நாளை 2 பட விமர்சனமும் வீடுதிரும்பலில் வெளியாகும் !

அண்மை பதிவுகள்  : 

காஷ்மோரா சினிமா விமர்சனம்

கொடி  : சினிமா விமர்சனம்

Related Posts Plugin for WordPress, Blogger...