Friday, August 31, 2012

பதிவர் சந்திப்பில் பதிவர்கள் சுய அறிமுகம்:படங்கள்

திவர் சந்திப்பு குறித்த செய்தியை இணையத்தில் பார்த்து விட்டு புதிய தலைமுறை சானல் நிருபர்கள் அவர்களாகவே விழாவுக்கு வந்திருந்தனர் புதிய தலைமுறை நியூஸ் சேனல் கவர் செய்துள்ளது. விரைவில் இது வெளியாகும் என்றும் என்றைக்கு என சொல்வதாகவும் நிகழ்ச்சி படமெடுக்க வந்துள்ள பீர் முகமது கூறியுள்ளார்

மக்கள் தொலைக்காட்சியில் பதிவர்கள் இருபது பேர் பேசியுள்ளது அடுத்த சனிக்கிழமை (செப்டம்பர் 8-காலை எட்டரை மணி முதல் ஒன்பது வரை ஒளிபரப்பாகும்; முடிந்தால் பாருங்கள் !)
புதிய தலைமுறை நிருபர் பாரதி பேசுகிறார்

நிகழ்ச்சியில் பேசிய புதிய தலைமுறை நிருபர் பாரதி புதிய தலைமுறை இணைய தளத்தில் பதிவர்கள் அனைவரும் படைப்புகள் அனுப்பலாம் என கூறினார். அவர்கள் இணைய தளம் பார்த்தால் உங்களுக்கு மேல் விபரங்கள் தெரியும் !

***


நிற்க. இவ்வளவு பதிவு தேத்தணும் என்ற எண்ணத்தில் படம் எடுக்கலை. மூத்த பதிவர்கள் படங்கள் மட்டும் தான் நிச்சயம் எடுக்க நினைத்தேன். மற்றவை அந்த நேரத்தில் நான் பாட்டுக்கு எடுத்தேன். அப்புறம் ஒவ்வொன்றாய் போடவும், நண்பர்கள் தங்கள் முகத்தை இணையத்தில் பார்ப்பதில் மிக மகிழ்கிறார்களே என படங்கள் அனைத்தும்  இங்கு  பகிர்ந்து வருகிறேன்



இவையும் முதல் இரண்டு நாளில் ஏழெட்டு பதிவாய் போட்டு விட்டு மூன்றாம் நாள் மற்ற பதிவுகளுக்கு போயிடலாம் என நினைதேன். திண்டுக்கல் தனபாலன் போன் செய்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் போடாதீர்கள்; யாரும் பார்க்க மாட்டார்கள் என்று அன்போடு கூறியதால், நான்கைந்து நாளாய் நம் ப்ளாகில் இந்த சந்திப்பு குறித்து படங்கள் வருகிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு பதிவுடன் இவை முற்றும் !

பதிவர் சந்திப்பில் எடுத்த பதிவர்களின் சுய அறிமுக படங்கள் சில இன்று:

காவேரி கணேஷ் சுய அறிமுகம்


முதல் நண்பர் பெயர் தெரியலை, கிராமத்து காக்கை, கருண், மோகன்குமார்,  கோகுல், பசுமை தாயகம் அருள், புரட்சிமணி 
நண்பர்கள் அரட்டை

மக்கள் சந்தை சீனிவாசனுக்கு நினைவு பரிசு

புலவர் ஐயாவுடன் பதிவர்கள்


மகிழ்ச்சியான மூடில் பி.கே. பி


கண்மணி என்ற பெண் பதிவரின் தந்தை - என் பெண்ணின் பதிவை எல்லாரும் படிச்சு, அவளை என்கரேஜ் செய்யுங்க என பேசினார்

உடல் மண்ணுக்கு-உயிர் தமிழுக்கு இது மட்டுமே பிலாசபி மேடையில் பேசியது
பதிவர் சிமுலேஷன் (சார் உங்க போட்டோ கேட்டீங்க - இங்கிருந்து எடுத்துக்குங்க)

சுப்பு ரத்தினம்

பால கணேஷ், மோகன் குமார், ரோஸ்விக்
பதிவர் கிராமத்து காக்கையுடன் நான் ; பின்னே அகநாழிகை வாசு 
மூத்த பதிவர்கள் முன் வரிசையில் 
ஒரு லட்சம் ரூபாய் பரிசு போட்டி பற்றி மக்கள் சந்தை அருணேஷ் பேசுகிறார் 
விழாவுக்கு வந்தோரில் 20 % பெண் பதிவர்கள். அவர்களில் ஓரளவு தெரிந்த ஓரிருவர் தவிர வேறு யாரையும் Photo எடுக்கலை. மேலும் பதிவர் அறிமுக நேரம் தான் மக்கள் தொலைக்காட்சி ஹாலுக்கு கீழே வைத்து பதிவர்களிடம் பேசியதால் பதிவர்கள் பலரை மாற்றி மாற்றி கீழே அழைத்து போகும் பணியை செய்து கொண்டிருந்தேன். அதனால் தான் பல பதிவர்கள் படங்கள் எடுக்க முடியலை. இங்கு மிஸ் ஆன இன்னும் நிறைய படங்கள் நிச்சயம் மதுமதி பகிர்வார் !

எனது காமிரா படங்கள் அனைத்தும் அநேகமாய் முடிந்தன. விழா பற்றி இன்னும் இரண்டே பதிவு வெளியாகும். நன்றி !

Thursday, August 30, 2012

மாநாடு கவியரங்கம்:ஓடுங்க! அது நம்மை நோக்கிதான் வருது!

ன்றைய பதிவில் மாநாட்டில் வெளியான புத்தகம் மற்றும் கவியரங்க புகைப்படங்கள் :
மதிய நிகழ்வுக்கு வரவேற்புரை வாசிக்கிறார் பாலகணேஷ் 

தென்றலின் கனவு புத்தகம் பி.கே.பி வெளியிட சேட்டைக்காரன் பெற்று கொள்கிறார் 

தென்றலின் கனவு புத்தகம் பற்றி பேசுகிறார் கணக்காயன் ஐயா 

கவியரங்கில் கவிதை வாசிக்கும் மகேந்திரன் 


அரசன் வாசிக்கும் மௌன கவிதை 

கவிதை வீதி சவுந்தர் கவிதை...

ஹீரோ ஆப் கவியரங்கம் டாக்டர். மயிலன் கவிதை 


மயிலன் கவிதை சாதாரண கான்செப்ட் தான். எத்தனை முறை காதலிச்சோம் கடைசியில் வீட்டில் பார்த்தவங்களை கல்யாணம் பண்ணிக்கிறோம் ! இந்த ஆட்டோ கிராப் மேட்டர்   தான் அவர் கவிதை . நானும் கூட என்னோட காதல்கள்  பத்தி இப்படி ஒரு கவிதை எழுதிருக்கேன்   எப்பயாவது போட்டுடலாம் இங்கே - எல்லாம் கல்யாணத்துக்கு முந்தி தான். நவ் ஒன்லி ஹவுஸ் பாஸ்  :))

சரி மயிலன் கவிதைக்கு வருவோம் ! கவிதை சொல்லப்பட்ட விதம் (Presentation) அருமை ! பின்னர் மயிலன் தன் ப்ளாகில் பகிர்ந்தார். அதை விட அவர் படிச்சப்போ தான் ரொம்ப பிடிச்சது. முடிச்சுட்டு இறங்கும் போது அவருக்கு பட்டுக்கோட்டை கை கொடுத்தார். அரங்கம் கரகோஷதிலும் சிரிப்பிலும் மகிழ்ந்தது நான் மேடை படியில் எப்போ இறங்குவார் என காத்திருந் து அடுத்து கை கொடுத்தேன் .  டாக்டர் மயிலன் மற்றும் அவரை கரம் பிடிக்க போகும் செல்வி. அனுஷ்யாவிற்கு வாழ்த்துகள்
கவிதை வாசிக்கிறார் பதிவர் ரிஷ்வன்

ரமணி ஐயா கவிதை  வாசிக்கிறார் 

வாங்க ப்லாகலாம் அனந்து கவிதை 

கவிஞர் தேவாதி ராஜன் கவிதை வாசிக்கிறார் 

எங்க மடிப்பாக்கத்தை கவியரங்க சரித்திரத்தில் இடம் பெற வைத்த                     மடிப்பாக்கம் T .N முரளி தரன் 

புரட்சி மணி (பேர் கரீட்டா சொல்றேனா?) கவிதை வாசிக்கிறார் 

போளூர் வரதன் கவிதை வாசிக்கிறார்  (அண்ணே Different Get up  என்பதால்   உங்களை புல் போக்கசில் படம் பிடிச்சேன் அண்ணே )

இவரு சும்மா தான் பேரு கொடுத்திருக்கார். கவிதை படிக்க மாட்டார் என அனைவரிடமும் பெட் கட்டி ஏமாந்தேன். கவிதை  ஓரளவு   நல்லாருந்தது.       "கேபிள் மண்டபத்தில் யாரும் எழுதியதா?" என கேட்டேன். " நானே தான் எழுதியது" என்றார் என்டர் கவிஞர் கேபிள் 
***
டிஸ்கி 1: கோவை சரளா, அகிலா கவிதை வாசிச்ச படங்கள் ஏற்கனவே பதிவுகளில் போட்டாச்சு. So அவை இங்கே இல்லை

டிஸ்கி 2: பி.கே.பி சீரியஸா இருக்குற போட்டோ போட்டேனே. அது கவியரங்கில் எடுத்தது தான் :))


டிஸ்கி 3: இன்று முழு நாள் மற்றும் நாளை மதியம் ரெண்டு மணி வரை இணையத்தில் இருக்க மாட்டேன். இன்று ஒரு செமினார் அட்டென்ட் பண்றேன். நாளை செமினார் எடுக்கிறேன்.
ஜாலியா இருங்க ! பீ ஹாப்பி ! 

Wednesday, August 29, 2012

மூத்தோர் பாராட்டு விழா: நெகிழ்வான படங்கள் Part 5

சென்னை பதிவர் மாநாட்டின் ஒரு முக்கிய நிகழ்வு மூத்த பதிவர்களுக்கு நிகழ்ந்த பாராட்டு விழா. சென்ற தலைமுறையை சேர்ந்தவர்கள் அதிகம் கணினியே பரிச்சயம் இல்லாதவர்கள் என்பதே யதார்த்தம். அதை மீறி புதிதாய் கணினி கற்றுக்கொண்டும் கூட வலையுலகில் அசத்தும் மூத்த பதிவர்களை பாராட்டி நினைவு பரிசும் பொன்னாடையும் போர்த்தியது அற்புதமான விஷயம் !

பட்டுக்கோட்டை பிரபாகர் பேசும்போது கூட விழாவின் இந்த பகுதி தனக்கு மிக மன நிறைவை தந்தது என்றார். மேலும் " வயதானவர்கள் பேசுவதை கேட்க வீட்டில் யாரும் இல்லை. இருக்கும் நேரத்திலும் காது கொடுத்து கேட்பதில்லை. ஆனால் அவர்கள் சொல்வதை ஆயிரகணக்கானோர் வலை பதிவில் கேட்கிறார்கள். இது அவர்களுக்கு மன நிறைவை தருகிறது" என்றார். " வலையுலகில் பெரிதும் இருப்பது இளைஞர்கள். நீங்கள் எழுதுவது கற்பனை அல்லது ஜாலியான விஷயங்களே. ஆனால் மூத்த பதிவர்கள் எழுதுவது தங்கள் அனுபவத்தை ! கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த அனுபவ அறிவை நீங்கள் இவ்வளவு எளிதாய் பெற முடியாது" என்று பேசியபோது அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது !

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேகா ஒவ்வொரு மூத்த பதிவரின் மிக சிறந்த வரிகளை, அருமையான தொனியில் (Modulation) வாசித்து அவர்களை அழைக்க, அப்படி தங்கள் வரிகள் வாசித்த நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போய் நின்றது அற்புதமாய் இருந்தது !  

வல்லியம்மா, வில்லவன் கோதை போன்ற சில மூத்த பதிவர்கள் நினைவு பரிசு பெற்ற படங்கள் மட்டும் என்னால் எடுக்க முடியலை. (அந்த நேரம் முக்கிய போன் வந்துடுச்சு..வேற யாரு. ஹவுஸ் பாஸ் தான் !) அந்த படங்கள் நண்பர்கள் தளத்தில் இருந்தால் எடுத்து இங்கு பின்னர் சேர்ப்பிக்கிறேன் !

அனைவருக்கும் ஒவ்வொரு பதிவர் பொன்னாடை போர்த்த, நினைவு பரிசை பட்டுக்கோட்டை பிரபாகர் வழங்கினார்.

மூத்த பதிவர்கள் வாழ்வில் இது ஒரு மறக்க முடியாத நாளாக இருந்திருக்கும் . இந்த படங்களை காணும் மூத்த பதிவர்கள் தங்கள் படத்தை டவுன்லோடு செய்து தங்கள் ஆல்பத்தில் சேமிப்பார்கள் என்கிற எண்ணத்தில், மிகுந்த அக்கறையுடனும் அன்புடனும் எடுத்த இப்படங்களை, இந்த பெரியோர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
   
அடையாறு அஜீத் என்று அன்போடு அழைக்கப்படும் சென்னைபித்தன் ஐயாவிற்கு 
பிலாசபி பிரபாகர் பொன்னாடை போர்த்துகிறார்

சென்னைபித்தன் ஐயாவிற்கு நினைவு பரிசு அன்புடன் வழங்கப்படுகிறது

இந்த நிகழ்ச்சிக்கு காரணமான ராமானுசம் ஐயாவுக்கு
கரை சேரா அலை அரசன் பொன்னாடை போர்த்துகிறார்  

ராமானுசம் ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் பிரபாகர்

என் குருநாதர் ரேகா ராகவனுக்கு பாலகணேஷ் பொன்னாடை போர்த்துகிறார்

டில்லி கணேஷுடன் தனக்கு நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி ரேகா ராகவன் அவர்கள் தன் ப்ளாகில் சுவையாக எழுதியதை சுரேகா நினைவு கூர்ந்தார்.

ரேகா ராகவன் ஐயாவுக்கு நினைவு பரிசு
 
நடனசபாபதி ஐயாவுக்கு சீனு பொன்னாடை போர்த்துகிறார்  
நடனசபாபதி ஐயா "வயதானபின் நினைவுகள் மறக்க துவங்கும்; எனவே நினைவுகளை வலைப்பதிவில் எழுதுவது மீண்டும் நினைத்து பார்க்க உதவுகிறது" என எழுதியுள்ளதை மதுமதி சொல்லியது அருமை !

லட்சுமி அம்மாவுக்கு சிரிப்பு போலிஸ் ரமேஷ் பொன்னாடை போர்த்துகிறார்
 லட்சுமி அம்மா மும்பையில் இருந்து விழாவிற்காக வந்திருந்தார் !


லட்சுமி அம்மா நினைவு பரிசு பெற்றுக்கொண்ட பின் PKP-இடம் சிறிது நேரம் பேசுகிறார்


ரமணி ஐயாவுக்கு கோவி (கோவை) பொன்னாடை போர்த்துகிறார்

சுரேகா வாசித்த ரமணி ஐயாவின் விவசாயி/ விளைநிலங்கள் பற்றிய கவிதை அற்புதமாய் இருந்தது !

ரமணி ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் PKP

கவிஞர் கணக்காயனுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் பட்டுக்கோட்டை பிரபாகர்


ருக்மணி அம்மாவுக்கு சங்கவி பொன்னாடை போர்த்துகிறார்


நினைவு பரிசு பெற்று கொண்ட ருக்மணி அம்மா தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்
ருக்மணி அம்மா தனது வலைப்பூவில் சொல்லும் கதைகளை தவிர ஒவ்வொரு வாரமும் ஜெயா டிவியில் ஞாயிறன்று குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்.
சுப்பு ரத்தினம் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்துகிறார்  பதிவர் நண்பர்

சுப்பு ரத்தினம் ஐயாவுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கிறார் பட்டுகோட்டை பிரபாகர் 

ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு ரோஸ்விக் பொன்னாடை போர்த்துகிறார்
ரஞ்சனி அம்மா விழாவிற்காக பெங்களூரில் இருந்து வந்திருந்தார் !


ரஞ்சனி அம்மாவுக்கு நினைவு பரிசு   வழங்கி கெளரவிக்கிறார் PKP

பின்குறிப்பு: இன்றோடு எனக்கும் என் மனைவிக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் முடிகிறது.சரியாக கண்டுபிடித்து வாழ்த்து சொன்ன ஆதிமனிதன், ஏஞ்சலின், ரகு மற்றும் ராஜிக்கு மனமார்ந்த நன்றிகள் !

இது சென்ற வருடத்து கல்யாண நாள் பதிவு !: பெண் பார்த்த அனுபவங்கள் 

எங்கள் 16-ஆவது திருமண நாளான இன்று இப்பதிவை வெளியிடுவதில் இருவருமே மகிழ்கிறோம். வயதில் மூத்தவர்கள் எங்களுக்கு ஆசி வழங்கினால் பெரிதும் மகிழ்வோம் ! பிற நண்பர்கள் பின்னூட்டம் இடாவிட்டாலும், ஒரு நிமிடம் நாங்கள் இருவரும் இணைந்து நன்றாக வாழ வேண்டும் என உங்கள் மனதினில் வாழ்த்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...