Thursday, February 28, 2013

வானவில் : ராதிகா ஆப்தே - அரசு பேருந்துகள் - என்றும் இளமை

அழகு கார்னர்




ராதிகா ஆப்தே : சைலண்ட் பியூட்டி ! கண்கள், சிரிப்பு இரண்டுமே மனதை கொள்ளை அடிக்கும்.

பிரகாஷ் ராஜின் தோனியில் நிறைய எதிர் பார்க்க வைத்தார். ஆனால் வெகு சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு, நம்மை சோக கடலில் ஆழ்த்தி விட்டார்

பெட்ரோல் பங்க்கில் வரிசையில் நிற்கும் அரசு பேருந்துகள்

அரசு பேருந்துகள் ஏதோ சில காரணங்களால் வழக்கமாய் நாம் பெட்ரோல் போடும் பங்க்கிலேயே க்யூவில் நின்று  டீசல் நிரப்புகின்றன. இது மாதிரி இதற்கு முன் பார்த்ததே இல்லை ! ஒவ்வொரு பேருந்துக்கும் முழுதும் டீசல் நிரப்பவே 5 நிமிடமாவது ஆகும். அவ்வளவு பெரிய வாகனம் திரும்பி, உள்ளே வந்து பின் வெளியே செல்ல மிகுந்த நேரம் எடுக்கிறது. ஒரு பஸ் பெட்ரோல் பங்க்கில் நுழைந்து டீசல் பிடித்து வெளியே வர 15 நிமிடமாவது ஆகும். பஸ்ஸில் உள்ள பயணிகள் அனைவரும் இதனால் தேவையற்ற தாமதத்துக்கு உள்ளாகிறார்கள். முதல்வர் இந்த விஷயத்தில் பயணிகள் கஷ்டத்தை மனதில் கொண்டு நல்ல முடிவெடுப்பார் என எதிர்பார்ப்போம் !

ரசித்த கவிதை

என் காதலை
நான் இழந்து விட்டேன் தான்
ஆனால் இந்த உலகில்
யார் தான் எதை தான் இழக்கவில்லை?

-பாரதி புத்திரன்

சம்பவம் - பீச்சில் சிக்கிய சிறுவன்

நண்பர் ஒருவர் நேரில் பார்த்த சம்பவத்தை பகிர்ந்தார் :

ஞாயிறு மாலை குடும்பத்துடன் பீச் செல்ல, நான்கைந்து சிறுவர்கள் அவர்கள் இருந்த இடத்துக்கு சற்று தள்ளி குளித்துக் கொண்டிருந்திருந்தனர். திடீரென ஒருவன் கடலின் உள்ளே அடித்து செல்லப்பட, அதை கவனித்த கடை காரர் ஒருவர் ஓடி போய் தண்ணீரில் குதித்துள்ளார். எங்கிருந்தோ சில மீனவர்கள் டியூப் ஒன்றுடன் அடுத்த சில நிமிடத்தில் வந்து குதித்துள்ளனர். 5 நிமிட போராட்டத்துக்கு பின் சிறுவனை வெளியே கொண்டு வந்து விட்டனர். தண்ணீரை அமுக்கி அமுக்கி வெளியேற்ற, வாயிலிருந்து தண்ணீர் வடிந்துள்ளது. 

மீனவர்களில் ஒருவர் " பையனை அரை மணிக்குள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் மட்டுமே பிழைப்பான் " என்று சொல்ல, கரை வரைக்கும் உடனிருந்த சிறுவர்கள் தோளில் தூக்கி போட்ட படி வேகமாக ஓடியிருக்கிறார்கள். 

நண்பர் ஆச்சரியமாய் சொன்ன விஷயம். கடைக்காரரும் , மீனவர்களும் உடன் பாய்ந்து காப்பாற்றியது தான் மீனவர்கள் மேல் அதை பார்த்த பின் மதிப்பு அதிகமானது என்றார். 

ஒரே வருத்தமான விஷயம்: மறுநாள் செய்தித் தாள் மூலம் அந்த சிறுவன் இறந்த செய்தி தெரிய வந்தது தான் :(

போஸ்டர் கார்னர்




கம்பனி சட்டம் - தொடரும் தாமதம் 

கம்பனி சட்டம் 1956-ல் இயற்றப்பட்டது. கடந்த 10 வருடமாக பல முறை இதை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு முறையும் ஏதேனும் காரணத்தால் நிறுத்தப்படும். இம்முறை சில வாரங்களுக்கு முன் நாடாளு மன்றம் (இரவு 10.40 க்கு) புதிய கம்பனி சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அடுத்து ராஜ்ய சபாவில் ஒப்புதல் பெற, நேற்று 26 பிப்ரவரி நேரம் ஒதுக்கியிருந்தனர்.

தேர்வு முடிவுக்கு காத்திருப்பது போல் எங்களில் பலரும் நாள் முழுதும் காத்திருக்க, கம்பனி சட்டம் தவிர மற்ற சட்டங்களை பாஸ் செய்து விட்டு, அதனை அப்படியே விட்டு விட்டனர். இனி மீண்டும் ராஜ்ய சபாவில் எப்போது கொண்டு வருவார்களோ.. தெரிய வில்லை ! இந்த அரசுக்கு இன்னும் சில மாதங்களே மீதம் உள்ள நிலையில் அதற்குள் ராஜ்ய சபா ஒப்புதல் கிடைக்கா விடில் சட்டம் மீண்டும் காலாவதி ஆகி விடும் :(

ஆடிட்டர்கள் தவறு செய்தால் சில தண்டனைகள் தருவதற்கும், அவர்கள் செய்யும் தவறுகளை விசாரிக்க தனி அமைப்பு (NFRA ) உண்டாக்கியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆடிட்டர்கள் தான் கம்பனி சட்டம் வர விடாமல் செய்கிறார்கள் என்று தகவல் கசிந்து கொண்டிருக்கிறது.

நிச்சயம் இம்முறை பொது மக்களுக்கு சில நன்மைகளும், கம்பனிகள் வெளிப்படியாய் செயல்படும் வண்ணம் சில ஷரத்துகளும் உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் சட்டம் மீண்டும் ராஜ்ய சபாவில் கொண்டு வரப்படலாம் என்றும் சொல்கிறார்கள். பார்க்கலாம்.

என்றும் இளமை

நண்பர் ஒருவரை 10 வருடத்துக்கு பின் பார்த்தேன். மனிதர் 10 வருஷத்தக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். 50 வயதை தொடும் அவரை - 35 வயது என்று சொன்னால் நிச்சயம் நம்பலாம் ! அதை விட ஆச்சரியம் அவருக்கு தொப்பை என்ற ஒன்று பேருக்கு கூட இல்லை.

" எப்படி சார்? தினம் எக்சர்சைஸ் செய்வீங்களா " என்று வியப்பாய் கேட்டேன்.

" அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் என்னிக்குமே எக்சர்சைஸ் செஞ்சதில்லை. டயட் கண்ட்ரோல் தான். மூணு இட்லி சாப்பிட வேண்டிய இடத்தில் 2 தான் சாப்பிடுவேன். எந்த உணவுமே இப்படி தான். அதுக்காக சாப்பாட்டை நான் என்ஜாய் செய்யலை என அர்த்தம் இல்லை. எப்பவும் ரொம்ப மெதுவா ரசிச்சு சாப்பிடுவேன்.

ஒரு சுவீட் இருந்தா. அதை முதலில் தள்ளி வச்சு அழகு பார்ப்பேன். அதோட அழகை ரசிக்கிறது தான் எனக்கு பெரிய விளையாட்டே ! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தான் சாப்பிடுவேன் . இப்படியே சுவீட்டை சாப்பிட அரை மணி எடுத்துக்குவேன்" என்றார்.

ம்... கேட்க நல்லா தான் இருக்கு ! நாம இதை பின்பற்ற முடியுமா என்ன? நாமெல்லாம் ரெண்டு சாப்பிட வேண்டிய இடத்தில் 3 சாப்பிடுகிற ஆளுங்க ஆச்சே !

Wednesday, February 27, 2013

ஹரிதாஸ் - வணிகவீதிக் கலாதரர்கள் - ராஜ சுந்தர்ராஜன்

வணிகவீதிக் கலாதரர்கள் - ராஜ சுந்தரராஜன்

“வாங்க, ஸார், வைரமுத்து ஸார்!”

பின்னால் திரும்பிப் பார்த்தேன்: ஒருவரையும் காணோம்.

“உங்களெத்தேன், ஸார், நீங்கதானே வைரமுத்து?” என்றான் அவன். அவன் பெயர் பாக்கியராஜ். மதுரைப்பக்கத்து ஆள். விடலை. ஆற்காடு சாலையில், வளசரவாக்கம் போரூருக்கு இடையில், ‘வசந்த் & கோ’வை ஒட்டியுள்ள ஒரு ‘டீ கம் டிஃபன் கடை’யில் இட்லி மாஸ்டர்.

“ஏம்ப்பா!?”

“வைரமுத்துதானே ஸார், பாறையில பூவு; பனியில சூடு ன்னு எழுதுவாரு?”

“அதுக்கு நான் என்ன பண்ணுனேன், என்னெ ஏன் கலாய்க்கிறே?”

அவன் நேரடியா என்கிட்டப் பதில் சொல்லவில்லை. அந்த நேரத்துக்கு அங்கே வந்து அவனுகளுக்கு கூடமாட சில்லறை வேலைகள் செய்கிற ஒரு வேன் டிரைவர் உண்டு, அவரிடம் சொல்லுவான்: “ஸாரு கவிஞர்ங்கிறதெ அன்னிக்கே கண்டுபிடிச்சுட்டேன்ல: ஒத்த விரலால இட்லியெக் குத்தி, என்னப்பா, இட்லிக்குள்ள கல்லு ங்கிறாரு!”

சிரித்தேன்தான். கவிதை என்றால் என்ன என்று அவனுக்குள் உருவாகி நிற்கிற புரிதலை எண்ணி நெடுநேரம் சிரித்துக்கொண்டு இருந்தேன். அவனது நக்கலை நான் எளிதாக எடுத்துக் கொண்டதில் அவனும் பல்லாக நின்றான். ஆனால், உண்மையில், அந்த நேரத்துக்கு நான் அதை எளிதாக ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை: “அதுக்காக, என்னெ வைரமுத்து ன்னு சொல்லியிருக்க வேண்டாம்!”

“ஏன், ஸார், வைரமுத்துவுக்கு என்ன ஸார் கொறைச்சல்?”

“சரி, அதெ விடு. இட்லி எடுத்து வையி!”

இட்லியைச் சாப்பிட்டுவிட்டு சினிமாவுக்குப் போனேன். ஜெயமோகன் பெயர் போஸ்ட்டரிலும் இல்லை; திரையில் ஓடிய எழுத்துகளிலும் இல்லை. ஆனால் “ஹரிதாஸ்” படத்தின் கதை தன்னுடையது என்று அவர் தன் வலைத்தளத்தில் எழுதி வாசித்ததாக ஞாபகம். அவர் பெயருக்காகத்தான் சினிமாவுக்குப் போனேன். இயக்குநர் குமரவேலன் ஏற்கெனவே ஒரு திருட்டுக் கதைக்கு, இலக்கியவாதி எஸ்.ரா.வுக்குப் பணமும் பேரும் கொடுத்தவராம். இந்த முறை என்னத்துக்கு வம்பு என்று யோசித்து, ஜெயமோகனுக்குப் பணத்தை மட்டும் கொடுத்துத் தீர்த்துக்கொண்டார் போலும். ஆனால் படத்தின் main-plot (தந்தை-மகன் உறவு உணர்வுப் பாடுகள்) ஜெயமோகனின் அனுபவத்தில் இருந்து புனையப்பட்டது என்பதை யூகித்துவிட முடியும். (அவரே கூட தனது வலைத்தளத்தில் அரசுப்பள்ளியும் தன் மகனும் பற்றி ஓர் எழுத்தோவியம் எழுதி இருக்கிறார்.)



ஆக, main-plot ஒரிஜினல்தான்; ஆனால் sub-plot (கள்ளன்/ பொலீஸ்/ என்கவுன்டர்) déjà vu. என்றாலும் இதில் கள்ளன் பொலீஸ் கதை அவ்வளவுக்கு நம்மைப் படுத்தவில்லை. தமிழர்கள் வாழ்க்கையில் நாடகம் இருந்ததில்லை. இருந்ததோ பாமரருக்கான கூத்துக் கலை. தமிழ் அரசர்களும் நாடகத்தை ஊக்குவித்தார்கள் இல்லை போலும். இலக்கியத்திலும் நாடகம் இல்லை. இந்த வறுமை காரணமோ என்னவோ, இற்றைத் தமிழர்கள் நாடகத்தின் மீது ஆவலாதி எடுத்து அலைகிறார்கள். இந்த ஆவலாதிகளுக்குத் தீனி போடவே இந்தக் கள்ளன் பொலீஸ் கதைகள் எல்லாம்.

காவலர் குடியிருப்பில் ஒரு குண்டம்மா போடும் ஆட்டம் தவிர படத்தில் குறை என்று கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் இல்லை. அப்பழுக்கற்ற முயற்சி. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமும் கூட. ஆனால் குறைய அரங்குகளில்தான் வெளியாகி இருக்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

திரும்புவழியில், இட்லி மாஸ்டர் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது: “வைரமுத்துவுக்கு என்ன ஸார் குறைச்சல்?”

காசுக்காக என்றாலும், அதற்குள்ளும், தம்மால் இயன்ற தரம் கொண்டுவர முயல்பவர்களும் இருக்கிறார்கள்.

Tuesday, February 26, 2013

தொல்லை காட்சி-ரபி பெர்னாட் - மொக்க பார்ட்டி-கலைஞரின் இளைஞன்

பிளாஷ்பேக்: ரபி பெர்னாட் நேர்காணல்கள்

ரபி பெர்னாட் சன் டிவியில் நேர்காணல் துவங்கிய போது பெரும் வரவேற்பை பெற்றது. பரந்த அரசியல் அறிவும், பிரபலங்களை அழைத்து வந்து சர்ச்சைக்குரிய கேள்வியை அவர் பொறுமையாய் கேட்கும் விதமும் அற்புதமாக இருக்கும். பல அரசியல் வாதிகளுக்கு கோபம் வருமளவு விவாதம் வலுத்ததும் உண்டு



அதே ரபி பெர்னாட் - அதே நேர்காணலை இன்றும் ஜெயா டிவி யில் செய்கிறார் ஆனால் பெரும்பாலானோர் பார்க்கிற மாதிரி தெரியவில்லை. காரணம் இப்போது நடுநிலைமை என்பது சிறிதும் இன்றி முழுக்க முழுக்க அ. தி.மு. க சார்பாக சென்று விட்டது தான்.

ரபி பெர்னாடுக்கு ராஜ்ய சபா உறுப்பினராக அரசியல் வாழ்வில் ஏறுமுகம் என்றாலும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவரின் இந்த இன்னிங்க்ஸ் அவ்வளவு பிரகாசிக்க வில்லை.

மொக்க பார்ட்டி

சன் மியூசிக்கில் வரும் நிகழ்ச்சி மொக்க பார்ட்டி. போனில் அழைக்கும் நபரை மொக்கை போடா சொல்லி , Compere -ம் சேர்ந்து மொக்கை போடுகிறார். சினிமா நிகழ்ச்சியில் இருந்து ஒரு டயலாக் எடுத்து போட்டும் போனில் பேசுபவரை களாய்க்கிறார்கள் . எல்லாம் சரி தான். சில நேரம் கிண்டல் எல்லையை மீறி விடுகிறது. சமீபத்தில் ஒருவரை களாய்க்கும் போது " டேய் லூசுக்கு பிறந்த லூசு பயலே " என்ற சினிமா டயலாக்கின் ஆடியோ வடிவம் போட்டு கிண்டலடித்தனர். போனில் பேசுபவரை கிண்டலடிப்பது வரை சரி. அவர் அப்பாவையும் சேர்த்து " லூசுக்கு பிறந்த லூசு பயலே " என்று கிண்டலடிப்பது சரியா? என்னமோ போங்க !

சூப்பர் சிங்கர்

அதென்னவோ தெரியலை.. டிவி யில் தொடர்ந்து அல்லது அதிகம் பார்க்கும் நிகழ்ச்சி இதுவாகவே இருக்கிறது. வார நாட்களில் வீட்டுக்கு வருகிற நேரத்துக்கு இதை தான் பார்க்க முடிகிறது என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

பாடுவோர் செலெக்ட் ஆவார்களா இல்லையா என நாமும் ஒரு ஜட்ஜ் மாதிரி அவர்களின் முதல் 2 வரி கேட்டு விட்டு சொல்லுவது ஒரு விளையாட்டு மாதிரி இருக்கிறது. பெரும்பாலும் நாம் சரியே கணித்தாலும், சில நேரம் நம் கணிப்பு பொய்யாகும் போது நம் கோபம் ஜட்ஜ் மீது திரும்புகிறது

நிற்க. சில மிக வித்தியாச பாடகர்களை இதில் அவ்வப்போது காண முடிகிறது. முழுக்க பெண் குரலில் மட்டுமே பாடும் நபர், வாத்திய கருவிகளை வாயாலே முழுமையாய் வாசிப்பவர் என மனிதர்களுக்கும் தான் எத்தனை திறமைகள் !

கிரிக்கெட் கார்னர்

மீண்டும் சென்னையில் ஒரு கிரிகெட் மேட்ச். சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போது ரேடியோவில் தமிழ் காமண்டரி சொல்வது வழக்கம். டிவி யில் கிரிகெட் மேட்ச் ஆன் செய்து விட்டு, TV சவுண்டை மியூட் செய்து, ரேடியோவில் தமிழ் காமண்டரி ஆன் செய்து விடுவோம். தமிழில் காமண்டரி கேட்டவாறு, டிவி யில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் ஆனந்தம் இருக்கே.. அடடா ! சொர்க்கம் !

அம்மாவும் ஐயாவும்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் ( Gazette) வெளியிட்டது தனது முக்கிய சாதனை என அம்மா எழுதி வைத்து கொண்டு ஜெயா டிவி யில் படிக்க, மறுபுறம் ஐயாவோ கலைஞர் டிவி யில் "இதற்கு காரணம் நாங்க தான்" என்றார். தஞ்சாவூரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆறுகள் அனைத்தும் வறண்டு கிடக்கு. அதை கண்டு கொள்ளாமல், இதை தனது சாதனை என்று சொல்லி கொண்டிருக்கும் அரசியல் வாதிகளை என்னவென்று சொல்வது ! கர்நாடகா காரர்கள் உச்ச நீதி மன்றம் சொல்வதையும் சரி, மத்திய அரசு பேசுவதையும் பெரிதாய் எடுத்து கொள்வதும் இல்லை. தண்ணீர் திறந்து விடுவதுமில்லை. இந்த விஷயத்தில் அங்குள்ள அரசியல் வாதிகள் கட்டும் ஒற்றுமையை நம் தமிழக அரசியல் வாதிகள் காட்டினாலாவது பிரச்சனை நிஜமாய் தீர சற்று வாய்ப்புண்டு

சுஜாதாட்ஸ் 10 - காணொளி

நமது தல சுஜாதா இளைஞர்கள் செய்ய வேண்டிய 10 விஷயம் என்று எழுத்தில் எழுதியதை நிச்சயம் ஏற்கனவே படித்திருப்பீர்கள். அதனை அப்படியே ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியுள்ளார் இயக்குனர் கரு. பழனியப்பன். கேட்டு பாருங்கள். தலைவர் சொன்னது இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது !



கலைஞரின் இளைஞன்

வருகிற மார்ச் 1 ஆம் தேதி - இளைஞர் தினத்தை முன்னிட்டு - கலைஞர் டிவியில் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் - கதை, திரைக்கதை, வசனம் எழுதி பா. விஜய் நடித்த இளைஞன் படம் உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக வெளியிடுகிறார்களாம். அரை மணிக்கொரு முறை கூவி கூவி பார்க்க சொல்லி அழைக்கிறார்கள். இந்த விளமபரம் வரும் ஒவ்வொரு பொழுதும் மனது ஒவ்வொரு விதமாய் யோசிக்கிறது. "பேசாமல் அன்று மாலை குடும்பத்தோடு வெளியே போயிடலாமா " என்று ஒரு முறை தோன்றுகிறது. ஹிந்தி அல்லது மலையாளத்தின் நல்ல பட DVD வாங்கி வந்து அதே நேரத்தில் போட்டு விடலாம்; அப்போது தான் அந்த சானல் பக்கமே 3 மணி நேரம் போகமால் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அரிதாக: " அப்படி என்ன தான் இருக்கு ? தைரியமா படத்தையும் வசனத்தையும் பார்த்து, மனம் விட்டு சிரிச்சா தான் என்ன?" என்ற விபரீத உணர்வும் கூட அவ்வப்போது வரவே செய்கிறது !
****
வல்லமை இணைய இதழில் வெளியானது
****


Monday, February 25, 2013

தோனி - சென்னை சூப்பர் கிங் - 200 ஸ்பெஷல் - விமர்சனம் + வீடியோ

தோனி - இந்த பெயரை சுற்றி தான் எத்தனை சர்ச்சைகள் ! எத்தனை புரளிகள்... !

இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசனின் செல்ல பிள்ளை- அதனால் தான் இந்திய அணியின் கேப்டனாக நீடிக்கிறார்

தோனி - அணியில் அவருக்கு வேண்டியவர்களை வைத்து கொள்வார்- வேண்டாதவர்களை ஒதுக்கி விடுவார்

தோனியின் பார்ம் சரியில்லை - அவர் கேப்டனாக நீடிக்க தகுதியில்லை; (அணியில் நீடிப்பதே தப்பு என்று சொல்லியோரும் உண்டு )

3 வகை விளையாட்டுக்கும் தலைவர் ஆக உள்ளது அவரது ஆட்டத்தை பாதிக்கிறது - ஓரிரு பார்மட்டில் அவர் கேப்டன் ஆக இல்லாதிருந்தால் நல்லது

                MS Dhoni launches one for six

மிக விரைவில் டெஸ்ட்டில் ஓய்வு பெற போகிறார் தோனி ( டெஸ்ட், T - 20, ஒன் டே - இந்த மூன்றும் விளையாடுவது சிரமமாக உள்ளது. ஏதேனும் ஒரு பார்மட்டில் இருந்து விலக போகிறேன் என்று சொல்லியிருந்தார் தோனி )

இப்படி எத்தனையோ வகை ஊகங்கள் இருக்க, அனைத்துக்கும் பதில் சொல்லும் விதமாக சென்னை டெஸ்ட்டில் அசத்தியிருக்கிறார் தோனி

தோனி எதோ ரொம்ப நாள் கழித்து விளையாடியுள்ளார் என்று அர்த்தம் இல்லை. கடைசியாக இங்கிலாந்துடன் விளையாடிய டெஸ்ட்டில் (அதாவது இந்த 200 க்கு முன் கடைசியாக அவர் விளையாடிய இன்னிங்க்சில்) அவர் எடுத்த ரன்கள் 99 !

நிற்க சென்னை டெஸ்ட்டுக்கு வருவோம். முதலில் ஆஸி ஆடி 380 ரன் எடுக்க, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் சச்சினின் அழகான ஆட்டத்தால் சற்று டீசண்ட் ஆக 180 க்கு 3 விக்கெட் என்ற நிலையில் மேட்ச் - பேலன்சில் இருந்தது.

ஜடேஜாவை டீமில் சேர்த்ததால், தோனி போர்த் டவுனில் ஆடவேண்டிய நிலை. இதனால் இந்திய அணியின் டெயில் - நீளமாக இருந்தது. அஷ்வின் நன்கு ஆட கூடியவர் எனினும் தொடர்ந்து நன்கு ஆட, ரெகுலர் பேட்ஸ் மேன் போல அவரை எதிர்பார்க்க முடியாது

எனவே சச்சின், கோலி , தோனி இவர்கள் மூவரும் நன்கு ஆடவேண்டும் என்பதே இன்றைய நாள் துவங்கும் போது நம் மனநிலையாக இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக சச்சின் 81 ரன்னில் அவுட் ஆக , தோனி நினைத்ததை விட சற்று முன்னரே இறங்க வேண்டியதாயிற்று.

ஒருபக்கம் கோலி ஸ்டைலிஷ் மற்றும் நிதானமான ஆட்டத்தில் இருக்க, தோனி வந்த சற்று நேரத்திலேயே பந்துகளை நன்கு மிடில் செய்யவும், சில ஷாட்கள் அடிக்கவும் ஆரம்பித்தார்

இன்றைய தோனியின் ஆட்டத்தில் குறிப்பிட படவேண்டியை :

1. அவர் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ். அட்டகாசம். பல முறை அம்பையர் அல்லது நான் ஸ்ட்ரைக்கரை காலி பண்ணுமளவு வேகத்துடன் இருந்தது அந்த ஷாட்கள் ( விக்கெட்டுக்கு நேரே பீல்டர் இருக்க கூடாது என்பதால் - ஸ்ட்ரைட் டிரைவ் - 4 அல்லது 6 பெற்று தர வாய்ப்புகள் அதிகம்)

2. தோனி அடித்த சிக்சர்கள். சென்னை அவருக்கு இரண்டாவது வீடு என்று சொல்ல முடியாது. முதல் வீடே சென்னை தான் ! இங்கு ஆடிய அளவு அதிக மேட்ச் எங்கும் ஆடியிருக்க மாட்டார். இந்த க்ரவுண்ட் மற்றும் பிட்ச் அவருக்கு அத்துப்படி. ஒவ்வொரு முறை இறங்கி இறங்கி அடிக்கும் போதும் பார்க்கும் நமக்கு தான் கேட்ச் அல்லது ஸ்டம்பிங் ஆகிடுவாரோ என பயமாக இருந்தது. ஆனால் அவர் கவலையே படாது இறங்கி இறங்கி ஆறுகளாக விளாசினார். காண கண் கொள்ளா காட்சி. நேரில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்திருப்பார்கள் ( ஆபிசில் பலர் போயிருந்தனர் ஹும் !!)

வேக பந்து வீச்சாளர்கள் பந்துகளை மிக சாதாரணமாக, கிரீசுக்கு வெளியே இறங்கி வந்து அடித்தது அவருக்கு சென்னை பிட்ச்சின் மீதிருந்த நம்பிக்கையால் தான் என்று தோன்றியது

Bhuvneshwar Kumar and MS Dhoni were in a century stand

3. புவனேஷ் குமாரை வைத்து கொண்டு தோனி ஆடிய புத்திசாலிதனமான ஆட்டம்.. சூப்பர்ப். 109 ரன்கள் அவரை வைத்து கொண்டு சேர்த்துள்ளார். 4 பந்துகள் தோனி ஆடுவது, அதற்குள் ஒரு நான்கு அல்லது ஆறு. கடைசி சில பந்தில் சிங்கிள் எடுப்பது என செம புத்திசாலிதனமாக ஆடினார். இத்தனைக்கும் முதல் நாலு பந்துகள் பீல்டிங் விரிந்தும், கடைசி இரு பந்துகள் சிங்கிளை தடுக்க, பக்கத்திலும் இருந்தனர்

தேநீர் இடைவேளையின் போது முதல் நூறை எட்டிய தோனி , தேநீர் இடைவேளை துவங்கி ஆட்ட நேர இறுதிக்குள் இன்னொரு நூறு அடித்தது அமர்க்களம்  !

இதே இன்னிங்க்சில் கேப்டனாக இருந்து அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார் தோனி.

சச்சின் மற்றும் புஜாரா இருவரின் ஆட்டம் சரிவிலிருந்து மீட்டது; கோலியின் செஞ்சுரி சற்று ஸ்டேபிலிட்டி தந்தது என்றாலும், தோனியின் ஆட்டம் தான் இந்தியா இந்த டெஸ்டில் இனி தோற்காது என்ற தைரியத்தை தந்துள்ளது என்று க்ரிக் இன்போ நிருபர் குறிப்பிட்டது முழுக்க சரி !

*********
நேற்றைய ஆட்டம் ஹைலைட்ஸ் 5 பிரிவாக கீழே பகிர்ந்துள்ளேன்.

ஒவ்வொரு வீடியோவும் ஆறு நிமிடம் போல் இருக்கும். வீடியோவின் முதல் 15 நொடிகள் மட்டும் விளம்பரம் ! அதை தாண்டினால் கிரிக்கெட், கிரிக்கெட் தான் !

Part I Highlights






Part II Highlights





Part III Highlights





Part IV Highlights




Part V Highlights



*************
மெதுவாய் நகரும் -டெஸ்ட் மேட்ச் என்ற எண்ணத்தை போக்கி,  இத்தகைய அதிரடி ஆட்டங்கள் தான் இளம் ரசிகர்கள் ஆர்வம் கொள்ள வைக்கிறது.

சரி.. இந்த ஒரு ஆட்டத்தால் எல்லாம் சரியாகி விட்டதா? தோனி கேப்டன்சி பிரச்சனை சரியாகி விட்டதா ?

இல்லை. தோனி கேப்டன்சியில் நிச்சயம் சில தவறுகள் செய்கிறார் ஆனால் இன்றைய நிலையில் என்னை பொறுத்த வரை அவர் தான் சிறந்த கேப்டன் ; வேறு நபரை மாற்ற தேவையில்லை. இதற்கு 2 காரணம் மட்டுமே.

பலரும் கேப்டன் ஆனால் அவர்களது தனிப்பட்ட ஆட்டம் பாதித்து விடும்  (சச்சின், டிராவிட், துவங்கி உதாரங்கள் சொல்லி கொண்டே போகலாம்) இருக்கும் ஆட்களில் கோலி தவிர வேறு யாருக்கும் கேப்டன்சி தர வாய்ப்பில்லை. கோலி ஒரு கேப்டன்சி மெட்டிரியல் தான் என்றாலும் துணை காப்டனாக இருந்து கற்று கொண்டு பின் காப்டனாகலாம். மேலும் அது அவர் ஆட்டத்தஹி பாதிக்க கூடாது. மாறாக கேப்டனாக இருந்தாலும் தோனியின் பேட்டிங் எவ்விததிலும் மாற போவதில்லை. அவரது ஆட்டத்தில் வந்த மாறுதல்கள் கால போக்கில் யாருக்கும் வர கூடிய நிதானம் தான்.

அடுத்து தோனியின் பொறுமையான அணுகுமுறை. இது பலருக்கும் வாய்க்காது.

தனது Instinct -ல் தோனி எப்போதும் முடிவெடுப்பதால் சில நேரம் அவரது முடிவுகள் தவறாக போனாலும் இப்போதைக்கு தோனி தான் சிறந்த கேப்டன்

சரி.. கேப்டன் பதவி சர்ச்சைக்குள் சென்று விவாதம் செய்யாமல், let us savour this Dhoni special for some more time !

இந்த சென்னை சூப்பர் கிங்கிற்கு பெரிய விசிலை அடிங்க !

****
மேட்சை நேரில் பார்த்த நண்பர் பாலசுப்ரமணியம் - நமக்கு தரும் கமண்டரி இது. ஆங்கிலத்தில் அவர் பகிர்ந்ததை அப்படியே பகிர்கிறேன்
*********
I am sharing  my experience and some facts during the course of 3rd day of India vs Australia test match here at Chennai:

Sachin's score at the end of day 2 was 71* and everyone wished to see him to score yet another 100 on day 3. Moreover, since Day 3 was Sunday, you could imagine the flood of people waiting to get inside the Chepauk stadium. Some people were there from 4 AM in the morning to buy daily tickets. Even if one reaches the stadium on time, it would have taken atleast 1 hour to get inside as the queue grew in kilometers.

To our disappointment, Sachin got out on 81 to an half filled stadium as most of the people were stuck in queues outside. It took a while for the crowd to face the reality of Sachin's wicket. But, when MS Dhoni walked in, the crowd again started cheering and expected him to score big. He did it.

Initially he built a partnership with Kohli, who scored his 4th century and then sort of gave away his wicket to a loose shot. Dhoni ensured that the crowds who were present in the stadium were in for a treat.

Dhoni's score at lunch was 37*, at tea was 97* and at stumps was 206*. You could see how well he smashed the ball during the third session by scoring more than a hundred runs. Bhuvaneshwar Kumar did really well to support Dhoni.

Thanks to the TN Cricket Association, through which anybody can send SMS about the team and the match and the best SMS will be displayed in the big screen at the stadium. Even the players acknowledged the SMS. There was a SMS asking Clarke and Warner to dance to which they danced and entertained the crowd. The crowd asked Ashwin to raise his bat so that the crowd can roar. He acknowledged it and raised his bat.

Not to mention the huge roar when a SMS asked all the Power Star fans to show their strength.

Sachin scored his 200* in ODI on 24th Feb 2010 and exactly after 3 yrs Dhoni scored his 200 on 24th Feb 2013. The last ODI match also, played by Dhoni at Chennai vs Pakistan, he scored a century. Of course, Chepauk is his den.

While nearing 200, Dhoni broke many records such as reaching 4000 test runs, highest individual score, highest score by a keeper captain, highest score by an Indian captain against Australia and a few more. The crowd rose to its feet and gave him an excellent ovation when he left the field at Stumps. The day was completely dominated by India and it was worth watching at the stadium.

Regards,

Balasubramanian

*******

Sunday, February 24, 2013

உணவகம் அறிமுகம்: திருச்சி PLA கிருஷ்ணா இன்


திருச்சி மெயின் பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே உள்ளது PLA கிருஷ்ணா இன் ஹோட்டல். சமீபத்தில் மதிய சாப்பாட்டுக்கு 3 குடும்பங்களாக இங்கு சென்றோம்.

உள்ளே நுழைந்ததும் அட்மாஸ்பியரே அசத்துகிறது. சாப்பாட்டு அறையின் வேலைப்பாடுகள், சேர், சோபா, நமக்கு வைக்கும் செப்பு டம்ளர் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருந்த நேர்த்தி , அறையின் அழகான லைட்டிங் என அசத்தலாய் இருந்தது. சாப்பாடு அன் லிமிட்டெட். நிச்சயம் இந்த 3 ஸ்டார் ஹோட்டல் அட்மாஸ்பியருக்கு குறைந்தது 200 ரூபா வாங்குவார்கள் என நினைத்தால் 100 ரூபாய் தான் !

முதலில் சப்பாத்தி வருகிறது. அதற்கான குருமா ஏ. ஒன். தேங்காயை தாராளமாய் அரைத்து விட்டிருந்தனர் (வீட்டில் என்றால் ஏன் எவ்வளவு என்போம்; எப்பவோ ஒரு முறை ஹோட்டலில் என்றால் சாப்பிடலாம்) ஏலக்காய் போன்ற சமாச்சாரங்கள் போட்டு குருமா வாசனையாகவும், டேஸ்ட்டியாகவும் இருந்தது. நம் கூட வந்த மக்கள் - ஆள் ஆளுக்கு குருமா இன்னொரு கப் கேட்டு வாங்கி அடித்து கொண்டிருந்தனர்

சாம்பார், ரசம் போன்றவை வழக்கம் போல் தான் எனினும் சாப்பாட்டில் என்னை ரொம்ப கவர்ந்தது மூணு விஷயங்கள்

முதலில் அப்பளம் - பெரிய்ய்ய சைசில் பார்க்கவே காமெடியா இருந்தது

அடுத்து - வற்றல் குழம்பு - அமர்க்களம்.











கடைசியாய் - பாயசம் - நாங்கள் சென்ற அன்று பால் பாயசம் ரொம்ப அருமையாய் இருக்க, இன்னொரு முறை பாயசம் மற்றும் அப்பளம் கேட்டு வாங்கி அப்பளத்தை தூளாக்கி பாயசத்தில் போட்டு ஒரு வெட்டு வெட்டினேன்.

அனைத்து ஐட்டம்களும் அன் லிமிட்டெட் தான். அதனால் பசியும், திறமையும் உள்ளவர்கள் வீடு கட்டி அடிக்கலாம்.



ஆண்களுக்கு சமமாக நிறைய பெண்களும் இங்கு உணவு பரிமாறுகிறார்கள்.
உணவு பரிமாற குறைந்தது 15 நிமிடமாவது காத்திருக்க வேண்டியுள்ளது அது மட்டுமே மைனஸ்

கார் பார்க்கிங் ஏரியா தாரளமாக இருக்கு. இங்கு லாட்ஜிங்கும் உள்ளது. ரொம்ப டீசண்ட் ஆக இருக்கும் என்றும், தங்கும் இடமாகவும் இது பாப்புலர் ஆகி விட்டதென்றும் கூட வந்த திருச்சி நண்பர்கள் கூறினர்.

திருச்சி பக்கம் சென்றால் நம்பி ஒரு முறை சாப்பிடலாம் !

மேலதிக தகவல்கள் : 

ஹோட்டல் பெயர்: PLA கிருஷ்ணா இன்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்

இணைய முகவரி : http://www.plakrishnainn.com/abouthotel.aspx

Saturday, February 23, 2013

சென்னை -ஈக்குவிட்டாஸ் நிறுவனம் வெற்றி கதை

நிகழ்ச்சி ஒன்றில் ஈக்குவிட்டாஸ் நிறுவன அதிபர் திரு. வாசுதேவன் அவர்கள் பேசிய தகவல்களை நேற்றைய முதல் பதிவில் இங்கு  பகிர்ந்திருந்தேன். அதன் தொடர்ச்சி இன்று வெளியாகிறது

*****
ந்திரா ஒரு காலத்தில் மைக்ரோ பைனான்சில் கொடி கட்டி பறந்தது. மிக அதிக கடன்கள் அங்கு தான் வழங்கப்பட்டன முக்கிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அனைத்தும் இங்கும் தான் மைக்ரோ பைனான்ஸ் தொழிலை துவக்கின. நாட்டின் மொத்த மைக்ரோ பைனான்ஸ் தொழிலில் மூன்றில் ஒரு பங்கு இங்கு தான் நடந்தது.

ஏராள நிறுவனங்கள் ஏகப்பட்ட லோன்கள். ஒரு பலூன் ஊதி ஊதி மிக பெரிய அளவில் செல்லும்போது அது வெடிப்பதை தடுக்க முடியாது. அப்படி தான் இங்கும் நிகழ்ந்தது

அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆந்திராவில் தற்கொலை அதிகம் நடக்கும். மழை பொய்த்தது அல்லது அதிகமாகி விவசாயம் கெட்டது என இத்தகைய மரணங்கள் நிகழும். ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்த போது மட்டும் அவர் இறந்தது தாளாமல் 350 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிவானது. அதில் ஒருவர் கூட அவர் உறவினர் இல்லை ! அரசியல் வாதி இறந்தால் உறவினர்களால் தாங்கி கொள்ள முடிகிறது. மற்றவர்களால் தாங்கி கொள்ள முடியலை.

திடீரென ஒரு காலத்தில் ஆந்திராவில் தற்கொலைகள் நிறைய நிகழ்ந்தன. அவற்றிற்கு காரணம் கடன் தொல்லை தான் என்று செய்தி கிளம்பியது

உடனே அரசு மைக்ரோ பைனான்ஸ் தொழிலை ஆந்திராவில் முழுதாய் முடக்கி விட்டது. பின் அரசின் இந்த நடவடிக்கை தவறென மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வழக்கு தொடர, மிக சமீபத்தில் ஹைதராபாத் உயர் நீதி மன்றம் " அரசின் நடவடிக்கை தவறு என்றும். அப்படி தடை செய்ததை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றும் தீர்பளித்துள்ளது

திரு. வாசுதேவன், ஈக்குவிட்டாஸ் எம். டி 
நாங்கள் ஈக்குவிட்டாஸ் நிறுவனம் துவங்கும் போது மார்கெட் முழுதும் ரிசர்ச் செய்தோம். அப்போது எங்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது. மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்கள் மக்களிடம் மிக அதிக வட்டி வசூலித்து கொண்டிருந்தன. ஏழை மக்களுக்கு யாரும் கடன் கொடுக்க தயாராய் இல்லை. அவர்களுக்கு பணம் கடனாய் கிடைப்பதே பெரிய விஷயம். அதனால் மூணு பைசா வட்டி, நாலு பைசா வட்டி என்று கடன் வாங்கி கொண்டிருந்தனர். கணக்கு பண்ணி பார்த்தால், குறைந்தது 35 % வட்டியும் அதிக பட்சம் 55 % வட்டியும் நிறுவனங்கள் வசூலித்து வந்தன. ஆனால் இவ்வளவு வட்டி வாங்குகிறோம் என வெளிப்படியாய் நிறுவனங்கள் சொல்லவில்லை

நாங்கள் நிறுவனம் துவங்கும் போது இப்படி அதிக வட்டி வசூலிப்பதும் தவறு; எவ்வளவு வட்டி வசூலிக்கிறோம் என சொல்லாமல் மூடி மறைப்பதும் தவறு என முடிவெடுத்தோம். எங்கள் வெளிப்படையான அணுகுமுறையை காட்டும் விதத்தில் தான் ஈக்குவிட்டாஸ் என நிறுவனத்துக்கு பெயர் சூட்டினோம். ஈக்குவிட்டாஸ் என்கிற லட்டின் மொழி சொல்லுக்கு அர்த்தம் நேர்மை மற்றும் வெளிப்படையான அணுகுமுறை ( Fair and Transparent ) என்று அர்த்தம்

இந்த தொழிலை வைத்து மிக அதிக சம்பாத்தியம் ஈட்ட வேண்டிய அவசிய எனக்கில்லை. சொல்ல போனால் அந்த நேரம் எனக்கு ஒரு வேலை தேவையாய் இருந்தது. அவ்வளவு தான்.

சென்னை காரனான யாருக்கும் குடும்பம் நடத்த 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் இருந்தால் அதுவே போதும். அதற்கு மேல் சம்பாதிக்கும் பணம் முழுதும் சென்னை காரர்கள் சேமிக்க தான் செய்வார்கள். எனவே எனக்கு இத்தொழிலை வைத்து மாபெரும் பணக்காரன் ஆகும் கனவு இல்லை.

பல நண்பர்கள் முதலீடு போட்டனர். அத்தோடு மற்றும் எனது பணத்தையும் சேர்த்து 10 கோடியில் நிறுவனம் துவங்கினேன். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் துவங்க பல அரசு லைசன்ஸ்கள் வாங்க வேண்டும். எங்களுக்கு முன்னாள் ஒரு நிறுவனம் அத்தகைய உரிமைகளை 47 நாட்களில் வாங்கியிருந்தது. அது தான் சாதனையாக இருந்தது. அதை விட 1 நாள் குறைவாக நாங்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என உழைத்தோம். ஆனால் எங்களுக்கு லைசன்ஸ் வர 55 நாள் ஆகிவிட்டது. " சரி 47 நாளில் வேண்டும் என உழைத்ததால் தான் 55 நாளில் கிடைத்தது " என சமாதானம் செய்து கொண்டோம்.

மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்கள் சிறு தொழில் புரிவோருக்கு வட்டிக்கு கடன் தருகிறார்கள். இது தான் முக்கிய தொழில். எங்களுக்கு முன்னால் நிறுவனம் துவன்கியோர் எல்லாம் ஏழைகளுக்கு கடன் தரும் தொழில்கள் பெரிதாய் போகாது என சின்ன முதலீட்டில் சிறிய அளவில் துவக்கினர் நாங்கள் துவங்கிய போது மைக்ரோ பைனான்ஸ் துறை ஓரளவு விரிவடைந்திருந்தது. அதனால் துவங்கிய போதே நிச்சயம் பெரிய அளவில் செல்வோம் என்று தைரியமாய் செயல்பட்டோம்.

நாங்கள் தரும் கடன் சதவீதம் 25.5 % க்கு மேல் போக கூடாது என நிர்ணயம் செய்து கொண்டோம். பின்னாளில் ரிசர்வ் வங்கி - மைக்ரோ பைனான்சு நிறுவனங்களுக்கு அதிக பட்ச வட்டி யை நிர்ணயம் செய்த போது நாங்கள் குறித்த வட்டி அளவை ஒட்டி 26 % என்று அறிவித்தது

போலவே எந்த ஒரு Investor -க்கும் 5 % க்கு மேல் பங்குகள் ( Shares ) வழங்க வில்லை. நானும் இந்த நிறுவனத்தில் 4 % பங்கு தான் வைத்துள்ளேன்.

துவக்கத்தில் நிறுவனத்தில் உள்ள செலவுகள் மிக அதிகம். அதனை கடன் பெறுவோரிடம் இருந்து சம்பாதிக்க நினைத்தால் அதிக வட்டி வசூலிக்க வேண்டி வரும். ஆனால் நாங்கள் துவக்க செலவு முழுக்க எங்களுடையது; அதனை கடன் பெறுவோரிடம் இருந்து பெற நினைக்க கூடாது என்று உறுதியாக முடிவெடுத்தோம்.

இந்த துறையில் 40 % முதல் 50 % வரை லாபம் வர வாய்ப்புண்டு. நாங்கள் 20 % லாபம் போதும் என்று வரையறை வைத்து கொண்டோம்.

10 கோடியில் துவங்கிய எங்கள் நிறுவனத்தின் காப்பிடல் இப்போது 450 கோடி.

எங்கள் லாபத்தில் 5 %, கடன் உதவி பெரும் குடும்பங்களுக்கு உதவ பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு ஊர்களில் 300 இலவச மருத்துவ முகாம் நடத்துகிறோம்.



திருச்சி, சிவகாசி உள்ளிட்ட 5 ஊர்களில் நாங்கள் பள்ளிகள் துவங்கியுள்ளோம். ஒவ்வொரு பள்ளிக்கும் துவக்க செலவு 5 கோடி. இந்த பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளிகள் லாபம் ஈட்ட குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என்பது எங்கள் கணக்கு. அது வரை நிறுவனத்தில் இருந்து தான் பள்ளிகளுக்கு பணம் தர வேண்டியிருக்கும்

பள்ளிகள் ஆரம்பத்தில் LKG முதல் ஐந்தாவது வரை ஆங்கில மீடியத்தில் துவக்கப்பட்டு பின் 6, 7 என ஒவ்வொரு வகுப்பாக அடுத்தடுத்த வருடம் சேர்க்கிறோம்

பள்ளிகள் இல்லாத இடங்களில் 50 டியூஷன் சென்டர்கள் வைத்துள்ளோம்.

எங்கள் நிறுவனத்தில் கடன் வாங்கியோர் வசதிக்காக சென்னையை சுற்றிலும் 20 மளிகை கடைகள் துவங்கி உள்ளோம். அவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் வரை கடனில் பொருள்கள் வாங்கி கொள்ளலாம். 30 நாளுக்குள் அதற்கான பணம் தந்து விட்டால் வட்டி கட்ட தேவையில்லை.

ஈகுவிட்டஸ் நிறுவன தளத்தில் இருந்து அவர்கள் நிறுவனம் செய்யும் செயல்கள் குறித்த வீடியோவை இங்கு பகிர்கிறேன் பாருங்கள்



கடன் தந்து வட்டி பெறுவது தான் முக்கிய தொழில். இதில் கடன் வாங்கி, அதனை திரும்ப தராதவர்கள் மிக மிக குறைவு. எங்கள் நிறுவனத்தில் மட்டுமல்ல மைக்ரோ பைனான்ஸ் துறை முழுதுமே 99 % முதல் 99.5 % வரை கடன் தந்த பணம் திரும்ப வந்து விடுகிறது. பெரும் தொழில் செய்வோரிடம் தான் " வாரா கடன் " எல்லாம் நடக்கிறது. சிறு தொழில் புரிவோர் தங்கள் கடனை சரியே அடைத்து விடுகிறார்கள்.எங்கள் நிறுவனத்தில் மட்டுமல்ல எல்லா நிறுவனங்களிலும். எனவே மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்துக்கு கடன் பணம் திரும்ப வரா விட்டால் என்ன செய்வது என்ற கவலை இல்லவே இல்லை.

2010 -ல் ஆந்திராவில் மைக்ரோ பைனான்ஸ் துறையில் பிரச்சனை வந்த பின் ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்தியா முழுக்க உள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு 10 கட்டளைகள் பிறப்பித்தது. ஆனால் அவர்கள் சொன்ன 10 விஷயங்களும் நாங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தோம். எதுவுமே எங்களுக்கு புதிதில்லை. எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் பார்த்து சில நேரம் ரிசர்வ் வங்கி எங்களிடம் கலந்து பேசி, இந்த துறைக்கான சில முடிவுகளை அறிவித்ததும் உண்டு.

எங்கள் நிறுவனத்தில் இந்தியா முழுதும் தற்போது 2300 ஊழியர்கள் 270 ஊர்களில் வேலை செய்கிறார்கள். எங்கள் நிறுவனத்தின் கடைசி ஊழியர் வரை எங்கள் நிறுவனத்தில் பங்கு தாரரே (Shareholder). நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்கள் மனைவி, குழந்தைகள் தவிர பெற்றோருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்குகிறோம்.

கடன் தர யாரேனும் லஞ்சம் கேட்டாலோ, வேறு சட்ட மீறல் நடந்தாலோ எங்களுக்கு தொலை பேசியில் அழைக்க இலவச எண் அனைத்து இடங்களிலும் குறித்து வைத்துள்ளோம்.

எங்கள் வேலையை நாங்கள் மிக மகிழ்ச்சியாக அனுபவித்து செய்கிறோம். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது

நன்றி !
***
நிகழ்ச்சி முடிந்த பின் பலரும் சுவாரஸ்யமான கேள்விகளை அவரிடம் கேட்டனர் அவரும் வெளிப்படையாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்
***
சேவை செய்யும் தொழிலையே லாபகரமாக மன நிறைவுடன் செய்யும் வாசுதேவன் பாராட்டுக்குரியவரே !
***

முதல் பகுதி இங்கு 

மகளிர் சுய உதவி குழுவில் என்ன நடக்கிறது? ஈக்குவிட்டஸ் தலைவர் பேச்சு 
***

Friday, February 22, 2013

ஆதிபகவன்- பாதி அரவான் - விமர்சனம் -By- ராஜ சுந்தர்ராஜன்


“பாதி-அரவான்” - ராஜ சுந்தரராஜன்

---------------------------------------------------------------------

இந்தக் கதையில் வரும் எதுவும் எவையும் உயிரோடோ, இறந்தோ, ஆவியாகவோ அல்லது உண்மையும் இன்மையுமாயோ இருக்கும்/இல்லாத எதையும் எவரையும் எந்த இனத்தையும் மதத்தையும் குறிப்பன அல்ல. எல்லாம் கற்பனையே. We will meet in hell.

“டைரக்டர் ஸார், கடைசியில, a film by ன்னு உங்க பேரையும் சேர்த்து ரத்தத் துளிகளால எழுதிக் காட்டுறீங்க பாருங்க, அய்யோ, சூப்பர் ஸார்! ஆமா, அதுக்கு என்ன ஸார் அர்த்தம்?”

“அஸிஸ்டெண்டுனா உன்னெ மாதிரிதான்யா இருக்கணும். கத்துக்கோ! மொதல்ல இருந்து சொல்றேன்: ‘அரவான்’ அன்ட்டே தெலுகுலோ ‘அரவாடு’. அதாவது தமிழன்னு அர்த்தம். அதனாலதான் படம் ஆந்திரப்பிரதேசத்துல தொடங்குறா மாதிரி எடுத்தேன்; ஹீரோ தமிழ் ஆளுன்னு வெச்சேன்.”

“சூப்பர், ஸார்! ஆனா அப்புறம் பாட்டயா (தாய்லாந்து) போகுதே கதை, அது ஏன் ஸார்?”

“இந்தப் படத்துல பட்டையெக் கிளப்பணும்னு தோணுச்சா, அதுதான் பாட்டயா. அப்புறமா கதை ஏன் மும்பைக்கு போகுதுங்கிறதையும் சொல்லிடுறேன்: பாட்டயாவுல ஹீரோயின் தன்னோட பேரு ‘கரிஷ்மா’ன்னு சொல்றாளா, எனக்கு மும்பை ஞாபகம் வந்திடுச்சு.”

“சூப்பர், ஸார், சூப்பர்! ஆனா மும்பையில ஹீரோயின் பேரு ‘ராணி’ன்னு மாறிடுது, இல்லையா ஸார்?”

“அது ஏன்னு கேளு: ‘அரவான்’ல முன்பாதி ‘அரவா’; ‘ராணி’ல பின்பாதி ‘ணி’. ரெண்டையும் சேர்த்தா, ‘அரவாணி’. அதனாலதான் படத்துக்கு “பாதி-அரவான்” ன்னு பேரு; மும்பையில வில்லனா வர்ற இரட்டை வேட ஹீரோவும் அரவாணியா வர்றாரு.”

“சூப்பரோ சூப்பர் ஸார்! ‘விஸ்வரூபம்’ கமல் கூட அரவாணியா...?”

 

“அங்கெதான்யா இருக்கு நம்ம ஜீனியஸ்னெஸ். இன்டெர்நெட் பசங்க ‘நட்டுவாக்காலி’, ‘திருவோடு’ன்னு எல்லாம் பேரு வெச்சுக்கிட்டு, நாம ஹாலிவுட்ல இருந்து, லெட்டீன்-அமெரிக்காவுல இருந்து, ஜப்பான், கொரியாவுல இருந்தெல்லாம் காப்பி அடிக்கிறதா எழுதிப் போடுறானுக. அதனால இந்தப் படத்துக்கு நம்ம பசங்க தீயா வேலை செஞ்சானுக. நீ கூட திருக்குறள்ல முதற்குறள் நாலாவது அஞ்சாவது சீருக்கு என்ன அர்த்தம்னு அரசஅழகரசன்ங்கிற மடக்குவரிக் கவிஞர்ட்ட கேட்டுத் தெரிஞ்சு சொன்னியே? அது மாதிரி ‘கடல்’ படத்துல சைத்தான் கேரக்டர் வர்றதாவும் ‘விஸ்வரூபம்’ படத்துல அரவாணி கேரக்டர்ல கமல் வர்றதாவும் பசங்க துப்பறிஞ்சு வந்து சொன்னானுக. சுட்டு, சைத்தானையும் அரவாணியையும் இணைச்சுட்டேன். எந்த நட்டுவாக்காலியாவது நான் நோலனைக் காப்பி அடிச்சேன் பூ... னைக் காப்பி அடிச்சேன்னு இனி எழுதுவானா சொல்லு?”

“அடடா, எங்கேயோ போயிட்டிங்க ஸார்! ஆமா, கதை கடைசியில கோவாவுக்குப் போகுதே ஏன் ஸார்?”

“ப்ரொட்யூஸரு பினாமி மாதிரி தெரிஞ்சுதா, இதுதான்டா சான்ஸ்னு மும்பை தாய்லாந்துன்னு அனுபவிச்சாச்சு. கோவாவெ ஏன் விட்டு வெய்க்கணும்னு க்ளைமாக்ஸை அங்கெ வெச்சேன், எப்பூடி?”

“ஆஹா! ஆஹா! ஆஹஹஹஹா! அப்புறம் நமக்கு மரபுன்னு ஒண்ணு எம்ஜிஆர், அவருக்கு முந்துன காலத்துல இருந்துகூட இருக்குதானே? அதாவது, ஹீரோ ஒரு பொம்பளையெ அடிக்கக் கூடாதுன்னு... இதுல கொலையே பண்றானே ஸார்?”

“ஜெயமோகனுக்குத்தான் மரபு. நமக்கென்னத்துக்கு? “We will meet in hell.” ன்னு இதுல வசனம் வெச்சது சும்மா இல்ல. நார்ம்ஸ் எல்லாத்தையும் ப்ரேக் பண்ணணும். அந்தப் புரட்சியை உணர்த்தத்தான் கடசியில a film by ன்னு என் பேரை ரத்தத் துளிகளால எழுதிக் காட்டுனேன். படம் பார்த்த ரசிகர்கள் கழுத்தைத் தடவிப் பார்த்தாங்கன்னா பாரேன், நம்ம படத்தால என்ன எஃப்ஃபெக்ட்டுன்னு!”


-ராஜ சுந்தரராஜன்

அண்மை பதிவுகள் 


மகளிர் சுய உதவி குழு: என்ன தான் நடக்குது ?

நான் உறுப்பினராக இருக்கும் ஒரு குழுவில், பிசினஸ் உலகின் வெற்றியாளர்களை அழைத்து, அவர்களின் வெற்றி பாதையை/ அனுபவத்தை பகிர சொல்வார்கள். சமீபத்தில் சென்னையை தலைமையிடமாக் கொண்ட ஈக்குவிட்டாஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் திரு. வாசுதேவன் இதில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேச்சில் மகளிர் சுய உதவி குழுக்கள் எப்படி செயல்படுகின்றன, மைக்ரோ பினான்ஸ் என்ற துறைபற்றி விரிவான தகவல் , அவர் சார்ந்த ஈக்குவிட்டாஸ் நிறுவனத்தின் வெற்றி பாதை அனைத்தும் அறிய முடிந்தது.



 சில தகவல்கள் உங்களுக்கும் பயன் தரும் என்பதால் பகிர்கிறேன். பெரிய பதிவாக உள்ளதால் 2 பகுதிகளாக வெளிவரும்.

இனி : திரு.வாசுதேவன் அவர்கள் பேசியதில் இருந்து:
***************
பொதுவாய் வெற்றி கதையை இளைஞர்களிடம் தான் பகிர்வது வழக்கம். இங்கு உள்ள பலரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் பெரியவர்கள் ! இங்கு பேச சற்று பயமாய் தான் இருக்கிறது.

நான் அடிப்படையில் சட்டமும் வக்கீல் படிப்பும் படித்தவன். சோழமண்டலம் என்கிற நிறுவனத்தில் 15 ஆண்டுக்கும் மேல் வேலை பார்த்து வந்தேன். நான் அங்கு President ஆக இருந்தபோது அந்த நிறுவனம் இன்னொரு பெரிய வெளிநாட்டு நிறுவனத்துடன் ஜாயிண்ட் வென்ச்சர் அக்ரிமெண்ட் போட்டது. புதிதாக வந்த ஜாயிண்ட் வென்ச்சர் பார்ட்னர் என்னையும் சேர்த்து பெரிய பொறுப்பில் இருக்கும் சிலரை மாற்றி விட்டு வேறு ஆட்களை நியமிக்க வேண்டும் என்றது. ஜாயிண்ட் வென்ச்சர் வரும்போது பொதுவாக பல இடங்களில் இப்படி நடப்பது வழக்கம். ஆக எனக்கு வேலை போய் விட்டது !  அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை.

பம்பாயில் ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. குடும்பத்துடன் ஷிப்ட் ஆனோம். 2 வருடங்கள் தான் அங்கிருந்தேன். அந்த சூழல் என்  பெண்ணுக்கு ஒத்து கொள்ள வில்லை. உடலளவில் மிக கஷ்டப்பட்டாள் . மருத்துவர்கள் இந்த ஊர் pollution அவளுக்கு ஒத்து கொள்ள வில்லை; சென்னை சென்று விடுங்கள் என்று கூறி விட்டனர்.

சென்னையில் எனது அனுபவத்துக்கு ஏற்ற வேலை கிடைப்பதில் சிரமம் இருந்தது. சோழமண்டலத்தில் எனக்கு கீழ் வேலை பார்த்தோர் - பெரிய நிலையில் பல வங்கிகளில் இருக்க, எனக்கு அவர்களுக்கு கீழ் வேலை செய்ய கூடிய வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அப்படி பணிபுரிய எனக்கு உடன்பாடே இல்லை.

ஈக்குவிட்டாஸ் நிறுவன தலைவர் திரு. வாசுதேவன் 
                                  
அப்போது பெங்களூரில் ஒரு NGO நிறுவனத்தை சார்ந்தவர் " உங்களுக்கு வங்கி பின்னணி இருக்கிறதே; நீங்கள் ஏன் மைக்ரோ பைனான்ஸ் பிசினஸ் ஆரம்பிக்க கூடாது? " என்று கேட்டார். அவரிடம் "நான் சம்பளம் வாங்கும் ஒரு வேலை ஆளாக தான் இருக்கிறேன். தனியே தொழில் துவங்க, விருப்பமும், முனைப்பும் என்னிடம் இல்லை " என்றேன். ஆனால் அவர்கள் இந்த தொழிலுக்கு தேவையான அனைத்து பயிற்சியும் தருவதாக கூறினார்கள்

மைக்ரோ பினான்ஸ் துறை பற்றி சற்று சொல்ல வேண்டும்.

முதன் முதலில் பங்களாதேஷில் உள்ள முகம்மது யூசுப் என்பவர் தான் இதனை அறிமுகம் செய்தார். ஒரு முறை பங்களாதேஷில் பெரும் புயல் அடித்து ஏழைகள் கஷ்டப்படும் போது யூசுப் அங்கிருந்த ஏழைகளுக்கு பணம் தந்தார். அவர் அதனை அவர்களுக்கு இலவச உதவி என நினைத்து தான் தந்தார். ஆனால் சில காலத்துக்கு பின் அவர் தந்த பணம் முழுதும் அந்த கிராம மக்கள் திரும்ப தந்து விட்டனர். பின் இதனை அவர் சிறிய அளவில் துவங்கி - மிக பெரிய நிலைக்கு கொண்டு சென்றார்

2006-ஆம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. மைக்ரோ பினான்ஸ் என்ற துறையில் பணியாற்றி, ஒரு புது பிசினஸ் மாடலை அறிமுகம் செய்தவர் என்ற வகையிலும், இத்துறையில் பணியாற்றி நோபல் பரிசு பெற்றுள்ளார் என்றும் மைக்ரோ பினான்ஸ் துறை மிக பிரபலம் ஆக துவங்கியது

இந்த துறை எல்லா தட்டு மக்களையும் எளிதில் ஈர்க்கிறது. காரணம் ரொம்ப சிம்பிள் : ஏழை மக்களுக்கு உதவுகிறோம் என்ற கோஷம் தான் இதில் அட்ராக்ஷன். வெளிநாட்டில் இருக்கும் ஒரு கோடீஸ்வரர் இங்கு வந்து ஏழைகளுக்கு உதவுகிறார் என்றாலும் அது கவர் ஸ்டோரியில் வரும். மக்களிடம் அதிக வட்டி வாங்கி சுரண்டுகிறார்கள் என்றாலும் அது பத்திரிக்கையில் வரும்.

வாசிப்பவர்களும் இது பற்றி நல்ல விதமாய் எழுதினால் நெகிழ்கிறார்கள். தவறாய் எழுதினால் "ஏழைகளை சுரண்டி பிழைக்கிறாங்க பாரு " என கோபப்படுகிறார்கள். நல்ல எமோஷனல் அப்பீல் உள்ள துறை இது

மைக்ரோ பினான்ஸ் தற்போது 2 விதமாக உள்ளது

முதலில் : மகளிர் சுய உதவி குழுக்கள். இவை அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஏரியாவில் இருக்கும் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குழுவை அமைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மாதம் 10 அல்லது 20 ரூபாய் போடுகிறார்கள். இந்த பணம் ஓரளவு சேர்ந்ததும் குழுவில் உள்ள ஒருவருக்கு ஏதேனும் சிறு தொழில் தொடங்க 5,000 அல்லது 10,000 போல கடன் தருகிறார்கள். இதனை வட்டி பணத்துடன் அவர்கள் திரும்ப தர வேண்டும்.

வீட்டிலேயே சிறு பெட்டி கடை வைப்பது, தையல் தொடங்குவது, சில கலை பொருட்கள் தயாரித்து விற்பது போன்ற தொழில் செய்ய மட்டுமே கடன் தரப்படும். வீட்டில் நடக்கும் கல்யாணம், ஆஸ்பத்திரி செலவுகளுக்கு தரக்கூடாது



மகளிர் சுய உதவி குழுக்கள் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. பெண்கள் சிறு தொழில் தொடங்கவும், பலருடன் பழகி மிக தைரியம் பெறவும், ஏரியாவில் உள்ள பொது பிரச்சனைகளில் சேர்ந்து குரல் கொடுக்கவும் இது உதவுகிறது

கடந்த முனிசிபல் தேர்தலில் தேர்வான பெண்களில் 37 % மகளிர் சுய உதவி குழுவில் இருப்போரே .

இந்த முறையில் முக்கியமாய் 3 பிரச்சனை உள்ளது. சுய உதவி குழு நடத்துவது அரசாங்கம். அது நடத்தும் எந்த விஷயத்திலும் இருக்கும் அனைத்து பிரச்சனைகள், தாமதங்கள் இங்கும் இருக்கும்.

அடுத்து பொருட்கள் தயார் செய்ய பணமும், டிரைனிங்கும் தருகிறார்களே ஒழிய,  தயார் செய்யப்பட்ட பொருளை விற்க பெண்கள் மிக கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் தயார் செய்யும் பல பொருட்கள் விற்க முடியாமலே இருக்கும் நிலைதான் உள்ளது.   

வேறு விதமாய் சொல்லணும் என்றால் - எவ்வளவு கடன் தரப்பட்டது என்பதை தான் Target & வெற்றி சதவீதம் -ஆக வைத்து கொள்கிறார்கள். அவர்கள் பொருட்கள் எவ்வளவு விற்றது என்று கணக்கு பார்ப்பதே இல்லை.

இன்னொரு பிரச்சனை : பொறுப்பில் இருக்கும் பெண்கள் தலைவிகள் ஆன பின், அவர்களில் சிலரும் மாறி போய் விடுகிறார்கள். லஞ்சம் தந்தால் தான் பணம் ரிலீஸ் செய்வது போன்ற விஷயங்கள் வர துவங்கி விடுகின்றன.

********
அவர் பேசியதன் இறுதி பகுதி  நாளை வெளிவரும் !
********
நாளைய பதிவில் :

மைக்ரோ பைனான்ஸ் துறையில் என்ன நடக்கிறது?

ஒன்றும் தெரியாத ஏழைகளுக்கு மிக அதிக வட்டியில் கடன் தந்து, அவர்களை exploit   செய்கிறதா  மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்?

ஈக்குவிட்டாஸ் நிறுவனம் வெற்றி பெற்றது எப்படி?

ஆந்திராவில் கடன் வாங்கியோர் தொடர் தற்கொலைகளால் நிலை குலைந்த மைக்ரோ பைனான்ஸ் துறை

Thursday, February 21, 2013

வானவில்- போலிஸ் பிரம்படி - செயற்கை கருத்தரிப்பு வெற்றி % - ஷ்ரேயா

பார்க்க வேண்டிய புது படங்கள்

வரும் வெள்ளியன்று வெளியாகும் ஹரிதாஸ் என்ற படம் நன்றாக இருப்பதாக ப்ரீவியூ பார்த்த கேபிள் சங்கர் சொல்கிறார். இன்னொரு பக்கம் ஹிந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 அட்டகாசமாய் இருக்கு என்கிறார்கள். பிரபு தேவா டான்சில் கலக்கும் ஆடுங்க பாய்ஸ் சின்னதா டான்ஸ்ம் நன்றாக இருக்காம். இந்த 3 புது படங்களும் பார்க்க வேண்டிய பட்டியலில் இருக்கிறது !

சம்பவம் - சாலையில் பிரம்படி -1

எக்மோர் ரயில் நிலையம் எதிரே, இந்தியன் காபி பார் என்கிற கடையில், மாலை 4 மணியளவில் தேநீர் அருந்தி கொண்டிருக்க திடீரென ஒரு பெண்ணின் அலறல் சத்தம்.

சாலையில் ஒரு பெண்ணை போட்டு கட்டையால் அடித்து கொண்டிருந்தான் ஒரு ஆள். அந்த பெண் ஒவ்வொரு முறை எழும் போதும் மிக சரியாக முகத்தின் மேலேயே கட்டையால் அடித்தவாறு " ஓடிடு. இங்கே இருக்காதே" என்று சொல்லி கொண்டிருந்தான். கணவன் - மனைவி சண்டையா - வேறு பிரச்சனையா என்று புரிய வில்லை. போய் அந்த நபரை தடுக்கலாமா என எண்ணும் நேரத்தில் அவ்விடத்திலிருந்து அந்த பெண் ரத்த காயங்களுடன் ஓடி மறைந்தார்

சற்று நேரத்தில் இன்னொரு ஆண், கட்டை ஏந்திய நபருடன் வாக்கு வாதத்தில் இறங்க, சண்டை முற்றியது. இது ஆணுக்கும் - ஆணுக்குமான சரி சமமான சண்டை !

தேநீர் அருந்திய கடையில் " என்னாங்க இது; இப்படி அடிசிக்குறாங்க" என்று கேட்க " இந்த பிளாட் பாரத்தில் தான் அவங்க இருக்காங்க. எப்பவும் இவங்களுக்கு இதான் வேலை; அந்த பெண் அவனது அக்கா - அவரை போட்டு அடித்து "இனிமே வீட்டுக்கு (!!??) வராதே" என துரத்தினான். இப்படி தான் அடிச்சிக்குவாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சிரிச்சு பேசிகிட்டு இருப்பாங்க " என்றார். அவர் சொன்னதை அங்கிருந்த பலரும் ஆமோதித்தனர்.

என்ன தான் இருந்தாலும் அந்த பெண் முகத்திலேயே கட்டையால் வாங்கிய அடிகளை இப்போது நினைத்தாலும் மனதை என்னவோ செய்யுது !

சாலையில் பிரம்படி -2

அதே நாளில், அடுத்த சில மணி நேரத்தில் அண்ணா நகர் ஆர்ச் அருகே இன்னொரு பிரம்படி பார்க்க நேர்ந்தது. பேருந்தொன்று நிறுத்தத்தில் வந்து நிற்க, அங்கு தயாராய் காத்திருந்த போலிஸ் காரர் பஸ் படிகளில் நின்ற இளைஞர்களின் முட்டியை லத்தியால் பதம் பார்த்தார்.

அவசர அவசரமாய் பேருந்தின் உள்ளே காலியாய் இருந்த இடத்திற்கு ஓடினர் சில இளைஞர்கள் . இன்னும் சிலரோ உள்ளங்கையை காட்டி பள்ளியில் ஆசிரியரிடம் அடி வாங்குவது போல் வாங்கி கொண்டனர்

முன்பக்கம் அடித்து விட்டு சடாரென பின்பக்கம் சென்று அங்கு இருந்தவர்களுக்கும் மண்டகப்படியை தொடர்ந்தார் போலிஸ் !

அத்துடன் இந்த சம்பவம் முடிந்திருந்தால் இங்கே பகிர்ந்திருக்கவே மாட்டேன்.

அவர் பின்வாசலில் அடிக்கும் போது முன்பக்க படியில் நின்ற இளைஞர் குழு மீண்டும் வழக்கம் போல் படியில் வந்து நிற்க... பேருந்து நகர்ந்து செல்ல துவங்கியது !

அழகு கார்னர்

அழகு, அட்டகாசமான டான்ஸ், சுமாரான நடிப்பு எல்லாம் இருந்தும் அம்மணி அதிகம் பிரகாசிக்காததன் காரணம் தலைக்கனம் மற்றும் ஆட்டிடியூட் ப்ராப்ளம் தான் என்கிறார் திரை துறையை சார்ந்த நண்பர் !



ஹெல்த் பக்கம்- படித்ததில் பகிர்வது : Test Tube Baby & Artificial Insemination

செயற்கை கருத்தரிப்பு என்பது இயற்கையாக ஆண் - பெண்ணுக்கிடையே நிகழும் கலவியின் மூலம் அல்லாமல் மருத்துவ முயற்சிகள் மூலம் கர்ப்பமுறுதல் ஆகும். ஆய்வுக்கூட கருவூறல் ( In Vitro Fertilization ), செயற்கை முறை உயிரணு புகுத்தல் (Artificial Insemination ) ஆகியன முக்கிய முறைகள்.

ஆய்வுக்கூட கருவூறல் ( In Vitro Fertilization ): ஆணின் உயிரணு,  பெண்ணின் கருமுட்டை இரண்டையும் வெளியே எடுத்து பரிசோதனை கூடத்தில் கரு உண்டாக்கி வளர்ந்த பின் பெண்ணின் கருப்பையிலேயே வளர வைத்து விடுகிறார்கள் . இதனை சோதனை குழாய் குழந்தை (Test Tube baby ) என்பர்

Artificial Insemination-ல் ஆணின் உயிரணு மட்டும் வெளியே எடுக்கப்பட்டு பெண்ணின் கருப்பை பாதையில் செலுத்தப்படும். கருமுட்டையுடன் இணைந்து கருவை உண்டாக்கும்

Test Tube Baby முயற்சிகள் 27 % வெற்றிகரமான குழந்தையாக வெளிவருகின்றன

86 % செயற்கை முறை உயிரணு செலுத்தல் (Artificial Insemination) வெற்றி பெறுகின்றன

போஸ்டர் கார்னர்




அய்யாசாமி கார்னர்

அலுவல் மற்றும் ஸ்டடி சர்க்கிள் வேலைகள் ஏகமாய் இருப்பதால், அய்யாசாமியின் இணைய சேவை, தினம் ஒரு பதிவு போடுவதோடு முடிந்து விடுகிறது. Draft -ல் இருக்கும் பதிவுகளை வச்சு தான் காலத்தை ஒட்டுகிறாரே ஒழிய புதுசாய் கிறுக்குவது பெரிதும் குறைந்து விட்டதாம்.

கம்பனி சட்டம் இவ்வருடம் மாறுவதால் இவரையும் நம்ம்ம்ம்பி பல இடங்களில் அது பற்றி பேச அழைக்கிறார்கள் !! ஆக............. அய்யா (சாமி) ரொம்ப பிஸ்ஸி !

நல்ல நாளிலேயே நாலு மணி நேரம் போனில் பேசுவார். அது இப்போது எட்டு மணி நேரம் ஆகிடுச்சு. தூக்கத்திலும் இது சம்பந்தமாகவே பிதற்றுகிறார்.

ஒரு நாள், இரவு 10 மணிக்கு பின், நீண்ட நேரம் இது போன்ற தொலை பேசி பேச்சு சென்று முடிய, சற்று பயந்தவாறே மனைவியை பார்த்தார்.

அவரது மனதை படித்தது போல் மனைவி சொன்னார் " என்ன திட்டுவேனான்னு பாக்குறீங்களா ?"

"........"

" நீங்க எவ்ளோ பெரிய ஆளா வேண்ணா இருக்கலாம் ; எங்கேயும்  போயி கலக்கலாம். ஆனா வீட்டுக்கு வந்தா நான் தானே உங்களை டாமினேட் பண்றேன். நீங்க போனில் பேசுறப்பல்லாம் அதை நினைச்சு தான் சந்தோஷ பட்டுக்குறேன் " என்று சொல்ல " அப்பாடா ! எப்படியோ நம்மை ப்ரீயா விட்டா சரி " என்றவாறு "கொர்..கொர்" ஆனார் அய்யாசாமி.

Wednesday, February 20, 2013

“விஷயரூபம்”

விஷயரூபம்” - ராஜ சுந்தரராஜன்

-------------------------------------------------------------------

வளை நான் எவ்வளவு காதலித்தேன் தெரியுமா: அவளது வேலைகளையும் சேர்த்து நானே செய்ததோடு அவளுக்கு ஒரு ஆபத்து என்றானபோது என் உயிரையும் துச்சமாக்கி அவளைப் பாதுகாத்தேன்.” இது செய்வினை வாக்கியம்.

“அவள் என்னால் எவ்வளவு காதலிக்கப்பட்டாள் தெரியுமா: அவளது வேலைகளும் சேர்ந்து என்னால் செய்யப்பட்டதோடு அவளுக்கு ஒரு ஆபத்து என்றானபோது என்னால் என் உயிரும் துச்சமாக்கப்பட்டு அவள் பாதுகாக்கப்பட்டாள்.” இது செயப்பாட்டுவினை வாக்கியம்.

 

அவள் என்பது, "விஸ்வரூபம்" படத்தில், ஆச்சாரமற்ற ஆனால் தன்முனைப்புள்ள தாராளமனமுள்ள அறிவாளியான நிரூபமா எனும்பெயர்ப் பார்ப்பனத்தியா, அல்லது அமெரிக்காவா, அல்லது இஸ்லாமா?

பக்தி மார்க்கத்தில், குரங்குக்குட்டி மார்க்கம் என்றும் பூனைக்குட்டி மார்க்கம் என்றும் சொல்வதுண்டு. குரங்குக்குட்டி தன்முயற்சியால் தாய்வயிற்றில் தொற்றிக்கொண்டு இடம்விட்டு இடம்போகும். பூனைக்குட்டி தன்னை ஒப்படைக்கும்; தாயே தன் வாயால் கவ்வி எடுத்து இடம்மாற்றும். பூனைக்குட்டி மார்க்கத்து எழுத்தாளர்கள் கூட தன் எழுத்தாக்கம் முழுவதையும் செயப்பாட்டுவினை வாக்கியங்களால் எழுதமாட்டார்கள். செய்வினை வாக்கியத்தில் ஒரு முனைப்பு (motif) இருக்கும். செயப்பாட்டுவினை வாக்கியத்தில் அது இருக்காது; அதனால் சலிப்பூட்டும்.

படம் தொடங்கியதில் தொடங்கி, விஸ்வா என்ற விஷாம், ஃபரூக் & கூட்டாளிகளைச் சாக அடித்துவிட்டு (வெள்ளைக் காரில்) தப்பிவிட, (கருப்புக் காரில்) ஓமர் அவ்விடம் வந்து சேர்வதோடு, இந்திய - குறிப்பாகத் தமிழ் - ரசனைக்குரிய சினிமா முடிந்து விடுகிறது. அப்புறம் கமல் தனக்கு உலக விஷயங்கள் எம்மட்டுத் தெரியும் என்று கட்டுரைக்கிறார்.

சினிமா, கட்டுரைக்கக் கூடாதா? கோதார் (Godard) ஆக்கிய சினிமாக்கள்? கட்டுரைத்தல் உண்டுதான், ஆனால் நான், இந்திய - குறிப்பாகத் தமிழ் - ரசனைக்குரிய சினிமா என்கிறேன். அது என்ன புண்ணாக்கு ரசனை? எண்ணெய் ரசனையாக அது எப்போது சாரப்படுவது? 100 கோடி, வீடு மனை, நாட்டைவிட்டுப் போவது பற்றி எல்லாம் பேச வேண்டியுள்ள நிலைமை எப்போது மாறுவது?

கமலின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டின் வரவேற்பறையில், கருப்புவெள்ளையில், தாடிவைத்த இளங்கமலின் ஒரு புகைப்படம் உண்டு (இப்போதும் உண்டா தெரியவில்லை). அப் படத்தில் அவர் முகத்தில் அறிவுஜீவிக் களை உண்டு. 1980 வாக்கில் துத்துக்குடியில் நாங்கள் ஒரு நான்கு பேர் சேர்ந்து “ரீங்காரம்” என்று ஒரு இலக்கியப் பத்திரிக்கை நடத்தினோம். கவிஞர் தேவதேவன் ஒரு ட்ரெடில் எந்திரம் வைத்திருந்தார். அதில்தான் அச்சடித்தோம். பிறகு அப் பத்திரிக்கைக்கு “Kleen” டாய்லெட் பவுடர்க் கம்பெனி முதலாளி பொருளுதவி செய்தார். அவர் கமலுக்கு நண்பர் போலும். அவர் பெற்றுத் தந்து, கமல் எழுதிய ஒரு சிறுகதை “ரீங்காரம்” இரண்டாவதோ மூன்றாவதோ இதழில் அச்சேறியது.

அப்படி, கமல் ஒரு படைப்புக் கலை ஆர்வமுள்ளவராகவே இருந்துவந்திருக்கிறார். தான் எடுக்கும் படங்களிலும் அப்படி வெளிப்படவே அவர் தொடர்ந்து முயல்கிறார். இப் படத்தில் ஆனால், மீண்டும் தான் ஒரு நிகழ்த்துக்கலை விற்பன்னர் என்றே நிரூபித்து நிற்கிறார். படைப்புக்கலை முயற்சிகள் செயப்பாட்டுவினை வாக்கியங்கள் ஆகிவிட்டன.

ஆமா, ஜிகாதிகள் குரங்குக்குட்டிகளா? பூனைக்குட்டிகளா? கமல்?

எல்லா மதமும் போல நாத்திகமும் ஒரு மதமே (மதம் = கொள்கை). சமயம் என்பது வேறு. மதவாதிகளைப் புண்படுத்தாமல் நாத்திகம் பேச முடியாது. நாத்திகர்களைப் புண்படுத்தலாமா? நாத்திகர்கள் திருநங்கைகள் போலவா? கலைஞர்கள்?

விஷாம் என்னும் குணவார்ப்போ சுத்த ஆத்திகன், ஆனால் “யாருடைய கடவுள் காப்பாத்துவார்?” என்பது போன்ற நக்கல் அவர் வாயில் இருந்து வருவதேன்? அந்தக் கேரக்டரைத் தீவிர ஆஸ்திகனாகவே காட்டி நாத்திகம் உணர்த்த முடியாதா? கதாநாயகியோடு கடைசிக் கட்டத்திலாவது கட்டிப்பிடித்து உருளாவிட்டால், பொட்டை என்று பேர்வந்துவிடுமோ? (அஜீத் கூட தனது ஒரு படத்தில் அப்படித்தான்!)

||இசைப்புயல் இல்லை! உலகஅழகி இல்லை! பன்ச்வசனம் இல்லை! எனினும் வரலாறு காணாத வெற்றி!

“விஸ்வரூபம்” வசூல் 20 நாட்களில் 200 கோடியில்! ஹாலிவுட்டெல்லாம் தெருக்கோடியில்!!

தமீம், ஜாவித், அல்தாப், மஸ்தான் ... (இப்படி ஒரு இருபது அரபிப் பெயர்கள்)

மற்றும் கலைஞானி கமல்ஹாஸன் பக்தர்கள் (சென்னை)||

இந்த வாக்கியங்களுடன், சென்னை வடபழனியில், ஒரு சுவரொட்டி கண்டேன்: அல்லாஹ் கருணையுள்ளவன்! 

                                                                                                     -ராஜ சுந்தரராஜன்
*****
டிஸ்கி:வேலைப்பளு அதிகம். வானவில் நாளை வரும் !

Tuesday, February 19, 2013

Baywatch : கன்யாகுமரி தீம் பார்க் - ஒரு பார்வை


ன்யாகுமரி சுற்றுப்பயணத்தொடரில் இம்முறை வட்டகோட்டை மற்றும் பேவாட்ச் எனும் Entertainment பார்க் இரண்டையும் பார்க்கலாம்

வட்டக்கோட்டை

மிக அழகான இந்த இடம் நாகர்கோவில்/ கன்யாகுமரி பக்கம் நீங்கள் செல்லும்போது அவசியம் விசிட் அடிக்க வேண்டிய இடங்களுள் ஒன்று. நாகர்கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்திலும், கன்யாகுமரியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.



 பெயருக்கேற்ற படி இது ஒரு கோட்டை. ஆனால் வட்ட வடிவம் போல் நமக்கு தெரியலை. சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் தான் தெரியுது. வெளி பக்கம் முழுதும் கருங்கல்லால் செய்த உயரமான மதில் சுவர். உள்ளே நுழைந்ததும் அகழி போல ஒரு நீர் தேக்கம்.




இது ராஜாக்கள் இருந்த கோட்டை அல்ல. கன்யாகுமரி மற்றும் நாகர்கோவில் கடற்கரை அருகே இருந்தமையால், கடல் வழியே எதிரி படைகள் வர வாய்ப்பு உண்டு . அதனை கண்காணிக்க கட்டிய கோட்டையே இது. இங்கு வீரர்கள் தான் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக கன்யாகுமரியில் முத்துக் குளிக்கும் வழக்கம் இருந்தமையால் இங்குள்ள முத்துக்களை அபகரிக்க கள்ளர் கூட்டம் வரும் அபாயம் இருந்திருக்கிறது. எனவே இந்த ஏற்பாடு.

டச்சு காலத்தில் இது செங்கோட்டையாக இருந்ததாகவும், தளபதி டிலனாய் என்பவர் தான் இதனை கற்கோட்டையாக மாற்றினார் என்றும் அங்குள்ள குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வீரர்களுக்கு கண்காணிப்பறை, ஓய்வறை ,ஆயுதச்சாலை என பல இடங்கள் இங்கு இருந்திருக்கின்றன. இன்று அவை எதுவும் இல்லை. ஒரு காட்சி பொருளாக மட்டுமே உள்ளது

வட்டக்கோட்டை - 2 அடுக்காக உள்ளது. கீழ் தளம். நீர் நிலை (குளம்) ஒன்றும் அழகான் புல்வெளியும் உள்ளது. இங்கு நாரைகள் மிக ஜாலியாக உலவுகின்றன.

முதல் மாடி போல இருக்கும் மேல் தளத்திலும் அற்புதமான புல்வெளி உள்ளது. இங்கிருந்து பார்த்தால் தான் இந்த இடத்தின் அழகு முழுமையாக தெரிகிறது. சுற்றிலும் கடல். ஒரு பக்கம் தென்னை மரங்கள் வரிசையாக அழகுற காட்சி தர, அதற்கு நடுவே மிக அதிக புல்வெளியுடன் இருக்கிறது இந்த கோட்டை. காற்று வேறு இனிமையாக நம்மை தழுவி போகிறது. வீடியோவை பாருங்கள்



மிக ரம்மியமான சூழல். (அதற்கேற்ப ஆங்காங்கு காதலர் கூட்டம் வேறு)
கூட்டம் அதிகமில்லை ( நாங்கள் பல இடங்கள் பார்க்கணும் என்பதால் காலை 9 மணிக்கே அங்கு சென்று விட்டோம்)


அவசியம் ஓரிரு மணி நேரம் அமர்ந்து பொறுமையாய் ரசிக்க வேண்டிய இடங்களுள் ஒன்று வட்ட கோட்டை !

**************
பே வாட்ச் கன்யாகுமரி ஒரு பார்வை 

பே வாட்ச் உள்ளே போகும் முன் ஒரு மெழுகு மியூசியம் உள்ளது. இதை காண ரூ. 50 கட்டணம். பே வாட்ச் சுற்றி பார்க்க அனைத்து விளையாட்டுகள் விளையாட 300 ரூ கட்டணம்.

முதலில் மெழுகு மியூசியம் பார்ப்போம்.

நுழைவு வாயிலின் வலது புறம் சில சிலைகளும், இடது புறம் சில சிலைகளும் உள்ளது. இரண்டின் நுழைவு வாயிலும் தனித்தனி.

மியூசியத்தில் பெரும்பாலும் மோகன்லால், ஜேசுதாஸ் போன்ற மலையாள சினிமா உலகத்தினர் அல்லது கேரள அரசியல் வாதிகள் சிலைகள் தான் அதிகம் உள்ளது.

இவை தவிர ஜாக்கி சான் சிலை சண்டை போடும் பாவனையில் உள்ளது.



தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சிலையும், ரஜினி சிலையும் இருந்தது. மற்றபடி தமிழகத்தில் இருந்த போதும் தமிழக சினிமா மற்றும் பிற பிரபலங்கள் சிலை குறைவே இதன் காரணம் கேட்க இந்த் மியூசியம் முதலில் கேரளாவில் இருந்ததாகவும், அதனை அப்படியே இங்கு ஷிப்ட் செய்துள்ளதாகவும் கூறினர்.




இந்த சிலைகளை தினம் காலை நேரம் துடைப்பார்களாம். மாதம் ஒரு முறை "குளிப்பாட்டு"வார்களாம். இங்கு பணி புரியும் நண்பர் சொன்னது.



நாங்கள் இதே போன்ற ஒரு மெழுகு சிலை மியூசியம்  ட்டி சென்ற போது பார்த்திருக்கிறோம். அங்கு இதை விட இன்னும் நிறைய மெழுகு சிலைகள் இருந்தன. இடமும் மிக பெரியது; சிலைகளும் அதிகம். மனம் ஒரு புறம் அந்த மியூசியத்துடன் ஒப்பிட்டு " அந்த அளவு இல்லை " என சொல்லி கொண்டிருந்தது. நீங்கள் எந்த மெழுகு மியூசியமும் பார்க்கா விடில் இது நிச்சயம் attractive -ஆக இருக்கும். மேலும் இங்கு இந்த மெழுகு சிலை மியூசியம் மட்டும் தனியாக இல்லையே ! பே வாட்ச் என்கிற Entertainment பார்க்குடன், அதன் ஒரு சிறு பகுதியாக தானே உள்ளது.

இங்கு எடுத்த 2 வீடியோ இதோ பாருங்கள்:

Bay watch Wax Museum Videos:







*********
மெழுகு மியூசியத்துக்கு அடுத்து ...பே வாட்ச் Amusement பார்க்

நாங்கள் பெரும்பாலானவற்றில் விளையாட வில்லை. நேரம் இல்லை என்பதால் ஒரு ரவுண்டு சுற்றி பார்த்து விட்டு வந்து விட்டோம்.

விளையாட்டுகளில் முக்கியமான சில :

வாட்டர் கேம்ஸ்: அழகான சுவிம்மிங் பூல் உள்ளது. குழந்தைகளுக்கு சற்று ஆழம் குறைவாகவும், பெரியவர்களுக்கு சற்று அதிகமாகவும் இருக்கும் படி பார்த்து கொண்டுள்ளனர்

பவுண்டேன் போல கொட்டும் நீர் ஊற்றுகள் உள்ளன (சென்னையில் உள்ள கிஷ்கிந்தா உள்ளிட்டவற்றில் நீங்கள் இத்தகைய வாட்டர் கேம்ஸ் என்ஜாய் செய்திருக்கலாம்). இத்தகைய தண்ணீர் உங்களுக்கு ஒத்து கொள்ளும் என்றால் நிச்சயம் இந்த வாட்டர் கேம்ஸ் செம ஜாலியாக இருக்கும்


நிறைய ராட்டினம் டைப் விளையாட்டுகள் உள்ளன. எங்களுக்கு அவை சற்று அலர்ஜி என்பதால் நாங்கள் செல்ல வில்லை. இங்கு எந்த விளையாட்டுக்கும் லிமிட் இல்லை என்பது முக்கியமான விஷயம். உங்களுக்கு பிடித்தால் நீங்கள் இரண்டு மூன்று முறை கூட விளையாடலாம்.

இவ்விடியோவில் பேவாட்ச் Amusement பார்க் முழுமையாய் காணலாம் :



குட்டி பசங்கள் என்ஜாய் செய்கிற மாதிரி ஒரு டாய் டிரையின் இருக்கிறது. அதற்கு பே வாட்ச் ரயில்வே நிலையம் என பேர் வைத்து குட்டியாக ஒரு ரவுண்ட் அடிக்கிறார்கள்.



ஒரு இருட்டான இடத்தில் உள்ளே நுழைந்து வெளியே வர, அதற்குள் எலும்பு கூடு போன்றவை பயமுறுத்தும் அல்லவா? அந்த வகை விளையாட்டு ஒன்று உள்ளது. சென்று வரும்போது எங்கள் பெண் நன்கு என்ஜாய் செய்தாள்

பொதுவாக சென்னையில் இருக்கும் இத்தகைய பார்க்குகளில் கூட்டம் ஏகமாய் இருக்கும். இங்கு அதிக கூட்டம் இருப்பதில்லை.

கன்யாகுமரியில் 2-3 நாள் நீங்கள் தங்கினால், நேரமிருந்தால் : அரை நாள் - பே வாட்சில் ஜாலியாக சுற்றி வரலாம்.

Monday, February 18, 2013

தொல்லை காட்சி- ஆடலாம் பாய்ஸ்- தேவயானி - சன் சிங்கர்

ஆடலாம் பாயிஸ் சின்னதா டான்ஸ்


ஆடலாம் பாயிஸ் சின்னதா டான்ஸ் - இது ஒரு படத்தோட பெயர். சுருக்கமா முதல் எழுத்துக்களை வைத்து ABCD !. பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க டான்ஸ் படமாம். டான்ஸ் - 3 D - யில் பார்க்கலாம். புதுமுக இயக்குனர் இயக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான UTV தயாரிக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஜெயா டிவி யில் காட்டினர். படம் ஓட வைக்க டான்ஸ் 3- D யில் பாருங்க என்றெல்லாம் வித்யாசம் காட்ட முயல்கிறார்கள் . கதை ஒழுங்கா இருந்தாலே படம் ஓடிடும் என்பதை சில நேரம் மறந்து விடுகிறார்கள்.

சன் சிங்கர்

கொஞ்சம் கூட கவலைப்படாமல் விஜய் டிவி நிகழ்சிகளை அப்படியே நகல் எடுப்பதில் சன் டிவி யை மிஞ்ச ஆளே கிடையாது. சூப்பர் சிங்கர் பாணியில் டிட்டோ வாக ஒரு நிகழ்ச்சி - சன் சிங்கர் என்ற பெயரில் ஞாயிறு காலை ஒளிபரப்பாகிறது. இதற்கு ஏகப்பட்ட முறை குறிப்பிட்ட குழந்தையை வாரியணைத்து அனைவரும் பாராட்டுவதாக ப்ரோமோ போட்டு தள்ளினர்

அந்த குழந்தை நன்கு பாடியிருக்கலாம் ஆனால் நிகழ்ச்சியை முழுசா பார்க்க முடியலை. கொடுமையா இருந்தது ! புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனுராதா ஸ்ரீராம் எப்படி பாடினாலும் குறையே சொல்லாமல் மார்க் வாரி வழங்குகிறார்கள்.

ஈ அடிச்சான் காப்பி என்று கேள்விபட்டுள்ளீர்களா? தெரியவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி பாருங்கள். விஜய் டிவி வாய்ஸ் டிரைனர் மாதிரி குழந்தைகளுக்கான டிரைனர் என்று சொல்லி, கங்கை அமரனுக்கு அனந்த் வைத்தியநாதன் போலவே வட நாட்டு உடையை மாட்டி அவரை " மாஸ்டர் மாஸ்டர்" என்பது கொடுமையிலும் கொடுமை !

விஜய் டிவியை காப்பி அடிப்பவர்கள் நிகழ்ச்சியின் தரம் அதில் பாதியாவது இருக்கும்படி பார்த்து கொள்ளலாம் !

டிவியில் பார்த்த படம் - உள்ளத்தை அள்ளி தா

Alltime Favourite காமெடி படங்களில் ஒன்று உள்ளத்தை அள்ளி தா. கவுண்டர் கலக்கி இருப்பார். எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த படம் பார்ப்பேன்.

பார்க்கும் ஒவ்வொரு முறையும் கொசுவர்த்தி சுற்ற ஆரம்பித்து விடும். ACS என்கிற கடினமான கோர்ஸ் நான் பாஸ் செய்த போது வந்த படம். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். அந்த கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்ற படி இருந்தது உள்ளத்தை அள்ளி தா.

ACS பாஸ் செய்ததுக்கு ஒவ்வொரு நண்பர் வட்டத்துக்கும் அலுக்காமல் ட்ரீட் தந்து கொண்டிருந்தேன். அப்படி நண்பர் வட்டத்துடன் பிரார்த்தனா டிரைவ் இன் சென்று இப்படம் பார்த்து விட்டு வந்தோம்

ரம்பாவின் அழகு, கவுண்டர் மற்றும் கார்த்திக்கின் கெமிஸ்ட்ரி, சிற்பியின் பாட்டுகள் என சூப்பர் ஹிட் ஆன இப்படம் இன்றைக்கும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. " பாத்து போட்டு கொடுங்க; வேன் எல்லாம் வச்சி கடத்திருக்கோம் " போன்ற டயலாக்குகள் அமரத்துவம் பெற்றவை !

ஜீ தமிழில் ஒரு தாயின் சபதம்


டி. ராஜேந்தர் சினிமா தலைப்பான " ஒரு தாயின் சபதம் " என்கிற தலைப்பில் ஜீ தமிழில் உமா பத்மநாபன் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். கணவரை இழந்து தங்கள் குழந்தைகளை தனி மனுஷியாக வளர்த்த அம்மாக்கள் பற்றிய தொடர் இது. சனிக்கிழமை மாலை 8:30 க்கு ஒளிபரப்பாகிறது. அம்மாவை நேசிக்காதோர் யாருமே இருக்க முடியாது. அதிலும் கணவன் இன்றி தானே உழைத்து, குழந்தைகளையும் வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வரும் தாய்மார்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

ஆனால் இந்த நிகழ்ச்சி மிக பெரும் அழுகாச்சி காவியமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். பேசும் மகன் / மகள் அழ, அதை கேட்டு அம்மா அழ,,,, பார்வையாளர் எல்லாம் அழுகிறார்கள். ஒரே ஒரு நாள் பத்து நிமிஷம் பார்த்ததில் டென்ஷன் ஆகி போன என் பெண் " இனிமே இந்த சான்ல பக்கம் வந்தே தொலைச்சுடுவேன்" என்று சொல்லியபடி சானல் மாற்றி விட்டாள் !

ஆட்டோ கிராப்பில் தேவயானி

சுஹாசினி தொகுத்து வழங்கும் ஆட்டோ கிராப்பில் தேவயானி உரையாடினார். வழக்கம் போல் சொல்லும் " காதல் கோட்டை தான் எனக்கு திருப்பு முனை, etc " ( 15 வருஷமா இதையே தான் கேட்டுகிட்டு இருக்கோம் மேடம் !)

40 வயதாவது இருக்கும் இவரை பார்க்க 30 க்கும் குறைவாய் தான் தோன்றுகிறது. வெயிட் போடாமல் இருப்பதன் விளைவு !

" ராஜ் குமாரனை கல்யாணம் செய்து கொள்ள குடுத்து வைத்திருக்க வேண்டும்; அவருக்கென்றே பிறந்தவள் நான் " என்றார்.

இவர்கள் இருவரும் இணைந்து மிரட்டும் புது பட டிரைலர் நினைவில் வந்து வயிற்றை  கலக்கியது.

பிளாஷ்பேக் - தூர்தர்ஷனில் பிராந்திய மொழி திரைப்படங்கள்

டிவி வந்த புதிதில் வாரம் இரண்டே படம் பார்க்க தான் வாய்ப்புண்டு. ஒன்று - ஞாயிறு மாலை வரும் தமிழ் திரைப்படம். மற்றொன்று அதே ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகும் பிராந்திய மொழி திரைப்படம். நல்ல விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் தேசிய விருது பெற்ற அல்லது பிற மொழியின் சிறப்பான படங்கள் இதில் திரையிடுவார்கள். சப் டைட்டிலுடன் தான் வந்த ஞாபகம். சத்யஜித்ரே, கே. விஸ்வநாத் உள்ளிட்ட புகழ் பெற்ற இயக்குனர்களின் படங்களை இதில் பார்த்து மகிழ்ந்துள்ளோம். வெகு அரிதாய் சுழற்சி முறையில் ஒரு தமிழ் படமும் கூட இந்த ஸ்லாட்டில் வரக்கூடும். அன்றைக்கு நமக்கு மகிழ்ச்சி சொல்லி மாளாது. அடடா " இன்னிக்கு ரெண்டு சினிமா பார்க்கலாம்; மதியம் ஒரு படம்; இரவு ஒரு படம் என குதிப்போம். ம்ம் அது ஒரு காலம் !

அம்மா நடத்தி வைத்த திருமணங்கள்

தனது 65வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா 65 பேருக்கு திருமணம் நடத்தி வைத்ததை விரிவாக ஜெயா டிவியில் காட்டி மகிழ்ந்தார்கள். அம்மா " மணமக்கள் மாலையை எடுங்கள். கழுத்தில் போடுங்கள். இப்போ தாலி எடுங்கள்.. ம்ம் கட்டுங்கள் " என்றதும் மணமகன்கள் " மாண்புமிகு" மாதிரி அடிபணிந்தனர்.

அம்மா ஓரிரு குட்டி கதைகளை பார்த்து பார்த்து படித்தார். ஆவ்வ்வ் என நமக்கு கொட்டாவி வர, நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த அமைச்சர் பெருமக்கள் சட்டசபை போல, ஒவ்வொரு நிமிடமும் கை தட்டி அம்மாவை மகிழ்வித்தனர். பார்க்க செம காமெடியா இருந்தது. டிவி யில் காட்டும் சட்ட சபை நிகழ்சிகள் கூட இந்த காமெடிக்காக சில நிமிடங்கள் பார்த்து மனம் விட்டு சிரிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்

***
அண்மை பதிவு:

Sunday, February 17, 2013

ஆதிபகவன்- பெரிய சைசில் ஏமாற்றிய யுவன்- பாடல் விமர்சனம்

திபகவன் ....அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம். சில பல ஆண்டுகளாக ப்ரோடக்ஷனில் இருந்து வருகிற 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்திலேயே மிக ஊறி போனதால் ஜெயம் ரவிக்கு சென்ற ஆண்டு முழுக்க ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை.

இதற்கிடையில் இப்படம் குறித்து சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. ஜெயம் ரவிக்கும் -இயக்குநர்க்கும் முட்டி கொண்டது என ஒரு நியூஸ்; பின் ஆதி பகவன் என தலைப்பு வைத்து இந்து கடவுள்களை அவமதிக்கிறார் என்று விஸ்வரூப பிரச்சனை சமயத்தில் இன்னொரு ரகளை.. மிக சமீபத்தில் படத்திற்கு "A  " சான்றிதழ் கிடைக்க, அதனால் வரிச்சலுகை கிடைக்காது என்பதோடு, டிவிக்களில் காட்டுவதும் பிரச்சனை. நிற்க படத்தின் தயாரிப்பாளர் ஜெ. அன்பழகன்.  - தி.மு.க வின் தற்போதைய MLA !

ஏழெட்டு மாதம் முன்பு வெளிநாட்டில் வைத்து ரிலீஸ் செய்த பாடல்கள் எப்படி? வாங்க பார்க்கலாம்


காற்றிலே மிதந்தேனே

பாடியவர்கள்: உதித் நாராயண் & ஸ்வேதா பண்டிட்
பாடல்: அறிவுமதி

"பிரியமான பெண்ணை ரசிக்கலாம்- தப்பில்லை"; என்ற வரிகளை "பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்; தப்பில்லே " என்று பாடிய உதித் நாராயண் தான் இப்பாட்டையும் பாடியிருக்கிறார்.

கிளாசிக்கல் போல துவங்கும்போது அதிகம் ஈர்ப்பில்லா விடினும், சரணத்தில் பாட்டை முழுதாய் ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆண் -பெண் இரு குரலும் இணைந்து ஒலித்தாலும் சோகப்பாட்டு போல ஒரு வலி இந்த பாட்டில் உணர முடிகிறது. இந்த ஆல்பத்தில் ரசிக்க முடிகிற சில பாடல்களுல் ஒன்று.

ஒரு துளி விஷமாய்

பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல், ஷரிப் சப்ரி
பாடல்: ஸ்நேஹன்

தலைவி ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் பெரும்பாலும் சோரம் போவதில்லை. பாட்டு படிப்பது என்பார்களே... பாடலின் பல்லவி அதனை தான் நினைவு படுத்துது ! Literal -ஆக, பாட்டை பேசுகிற பாணியில் படிக்கிறது ஆண்குரல்.

காற்றிலே மிதந்தேனே பாடல் போலவே - டூயட் ஆக இருந்தாலும் கோபம் அல்லது வருத்தத்தில் பாடுகிற ஒரு பாட்டாக தான் இதுவும் தெரிகிறது.

எந்த வகை பாட்டு என்றே வகைப்படுத்த முடியாத இந்த பாட்டு ஷ்ரேயா கோஷல் பாடி ஜெயிக்காத வெகு சில பாடல்களில் ஒன்றாக சேரக்கூடும்.

*******
இஸ்ஸலாமே

பாடியவர்கள்: மானசி, ராகுல் நம்பியார்
பாடல்: சிநேகன்

க்ளப் சாங் போல இருக்கிறது . படத்தின் ஹீரோ ஒரு கேங்க்ஸ்டர் (அல்லது அப்படி நடிப்பவர்) என்பதால் கிளப்பில் பாடுகிற மாதிரி வருகிறது போலும். பாட்டில் ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை கூட கண்டுபிடிக்க முடியாத படி இருப்பது தான் பாட்டின் சிறப்பம்சமே. பாடல் துவங்கும் முதல் வார்த்தையே புரியாமல் இணையத்தில் தேடி பார்த்து தான் தெரிந்து கொண்டேன். "ஊ ஊ ஊ ஊ " என கோரஸ் பாடும் இடமும் அந்த இடத்து இசையும் மட்டும் தான் கேட்கிற மாதிரி இருக்கு. மற்றபடி முழு சொதப்பல் பாட்டு.

*******
அகடம் பகடம்

பாடியவர்: மொஹிட் சவுஹான்
பாடல்: மனோஜ்

முழுக்க முழுக்க ஒரு ஹிந்தி பாட்டு. வேகமாக போகும் பாட்டு- கதையை ஒட்டி- திரைக்கதையை நகர்த்தி செல்ல உதவ கூடும். ஹிந்தி பாடல் புரிந்தவர்களால் மட்டுமே முழுதும் ரசிக்க முடியும். இப்போதைக்கு சில இடங்களில் இசை மட்டுமே ஈர்க்கிறது. மற்றபடி ஒரு தமிழ் பட ஆல்பத்தில் எதற்கு முழு ஹிந்தி பாட்டு என்ற கேள்வி தான் வருகிறது.


*******
பகவான் - ராப் சாங்

பாடியவர்கள்: சத்யன் , The Prophecy.

போன பாட்டு முழுக்க ஹிந்தி வரிகளை கொண்டது என்றால் இப்பாட்டு முழுக்க ஆங்கில வரிகளை கொண்ட ராப் பாடல். ரொம்ப உற்று கேட்டால் ஹீரோவின் அருமை பெருமைகளை சொல்கிற பாட்டு என்று புரிந்து கொள்ள முடிகிறது

"பகவான் பகவான் " என வருகிற இடமும் அப்போது ஒலிக்கும் இசையும் மட்டுமே ரசிக்கிற விதத்தில் உள்ளது.
*******
யாவும் பொய் தானா

பாடியவர்: மதுஸ்ரீ
பாடல்: சிநேகன்

பில்லா - 2 படத்தில் வரும் பெண் குரல் பாடலான " இதயம்..இதயம் " பாடலை ஏனோ நினைவு படுத்துகிறது இப்பாட்டு.

பொதுவாய் காதல் தான் பொய் என்று பாடுவார்கள். இப்பாட்டிலோ " யாவும் பொய் தானா.. காதல் தவிர? " என்று கேட்கிறார் நாயகி. கேட்க கேட்க ஓரளவு பிடிக்கிறது பாட்டு
***
மொத்தத்தில்:

ஓரிரு பாட்டை தவிர மற்றவை ஈர்க்கவே இல்லை ! யுவன் -அமீர் காம்பினேஷன் பெரும்பாலும் ஜெயிக்கும். இம்முறை கோட்டை விட்டு விட்டனர் என்று தான் வருத்ததோடு சொல்ல வேண்டியுள்ளது :((

Thursday, February 14, 2013

கன்யாகுமரி விவேகானந்தர் பாறை - சில இனிய அனுபவங்கள்

ன்யாகுமரி பயணக்கட்டுரையில் இம்முறை விவேகானந்தர் பாறை  மற்றும் காந்தி நினைவு மண்டபம் ஆகிய 2 பகுதிகளை காணலாம்

விவேகானந்தர் பாறை

முதன்முறை கன்யாகுமரி வருபவர்கள் அவசியம் செல்கிற ஒரு இடம் விவேகானந்தர் பாறை .


சீசன் நேரத்தில் டிக்கெட் வாங்க பின் படகில் ஏற என ஒவ்வொன்றுக்கும் செம கியூ. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணிக்கும் மேல் காத்திருக்க வேண்டும்.

படகருகே வந்து ஏறும் முன் லைப் ஜாக்கெட் என்கிற பெயரில் ஒரு வஸ்த்து தருகிறார்கள். அது ஆபத்து நேரத்தில் நிஜமாகவே உயிரை காக்குமா என்றால் கேள்விக்குறி தான். காரணம் ரொம்ப சிம்பிள்: தினம் ஏராள மக்கள் அதை பயன்படுத்துகின்றனர். மிக மோசமான விதத்தில் பயன்படுத்துவதால் பட்டன், போன்றவை பிய்ந்து, சும்மா பேருக்கு தான் மேலே போர்த்தி கொண்டு இருக்கிற மாதிரி ஆகிவிடுகிறது

படகில் ஏற காத்திருக்கிறார்கள் ....

அலைகள் மேலே ஏறி ஏறி படகு பயணிக்கும் போது ஜாலியாகி விடுகிறார்கள் மக்கள். தாயின் புடவையில் போட்டு மேலும் கீழுமாய் குழந்தையை ஆட்டுவது போல் ஆடுகிறோம். ஜன்னல் ஓரம் அமர்வோர் மீது அலை வந்து அடிப்பது அடிஷனல் மகிழ்ச்சி.

இந்த வீடியோவில் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு சவாரியை காணலாம்


கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இந்த பாறைக்கு விவேகானந்தர் நீச்சல் அடித்து வந்து அமர்ந்து தியானம் செய்துள்ளார் அதனால் தான் இந்த இடம் புகழ்பெற்றது.

விவேகானதர் சிலைக்கு நேர் எதிரே கன்யாகுமரி அம்மன் சிலை உள்ளது. பீச்சில் நீந்தி வர விவேகானந்தருக்கு கன்யாகுமரி அம்மன் தான் பலம் தந்தார் என்பது அவரின் நம்பிக்கையாம்.
MGR மாதிரி எல்லாருடனும் போட்டோ

விவேகானந்தர் பாறை அருகே கணவன் - மனைவியாக ஒரு வெளிநாட்டு தம்பதி வந்திருந்தனர்.  நம் மக்களிடம் மிக அன்புடன் பேசிகொண்டிருக்க, பலரும் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர் பொறுமையாய் அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டனர் அவர்கள்.

விவேகானந்தரின் சிலை இருக்கும் அதே அறையின் நுழைவில் ராமகிருஷ்ணர் மற்றும் அவரது துணைவியார் சாரதா தேவி அம்மையார் சிலையும் உள்ளது. சாரதா அம்மையார் வெள்ளை புடவையும், Free hair -மாய் இருக்கிறார்
"இங்கு உட்காராதீர்கள்; உட்காராதீர்கள்; " என்று ஊழியர்கள் சொல்லி, சொல்லி அனைவரையும் சில நிமிடங்களில் அங்கிருந்து அனுப்பும் வேலையில் மும்முரமாய் உள்ளனர்.

டிசம்பர் 26- 2004 - சுனாமி வந்த போது இந்த விவேகானந்தர் சிலைக்கு வெளி பிரகாரத்தில் இருந்தோரை அலை வந்து இழுத்து சென்று ஏராளமானோர் இறந்து விட்டனராம். உள்ளே சிலைக்கு அருகே இருந்தோர் மட்டும் தான் தப்பினராம் .

கன்யாகுமரி அம்மன் (பார்வதி) சிவனை மணக்க ஒற்றை காலில் இங்கு தவமிருந்தார் என்று சொல்கிறார்கள். ஒற்றை காலில் நின்ற அந்த காலின் விரல்கள் ஐந்தும் இங்கு பதித்து வைக்கப்பட்டுள்ளது.

தியான மண்டபம்

விவேகானந்தர் பாறையில் உள்ள விசேஷங்களில் ஒன்று தியான மண்டபம். பந்தி பாய் போல நீளமாய் விரிக்கப்பட்டிருக்க அதில் அமர்ந்து ஏராளமானோர் தியானம் செய்கின்றனர். நிறைய வெளி நாட்டவரை காண முடிகிறது


தியான மண்டபம் வெளியே நின்று கடலை பார்க்க, அதன் அழகு மனதை கொள்ளை அடிக்கிறது. ஒவ்வொரு அடுக்கிலும் நீலம் , பச்சை, பிரவுன் என வெவ்வேறு நிறங்களில் தெரிகிறது கடல்.

சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் வெவ்வேறு நேரங்களை காட்டும் கருவி ஒன்று தரையிலேயே வடிவமைத்துள்ளனர்.

வள்ளுவர் சிலை தனியே உள்ளதல்லவா? அங்கும் சென்று பார்க்கலாம். ஆனால் காற்று அதிகமிருந்தால் அதன் அருகே போட்டுகளை நிறுத்துவது சிரமம் (நிறுத்தினால் பாறை அருகே மோதி மோதி படகு உடையும் அபாயம் உண்டு) என்பதால் அனுமதிக்க வில்லை

காந்தி மணடபம்



கன்யாகுமரி பீச்சில் இருந்து மிக அருகில் உள்ளது காந்தி மண்டபம். இரண்டு அடுக்கு மாடி கட்டிடமாக இருக்கும் இந்த நினைவகத்தில் காந்தி வந்து அமர்ந்து பேசியிருக்கிறார். பின் அவர் மரணத்துக்கு பின் அவரது அஸ்தி இங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின் கன்யாகுமரி கடலில் கரைக்க பட்டது.



உள்ளே நுழையும் போது நான்கைந்து பெரிய தூண்கள் உள்ளன. அவற்றில் வாய்மை, அஹிம்சை, சமாதானம் என காந்திய தத்துவங்கள் எழுதப்பட்டுள்ளன

நினைவகம் முழுதும் காந்தியின் வாழ்க்கை வரலாறு படங்களாக விரிகிறது. பல்வேறு உலக தலைவர்களுடன் காந்தியிருக்கும் படங்கள் அலங்கரிக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் புல்வெளி மற்றும் சிறுவர்கள் விளையாட சருக்கல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் உள்ளன.



இந்த வீடியோவில் காந்தி நினைவு இல்லத்தை ஒரு ரவுண்ட் பார்க்கலாம்



நான் பார்த்த வரை பள்ளிகளிலிருந்து அழைத்து வரும் மாணவர்கள் கூட்டம் மட்டுமே இங்கு அதிகமாக உள்ளது. சாதாரண பொதுமக்கள் இங்கு வந்து பார்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை

கன்யாகுமரி -துணுக்ஸ் 

## கன்யாகுமரி என்ற பெயரில் மாவட்டம் இருந்தாலும் கூட, மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் தான் ! கலக்டர் அலுவலகம் துவங்கி பிற முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் தான் உள்ளது !

** கன்யாகுமரியில் ஒரு தியேட்டர் கூட இல்லை !  படம் பார்க்கணும் என்றால் நாகர்கோவில் தான் செல்லனும். ஆனால் கேரளாவில் இருந்து அனைத்து தமிழ் படங்களும் நல்ல ப்ரின்ட்டில் படம் வந்து சில நாட்களில் கிடைத்து விடுகிறதாம். மக்கள் அனைத்து புது படங்களையும் முதல் வாரத்திலேயே DVD -ல் நல்ல காப்பியில் பார்த்து விடுகிறார்கள்

## நாங்கள் விவேகானந்தர் பாறைக்கு சென்ற அன்று சூரியனை சுற்றி ஒரு கருப்பு வட்டம் தெரிகிறது ; எதோ கெடுதல் என புரளி கிளம்பி ஆள் ஆளுக்கு சூரியனை பார்த்து கொண்டிருந்தனர் (உலகம் அழிய போகிறது என்று சொன்ன டிசம்பர் கடைசி வாரம் வேறு )

** கன்யாகுமரி டு நாகர்கோவில் செல்லும் வழியில் - முக்கிய சாலையில் ஒருவர் மரம் ஏறி தேங்காய் வெட்ட, அவர் வெட்டி முடிக்கும் வரை இரு புறமும் பேருந்துகள் பொறுமையாய் காத்திருந்தன. மேலே விழுந்தால் விபத்தாகி விடும் என்பதால் தான் இந்த காத்திருப்பு. அவ்வப்போது அப்படி நில்லாமல் போய் விபத்து ஏற்படுவது உண்டாம் !

## இந்த ஏரியாவில் உள்ள வித்யாசமான ஊர் பெயர்கள்: கொட்டாரம், மயிலாடி, கருங்கல், தேங்காய் பட்டினம், அஞ்சு கிராமம், செட்டிக்குளம் , ஆரல்வாய்மொழி, ஈத்தா மொழி !

** நாகர்கோவில், கன்யாகுமரி அருகே கடற்கரையை ஒட்டி தக்கலை போன்ற பல ஊர்களில் கிறித்துவர்கள் அதிகம் உள்ளனர். நாங்கள் சென்றது கிருத்துமஸ் நேரம். நமக்கு தீபாவளியின் போது வெடிக்கடைகள் இருப்பது போல ஏராள வெடிக்கடைகள் அங்கு கிருத்துமஸ்க்கு பார்க்க முடிந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...