Tuesday, December 30, 2008

அபியும் நானும் -சுட சுட ஒரு விமர்சனம்


ரொம்ப நாளாகவே நான் எதிர் பார்த்து காத்திருந்த படம், வருட இறுதியில் release ஆனது. மிக நிறைவாக ஒரு படம் பார்த்த திருப்தி. இவ்வளவு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாய் படம் பார்த்து எவ்வளவு காலம் ஆகி விட்டது!!

ஒரே பெண் பெற்ற தந்தை அவளை வளர்த்து படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுப்பதும், அதில் உள்ள வலியும் தான் கதை. இவ்வளவு simple கதையில் நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள்.. பிரகாஷ் ராஜின் அற்புதமான நடிப்பு, ராதா மோகனின் இயக்கம் இவையே படம் நம்மை பாதிக்க காரணங்கள்.

Prakash raj has literally lived the character!! குறிப்பாக என்னை போன்ற ஒரே பெண் பெற்ற எந்த ஒரு தந்தையும் சுலபமாய் தன்னை அந்த character, நடிப்புடன் relate செய்து கொள்ள முடிகிறது. இது தான் படத்தின் மிக பெரிய plus point.

"காலில் வெந்நீர் கொட்டிடுடுச்சு" என குழந்தை அலற ஒடுவதாகட்டும், முதல் முறை cycle-ல் அவள் பள்ளி செல்லும் போது பின்னாலேயே பத்திரமாக செல்கிறாளா என பார்க்க போவதாகட்டும், "உன் கூட டிராயர் போட்டுட்டு school-க்கு வர முடியலையே" என வருந்துவதாகட்டும் (இதே dialogue -நான் என் பெண்ணிடம் பல முறை கூறியுள்ளேன்) பல நிகழ்வுகள்.. நாம் வாழ்கையை நினைவு படுத்திகிறது.

உண்மையில் குழந்தை வளர்ப்பில் அப்பாக்கள் எதற்கெடுத்தாலும் பயந்து தள்ள அம்மாக்கள் தான் தைரியமாய் உள்ளனர். இதையும் இந்த படம் காட்டுகிறது. ஐஸ்வர்யா அம்மாவாக சரியாக நடித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் character--ல் உள்ள அளவு depth & details த்ரிஷா character-ல் இல்லை. இது ஒரு குறையே. (ஆனால் த்ரிஷா school going kid-க்கும் அதிசயமாய் பொருந்துகிறார்). த்ரிஷா சம்பந்த பட்ட காட்சிகளில் அந்த பௌர்ணமி இரவு ஓடை காட்சி நல்ல ஒரு கவிதை.

முதல் பாதி realistic. மறு பாதி cinematic. என்றாலும், second half-ம் நிறையவே சிரிக்க வைக்கிறார்கள். (அந்த இரு சிறுவர்கள் அவ்வபோது செய்யும் லூட்டி ரசிக்கும் படி உள்ளது..)

த்ரிஷா ஜோடி ஆக வரும் கணேஷ் character-இறுதியில் பெரிய size ஆக்கி விடுகிறார்கள். (இது போன்ற மாப்பிள்ளை என்றால் பெற்றோர் லவ் marriage-க்கு OK சொல்லி விடுவார்கள்.. அவர்கள் கவலையே நல்ல பையன் ஆக இருக்க வேண்டும் என்பதே.)

Beggar ரவி சாஸ்திரி, பெரிய Singh என சில பாத்திரங்கள் மனதில் பதிகின்றன.

இரு பாடல்கள் OK. இடைவேளைக்கு பின் வரும் பாடல்களுக்கு கத்திரி போட்டிருக்கணும்.

மிக நெகிழ்வாய், அழகாய் படத்தை முடிக்கிறார்கள். எங்கோ இருக்கும் பெண், கல்யாணம் ஆன பின்பும், அப்பா இன்னும் walking முடித்து வீட்டுக்கு வரலையா, ஏன் late என phone-ல் கேட்பது இன்னும் நம் ஊரில் நடந்து கொண்டு தானே உள்ளது.

ஒரு நல்ல Feel good film பார்க்க வேண்டுமென்றால் அவசியம் அபியும் நானும் பாருங்கள்..

2 comments:

  1. Anonymous4:17:00 PM

    Thalaiva Kalakuringa....Nice review..

    Since I know Sneha, I can understand how much you can match Prakash Raj :)

    I am yet to read other postings. Adhuvum kandaipa rasikira madhiri erukkum. Schedule konjam tight aaa erukku :( padichittu solluraen..

    regards
    mari

    ReplyDelete
  2. Anonymous4:23:00 PM

    After reading your review, I've decided to go and see the movie.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...