Wednesday, December 11, 2013

வானவில் 11-12-13

பார்த்த படம் 1- வில்லா - பீட்சா - 2

சற்று வித்யாசமான கதை களம் தான். ஆனால் அமானுஷ்ய காட்சிகள் இதோ வருது, அதோ வருது என சொல்லி சொல்லி கடைசியில் தூக்கம் தான் வந்தது.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் சம்பவம் என்பதால் பீட்சா - 2 என்று விளம்பரம் செய்தனர் போலும். ஆனால் பீட்சா -வின் செய்நேர்த்தி இங்கு மிஸ்ஸிங்.

கதை பற்றி என்ன சொன்னாலும் சுவாரஸ்யம் குறைந்து விடும். ஒரு முறை பார்க்க தக்க படம் தான் ! நேரமிருந்தால் காணுங்கள் !

பார்த்த படம் -2 - ஜன்னல் ஓரம் 

விமல், பார்த்திபன், விதார்த் நடித்த மலையாள ரீ மேக்.



மலை பகுதியில் பயணிக்கும் பேருந்தும், அதை ஒட்டிய நகைச்சுவையும் சற்று கிச்சு கிச்சு மூட்டியது. ஆனால் பின் க்ரைம் த்ரில்லர் போல சென்று எங்கோ திசை மாறி விட்டது

நடிகர்கள் விஜய், சூர்யா துவங்கி பலரும் நடிக்க வந்த போது மிக சுமாராகவும், பின் நடனம், சண்டை, நடிப்பு என எல்லா டிபார்ட்மெண்ட்டிலும் சிறிது சிறிதாக வளர்ச்சி அடைவது வழக்கம். ஆனால் விமல் சற்றே வித்யாசமாக - ஆரம்ப படங்கள் ( பசங்க மற்றும் களவாணி)  ஓரளவு நன்கு நடித்தவர் அதன் பின் ஒரே வித நடிப்பில் அலுப்பூட்டுகிறார்.

இதே படத்தில் நடித்துள்ள விதார்த் எவ்வளவு அனாயசமாக நடிக்கிறார் ! விமல் தம்பி நடிப்பில் கற்று கொள்ள நிறைய இருக்கு !

ஒரு சுமாரான மலையாள படம் - அதை ரீ மேக் செய்து இன்னும் சோதித்து விட்டனர்.

ரொம்ப ரொம்ப சுமார் !

அய்யாசாமி கார்னர் 

" எப்ப கார் வாங்க போறே ?" - 1998

" டேய் .. ஒரு கார் வாங்குடா " - 2003

" ஏண்டா கார் வாங்க மாட்டேங்குறே ? என்ன தாண்டா உனக்கு பிரச்சனை ?" - 2008

" அப்பா.. இந்த வருஷத்துக்குள்ளே ஒரு கார் வாங்கிடு ... இல்லாட்டி அவ்ளோ தான். உன்கூட நான் பேசவே மாட்டேன் " - 2013

அண்ணன், அக்கா, நெருங்கிய நண்பர்கள் என பலரும் 15 வருடத்துக்கும் மேலாய் திட்டி தீர்த்து விட்டனர். அப்போதெல்லாம் மசியாத அய்யாசாமி மகளின் பேச்சுக்கு மட்டும் கட்டுப்பட்டு விட்டார்...

ஆம். நேற்றைய தினம் அய்யாசாமி ஒரு கார் புக் செய்துள்ளார். தனது 42 ஆவது வயதில் - இன்று காலை முதல் சின்சியர் சிகாமணியாக கார் டிரைவிங் க்ளாஸ்ம் செல்ல துவங்கி விட்டார்.

ஆகவே - மடிப்பாக்கம் மற்றும் வேளச்சேரியில் - நடந்தோ - டூ வீலரிலோ பயணிக்கும் மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

தவளை கதை 

ஓரிடத்தில் மலை ஏறும் போட்டி நடக்கிறது. அதில் கலந்து கொள்ள நிறைய தவளைகள் தயாராக இருக்கின்றன.

அது செங்குத்தான மலை என்பதால் " இதில் எப்படி ஏறுவது?" என்கிறது ஒரு தவளை. இன்னொரு தவளை யோ  "இதில் யாரும் ஏறவே முடியாது" என்கிறது.

" இதில் ஏறுபவர்கள் யாரும் உயிரோடு இருப்பதில்லை" என்கிறது மூன்றாவது தவளை

இப்படியே ஆளுக்காள் சொல்ல ஏறும் முன்பே தவளைகள் துவண்டு போகின்றன.

போட்டி ஆரம்பித்து சில தவளைகள் ஏற முயன்றும் கூட அந்த காமன்ட்கள் ஏற்படுத்திய பயத்தில் அவையும் கீழே விழுந்து விடுகின்றன

இதில் ஒரே யொரு தவளை மட்டும் எப்படியோ தட்டு தடுமாறி எப்படியோ உச்சிக்கு போய் பரிசும் வாங்கி விட்டது

அப்புறம் தான் தெரிந்தது பரிசு பெற்ற அந்த தவளைக்கு காத்து கேட்காது என்கிற விஷயம் !

நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களில் நாமும் காது கேட்காதவர்கள் போல் நடந்து கொண்டால் நாமும் நம் இலக்கை ஜெயித்த அந்த தவளை போல் அடையலாம்"  இந்த கதையை ஒரு விழாவில் சொன்னது சூப்பர் ஸ்டார் ரஜினி !

என்னா பாட்டுடே 

இன்றைய தேதியை கவனித்தீர்களா?

11-12-13 !  வித்யாசமான நாள் இல்லை ?

டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள். டேப் ரிக்கார்டர் இருந்த கல்லூரி காலத்தில் ஒரு கேசட் முழுதும் பாரதியார் பாடல்களை ரிக்கார்ட் செய்து கேட்டு கொண்டிருப்பேன்.



நிற்பதுவே நடப்பதுவே - ராஜாவின் இசையில், ஹரீஷ் ராகவேந்திராவின் இனிய குரலில்...




போஸ்டர் கார்னர்


முகநூலில் கிறுக்கியவை

எந்த ஒரு செயலையும் தொடங்குவது தான் கடினம். தொடங்கிய பின் மற்றவை தானாகவே நடக்கிறது. நம்மில் பலரும் எத்தனையோ விஷயங்களை "அப்புறம் செய்யணும்" என்றே துவங்காமல் இருந்து விடுகிறோம்.

போலவே தொடங்கிய ஒரு நல்ல விஷயத்தை சரியாக முடிப்பது இன்னொரு பெரிய சாலஞ்ச். (மாடிக்கு ஒரு பீரோவை தூக்கி செல்லும்போது கடைசி சில படிகளில் நிரம்ப திணறுவோம்.. நினைவிருக்கா? எந்த ஒரு போட்டி ஓட்டத்திலும் கடைசி சில நிமிடம் இழுத்து பிடித்து ஓடுவது தான் மிக பெரிய சவால் !)

எப்படி தொடங்குவது, எங்கே சரியாக முடிப்பது இதை சரியாக செய்ய துவங்கினால் - நினைத்த எதையும் அடையலாம் !

எதையும்.. எதையும்.. எதையும்... !

இதையே வடிவேலு பாணியில் சொல்லணும்னா " எதையும் ப்ளான் பண்ணி செய்யணும்... ஓகே?"

************
அருமையான (!!??) சிந்தனையெல்லாம் வண்டி ஓட்டும் போது மனதில் வந்து, வண்டியை நிறுத்தும்போது மறைந்து போகிறது.

நம்ம முகநூல் பிரபலங்கள் எல்லாம் எப்படித்தான் நினைவில் வச்சு போடுறாங்களோ ?

10 comments:

  1. மகளின் அன்பிற்கு ஈடு இணை ஏது...? வாழ்த்துக்கள்...

    தவளை கதையுடன் வானவில் ஜொலிக்கிறது...!

    ReplyDelete
  2. மோகன் சார், December 11 பாரதியின் நினைவு நாள் அல்ல, "பிறந்த நாள்".
    சீக்கிரம் கரெக்ட் பண்ணுங்க, September 11 தான் அவரது நினைவு நாள்.


    http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathi

    ReplyDelete
  3. Replies
    1. Maruthi Zen Estilo Bought in from Maruthi service masters (Second hand car)

      Delete
  4. வானவில் மீண்டும் பார்த்து மகிழ்ந்தேன். வாழ்த்துகள் மோகன் - கார் வாங்கியதற்கும்!

    ReplyDelete
  5. பாரதியின் மனைவி ஊரான கடையம்தான் என் அன்னையின் ஊர். “நிற்பதுவே” பாட்டில் சில இடங்கள் கடையத்தில் எடுத்தது. பாரதி நடந்த மண்ணில் நானும் நடந்து இருக்கிறேன்.

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  7. அனைத்தும் இரசிக்க வைத்தன....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...