Thursday, July 15, 2010

ராபின் ஷர்மாவின் "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"



" The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?).

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதம் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.

13 comments:

  1. ஒவ்வொன்றும் முக்கியமான உபதேசம் தான். பகிர்வுக்கு நன்றி, மோகன்!

    ReplyDelete
  2. இருபதும் இருபது முத்துக்கள். பகிர்வுக்கு நன்றி மோகன்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அஹா.. நல்ல கருத்துக்கள்..
    கடைபிடிக்க உகந்தவை
    இவற்றிற்கு 'இனியவை இருபது' என பட்டப் பெயர் விளங்கட்டும்..

    ReplyDelete
  5. \\உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார்.//

    இதை செய்யா நான் மறப்பதில்லை.. சில சமபவங்கள் எல்லாம் நமக்கு ஏதோ ஒரு செய்தி சொல்லி கொண்டுதான் இருக்கும்..

    ReplyDelete
  6. முன்பெல்லாம் வாரம் ஒரு பதிவர். எனக்கு புரை ஏறும் மனிதர்கள். இப்ப, இருவருக்குமே ஒரே மாதிரியான மன தேக்கம். இல்லையா மோகன்? எல்லாம் சரியாகும் மக்கா. அதுவரையில், உங்களுக்கு இது மாதிரியான நம்பிக்கை/அன்பு சார் பகிர்வு. எனக்கு, இருக்கவே இருக்கு கவிதை. நடப்போம்...

    ReplyDelete
  7. நன்றாக இருக்கிறது. அப்படியே காப்பி எடுத்து ஆரண்ய நிவாஸ் என் ஆஃபீஸ் ரூமில் ஒட்டப் போகிறேன்!!!!





    -அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  8. கருத்துக்களை பகிர்த்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. கருத்துக்களை பகிர்த்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியவைகள். நன்றி சார். மொழி பெயர்ப்பு நன்றாக உள்ளது.
    இன்னும் நிறைய தாருங்கள்...!

    ReplyDelete
  11. நன்றி பெயர் சொல்ல..
    **
    நன்றி வெங்கட் நாகராஜ்;
    ***
    வித்யா: நன்றி
    ****
    மாதவன்: நன்றி
    ***
    ரோமியோ: அப்படியா? நல்லது நண்பா. கருத்துக்கு நன்றி
    ***
    ராஜா ராம்: ம்ம்ம் சரியா சொன்னீர்கள். நன்றி
    ***
    ராம மூர்த்தி சார்: தங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி தருகிறது. நன்றி
    ***
    தமிழ் உதயம்: நன்றி
    ***
    வாங்க அமைதி அப்பா. நன்றி

    ReplyDelete
  12. எப்படி மோகன் இவரை வாசிக்குறீங்க. நீங்க பெரிய பொறுமைசாலி போங்க. இவரோட முதல் புத்தகம் என் வீட்டு அலமாரியில் தூங்குது. செம மொக்கைங்க இந்த மனுஷன்.

    ReplyDelete
  13. விக்கி.. ரசனை எப்போதுமே ஆளுக்கு ஆள் மாறும்; உங்களுக்கு பிடிக்காதவர் வேறு ஒருவருக்கு பிடிக்கலாம். இவரின் சில கருத்துக்கள் நிச்சயம் பயன் உள்ளவை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...