Monday, August 22, 2016

ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை - பேட்டி

வ்வொரு பயணத்திலும் எத்தனை வித்தியாச மனிதர்களை சந்திக்கிறோம் ! அப்படி ஒரு ரயில் பிரயாணத்தில் தான் இவரை சந்தித்தேன். மனைவி, இரு மகள்கள், தந்தை - அம்மா என குடும்ப சகிதமாய் எங்கள் அருகிலேயே பயணித்தார். அந்த குடும்பம் குறிப்பிட்ட ஒரு ஊருக்கு கோடை விடுமுறையில் பயணம் செய்தது குறித்து பேசிக்கொண்டிருக்க, பயணம் நமது விருப்ப சப்ஜக்ட் என்பதால் நானும் அந்த பேச்சில் கலந்து விட்டேன். சிறிது நேரத்தில் தான் தெரிய வந்தது.. அவர் ஒரு ரயில் டிரைவர் என்பது !

அந்த ரயிலில் பயணித்த டிக்கெட் செக்கர் உட்பட ரயில்வே ஊழியர்கள் பலரும் அவரை பார்த்ததும் நின்று பேசி விட்டு சென்றனர். அவர்களுக்குள் உள்ள நட்பும் அன்னியோன்னியமும் ஆச்சரியமாய் இருந்தது. தொடர்ந்து அந்த ரயில் டிரைவரிடம் பேசியதில் இருந்து:
****
னக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. பத்தாவது முடிச்சுட்டு பாலிடெக்னிக் படிச்சேன். என்னோட 19 வயசிலேயே ரயில்வேக்கு தேர்வாகிட்டேன். அப்போருந்து 25 வருஷமா ரயில்வே வேலை தான். இந்த வேலைக்கு தேர்வானவுடன் முதலில் சில மாசம் ட்ரைனிங் கொடுப்பாங்க. அப்புறம் ரயில் ஓட்டுனர் அருகே பயணிக்கும் அசிஸ்டன்ட் ஆக இருக்கணும். குட்ஸ் ரயில் ஓட்டுறது மாதிரி நிறைய படிகள் தாண்டிட்டு, பயணிகள் ரயிலை முதல் தடவையா ஓட்ட ஆரம்பிக்க பல வருஷம் ஆகும். நான் சேர்ந்து 25 வருஷம் ஆனா கூட, இன்னமும் அடிக்கடி எங்களுக்கான டிரைனிங்கில் கலந்துக்குறேன்

                                   
           
நான் வேலைக்கு சேர்ந்த புதுசில் கரி என்ஜின் தான் இருக்கும். இப்போ நினைச்சு பார்த்தா எப்படி அந்த சூழலில் வேலை பார்த்தோம்னு ஆச்சரியமா இருக்கு. இப்போ இருப்பதெல்லாம் பெரும்பாலும் டீசல் எலக்ரிக் எஞ்சின். ரொம்ப அட்வான்ஸ்ட் எஞ்சின் இது. நாம போற இந்த வண்டியோட எஞ்சின் பார்த்தீங்கன்னா வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) வந்தது.

எங்க வாழ்க்கை இப்போ எவ்வளவோ பரவாயில்லை. நிலக்கரி எஞ்சின் காலத்தில் எல்லாம் ஏகமா கஷ்டப்பட்டுட்டோம். இப்போ மீட்டர் காஜ் கூட ஒழிஞ்சு, எல்லாம் பிராட் காஜ் ஆகிடுச்சு. வண்டி அதனால் செம ஸ்பீட் ஆக போகும்.

குளிர் காலத்தில் எஞ்சின் இருக்கும் இடத்தில் செம குளிர் பிச்சு எடுத்திடும். டில்லி மாதிரி ஊரில், ரயில் எஞ்சினுக்குள் ஹீட்டர் இருக்கும். Temperature குறிப்பிட்ட டிகிரிக்கு கீழ் போயிட்டா ஹீட்டர் தானாவே ஆன் ஆகிடும்.

இப்போ வண்டி எல்லாம் ஸ்டார்ட் செஞ்சு விட்டா போதும். ஸ்பீட் கண்ட்ரோல் செய்வது, வண்டி போற டைரக்ஷன் பார்த்து கொள்வது, பிரேக் போடுவது, டிராக்கை கண்காணித்தபடி இருப்பது - இது தான் எங்க வேலை.

சாப்பாடு, டீ, காபி சாப்பிடுவது எல்லாமே எங்களுக்கு வண்டி ஓடும்போதே தான் நடக்கும். டேஷ் போர்டில் சாப்பாடு டப்பா வச்சு பொறுமையா சாப்பிடுவோம்.

நான் ஆர்வமாய் கேட்பதை பார்த்து " இந்த வண்டி டிரைவர் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை; இல்லாட்டி உங்களை எஞ்சினுக்கு கூட்டி போய் காட்டுவேன்; என் மனைவியை ஒரு முறை எஞ்சின் கூட்டி போய் காட்டிருக்கேன்". என்றார்.

"வண்டி ஓட்டும்போது எத்தனையோ விபத்து பார்த்தாச்சு. ஒரு முறை ரயில்வே கேட் மூடிருக்கு. அதில் புகுந்து ஒரு கணவன், மனைவி கிராஸ் பண்றாங்க. கணவன் டூ வீலரில் டிராக்கை தாண்டி போயிட்டார் மனைவி கையில குழந்தையுடன் போனில் பேசியபடி நடந்து போறார். அடி பட்டுட்டார். என்ன பண்ண முடியும்? எங்களால் வண்டியை நிறுத்தி அவங்களை காப்பாத்தவே முடியாது. நான் உடனே பிரேக் போட்டாலும் வண்டி அரை கிலோ மீட்டர் தாண்டி தான் நிக்கும். பல நேரம் எங்களுக்கு ஆட்கள் அருகில் வரும்போது தான் தெரிவாங்க".

"தெரியாம அடிபடுறது ஒரு பக்கம்னா, தெரிஞ்சே வந்து விழுறது இன்னொரு பக்கம். ரயில் அருகில் வந்த உடன் தான் டிராக்கிற்கு வருவாங்க. ஒண்ணுமே செய்ய முடியாது. வந்த புதுசில் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்போ இத்தகைய சாவுகள் எந்த பாதிப்பும் ஏற்படுத்துறது இல்லை. பார்த்து பார்த்து பழகிடுச்சு"

"ஒரு முறை பாலம் ஒன்றில் வண்டி போகுது. வெள்ளை சட்டை கருப்பு பேன்ட் போட்டு கொண்டு ஒரு ஆள் தூரத்தில் நிக்குறான். பார்த்தவுடன் எனக்கு சந்தேகம் வந்துடுச்சு. பிரேக்கை லைட்டா பிடிச்சுகிட்டு வண்டியை சற்று மெதுவா ஓட்டினேன். வண்டி அருகில் போகும்போது அந்த ஆள் டிராக்கில் வந்து படுத்துட்டான். டக்குன்னு பிரேக்கை போட்டு வண்டியை நிறுத்திட்டேன். என்னடா வண்டி நிக்குதுன்னு பார்த்த மக்கள் ஓடி போயி அந்த ஆளை பிடிச்சிட்டாங்க. பக்கத்திலேயே அந்த ஆளோட பைக் இருந்தது. அதோட சேர்த்து அவரை நம்ம வண்டியில் தூக்கி போட்டுட்டு போயி அடுத்த ஸ்டேஷனில் போலீசில் ஹாண்ட் ஓவர் செஞ்சுட்டோம். காதல் தோல்வி போலிருக்கு. இப்படி அரிதா ஓரிரண்டு பேரை காப்பாத்தியும் இருக்கேன்".

வண்டி ஓடும்போது ஏதும் பிரச்சனை என்றால் பயணம் செய்வோர் செயின் புல்லிங் செய்வது பற்றி கேட்க, "மிக பெரிய பிரச்சனை என்றால் தான் செயின் புல்லிங் செய்யணும். பயணிகள் அவங்களுக்குள் இருக்கும் சண்டைக்கெல்லாம் செய்ய கூடாது. செயினை பிடிச்சு இழுத்தா வண்டி உடனே தானா நின்னுடும். என்னால ஒண்ணும் செய்ய முடியாது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்து இழுத்தாங்களோ அதுக்கு வெளியில் ஒரு லைட் எரியும். முன் பக்கத்தில் இருந்து இழுத்திருந்தா, என்ஜினில் இருந்து நாங்க போய் பார்ப்போம். பின் பக்கத்தில் இழுத்திருந்தா கார்ட் போய் பார்ப்பார். சரியான காரணம் இல்லாம் இழுத்தா பைன் கட்டணும், கோர்ட் போகணும். சில நேரம் யார் இழுத்தாங்கன்னு தெரியலைன்னு எழுதி முடிச்சிடுவாங்க"

ரயில்வேயை பொருத்தவரை மொத்தமா லாபம்னு சொன்னாலும், தென்னக ரயில்வே மட்டும் பார்த்தா அது லாசில் தான் ஓடுது. சில இடங்களில் ரொம்ப கம்மியான விலையில் டிக்கெட் வாங்குறாங்க உதாரணமா திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு தினம் ஒரு ரயில் ஓடுது. இதில் டிக்கெட் வெறும் 10 ரூபா தான். 1000 பேர் பயணிச்சா கூட 10,000 தான் வசூல் ஆகும். டீசல் செலவு தொடங்கி, எங்க சம்பளம் மத்த செலவு என கணக்கு பார்த்தா இந்த 10,000 ரூபா பத்தவே பத்தாது. ரயில்வேக்கு லாஸ் தான். வடக்கிலே Ore - எல்லாம் குட்ஸில் நிறைய போகும். அதனால் அங்க லாபம் வந்துடுது. பொதுவா ரயில் டிக்கெட் விலை ரொம்ப கம்மியா இருக்கு. அதை கொஞ்சமாவது அதிகப்படுத்தணும்

என்னோட குடும்பத்திலே இதுவரை யாரும் ரயில்வேயில் இருந்ததில்லை. அப்பா ஸ்கூல் தலைமை ஆசிரியரா இருந்து ஓய்வு பெற்றவர். ரெண்டு பொண்ணுங்க. முதல் பொண்ணு பிளஸ் ஒன் படிக்கிறா டெண்த்தில் ஐநூறுக்கு 477 மார்க் எடுத்தா. அவ படிக்கிறது திருநெல்வேலியில் ரொம்ப நல்ல ஸ்கூல். இத்தனைக்கும் அங்கே படி படின்னு ரொம்ப படுத்துறதில்லை. சொல்லி கொடுக்குற விதம், படிக்க சொல்லுற விதம் எல்லாமே வித்யாசமா இருக்கும்.

வீட்டுல கேபிள் டிவி கூட கட் பண்ணலை. ஆனா அவ ஒரு மணி நேரம் மட்டும் தான் டிவி பார்ப்பா. நாங்களும் அவளை அதிகம் பிரஷர் பண்ணுறது இல்லை. அவ தானாவே தான் ஆர்வமா படிக்கிறா

ஒன்பதாவது படிக்கும் சின்னவள் சரியான வாலு. சின்ன பசங்க தான் எப்பவும் வாலா இருக்காங்க. ரெண்டாவது குழந்தை வந்த பின், முதல் குழந்தை சற்று மெச்சூர்ட் ஆக நடந்து கொள்ள ஆரம்பிச்சுடுறாங்க

அம்மாவுக்கு கான்சர் -அதுக்கான ட்ரீட்மென்ட்டுக்கு தான் சென்னை போறோம். அரையாண்டு லீவு ஆச்சா? பசங்க அப்படியே சென்னை சுத்தி பாக்கட்டும்னு கூட்டி போறேன்.

நான் ஒரு நாள் வண்டியில் கிளம்பி சென்னையோ அல்லது வேறு ஊரோ போனா, அடுத்த நாள் இரவு தான் அங்கிருந்து கிளம்பி மறுபடி வீட்டுக்கு வருவேன். ஒரு நாள் ரெஸ்ட்.   வீட்டில் தொடர்ந்து எங்களால் தங்க முடியாது. அதனால் வருஷத்துக்கு ஒரு தடவை குடும்பத்தோட ஒரு வாரம் எங்காவது வெளியூர் போவோம். அந்த ஒரு வாரம் தான் குடும்பத்தோட இருக்க கூடிய நாட்கள். மத்த படி எங்க வேலையில் லீவு அது இதுன்னு நினைக்கவே முடியாது
************
ங்கள் குடும்பமும் அவர் குடும்பமும் நன்கு பேசி பழக ஆரம்பித்து விட்டனர். அன்றைய தினம் கிறிஸ்துமஸ் என்பதால் வீட்டில் செய்த கேக் தந்தனர்.

சென்னையில் என்னென்ன இடம் பார்க்கலாம் என்ற தகவல்கள் பேசிவிட்டு, பரஸ்பரம் போன் நம்பர் தந்து கொண்டோம்.

வண்டி எங்காவது நின்றால் வாழைப்பழம் வாங்க வேண்டும் என்று நான் சொல்ல, மதுரையில் நின்றதும் " பழ வண்டி தூரமா இருக்கு; நான் போய் வாங்கி வர்றேன். நீங்க இறங்காதீங்க. வண்டி எடுத்துட்டா பிரச்சனை " என்று சொல்லி விட்டு அவர் சென்றார். திரும்பி வந்தவர் கையில் ரெண்டு டஜன் வாழைப் பழங்கள். ஒரு சீப்பு பழங்களை தங்கள் வீட்டுக்கு கொடுத்து விட்டு, அடுத்த டஜனை எங்களுக்கு தந்தார். எவ்வளவு வற்புறுத்தியும் எங்களிடம் பணம் வாங்கி கொள்ளவே இல்லை.

மனிதர்களிடம் மனம் விட்டு பேசி, பேசுவதை காது கொடுத்து கேட்டாலே, அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகி விடுகிறோம் ....இல்லையா !
************

அதீதம் பிப்ரவரி இதழில் வெளியானது

42 comments:

  1. புதுக்கோட்டையில் என் வீடு ரயில்வேஸ்டேசனில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள்தான் இருக்கும். யாராவது என்னிடம் உங்க வீட்டுக்கு எப்படி வர்றது? முகவரி சொல்லுங்கன்னு கேட்டா "புதுகை ஸ்டேசன் வந்துட்டு அங்க வேலை செய்யும் யாருடமும் என் பெயர் சொல்லி வீட்டைக் கேளுங்க. அவங்களே காட்டிடுவாங்கன்னு" சொல்றதுண்டு. என்னுடைய பிளாகில்கூட 5 வருடங்களுக்கு முன்பு "ரயிலோடு விளையாடி" என்ற தலைப்பில் ஸ்டேசனுடனான எனது வாழ்க்கையைப் பற்றி எழுதியதாக நினைவு உண்டு. 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாய் ,நீங்க மவுன விரதம் முடிச்சு பின்னூட்டம் போட்டதே பெரிய விஷயம் , நன்றி மோகன் அப்துல்லாஹ் பாயை பின்னூட்டம் எழுத வைத்தமைக்கு .

      Delete
    2. மலரும் நினைவுகளுக்கு நன்றி அப்துல்லா அண்ணே

      அஜீம் பாஷா: அப்படி எல்லாம் இல்லை; கொஞ்ச நாளைக்கு முன் மாநிலத்தில் முதல் மார்க் வாங்கிய மாணவன் பற்றிய பதிவுக்கும் அப்துல்லா அண்ணே பின்னூட்டம் இட்டிருந்தார் :)

      Delete
  2. சாதாரண மனிதர்கள் இல்லை இவர்கள் எல்லாம் அசாதரண மனிதர்கள்.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான சந்திப்பு...

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு




    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா; உங்களிடம் இருந்து பாராட்டு பெறுவது ஆச்சரியமாவும், மகிழ்ச்சியாவும் இருக்கு ! மிக்க நன்றி !

      Delete
  5. வித்தியாசமான பேட்டி...

    முடிவில் சொன்னது 100% உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்

      Delete
  6. //மனிதர்களிடம் மனம் விட்டு பேசி, பேசுவதை காது கொடுத்து கேட்டாலே, அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகி விடுகிறோம் ....இல்லையா !//

    அருமை.

    எங்களது குடும்ப நண்பரின் மாமனார் ரெயில் டிரைவராக இருந்து சென்ற வருடம்தான் ஓய்வு பெற்றார். என் கணவர், அவர் கூட இரண்டு மூன்று முறை சதாப்தி எஞ்சினில் பயணம் செய்திருக்கிறார். கரி எஞ்சினைப் பற்றி அவர் நிறைய சொல்லியிருக்கிறார். ஆரம்ப நாட்களில் கரி எடுத்துப்போட்டு கையே வீங்கிவிடுமாம். அந்த மாதிரி கஷ்டம் இப்பொழுது இல்லாதது நல்லதுதான்.

    நல்லதொரு பேட்டி.

    ReplyDelete
    Replies
    1. அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி ராம்வி

      Delete
  7. ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருந்தது மோகன்... அவரை வற்புறுத்தி நீங்க எஞ்சின் போயி பார்த்திருக்கணும் :)

    ReplyDelete
    Replies
    1. லக்கி: திருநெல்வேலி, கன்யாகுமரி பத்து நாள் டூர் முடிஞ்சு ரயிலில் திரும்ப வந்து கொண்டிருந்தோம்; ரொம்ப சோர்வாய் இருந்தேன். இந்த பேட்டி கேட்க, குறித்து கொள்ள எனர்ஜியும் மனமும் இருந்ததே சற்று ஆச்சரியம் தான். அதான் எஞ்சின் செல்ல வற்புறுத்த வில்லை

      Delete
  8. ஒவ்வொரு முறையும் ரயில் பயணம் முடிந்தவுடன் ஓட்டுநரைப் பார்த்து சுகமான பயண அனுபவத்திற்கு நன்றி கூற நினைப்பதுண்டு. ஆனால் இன்று வரை செய்ததில்லை. உங்கள் கட்டுரை படித்தபின் நிச்சயம் அடுத்த முறை கூறிவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

    நானும் ரயில் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதில் உங்களது இந்தப் பதிவிற்கு இணைப்பு கொடுக்கலாமா? உங்கள் அனுமதி தேவை.

    எனது பதிவு படிக்க: http://wp.me/p2RUp2-2u

    ReplyDelete
    Replies
    1. மேடம் தாராளமாய் நீங்க லிங்க் கொடுக்கலாம். எதற்கு அனுமதி எல்லாம் கேட்டுகிட்டு !

      உங்க பதிவு நிச்சயம் வாசிக்கிறேன் நன்றி

      Delete
  9. இதுபோன்ற பலருடைய சுவாரஸ்யமான பேட்டிகளை அவ்வப்போது உங்கள் வலைப்பூவில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தேவா; தொடர்கிறேன்

      Delete
  10. மிகவும் நல்ல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி சுரேஷ்

      Delete
  11. //மனிதர்களிடம் மனம் விட்டு பேசி, பேசுவதை காது கொடுத்து கேட்டாலே, அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகி விடுகிறோம் ....இல்லையா !// மிக சரியான வார்த்தைகள் சார்

    ReplyDelete

  12. ரயில் டிரைவர் பற்றி நீங்க எப்ப எழுதுவிர்கள் என்று நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்திருந்தேன் , அருமையாக இருந்தது.நன்றி

    ReplyDelete
    Replies
    1. அட ! மகிழ்ச்சி அஜீம் பாஷா நன்றி

      Delete
  13. பல்வேறு மனிதர்களுடன் பேட்டி. எமக்கும் கண்டுகொள்ளக் கிடைக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி மகிழ்ச்சி

      Delete
  14. வித்தியாசமான பேட்டி. சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  15. நன்றி மோகன் குமார். இணைப்பு கொடுத்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. + side. Perhaps life in SR is better. Not so in other Rlys. I worked in SCR, not as a driver but in another capacity where I had to come into contact with drivers daily.

    Most of them r drunkards. As they are at home only one or 2 days, they don't know how their children fare. Unless they have an educated and intelligent wives, their families will b like that of a constable family.

    In my service, I didn't come across a driver who ran the train w/o a bottle r 2.

    When qned, (coz rules don't permit), they explained it s not possible to drive w/o some heat.

    Not but not least, these drivers suffer from the arrogant imagination of being macho. They think being drivers they r more manly. They prefer the company of such pretenders.

    Only at the end of their services, they become different: religious and unmanly :-)

    Irregular life, irregular habits. bad principles.

    Mohan Kumar, I have been reading some of the interviews u had with motley passers-by. Generally, u graze the periphery and post a + side.

    ReplyDelete
    Replies
    1. குலசேகரன்: மிக விரிவான தங்கள் அனுபவ பகிர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றி

      //Mohan Kumar, I have been reading some of the interviews u had with motley passers-by. Generally, u graze the periphery and post a + side. //

      நீங்கள் சொல்லியது ஓரளவு உண்மை தான் ; சொல்ல போனால் நாம் சாதாரணமாய் நினைக்கும் அல்லது பல நேரம் பார்கெயின் அல்லது வாக்குவாதம் செய்யும் செருப்பு தைப்பவர், பஸ் கண்டக்டர் போன்றவர்களின் நல்ல பக்கத்தையும் காட்ட தான் எழுதவே ஆரம்பித்தேன். கேள்விகள் மட்டுமே என்னுடையது; பதில்கள் அவர்களுடையதே.

      நன்றிகள் மீண்டும் !

      Delete
  17. Nevertheless, I pity these fellows for one reason. Unlike SMs, TTEs, Guards and such - what is called - running staff, the drivers get nothing as moola. No one cares for them No one gives them Diwali gifts. No one gives bribes. Nor do they have any avenue to get that.

    SMs can swindle the daily allowance given to run the station; get cut from the parcel clerk; The TTE makes hay during peak season. The Guard pilfers the parcels. If it is a goods train, he can just move a sack of rice. Or in the open wagan, the loot is high. He does it when the train stops mid section during night and his home is nearby station. Or he drops it there and get it collected later. In SCR, the villagers pay him and he accommodate them inside the parcel van and when the station comes, he gives the cut to the TC at the gate to let the tkless passengers out safe. It s easy to earn illegal money cheating rlys. Coz the procedures r like that.

    Abt other staff, v all know. But drivers? Which procedure help them earn illegal income. Only their salaries they shd content with. Their running allowance is just peanuts, not even enough to buy bottles. In SCR, they just stop the train in my station to buy country liquor as it was cheap.

    They spoil their bodies. And retired life is a regretted life. Being with modest money as income, and having more stomachs to feed, they lead a very modest life. Pity.

    The driver in ur interview s a lucky guy.

    ReplyDelete
  18. வழக்கம் போல சுவாரசியமான பேட்டி!! ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தக்குடு மிக மகிழ்ச்சி

      Delete
  19. பேருந்து ஓட்டுனர்களை நாம் சந்திக்க முடியும். ரயில் ஒட்டுனர்களை பார்ப்பது அதிசயம்தான்.
    நானும் ஒரு ரயில் டிரைவரை அறிவேன்.ஆனால் அவரிடம் ஹலோ என்பதோடு சரி. சகஜமாக உரையாடி நல்ல தகவல்களை தந்திருக்கிறீர்கள்.
    வித்தியாசமான பேட்டி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளி சார்

      Delete
  20. பேட்டி சுவாரஸ்யமாக இருந்தது. அவர்களின் வாழ்கை வித்தியாசமானது தான்.

    ரயில் ஓட்டுனர்களுக்கு பிரமோஷன் என்றாலும் வேறு ஒரு ரயிலை ஓட்டுவது தானாம்.... தெரிந்தவர் ஒருவர் முன்பு சொல்லிக் கேட்டிருக்கிறேன்.... ஓய்வு பெறுவதற்கு முன்னே அவர் ஓட்டியது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலையாம்...

    ReplyDelete
  21. எல்லா கமெண்ட்ஸ்க்கும் பொறுமையா பதில் அளிதத அண்ணணுக்க நன்றி
    சலவைத் தொழிலாளி பற்றி படித்ததும் கடைக்கு செல்லும் போதெல்லாம் அவர்களிடம் நேரம்் செலவழித்து பேசிவிட்டு தான் வருகிறேன்
    செருப்பு தொழிலாளியிடம் பேரம் பேசாமல் 50 ரூபாய் கொடுத்துவிட்டு வருகிரேன் மன திருப்தியுடன்

    ReplyDelete
  22. அருமையான உரையாடல்

    ReplyDelete
  23. 'நல்ல பேட்டி. எஞ்சின் டிரைவர்களின் வேலையைப் பற்றித் தெரிந்துகொண்டேன். சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் அசாதாரண அனுபவங்கள் இருக்கும்.

    ReplyDelete
  24. நல்ல ரைட்-அப் சார். இன்ட்ரஸ்டிங்

    அடிக்கடி இந்த மாதிரி டிஃப்ரண்ட்டா எழுதுங்க

    ReplyDelete
  25. rayil yanai kadal endrume alukkamal parkum suvarasiyam,, rail driverin vazhkai therinthu kondathu mahilchi katturaiyalarukku valthukkal

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...