ஸ்பாய்லர் அலர்ட் - கதையின் சில மைய புள்ளிகள் பேசப்படும்.. கதை தெரிய வேண்டாம் என எண்ணினால் - அடுத்த சில பாராக்களை தவிர்த்து விடுதல் நலம் !
கே பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் - அப்டேட்டட் வெர்ஷன் தான் - Dude மையக்கதை ! அதன் கிளைமாக்ஸை மாற்றி - காதலனுடன் அந்த பெண் சென்றால் எப்படி இருக்கும்?
அப்படி செல்வது கூட தவறில்லை- எங்கேயோ சில இடங்களில் நடக்கவே செய்யும். பிடிக்காத ஒரு ஆணுடன் விருப்பமில்லாமல் ஒரு பெண் வாழ்வது பிற்போக்குத்தனம் என கொள்ளலாம்.
ஆனால் Dude ல் என்ன நடக்கிறது? பெண்ணின் காதலன் - திருமணத்திற்கு முன்பே - அவளை மணக்க போகிறவனிடம் மேடையில் வைத்து சொல்கிறான்.. நீ கல்யாணம் பண்ணிக்கோ- ஆனால் நாங்கள் ரெண்டு பேரும் ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்து கொள்கிறோம் என ! என்ன கருமம் இது !
இதை விட கொடூரம் - அந்த 3 பேரும் ஒரே வீட்டில் வாழ்வதாய் தான் காட்டுகிறார்கள் ! பழைய காதலன் மூலம் அந்த பெண் திருமணத்திற்கு பின் குழந்தையும் பெற்று கொள்கிறாள் !
இரண்டாம் பாதியில் ஹீரோவின் மற்றொரு நண்பன் அவனை பார்க்கும் போதெல்லாம் காறி துப்புவதை பல முறை காண்பிக்கிறார் இயக்குனர்; மக்கள் இதையே தான் நம்மை பார்த்து செய்ய போகிறார்கள் என அவருக்கு ஏன் தோன்றவே இல்லை?
சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மீடியா.. சினிமா பார்த்து நல்லதை எடுத்து கொள்கிறார்களோ இல்லையோ - கெட்ட விஷயம் சர்வ நிச்சயமாய் இளம் தலைமுறை சிலராவது எடுத்து கொள்வர்.
இதே கதை ஒரு நாவலாக எழுதப்பட்டால் கூட - அது நன்கு படித்த - யோசிக்கும் தன்மையுள்ள மனிதர்களிடம் மட்டும் சென்றிருக்கும். சினிமா எனும்போது ஜெனரேஷன் Z - இது எல்லாமே இயல்பு தான் என்ற முடிவுக்கு வர மாட்டார்களா?
இவை அனைத்துக்கும் அடிப்படை ஆணவ கொலை என்கிறார்கள். ஆணவ கொலை தவறு தான் ! ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு மணி நேரம் வாந்தி வர வைக்கும் காட்சிகளை வைத்து விட்டு கடைசி 10 நிமிடம் ஆணவ கொலைக்கு பயந்தே இப்படி செய்தோம் என முடிப்பது என்ன நியாயமோ?
எனக்கு வருத்தமான இன்னொரு விஷயம் - இது பிரதீப் ரங்கநாதன் படம் + நீண்ட விடுமுறை என்பதால்- ஏற்கனவே போட்ட காசை எடுத்துவிட்டனர்; நிச்சயம் சில கோடி லாபத்துடன் அடுத்த 10 நாட்களுக்கு திரை அரங்கில் ஓடும் .. இது இயக்குனர் கீர்த்திஸ்வரன் மற்றும் பிரதீப்பிற்கு தாங்கள் செய்த தவறை உணர முடியாமல் செய்துவிடும் ..
பணம் தேவை தான் அதற்காக எப்படியும் சம்பாதிக்கலாமா பிரதீப் & கீர்த்தீஸ்வரன்? அடுத்த தலைமுறைக்கு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என சொல்லி கொடுத்து/ கெடுத்து தான் சம்பாதிக்க வேண்டுமா?
பிரதீப் மற்றும் கீர்த்திஸ்வரன் - தங்கள் சோசியல் மீடியாவில் மிக மகிழ்வாக வெற்றியை கொண்டாடுகின்றனர்; இத்தகைய இயற்கைக்கு எதிரான படங்கள் தான் ஓடும் என ஒரு க்ரூப் நிஜமாகவே ரூம் போட்டு யோசிக்க வைத்து விடலாம்- இந்த படம் !
இந்தியாவை உலக அரங்கில் பலரும் மதிக்க ஒரு முக்கிய காரணம் -நமது குடும்ப அமைப்பு; திருமணத்திற்கு பின் - ஒரு மனைவி - ஒரே குடும்பம் என பெரும்பான்மை மக்கள் வாழ்வது பிற்போக்கு தனம் அல்ல ! அது தான் இந்தியாவை மதிக்க வைத்திருக்கிறது
இப்படி எல்லாம் நடக்கவே இல்லையா? எடுத்தால் என்ன தப்பு என்றால்- மாஸ் மீடியாவில் எதை எடுக்க வேண்டும் என ஒரு சுய கட்டுப்பாடு படைப்பாளிக்கு வேண்டும். குடும்ப உறவுகளில் கூட சில நேரம் - தவறான உறவுக்குள் சிலர் போயிருக்க கூடும்.. அதனை glorify / justify செய்து முழுசாய் ஒரு படம் எடுத்தால் - இன்னும் எத்தனையோ பேருக்கு இது தவறில்லை என்ற எண்ணம் வர வைக்கும். சிந்துசமவெளி என்றொரு படம் இப்படி குடும்ப உறவை தவறாக காட்டி எடுக்கப்பட்டு பலரும் அதனை கடுமையாய் கண்டித்தனர்; இக்காலத்தின் சிந்துசமவெளி - Dude !
சாதாரண பார்வையாளராக - நாம் செய்ய கூடியது ஒன்று தான்.. தயவு செய்து புறக்கணியுங்கள் இத்தகைய படைப்புகளை !
அண்மை பதிவுகள்:


நல்ல விமர்சனம். இதற்கு முந்தைய படத்திலும் ப்ரேக் அப் எக்ஸ், டேட்டிங் இவற்றை சர்வசாதாரணமாக காட்டி இருந்தார். இன்னும் ஒரு படி மேலே போய் திருமணம் கடந்த திருமணத்திற்கு முந்தைய உறவுகள் இவை எல்லாம் வாழ்க்கையில் சகஜமாக நடைபெறுவதுதான் தவறு ஏதுமில்லை என்ற எண்ணத்தை இளம் மனதில் விதைக்கும் ஆபத்தான படமாகத்தான் இதுவரை வந்த விமர்சனங்களை வைத்து அறிய முடிகிறது.
ReplyDelete