Wednesday, September 18, 2013

வானவில் - வ. வா. சங்கமும், நரேந்திர மோடியும் !

மோடி Vs காங்கிரஸ் 

பா. ஜ. க மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க - இணையத்தில் மோடிக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து பலரும் எழுதி வருகிறார்கள்.

எனது இப்போதைய மன நிலையில் - மோடிக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் என்ன என்று தான் தோன்றுகிறது.

சிற்சில தவறுகள் அவர் செய்திருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்று கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். தவறே செய்யாதவர் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் - ஒருவர் கூட அரசியலில் இருக்க முடியாது

குஜராத் சென்று வந்த பல்வேறு நண்பர்களும் அந்த மாநிலம் அடைந்த வளர்ச்சியை சொல்லி சொல்லி வியப்பதை கேட்டுள்ளேன். இத்தனைக்கும் மத்தியில் அவருக்கு இணக்கமான கட்சி இல்லாத போதே அவர் தன் மாநிலத்தை இந்த அளவு கொண்டு சென்றுள்ளார்

காங்கிரஸ் ஆட்சி - மீது உள்ள வெறுப்பு மட்டுமே மோடியை ஆதரிக்க காரணம். அவர் ஒருவேளை ஆட்சிக்கு வந்து சொதப்பினால் - அவரை விமர்சிக்கவும், எதிர்த்து வாக்களிக்கவும் தயங்க மாட்டேன் !

பார்த்த படம் - வருத்தபடாத வாலிபர் சங்கம்

கிராமத்தில் நடக்கும் காதல் கதை.

சிவகார்த்திகேயன் நடிக்கத் துவங்கியிருக்கிறார் ( சம்பளம் 3 அல்லது 5 என்கிறார்கள்... !!)

காமெடி ஆஹோ ஓஹோன்னு இல்லை. அதான் பெரிய ஏமாற்றம்; இதனை காமெடி பட லிஸ்ட்டில் சேர்க்கவே முடியாது.

சிவாவிற்கு இணையான பாத்திரம் சத்யராஜுக்கு.

Photo: வருத்தபடாத வாலிபர் சங்கம்  

கிராமத்தில் நடக்கும் காதல் கதை. 

சிவகார்த்திகேயன் நடிக்கத்  துவங்கியிருக்கிறார் ( சம்பளம் 3 அல்லது 5 என்கிறார்கள்... !!) 

காமெடி ஆஹோ ஓஹோன்னு இல்லை. அதான் பெரிய ஏமாற்றம்; இதனை காமெடி பட லிஸ்ட்டில் சேர்க்கவே முடியாது  

சிவாவிற்கு இணையான பாத்திரம் சத்யராஜுக்கு.  

ஹீரோயின் ஸ்ரீ திவ்யா ஷோக்கா கீறார். முதல் படம்னு தெரியாத அளவு நல்லா நடிக்கிறார். கிளாமரும் சேர்த்துக்  கொண்டால் இந்த 26 வயது (நன்றி : விக்கி பீடியா) ஆந்திர அம்மணி தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் ! 

இமான் - இசை + பாடல்கள் - முதல் பெஞ்ச் ரசிகன் வரை சென்று சேர்க்கிறது. ஆனால் - நடிகர் விஜய் எந்த கெட் அப்பும் மாற்றாமல் எல்லா படத்திலும் நடிப்பதை போல, இமான் பாடல்கள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதைப் போல்  உணர முடிகிறது 

முதல் படத்தை மினிமம் கேரண்டியாக தந்து இயக்குனர் பொன்ராம் - சிறு வெற்றி பெற்றாலும் - அடுத்த படத்தில் நிச்சயம் இன்னும் இம்ப்ரூவ் செய்யணும் 

வ. வா. ச - டைம் பாஸ்.


ஹீரோயின் ஸ்ரீ திவ்யா ஷோக்கா கீறார். முதல் படம்னு தெரியாத அளவு நல்லா நடிக்கிறார். கிளாமரும் சேர்த்துக் கொண்டால் இந்த 26 வயது (நன்றி : விக்கி பீடியா) ஆந்திர அம்மணி தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் !

இமான் - இசை + பாடல்கள் - முதல் பெஞ்ச் ரசிகன் வரை சென்று சேர்க்கிறது. ஆனால் - நடிகர் விஜய் எந்த கெட் அப்பும் மாற்றாமல் எல்லா படத்திலும் நடிப்பதை போல, இமான் பாடல்கள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதைப் போல் உணர முடிகிறது

முதல் படத்தை மினிமம் கேரண்டியாக தந்து இயக்குனர் பொன்ராம் - சிறு வெற்றி பெற்றாலும் - அடுத்த படத்தில் நிச்சயம் இன்னும் இம்ப்ரூவ் செய்யணும்

வ. வா. ச - டைம் பாஸ்.

பெண்கள் Vs ஆண்கள்

மௌலி, ஊர்வசி மற்றும் தெய்வ திருமகள் குட்டிப்பெண் நடிக்கும் நரசுஸ் காபிக்கான விளம்பரம் இது.

அம்மா தனது சிறு பெண்ணுக்கு காபி போட சொல்லி தருகிறார். காபி போட்டு முடித்ததும் மிகச் சரியாக அப்பா உள்ளே நுழைந்து - காபியை குடித்து விட்டு " பேஷ் ! பேஷ் ! ரொம்ப நல்லா இருக்கு " என்கிறார்

" இதை இதை இதைத் தான் நாங்க எதிர்பார்த்தோம் " என கோரசாக சொல்கிறார்கள் அம்மாவும்,பெண்ணும் !

ஆணை நல்ல சாப்பாட்டால் குஷிபடுத்துவ்து பெண்ணின் பொறுப்பு ("" இதை இதை இதை தான் நாங்க எதிர்பார்த்தோம் " ) சாப்பிட்டு விட்டு கருத்து சொல்வது மட்டுமே ஆணின் வேலை என்ற பழமை ஊறிய சிந்தனையில் எடுக்கிறார்களே? இந்த மகளிர் அமைப்பெல்லாம் இதை தட்டி கேட்க மாட்டாங்களா?

விளம்பரம் இப்படி இருந்தால் என்ன?

அப்பாவும் பெண்ணும் காபி போட்டு, வேலைக்கு சென்று திரும்பும் அம்மாவிற்கு தருவது போலவும் - அதற்கு அம்மா கருத்து சொல்வது போலவும் காட்டியிருந்தால் வித்யாசமாய் இருந்திருக்கும் ! (எங்க வீட்டில் நடக்குறதை சொன்னேன் பாஸ் ! )

போஸ்டர் கார்னர்

கூகிள் பிளஸ்சில் உண்மை தமிழன் இத்தகவலை பகிர்ந்திருந்தார்... விருப்பமுள்ளோர் பயன்படுத்தி கொள்ளவும்.

தமிழின் சிறந்த படங்கள் இவை தானா என்று சிந்தித்தால் வருத்தமாய் இருக்கிறது. உதிரி பூக்கள், மூன்றாம் பிறை, நாயகன் போன்ற படங்களும் இருந்திருக்கலாம் !



சம்பவம் - உணவகம் அறிமுகம் தந்த நட்பு

எங்கள் வீட்டுக்கருகே இருக்கும் சூப்பர் ரெஸ்டாரன்ட் பற்றி சில வாரங்கள் முன்பு எழுதியிருந்தேன். பதிவு வந்த சில நாட்கள் கழித்து அந்த ஹோட்டல் ஓனரிடம் இருந்து " மிக்க நன்றி; கடை பக்கத்தில் தான் உங்கள் வீடு இருக்கு போல இருக்கு; இன்னொரு முறை வந்தால் சந்திக்கலாம் " என்று எழுதியிருந்தார்

தினம் ஆபிஸ் விட்டு வரும்போது அந்த ஹோட்டல் வழியே தான் வருவேன் என்பதால் ஒரு நாள் எட்டி பார்க்க - கடையின் ஓனரான அந்த இளைஞருக்கு ரொம்ப சந்தோஷம் " சார் நீங்க எழுதுனது நல்லா ரீச் ஆகுச்சு சார். போட்ட புகைப்படத்தில் எங்க போன் நம்பரும் இருந்தது Facebook ல் படிச்சிட்டு நிறைய பேர் கால் செஞ்சாங்க.

ரொம்ப தூரத்தில் இருந்து கால் செஞ்சுட்டு 2,3 பேரு வந்தாங்க. வந்த நேரம் கரண்ட் இல்லை. பேட்டரி வேற டவுனு. அவங்களை நல்ல திருப்தியா சாப்பிட வைக்க முடியலையேன்னு கஷ்டமாகிடுச்ச்சு சார் " என்றார்

தொழிலில் உள்ள சிரமங்கள் பற்றியெல்லாம் நீண்ட நேரம் மனம் விட்டு பேசியவர் ரொம்ப தோஸ்த் ஆகிட்டார். " சார் இன்னொரு பிரண்டு இல்லை; அவன்தான் உங்களை பாக்கனும்னு சொல்லி மெயில் அனுப்பினான். இந்த நேரம் இல்லாம போயிட்டான் " என்று அன்புடன் சொல்ல, எங்கோ ஓரத்தில் எழுதுறது எத்தனை பேரை தொட்டு விடுகிறது !

வித்யா போஷக் -வெங்கி

வித்யா போஷக் என்கிற தொண்டு நிறுவனம் மூலம் சேவைகள் பல செய்யும் வெங்கி அவர்களிடமிருந்து வந்துள்ள தகவல் 

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.வித்யா போஷக் தொண்டு நிறுவனத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன். 'Give India Challenge' போட்டியில் வித்யா போஷக் பங்கெடுத்துள்ளது. இப்போட்டியில் இருநூறு தனிப்பட்ட நன்கொடைகளை முதலாவதாக நாங்கள் பெற்று விட்டால், ரூ.2,00,000.00 வெல்லும் வாய்ப்புக்கிட்டும்.

ரூ.100 அளவிலான உங்கள் ஒவ்வொருவரின் எளிய நன்கொடையானது 502 பட்டதாரி, கிராமப்புற மாணவர்களை வேலைக்கான தகுதியுள்ளவர்களாக மாற்றும் வல்லமையை எங்களுக்குத் தரக்கூடியது. எங்கள் பயிற்சி குறித்த மேலதிக விவரங்களை இணைத்துள்ள கோப்பில் பார்க்கலாம்.

தற்போது வித்யா போஷக் இப்போட்டியில் 48 தனிப்பட்ட நன்கொடைகளுடன் முதலாவது இடத்தில உள்ளது. நாங்கள் ஊக்கதொகையான ரூ 2,00,000.00 வெல்ல இன்னும் 152 பங்களிப்பாளர்கள் கூடுமானவரை விரைவாக வித்யா போஷக் நிறுவனத்துக்கு வழங்க வேண்டுகிறேன்.

உங்கள் பங்களிப்பு ரூ. 100 முதலானதாக இருக்கலாம்..கீழ்க்கண்ட தொடுப்புகள் மூலம், நெட் பாங்கிங், கடன் அட்டை அல்லது டெபிட் கார்டு வாயிலாக உங்கள் பங்களிப்பை வழங்க இயலும். http://www.giveindia.org/iGive-NurtureMerit

இத்தகவலை உங்கள் நண்பர்களிடமும், இணையத்திலும் பகிர வேண்டுகிறேன். கீழ்க்கண்ட இணைப்பின் வாயிலாக Give India Challenge' போட்டியில் எங்கள் தற்போதைய நிலையைக்காணலாம். http://www.giveindia.org/t-india-giving-challenge-2013-league-standings-challengers-overall.aspx

வித்யா போஷக் மூலம் நடக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவது குறித்து வெங்கி அவர்களிடமிருந்து வந்துள்ள மெயில் இது

Dear Friends,

We have created simple Online tests using google forms and sending weekly two tests / assignments to the Economically Challenged final year BA / BCOM / BSC degree students who are looking for a job in Service sector, KPO & BPO's or Govt Jobs or Bank jobs etc

You could see the sample aptitude tests here http://vpcareeroptions.blogspot.in/p/blog-page.html

Also our blog http://vpcareeroptions.blogspot.in/

Initially we met the rural college students for one to one counseling initial training. After the counseling we prepared their profiles and then started with online training through Email. This will go on till June 2014 and once their results come we will arrange for Campus interviews for them in our offices.

Our plan is to provide them a GPRS enabled handset so that we can give them a test every day. We are planning for mobile application for the online tests.

If members of this group is Interested to take it to rural colleges near your places we can jointly do this and train Rural students for making them job ready. I will provide all the materials for the same and we can add the students in our mailing list for online tests.
Thanks
Venky

அய்யாசாமி கார்னர் 

அய்யாசாமி தற்போது தினம் வீடுதிரும்பலில் பதிவு எழுதலையே ஒழிய - ஒவ்வொரு நாளும் வேறு ஒரு பதிவு எழுதி கொன்று கொண்டிருக்கிறார்.

புதிய கம்பனி சட்டம் வந்தமையால் - அது பற்றி ஆங்கிலத்தில் தினம் ஒரு கட்டுரை எழுதி முகநூல் மற்றும் கம்பனி செகரட்டரி சர்கிள்களில் அடிச்சு விடுறார்.

Mrs. அய்யாசாமி பொறுத்து பொறுத்து பார்த்தார் - இந்த மனுஷனிடம் பேசுறதுன்னா கணினி மூலம் தான் பேசணும் போலன்னு கஷ்டப்பட்டு முதல்முறையா தனியா ஒரு மெயில் ஐ. டி கிரியேட் செய்துட்டார். அதிலிருந்து அய்யாசாமிக்கு மெயில் அனுப்பினா மனுஷன் படிச்சுட்டு " ஓகே அப்ரூவ்ட் ; யூ மே ப்ரோசீட் " ன்னு பதில் அனுப்புறார் !

இது பற்றி அய்யாசாமி: " வீட்டில் பிரச்சனையான மேட்டர் பேசினா சண்டை தான் வரும்; அம்மணி இப்படி மெயில் அனுப்பினா, பெரிய சண்டை இல்லாம எல்லா விஷயமும் ஈசியா முடிஞ்சுடுது !"

ஒரு மார்க்கமா தான் போயிக்கிட்டு இருக்கார்.. என்னிக்கு மேடம் பொங்க போறாங்களோ - மனுஷன் அடங்க போறாரோ தெரியலை !

7 comments:

  1. Present Sir....
    அப்படி... இன்னைககவது ஃபர்ஸ்ட் ஆஜர்.... யாரும் எதிர் பார்க்காத டைம் ல ஃபர்ஸ்ட் presnt....

    ReplyDelete
  2. Present Sir....
    அப்படி... இன்னைககவது ஃபர்ஸ்ட் ஆஜர்.... யாரும் எதிர் பார்க்காத டைம் ல ஃபர்ஸ்ட் presnt....

    ReplyDelete
  3. //ஒரு மார்க்கமா தான் போயிக்கிட்டு இருக்கார்.. //

    அதானே.....

    ReplyDelete
  4. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக சகோ மோகன்குமார்,

    //அவர் அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்//

    இதற்கான ஆதாரத்தை தர முடியுமா? தங்களின் பதில் கண்டுவிட்டு தாங்கள் மோடி குறித்து கூறியுள்ள மற்றவற்றிற்கு வருகின்றேன்.

    நன்றி...

    ReplyDelete
  5. Anonymous2:12:00 PM

    நரேந்திர மோடி அமைச்சரவையில் இஸ்லாமியர் எவரும் இல்லை. சென்ற ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட அவர் சீட் தரவில்லை.

    http://www.ndtv.com/article/assembly-polls/gujarat-elections-no-muslim-on-narendra-modi-s-poll-list-299136

    ReplyDelete
  6. ஆஷிக் & சிவா: தவறை திருத்தியமைக்கு நன்றி

    சென்ற ஆண்டுக்கு முன் வரை பல இஸ்லாமிய எம். எல் . ஏக்கள் அவர் கட்சியில் இருந்ததாக ஓர் ஆர்டிகிள் படித்தேன் ; அந்த நினைவில் தான் எழுதினேன். மன்னிக்க !

    ReplyDelete
  7. @ மோகன்குமார்,

    தவறை உணர்ந்துக்கொண்டதற்கு நன்றி. ஆனால், பதிவில் ஏன் மாற்றம் செய்யவில்லை?

    //சென்ற ஆண்டுக்கு முன் வரை பல இஸ்லாமிய எம். எல் . ஏக்கள் அவர் கட்சியில் இருந்ததாக ஓர் ஆர்டிகிள் படித்தேன்//

    இதுவும் தவறே...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...