Sunday, September 30, 2012

Who moved my cheese - சுய முன்னேற்ற புத்தக விமர்சனம்

Who moved my Cheese- மிக சிறிய ஆனால் செறிவான புத்தகம்.

கதை வடிவில் சுய முன்னேற்ற கருத்துகள்  சொல்லும் இந்நூலை  எழுதியவர் ஸ்பென்சர் ஜான்சன்.

கல்லூரி படிப்பை முடித்து சில வருடங்கள் கழித்து சில நண்பர்கள் சந்திக்கிறார்கள். யார் யார் எந்த நிலையில் உள்ளனர் என்று பேசி கொள்கின்றனர். இதை சொல்லி விட்டு நேரே ஒரு கதைக்குள் நுழைகிறார் ஆசிரியர்.

நான்கு குட்டி எலிகள் ஒரு இடத்தில் உள்ள Cheese-ஐ மகிழ்வுடன் உண்டு வருகின்றன. இவை நான்கின் குணாதிசயமும் விரிவாய் சொல்லப்படுகிறது. எலிகளுக்கு என்று வெவ்வேறு பெயர்கள் சொல்கிறார்கள். இந்த பெயர்கள் அந்நியமாய் இருப்பதால் நாம்  A, B, C & D என்று எடுத்து கொள்வோம். இதில் A மற்றும் B சற்று புத்திசாலி மற்றும் சுறுப்பான எலிகள். C மற்றும் D சற்று சோம்பேறி எலிகள்.

C மற்றும் D எப்போதும் சீஸ் கிடைக்கும் என உறுதியாய் நம்புகின்றன. ஆனால் A -யும் B-யும் சீஸ் ஸ்டேஷனில் என்ன நடக்கிறது என உற்று கவனிக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் சீஸ் ஸ்டேஷனில், சீஸ் கிடைப்பது குறைகிறது. இதனால் A , B அந்த சீஸ் ஸ்டேஷனை விட்டு வேறு சீஸ் ஸ்டேஷன் தேடி அலைந்து, சற்று சிரமத்துக்கு பின் ஒரு நல்ல சீஸ் ஸ்டேஷன் சென்று சேர்ந்து விடுகின்றன.

C -யும் D -யும் எந்த கவலையும் இன்றி இருக்கும் சீஸ் சாப்பிட்டு வருகின்றன. அங்கு சீஸ் கொஞ்சம் கொஞ்சமாய் காலி ஆனது பற்றி கூட அவர்களுக்கு மிக தாமதமாய் தான் தெரிகிறது. ஒரு நேரத்தில் சுத்தமாய் சீஸ் தீர்ந்து விடுகிறது. அதன் பின்னும் C & D அந்த இடத்துக்கு தினம் வந்து பார்த்து செல்கின்றன.

ஒரு நிலையில் இங்கு சீஸ் கிடைக்காது என D இங்கிருந்து வேறு இடம் தேடி போகலாம் என்கிறது. ஆனால் C " நமக்கு வயதாகி விட்டது. இனி வேறு இடம் தேடி போக முடியாது. நாம் என்ன தப்பு செய்தோம்? நமக்கு கொஞ்ச நாளில் இங்கேயே சீஸ் கிடைக்கும்" என்கிறது.

வேறு வழியின்றி C ஐ விட்டு விட்டு D அங்கிருந்து வேறு இடம் தேடி செல்கிறது. மிக சிரமத்க்கு பின் நல்ல சீஸ் ஸ்டேஷன் ஒன்றை பார்க்கிறது. அங்கு தான் அதன் பழைய நண்பர்கள் A மற்றும் B உள்ளனர். கொஞ்ச நாளில் C யும் கூட இந்த சீஸ் ஸ்டேஷனை தேடி வர கூடும் என்று D நினைப்பதுடன் குட்டி கதை முடிகிறது.

பின் நண்பர்கள் இந்த கதை குறித்து பேசி கொள்கிறார்கள். இந்த கதையில்,  தான் எந்த பாத்திரத்தை ஒத்து போகிறேன்; கதையில் சொன்னது போன்ற சம்பவம் தனக்கு என்ன நடந்தது, தான் அப்போது எப்படி நடந்து கொண்டேன் என பேசுகிறார்கள். மிக சுவாரஸ்யமான இந்த உரையாடலுடன் கதை நிறைவடைகிறது

கதை சொல்கிற முக்கிய விஷயம் : உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கூர்ந்து கவனியுங்கள் ! மாறுதலுக்கு தயாராகுங்கள் .. என்பதே.

கதையை படிக்கும் அவரவருக்கும் அவரவர் அப்போது சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வு எதோ ஒரு இடத்தில் கிட்ட வாய்ப்புகள் அதிகம்.

நான் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அப்போதைய பிரச்னையை மனதின் பின்புலத்தில் வைத்து கொண்டு படிப்பேன். நிறைய புது விஷயமும் தீர்வும் கிடைக்கும்.

**********
புத்தகத்தில் சொல்லப்பட்ட சில அழகிய வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு (ஆங்கிலத்தில் படித்த நூலின் தமிழாக்கம் தருகிறேன். அது சரியாக இருக்குமோ இல்லையோ என்கிற எண்ணத்தில் அதன் ஆங்கில மூலமும் சேர்த்து தருகிறேன். பொறுத்தருள்க !):

##  நீங்கள் மாறா விடில், அழிந்து தான் போவீர்கள் (If you do not change, you can become extinct).

*** சில நேரம் வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறி விடும். பின் அவை முன்பு போல் இருக்கவே இருக்காது. வாழ்க்கை இப்படி தான் இருக்கும் ! நகர்ந்து சென்று கொண்டே இருக்கும் வாழ்க்கை ! அதனுடன் சேர்ந்து நாமும் நகரத்தான் வேண்டும் ! (Sometimes things change and they are never the same again. That's life ! Life moves on ! And so should we !)

## உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கவனித்தபடியே இருங்கள். அப்போது தான் பிரச்னை ஆரம்பிக்கும் போதே நீங்கள் சீக்கிரம் உணர முடியும்

*** சிறு மாறுதல்களை சீக்கிரம் உணர்வது பெரிய மாற்றங்களுக்கு உங்களை தயார் படுத்தி விடும் ( Noticing small changes early helps you adapt to the Bigger changes that are to come)

## மாறுதல்களை சந்தோஷமாக அனுபவியுங்கள். புது அனுபவம் மற்றும் சவால்களுக்கு தயங்காதீர்கள் ( Enjoy the change ! Savor the Adventure and Enjoy the taste of New cheese!)

*****
நான் இதுவரை படித்தவற்றில் ஒரு மிக சிறந்த புத்தகம் என்றும், ஒவ்வொரு மனிதரும் தவற விடாமல் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் நிச்சயம் பரிந்துரைப்பேன் !

புத்தகம் இணையத்திலேயே PDF மற்றும் PPT வடிவில் இலவசமாக கிடைக்கிறது.தேடிப் பார்த்து அவசியம் வாசியுங்கள் இந்த அரிய புத்தகத்தை !
*****
திண்ணை ஆகஸ்ட் 13, 2012  இதழில் வெளியானது 

36 comments:

  1. என்னது...இங்லிஷ் புக்கா...இருங்க வாரேன்....

    ReplyDelete
  2. சின்ன புக்கு தான் ஜீவா. தமிழிலும் வந்திருக்கு. நான் படிச்சது ஆங்கிலத்தில் அம்புட்டு தான் :)

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. interesting book review and useful to.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகம். தேடிப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  6. தேடுவோமே நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  7. சின்ன புக்னா தேடிப் பார்த்து வாசிக்கிறேன். :)

    ReplyDelete
  8. ஏற்கெனவே படித்து ரசித்திருக்கிறேன்
    தங்கள் மதிப்புரை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. ஒரே மூச்சில் முதல் தடவை படிச்சுட்டு அப்புறம் நிதானமாக ரெண்டு தடவை படிச்சுருக்கேன்...நல்லா எழுதிருக்ககீங்க!

    ReplyDelete
  10. தேடித் பிடித்து படிக்க முயற்சி செய்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  11. நல்ல புத்தகம் , ஒவ்வொரு முறை பொருளாதார சீர்குலைவு வரும்போதும் சஞ்சலத்தில் இருப்பவர்களை சமாதானம் செய்யக் கூடியது. அமெரிக்காவில் , சில நிர்வாகத் தலைவர்கள் தங்கள் துறை ஊழியர்களுக்கு இதனை பரிசாக வழங்குவார்களாம் அவர்களில் சிலரை வேலையை விட்டு தூக்குவதற்கு முன்னால். யுடூப் இல் விடீயோவாகவும் கூட பல மொழிகளில் உலா வருகிறது இந்த புத்தகம்.

    பதிவர்களுக்கு கண்ணதாசன் சொன்ன அறிவுரை!

    ReplyDelete
  12. anticipate changes, adapt , enjoy the change and be ready .. ..

    இந்த புத்தகம் இங்கே எல்லா லைப்ரரிலையும் விஷ் லிஸ்டில் இருக்கு secondary மற்றும் ஸிக்ஸ்த் பாரம் செல்லும் பிள்ளைகள் கண்டிப்பா படிக்க இங்கே ரெகமன்ட் செய்றாங்க மோகன் ..நானும் படிச்சிட்டேன் என் பொண்ணு எடுத்தப்போ:))

    ReplyDelete
  13. மிக நல்ல புத்தகம்...

    படித்திருந்தாலும் பல பேர் அறிய பதிவு செய்து செய்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  14. இது தமிழில் வருமுன்காப்பான், வந்தபின்காப்பான், வந்தபின்னும் காவதான் என்று பறவைகளை வைத்து சொல்லப்பட்ட கதையாக வந்துள்ளது.

    ReplyDelete
  15. தமிழில் இந்தப் புத்தகம் ‘எங்கே போனது என் அல்வா துண்டு?’ என்கிற வித்தியாசமான டைட்டிலில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ‘புதிய தலைமுறை’ இதழில் முதன்முதலாக எழுதப்பட்ட புத்தக விமர்சனம் இந்த புத்தகத்துக்குதான்.

    ReplyDelete
  16. சுயமுன்னேற்றப் புத்தகமாக இல்லாமல் கதையைக் கூறி படிக்கத் தூண்டுகிறீர்கள். நல்ல முயற்சி! நன்றிகள்

    //நீங்கள் மாறா விடில், அழிந்து தான் போவீர்கள் (If you do not change, you can become extinct)//
    இதில் ‘அழிந்து போவீர்கள்’ என்பதை விட ’காணாமல் போவீர்கள்’ என்பது சரியாக இருக்குமோ?

    ReplyDelete
  17. நன்றி வரலாற்று சுவடுகள். நீண்ட நாள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றி

    ReplyDelete

  18. நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete

  19. சசி; ஆம் படியுங்கள்

    ReplyDelete
  20. ஹாலிவுட் ரசிகன்: ஒரு மணி நேரத்தில் படிச்சிடலாம் நண்பா

    ReplyDelete

  21. நன்றி ரமணி சார் மகிழ்ச்சி

    ReplyDelete
  22. அருணா: ஆம்; ஒரே மூச்சில் படிக்க வைக்கும் புத்தகம்

    ReplyDelete

  23. முரளி சார்: ஆம் படியுங்கள் நன்றி

    ReplyDelete
  24. இளைய தர்ஷன்

    //ஒவ்வொரு முறை பொருளாதார சீர்குலைவு வரும்போதும் சஞ்சலத்தில் இருப்பவர்களை சமாதானம் செய்யக் கூடியது. அமெரிக்காவில் , சில நிர்வாகத் தலைவர்கள் தங்கள் துறை ஊழியர்களுக்கு இதனை பரிசாக வழங்குவார்களாம் அவர்களில் சிலரை வேலையை விட்டு தூக்குவதற்கு முன்னால். யுடூப் இல் விடீயோவாகவும் கூட //

    தகவலுக்கு நன்றி !

    ReplyDelete
  25. ஏஞ்சலின் : உங்க பொண்ணா? குயப்பமா கீது :)

    ReplyDelete

  26. நன்றி தனபாலன்

    ReplyDelete
  27. அப்படியா? நன்றி வைகை

    ReplyDelete
  28. எங்கே போனது என் அல்வா துண்டு?’ என்பது செம கேட்சி ஆன பெயர். நன்றி லக்கி

    ReplyDelete
  29. சீனி: நீங்கள் சொன்னது சரியே. மாற்றி விடுகிறேன்

    ReplyDelete
  30. தங்களின் வரிகள் மூலம் நல்ல புத்தகம் என்று தெரிகிறது. வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கிறேன்.

    என்னுடைய இன்றைய பதிவு ”சில இடங்களில் சில மனிதர்கள்” அப்டேட் ஆகவில்லை.

    ReplyDelete
  31. படிக்க நினைத்திருந்த புத்தகம். இணையத்தில் கிடைக்கிறது என்பதால் சீக்கிரம் படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  32. அருமையான புத்தகம் நீங்கள் கூறுவது போல் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொன்றை தெரிந்து கொண்டேன் . உங்கள் விமர்சனம் அதனை முழுமையாக்கியுள்ளது. நன்றி. நானும் என் முக நூலில் இதனை பகிர்கிறேன்

    ReplyDelete
  33. nice review very good sir

    ReplyDelete
  34. nice review very good sir

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...