Thursday, August 30, 2012

மாநாடு கவியரங்கம்:ஓடுங்க! அது நம்மை நோக்கிதான் வருது!

ன்றைய பதிவில் மாநாட்டில் வெளியான புத்தகம் மற்றும் கவியரங்க புகைப்படங்கள் :
மதிய நிகழ்வுக்கு வரவேற்புரை வாசிக்கிறார் பாலகணேஷ் 

தென்றலின் கனவு புத்தகம் பி.கே.பி வெளியிட சேட்டைக்காரன் பெற்று கொள்கிறார் 

தென்றலின் கனவு புத்தகம் பற்றி பேசுகிறார் கணக்காயன் ஐயா 

கவியரங்கில் கவிதை வாசிக்கும் மகேந்திரன் 


அரசன் வாசிக்கும் மௌன கவிதை 

கவிதை வீதி சவுந்தர் கவிதை...

ஹீரோ ஆப் கவியரங்கம் டாக்டர். மயிலன் கவிதை 


மயிலன் கவிதை சாதாரண கான்செப்ட் தான். எத்தனை முறை காதலிச்சோம் கடைசியில் வீட்டில் பார்த்தவங்களை கல்யாணம் பண்ணிக்கிறோம் ! இந்த ஆட்டோ கிராப் மேட்டர்   தான் அவர் கவிதை . நானும் கூட என்னோட காதல்கள்  பத்தி இப்படி ஒரு கவிதை எழுதிருக்கேன்   எப்பயாவது போட்டுடலாம் இங்கே - எல்லாம் கல்யாணத்துக்கு முந்தி தான். நவ் ஒன்லி ஹவுஸ் பாஸ்  :))

சரி மயிலன் கவிதைக்கு வருவோம் ! கவிதை சொல்லப்பட்ட விதம் (Presentation) அருமை ! பின்னர் மயிலன் தன் ப்ளாகில் பகிர்ந்தார். அதை விட அவர் படிச்சப்போ தான் ரொம்ப பிடிச்சது. முடிச்சுட்டு இறங்கும் போது அவருக்கு பட்டுக்கோட்டை கை கொடுத்தார். அரங்கம் கரகோஷதிலும் சிரிப்பிலும் மகிழ்ந்தது நான் மேடை படியில் எப்போ இறங்குவார் என காத்திருந் து அடுத்து கை கொடுத்தேன் .  டாக்டர் மயிலன் மற்றும் அவரை கரம் பிடிக்க போகும் செல்வி. அனுஷ்யாவிற்கு வாழ்த்துகள்
கவிதை வாசிக்கிறார் பதிவர் ரிஷ்வன்

ரமணி ஐயா கவிதை  வாசிக்கிறார் 

வாங்க ப்லாகலாம் அனந்து கவிதை 

கவிஞர் தேவாதி ராஜன் கவிதை வாசிக்கிறார் 

எங்க மடிப்பாக்கத்தை கவியரங்க சரித்திரத்தில் இடம் பெற வைத்த                     மடிப்பாக்கம் T .N முரளி தரன் 

புரட்சி மணி (பேர் கரீட்டா சொல்றேனா?) கவிதை வாசிக்கிறார் 

போளூர் வரதன் கவிதை வாசிக்கிறார்  (அண்ணே Different Get up  என்பதால்   உங்களை புல் போக்கசில் படம் பிடிச்சேன் அண்ணே )

இவரு சும்மா தான் பேரு கொடுத்திருக்கார். கவிதை படிக்க மாட்டார் என அனைவரிடமும் பெட் கட்டி ஏமாந்தேன். கவிதை  ஓரளவு   நல்லாருந்தது.       "கேபிள் மண்டபத்தில் யாரும் எழுதியதா?" என கேட்டேன். " நானே தான் எழுதியது" என்றார் என்டர் கவிஞர் கேபிள் 
***
டிஸ்கி 1: கோவை சரளா, அகிலா கவிதை வாசிச்ச படங்கள் ஏற்கனவே பதிவுகளில் போட்டாச்சு. So அவை இங்கே இல்லை

டிஸ்கி 2: பி.கே.பி சீரியஸா இருக்குற போட்டோ போட்டேனே. அது கவியரங்கில் எடுத்தது தான் :))


டிஸ்கி 3: இன்று முழு நாள் மற்றும் நாளை மதியம் ரெண்டு மணி வரை இணையத்தில் இருக்க மாட்டேன். இன்று ஒரு செமினார் அட்டென்ட் பண்றேன். நாளை செமினார் எடுக்கிறேன்.
ஜாலியா இருங்க ! பீ ஹாப்பி ! 

41 comments:

  1. கவிஞர்களின் தொகுப்பு... அருமை...

    உங்களின் 'ஆட்டோ கிராப் கவிதை' அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்...

    டாக்டர் மயிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி... (TM 2)

    ReplyDelete
  2. கவிஞர்களின் தொகுப்பு... அருமை...

    உங்களின் 'ஆட்டோ கிராப் கவிதை' அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்...

    டாக்டர் மயிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி... (TM 2)

    ReplyDelete
  3. அட! என் ஃபோட்டோவும் வந்துடுச்சி

    ReplyDelete
  4. எல்லா! போட்டோக்களும் அசத்தல்!

    ReplyDelete
  5. ஆஹா... கவிதை படித்த கவிதைகள்... :)

    அது சரி... புகைப்படம் தானே போட்டீங்க, கவிதை போடலையே - அப்புறம் எதுக்கு ஓடணும்... :)))

    த.ம. 3

    ReplyDelete
  6. // உங்களின் 'ஆட்டோ கிராப் கவிதை' அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்... //

    ஐயய்யோ ! மேடம் ஆபீசுக்கு லீவில் இருக்கும் போது தான் போடணும் ! :))

    ReplyDelete
  7. அனைவரையும் புகைப்படம் எடுத்து அதை வெளியிடும் உங்கள் திறன் பாராட்டுக்கு உரியது

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி நண்பரே! சகோ.சசிகலா சங்கரின் கவிதைத் தொகுப்பினை திரு.பட்டுக்கோட்டை பிரபாகரிடமிருந்து பெற்ற அனுபவம் நினைத்தாலே இனிக்கிறது. சகோதரியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவியரங்கம் கட்டிக்கரும்பாய் இனித்தது. மறக்க முடியாத அனுபவங்கள்! நன்றி!

    ReplyDelete
  9. அசத்தல்.
    படங்கள் அழகு .

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி சார்..

    ReplyDelete
  11. நினைவுகளை மீள் பிரசுரம் செய்கிறது படங்கள்

    உங்களின் சுறுசுறுப்பை இரும்புடன் ஒப்பிட முடியும் ..........தொடருங்கள்

    ReplyDelete
  12. இனிய நினைவுகளை தொடர்ந்து
    மிக மிக அருமையாகப் பதிவு செய்து
    எங்களை தொடர்ந்து அந்த இனிய சுகத்தில்
    திளைக்கச் செய்யும் தங்களுக்கு
    எங்கள் மனமார்ந்த நன்றி

    ( எதையும் கனக் கச்சிதமாய் அழகாய் விரைவாய்
    செய்யும் நேர்த்தியை தங்களிடம்தான்
    கற்கவேண்டும் என்கிற எண்ணத்தை
    எனக்கு தங்கள் பதிவர் சந்திப்புச் செயல்பாடுகள்
    உணர்த்திய்து )

    ReplyDelete
  13. அது நான்தானுங்கோ... ரிஷ்வன்... பேர கேட்டு போட்டு இருக்கலாம் .. நன்றி

    ReplyDelete
  14. போட்டோ எடுக்கும் போதே கமெண்ட்டும் யோசிசிடீன்களா :-)

    ReplyDelete
  15. ஹா ஹா தேங்க் காட்.நான் தப்பிச்சுட்டேன். நீங்கலாம் சிக்கிக்கிட்டீங்க.

    ReplyDelete
  16. கோவை மு சரளா said...

    உங்களின் சுறுசுறுப்பை இரும்புடன் ஒப்பிட முடியும்
    **
    கவிதாயினி.. இரும்பா? எறும்பா?

    ReplyDelete
  17. Suresh Subramanian said...

    அது நான்தானுங்கோ... ரிஷ்வன்... பேர கேட்டு போட்டு இருக்கலாம் .. நன்றி

    ***
    மன்னிக்க ! சேர்த்துட்டேன்

    ReplyDelete
  18. ஆல் பிரண்ட்ஸ் பை பை மீட்டிங் போறேன். உங்கள் கருத்துக்கள் மாலை படிக்கிறேன்

    ReplyDelete
  19. பகிர்விற்கு நன்றி..

    உங்க ஆட்டோகிராப் கவிதையை எதிர்பார்க்கிறோம். ஆமா,.. ஹவுஸ் பாஸ் வீட்ல இருக்கற நேரம் பார்த்து வெளியிட முடிவு செஞ்சுருக்கறதுக்கு ஏதாவது பாதுகாப்புக் காரணங்கள் இருக்கா :-)))

    ReplyDelete
  20. Anonymous12:24:00 PM

    புகைப்படங்கள் அனைத்தும் நிகழ்வை ஞாபகப்படுத்தின்....


    இவ்வளவு போட்டோ எடுத்தீங்க.. என்ன ஒரு போட்டோ எடுக்காம விட்டுட்டீங்களே :)

    நாங்களும் கவிதை வாசிச்சோம்ல

    ReplyDelete
  21. கவிதை படிக்க முடியாவிட்டாலும் கவிஞர்களைத் தெளிவாய் பிரசுரம் செய்துள்ளீர்கள்...
    நன்றி...

    ReplyDelete
  22. அட... என் முகமும் இங்க. கவிதை எழுத வராட்டியும் கவிஞர்கள் படம் வந்த போஸ்டில் என் படத்தையும் பாத்ததுல சந்தோஷம். நன்றி மோகன்.

    ReplyDelete
  23. தென்றலாய் வருடிச்செல்லும் அழகிய கவிதைப்பகிர்வுக்கு [பதிவுக்கு], படங்களுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  24. //புரட்சி மணி (பேர் கரீட்டா சொல்றேனா?)//
    மெய்யாலுமே கரீட்டு தலிவா :)
    பகிர்வுக்கு மிக்க நன்றி :)
    எங்க ஓடினாலும் விடமாட்டோம்ல
    முழுக்கழுதைய சீ.. கவிதைய வாசிக்க
    http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/

    ReplyDelete
  25. பார்த்தேன்..ரசித்தேன்...நன்றி

    ReplyDelete
  26. கவியரங்கத்தை பற்றிய ஒரு தனி பதிவை உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்...
    ஆனால் அது இவ்வாறு என்னை கூச்சப்பட்டு நெகிழவைக்கும் அளவிற்கு இருக்குமென எதிர்பார்க்கல... மிக்க நன்றி நண்பரே...
    உங்களின் கவிதைக்கு வெயிட்டிங்...:)

    ReplyDelete
  27. நன்றி திண்டுக்கல் சார்....

    ராஜி அக்கா... உங்களுக்கு போன் பண்ணி வாசிக்கிறேன் இருங்க...:)

    ReplyDelete
  28. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நான் கவிதை வாசித்து... நீங்கள் எல்லாம் அதைக் கேட்டு சங்கோஜம் படக்கூடாதுன்னு தான் நான் விழாவிற்கே வரவில்லை....

    (அப்ப்பா... நல்ல ஐடியா கிடைச்சுது,)

    ReplyDelete
  29. பதிவர்கள் பலரினை இந்த பதிவில் அறிந்துகொள்ள முடிந்தது! அருமையான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

    ReplyDelete
  30. அருமையான பதிவு.
    நிறைய படங்கள்; நிறைய விளக்கங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  31. நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்த பதிவர் மாநாடு பதிவுகளுக்கு மட்டும் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லலை. அன்பாலும் பின்னூட்டத்தாலும் அரட்டுறீங்க. ஏதாவது கேள்வி மாதிரி கேட்டோருக்கோ/ சிலர் பின்னூட்டம் பற்றி பேசுனும்னாலோ மட்டும் பதில் சொல்றேன். மிஸ்டேக் பண்ணிக்காதீங்க

    ReplyDelete
  32. ரமணி சார்: உங்கள் வார்த்தைகள் கவிதைக்கு பொய் அழகு போல இருக்கு. இருந்தாலும் மகிழ வைக்குது நன்றி சார்

    ReplyDelete
  33. அமைதி சாரல்: " எல்லா முன்கதை சுருக்கமும்" ஹவுஸ் பாசுக்கு தெரியும். அந்த கவிதை (??) படிச்சிட்டு எங்களுக்குள் வீணா ஒரு சின்ன விவாதம் கூட வர வேண்டாம்னு ஒரு நல்ல எண்ணம் தான் மேடம் படிக்காத நேரத்தில் பதிவு போட நினைக்கும் காரணம் :)

    ReplyDelete
  34. ஷீ-நிசி said...

    இவ்வளவு போட்டோ எடுத்தீங்க.. என்ன ஒரு போட்டோ எடுக்காம விட்டுட்டீங்களே :) நாங்களும் கவிதை வாசிச்சோம்ல
    **
    அட ஆமாம் ஷீ-நிசி அப்பப்போ சின்ன சின்ன விஷயத்துக்கு அங்கிட்டும் நான் இங்கிட்டும் ஓட வேண்டியிருந்ததை அன்னிக்கு பாத்திருப்பீங்க. அதான் மிஸ் ஆகிடுச்சு; போட்டோகிராபர் எடுத்த படம் சீக்கிரமே வரும். நண்பர்கள் பகிர்வார்கள்

    ReplyDelete
  35. மயிலன் said...

    உங்களின் கவிதைக்கு வெயிட்டிங்...:)
    ***
    க்கும்.. இதுக்கா வெயிட் பண்னோமுன்னு நினைக்க வைக்காம இருந்தா சரி :))

    ReplyDelete
  36. AROUNA SELVAME said...

    நான் கவிதை வாசித்து... நீங்கள் எல்லாம் அதைக் கேட்டு சங்கோஜம் படக்கூடாதுன்னு தான் நான் விழாவிற்கே வரவில்லை....

    **
    நீங்க சென்னையிலா இருக்கீங்க?

    ReplyDelete
  37. உங்களின் அபார உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    ReplyDelete
  38. இன்னும் படங்கள் இருக்கா ........?

    ReplyDelete
  39. Sasi Kala said...

    இன்னும் படங்கள் இருக்கா ........?

    **

    கொஞ்சம் இருக்கு. இதுக்கு பிறகு ஒரு பதிவு போட்டேன் பாருங்க. அதை தவிர நான் எடுத்த எல்லா படமும் மதுமதிக்கு அனுப்பியாச்சு

    இதுல இருக்க உங்க புத்தக வெளியீடு படங்கள் நீங்க உங்க ஆல்பத்துக்கு எடுத்துக்குங்க.

    காமிராமேனுக்கு நீங்க பணம் இன்னும் செட்டில் பண்ணலை :))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...