Saturday, September 8, 2012

இளையராஜா - நீதானே என் பொன்வசந்தம் !

ராஜா கடைசியாய் எந்த படம் நன்கு இசை அமைத்தார் ? நந்தலாலா, அழகர்சாமியின் குதிரை என்று சொல்லாதீர்கள். நான் சமீபத்தில் அவர் இசை அமைத்த படங்கள் பெயர் கேட்கலை. நன்கு இசை அமைத்த படங்கள் கேட்டேன். ராஜா standard-க்கு பாடல்கள் கொண்ட படங்கள் ! மேற்சொன்ன இரு படத்திலும் பின்னணி இசையில் அதே ராஜா தான் ! ஆனால் பாடல்கள் ஹும் !

நீதானே என் பொன் வசந்தம் - நிச்சயம் சூப்பர் டூப்பர் எல்லாம் இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் ராஜா இசை அமைத்த படங்களில் இப்பட பாடல்கள் ஓரளவு ஓகே.

பாடல்கள் பற்றி பொதுவான சில கருத்துகள் :

சில பாடல்கள் 80-களை நினைவு படுத்துது (படிக்கல மாமு) சில இந்த காலத்துக்கு ஏற்றபடி இருக்கு. யுவன் நிறைய பாடல்கள் பாடியதாலோ என்னவோ ஆங்காங்கு இசை யுவனோ என்கிற மயக்கம் வருகிறது

பாடல் வரிகள் புரிகிற மாதிரி இருப்பதும், இசை பாடல் வரிகளை dominate-செய்யாவிடினும் இனிமையாய் இருப்பதும் ராஜா ஸ்பெஷல் !

ராஜாவின் பாடல்களில் பொதுவாய் வயலின் மற்றும் பிளூட் இணைந்து கலக்கும். இப்பட பாடல்களில் வயலின் ஆங்காங்கு கேட்டாலும் பிளூட் மிக அரிதாகவே உள்ளது 

இனி ஒவ்வொரு பாட்டாய் அலசுவோம்   




1 .சாய்ந்து சாய்ந்து...

பாடியவர்:  : யுவன்ஷங்கர் ராஜா / ரம்யா.என்.எஸ்.கே

அருமையான மெலடி. முதல் முறை கேட்கும் போதே பிடிக்கிற மாதிரி ஒரு பாட்டு. யுவன் மற்றும் ரம்யா குரல்கள் ஈர்க்கிறது. Very attractive !!

தாயை போல ஒரு பெண் தேடினேன் என ஆண் சொல்ல, தந்தை மற்றும் தோழனாக உனை பார்க்கிறேன் என பெண் சொல்ல, மெட்டு, இசை வரிகள் என எல்லா பக்கதிலும் கவரும் பாட்டு இது !

2. சற்று முன்பு ...
பாடியவர்:  ரம்யா என்.எஸ்.கே

பெண் குரலில் ஒலிக்கும் செம மெலடி. ஆனால் பாடல் துவக்கத்தில் ஏன் அப்படி ஒரு மிரட்டும் இசை? போக போக பாடல் நம்மை ஈர்த்து விடுகிறது. மிக மிக மெதுவாய் செல்லும் பாட்டு படமாக்க challenging ஆக இருந்திருக்கும்.சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்சிகளில் இப்பாடல் வரும் காலங்களில் நிச்சயம் பாடப்படும் !

3. என்னோடு வா வா ...

பாடியவர்:  கார்த்திக் 


நண்பர் ஒருவர் முக நூலில் சொன்ன மாதிரி கிறித்துவ மத பிரசங்க பாட்டு மாதிரி இருக்கு பல்லவி.  சரணம் நிச்சயம் ஓகே

4. வானம் மெல்ல ...
பாடியவர்:  இளையராஜா / பெலா செண்டே

இளையராஜா இந்த ஆல்பத்தில் பாடிய ஒரே பாட்டு. அவரே பாடிய வேறு எதோ பாடல்களை ஞாபகம் தந்தாலும் கேட்க கேட்க நிச்சயம் பிடிக்கிறது இந்த பாட்டை  !

5. முதல் முறை ...
பாடியவர்: சுனிதி சௌஹான்

பழைய காலத்து சூர சம்ஹாரம் பட பார்ட்டி சாங் மாதிரி இருந்தாலும் இந்த பாட்டில் என்னமோ இருக்கு ! எதோ ஒன்று கவரவே செய்யுது !

6. பெண்கள் என்றால் ...

பாடியவர்: யுவன்ஷங்கர் ராஜா

பெண்களை திட்டி வரும் சற்றே சோகப்பாட்டு. ஏனோ நான்கைந்து முறை கேட்டும் என்னை கவரவே இல்லை. பாடலில் கிட்டார் இசை மட்டுமே கவர்கிறது. படத்தில் நல்லதோர் இடத்தில் பாடல் அமைந்தால், நமக்கு பிடிக்க சற்று வாய்ப்பு இருக்கு. இப்போதைக்கு எனது விருப்ப பாடலில் நிச்சயம் இது இல்லை

7. படிக்கல மாமு ...
பாடியவர்: சுராஜ் ஜகன் / கார்த்திக்

காலேஜ் கேம்பஸில் பாடும் பாட்டு. பழைய பாட்டை கேட்கிற மாதிரி இருக்கு. ஈர்க்கவே இல்லை.

8. காற்றை கொஞ்சம் ...

பாடியவர்: கார்த்திக்


இதுவும் கூட சில முறை கேட்ட பிறகு தான் பிடிக்கும் பாடல் . சரணத்தில் கார்த்திக் ஒரு வரி பாட, உடனே அவர் பாடியதை பியானா போன்ற மறுபடி வாசிப்பது மிக இனிமையாய் இருக்கு. ஆனால் சரணம் இரண்டு வரி பாடிய பின், அவர் பாடும் போது சேர்ந்து அதே instrument வாசிக்க ஆரம்பிக்கும் போது அந்த அளவு அருமையாய் இல்லை.

ஹீரோ - ஹீரோயினுக்குள் காதல் துவங்கிய நேரம் வருகிற பாடல் : நிச்சயம் கெளதம் மிக அழகாய் காட்சி படுத்தியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாடலை திரையில் காண வெயிட்டிங் !
****
நிறைவாக: காதலுக்கு மரியாதை போல கேட்க கேட்க பாடல்கள் எல்லாம் பிடிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. ராஜாவிடம் நல்ல பாடல்கள் வாங்கிய கெளதமுக்கு ஸ்பெஷல் நன்றிகள் !

39 comments:

  1. ராஜாசாரிடம் இருந்து நான் இன்னும் எதிர்பார்த்தேன்...

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. எல்லாரும் நிறைய எதிர்ப்பார்த்தார்கள்...

    படக்காட்சியுடன் பார்த்தால் சில பாடல்கள் பிடிக்கலாம்... படம் வரட்டும்...

    ReplyDelete
  3. நல்லதொரு அலசல்! நானும் கேட்டுப் பார்க்கிறேன்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

    சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

    ReplyDelete
  4. பாடல்கள் கேட்டதும் பிடித்து விட்டால் அதில் ஏதோ ஒரு பரிட்சயம் நமக்கு இருக்கிறது என்றுதான் பொருள்... கிட்டத்தட்ட இருபது முறை கேட்டபின் தான் விண்ணைத்தாண்டி வருவாயா மனதில் நின்றது... ரஹ்மானும் ராஜாவும் அப்படிதான்.. கடைசி வரியில் நீங்கள் சொல்லியிருப்பது போல நிச்சயம் இந்த பாடல்கள் இன்னும் சில நாட்களில் மனதறுக்கும்... ஏற்கனவே எனக்கு ஆரம்பித்துவிட்டது...

    நானும் என் தளத்தில் இந்த பட பாடல் விமர்சனம் எழுதியிருக்கேன்.. தனிதனி பாடல்களின் அலசலில் உங்களுக்கும் எனக்கும் நிறைய முரண்பாடுகள்.. ராஜா நிறைய பேரை கவர தவறிவிட்டாரோ?

    ReplyDelete
  5. நான் பாடல் இன்னும் கேட்கவில்லை.ஆனாலும் இப்பொழுதெல்லாம் இளையராஜாவின் பாடல்கள் இளைய தலைமுறையினரை ஈர்க்கவில்லை. இளையராஜாவின் ரசிகரான என்னைப் போன்றவர்களுக்கும் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்து மிகப் பெரிய சாதனையாளரான அவர் இசை ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுதல் அவருக்கு இன்னும் பெருமையை சேர்க்கும். குறிப்பாக அவர் பாடுவதை தவிர்த்தல் நலம் அவர் என்னதான் புது மெட்டில் பாடினாலும் ஏற்கனவே கேட்டதுபோலவே தோன்றுகிறது.

    ReplyDelete
  6. டாக்டர் மயிலன் தளத்தில் நான் சொல்லியிருப்பது போல என்னோடு வா வா என்று பாடல் மட்டும் மனதில் கொஞ்சம் நிற்கிறது. மற்றபடி எழுபதுகளின் பிற்பகுதி மற்றும் எண்பதுகளின் இளையராஜாவைக் காணோம். இனி கிடைக்கவும் மாட்டார். என்னதான் கவுதமின் விருப்பம் என்றாலும் யுவன் இதில் பாடியிருக்க வேண்டாம் என்பது என் எண்ணம்! மயிலன் தளத்தில் கேட்ட அதே கேள்வி இங்கும்.... மாலைப் பொழுதின் மயக்கத்திலே படப்பாடலான 'என்னுயிரே' கேட்டீர்களோ?

    ReplyDelete
  7. நான் இன்னும் பாடல்களை கேட்கவில்லை, உங்களது பதிவை பார்த்ததும் கேட்கத்தூண்டுகிறது.

    ReplyDelete
  8. பாட்டுன்னா 70 டூ 90ல வந்த இளையராஜா, டி.ஆர், சங்கர் கணேஷ் இசையமைச்ச பாடல்கள்தான் என் ஃபேவரிட். அவைகள்தான் என்றும் மனசுல நிக்குற பாடல்கள். அதுக்கப்புறம் வந்த பாடல்கள் எல்லாம் அந்த சில வாரங்கள் மட்டுமே மனதில் நிற்கும் சத்தங்கள்.

    ReplyDelete
  9. அப்புறம் இந்த பதிவு தமிழ்மணத்துல ஹிட்டானதே என் ஓட்டாலதான். புரியலியா 7வது ஓட்டு என்னோடது.

    ReplyDelete
  10. நீங்க ரொம்ப hardwork செஞ்சிருகீங்க போல சார் இந்த பாடல் விமர்சனம் பதிவிட!!! பகிர்வுக்கு நன்றி ..
    பொதுவாக நான் புது பட பாடல்கள் கேட்டால் காத தூரம் ஓடிவிடுவேன்.. அவ்வளவு ஒவ்வாமை.... பொறுமையும் கிடையாது.. நீங்க என்னன்னா பதிவுக்காக ரிஸ்க் எடுத்து பலதடவ கேட்டு அழகா விமர்சனம் பண்ணிடீங்க அதும் எட்டு பாட்டு.. நீங்க பொறுமைசாலிதான் சார் ...

    ReplyDelete
  11. அருமை தோழரே வாழ்த்துக்கள் வணக்கம் தொடருங்கள்

    ReplyDelete
  12. கேட்கிறேன், கேட்கிறேன், கேட்டுக்கொண்டே இருக்கிறேன்! :-)) ‘சற்று முன்பு பார்த்த’ ‘என்னோடு வாவாவென்று’ ‘முதல்முறை’ மூன்றும் எனக்கு ரொம்ம்ம்பவும் பிடித்துப் போய் விட்டன.

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  14. ரொம்ப நாளைக்கு அப்புறம் காதில் தேனிசை! அற்புதமான பாடல்களை 'சேட்டைக்காரன்' சொன்னது மாதிரி கேட்கிறேன், கேட்டுக் கொண்டே இருக்கிறேன்!"சற்று முன்பு..."(அந்த ஆர்ச்செஸ்ட்ரா!) "முதல் முறை..." "என்னோடு வாவா...","காற்றைக் கொஞ்சம்..." ,எனக்குப் பிடித்தன, இந்த வரிசையில்!

    ReplyDelete
  15. ம்ம்.. என்னவோ கேளுங்க, எஞ்சாய் பண்ணுங்க.

    ReplyDelete
  16. நன்றி சவுந்தர். சம்மேபத்து ராஜா பட பாடல்களுக்கு இந்த படம் ஓகே

    ReplyDelete

  17. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete
  18. சுரேஷ்: ரைட்டு

    ReplyDelete
  19. சுரேஷ்: ரைட்டு

    ReplyDelete
  20. மயிலன்: உங்கள் விமர்சனம் படிக்கலை நிச்சயம் படிக்கிறேன்

    ReplyDelete
  21. ஸ்ரீராம்
    // மாலைப் பொழுதின் மயக்கத்திலே படப்பாடலான 'என்னுயிரே' கேட்டீர்களோ?//

    இல்லை. அவசியம் கேட்கிறேன்

    ReplyDelete
  22. ஸ்ரீராம்
    // மாலைப் பொழுதின் மயக்கத்திலே படப்பாடலான 'என்னுயிரே' கேட்டீர்களோ?//

    இல்லை. அவசியம் கேட்கிறேன்

    ReplyDelete

  23. நன்றி கும்மாச்சி கேளுங்கள்

    ReplyDelete
  24. ராஜி said...
    அப்புறம் இந்த பதிவு தமிழ்மணத்துல ஹிட்டானதே என் ஓட்டாலதான். புரியலியா 7வது ஓட்டு என்னோடது.

    அப்படிங்களா? ரொம்ப நன்றி

    ReplyDelete
  25. ராஜி said...
    அப்புறம் இந்த பதிவு தமிழ்மணத்துல ஹிட்டானதே என் ஓட்டாலதான். புரியலியா 7வது ஓட்டு என்னோடது.

    அப்படிங்களா? ரொம்ப நன்றி

    ReplyDelete
  26. சமீரா: மிக சிரத்தை எடுத்து தாங்கள் போடும் பின்னூட்டம் இடும் தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  27. சமீரா: மிக சிரத்தை எடுத்து தாங்கள் போடும் பின்னூட்டம் இடும் தங்களுக்கு நன்றி

    ReplyDelete

  28. மோகன்: நன்றி

    ReplyDelete

  29. நன்றி சேட்டைக்காரன் உங்களுக்கும் பாடல்கள் பிடித்ததில் மிக மகிழ்ச்சி

    ReplyDelete

  30. நன்றி சேட்டைக்காரன் உங்களுக்கும் பாடல்கள் பிடித்ததில் மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  31. ரத்னவேல் ஐயா : நன்றி

    ReplyDelete
  32. ரத்னவேல் ஐயா : நன்றி

    ReplyDelete
  33. ஜனா சார் : உங்களுக்கும் பாட்டு பிடிச்சதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  34. அப்பாதுரை : நன்றி சார்

    ReplyDelete
  35. இன்றுதான் உங்களது ப்ளாக்கை பார்த்தேன் , நன்றாக இருந்தது.,. இது போன்று நிறைய எழுதவும்

    ReplyDelete
  36. இன்னும் கேட்கவில்லை மோகன். கேட்கிறேன்...

    ReplyDelete
  37. ராஜா கடைசியாய் எந்த படம் நன்கு இசை அமைத்தார் ? நந்தலாலா, அழகர்சாமியின் குதிரை என்று சொல்லாதீர்கள். //

    இளையராஜாவின் கடைசி சிறந்த இசைத் தொகுப்புகள் நான் கடவுள், தோனி ஆகியவை. நந்தலாலா சராசரிக்கும் மேல் என்ற அளவில் இருந்தது.

    ReplyDelete
  38. Anonymous8:14:00 PM

    இளையராஜா.. அந்த பேருக்காகவே சில பாடல்கள அடிக்கடி கேட்க தோனுது.. 1980ஸ் இல்லன்னாலும் ஓகே ரகம்தான்... அப்புறம் "புடிக்கல மாமு" இதயம் போன்ற படங்களில் வரும் சில காலேஜ் பாடல்கள அப்புடியே ஞாபக படுத்து.. மெட்டு வேறாகவே இருந்தாலும்...

    ReplyDelete
  39. 8 thisaigalil irunthu vanda padalgal arumai......mudalil enna pattuda endru manadai konjam sanchalam seidalum kertka kertka pidithamanaa padagalaga maari vittadu.....
    inda paadagalil raajavin isai namakku pudusu...
    eno inda padagal manadai vittu ippodu neenga marukkiradu......
    idhu thaan raajavin magic...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...