Monday, April 8, 2013

தொல்லை காட்சி- நீயா நானா - லொள்ளு சபா - தெய்வ மகள்

ஐ பி. எல் கார்னர் 

மும்பை Vs சென்னை மேட்ச் முழுதாய் பார்க்காவிடினும் அவ்வப்போது ஸ்கோர்ம்  இறுதியில் தோனி இன்னிங்க்ஸ்ம் பார்த்தேன்.

தோனி இவ்வளவு அற்புதமாக ஆடி பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது. பேப்பரில் கூட தோனி - வெறும் சிக்ஸ் ஆக அடித்து பயிற்சி எடுத்ததாகவும், ஸ்பின், வேக பந்து வீச்சாளர் என எப்படி வந்து போட்டாலும் ஆறுக்கு அனுப்பி Training எடுத்ததாகவும் சில நாள் முன்பு தான் படித்தேன். அதன் பலனை மேட்சில் காண முடிந்தது. போலார்ட்டின் அதி அற்புத கேட்ச் இல்லா விடில் சென்னை ஜெயித்திருக்கும் ஹூம் :(

சன் ரைசர்ஸ் வெறும் 126 ரன்களை defend செய்த மேட்சும் இரண்டாம் பகுதி அட்டகாசம். டேல் ஸ்டெயின் பந்தில் பல முறை குச்சிகள் கார்ட் வீலிங் ஆகின.

ஐ. பி. எல் லால் - தூக்கம் குறைகிறது. மறு நாள் drowsy -ஆக உள்ளது. முழு மேட்ச் பார்ப்பதை குறைக்கணும் !

நல்ல நிகழ்ச்சி- ஆங்கிலம் கற்று தரும் ஜெயா டிவி

ஜெயா டிவி யில் பல வருடங்களாக ராஜகோபால் என்கிற ஒருவர் எளிய முறையில் ஆங்கிலம் கற்று தருகிறார். காலை 7.40 முதல் 7.50 வரை ஜெயா டிவி யில் பேசுவார் இவர்.

வகுப்பறை போல போர்டு வைத்து கொண்டு எதிரில் மாணவர்கள் இருக்கிற மாதிரி பாவனையில் இவர் பேசுவதே செம காமெடியாக இருக்கும். மேலும் இவருக்கு செம ஹியூமர் சென்ஸ்.

ஆங்கிலத்தில் நாம் தப்பாய் உபயோகிக்கும் சில விஷயங்கள் இவர் நிகழ்ச்சி பார்த்து திருத்தி கொண்டதுண்டு.

ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும் என நினைக்கும் அலுவலக நண்பர்கள் சிலருக்கு சொல்லி, அவர்கள் இந்நிகழ்ச்சி பார்த்து விட்டு ரொம்ப யூஸ் புல்லாக இருக்கு என்று சொன்னதுண்டு.

முடிந்தால் பாருங்கள் !

சீரியல் பக்கம் - தெய்வ மகள்

என்னடா அழகு கார்னர் - இங்கு வந்திருக்கே என நினைக்கிறீர்களா?


விகடனின் புத்தகம் ஒன்றில், இந்த அழகு தேவதை அட்டை படம் பார்த்து சொக்கி போனேன். அப்புறம் உள்ளே என்ன சமாசாரம் என்று படித்தால் - வாணி போஜன் என்கிற அம்மணி விகடன் எடுத்து சன் டிவியில் வரும் தெய்வமகள் சீரியல் ஹீரோயினாம்.

ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு கலைசேவை ஆற்ற வந்துள்ளார் வாணி. சீரியலில் இவர் போடும் உடைகள் சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு இருப்பது அவர்கள் வெளியிட்டுள்ள படங்கள் பார்த்தாலே தெரிகிறது.


இதற்காகவெல்லாம் சீரியல் பார்க்கிற அளவு மனசில்லை..!

கோடம்பாக்கம் வாணிக்கு கூப்பிடு தூரம் தான் !

சன் டிவி யில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி 

ஞாயிறு மதியம் பொழுது போகாமல் சன் டிவி யில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி முழுவதும் பார்த்தோம் சானியா மிர்சா, சரோஜா தேவி, த்ரிஷா, ஹன்ஷிகா போன்றோருக்கு சாதனையாளர் விருது கிடைத்தது. (ஹன்சிகா நடிக்க வந்த சில வருடங்களில் என்ன சாதனை செய்தார் என்று தான் புரியலை)

தொகுத்து வழங்கியவர்களுள் ஒருவரான கார்த்திக் என்கிற புது காம்பியர் பெண்களை நிறையவே கிண்டலடித்து கொண்டிருந்தார் இருந்தும் அவ்வப்போது சிரிக்கவும் வைத்தார்

அனிருத் - தனது புதிய படமான எதிர் நீச்சலில் இருந்து பாடல் பாடியது அமர்க்களமாய் இருந்தது.

நிகழ்ச்சியில் மிக அசத்தியவர்கள் - ஒரு டான்ஸ் ஆடிய இரு குட்டி பசங்க... 5 வயது மதிக்க தக்க அந்த பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் போல் உடலை மடக்கி சுற்றி சுற்றி ஆடியது - பார்த்த அனைவரையும் அதிசயிக்க வைத்தது

நீயா நானா - பெண்ணுக்குள் ஆண் - ஆணுக்குள் பெண்

இந்த தலைப்பு ஒளிபரப்பாகும் முன்பே சற்று சர்ச்சையை கிளப்பியது. அதென்னெ பெண்ணுக்கு தனி குணம்; ஆணுக்கு தனி குணம் என்று.

ஆனால் " Men are from Mars; Women from Venus" - என்று ஒரு புத்தகமே வந்து சக்கை போடு போட்டது சில விஷயங்களில் ஆணும், பெண்ணும் இயல்பாகவே மாறுபடுகிறார்கள். எனக்கு பெண் குழந்தையும், மச்சான்க்கு ஆண் குழந்தையும் 2 நாள் வித்தியாசத்தில் பிறந்து இருவரும் அருகருகில் வளர்ந்த போது இதை தெளிவாக காண முடிந்தது.

நிற்க. வெட்கம், கோபம் உள்ளிட்ட உணர்சிகளின் பின்னணியில் ஆண்கள் அழுத கணம், தற்கொலைக்கு முயன்று மீண்டு வந்த இளைஞர் என நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே இருந்தது.

லொல்லு சபா மாரத்தான்

ஒவ்வொரு சனி மதியமும் விஜய் டிவி தங்களின் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சியின் சிறப்பான பகுதிகளை காண்பிக்கின்றனர். அப்படி இந்த வாரம் - லொல்லு சபா மாரத்தான் ! சந்தானம், ஜீவா, மனோகர் ஆகியோர் அடித்த லூட்டிகளை பார்த்து வயிறு வலி வந்து விட்டது.

மண் வாசனை, சின்ன தம்பி, சிந்து பைரவி, நான் அவன் இல்லை என எத்தனை படங்களை நாசம் செய்திருக்கிறார்கள். கூடவே டைரக்டர் உள்ளிட்ட தங்களையே எள்ளல் செய்யவும் தயங்குவதில்லை.

மீண்டும் லொல்லு சபா வந்தால் நன்றாயிருக்கும் என்கிற ஆதங்கத்தை இன்னோர் முறை பதிவு செய்கிறேன்.

மகாபாரதம்


சன் டிவி யில் ஞாயிறு காலை மகாபாரதம் வெளிவருகிறது. முன்பு ஹிந்தியில் கண்டிருந்தாலும் தமிழில் காண சுவாரஸ்யம் தான்.

நமக்கு தெரிந்த நடிகர், நடிகைகள், நிறையவே பொருட்செலவு, கம்பியூட்டர் கிராபிக்ஸ் என நிறைய ஆச்சரியங்கள் + மகிழ்ச்சிகள்

எங்கள் ஊரில் வருடா வருடம் மகாபாரதம் 15 நாள் சொற்பொழிவு நடக்கும். எங்கள் கடையில் அமர்ந்தவாறே தெளிவாய் கேட்கமுடியும். கோவிலுக்கு சென்று அமர்ந்து கேட்டதும் உண்டு. இருந்தும் அம்பை என்கிற பெண்ணின் கதை சென்ற வாரம் தான் புதிதாய் அறிய முடிந்தது. மகாபாரதத்திற்குள் தான் எத்தனை எத்தனை கிளை கதைகள் !

ராமாயணத்தை விடவும் மகாபாரதம் சுவாரஸ்யமானது என்பது என் தாழ்மையான எண்ணம் !

16 comments:

  1. நீண்ட நாட்கள் கழித்து மின்சாரம் இருந்ததால் சன் டிவி யில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியைப் பார்த்தேன்... மற்றவை உங்கள் தளத்தில்... நன்றி...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அண்ணே பாப்பா சூப்பர் உங்க பதிவும் தான்

    ReplyDelete
    Replies
    1. சக்கர கட்டி : ஹீ ஹீ நன்றி

      Delete
  4. துக்ளக் ஆசிரியர் சோ தனது பத்திரிகையில் மஹாபரதம் மற்றும் ராமாயணம் இதிகாசங்களை தன்னுடைய விளக்கங்களுடன் எழுதினர். அதில் அவர் கூறியது :


    "வாழ்விலே வெல்லும் வழியைச் சொல்வது மகாபாரதம். தர்மப்படி வாழ்வதின் நோக்கங்களைக் கூறுவது ராமாயணம்."

    ReplyDelete
  5. வாணி போஜன் சன் டிவிக்கு கிடைத்த பிரியாணி போஜன்.

    ReplyDelete
    Replies
    1. அருமை; நன்றி நாகராஜன்

      Delete
  6. //ஐ. பி. எல் லால் - தூக்கம் குறைகிறது. மறு நாள் drowsy -ஆக உள்ளது. முழு மேட்ச் பார்ப்பதை குறைக்கணும் !//

    Me too feel the same. அதுவும் மதியம் 2 மணிக்கு, தூக்கம் வருது பாருங்க....ஸ்ஸ்ஸ்..முடியல

    ReplyDelete
  7. உண்மைதான்.மஹாபாரத்தை விட ஒரு சிறந்த கிரைம் கதை இருக்க முடியாது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  8. // கோடம்பாக்கம் வாணிக்கு கூப்பிடு தூரம் தான் //

    ஏன்... அவங்க வீடு சூளைமேட்டுல இருக்குதா ?

    ReplyDelete
    Replies
    1. தம்பிக்கு வாணியை பிடிக்கலையோ :)

      Delete
  9. மகாபாரதக் கிளைக்கதைகள் எல்லாமே படு சுவாரசியமானவை. நிறைய 'திடுக்' நமக்குக் கிடைக்கும்!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆம் மேடம் சரியா சொன்னீங்க

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...