Monday, May 9, 2016

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்


ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் - மே 17 அன்று வெளியாகிறது. பெற்றோர் பலரும் தங்கள் மகனை என்ன படிப்பில் சேர்க்கலாம் என யோசித்து வருவார்கள்.

பலரின் தேர்வு இஞ்சினியரிங் அல்லது மருத்துவமாக தான் உள்ளது. ஆனால் இவற்றை தவிர பல அற்புத கோர்ஸ்கள் உள்ளன..

அடுத்த இரு வாரங்களுக்கு அப்படி சில படிப்புகள் பற்றி எழுத உத்தேசம்.....

முதலாவதாக நான் படித்த சட்ட படிப்பு (இது ஒரு மீள் பதிவு; இந்த வரிசையில் அடுத்து வர உள்ளவை - புதிதாய் எழுதப்படுபவை)

*********

ந்தியாவில் சட்ட படிப்பு இரு விதமாய் உள்ளது. ப்ளஸ் டூ முடித்து விட்டு நேரே BL படித்தால் ஐந்து வருட படிப்பு. BA, B.Sc, B.Com என ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு படித்தால் மூன்று வருடம். (ஆம் எந்த டிகிரி படித்தாலும், BL - மூன்று வருட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்). தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்திய அளவில் புனே மற்றும் பெங்களுருவில் சில சிறந்த சட்ட கல்லூரிகள் (National Law school) உள்ளன.

சென்னையில் அரசு சட்ட கல்லூரி தவிர
BA BL - Honours என்கிற கோர்ஸும் உள்ளது. இது பாரிஸ் கார்னர் சட்ட கல்லூரி வளாகத்தில் இல்லை. சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ளது. இந்த படிப்பிற்கு மிக நல்ல மதிப்பு உள்ளது. இங்கு படித்தால் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது

தேர்வு முறை

அரசு சட்ட கல்லூரிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நுழைவு தேர்வு முறையில் மாணவர்கள் தேர்வானார்கள். இப்போது முழுக்க முழுக்க + 2 மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது . 


தமிழக சட்ட கல்லூரிகளை பொறுத்தவரை - அரசு கல்லூரிகள் எனில் + 2 வில் 80 முதல் 90 % வரை மொத்த மதிப்பெண் எடுத்தால் சீட் கிடைக்கும்.

மேலே சொன்ன சென்னை School of Excellence , தரமணி கல்லூரியில் 85 முதல் 90 % மதிப்பெண் என்றால் சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

அரசு கல்லூரி மற்றும் School of Excellence இரண்டிலுமே + 2 வில் எந்த பாட திட்டத்தில் படித்திருந்தாலும் - சேரலாம்.. காமர்ஸ் க்ரூப் தான் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; கணிதம்- இயற்பியல்- கணினி அறிவியல்- உயிரியல் போன்ற பிரிவில் படித்த மாணவர்கள் கூட சட்டம் படிக்கலாம் (நானே அப்படி + 2வில் கணிதம் மற்றும் உயிரியல் படித்த மாணவன் தான்)

செலவு

அரசு சட்ட கல்லூரியில் படித்தால் செலவு மிக குறைவே. கல்லூரிக்கான செலவு (Term fees, exam fees, etc) வருடத்திற்கு 5000-க்குள் அடங்கி விடும். ஹாஸ்டலில் தங்கி படித்தால் அதற்கான செலவு அந்தந்த ஊர் பொறுத்து இருக்கும்.

School of Excellence , தரமணியில் ஆண்டுக்கு 50,000 முதல் 60,000 வரை செலவாகும்

பிற மாநில கல்லூரிகள்

முழு நேர மாணவனாக இல்லாமலே சட்டம் படிப்பதற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. இங்கு தரபடுவது LLB என்ற பட்டம் . BL - LLB இரண்டும் சமமே. சட்ட படிப்பு தமிழகத்தில் BL என்றும், பிற மாநிலங்களில் LLB என்றும் அழைக்க படுகிறது.

ஆனால் இந்த கல்லூரிகள் தனியார் என்பதால் costly-ஆக இருக்கும்; தோராயமாக வருடத்துக்கு ருபாய் 30,000 ஆகலாம். தேர்வு எழுத நீங்கள் அந்த ஊருக்கு சென்றாக வேண்டும். (இது தொலை தூர கல்வி அல்ல என்று அறிக).

சில யூனிவர்சிட்டிகள் தொலை தூரத்தில் படிக்க BGL என்ற படிப்பு வைத்துள்ளனர். இது கோர்ட்டுக்கோ, வேலைக்கோ எந்த விதத்திலும் உதவாது. வேலைக்காக அல்லது வேலை உயர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால், இதனை படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது

வேலை வாய்ப்புகள்

1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:

BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.

பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது. டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.

நாங்கள் படித்த காலத்திலேயே " சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" என்பார்கள். இது ஓரளவுக்கு உண்மை தான். முதல் தலை முறை வக்கீல்கள் தனியே சம்பாதிக்க நிறைய ஆண்டுகள் தேவை படுகிறது.


வக்கீலாக ப்ராக்டிஸ் செய்வது எனில் அதில்-

சிவில் Side  (கொடுக்கல் வாங்கல்- சொத்து சம்பந்தமான பிரச்சனைகள்)
கிரிமிநல்  Side  ( அனைத்து வித கிரைம்கள்- திருட்டு, கொலை, etc )
கம்பனி சட்டம் ( கம்பனிகள் மீது போடப்படும் வழக்குகள்)
இன்கம் டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் போன்ற பிரிவு
குடும்ப நீதிமன்றம் (விவாகரத்து போன்றவை)

என எந்த பக்கம் நாம் ப்ராக்டிஸ் செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை உடனே செய்ய வேண்டும் என்றில்லை; படிக்க துவங்கிய பின் நமக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ - அதில் நுழையலாம்.

2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:

இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. உதாரணத்துக்கு சில: AZB Partners, Kochar and Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal Associates, King and Partridege போன்றவை..

இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது முழு நேர ஊழியராக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு சதவீத  (Percentage) அடிப்படையில் பணம் தருகின்றனர். இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.

நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!

3. நிறுவனங்களில் வேலை :

இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். இவற்றில் Law officer,  Legal Manager, AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். போக போக நிச்சயம் சம்பளம் கூடும். ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.

மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும் அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.

இவை தவிர BL முடித்தோர் Civil services (IAS, IPS, etc ), பிற அரசு வேலை என பல இடங்களில் உள்ளனர்.

ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இந்த படிப்பை சிபாரிசு செய்யலாம்.

*************
அண்மை பதிவுகள் : 

24- தமிழில் ஒரு ஹாலிவுட் முயற்சி - சினிமா விமர்சனம்

வானவில்: கேப்டன் பேச்சு - வோட்டுக்கு காசு- கருத்து கணிப்புகள்

55 comments:

  1. நல்ல பதிவு நண்பரே!

    ReplyDelete
  2. இது என் துறை இல்லை. இருந்தாலும் ஆர்வம் காரணமாக எழுதினேன்

    http://ramamoorthygopi.blogspot.in/2011/03/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. I have tried to read the above article mentioned by You. But permission has been denied. How to see/read your blog. pl reply.

      Delete
    2. எனது வக்கில் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன்.. நான் வேறு காலேஜ் சேர்ந்து படிக்கலாமா

      Delete
  3. //சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான்//
    கிட்டதட்ட டாக்டர் மாதிரி, இல்லியா? இரண்டிலுமே வருமானம் வரத் தொடங்குவதுக்கு நாளாகும்; தொடங்கினதும், முன்புவராத நாட்களையும் கணக்கு வச்சு, கிளையண்ட் கிட்ட (வாய்தா-மெடிக்கல் டெஸ்டுகள்) கறக்கறதுலயும்!! :-D

    //முக்கிய தேவை எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றல்//

    அநேகமா எல்லாவீட்லயும் கணவர்கள் (வக்கீலாவே இருந்தாலும்) தம் மனைவியரிடம் “பேசாம நீ வக்கீலுக்குப் படிச்சிருக்கலாம்”னு சொல்வது இதனாலத்தானோ? :-)))

    ReplyDelete
  4. சென்னையில் Law காலெஜ் பசங்க அப்படின்னாலே எல்லோர் மனசிலயும் லைட்டா கிலி பிடிக்கும். அடிதடி, குண்டா வேலைகள் ரவுடியிசம் செய்வதில் நம்பர் ஒன். சட்டம் படிக்கிற பசங்க ஏன் சார் இப்படி இருக்காங்க? எது இவர்களை இவ்வாறு மாற்றியிருக்கு?

    ReplyDelete
    Replies
    1. சட்டம் படிகின்ற எல்லா மாணவர்களும் இதை செய்வதில்லை .....ஒரு சிலர் செய்யும் தவறால் எல்லாரையும் பாதிகின்றது....அடிதடி செய்யும் மாணவர்கள் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது,தனக்கு சட்டம் தெரியும் என்ற காரணதினாலேயே இவ்வாறு செய்கின்றனர்............

      Delete
  5. தங்களின் Back ground பற்றி சுருக்கமா சொல்லுங்களேன் சார்!!

    ReplyDelete
  6. Dear Mohan Sir,

    Please clarify about in what basis lawyers are charged for cases. is there any guide lines for that?

    ReplyDelete
  7. அதிகம் அறியப்படாத தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள்.வழக்கறிஞர் தொழில் பற்றி அதிகம் புரிந்து கொள்ளப்படாமை புதியவர்களை அத துறையைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் ஏற்படுத்துகிறது.மேலும் இப்பணிக்கு அசாத்திய திறமை தேவைப்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    ReplyDelete
  8. மிக அருமையான முயற்சி,

    இந்தப்பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடலாமா???

    இதே போன்று பதிவுகள் எழுதுவும் நண்பர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் லிங்கை இங்கே கொடுத்தால் அதை நான் பேரண்ட்ஸ் கிளப்பில் பதிவேற்றுவேன். பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  9. சற்றே தாமதமான பதிவோ.... சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு எப்போது? ப்ளஸ் டூவில் எந்த கோர்ஸ் எடுத்திருந்தாலும் சட்டம் படிக்க வர முடியுமா?

    ReplyDelete
  10. சட்டப் படிப்புன்னவுடனே அடிதடி சம்பவம்தான் ஞாபகத்துக்கு வருது. So sad :(

    கிண்டலாக கேட்கவில்லை, சீரியசாகவே கேட்கிறேன். இது மாறும்னு நினைக்கிறீங்களா?

    ReplyDelete
  11. நன்றி வரலாற்று சுவடுகள்

    ReplyDelete
  12. வாசிக்கிறேன் நன்றி கோபி

    ReplyDelete
  13. ஹுசைனம்மா: நீங்கள் நிச்சயம் லாயர் ஆக தகுதி உள்ளவர் தான் ; உங்களை அப்படி சொன்னால் நியாயம் தான் :-)

    ReplyDelete
  14. தாஸ் said

    //அடிதடி, குண்டா வேலைகள் ரவுடியிசம் செய்வதில் நம்பர் ஒன். சட்டம் படிக்கிற பசங்க ஏன் சார் இப்படி இருக்காங்க? எது இவர்களை இவ்வாறு மாற்றியிருக்கு?//

    சட்டம் படிப்பவர்கள்/ படித்தவர்கள் மீது போலிஸ் பெரும்பாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் சட்டம் படிப்பவர்களில் பலர் அரசியலுக்குள் நுழைகிறார்கள். இதற்கான துவக்க வேலையை கல்லூரியிலேயே துவங்கி விடுகிறார்கள். இவை இரண்டும் தான் காரணம்

    //தங்களின் Back ground பற்றி சுருக்கமா சொல்லுங்களேன் சார்!!//

    சில பழைய பதிவுகளில் எழுதி உள்ளேன். இங்கே பாருங்கள்

    http://veeduthirumbal.blogspot.in/2011/01/blog-post_29.html

    http://veeduthirumbal.blogspot.in/2009/12/blog-post_15.html

    http://veeduthirumbal.blogspot.in/2010/08/blog-post_09.html

    ReplyDelete
  15. Hemanth said//



    //Please clarify about in what basis lawyers are charged for cases. is there any guide lines for that?//

    பீஸ் கேசை பொருத்தும் மற்ற லாயர்கள் அதே வித வழக்குக்கு எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதை பொறுத்தே முடிவு செய்கிறார்கள். வழக்கின் மூலம், அதன் முடிவில் நிறைய பணம் வந்தால், சில நேரம் % அடிப்படையிலும் சிலர் வாங்குகிறார்கள்

    ReplyDelete
  16. முரளி: சரியாக சொல்லி உள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  17. ஸ்ரீராம்: ஆம் . சற்று தாமதம் ஆகி விட்டது. ஆனால் சட்ட கல்லூரி செலெக்ஷன் கடைசியாய் தான் நடக்கும்

    +2 வில் எந்த குருப் படித்தவரும் லா படிக்கலாம். நான் + 2 வில் Maths, Physics, Chemistry, Biology படித்தவன். Commerce படித்தவர்களும் நிறைய சேருவார்கள்

    ReplyDelete
  18. ர‌கு said...
    சட்டப் படிப்புன்னவுடனே அடிதடி சம்பவம்தான் ஞாபகத்துக்கு வருது. So sad :(

    கிண்டலாக கேட்கவில்லை, சீரியசாகவே கேட்கிறேன். இது மாறும்னு நினைக்கிறீங்களா?

    ***

    முழுதாய் மாறுவது நிச்சயம் கடினமே. சட்ட கல்லூரியில் இத்தகைய மக்கள் இருக்கவே செய்வார்கள்

    ஆனால் இங்கு ஒன்றை சொல்ல வேண்டும். அதே சட்ட கல்லூரியில் ஒரு ideal குருப் ஆக எங்கள் நண்பர்கள் இருந்தோம். படிப்பதிலும் சரி, extra curricular-லும் சரி, சமூக பிரச்சனைகளுக்கு உதவுவதிலும் சரி நாங்கள் ஒரு உதாரண குழுவாக இருந்தோம். இன்றும் அப்படி தான் இருக்கிறோம். இதில் எங்களுக்கு நிச்சயம் பெருமையே.

    ReplyDelete
    Replies
    1. சட்ட கல்லூரி மட்டுமல்ல,கடந்த வருடம் சென்னையில் பிரபல அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்டார்கள். பொறியியல் கல்லூரிகளில் கொலை சம்பவமெல்லாம் நடக்கிறது. மொத்தத்தில் பொறுப்பற்றவர்கள் அனைவரின் செயலும் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

      Delete
  19. புதுகை தென்றல்: பேரன்ட்ஸ் கிளப்பில் போடுகிறேன் என சொன்னதில் மிக மகிழ்ச்சி. அவசியம் செய்யுங்கள்

    ReplyDelete
  20. வக்கீல் படிப்பு - நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன - விளக்கமாக எழுதுகிறார் திரு மோகன் குமார் - படித்துப் பாருங்கள், மற்றவர்களிடம் சொல்லுங்கள்.
    நன்றி திரு மோகன் குமார்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  21. நல்ல கோரிக்கை + பகிர்வுக்கு நன்றி சார் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  22. நல்ல பகிர்வு மோகன். முன்பு தொடர்பதிவாக வந்த போது எனது பக்கத்திலும் அரசுத்துறையில் பணி பற்றி எழுதி இருக்கிறேன்....

    த.ம. 9

    ReplyDelete
  23. நல்ல பதிவு மோகன். சட்ட படிப்பில் என்னென்ன தனிப்பிரிவுகள் உள்ளன? காப்புரிமை, ட்ரேட் சீக்ரெட்ஸ், காப்பிரைட்ஸ் போன்ற அறிவு சார் சொத்துரிமை பற்றி எவ்வாறு பயில்வது? இவர்களுக்கு லிட்டிகஷன் மற்றும் ப்ராசெகுஷன் போன்றவற்றில் எவ்வாறு பயிற்சி அளிக்க படுகிறது? அறிவு சார் சொத்துரிமை பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் சமீப காலமாக அதிகரித்து வருவதால் இதை பற்றி சட்ட வல்லுனர்கள் பயில்கிறார்கள என்று அறிய ஆவல். நன்றி.

    சுபாஷிணி

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. வழக்கறிஞர் பற்றி நான் அறியாத பல செய்திகள்! அறிந்து கொண்டேன் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. பலருக்கும் பயன் தரக்கூடிய நல்ல பகிர்வு.

    ReplyDelete
  27. அரிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  28. சட்டப் படிப்பு குறித்து சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இன்னும் சட்டப் படிப்பு பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

    இந்தப் பதிவு தேர்வு சமயத்தில் வெளியிட்டிருந்தால் பலருக்கும் பிரயோசனமாக இருந்திருக்கும்.

    வரும் ஆண்டில் சட்டப்படிப்பு பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிடவும். மேலும், சட்டப்படிப்பு படிக்க விரும்பும் ஓர் ஏழை மாணவனுக்கு தங்கள் நண்பர்கள் உதவியுடன் சிறிய அளவிலாவது உதவி செய்ய வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்.

    இது பற்றிய அறிவிப்புடன் அடுத்த வருடம், 'வக்கீல் படிப்பு' பதிவு வரும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  29. //அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன /

    இது பத்தி கேக்கணும்னு டினைச்சேன், மறந்துட்டேன். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சட்டம் இல்லியா? இந்தியாவில் வக்கீலுக்குப் படிச்சா, இந்திய சட்டங்கள் மட்டும்தானே படிப்பாங்க. அவங்க வெளிநாட்டில்/வெளிநாட்டுக்காக வேலை பாக்கணும்னா, அந்நாட்டுச் சட்டத்தைப் படிக்க வேண்டாமா?

    உதாரணமா, ஒரு நாட்டில் டாக்டருக்குப் படிச்சவங்க இன்னொரு நாட்டில் டாக்டர் வேலை பாக்கணும்ன்னா, அதுக்குன்னு தனி தேர்வு எழுதணும். அதுமாதிரி வக்கீலுக்கு ஏதும் தேர்வு உண்டா?

    ReplyDelete
  30. ரத்னவேல் ஐயா: மிக மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  31. அமைதி அப்பா: உண்மை தான். நீங்கள் முன்பே சொன்னீர்கள்,. நான் தான் தாமதம் செய்து விட்டேன்.
    ஏழை மாணவன் சட்டம் படிக்க உதவ நிச்சயம் ரெடி. தகுதி உள்ள அத்தகைய மாணவர் இருந்தால் பரிந்துரையுங்கள் அவசியம் உதவலாம்

    ReplyDelete
  32. வெங்கட்: ஆம் நினைவில் உள்ளது நன்றி

    ReplyDelete
  33. ராமலட்சுமி நன்றி மேடம்

    ReplyDelete
  34. புலவர் ஐயா: தங்கள் வரவில் மிக மகிழ்ந்தேன். மிக நன்றி

    ReplyDelete
  35. சுபாஷினி: BL / LLB-ல் (Under Graduation) தனி பிரிவுகள் ஏதும் இல்லை. அவர்கள் CPC. Cr.P.C, I.P.C, Constitution, Evidence Act போன்ற பொதுவான சட்ட பாடங்கள் தான் படிப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் மட்டும் ஒரு யுனிவர்சிட்டிக்கும்
    மற்றதுக்கும் மாறும். மற்ற படி இந்தியா முழுக்க ஒரே பாடங்கள் தான்

    மேற்படிப்பில் ( Post Graduation ) தான் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. Post Graduation (M.L)-ல் Criminal Law, Intellectual property laws, Contracts போன்றவை உள்ளன.

    ReplyDelete
  36. சாதிகா : நன்றி

    ReplyDelete
  37. அமுதா கிருஷ்ணா: நன்றி

    ReplyDelete
  38. ஹுசைனம்மா: எனக்கு தனி பதிவுக்கு ஐடியா தர்ரீங்களே? :-) நீங்கள் கேட்ட கேள்வி சுருக்கமாய் பதில் தருவது சிரமம். அதனால் சொன்னேன்

    //ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சட்டம் இல்லியா? இந்தியாவில் வக்கீலுக்குப் படிச்சா, இந்திய சட்டங்கள் மட்டும்தானே படிப்பாங்க. அவங்க வெளிநாட்டில்/வெளிநாட்டுக்காக வேலை பாக்கணும்னா, அந்நாட்டுச் சட்டத்தைப் படிக்க வேண்டாமா?//

    உண்மை தான். இந்தியர்கள் செய்வது வழக்கில் உள்ள "மற்ற ( Clerical ) வேலைகள்", அந்த நாட்டு சட்டம் குறித்த அணைத்து வேலையை அந்த நாட்டு லாயர் பார்த்து கொள்வார்.

    // ஒரு நாட்டில் டாக்டருக்குப் படிச்சவங்க இன்னொரு நாட்டில் டாக்டர் வேலை பாக்கணும்ன்னா, அதுக்குன்னு தனி தேர்வு எழுதணும். அதுமாதிரி வக்கீலுக்கு ஏதும் தேர்வு உண்டா?//

    ஆம். அந்த லாயர் செய்யும் வேலையை நாம் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் பரீட்சை பாஸ் செய்யணும்

    ReplyDelete
  39. ரத்னவேல் ஐயா இந்த பதிவை தனது முக நூலில் பகிர்ந்தபோது நண்பர் ஒருவர் சில வித்தியாச கருத்துகளை கூறி இருந்தார் அதனை இங்கு பதிந்து வைக்கிறேன்

    மு. சுவாமிநாதன்.

    இது எனது துறை..எனவே கருத்திட அதிகம் இருக்கின்றது..இருப்பினும் ஒரு சில..

    1)ஆணாயிருந்தால்... "வக்கில்" நிரந்தர வருமானம் இருக்காது...அபப்டி இப்படி என .. பெண் தர மறுப்பார்கள்...

    2)பெண்ணாயிருந்தால் "பொண்ணு வக்கிலா..? சரிவராது எப்போதும் சட்டம் பேசும்" என்று பெண் எடுக்க மாட்டார்கள்.

    3) அதிலும் வென்று மணம்புரிந்து கொண்டால் வாடகைக்கு வீடு கொடுக்க மாட்டார்கள்...

    4) தவணையில் ஒரு ஸ்கூட்டர் வாங்கக்கூட எந்த நிறுவனமும் கடன்வசதி தரமாட்டார்கள் ...

    5) எல்லா நடைமுறைக்கும் வக்கீலை பயன்படுத்திக்கொள்ளும் வங்கிகள்கூட கடன் தர முன்வராது...

    6)தனியாகத் தொழில் நடத்த கடை வாடகைக்கு கிடைப்பதும் மிகச்சிரமம்.

    7) எதோ ஒரு நேரத்தில் காவலரிடம் நிற்கவேண்டியிருந்தால் தொழில்முறை விரோதம் காரணமாய் "வக்கீல் ன்னா என்ன பெரிய..." இந்த வார்த்தையை சகித்துக்கொள்ளவே வேண்டும்..

    8) தொழிலை நம்பித்தான் வீட்டில் தினப்படி அடுப்பெரியும் என்றால் அடுப்பை பலநாள் மறந்திடனும்..

    பொதுவில் உள்ள சிலவற்றை சொன்னேன்..

    தொழிலில் உள்ள சிரமங்களை சொல்லவில்லை..!

    பணமும், பின்புலமும் இருந்தால் பலஆண்டுகள் சென்று சிறந்த வழக்கறிஞராய் வரலாம்...

    எல்லா சிரமங்களையும் மறக்கடிக்கச் செய்யும் ஓரு நேரம் உண்டென்றால் அது போகுமிடத்தில் 'வழக்கறிஞர்' என்றதும் உட்காருங்கள் என்று சொல்லும்போது..

    சட்டம் படிக்க விரும்பும் இளைஞர்களுக்கு....
    விருப்பமென்றால் படியுங்கள்.. சிரமப்பட மனம் உண்டென்றால் தொழிலுக்கு வாருங்கள்- வெற்றி உண்டு..இல்லையெனில் வேறு வேலைக்கு போக படிப்பு உதவும்...இங்கு சம்பாத்யம் இலகுவானதல்ல..

    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  40. சுவாமிநாதன் சார் : தங்கள் கருத்துக்கு மிக நன்றி உடன்படுகிறேன்

    கோர்ட் செல்லும் வக்கீல்களில் பெரும் சதவீதம் சம்பாதிக்க சிரமப்படுவது உண்மையே. ஆனால் நிறுவனங்களில் வக்கீல் படிப்புக்கு நல்ல டிமாண்ட் மற்றும் பணம் கிடைக்கிறது. மாதம் ஒரு லட்சம் முதல் நான்கு லட்சம் வரை சம்பாதிக்கும் என் நண்பர்கள் வெவ்வேறு நிறுவனங்களில் லீகல் டிபார்ட்மெண்டில் உள்ளனர். நிறுவனங்களில் வக்கீல்களுக்கு துவக்க சம்பளமே பத்தாயிரத்துக்கு மேல் தான்.

    மக்களுக்கு வக்கீல் என்றாலே கோர்ட் செல்பவர் என்று தான் எண்ணம். ஆனால் நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் உள்ளன என்று சொல்லவே இதனை எழுதினேன்

    மீண்டும் தங்கள் கருத்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  41. வணக்கம்,
    திரு மு. சுவாமிநாதன் அவர்கள் குறிப்பிட்டது அனைத்தும் இன்றைய தினத்தில் உன்மையே!

    "உலகை வெறுமனே புரிந்து கொள்வதை விட மாற்றுவது முக்கியம்" என்ற மார்க்ஸ்-ன் வார்த்தைகளோடு தொடங்குகிறேன்.(இந்த வார புதிய தலைமுறையில் திரு. இளந்தமிழன் எழுதியிருந்தார், அதிலிருந்து எடுத்தது. மற்றபடி, மார்க்ஸ் எழுத்துக்களை படிக்கும் அளவுக்கு தகுதி எனக்கில்லை)

    எங்கள் ஊரில் இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பள்ளிக்கு வெளியிலிருந்து தேர்வு கண்காணிப்பாளராக வருவதற்கு பயப்படுவார்கள். ஏனெனில், தேர்வில் காப்பியடிக்க விடவில்லை என்றால் மாணவர்களின் உறவினர்களும் நண்பர்களும் வெளியில் வரும்பொழுது அடிப்பார்கள் என்கிற பயம் இருந்தது.
    ஆனால், இன்று அந்தப் பள்ளி மாவட்டத்தின் முதன்மையானப் பள்ளி. எப்படி வந்தது இந்த மாற்றம்?

    இன்றைக்கும் ஒரு நிறுவனத்தில் தகுதியான இளநிலை சட்ட ஆலோசகரைத் தேர்ந்தெடுக்க ஆறு மாதமாக நேர்முகத் தேர்வு நடத்தி தகுதியான நபரை கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

    -தொடரும்

    ReplyDelete
  42. இன்றைக்கும் வேறு எந்தப் படிப்பும் படிக்க தகுதியற்றவர்கள் மட்டுமே , சட்டம் படிக்க வேண்டும் என்கிற மனநிலையில் தான் மக்கள் உள்ளனர்.
    இது குறித்து விரிவாக எழுதலாம். ஆனால், நேரமில்லாததால் சுருக்கமாக முடிக்கிறேன்.

    நிறைய மதிப்பெண் எடுத்து, பல லட்சம் செலவு செய்து, பிறகு யாரவது வேலைக் கொடுப்பார்களா என்று காத்துக்கிடக்கும் ஏனைய படிப்புகளை விட சட்டப்படிப்பு குறைந்ததல்ல!

    இந்தப் பதிவை தாமதமாகப் படித்ததால் கடைசியாகத்தான் பின்னூட்டம் எழுத நேர்ந்தது. இனி படிக்கும் சிலராவது எனது கருத்தைப் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    ஓர் ஏழை மாணவனை சட்டம் படிக்க வைக்க உதவி செய்வதாக சொன்ன திரு மோகன் சார் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  43. 6/7/2012 தினமலர் செய்தி.

    http://www.dinamalar.com/News_detail.asp?Id=501650

    மாநில கல்லூரியைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் கட்டைகளுடனும், கற்களுடனும், மாநகர போக்குவரத்து பஸ்சில் ஆவேசமாக ஏறி அடாவடி செய்ததால், பயணிகள் பாதி வழியில் இறங்கி ஓட்டம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை பெசன்ட் நகரிலிருந்து சுங்கச்சாவடிக்கு சென்று கொண்டிருந்த பஸ்சில் (6டி), மாநில கல்லூரி மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர் ஏறினர். கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் ஆக்ரோஷமாக ஏறியதால், பயணிகள் அலறினர். சத்தம் போட்டால் அடி விழும் என, மிரட்டிய மாணவர்கள் யாரையோ பஸ்சில் தேடினர். அப்போது, பல மாணவர்கள் பஸ்சின் மேல் கூரையில் ஏறுவதும், கீழே இறங்குவதுமாக பயணிகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். இதனால், வள்ளலார் நகருக்கு செல்ல வேண்டிய பல பயணிகள் பாதியிலேயே, ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஓடினர்.

    அலறல்: பஸ்சின் உள்ளே தைரியமாக உட்கார்ந்திருந்த சிலரும், மாணவர்கள் உள்ளே ஆடிய ஆட்டத்தால் பயந்து அலறினர். பஸ் வள்ளலார் நகர் வந்த போது, பஸ்சில் மாணவர்களின் அடாவடி அதிகரிக்கவே, சாலையோரம் நின்றவர்கள் இதை பார்த்துவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அருகில் போலீஸ் நிலையம் இருந்தும், 25 நிமிடம் கழித்து ஒரே ஒரு போலீஸ்காரர் வந்து, ஒரு ஓரமாக நின்று, மாணவர்களின் அடாவடியை வேடிக்கை பார்த்தார். அதன் பிறகு, மாணவர்கள் அவர்களாகவே பஸ்சில் எதையோ சாதித்துவிட்டு வருவது போல், ஹாயாக நடையைக் கட்டினர். போலீஸ்காரர் அங்கு எதுவுமே நடக்காதது போல, அவரும் அங்கிருந்து ஹாயாக திரும்பிச் சென்றார்.

    பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், ""சென்னையில் பஸ்சில் பயணம் செய்யவே பயமாக இருக்கிறது.பெற்றோர் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர். படிப்பதில் காட்டும் ஆர்வத்தை விட, இப்படி அடாவடி செய்வதில் தான் தங்களுக்கு இஷ்டம் என்பது போல நடந்து கொள்வதை பார்க்கும்போது, வேதனையாக இருக்கிறது,'' என வருத்தத்துடன் கூறினார்.

    இதுகுறித்து, பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், ""ஒவ்வொரு முறையும் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது, ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபடுவது போன்றவை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, மாணவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நேரங்களில் அவர்களின் கல்வி பாதிக்கப்படுமே என்று, தண்டனையை தவிர்ப்பது மாணவர்கள் மேலும் தவறு செய்வதற்கு தூண்டுதலாக அமைந்துவிடும் என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வது முக்கியம்,'' என்றார்.

    ReplyDelete
  44. பி.ஏ.பி.எல்., படிப்புக்கு 12ம் தேதி கவுன்சிலிங் - தினமலர் 06-07-2012

    சென்னை: ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 12ம் தேதி துவங்க உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலியில், ஆறு அரசு சட்டக் கல்லூரிகளில், 2012- 13ம் கல்வியாண்டுக்கான, ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்புக்கு, மே 28ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

    ஐந்தாண்டு படிப்பிற்கு, 1,052 இடங்கள் உள்ள நிலையில், 4,000த்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதில், வயது, மதிப்பெண் குறைவு மற்ற குறைபாடுகள் காரணமாக, 650க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 3,384 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    இவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலையில் வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது என பல்கலை பதிவாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
  45. பி.ஏ.பி.எல்., படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு:
    - தினமலர்,ஜூலை 07,2012.

    சென்னை:ஐந்தாண்டு பி.ஏ. பி.எல்., படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய <ஆறு அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் மே 28ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டன.ஐந்தாண்டு படிப்பிற்கு, 1,052 இடங்கள் உள்ள நிலையில், 3,714 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், பிளஸ் 2 முடிக்காதவர்கள், வயது, மதிப்பெண் குறைவு, மற்ற குறைபாடுகள் காரணமாக, 330 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3,384 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவர்களுக்கான கலந்தாய்வு, வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது என, அம்பேத்கர் பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் தெரிவித்தார்.

    பிரிவுவாரியாக "கட்-ஆப்' மதிப்பெண் விவரம் பிரிவு "கட்-ஆப்' மதிப்பெண்

    ஓ.சி., 86.125

    பி.சி., 83.250

    பி.சி., (எம்) 83.625

    எம்.பி.சி., 83.250

    எஸ்.சி., 83.250

    எஸ்.சி., (ஏ) 83.500

    எஸ்.டி., 84.120

    ReplyDelete
  46. பி.எல். படிப்பு: 20ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்-16-09-2012

    தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் மூண்றாண்டு பி.எல். படிப்பில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன.

    இதில் சேருவதற்கு 6,110 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான கட் ஆப் மார்க் வெளியிடப்பட்டு இருக்கிறது. சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும், பல்கலைக்கழக தகவல் பலகையிலும் கட் ஆப் மார்க் பட்டியலை பார்க்கலாம். அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    பொதுப்பிரிவு - 71.033
    பிற்படுத்தப்பட்டோர் - 64.090
    பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) - 63.217
    மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் - 63.478
    ஆதி திராவிடர் - 56.807
    ஆதி திராவிடர் (அருந்ததியர்) - 62.474
    பழங்குடியினர் - 56.807

    சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான பொது கலந்தாய்வு, சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

    தகுதியுள்ள மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் தங்கள் கட் ஆப் மார்க்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட நாளில் கவுன்சிலிங்கிற்கு நேரடியாக மாணவர்கள் வந்துவிடலாம். இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள் ரேங்க் பட்டியலை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.

    கலந்தாய்வின் போது காலி இடங்கள் ஏற்பட்டால் அவை காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களால் நிரப்பப்படும். இதற்கான கவுன்சிலிங் 22, 24, 25ம் தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  47. முன்னணிப் பதிவராக ப்[அல்காலம் இருத நீங்கள் மீண்டும் பதிவெழுத வந்தது உற்சாகம் அளிக்கிறது. மீள் பதிவு என்றாலும்எப்போதும் பயன்படும் தகவல்

    ReplyDelete
  48. ஐயா அரசு வழக்கறிஞர் ஆக கல்லூரி முடித்தவுடன் அரசு வழக்கறிஞர் அகலமா இல்லை அனுபவம் தேவையா ஐயா

    ReplyDelete
  49. நான் 2011 B.A economics முடிச்சேன். Advocate படிக்க வெக்கணும்னு அம்மா ஆசை பட்டாங்க. திடீர்னு கல்யாணம் பண்ணிட்டாங்க. இப்ப எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. எனக்கு advocate படிக்க ஆசை. நான் ஆரணியில் உள்ள பால வாக்கம் எனும் கிராமத்தில் வசிக்கிறேன். என்னால் தினமும் கல்லூரிக்கு சென்று படிக்க முடியாது. வீட்டிலிருந்து படிக்க வழி உள்ளதா? எனக்கு வழி காட்டுங்கள். நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு விளக்கமாக சொல்லுங்கள்.

    ReplyDelete
  50. சர் நான் இப்போ மருத்துவபிரநீதியாக MNC நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.இந்த வேளையில் சென்று கொண்டே LLB பயில முடியலமா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...